Posts

முதல் முதலாய் ஒரு மெல்லிய-9

Image
  💘 9         ஆடை மாற்றி வந்தவளை பார்த்து '' போகலாமா ?'' என்று கேட்க கார் கிளம்பியது. பின்னரே , '' உங்களுக்கு என் பெயர் எப்படி தெரியும் ?'' என்று கேட்டாள். கொஞ்சம் நேரம் எடுத்தே , '' அன்னைக்கு காலேஜில உங்க அங்கிள் பெயர் சொல்லி கூப்பிட்டாங்க தட்ஸ் இட் '' என்றான்.  '' ஓ '' என்றவளுக்கு இத்தனை நாள் கழித்து நினைவு வைத்திருகின்றானே என அதிசயித்தாள்.   '' உங்க பெயர் என்ன ?'' என்று அறிந்திடும் ஆவல் பிறக்க கேட்டாள். '' அப்பாடி இப்பவாது கேட்டிங்களே... '' என சிரித்தான். தனக்கு இவ்வளவு உதவி செய்தவன் பெயரை தாமதமாக கேட்ட தன் நிலையை நினைத்து வருந்தினாள். '' என் பெயர் ஸ்ரீராம். நம்ம காலேஜில எம்.பி.ஏ கரெஸ்ல பண்றேன். '' என்று கூறினான். '' ஓ '' என்றவள் சற்று நேர அமைதிக்கு பிறகு “இந்த வீடு தான்” என்று குறிப்பிட அஸ்வின் வீட்டில் கார் நுழைந்தது. '' ரொம்ப நன்றி இத லைப் லாங் மறக்கமாட்டேன். வீட்டுக்கு வந்துட்டு போங்க , அங்கிள் , ஆன்ட்டி சந்தோஷப்படு

முதல் முதலாய் ஒரு மெல்லிய-8

Image
                                💘  8                                அடுத்த நாளும் பெயருக்கு சாப்பிட்டுக் கிளம்பினாள். அஸ்வின் பைக்கில் ஸ்டார்ட் செய்கையில் வேண்டுமென்றே பிரேக் போடா அவளது தோல் அஸ்வினை இடித்தது. பவித்ரா சற்றுத் தள்ளி அமர்ந்து வண்டியை இறுகப் பற்றினாள்.      விஸ்வநாதன் ஜன்னல் வழியாக இதை எல்லாம் கவனிக்கத் தவறவில்லை. ஆனால் அஸ்வினை கண்டிக்கத் தான் இயலவில்லை. அவர் மனதிலும் பவித்ராவை இந்த வீட்டு மருமகளாக ஏற்கும் ஆசை தான் அதற்குக் காரணம். எப்பொழுதும் போல் கல்லூரி அடைந்தவுடன் திரும்பி பார்க்காது நடந்தாள். அஸ்வின் ' எவ்வளவு தூரம் ஓடுறியோ ஓடு ' என மனதில் நினைத்துக் கொண்டான். இப்பொழுது தான் வந்து பயில்வது போல் இல்லாமல் சூழ்நிலையாவும் இயல்பாக மாறியது புது மாணவி என்ற நினைவேயின்றி கல்லூரியிலும் தோழிகளிடமும் ஐக்கியம் ஆனாள். ஆசிரியர் யாரோ இறக்க நேரிட , இன்று எப்பொழுதும் விடும் நேரத்தை விட அரை மணி நேரம் முன்னதாகவே கல்லூரி மணி ஒலித்தது. கல்லூரியில் இருந்து சற்றுத் தள்ளி இருந்த பஸ் ஸ்டண்டில் காத்திருந்தாள். திடீரென பின்னாளில் இருந்து அவளது கண்ணை யாரோ மூட திரும்பிப் ப

முதல் முதலாய் ஒரு மெல்லிய-7

Image
     💘  7 விடியல் அனைவருக்கும் புதியதாய் இருந்தன. பவித்ராவிற்கு இமைக்கூடத் திறக்கயியலவில்லை. அவ்வளவு பாரமாக இருக்கக் கஷ்டப்பட்டு எழுந்தாள். நேரமாகி எழுந்து குளித்து புத்துணர்வு பெற்றாலும் சற்று சோர்வுக் காணப்பட்டது.    பவித்ராவை தேடி ராதை காபி கொண்டு வர தர்மசங்கடமாக வாங்கினாள். ராதை தன்னை உற்று நோக்குவதாக பட ராதையை ஏறிட்டு பார்க்க நாணினாள்.        ' ' இன்னிக்கு வேணும்னா ரெஸ்ட் எடு நாளைக்கு காலேஜிக்கு போயேன் பவித்ரா , ரொம்ப சோர்வா இருக்க ,'' என்று அக்கறையாய் கூறினார்.  பவித்ரா திக்கியபடி '' பரவா....யில்லை ஆ...ன்ட்டி அங்க போன சரியாகிடும் '' என்றாள். தலையை வருடிய படி , ‘’ உன் இஷ்டம்’’ என்று கூறிச் சென்றார். அந்த வருடலில் சற்று மனம் நிம்மதியை தந்தது.      விஸ்வநாதன் அறைக்கு சென்று '' அங்கிள் நான் பஸ்ல போகறேன் '' என மொழிந்தாள்.     '' நீ இப்படிக் கேட்பேன்னு தெரியும். உன் விருப்பபடிச் செய் '' என்றார். ' ’ ம் '' என்று சந்தோஷமாக திரும்பினாள். '' இதுக்கு முன்னாடியும் இதே காரணத்துக்காக தான