Posts

செந்நீர் துளிகள்

Image
        செந்நீர் துளிகள்   பனிக்காற்று சில்லென்று ஊசியின்றியே உடலில் குத்தியது.     பனிப்புகை எதிரே வருபவர்களை நிதானித்து தான், கண்டுயுணர்ந்திட நிமிடங்கள் எடுத்தது.      தன் கைகளால் சூடுபரக்க தேய்த்து கன்னத்தில் ஒற்றி எடுத்தாள் தனிஷ்கா.      "சூடா ஏதாவது சாப்பிட்டா நல்லாயிருக்கும் மேம்... வண்டியை நிறுத்திட்டு சாப்பிடுவோமா?" என்று தன் கல்லூரி பேராசிரியர் நிர்மலாவிடம் தனிஷ்கா கேட்டு முடித்தாள்.      "நோ... இங்க நிறுத்தினா நாம போக வேண்டிய இடத்துக்கு ரீச் ஆக நேரமெடுக்கும். இன்னும் அரை மணி நேரம் கழித்து ஹரியானா பார்டர் கிராஸ் பண்ணிட்டு பஞ்சாப் நுழைவு வந்ததும் தான் பிரேக். அதுவரை எங்கயும் நிறுத்தப் போறதில்லை." என்று பின்சீட்டிலிருக்கும் அவளுக்கு திரும்பாமலே இடது கையை ஆட்டி ஆட்டி பேசி முடித்து வலது கையால் தலைக்கு முட்டுக் கொடுத்து, போனை எடுத்து மணியை பார்த்தார்.      மணி ஆறானது. ஆனாலும் பனி விலகாமல் இருக்க, கல்லூரி மாணவிகளை இப்படி அரை இருள் நேரத்தில் எங்கும் நிறுத்தி சாப்பிட வாங்கி தர மறுத்ததார் நிர்மலா. அதையே ஆமோதிப்பதாக ஜானகியும் புன்னகைத்தார்.       தனிஷ்காவோ உப்ஸ்ஸ்...

ஸ்டாபெர்ரி பெண்ணே-26(முடிவு)

  🍓 26               உதய் தான் போனில் கேட்டு கொண்டு இருந்தான். வெற்றி ஆராதனா தாய்மை செய்தியை உறுதி செய்ததையும் சொன்னான். உதய் மனம் நிஜமாகவே மகிழ்ச்சி உற்றது.            உண்மையான அன்புக்கு தீங்கு செய்ய தோணாது.. நல்லதை தான் அவர்களுக்கு வழங்க தோன்றும்..அதே தான் உதய் செய்தான்.             என்ன தான் அவள் தாய்மை அடைய மாட்டாள் என்று அறிந்து விலகியது தனது காதலில் சறுக்கல் வந்தன. அதனால் தான் வெற்றி உண்மையான அன்பு காதல் எல்லாம் ஆராதனாவுக்கு எத்தகைய நிலை என்றாலும் கூடவே நின்றான். இதோ இப்பவும்...              வாழ்வில் சிலர் இவருக்காக இவர்கள் என்று கடவுள் எழுதி இருப்பதும் ஒரு வித காரணத்திற்காக தான். அதே போல வாழ்வில் எந்த காரணமும் நமக்கு கஷ்டம் கொடுத்தாலும் இறுதியில் நன்மைக்கு தான் முடியும் என்றே எண்ணினான்.        கடவுள் எழுதும் கதைக்கும் நல்ல முடிவை தான் எதிர்பார்ப்பார் என்றே எண்ணி அவனின் மகி கையினை பற்றி கொண்டான்.                                                      FEW YEARS LATER        ''செல்வா.... செல்வா... இன்னும் என்ன செய்யற... கிளம்ப வேண்டாமா...? நல்ல நேரத்தில் போகண

ஸ்டாபெர்ரி பெண்ணே- 25

 🍓25    பெயர் ஜெகதீஷ் வயது 29..பார்கவி வயது 44.. என்றே தொடர்ந்து பெயர் போய் கொண்டு இருந்தன.        ஆராதனா தான் ''யார் உங்களுக்கு தெரிந்தவர்களா?'' என்றே கேட்க       ''ஹ்ம்ம் ஆமா..'' என்றே வெற்றி போன் செய்து சுந்தரை அழைக்க சுந்தர் ஜெகதீஷ் மும்பை சென்ற நிலவரம் மட்டும் சொன்னான். பின்னர் வெற்றி விமான விபத்து பற்றி சொல்ல       ''சார் உங்க பிசினெஸ் பண்ண கேட்டீங்க இப்போ என்ன செய்ய சார்''        ''அது விடு வேற ஏற்பாடு பண்ணிக்கலாம்'' என்றே வைத்தான்.        ''சார் வெற்றி சார்... அவர் தானா...?''        ''ஹ்ம்ம்...'' என்றே ஆராதனா பார்த்து இப்போ எதையும் பேசதே என்றே சொல்ல அமைதியாக மாறினான். பின்னர் கிளம்பும் நேரம்          உதய் தான் மிகவும் பயந்து போனான். என்ன இது மனிதன் கொல்ல துடித்தவன் இறந்து விட்டான். அப்பவும் கூலாக இருக்கான் என்றே இருந்தான்.           ''உதய் நீ என்ன நினைக்கிறாய் என்றே தெரியுது.. எனக்கு கடவுள் துணை இருக்கார்.. அதான் அவனை அவரே பார்த்துக்கிட்டார்'' என்றே சொல

ஸ்டாபெர்ரி பெண்ணே-24

   🍓24               உதய் யோசிப்பதை அறிந்து வெற்றி நிதானமாக      ''இங்க பாரு உதய்... என் ஜெஸிலை இப்படி செய்தது யாருனு  சொல்லு... நீ சொல்லாவிட்டாலும் என் வரவேற்பு வீடியோ பார்த்து நானே தெரிந்துப்பபேன்... நீயே சொல்லிட்டால் எனக்கு வேலை மிச்சம்''       ''இல்லை எனக்கு பயமா இருக்கு நீங்க அவங்க கொன்றதே என்னால ஜீரணிக்க முடியலை... இதுல அவன் பேரை சொல்லி... அவனையும் நீங்க எதாவது பண்ண போக... கடைசியா பாதிக்கப்படுவது என்னவோ ஆராதனா தான்''      ''என் பணபலத்தில் இதை எல்லாம் நானே சரி பண்ணி விடுவேன்.. எனக்கு இது பெரிய பிரச்சனையே இல்லை... யாருனு சொல்லு... அதுபோதும்''  பதிலுக்காய் குறியாக இருந்தான்.        ''மன்னிச்சுடுங்க எனக்கு அவன் பெயர் எல்லாம் தெரியாது...'' என்றே உதய் சொல்ல      ''உதய்... அவனை காப்பாற்ற நினைக்கறியா?'' என்றே வெற்றி குரல் கேட்டு நடுங்கி போனான்.      ''இல்லை வெற்றி.. நிஜமாவே எனக்கு பேர் எல்லாம் தெரியாது... நீங்க வீடியோ காட்டுங்க நான் அதுல யாருனு சொல்லிடறேன்....''             உடனே

ஸ்டாபெர்ரி பெண்ணே-23

  🍓 23                    அதிகாலை எழுந்தது என்னவோ வெற்றி தான். எப்பவும் போல எழுந்தவன் ஜாக்கிங் செய்ய சென்றிட அதன் பின் எழுந்த ஆராதனா சுற்றி அறையை பார்த்தவள் நேற்றைய நிகழ்வில் முகம் சிவக்க இந்த வெற்றி எங்க...? என்றே குளியலறைக்கு சென்றாள்.           நான் எப்படி செல்வாவோட இணங்கி போனேன். எனக்கு பயமோ கூச்சமோ எல்லாம் எங்க போனது. நிஜமாவே செல்வா எனக்கு என்று படைக்க பெற்றவர்... என்றே நெற்றியில் குங்குமம் இட கதவை திறந்து செல்வா வந்தான்.      ''ஹாய் ஜெஸில்.. ஆர் யூ ஓகே..?''      ''எல்லாம் ஓகே தான் ஏன் என்னை எழுப்பலை...''       ''நீயே நேற்று வரவேற்பு முடிஞ்சு சோர்வா இருந்து இருப்ப அதுக்கும் மேல நான் வேற....'' என்றே குறும்போடு சொல்லி ''அதான் எழுப்பலை...'' என்றான்.       ''பசிக்குது செல்வா... லட்சுமி அம்மா வேற இல்லை...'' என்றே சொல்லி கீழே இறங்கினாள்.              செல்வன் முகம் கை கால் அலம்பி கீழே வந்து பார்க்க உப்புமா செய்கின்றேன் என்று ஆராதனா பாத்திரத்தோடு போராடி கொண்டு இருந்தாள்.       ''ஹாஹாஹா

ஸ்டாபெர்ரி பெண்ணே-22

 🍓 22                  ஆராதனாவோ தனது ஆடையின் பாரத்தை தாங்கி கொண்டு உணவினை உன்ன வெற்றி கண் இமைக்காமல் அவளையே பார்த்து இருந்தான்.       ''செல்வா... இப்படி அடிக்கடி எதுக்கு என்னை விழுங்கற மாதிரி பார்க்கற? சாப்பிடு'' என்றாள் ஆராதனா.       ''ஜெஸில் எனக்கு உன்னை பார்த்துகிட்டே இருந்தா பசியே தெரிலை''       ''ஐயோ சினிமா வசனமா? சாப்பிடுங்க... அப்பறம் பேசுவோம்''        ''ஏன் ஜெஸில் புட் புடிச்சு இருக்கா?''        ''செம டேஸ்ட்... எல்லாமே எனக்கு புடிச்ச ஐட்டம்... செல்வா... இது உங்க ஏற்படா?''         ''ஹ்ம்ம்...''        ''ரொம்ப அற்புதம்.. எனக்கு எல்லாமே நிறைவா இருந்துச்சு... உங்க கையை பற்றி இருக்கும் பொழுது எனக்கு ஒரு கர்வம் கூட இருந்துச்சு... எனக்கு பிறந்த ராஜகுமரன் அப்படி ஒரு கர்வம் செல்வா...''       ''எனக்கும் ஜெஸில்...'' என்றே மையலில் பார்க்க      ''தம்பி நானும் கிளம்பறேன்...'' என்றே லட்சுமி அம்மா நின்று இருந்தார்கள்.      ''சரிங்

ஸ்டாபெர்ரி பெண்ணே- 21

  🍓 21                        இன்று வரவேற்பு என்றதும் எங்கிருந்து தான் பயம் வந்து ஒட்டிக்கொண்டது.      ''செல்வா எனக்கு யாரையும் தெரியாது..... நான் தனியா என்ன செய்வேன்''       ''நீ எப்படி தனியா இருப்ப உன் செல்வா உன்கூடவே இருப்பேன்''       ''இல்லை உங்கள தெரிந்தவர்கள் வந்ததும் பேசுவ.. வாழ்த்து சொல்லுவாங்க... நீ அவங்களை கவனிப்ப...'' என்றே  பேசிக்கொண்டு போனவள் இதழில் கையினை வைத்து       ''ஜெஸில் இந்த உலகத்திலே எனக்கு நீ தான் முக்கியம் ஜெஸில் உன்னை தனியா விட்டுட்டு எப்பவும் வேடிக்கை பார்க்க மாட்டேன்...''        ''நிஜமா...'' என்றே கேட்க       ''ஹ்ம்ம் என்றே நெற்றியில் இதழ் ஒற்றினான்.                  ஆராதனா என்ன நினைத்தாளோ அவனின் நெஞ்சில் சாய்ந்து இமையை முடி நின்றாள்.         நாழிகை நகர  ''ஹுக்கும்..'' என்றே கரகர குரலில் சுந்தர் செருமிக் கொண்டே வர ஆராதனா விலகி நின்றாள்.      ''சார் எல்லாம் ரெடி நீங்க சிஸ்டர் வருவது தான் பாக்கி.... என்றே சொல்ல ஆராதனா கையை பற்றியே நடந்தா