Posts

செம்புல பெயல் நீர்போல

Image
                                செம்புல பெயல் நீர்போல     விழியன் என்னும் அபிஷேக் அவளுக்காக காத்திருந்தான். அவள் தான் அபிராமி.      ஆறு மாதமாக விழியன் சோஷியல் மீடியாவில் நட்பு பாராட்டி பேசியதில் அபிராமியின் பேச்சில் பிடித்தம் ஏற்பட்டு காதல் என்று அங்கீகரிக்கும் நேரம் அபிராமியோ 'நாம நேர்ல மீட் பண்ணலாமா'னு கேட்டு விட்டாள்.      விழியனும் காதலை இந்த சோஷியல் மீடியாவில் இன்பாக்ஸில் சொல்லி விடுவதற்கு பதிலாக நேரில் சொல்லலாமென்ற ஆவல் பெருகியது. இன்பாக்ஸில் சொல்லி அவள் பார்க்க வரும் இந்த சந்தர்ப்பத்தை தவிர்ப்பானேன.     'என்னடா இவ்வளவு நேரம் வெயிட் பண்ணறோம் அவளை காணோமே' என்று அபிஷேக் உள்ளத்து குரலாய் கேட்டு விட்டான். விழியன் என்பது அபிஷேக்கின் புனைப்பெயர் அல்லவா.     "வருவா வருவா. தேவதைகள் பொறுமையா தான் வருவாங்க." என்று கவிஞனாய் விழியன் பதில் தந்தான் மனசாட்சியிடம்.      சட்டென மின்னல் குறுஞ்செய்தியாக "ஹாய் தனியா தானே வந்திருக்கிங்க" என்று கேட்டாள்.      போன் எண்ணை பரிமாறி இன்று தான் வாட்ஸப்பில் முதல் முறையாக அபிராமி அவளாக ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினாள்.      ப

துளிர் விடும் விடியல்

Image
                                            துளிர் விடும் விடியல்       ஞாயிறு மதியம் கறிக்குழம்பு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது. அதை விடத் திவ்யபாரதி மனம் கொதித்தது. மற்றவர்களுக்குத் திவ்யா என்று நெருக்கம்.      தன்னைப் படிக்க வைக்காமல் தந்தை திருமணம் பற்றிப் பேச்சை எடுப்பது எரிச்சலை தந்தது.     தான் ஒன்றும் பார்டர் பாஸ் அல்ல. அதே நேரம் பத்திரிகையில் இடம் பிடிக்கும் முதல் தரமும் அல்ல. அறுபத்தியிரெண்டு விழுக்காடு பெற்ற மத்திய ரகம்.      அளவுக்கதிகமாகப் படிக்க வைக்கக் கேட்கவில்லை. சின்னதாய் பெயருக்குப் பின்னால் ஒரு டிகிரி. அது மட்டும் போதும். அதற்குப் பின் கண்ணை மூடி தந்தை கூறும் வினோத்தை திருமணம் செய்ய அவளுக்கு ஒப்புதலே. ஆனால் படிக்கவிடாமல் இப்படிப் பதினெட்டு அடியெடுத்து வைத்து விட்டாளென உடனே சந்தையில் விற்பது போல வரன் வந்தால் விற்பதா?       படிக்கின்றேன் என்று கூறி அடம் பிடித்தாயிற்று. காதில் வாங்காமல் அவர் பாட்டிற்கு இருப்பது இன்னமும் வெறுப்பை அதிகரித்தது.      மதியம் உணவு உண்ண தந்தை வந்திருந்தார்.     பெரிதாய் வியாபாரியோ, பிஸினஸ் மேன் என்றெல்லாம் இல்லை. ஆட்டோவோட்டும்

காயத்ரி

Image
                                                    காயத்ரி     இரண்டு பக்கமும் கொரனா தடுப்பு வைத்து அந்த தெருவில் பெரிய வாகனங்கள் போக விடாமல் அடைத்தனர்.     அந்த மூன்றடுக்கு கட்டிடத்தில் ஹாட் ஸ்பாட் போட்டு முடித்திருக்க, ஆம்புலன்ஸில் ஒருவரை ஏற்றி சென்றனர்.   மற்றவர்கறையும் முகமூடி அணிந்து கடத்தி சென்றனர். பார்க்க அப்படி தான் தோன்றியது. கவலை தேய்ந்த முகத்தோடு மூன்று கட்டிட மனிதர்களும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றனர்.     ஒருவருக்கு வந்த கொரானா மற்ற குடுத்தினருக்கு பரவுவதாக ஆய்வு செய்ய தனியாக பெரியவர்களை அழைத்து சென்றது. இருவருக்கு தொற்று ஊர்ஜிதமாக அவர்களை அங்கேயே பிடித்து வைத்து கொண்டனர். மற்ற இருவருக்கு இல்லையென அனுப்பி வைத்தார்கள். மேலும் இருவருக்கு தொற்று உள்ளது தங்களாகவே தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் இங்கே அதிக வார்டு இல்லையென கூறி சென்றனர்.    காயத்ரி அவர் கணவன் சிவகுமார் ஆஸ்பிடலில் தனிதனிப்பிரிவில் சிகிச்சை எடுத்தனர்.      காயத்ரி சிவகுமார் அருகே செல்ல முடியவில்லையே என்று கவலை தோய்ந்து இருந்தார். வளர்ந்த இரு பெண்கள் ஓசூரில் கல்லூரி படிக்க சென்றிருந்தனர். இருவரும் சேர

தீர்ப்பெழுதிய பேனா

Image
                                   தீர்ப்பெழுதிய பேனா               ராமமூர்த்தி தன் மகள் ராதாவை அணைத்து அழுதுக்கொண்டு, "இந்த இடம் எங்களோட காட்டை வித்து, இருக்கிற கை காசு போட்டு, குருவி சேர்க்கிற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து, இந்த நிலத்தை வாங்கினோம். முன்ன சீண்டுவார் யாருமில்லாதப்ப வாங்கிப் போட்டது. இப்ப இந்த இடத்துல ஸ்கூலு, காலேஜி, காம்பிளக்ஸ், அடுக்குமாடி கட்டிடம் வரப்போகுதுனு தெரிந்ததும் இப்படி அநியாயமா கைக்கு மீறி காசு கேட்கறிங்க. இதை கட்டி முடிக்க இவ்ளோ ஆகும்னா... பேசாம ஒரு குடிசை வீடா போட்டுயிருப்பேனே சாமி. என்னை விட்டுடுங்க" என்று தழதழத்து கூறி முடித்தார்.    எதிரில் இருந்தவர்களோ "இங்க பாருங்க ராமமூர்த்தி ஐயா. நீங்க உங்க நிலத்தை கட்ட கொடுத்த காசுக்கு குடிசை வீடு தான் கிடைக்கும். இங்க நிமிர்ந்து பாருங்க. நாலடுக்கு வீடா மாற்றி கட்டியிருக்கேன். எங்களுக்கு எங்க பங்கா பணத்தை எடுத்து கொடுங்க. வாங்கிட்டு போயிட்டே இருப்போம். இல்லை மொத்தமா வேண்டும் இது என் நிலம் அப்படியிப்படி வீராப்பு பேசினா ஒரு செங்கல் கூட கிடைக்காது.    இதை கட்ட செலவான கோடிகளை கணக்கு எடுத

சைராவும்🐕 சேட்டைக்காரியும்👧🏻

Image
                         சைராவும் சேட்டைக்காரியும்           ஒரு ஊரில் ஒரு அழகான நாய் ஒன்று வாழ்ந்து வந்தது. அது எப்பொழுதும் அவ்வூரின் தனிமையான இடமான பெரிய ஆலமரத்தின் கீழ் வாழும்.      தற்போது அதன் வாழிடமான ஆலமரத்தின் கீழ் பகுதியிலிருந்து வேறிடம் நோக்கி இடம் பெயர யோசித்து கொண்டிருந்தது. ஏனென்றால் அது வயிற்றில் தற்போது குட்டிநாய்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் வெளியே பிறந்து விடும் நிலைக்கு இருந்தது.     அதனால் அது தக்க பாதுக்காப்பான இடம் நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தது.     அவ்வூரில் சற்று நெடுஞ்சாலையை தாண்டி சென்ற போது பசி வாட்டியெடுக்க ஒரு டீக்கடையின் கீழ் நின்றது. அப்போது அங்கே வந்த பருப்பு வியாபாரி ஒருவர் அந்த நாயை கண்டு பாவம் பார்த்து பட்டர் பிஸ்கேட் வாங்கி அதற்கு போட்டார்.       நாயும் வாலாட்டி நன்றி உரைத்து பிஸ்கேட்டை சாப்பிட்டது. அந்த பருப்பு வியாபாரி அவ்விடம் விட்டு பைக்கில் அவரது வீட்டுக்கு செல்லவும் அந்த நாயும் பின் தொடர்ந்தது.     ஒரு பெரிய கேட்டின் உள் செல்ல நாயும் உள்ளே வந்தது. வீட்டுக்கு வந்தப் பின்னரே அது தன்னை தொடர்வதை அறிந்து தன் மனைவியிடம் பிஸ்கேட் வாங்க

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

Image
  முதல் முதலாய் ஒரு மெல்லிய           முதல் முதலாய் ஒரு மெல்லிய-1   முதல் முதலாய் ஒரு மெல்லிய-2   முதல் முதலாய் ஒரு மெல்லிய -3  முதல் முதலாய் ஒரு மெல்லிய-4   முதல் முதலாய் ஒரு மெல்லிய-5 முதல் முதலாய் ஒரு மெல்லிய-6  முதல் முதலாய் ஒரு மெல்லிய-7  முதல் முதலாய் ஒரு மெல்லிய-8  முதல் முதலாய் ஒரு மெல்லிய-9  முதல் முதலாய் ஒரு மெல்லிய-10  முதல் முதலாய் ஒரு மெல்லிய-11 முதல் முதலாய் ஒரு மெல்லிய-12 முதல் முதலாய் ஒரு மெல்லிய-13 முதல் முதலாய் ஒரு மெல்லிய-14 & 15 முதல் முதலாய் ஒரு மெல்லிய-16 & 17 முதல் முதலாய் ஒரு மெல்லிய- 18 முதல் முதலாய் ஒரு மெல்லிய-19 முதல் முதலாய் ஒரு மெல்லிய-20 முதல் முதலாய் ஒரு மெல்லிய-21 முதல் முதலாய் ஒரு மெல்லிய-22 முதல் முதலாய் ஒரு மெல்லிய-23 முதல் முதலாய் ஒரு மெல்லிய-24 முதல் முதலாய் ஒரு மெல்லிய-25 முதல் முதலாய் ஒரு மெல்லிய-26 முதல் முதலாய் ஒரு மெல்லிய-27 முதல் முதலாய் ஒரு மெல்லிய-28 முதல் முதலாய் ஒரு மெல்லிய-29 முதல் முதலாய் ஒரு மெல்லிய-30 & 31

சிரமமில்லாமல் சில கொலைகள்

Image
சிரமமில்லாமல் சில கொலைகள்         முன் ஜென்ம தேடலில் தொலைத்த காதலை இந்த ஜென்மத்தில் உயிர் கொடுக்க முயலுக்கின்றது ஒரு ஆன்மா. கூடவே தன் காதலை தண்டித்த காரணத்தால் பழி வெறியை சேர்த்தே கருவருக்கிறது அவ்வுருவம்.ஜென்மம் தாண்டி காதல் சேருமா? காதலிக்கும் அப்பேதையே  அறியாத காதல்? காண்போம் சில கொலைகளில் சிரமமில்லாமல்.. கதைகளோடு.     சிரமமில்லாமல் சில கொலைகள் -1     சிரமமில்லாமல் சில கொலைகள்-2    சிரமமில்லாமல் சில கொலைகள்-3     சிரமமில்லாமல் சில கொலைகள்-4     சிரமமில்லாமல் சில கொலைகள்-5   சிரமமில்லாமல் சில கொலைகள்-6   சிரமமில்லாமல் சில கொலைகள்-7   சிரமமில்லாமல் சில கொலைகள்-8    சிரமமில்லாமல் சில கொலைகள்-9   சிரமமில்லாமல் சில கொலைகள்-10   சிரமமில்லாமல் சில கொலைகள்-11 சிரமமில்லாமல் சில கொலைகள்-12 சிரமமில்லாமல் சில கொலைகள்-13 சிரமமில்லாமல் சில கொலைகள்-14   சிரமமில்லாமல் சில கொலைகள்-15     சிரமமில்லாமல் சில கொலைகள்-16     சிரமமில்லாமல் சில கொலைகள்-17     சிரமமில்லாமல் சில கொலைகள்-18     சிரமமில்லாமல் சில கொலைகள்-19     சிரமமில்லாமல் சில கொலைகள்-20     சிரமமில்லாமல் சில கொலைகள்-21(completed)