Posts

முரண்

Image
                                       முரண்       மாதத்தின் முதல் நாளே மளிகை பொருட்கள் வாங்க சுபாவும் வனிதாவும் புறப்பட்டார்கள். வனிதா சுபா இருவருமே 'க்ரீன் லீவ்ஸ் அப்பார்ட்மெண்ட்' வாசிகள்.     பெரும்பாலும் இருவரும் இங்கு குடிப்புகுந்து ஆறுமாதமாகின்றது. இருவருக்கும் எதிரெதிர் வீடு என்பதாலும் ஒரே வயது கொண்ட மங்கைகள் அதிலும் இருவரும் கேரம்போர்டு சாம்பியன் என்று நல்ல சிநேகிதம் உருவாகியது.    இருவரின் கணவர்களும் சென்றப்பின், தனியாக இருப்பதால் இருவரின் பொழுது போக்கில் பாதி நேரம் கேரம்போர்டு தான் ஆக்கிரமித்து இருக்கும்.    இப்படி சில நேரம் மளிகை கடைக்கு, காய்கறி கடை, டிரஸ் வாங்குவது என்பதற்கு சேர்ந்து போகவும் இவர்களின் கணவர்மார்களுக்கு பாதி டென்ஷன் அகன்றது.      சுபா போகும் போதே மளிகை கடைக்கு சென்று அண்ணாச்சி கடையில் லிஸ்டு கொடுத்து விட்டு போட்டு வையுங்க அண்ணா" என்று கூறி நகர்ந்தாள்.    வனிதாவோ சூப்பர் மார்க்கெட் போகவும் துணைக்கு சுபா வந்து சேர்ந்தாள்.    "எத்தனை முறை சொல்லறது சுபா. என்னோட நீங்களும் இந்த சூப்பர் மார்க்கெட்லயே புரோவிஷனல் வாங்கலாம். அதை விட்டு அந்த குட்டி கட

பார்வை போதுமடி பெண்ணே

Image
                                பார்வை போதுமடி பெண்ணே          காலையிலிருந்து வாட்சப்பை நிரம்பி வழித்தது மகளிர் தின வாழ்த்து.     நித்தம் நித்தம் ஆண் வாரிசாக பிறக்கவில்லையென்ற வசவு சொல்லை கேட்டு வளர்ந்த தாரிகாவுக்கு இந்த வாழ்த்து எல்லாம் அசட்டுதனமாய் தோன்றியது.        வருடத்திற்கு ஒருமுறை தேரை குளிப்பாட்டி சாமியை வைத்து ஊர்த்திருவிழாவில் வீதிவீதியாய் வலம் வரும் போது அந்த தேரை தோட்டு கும்பிட கூட அத்தனை பேர் தள்ளுமுள்ளில் சிக்கி தொட்டு கண்ணில் ஒத்திக்கொள்வார்கள். ஆனால் விழா முடிந்ததும் அந்த தேர் தூசி படிந்து ஒட்டடை அடைந்து கிடக்க கோவிலில் அதை கேட்பாரற்று கிடக்கும். அது போல தான் இந்த மகளிர் தின வாழ்த்தும்.    ஒரு நாளில் ஆஹா ஒஹோ என்று பெண்ணின் பெருமையையும் புனிதத்தையும் பேசி கிழித்து பார்வார்ட் செய்து பீற்றி கொள்ளலாம். மற்ற நாட்களில் பாதுகாப்புக்கும் பஞ்சம். பெண் என்றால் இழிவு.    அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டும். தந்தை ஆண்வாரிசு இல்லையென்று கூறும் போதெல்லாம், குழந்தை என்றாலே வாரிசு தானே. இதில் ஆண் என்ன பெண் என்ன? என்று கேட்க வேண்டும் போலிருக்கும்.    இதோ இப்பொழுது கூட அவர் நண்பரிடம் போனில்

வாழுங்கள் வாழவிடுங்கள்

Image
    வாழுங்கள் வாழவிடுங்கள்          நைனிகா டிராவல் பேக்கில் துணியை அடுக்கி கொண்டிருந்தாள்.      வைதேகி பேத்திக்கும் உணவு ஊட்டியபடி அவள் பின்னே வந்தவர் மருமகள் டிராவல் பேகில் துணியை அடுக்கவும் யோசனைவயப்பட்டு கணவரை நாடி சென்றார்.      "என்னங்க நீங்க அவ்ளோ சொல்லியும் இரண்டு நாள் லீவுக்கு செங்கல்பட்டு கிளம்பிட்டு இருக்காங்க." என்று நொடித்தார் வைதேகி.        வேல்முருகனோ "அப்படியா?" என்பது போல விறுவிறுவென அறைக்கு வந்தார். அதற்குள் நைனிகா டிராவல் பையை மூடி வைத்து நிமிர மாமனார் வரவும் கையை பிசைந்தாள்.     "என்னம்மா இது. இந்த மாசம் வரவுக்கு மீறிய செலவுன்னு சொல்லி எங்கயும் போக வேண்டாம்னு சொன்னேன். ஆனா பையை தூக்கிட்டு கிளம்பினா என்ன அர்த்தம்" என்று எடுத்ததும் கத்தினார் வேல்முருகன்.       "மாமா எனக்கு என்ன தெரியும். அவர் தான் மூன்று மணிக்கு கிளம்பணும் எடுத்து வைனு சொன்னார். எனக்கு வேற எதுவும் தெரியாது. அவர் சொன்னப்படி டிரஸ் எடுத்து வச்சேன்" என்று கூறவும் வேல்முருகன் பையனிடம் பேசிக் கொள்வோமென ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடந்தார்.       'எத்தனை முறை சொல்ல

பொழுதை கொஞ்சம் களவாடு

Image
      பொழுதை கொஞ்சம் களவாடு  'பூ வைத்தாய் பூ வைத்தாய் பூவுக்கோர் பூவைத்தாய்...' என்று 'அருவி' ஹம் செய்து கொண்டே கணினியில் தன் பாஸ்வோர்ட் லாகினை செய்தாள்.    லாகின் செய்த அடுத்த நொடி, 'ஹாய் பிரெண்ட்ஸ் இன்னிக்கு காலேஜ்ல எனக்கும் என் பிரெண்ட் ராணிக்கு முட்டிக்கிச்சு. எப்ப பாரு எல்லாரிடமும் லூஸ் டாக் விடுவியா. என் லவ் பிரேக்அப் ஆகிடுச்சுனு நீயேன் மற்ற பிரெண்டிடம் சொன்னயென்று ஒரே திட்டு. நான் என்ன பிரெண்ட்ஸ் பண்ணறது. நீங்களே சொல்லுங்க. என்னோட இன்னொரு பிரெண்ட் ராணி லவ் எப்படிடி போகுதுனு கேட்டா. நான் அவங்களுக்குள் சில பிரச்சனை அதனால பிரேக்அப் என்று சொன்னேன்.     இரண்டு பேருமே பிரெண்ட்ஸ் நான் பொய் சொல்ல முடியுமா. எனக்கு மனசுல பட்டதை தான் சொன்னேன். அதுக்கு போய் நீயொரு லூஸ் டாக் அதுயிதுனு சொல்லி திட்டிட்டா. நீங்களே சொல்லுங்க பிரெண்ட்ஸ் உண்மையை பேசறது தப்பா. என்னோட நேச்சரே இதான். மனசுக்கு பட்டதை சொல்வேன். மனசுல ஒன்னும் திடீரென பொய்யும் வராது.     ராணி போறப்ப இந்த பழக்கத்தை மாத்திக்கோனு அட்வைஸ் வேற. நீங்களே சொல்லுங்க. நான் என் குணத்துக்கு மாறா மாறணுமா. இல்லை என் மனசுக்கு பிடிச்

காவலை மீறிய காற்று

Image
      காவலை மீறிய காற்று          சுடிதாரை எடுத்து வைத்து விட்டு தன் தங்க கம்பளை கழட்டி விட்டு மாற்றினாள் யமுனா. இதனை எட்டி நின்று பார்த்த பாக்கியமோ, "ஏன்டிம்மா நல்ல நாள் ஒரு சேலை உடுத்து கூடாதா. பொண்ணோட பள்ளிக்கூடத்துல ஆண்டு விழா. இன்னிக்கும் இந்த சுடிதாரை மாட்டிக்கிட்டு வந்து நிற்கற?" என்று கேட்டே விட்டார்.     சுனிலிற்கு 'போச்சு டா இந்த அம்மா இழுத்து வைச்சிட்டாங்க. அவ ஆடுஆடுனு ஆடுவாளே. நான் வேற பங்ஷனுக்கு வரலைனு சொல்லிட்டேன். அதுக்கும் சேர்த்து சண்டைக்கு போவா' என்று முனங்கினான். அவன் முனங்கி முடிக்கும் முன் யமுனா ஆரம்பித்தாள்.      ''இங்க பாருங்க அத்த. உடை என்பது நமக்கு எது கம்பர்டெபிளோ அதை தான் உடுத்தணும். என்ன பார்க்கறவங்க என்னை பார்த்து முகம் சுளிக்காத வகையில இருந்தா போதும்.    உங்க பையன் கடைசி நிமிஷத்துல எனக்கு மீட்டிங் இருக்கு. வரமுடியாது பொண்ணை நீயே கூட்டிட்டு போனு சொல்லிட்டார். எனக்கு ஸ்கூட்டில இதான் கம்பர்டெபிள். இப்படி தான் உடுத்துவேன்." என்று பொட்டிலடித்தாற் போல கூறி முடித்தாள்.      பாக்கியம் சத்தமேயில்லாமல் "என்னய்யா இது நீ போகலையா. கு

அகமா முகமா?

Image
  அகமா முகமா?     குழந்தைகள் வந்ததும் அவர்களை  கவரும் விதமாக ஆங்காங்க கார்டூன் பொம்மை உடையணிந்து  மனிதர்கள் அவ்விழாவிற்கு காத்திருந்தனர்.        குழந்தைகள் தினத்தை குதுகலமாக அவர்களுக்கு பிடித்த வகையில் அந்த அப்பார்ட்மெண்ட்டில் நடைப்பெற்றது.     மொத்த அப்பார்ட்மெண்ட் குழந்தைகளும் கலந்து பரிசை வெல்ல பல போட்டிகள் நடைப்பெற்றது.    குழந்தைகளுக்கு போட்டி மட்டுமா பிடிக்கும். அவர்கள் கார்டூன் உலகத்தின் மக்களையும் வரவைக்கவே அந்த அசோஷியேட் ஆட்கள் முடிவெடுக்க இதோ கார்டூன் உலகத்தின் ஆடையை மனிதர்கள் அணிந்து நடமாடி பார்க்கும் குழந்தைக்கு எல்லாம் கையை அசைக்க, குழந்தைகளோ ஆர்வமாக கை குலுக்குவதும், போட்டோ எடுப்பதுவுமாக இருந்தனர்.     உள்ளுக்கு அத்தனை புழுக்கம் ஏற்படும் அந்த ஆடை அணிந்தால், முகம் வேர்த்து வேர்வை தண்ணீர் சொட்டும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தனியாக சென்று அசுவசப்பட்டு கொள்வார்கள். சற்று நேரம் ஆளில்லை என்றால் கூட வரவேற்பில் இருக்கும் பணம் கொடுத்த ஆட்கள் "என்னப்பா வாங்கற காசுக்கு நிற்க வேண்டாமா" என்பார்.     "என்னப்பா... எங்க காலத்துல இருந்து இப்ப வரை லீடிங்ல இருக்கறது மிக்கி