தீவிகை அவள் வரையனல் அவன் -17
தீவிகை அவள் 🪔 வரையனல் அவன் 🔥 -17 வைஷ்ணவி தன் அன்னை தோளில் சாய்ந்து சம்யுவை பார்க்க, சம்யு தாய் மகளை பார்த்து தன் அன்னையினை எண்ணி ஏங்கி அதனை மறைக்க முயன்றாள். "மன்னிச்சுடு... நான் ஒன்றும் கெட்டவள் இல்லை. உன்னை முதல்ல வீட்டுல பார்த்தப்பவும் திட்டியிருக்கேன். கல்யாணம் ஆனப் பிறகும் உன்னை காயப்படுத்தியிருக்கேன். நான் எதுக்கு அப்படி செய்தேன்னா." "நீங்க செய்யறதுக்கு ஏதோ காரணம் இருக்கு அத்தை. அது புரியுது. ஆனா ஏன்னு தெரியலை. அப்பா ஏதோ செய்துயிருக்கார். என்ன செய்தாரென்று தான் தெரியலை. இதெல்லாம் தெரிஞ்சுக்கவோ ஆரவ் முன்ன மாதிரி பேசிடவோ எதிர்பார்த்து இங்க வரலை. நான் ஆரவ் என்னை திருமணம் செய்வாரென்று நினைத்து இருக்கல. நான் எதுவும் பிளான் பண்ணலை அத்தை. அன்றைக்கு விபத்து நடந்து மயக்கம் தெளிந்த பிறகு இங்க இப்ப நடப்பது வரை எதுவுமே தெளிவா புரியலை" என்று விளக்க முற்பட, "உனக்கு விஷயம் தெரியுமா தெரியாதா? ஆரவ் ஜெயிலுக்கு அனுப்பி, வைஷ்ணவியை கெட்டவளா சித்தரிக்க எண்ணினா, பெற்ற அம்மா மனசு என்ன செய்யும் சொல்லு..." என்று சுபாங்கினி கண்ணீர்