Posts

எழுதுகோல் பேசுகின்றேன்

Image
உன் எண்ணத்தை எல்லாம் மையாக ஊற்றி கொட்டிவிடு அது உந்தன் பட்டாம்பூச்சி கனவாக இருக்கட்டும் உந்தன் பாவாடை தாவானி பருவமாகட்டும் உள்ளுக்குள் ஒளித்த ஒரு தலை காதலாகட்டும் நல்கிய நல்லறமாக இருக்கட்டும் வலி தந்த தாய்மையாகட்டும் செவி தாக்கிய வன்சொற்களாகட்டும் இப்படி இப்படியே பல என்னவாகவோ இருக்கட்டும் கொட்டிவிடு என்னிடம் கண்ணீரை மையாக தாளில் நிறைத்து உன் மனதை இலகுவாக்குகிறேன் நான் தான் எழுதுகோல் பேசுகின்றேன்.                  -- பிரவீணா தங்கராஜ் .

விழிவாளால் - காதல் பிதற்றல் 32

விழியாலே உயிரை வதைக்க செய்ய முடியும் என்பதை உன் விழிவாளால்  தான் அறிந்தேன் .           -- பிரவீணா தங்கராஜ் .

குடும்பம்

 உறவுகள் தொலைக்கின்ற நேரத்தில் உன்னத குடும்பமென காட்டுங்கள் பஞ்சாய் பறந்திடும் கவலைகள் நெஞ்சை இனித்திடும் குடும்பங்கள் தங்கை  தமயன் உறவுகள் வேண்டும் தனக்கென துணையாய் நின்றிட வேண்டும் ஒன்று பெற்று உருகிடும் அன்பில் ஒற்றுமை சற்றே குறைந்திடும் உலகில் பல்க பெற்றே வாழ்த்திடுங்கள் பகிர்ந்தே மனதை விதைத்திடுங்கள் அன்பை விதைத்து மகிழ்ச்சி பெறுக கண்ணை போலவே நற்குடும்பம் சிறக்க...!                        -- பிரவீணா தங்கராஜ்

@ நான் விரும்பும் என் முகம் @

முகமூடி அணிந்து    பேசிடும் பழக்கமில்லை அகம் நாடும் உள்ளுணர்வு    சொல் கேட்டுடும் வழக்கதினால் புன்னகையே எந்தன்    விருப்பமான அணிகலன் தன்னம்பிக்கை தைரியமும்     எந்தன் சொத்து இன்னலை இனிதே      கையாள்வேன் இசைக்கு மட்டுமே      தலை அசைப்பேன் பொய் பேசி பிரச்சனையை      முடக்குவதை விட மெய் பேசி பிரச்சனையை        எதிர் கொள்வேன் எல்லாம் நன்மைக்கே     என்பதை ஏற்பேன் நற்கவியில் வாசித்து     என்னை லயித்திடுவேன் கடலளவு கவிதையில்   ஒரு சொட்டு கிணற்று நீர் நான் ஆம் ...    எழுத்து உலகில் ஒரு      துளி மையாக படைத்திடவே நான் விரும்பும் என் முகம்.             -- பிரவீணா தங்கராஜ் .

பன்றி ஹைக்கூ

Image
மனித மனதிடம் தான் எட்டி பார்க்கின்றன மிருக குணம்             *** முகமூடிகள் ஏராளம் இதுவும் ஒன்றோ மனிதர்களுக்கு ...             *** முழுமனிதனாகவே முயல்கின்றேன் தலைதூக்குவதோ என்னவோ மிருக குணம் .               --  பிரவீணா தங்கராஜ் .  

பட்டம் பற்றி ஹைக்கூ

படிக்காமலே பட்டம்பெற்றான் பாலகன் .    *** தோற்றுத்தான் போனது பட்ட விளையாட்டு கலியுகத்தில் ...      *** நூலேறி வானிலே முத்தமிடச்சென்றான் காகிதப்பட்டம் .       ---பிரவீணா தங்கராஜ் .             

ஆசை துறந்தவனுக்கு...

Image
ஆசை துறந்தவனுக்கு மடியில் கிடைத்தன  மழலை வரம்            -- பிரவீணா தங்கராஜ் .           

நாற்றுகள்

Image
வளைந்த முதுகு வாழ்வு தருகிறது நாற்றுகள்        *** பாட்டியிடம் பூமிப்பெண் பச்சைபட்டாடை கேட்டாளோ வயலில் நாற்றுகள்        *** இளநாற்றை குனிந்துவைத்து விவசாயத்தை உயர்த்துகிறாள் முதிர்ந்த பாட்டி         *** நாற்றை மண்ணில் நட்டு இதயத்தில் கவிதை தூவுகிறாள்        *** தேங்கிய வயல்நீரில் மூதாட்டிக்கு தெரிந்தன மக்கள் பசி                   - பிரவீணா தங்கராஜ் .                      

📱💗நீயின்றி நானில்லை💗📱

Image
அதிகாலை விழித்தவுடன் அண்மையில் உனை கண்டிடவே ஆசையெனக்கு ... அலறியும் நீ யெனக்கு... இதயமே இடைவெளி யில்லை நமக்குள் - உனை ஈகைத்திடவும் மனமும் மில்லை உனை நீங்கினால் நொடிகள் நகராது ஊக்கமே உன்னிலிருக்கும் நகைப்பான குறுஞ்செய்தியே... எண்ணமோ உன்னை வட்டமிட்டாலும்  ஏணியாக பார்க்க வைக்காது தலை தாழ்த்தி வைக்கின்றாய் நியாயமா ? ஐயமேயில்லை நீயிருந்தால் உறக்கமில்லை ஒருமையில் இருப்பதாக எண்ணுகின்றனர் ஒன்றாக திரிவதை அறியாமல் ஓலமிட்டே உரைக்கின்றேன் ஒளடதமாக உன்னில் அடிமைக் கொண்டேன் காலங்கள் செல்வதும் புரியவில்லை சாலையில் நடப்பதும் தெரியவில்லை தாளங்களும் , ராகங்களும் உன்னில் லயித்தேன் செவ்வக சிறையிலே வாழ்கின்றேன் தொடு திரையிலே தேடுகின்றேன் உனக்கு தெரியா விந்தையேது வியக்கின்றேன் உன்னில் புதைந்தே வாழ்க்கை மறக்கின்றேன் நீயின்றி நானில்லை யென்றே மாற்றிவிட்டாய்  .                           -- பிரவீணா தங்கராஜ் . # இது காதலுக்கும் பொருந்தும் மற்றும் கைப்பேசிக்கும் பொருந்தும் ஒரே கவிதை 😜 .

💰💸 பணம் 💸💰

உன் மதிப்பை நீயுணர உன்னில் அவன் உள்ளானா ? பிறப்பு முதல் இறப்பு வரை அவனின்றி வாழும் நிலை நமக்கு காற்று , நீர் , உணவு இன்றி இருப்பது இயலாது என்பர் அறிவியல் கூற்று உண்மை தான் தற்போது அவனின்றி இருப்பதும் இயலாதயொன்று தான் அவனே உலகில் முதன்மை அவனிருக்க முதுமையும் இளமை தீமை நன்மை பாகுபாடு அறியா புன்னகை பூத்திடுவான் நல்லோர் , தீயோர் பார்க்காது தவழும் குழந்தையவன் அவனை சேமிக்க ஆயுள் போதாது ஆயுள் இருந்தாலும் ஆசை அடங்காது மெத்தை முழுதும் அவனிருந்தாலும் நித்திரை தர மாட்டான் நித்திரை இருக்கும் வீட்டில் நித்தமும் புழுங்க மாட்டான் மாயாஜால வித்தைக்காரன் மர்மங்கள் செய்திடுவான் சொந்தங்களை பிரித்துடுவான் முகமறியா மனிதனையும் சொந்தமாக்குவன் பாதாளம் வரை சென்றாலும் பாதகமாக அழைத்து செல்வான் அவனே பணமெனும் மாயாவி .                                 -- பிரவீணா தங்கராஜ்