Posts

ஜன்னலின் வழியே

 ஜன்னலின் வழியே பின் நோக்கி போகின்றன மரங்கள் முன் நோக்கி செல்கின்றன   என் இரசனைகள்.   **** மழை சொட்ட சொட்ட புதிதாய் பிறந்திடும் காளானை போல மழையில் பிறக்கின்றன என் குழந்தை மனமும். - பிரவீணா தங்கராஜ்.

தனிமை

வரமும் சாபமும் கொண்டது தனிமை நினைவுகளின் ஜாலத்தில் முழ்குவது இனிமை நேரங்கள் கடந்திட தவிப்பது முதுமை காதலில் பைத்தியம் பட்டம் கொடுத்திட துணையின் அருகில் கெஞ்சிடும் இளமை தத்தளிக்கும் மனதிற்கு தனிமையொரு புத்துணர்வு கசந்திடும் நினைவுகளும் சுவைத்திட தோழமை நம்மை செதுக்க செம்மைபடுத்தும் வலிமை வரமும் சாபமும் என்றும் கொண்டதே தனிமை - பிரவீணா தங்கராஜ்

சிட்டுக்குருவி சொல்லும் சேதியென்ன?

உணவுசங்கிலியென்று ஒன்றுண்டு புழுவை மீனுண்ண மீனை நாமுண்ண நம்மை மண்ணில் புழுயுண்ணும் யாருக்கும் யாரும் சளைத்தவரல்லவே! எனக்கான அழிவு மட்டுமல்ல அலைபேசிக் கற்றைகள் நாளை உனக்கானதும் கூட தான் இன்று நான்யென்றால் நாளை நீயல்லவா..?! எப்படி மறந்தாய் நானுமொரு உயிரென்பதை உன்யினமென்றால் சலுகை என்யினமென்றால் உவகையோ காலமின்னும் செல்லவில்லை எல்லாம் மாற்றிட உன்னால் முடியும்.    -- பிரவீணா தங்கராஜ்.

சிரமமில்லாமல் சில கொலைகள்-21(final completed)

Image
  🩸-21 Epilogue நியூயார்க் வந்தப்பிறகு மெர்லின் முதல் வேலையாக தன் மேற்படிப்புக்கு சீட் வாங்கி முடித்தாள்.      சாந்தனு இறந்த மூன்றாம் நாள் மெர்லின் அவள் பாட்டிற்கு உறங்க, அவள் மேனியில் ஏதோ ஊர்வதை உணர்ந்தாள்.      அரையுறக்கத்தில் அது தன்னை ஆட்கொள்ளும் திகிலோடு வியேர்த்து விழுந்தடித்து எழவும் இளவழகன் முன் நின்றான்.      "என்னாச்சு யவனா?" என்றான் இளவழகன்.       "ஏ...ஏதோ ஊர்ந்தது மாதிரி.... ப... பயமா இருக்கு இளா." என்றாள்.      "துர்வனின் முழுவுருவம் கண்டு குழம்பி போய்விட்டாய். சற்றே இதமான மனநிலைக்கு செல். ஆதவனை பற்றி முற்றிலும் மறந்து உன் தினசரி பணியினில் நாட்டம் செலுத்து." என்று போர்வையை போர்த்தி விட்டான்.      "இளா... எப்பவும் என் கூட இருப்ப தானே?"     "என் ஆன்மா சாந்தி அடைந்த பொழுதிலும் நீ இருக்கும் வரை நானும் இருப்பேன் உன் துணையாக" என்று கிளம்பியது.      இளவழகன் கண்களோ மெர்லின் அறையை விட்டு வந்ததும், அவன் கையை இறுகப் பற்றியிருந்தான்.     "என்ன ஆதவா... ஆன்மாவாக வந்தப்பின் என்னால் உன்னை ஒன்றும் செய்ய இயலாது என்று என்

சிரமமில்லாமல் சில கொலைகள்-20

Image
  🩸-20       தங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை என்று மெர்லின் உயிர் காக்க வேண்டுமென ஜாஸ்மின் காத்திருக்க, மெர்லின் "நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேன்" என்று நொடியில் ஓடினாள்.     ஜாஸ்மினுக்கு எதுவும் சரியென்று படவில்லை. சர்வேஷ் சென்றதும் மெர்லின் செல்வது அவளுக்குள் மோகன் யாரென சர்வேஷ் அறிந்துவிட்டானென புரியத்துவங்கியது.       அவளின் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்ப ஆரோலும் பின் தொடர்ந்தான்.     தபித்தாளுக்கும் கிறிஸ்டோபருக்கும் ரெப்ரெஷ் ஆகி வருவதற்குள் நால்வரையும் காணாது இறைவனை தான் துதிக்க ஆரம்பித்தார்கள்.       மெர்லினோடு இளவழகன் வருவதாலும் சர்வேஷ் விலாசம் சாந்தனு கூறியதிலும் மெர்லின் அமைதியாக வந்துக் கொண்டிருந்தாள்.    ஜாஸ்மினோ குறுக்கு வழியில் சர்வேஷ் வீட்டை அடைந்து அவனிடம் மோகன் யாரென அறிய வேகமெடுத்தாள்.        இளவழகன் அறைக்கு வர, சாந்தனுவை கண்டு திடுக்கிட்டான். கூடவேயிருந்தவனை இன்றளவு கண்டறியமுடியாத முட்டாளாக இருந்த தன்னறிவு தானே சாடி திட்டினான்.     மெர்லின் வரவும் சாந்தனு மெய் மறந்தவனாக அவளின் முன் மண்டியிட்டு தலை சாய்த்தான்.      "உன்னை வரவேற்

சிரமமில்லாமல் சில கொலைகள்-19

Image
  🩸-19   அட்ரஸை பார்த்து ஜாஸ்மின் அப்படியே அமர்ந்திடவும் "என்னயிது?" என்று இளவழகன் கேட்டு முடிக்க சர்வேஷ் "என்னாச்சு? அட்ரஸ் தெரியுமா?" என்றான்.       "அய்யோ... இது நானும் என் நண்பர் ஒருவரும் சேர்ந்து உங்களை சந்திக்க நேற்று வந்தோம். நாங்க தான் நீங்க திரும்ப வந்தா, பார்க்க வருவதற்கு இந்த அட்ரஸை கொடுத்துட்டு வந்தேன். இந்த அட்ரஸ் என்றால் மெர்லின் கூடயிருப்பா என்று அவரோட அட்ரஸை தந்தேன்." என்று கூறினாள்.       "ஸப்பா... மாமா அத்தை நீங்க ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க." என்று அறைக்கு அனுப்பி வைத்தான்.        ஜாஸ்மின் போனை எடுத்து அந்த நபருக்கு போன் செய்து சர்வேஷை தேடி யாரெனும் வந்தார்களா என்று கேட்டு கொண்டிருந்தாள். கூடவே ஆரோல் குட்டி போட்ட பூனையாக பின் தொடர்ந்தான். பால்கனியில் சென்றிட, சர்வேஷ் மெர்லின் தனித்து நின்றனர்.        சர்வேஷ் தனது பேண்டில் இருந்த பிரேஸ்லேட்டை எடுத்து அணிவித்தான்.          "யவனரதிக்கு இளவழகன் கொடுக்க நினைத்த அணிகலன். பாகீரதி எடுத்தப்ப அதட்டி நானே எடுத்து வைத்துக் கொண்டேன். ஆனா நான் கிருஷ்ணராஜன் மாமா கூட ஜோதிடம் க

சிரமமில்லாமல் சில கொலைகள்-18

Image
  🩸-18      'நான் விரும்பினேன்' என்று ஜாஸ்மின் கூறியதும் இளவழகனும் சர்வேஷும் திரும்பி பார்க்க, ஜாஸ்மின் மெர்லினாவை பார்த்தாள்.          நான் விரும்பிய விஷயம் மோகனுக்குத் தெரியாது. ஆனா மரிக்கொழுந்தா இருந்தப்ப நான் விரும்பியதை ஆதவனிடம் சொன்னேன்.    ராஜக்குடும்பத்தில் காதலிச்சா வெற்றிப்பெறாதுனு அண்ணா என்னைச் சொல்லவிடலை.       ராஜக் குடும்பத்தில் தங்கள் சுயநலத்துக்குத் தன் வீட்டு பெண்ணையே கூடப் பலிக்கொடுப்பாங்கனு பிறகு புரிஞ்சுது.     மல்லியா இருக்கறப்ப காதல் வந்தாலும் அதை மறைக்கக் கற்றுக் கொண்டேன்.        ஜாஸ்மின் போன் ஒலித்தது.     "சாரி ஒன் செகண்ட்." என்று அட்டன் செய்தாள்.       "மேம்... டூ யூ நோ ஆரோல். உங்க நேம் அண்ட் மெர்லின் நேமை கேட்டுட்டு ரூம் நம்பர் தெரிந்து வேகமாக அங்க தான் வர்றார். உங்களுக்கு அவரைத் தெரியுமா?" என்றதும் ஜாஸ்மின் உடனடியாக. "தேங்க்ஸ் பார் இன்பர்மெஷன் நான் பார்த்துக்கறேன்" என்று கத்தரித்தாள்.     "ஆடலரசன் இங்க வந்துட்டு இருக்கார். தயவு செய்து உடனடியா கிளம்புங்க. லிப்டில் போக வேண்டாம் உடனடியாகப் போங்க." என்ற

சிரமமில்லாமல் சில கொலைகள்-17

Image
🩸-17        தன் கை வளையலை மாற்றி மாற்றிக் கண்ணில் வைத்தாள். சட்டெனக் கதவு தட்டும் சத்தம் கேட்டதும் பயந்து வளையலை தவற விட வளையல் அந்தரத்தில் நின்றது.      தன்னருகே இளவழகன் இருப்பதை உணர்ந்தாள்.       "தேங்க்ஸ்." என்றவள் எடுத்து, அச்சோ... உங்களுக்கு ஆங்கிலம் புரியுமா...."நன்றி" என்று பேச, கண்ணாடி மேல் "உன் மொழி புரியும் யவனா..." என்று எழுதியிருந்தது.      கதவு தட்டப்பட்டுக் கொண்டே இருக்கவும் பயந்து திறந்தாள். திறந்தப் பின் தான் கண்ணாடியில் எழுதியதை பார்க்க அவை அழிக்கப்பட்டு இருந்தது.       "என்னாச்சு ஏன் கதவை திறக்க இவ்ளோ நேரம்." என்று ஜாஸ்மின் அவ்வறையைச் சுற்றி பார்த்தாள்.      "எதுக்கு இப்படி அவசரம். பாத்ரூமில் இருந்தேன்" என்று வரவும்      "சாப்பாடு வந்துடுச்சு அதான்." என்றவள் அவளாக வேகமாக எல்லா உணவிலும் சாப்பிட்டு முடித்தாள். மெர்லின் அதுவரை தட்டில் சாதம் வைத்து யோசனையில் சுழன்றாள்.     மல்லி... ஜாஸ்மின் மரிக்கொழுந்து... எல்லாமே பூவின் பெயர். அப்போ ஜாஸ்மின் அபரஞ்சியோட தோழி மல்லிகாவா? என்று பார்க்க மெர்லின் ம

சிரமமில்லாமல் சில கொலைகள்-16

Image
  🩸-16      போலிஸ் வண்டியின் சத்தம் கேட்க  மெர்லின் கண்கள் அதைத் தழுவி விட்டு சர்வேஷ் கைகளில் இருந்து தன் கையை உருவினாள்.      "நான் கிளம்பணும் நேரமாச்சு." என்று நடந்தாள்.      "இங்க என்ன நடக்குது. நேரமாச்சுனு கிளம்பற" என்றான் சர்வேஷ்.      "என்ன செய்யணும். கண்ணுக்கு தெரியற எதிரியையே ஒன்றும் பண்ண முடியாது. இதுல யார் எதிரினே தெரியாம என்ன செய்ய. அதான் கண்ணுக்கு தெரியாத இந்த இளவழகன் இருக்கார்ல. பிறகென்ன" என்று தன் ஹீல்ஸ் செருப்பை அணிந்து தன் வெள்ளை டாப்ஸின் முழுக்கையை மடித்துக் கொண்டு நடந்தாள்.      கூடவே சர்வேஷ் கிளம்பினான். இளவழகனோ மெர்லின் அருகே பாதுகாப்பு வீரனாக நடந்தான்.          "எங்க தங்கியிருக்க? காலையில் பிக் அப் பண்ணிய ஹோட்டலா?" கேட்டான் சர்வேஷ்.      "ஆமா." என்று மெர்லின் திமிராகப் பதிலளித்துச் செல்லும் வண்டிகளைப் பார்த்து வழியில் நடந்தாள்.       கேப் புக செய்து காத்திருக்க, சர்வேஷோ மனதில் 'இரண்டு ஜென்மமா இவளை விரும்பி இருக்கேன். ஏதாவது ரியாக்ட் பண்ணறாளா? அமைதியா கிளம்பறதிலயே இருக்காளே. ஆளை பாரு வெள்ளை முயல் ம

சிரமமில்லாமல் சில கொலைகள்-15

Image
    🩸-15     இளவழகன் யவனரதி காலம்               யவனரதியும் தன் கண்களைப் பட்டுத்துணியில் பொத்தி கைகளைத் துழாவிக் கொண்டிருந்தாள்.     பாகீரதி அவள் எட்டி பிடிக்கும் நேரம் எல்லாம் நழுவி ஓட அவளின் பாத கொலுசொலியின் இசை வைத்துப் பின் தொடர்ந்தாள்.          ''யவனரதியே பார்த்து... செயற்கை  நீரோடை.." என்று கத்தவும்       "பிடித்துவிட்டேன்" என்று கண்கட்டை அவிழ்க்க, அங்கே இளவழகன் நின்றிருந்தான்.     "என்ன விளையாட்டு ரதி. சற்று நேரம் கடந்திருந்தாலும் நீரில் விழுந்து நனைந்து இருப்பாய்." என்று செப்பினான்.     "பாகீரதி வந்ததால் சற்று விளையாட்டுக் குணம் எட்டி பார்த்துவிட்டது. நீருற்று தானே ஆறு அல்லவே அடித்துச் செல்ல. சற்று நனைந்திருப்பேன்." என்றவள் இளவழகனை கண்டு பேசவும்,      "என்னிடம் அதிகம் வாயாடுபவள் நீ தான். பார்த்து உன்னைத் தூக்கி கொண்டு தனியிடம் சென்றிடுவேன். ஜாக்கிரதை" என்று இளவழகன் தனது மாமா கிருஷ்ணரிடம் அளாவ சென்றான்.     "பாகீரதி எங்கே இருக்கின்றாய். நீ தேடிய கள்வன் வந்ததைக் கண்டாயா?" என்று தேட புதரிலிருந்து