Posts

அகமா முகமா?

Image
  அகமா முகமா?     குழந்தைகள் வந்ததும் அவர்களை  கவரும் விதமாக ஆங்காங்க கார்டூன் பொம்மை உடையணிந்து  மனிதர்கள் அவ்விழாவிற்கு காத்திருந்தனர்.        குழந்தைகள் தினத்தை குதுகலமாக அவர்களுக்கு பிடித்த வகையில் அந்த அப்பார்ட்மெண்ட்டில் நடைப்பெற்றது.     மொத்த அப்பார்ட்மெண்ட் குழந்தைகளும் கலந்து பரிசை வெல்ல பல போட்டிகள் நடைப்பெற்றது.    குழந்தைகளுக்கு போட்டி மட்டுமா பிடிக்கும். அவர்கள் கார்டூன் உலகத்தின் மக்களையும் வரவைக்கவே அந்த அசோஷியேட் ஆட்கள் முடிவெடுக்க இதோ கார்டூன் உலகத்தின் ஆடையை மனிதர்கள் அணிந்து நடமாடி பார்க்கும் குழந்தைக்கு எல்லாம் கையை அசைக்க, குழந்தைகளோ ஆர்வமாக கை குலுக்குவதும், போட்டோ எடுப்பதுவுமாக இருந்தனர்.     உள்ளுக்கு அத்தனை புழுக்கம் ஏற்படும் அந்த ஆடை அணிந்தால், முகம் வேர்த்து வேர்வை தண்ணீர் சொட்டும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தனியாக சென்று அசுவசப்பட்டு கொள்வார்கள். சற்று நேரம் ஆளில்லை என்றால் கூட வரவேற்பில் இருக்கும் பணம் கொடுத்த ஆட்கள் "என்னப்பா வாங்கற காசுக்கு நிற்க வேண்டாமா" என்பார்.     "என்னப்பா... எங்க காலத்துல இருந்து இப்ப வரை லீடிங்ல இருக்கறது மிக்கி

புத்தாண்டு சபதம்

Image
            புத்தாண்டு சபதம்     புத்தாண்டு வருவதற்குள் ஆயிரதெட்டு விளம்பரம் டிவியில் விடாமல் போட்டு இம்சை செய்தனர்.     நகைகள் ஆடைகள் பர்னிச்சர்கள் என்று எதற்கெடுத்தாலும் இலவச சலுகை போட்டு அதை பிடிக்காவிட்டாலும் மனனம் செய்யுமளவிற்கு காதை தீய வைத்துவிடுகின்றனர்.    நியூ இயர் என்றால் ஆர்வமாக வரவேற்க திவ்யாவுக்கும் ஆசைதான். ஆனால் ரவீஷ்?        எத்தனை முறை சொன்னாலும் ரவீஷ் ஆங்கில புத்தாண்டு அன்று நண்பர்களோடு மது அருந்திவிட்டு வருவது திவ்யாவுக்கு ஏற்க முடியாத கவலையை தரும்.      இந்த நியூஇயர் என்றாலே எரிச்சலாய் உணருவாள். தமிழ் வருடப்பிறப்புக்கு கூட இத்தனை ஆர்ப்பாட்டம் இருக்காது. ஆனால் ஆங்கில வருடத்திற்கு, நம்மை அடிமையாய் ஆண்டு சென்ற மொழியினத்திற்கு, அத்தனை வரவேற்பும் வாழ்த்தும் கொண்டாட்டமும். அதனால் இன்று அவன் கிளம்பி அலுவலகம் செல்லும் நேரம் திட்டு கிடைத்தாலும் பரவாயில்லையென்று தொண்டையை செருமிக் கொண்டு பேச துவங்கினாள்.     "ரவீஷ் நியூஇயர் என்று எப்பவும் குடிச்சிட்டு வீட்டுக்கு வர்ற. தயவு செய்து இந்த முறை அப்படி பண்ணாதே. ரொம்ப கஷ்டமாயிருக்கு.     நீ மிட்நைட்ல வீட்டுக்கு வந்து சேரும் வரை

தாமரை கோலம் (9-5 இடைப்புள்ளி)

Image
 தாமரை கோலம் 9-5 இடைப்புள்ளி

பூக்கோலம்(11-6 இடைப்புள்ளி )

Image
 பூக்கோலம்  11-6 இடைப்புள்ளி 

சிறுகிழங்கு பொரியல்

Image
  சிறுகிழங்கு பொரியல் தேவையான பொருள் : சின்ன வெங்காயம் - ஒரு கப் எண்ணெய் -தேவையான அளவு தாளிக்க கடுகு- சிறிதளவு உளுந்து- சிறிதளவு சிறுகிழங்கு-கால்கிலோ சீரகம்- ஒரு டேபிள் ஸ்பூன் மிளகுதூள், மஞ்சள் தூள் -சிட்டிகை அளவு காய்ந்த மிளகாய் -இரண்டு கறிவேப்பிலை கொத்தமல்லி -சிறிதளவு. உப்பு - தேவைக்கு ஏற்ப செய்முறை : சிறுகிழங்கில் நிறைய மண் இருக்கும் அதனால சிறுகிழங்கை நன்றாக அலசிடணும்.   சிலருக்கு தோலை ரிமூவர்ல எடுத்து அப்படியே செய்வாங்க. எனக்கு வேகவைத்து எடுத்து பண்ணறது பிடிக்கும். முதலில் சிறுகிழங்கை குக்கரில் நான்கு விசில் கொடுத்து வேகவைக்கவும். தொட்டாலே சிறுகிழங்கு தோல் உறிந்து கிழங்கு தனியாக வரும். பயப்பட வேண்டாம் கிழங்கு குழைந்துவிடாது. தோலுரித்து எடுத்து வைத்த சிறுகிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளலாம். அல்லது மசித்து கொள்ளலாம். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து போட்டு சின்ன வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் காய்ந்த மிளகாயை கிள்ளி  கருவேப்பிலை போட்டு வதக்கவும். வேகவைத்த சிறுகிழங்கு சேர்த்து மஞ்சள் தூளையும் போட்டு சற்று கிளறி விட்டு நாலாப்பக்கமும் மஞ்சள் தூள், கி

பஞ்ச தந்திரம்-2

Image
  தந்திரம்-2     ஒரு காம்பவுண்டில் இங்கும் அங்கும் ஒரு செங்கல் பேத்து இருந்தது. அதில் மாறி மாறி கால் வைக்கும் பொருட்டு ஏணிபடிகள் போல இருக்க அதில் நைனிகா ஏறினாள்.     "ஏய்... என்ன பண்ணற?" என்று ரஞ்சனா கேட்டு நைனிகாவை நிறுத்தினாள். பாதியில் தொங்கிய நைனிகா கீழே இறங்கினாள்.      "இது நான் தங்கியிருக்குற ஹாஸ்டல். இது வழியா மேல வந்திங்கன்னா... ரூமுக்கு போயிடலாம்." என்று சாவி கொத்தை ஆட்டினாள் நைனிகா.      "மஞ்சரி அம்மா வயசானவங்க எப்படி ஏறுவாங்க? இதோ திரிஷா.." என்று கூறவும் "என் பெயர் திரிஷா இல்லை திரிஷ்யா" என்று இடைப்புகுந்து திருத்தினாள் திரிஷ்யா.     "சரி... திரிஷ்யா.. இவங்க சேரி கட்டியிருக்காங்க எப்படி ஏறுவாங்க?" என்று கேட்டாள் ரஞ்சனா.       நைனிகாவோ தோளைக் குலுக்கி வேற இடம் இருக்கா என்பது போல பார்த்தாள்.      "நான் அட்ஜஸ்ட் பண்ணி ஏறிடுவேன். எங்கவீட்ல மாடில வாட்டர் டேங்க்ல இது மாதிரி ஏணில ஏறி பழக்கம். ஆனா இது சுவர் சறுக்கிடாதா?" என்று திரிஷ்யா கேட்டாள்.     "தைரியமா ஏறுங்க" என்று நைனிகா பதில் தந்தாள்.     "அப்படியே

பஞ்ச தந்திரம்-1

Image
  தந்திரம்-1 இடம் : மெரீனா கடற்கரை      தன்னந்தனியா அங்குமிங்கும் மக்களை பார்த்து கொண்டிருந்தாள் அவள். இந்த பரந்த கடற்கரையில் இவளை போல தனியாக யாரும் கடற்கரை ரசிக்க வந்திருப்பார்களா என்று கணக்கெடுத்தால் நிச்சயம் புள்ளிவிவரப்படி பூஜ்ஜியமாக காட்டலாம். ஆம் அவள் வயது அப்படி.     ஆறு வயதானவள் தனியாக கடற்கரைக்கு வந்து உட்கார்ந்து விட்டாள்.    அவள் வயதிற்கு மணலில் வீடுகட்டி மகிழலாம். இல்லையென்றால் சிப்பி பொறுக்கி குதுகலிக்கலாம், இரண்டுமில்லையென்றால் கடற்கரை அலையில் கால் நனைத்து  நுரையோடு விளையாடி சிரிக்கலாம்.    எதையும் செய்யாமல் இந்த கடல் நீரில் மூழ்கினால் எப்படி மூச்சடைக்கும். மேலே எழும்பால் நீருக்குள் மூழ்கி இழுத்து சென்று கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் போகுமோ என யோசித்துக் கொண்டிருந்தாள்.    இந்த வயதில் இந்த எண்ணம் கூடாது தான். ஆனால் சிந்தித்திருந்தாள் குழந்தையவள்.      அருகேயிருந்த பெண் மெலிதாய் சிரிக்க முகத்தைத் திருப்பிக் கொண்டாள் குழந்தை(சிறுமி) தனுஜா .     ஏதோவொரு ஆர்வம் மேலோங்க தனுஜா மெதுவாய் பக்கவாட்டு பக்கம் விழியை செலுத்த மாடர்ன் யுவதியாக அமர்ந்திருந்தாள் ஒரு பெண்.     கண்ணில் க