Posts

தாமரை கோலம் (9-5 இடைப்புள்ளி)

Image
 தாமரை கோலம் 9-5 இடைப்புள்ளி

பூக்கோலம்(11-6 இடைப்புள்ளி )

Image
 பூக்கோலம்  11-6 இடைப்புள்ளி 

சிறுகிழங்கு பொரியல்

Image
  சிறுகிழங்கு பொரியல் தேவையான பொருள் : சின்ன வெங்காயம் - ஒரு கப் எண்ணெய் -தேவையான அளவு தாளிக்க கடுகு- சிறிதளவு உளுந்து- சிறிதளவு சிறுகிழங்கு-கால்கிலோ சீரகம்- ஒரு டேபிள் ஸ்பூன் மிளகுதூள், மஞ்சள் தூள் -சிட்டிகை அளவு காய்ந்த மிளகாய் -இரண்டு கறிவேப்பிலை கொத்தமல்லி -சிறிதளவு. உப்பு - தேவைக்கு ஏற்ப செய்முறை : சிறுகிழங்கில் நிறைய மண் இருக்கும் அதனால சிறுகிழங்கை நன்றாக அலசிடணும்.   சிலருக்கு தோலை ரிமூவர்ல எடுத்து அப்படியே செய்வாங்க. எனக்கு வேகவைத்து எடுத்து பண்ணறது பிடிக்கும். முதலில் சிறுகிழங்கை குக்கரில் நான்கு விசில் கொடுத்து வேகவைக்கவும். தொட்டாலே சிறுகிழங்கு தோல் உறிந்து கிழங்கு தனியாக வரும். பயப்பட வேண்டாம் கிழங்கு குழைந்துவிடாது. தோலுரித்து எடுத்து வைத்த சிறுகிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளலாம். அல்லது மசித்து கொள்ளலாம். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து போட்டு சின்ன வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் காய்ந்த மிளகாயை கிள்ளி  கருவேப்பிலை போட்டு வதக்கவும். வேகவைத்த சிறுகிழங்கு சேர்த்து மஞ்சள் தூளையும் போட்டு சற்று கிளறி விட்டு நாலாப்பக்கமும் மஞ்சள் தூள், கி

பஞ்ச தந்திரம்-2

Image
  தந்திரம்-2     ஒரு காம்பவுண்டில் இங்கும் அங்கும் ஒரு செங்கல் பேத்து இருந்தது. அதில் மாறி மாறி கால் வைக்கும் பொருட்டு ஏணிபடிகள் போல இருக்க அதில் நைனிகா ஏறினாள்.     "ஏய்... என்ன பண்ணற?" என்று ரஞ்சனா கேட்டு நைனிகாவை நிறுத்தினாள். பாதியில் தொங்கிய நைனிகா கீழே இறங்கினாள்.      "இது நான் தங்கியிருக்குற ஹாஸ்டல். இது வழியா மேல வந்திங்கன்னா... ரூமுக்கு போயிடலாம்." என்று சாவி கொத்தை ஆட்டினாள் நைனிகா.      "மஞ்சரி அம்மா வயசானவங்க எப்படி ஏறுவாங்க? இதோ திரிஷா.." என்று கூறவும் "என் பெயர் திரிஷா இல்லை திரிஷ்யா" என்று இடைப்புகுந்து திருத்தினாள் திரிஷ்யா.     "சரி... திரிஷ்யா.. இவங்க சேரி கட்டியிருக்காங்க எப்படி ஏறுவாங்க?" என்று கேட்டாள் ரஞ்சனா.       நைனிகாவோ தோளைக் குலுக்கி வேற இடம் இருக்கா என்பது போல பார்த்தாள்.      "நான் அட்ஜஸ்ட் பண்ணி ஏறிடுவேன். எங்கவீட்ல மாடில வாட்டர் டேங்க்ல இது மாதிரி ஏணில ஏறி பழக்கம். ஆனா இது சுவர் சறுக்கிடாதா?" என்று திரிஷ்யா கேட்டாள்.     "தைரியமா ஏறுங்க" என்று நைனிகா பதில் தந்தாள்.     "அப்படியே

பஞ்ச தந்திரம்-1

Image
  தந்திரம்-1 இடம் : மெரீனா கடற்கரை      தன்னந்தனியா அங்குமிங்கும் மக்களை பார்த்து கொண்டிருந்தாள் அவள். இந்த பரந்த கடற்கரையில் இவளை போல தனியாக யாரும் கடற்கரை ரசிக்க வந்திருப்பார்களா என்று கணக்கெடுத்தால் நிச்சயம் புள்ளிவிவரப்படி பூஜ்ஜியமாக காட்டலாம். ஆம் அவள் வயது அப்படி.     ஆறு வயதானவள் தனியாக கடற்கரைக்கு வந்து உட்கார்ந்து விட்டாள்.    அவள் வயதிற்கு மணலில் வீடுகட்டி மகிழலாம். இல்லையென்றால் சிப்பி பொறுக்கி குதுகலிக்கலாம், இரண்டுமில்லையென்றால் கடற்கரை அலையில் கால் நனைத்து  நுரையோடு விளையாடி சிரிக்கலாம்.    எதையும் செய்யாமல் இந்த கடல் நீரில் மூழ்கினால் எப்படி மூச்சடைக்கும். மேலே எழும்பால் நீருக்குள் மூழ்கி இழுத்து சென்று கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் போகுமோ என யோசித்துக் கொண்டிருந்தாள்.    இந்த வயதில் இந்த எண்ணம் கூடாது தான். ஆனால் சிந்தித்திருந்தாள் குழந்தையவள்.      அருகேயிருந்த பெண் மெலிதாய் சிரிக்க முகத்தைத் திருப்பிக் கொண்டாள் குழந்தை(சிறுமி) தனுஜா .     ஏதோவொரு ஆர்வம் மேலோங்க தனுஜா மெதுவாய் பக்கவாட்டு பக்கம் விழியை செலுத்த மாடர்ன் யுவதியாக அமர்ந்திருந்தாள் ஒரு பெண்.     கண்ணில் க

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

Image
  பஞ்ச தந்திரம் ( five knots will be untied )   5பஞ்ச -தந்திரம்👇 த(Tha)-தனுஜா (Thanuja-6) ந்(N)-நைனிகா (Nainika-18) தி(Dhi)-திரிஷ்யா (Dhirishiya-27) ர(Ra)- ரஞ்சனா (Ranjana-35) ம்(M)- மஞ்சரி (Manjari-69) பஞ்ச தந்திரம்  கதையை வாசிக்க கீழே உள்ள அத்தியாயத்தினை சொடுக்கவும். 👇 பஞ்ச தந்திரம்-1   பஞ்ச தந்திரம்-2 பஞ்ச தந்திரம்-3 பஞ்ச தந்திரம்-4 பஞ்ச தந்திரம்-5 பஞ்ச தந்திரம்-6 பஞ்ச தந்திரம்-7 பஞ்ச தந்திரம்-8 பஞ்ச தந்திரம்-9 பஞ்ச தந்திரம்-10 பஞ்சதந்திரம்-11 பஞ்ச தந்திரம்-12 பஞ்ச தந்திரம்-13 பஞ்ச தந்திரம்-14 பஞ்ச தந்திரம்-15 பஞ்ச தந்திரம்-16 பஞ்ச தந்திரம்-17 பஞ்ச தந்திரம்-18(முடிவுற்றது)

அதலக்காய் பொரியல்

Image
  அதலக்காய் பொரியல் தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் ஒரு சிறு பவுல் அளவிற்கு நல்லெண்ணெய் தேவையான அளவு கடுகு ஒரு ஸ்பூன் உளுந்து ஒரு ஸ்பூன் காய்ந்த மிளகாய் வற்றல்: 2   கறிவேப்பிலை கொஞ்சம் அதலக்காய் கால்கிலோ   உப்பு தேவையான அளவு மஞ்சள் தூள் சின்ன ஸ்பூன் அளவு சீரகம் ஒரு ஸ்பூன் செய்முறை :    எண்ணெய் கடாயில் சூடான பிறகு கடுகு உளுந்து கருவேப்பில்லை மற்றும் நறுக்கி வைத்த சின்ன வெங்காயம் ஒன்றன்பின் ஒன்றாக நன்றாக வதக்கி விட்டு, காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு மஞ்சள் தூள் சேர்த்து, அதலக்காயையும் வதக்க வேண்டும். பின்னர் உப்பு சேர்த்து நன்றாக வதங்கி சாப்பிடும் பக்குவம் வந்ததும் சீரகம் ஒரு ஸ்பூன் சேர்த்து மூடி விடவும். தேவையிருப்பின் சிலர் வேக வைத்த துவரம்பருப்பை ஒரு குழம்பு கரண்டி அளவில் சேர்த்து கசப்பு சுவையை மட்டுப்படுத்த பார்ப்பார்.  சிலர் தேங்காய் துருவி சேர்த்து கொள்வார்கள்.  பகாற்காய் விரும்புவோர் இதை விரும்பி உண்பார்கள். சுகருக்கு நல்லது😉 எங்க ஐய்யமைக்கு ரொம்ப பிடிக்கும். இப்பவும் இதை வாங்குறப்ப அவங்களை நினைச்சிப்பேன். சீசன் டைம்ல இந்த காய்கறியை கண்டிப்பா வாங்கிடுவேன். நான் சமைத்

கற்பூரவள்ளி பஜ்ஜி

Image
  கற்பூரவள்ளி பஜ்ஜி    கற்பூரவள்ளி இலையில் கசாயம் மட்டும் அல்ல நமக்கு பிடிச்ச மாதிரி பஜ்ஜியும் போட்டுக்கலாம். மாலை நேர சிற்றுண்டியாக பஜ்ஜி மாவு அல்லது கடலை மாவில் தொட்டு எண்ணெயில் போட்டா லைட்டா இலை சூட்டுக்கு வெந்து அதுவுமே சாப்பிட சுவையாக இருக்கும். கீழே பிரெட் பஜ்ஜி கூட இலை பஜ்ஜியாக கற்பூரவள்ளி பஜ்ஜி போட்டிருக்கேன்.      தேங்காய் சட்னி இல்லைனா மயோனஸ் தக்காளி சாஸ் இரண்டையும் ஊற்றி தொட்டு சாப்பிட்டா நல்லாயிருக்கும். ரெகுலரா வெங்கயா பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி பிரெட் பஜ்ஜி குயிக்கா போடுவது போல இதுவும் போட்டு கொடுத்துடலாம். கஷாயம் குடிக்காத வாலுங்க நிச்சயம் மயோனஸ் தொட்டு நாலு இலை பஜ்ஜியை சாப்பிடுவது உறுதி.😉    

கற்பூரவள்ளி தோசை

Image
            கற்பூரவள்ளி தோசை மொறு மொறுனு தோசையில. இந்த குளிருக்கு இதை முயற்சி பண்ணிப்பாருங்க. 😊😉     சாதாரணமா குழந்தைகளுக்கு என்றால் நாலு கற்பூரவள்ளியை தண்ணில கொதிக்க வைத்து கூடவே சுக்கு கிராம்பு பெப்பர் என்று நுணுக்கியதை போட்டு நல்லா கொதிச்சதும் வடிக்கட்டி தேன் கலந்து கொடுப்பேன். இல்லைனா நாட்டுச்சர்க்கரை அல்லது பனவெல்லம் போட்டு தருவேன்.     குழந்தைகள் குடிச்சிடுவாங்க. அதென்னவோ குழந்தைகளுக்கு என்று செய்யறப்ப செய்திடுவோம். இதே நமக்கு சளி இருமல் என்று வந்தா செய்ய தோன்றுவதில்லை. எனக்கு நான் செய்யாம சுத்திட்டு இருந்தேன்.      என் வீட்டுக்காரர் நான் இரும்பவும்  திட்டிட்டுயிருந்தார். உடல்நிலையில் அக்கறையே இல்லை பிரவீணானு. நான் கொஞ்சம் ரோஷப்பட்டு இரண்டு தடவை குடிச்சேன். ஆனா தனக்கு செய்யணும்னா சோம்பேறித்தனம் வந்துடுது.      அப்ப உதிர்த்த மின்னல் ஐடியா தான் கற்பூரவள்ளி தோசை.    மாடில வளர்த்த கற்பூரவள்ளி செடியோட இலையை பறிச்சிட்டு வந்து குட்டிகுட்டியா கட்டம் வடிவத்தில வெட்டி தோசை ஊற்றி அதுல தூவி சாப்பிட்டு பார்த்தேன்.    அதோட ப்ளேவர் மென்று விழுங்கறப்ப நல்லா இருந்தது. அடுத்து பெரியபொண்ணுக

பிரம்மனின் கிறுக்கல்கள்-11 (முற்றும்)

Image
  அத்தியாயம்-11     ஆத்விக் காலையிலேயே அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்தான். குழந்தைக்கு செரலாக் எடுத்து வந்த யஷ்தவியிடம் அதனை பெற்று "நான் ஊட்டி விடறேன் நீ ரெடியாகு. எங்கயாவது லஞ்ச்கு போகலாம்" என்றான்.       "நான் கோவிலுக்கு போகணும். குழந்தை பிறந்த நாள் நல்லபடியா முடிந்தா அங்க இன்னிக்கு கேசரி பிரசாதம் கொடுக்கலாம்னு." என்று கூறவும் "ஓ... அப்ப நானும் வர்றேன்" என்றான்.      "மாமா உங்களுக்கு கோவில் பிடிக்காதுனு சொல்லிருந்தாரே. சந்தனாவை மேரேஜ் பண்ணியது கூட ரிஜிஸ்டர் ஆபிஸ் தானாமே. பிறகெப்படி?" என்று தயங்கினாள்.      "இதுவும் சுயநலம் தான். மனிதனுக்கு கஷ்டமில்லாதப்ப வேண்டுதல் இல்லாதப்பவும் கடவுளை தேடமாட்டான். ஆனா இப்ப மனசுல வேண்டுதல் நிறைய இருக்கு." என்றான்.         யஷ்தவி இதற்கு மேல் தோண்டிதுருவாமல் கோவிலுக்கு தயாரானாள்.      ஆத்விக் பாவனாவிற்கு உடைமாற்றி தலலவாறினான். அதற்குள் யஷ்தவி கிளம்பி ஒரு தூக்குவாளியில் கேசரியை எடுத்து கொண்டு வநதாள்.      "இந்த வெயிட்டை வச்சிட்டு பாப்பாவை வேற தூக்கிட்டு கோவிலுக்கு சேலையில் போனா ஸ்லிப்பாகவா? உனக்கு