சிரமமில்லாமல் சில கொலைகள்-14
🩸-14 மூச்சு முட்டுவது போன்ற உணர்வோடு சர்வேஷ் மற்றும் மெர்லினாவை அந்தப் படகுக்காரர்கள் காப்பாற்ற இருவரும் நிழலில் தங்களைப் பார்த்துக் கொண்டனர். சற்றுநேரம் எல்லோரும் கூடி அவர்களுக்கு ஆபத்து இல்லையென்று ஊர்ஜிதமாகக் கூடியிருந்தவர்கள் கலைந்தனர். சர்வேஷ் வேன் டிரைவரிடம் மற்ற பயணியர்களை அனுப்பி வைத்து மெர்லின் அருகே நின்றான். "அபரஞ்சி..." என்று அழைக்க, மெர்லினோ அவன் நெஞ்சில் சாய்நது அழத்துவங்கினாள். கருப்புருவம் நீரை சுரக்காத தன் கண்களில் ஆசைத்தீர கண்டு மகிழ்ந்தது. "என் காதலால் தானடி உனக்குப் பிரச்சனை வரும்னு இருந்தேன். நீ எதுக்குத் தண்ணீரில் மூழ்க பார்த்த?" என்றதும் "சர்வேஷ் நான் ஒன்றும் தேவையேயில்லாம தண்ணீரில் மூழ்கலை." என்று நடந்தவையைச் சொல்லி முடித்தாள். கடைசியாக, "ப்ளிஸ்.... இத்தனை பேரை எதிர்த்து நம்ம சேரணும்னு அவசியமேயில்லை. தயவு செய்து விடுங்க. நான் திரும்ப நியூயார்க்கே போறேன். இந்தப் பூமியில் வரவே மாட்டேன்." என்று அவனிடமிருந்து விலக முயன்றாள். "எப்படி முடியும்? ஒர் ஜென்மம் இல்லை இரண்டு ஜென்மம். என்ன பார்க்கற... நீ தண