Posts

ஸ்டாபெர்ரி பெண்ணே- 16

   🍓16                     காலையில் எழுந்ததும் ஆராதனாவுக்கு மனமே கனத்தது. ஏன் என்று தெரியவில்லை... வெற்றி எப்பவும் போல தன்னை மிடுக்காக தனது நிலையை மறைத்து கொண்டான். ஆராதனவால் தான் முடியவில்லை.              வெற்றியோ ஆராதானாவுக்கு மேலே கனத்து இருந்தான். அவனுக்கு எது நடந்தாலும் கஷ்டம் என்ற நிலை.. தன்னை ஆராதனா விட்டு சென்றாலும் வலி அவளை உதய் மறுத்து உண்மை சொன்னாலும் வலி என்றே இருந்தான்.ஆனால் எப்பொழுதும் போல இயல்பாக இருக்க முனைந்தான்.            உதய் எண்ணுக்கு அழுத்தி தொடர்பு கொண்டாள்.      புது எண் என்றதும் உதய் எடுத்து பேசிட அவனின் குரலில் ஆராதனா அப்படியே பேச மறந்தாள். பேச மறந்தால் என்றதைவிட அவளுக்குஅவனோடு பேச பிடிக்கவில்லை என்பதே உண்மை.        வெற்றியை பார்க்க அவளின் பார்வை உணர்ந்தவன் போனை வாங்கி      ''மிஸ்டர் உதய்....''      ''எஸ் நீங்க?''       ''உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. நீங்க சென்னை வந்தாச்சா?''        ''யா இன்னும் இருபது நிமிடத்தில் வந்துடுவேன்... நீங்க... யாரு?''       ''நான் யாருனு நான் ச

ஸ்டாபெர்ரி பெண்ணே-15

 🍓15                       அதிகாலை இருவருக்கும் ஏன் தான் வந்தது என்றே எண்ணி எழுந்தார்கள். ஆராதனா குளித்து முடித்து தனது அறையிலே காபி பருகி முடித்தாள். வெளியே வர மறுத்தாள்.               வெற்றியோ... உதய் வரும் வரை இங்கு இருக்கும் ஜெஸில் தன்னிடம் பேசாவிட்டலும் பரவாயில்லை தன்னோடு ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட வேண்டி வந்தான்.       ''தம்பி ஆராதனா அப்பறம் சாப்பிட்டு கொள்கின்றார்களாம் நீங்க சாப்பிடுங்க" என்றே சொல்லி பரிமாற        ''லட்சுமி அம்மா அவள் இங்க இருக்கற காலம் குறைவு அதனால இருக்கற கொஞ்ச நேரமும் சேர்ந்து சாப்பிட வர சொல்லுங்க.. இது நான் கெஞ்சி கேட்டுக்கறதா சொல்லுங்க'' என்றே சொல்லி அனுப்ப அவரும் அறைக்கு சென்று சொல்ல...  வெற்றி தன்னிடம் கெஞ்சுவது பிடிக்காமல் ஆராதனா(அவன் கெஞ்சினா உனக்கு என்னம்மா) அமைதியாக வந்து உண்டாள்.               அவளை பார்க்க செய்யவில்லை.. இருந்தாலும் அவளின் அருகாமை இருக்கின்றது என்றே எண்ணி அவனும் சாப்பிட்டு கிளம்பினான்.             ஆராதனாவோ மனதில் இவன் கூட உட்கார்ந்து சாப்பிட சொன்னான் ஆனா இவன் என்னை நிமிர்ந்து ஒரு முறை பார்த

ஸ்டாபெர்ரி பெண்ணே-14

 🍓14                          வேகமாக சென்றவள் ஒரு ஆட்டோ பிடித்து ஏறினாள். உதய் வீட்டை நோக்கி போனாள். ஆனால் அவளை வரவேற்றது பூட்டி வைத்த கதவு மட்டுமே....            அருகில் விசாரிக்க சென்றால்... அங்கே இருந்தவர்கள் உதய்-க்கு திருமணம் ஆக போவதால் குலதெய்வ கோவிலுக்கு சென்று இருக்கின்றார்கள் என்ற தகவல் கொடுத்தனர்.             சோர்வுடன் தனது வீட்டுக்கு சென்றாள். அங்கே அவளோடு இருந்த ஆச்சி மட்டுமே இருந்தார்கள்.       ''வா டா குழந்த... இப்போ தான் வந்தியா...? ஏன் டா உதய்யை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று சொல்லிட்ட.. பாரு உதய் அம்மா கையோடு அவரோட உறவு பொண்ணை கட்டி வைக்க ஏற்பாடு எல்லாம் பண்ணிடுச்சு... நீ போன இடத்துல போன் வசதி இல்லையாமே... அதுக்காக ஒரு போன் கூடவா வெளியே இருந்து பண்ணி இந்த பாட்டிக்கு சொல்லி இருக்க கூடாது... வளர்த்த பொண்ணு ஒரு வார்த்தை சொல்லவில்லை என்று எப்படி துடிச்சேன் தெரியுமா? ஏதோ புண்ணியம் உதய் நேரா வந்து சொல்லி விட்டு போனான்.... இனி இங்க தான் இருப்பியா...?'' என்றே ஆராதனா சொல்லாமலே பதில்கள் தானாக வந்து சேர்ந்ததும் விதிர்த்து போனாள்.       ''

ஸ்டாபெர்ரி பெண்ணே -13

 🍓13               காலையில் ஜாக்கிங் முடிந்து வந்தவன் நேராக குளித்து முடித்து ஆபிஸ் கிளம்பி வந்தான்.       அதே நேரம் ஆராதனாவும் வந்து சேர்ந்தாள்.          ''செல்வா... ?''         ''கேளு ஜெஸில்'' என்றே சுருதி குறைந்தே கேட்க         ''ஹ்ம்ம் நான் எதோ கேட்க போறேன்னு தெரியுதா?''        ''அதான் ஒரு நாளைக்கு ஒரு கேள்வி பதில் பத்து கேட்டு என்னை இம்ஸை படுத்தறியே...'' என்றான் புன்னகையோடு அதில் சலிப்பு இல்லை.         ''நான் இம்ஸையா.... அப்பறம் கவனிச்சுக்கறேன்.... நீங்க என்ன கம்பெனி நடத்தறீங்க...?''       அதுவா... லெதர் பேக்டரி... மில்க் ப்ரோடுக்ட் எக்ஸ்போர்ட் செய்யறது... அப்பறம் சில்க் திரேட்ஸ் என்று மூணு நாலு கம்பெனி...ஏன் உனக்கு வேலை வேணுமா? ஆனா நீ கம்ப்யூட்டர் தானே... ஹ்ம்ம் ஓகே ஒர்க் கம்ப்யூட்டரில் பீட் பண்ணி தர்றியா ?'' என்றான்      ''இல்லை இப்போ எனக்கு ஒர்க் பண்ற ஐடியா இல்லை செல்வா... எனக்கு என்னை பற்றி தெரியணும்.... இல்லையா.. நம்ம... ஹ்ம்ம் ஒண்ணுமில்லை''       ''ச

ஸ்டாபெர்ரி பெண்ணே- 12

 🍓12           இரவில் ஆராதனாவிற்கு பொட்டு தூக்கம் கூட இல்லை... எதுக்கு இந்த செல்வா இப்படி என்னை கேட்கணும் நல்லதோ கெட்டதோ என்னை விட்டு போக மாட்டியே ஜெஸில்... என்று... எனக்கு ஒன்றும் புரியலை...                எல்லோரும் பழைய நினைவு மறந்தா அவர்களுக்கு நினைவு வரவழைக்க தான் முயற்சி செய்வாங்க ஆனா இந்த செல்வா மட்டும் அதை பற்றி யோசிக்க மாட்டேன்கிறார்.... ஏன் என்னை கூட யோசிக்க விட மாட்டேன்கிறார்... அப்போ எப்படி எனக்கு என் நினைவுகள் தெரிய வரும்?                 நான் எப்படி பட்ட பெண் நல்லவளா? கெட்டவளா? மென்மையானவளா? கோவப்படுவேனா? எல்லோரிடமும் பழகும் குணமா? எடுத்தெறிந்து பேசுபவளா? எனக்கான உறவுகள் நட்புகள் இருக்கா? இல்லை வெற்றி செல்வன் மட்டும் தானா? எதுக்கு வெற்றி என்கிட்ட இயல்பா பேசவே மறுக்க மாட்டேன்கிறார்? அவரை பொறுத்தவரை என்னை இப்படியே இருந்து கூட ஏற்றுக்கொள்ள தயாரா இருக்கார். எதுக்கு பழைய நினைவு கூடாது என்றாலும் சம்மதமா இருக்கார்? அப்போ எனக்கு தெரிந்து கொள்ள கூடாத பழைய நினைவுகள் சில கசப்பானவையா? அப்படி என்ன நடந்து இருக்கும்?            ஆனா இது எல்லாவற்றிலும் ஒரு உண்மை மட்டும் எனக

ஸ்டாபெர்ரி பெண்ணே -11

 🍓11          ஆராதனாவோ இடையில் கையை வைத்து நிற்க வெற்றி பேச ஆரம்பித்தான்.       ''எதுவும் சொல்லாதீங்க... அதை கேட்க நான் தயாராயில்லை...'' என்றே சொல்ல, போச்சு எனக்கு என் பக்கம் இருக்கும் நியாயம் கூட சொல்ல விட மாட்டேங்கிறா... என்றே அமைதியாக இருக்க      ''இப்படி ஜெஸில் ஜெஸில் என்று கூப்பிட்டா எனக்கு எப்படி நினைவு வரும்? என் பெயர் ஆராதனா தானே?'' என்றாள் அவள். அவளின் முகத்தில் இருந்து நினைவு திரும்பவில்லை ஆனால் எதையோ பார்த்து ஏதோ கேட்க செய்கின்றாள் என்றே அறிந்து கொண்டான். அதனால கொஞ்சம் நிம்மதியோடும் பயத்தோடும்       ''எனக்கு எப்போவும் ஜெஸில் தான் அதனால அப்படி தான் கூப்பிடுவேன்...''       ''ஹ்ம்ம் அப்போ யாரு என்ன ஆராதனா என்று கூப்பிடறது? சரி என்னை ஆரு என்று யார் யாரெல்லாம் கூப்பிடுவாங்க?'' என்றே கேள்வி கேட்க        ''அதுலயே போட்டு இருக்குமே...'' என்றான்.       ''இதுல படிப்பு அது இது என்று எல்லாம் இருக்கு நீங்க சொன்னது தான்... ஆனா நீங்க ஜெஸில் என்று கூப்பிட்டது தான் வித்தியாசமா இருக்கு...'

ஸ்டாபெர்ரி பெண்ணே-10

 🍓10                ஆராதனவோ மெல்ல சிணுங்கி குழந்தை போல முகம் வைத்து  ''இல்லையே.... நீ எவ்ளோ உயரம் ஆனா என் பக்கத்தில் என் உயரம் அளவு வரை தான் தெரிந்த'' என்றே சொல்லியதும் வெற்றிக்கு புரிந்து போனது. முகம் தெரியவில்லை என்றதும் நிம்மதியுடன்                கடவுளே உதய்-க்கு இப்படி தீம் பார்க் போறதே பிடிக்காது பயம் அதனால ஆராதனா கூட அவன் போனதே இல்லை அதனால் இன்று இப்படி முழு நேரமும் அங்கே அவனின் நினைவு வராமல் தப்பித்தோம். இப்போ இங்க கடலில் கொஞ்ச நேரம் தான் இருந்தா ஆனா உதய் நினைவு வந்து இருக்கு கடவுளே இப்போ நான் என்ன பண்றது... என்ன சொல்லி இவளின் பேச்சை மாத்தறது? அப்படியே மாற்றினாலும் கேட்பாளா? அவளுக்கு இப்போ தான் முதல் நினைவா இது தோண்றி  இருக்கு... அப்பறம் எப்படி? இறைவா உதய் நினைவு வந்தா கூட பரவாயில்லை... ஆனா அவளுக்கு நடந்த கசப்பான நிகழ்வு மட்டும் அவளுக்கு நினைவே வர கூடாது... என்று இருக்க        ''செல்வா.....செல்வா.... போதும் சிலை மாதிரி போஸ் கொடுத்தது... கிளம்பலாம் எனக்கு ரொம்ப பசிக்குது... அதனால தான் மூளை வேலை செய்ய மாட்டேங்குது கொஞ்சம் சமோசா வாங்கி கொடுங

ஸ்டாபெர்ரி பெண்ணே - 9

 🍓9                             அதிகாலை எழுந்து பார்க்கும் பொழுது தன்னவளை அணைத்து உறங்கியது கண்டு வேகமாக பதறி எழுந்திட அந்த பதட்டத்தில் ஆராதனா உறக்கம் கலந்து இமை திறந்தாள்.       ''சாரி சாரி ஜெஸில்.....'' என்றே சொல்லியவனின் பேச்சை கேட்காமல்       ''முதலில் இங்க இருந்து வெளியே போங்க செல்வா'' என்றே ஆராதனா சொல்ல அவள் தன் மீது கோவத்தில் இருக்கின்றாள் என்றே எண்ணி மீண்டும்        ''சாரி ஜெஸில் நேற்று கையை பிரித்து வெளியே போக தான் நினைச்சேன் நீ வலியில் என் கையை அதிகமா அழுத்தி பிடிச்சுக்கிட்டு அதனால் தான் போகலை இங்கயே...'' என்றவனின் விளக்கம் கேட்டும்        ''ஐயோ செல்வா என் டிரஸ் எல்லாம் ஸ்பாயில் ஆகி இருக்கு அதனால சொன்னேன் போங்க வெளியே எனக்கு இப்போ வயிறு வலி இல்லை கொஞ்ச நேரத்தில் வந்திடுவேன்'' என்றே சொல்ல வெற்றி வேகமாக வெளியேறினான்.           ஆராதனா எழுந்து குளித்து தனது மெத்தையின் கவரை மாற்றி பின்னரே வெளியே வந்தாள். தான் வெற்றியை எப்படி அருகே இருக்க விட்டோம். அதுவும் இந்த நேரத்தில்.. என்றே ஆராதனா சிந்திக்க அதே சிந்

ஸ்டாபெர்ரி பெண்ணே-8

   🍓8         வெற்றி கொடுத்த லேப்டாப் கொண்டு முதலில் என்ன செய்யலாம் என்றே தோன்றியவளுக்கு முதலில் வந்த யோசனை முகநூலில் நுழைவதே என்று தீர்மானித்தாள்.       எப்படியும் தனது பாஸ்வேர்ட் மறந்து போனதால் புதிதாக ஆரம்பித்தாள். அதில் ஜெஸில் என்றே பெயர் வைத்தவள் தனது அப்பா பெயரை எழுத யோசித்தவளுக்கு தனது தந்தை பேர் நினைவு இல்லை என்றதும் தாயின் பெயரும் தெரியவில்லை என்றதும் அழுகை வந்தது.            பின்னர் அவளாகவே வெற்றி செல்வன் வந்த பிறகு கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றே எண்ணி 'ஜெஸில் செல்வா' என்றே பெயரை உருவாக்கி முகநூலில் கணக்கை ஆரம்பித்தாள். அதன் பின் வெற்றி செல்வன் என்றே ஆராய்ந்து அவனது முகநூலில் நுழைய அவனோ பிசினெஸ் சம்மந்தப்பட்ட ஆட்களை தவிர்த்து இவளோடு எந்த புகைப்படமும் இல்லை. எப்படி இருக்கும்? இவளோ செல்வா முகநூலில் ஒரு போட்டோ கூட என்னோடது இல்லையே... என்ன செய்ய? என்றே எண்ணி அவனுக்கு ப்ரெண்ட் ரெகுஸ்ட் அனுப்பிவிட்டு இருந்தாள். செல்வா நட்பில் தான் இருக்கின்றோமா என்றே ஆராய்ந்து பார்க்க அதுவும் இல்லை... செல்வா என்னை பற்றி ஒன்றும் இல்லையே... ஒரு வேலை முகநூலில் நான் பழகியது இல

ஸ்டாபெர்ரி பெண்ணே-7

 🍓7                விடியல் கதிரவனின் உதவியால் ஜன்னல் திரை மீறி முகத்தில் பட எழுந்தான் வெற்றி அவனின் அருகில் பால் நீட்டி ஆராதனா நின்று இருந்தாள். வெற்றி நெஞ்சில் மேல அவளின் ஒற்றை ரோஜா இருக்க அதனை மறைக்க முயன்றான்.       ''நீ எப்போ வந்த?'' என்றே எழுந்து டேபிளில்  வைத்து முகம் அலம்ப       ''முதலில் ப்ரெஷ் செய்து இந்த பால் பிரட் சாப்பிடுங்க...'' என்றே சொல்ல       ''எனக்கு இது எல்லாம் பழக்கம் இல்லை ஜெஸில்..''       ''ப்ளீஸ்...செல்வா நேற்று நீங்க சாப்பிடலை... அதுக்கு நான் தான் காரணம் அதனால் முதலில் சாப்பிடுங்க'' என்றே அவனை கை பிடித்து அமர வைக்க அதில் தானாக அமர்ந்து சாப்பிட்டான்.        ''அந்த போட்டோ எடுத்துவிட்டியா?''       ''எதுக்கு எடுக்கணும் செல்வா... இந்த வீட்டின் பெரியவங்க... அவங்க போட்டோ அங்க தான் இருக்கணும். உங்களுக்கு அவங்க விட்டுட்டு போன கஷ்டம் இருக்கும் தான் ஆனா அவங்க அன்பை புரிந்து கொள்ளுங்க. மாமா எவ்ளோ காதல் அத்தை மேல வச்சி இருந்தா அவங்க செய்யாத தவறை எண்ணி அத்தை விஷம் குடிச்சால