பஞ்ச தந்திரம் -18 (முடிவுற்றது)

 பஞ்ச தந்திரம்-18


  திரிஷ்யா இரண்டு நாளுக்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்டாள். 

  மஞ்சரியாக எதையும் கேட்கவில்லை ஏன் அப்படியொரு விஷயம் கூறி அவகாசம் தந்ததாக கூட காட்டிக்கவில்லை.  

   நைனிகாவுமே ஹாய் பாய் என்று கல்லூரிக்கு ஓடுவதில் இருந்தாள். 

  ருத்ரன் மட்டும் தினமும் அவள் பணிப்புரியும் இடத்திற்கு வரும் நேரம் சற்று தொலைவில் நின்று பார்ப்பான். தனுஜாவை பள்ளிக்கூடத்தில் விடும் சமயமும் ஏறிடுவான். 

ஒளிந்து ஒளிந்து பார்ப்பதை விட நேரிடையாக தான் வந்து நிற்பான். 

திரிஷ்யா முதலில் சங்கடம் அடைந்து நின்றாலும் இந்த இரண்டு மாதம் பார்த்ததில் சங்கடமின்றி கடந்து வந்தாள். 

     தனுஜாவுக்கு சாக்லேட் வழங்குவதும் தினமும் நடைப்பெற்றது. 

      வேதாந்தை மணந்தப்போது உலகம் அறியாதவள். யார் எது சொல்லி வழிநடத்தினாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மடந்தை. 

   இன்றோ உலகம் அறியப்பட்டாள். முன்பு மணமான வாழ்வு சரிக்கியது போல இரண்டாம் முறையும் சரிக்கிடுமா? என்ற கோணத்தில் யோசித்தவள், 'இழக்க இங்கே ஒன்றுமில்லை. வாழ்ந்து தான் பார். உன் தாய்மையை கூட வேதாந்த் பிடுங்கி உதயை அழைத்து கொண்டான். 

   தானாக கிடைத்த தாய்மையும், தாலி பாக்கியமும் அமையட்டுமே. யார் கண்டால் இதுவே தனக்கான வாழ்வாக மாறவும் வாய்ப்புண்டு.

ருத்ரன் பற்றி அவள் அறிந்தவை பெரிதாக பயத்தை தரவில்லை. அவன் சீட் பெல்ட் அணிந்திருக்க மனைவி குழந்தைகள் அஜாக்கிரதையாக இருந்ததால் இருந்திருப்பதாக கூறினார் மஞ்சரி. 

   தன்னை வெகுநாளாக பின் தொடர்ந்தவன், தனக்கு நல்லதென மஞ்சரி அம்மா முடிவெடுக்கலாம். அது சரியோ தவறோ? ஆனால் தனுஜாவிற்கு நல்லதாக அமைந்தால்? அந்த ஒன்று ருத்ரனை ஏற்றுக்கும் முடிவுற்கு தள்ளியது. 

   அவளாகவே ஒரு நாள் ருத்ரன் தனுஜாவிற்கு இனிப்பு வழங்கிவிட்டு செல்லும் நேரம் தொண்டையை செருமினாள். 

   "உங்களுக்கும் சாக்லேட் வேண்டுமா?" என்று தான் ருத்ரன் இனிப்பை நீட்டியபடி கேட்டான். 

   போலி முறைப்பை வழங்கி, "உங்களிடம் பேசணும்" என்று இனிப்பை வாங்காமல் எங்கோ பார்த்து பேசினாள். 

    "ஏதுனாலும் சாக்லேட் வாங்கிட்டு பேசலாமே?! இது உங்களுக்குனு வாங்கின சாக்லேட் தான். எப்பவும் கொடுக்க பயந்துட்டு நானே எடுத்துட்டு போய் சாப்பிடுவேன்." என்று இன்னமும் இனிப்பை நீட்டவும், "நான் பேசணும்" என்று பிடிவாதமாய் உரைத்தாள். 

   தனுஜாவை தூக்கி கொண்டு, "சப்போஸ் நீங்க மேரேஜிக்கு ஓகே சொல்லி, நமக்கு மணமானப்பின்னால, தனுஜாவை எந்த காரணத்தாலும் என்னால விட்டுக்கொடுக்க முடியாது. நான் இவளுக்கு அப்பாவா, உனக்கு கணவனா தான் வர்றேன். மத்தபடி கணவன் பொறுப்பை மட்டும் சுமக்க வருவதா தப்பா எடுத்துக்காதிங்க எனக்கு தனுஜாவை ரொம்ப பிடிக்கும்." என்று கூற, அவன் கன்னத்தில் தனுஜா முத்தமிட்டாள். 

   தான் பேச வருவதை முன்கூட்டியே பதிலாக தருபவனிடம் மீதி என்ன பேசுவது? அப்படியே தவிப்பாய் நின்று கண்களை உருட்டியவளிடம், "எனக்கு இந்த பாஸ்ட் பத்தி பேச வேண்டாமேனு மனசுக்குபடுது. ஆனா நான் பாஸ்ட் பத்தி பேசுவேன். நீங்க கணவரை விவாகரத்து பண்ணிட்டிங்க. பட் குழந்தை உதய்?  சப்போஸ் உதய் பிற்காலத்துல உங்களோட வர ஆசைப்பட்டா அவனையும் நம்ம குடும்பத்தோட இணைச்சிக்க நான் தயங்கமாட்டேன்." என்று பேசினான் ருத்ரன். 

   திரிஷ்யாவோ "நான் மேரேஜிக்கு ஓகே சொல்லவேயில்லை. நீங்க என்னென்னவோ பேசறிங்க?" என்று கேட்டாள். 

   "ஏங்க பிடிக்கலைனா நீங்க பாட்டுக்கு எப்பவும் போல கிளம்பியிருப்பிங்க. மஞ்சரி ஆன்ட்டியிடம் எனக்கு மறுகல்யாணமே வேண்டாம்னு சொல்லிருப்பிங்க. இரண்டும் இல்லையே. இப்ப என்னிடம் பேசணும் என்றால் பாஸிடிவ் பதில் தான் கிடைக்கும்னு புரிஞ்சுக்க முடியாதவனா?" என்று அறிவாக பேசியவனிடம் குழந்தையை வாங்கினாள். 

   "ஓஹோ" என்று தனுஜாவை உடன் அழைத்து செல்ல, "ஏங்க பதில்?" என்று ருத்ரன் அவள் முன்வந்தான். 

  "அதான் உங்களுக்கே தெரியுதே." என்று கூறியவளை பார்த்து, "உங்க திருவாய் மலர்ந்து வார்த்தை சொல்லலாமே?" என்று வேண்டி நின்றதும், "மஞ்சரிஅம்மாவிடம் பேசுங்க" என்று பதிலுரைத்து அவன் கையில் வைத்த இனிப்பை பெற்றுக்கொண்டாள். 

   ருத்ரன் மனம் குளிர "கார்லயே வரலாமே." என்று கூப்பிட, "இல்லைங்க வேண்டாம். ஊரறிய முடிவானப்பிறகு வர்றேன்" என்று மறுத்துவிட்டாள்.

    மஞ்சரி அம்மாவிடம் நன்றியுரைக்க மாலை வரவேண்டியதால் திரிஷ்யாவை பின் தொடர்ந்து வந்தான். 

  வீட்டுக்கு வந்து அடியெடுத்து மஞ்சரிம்மாயிடம் நன்றிகூறி, திருமண திகதியை பெற்றுக்கொண்டே சென்றான். 

  திரிஷ்யாவுக்கு தான் லேசான பயம் இருந்தது. 

   சூடுபட்ட பூனை வெளியே தைரியசாலியாக காட்டிக்கொண்டாலும் பிறவி குணம் மாறாதல்லவா? கைகள் பிசைந்து ருத்ரன் இருக்குமிடம் பாராது மஞ்சரி அருகே நின்றாள். 

   "அம்மா நீங்க கொடுத்த அவகாசத்துல யோசித்தேன். தனுஜாவுக்கு அம்மா மட்டும் இல்லாம அப்பாவும் இருந்தா நல்லதுனு தோனுச்சு." என்று கூறவும் நைனிகாவோ "வரேவாவ்." என்று கட்டிப்பிடிக்க, "என்னப்பண்ணற அணைக்காம பேசு." என்று கூச்சத்தில் நெளிந்தாள். 

    "கட்டிபிடிக்க ஆள் வந்தாச்சு. இனி கூச்சம் காணாம போகும் திரிஷ்யாக்கா." என்று இடையில் கிச்சுகிச்சு மூட்ட, "சும்மாயிருடி" என்று சேலையை இழுத்து போர்த்தினாள். 

     ருத்ரனோ "அம்மா கல்யாணத்தை கோவில்ல முடிச்சிடலாம்." என்று ஆர்வமாக பேசினான். 

   மஞ்சரியோ "சரிப்பா. திரிஷ்யா ஒரு வார்த்தை ரஞ்சனாவிடமும் சொல்லிட்டு அவளை கல்யாணத்துக்கு கூப்பிடலாம்? நாளைக்கு சேலை எடுக்க போகலாமா" என்று மஞ்சரி கேட்டதும் ருத்ரனோ "அம்மா அது வந்து" என்றவன் தனுஜாவை பாடம் படிக்க கூறினான். அவளை அனுப்பிவிட்டு மஞ்சரியிடம் "அவங்க இப்ப இல்லை.  இ...இறந்துட்டாங்க. கடைசியா இருபது நாளுக்கு முன்ன நடந்தது. அதுக்கு முன்ன ஒரு நாள் என்னை கூப்பிட்டு பேசினாங்க." என்று ஒரு வீடியோவை காட்டினான். 

  அதில் ரஞ்சனா உடல் தளர்ந்து சோர்ந்து இருந்தாள். 

   "ஹாய் பிரெண்ட்ஸ்.. எப்படியிருக்கிங்க? இப்ப வாழ்க்கையை கொஞ்சமா புரியறப்ப, சாகப் போனது எல்லாம் முட்டாள் தனமா தெரியுதா? நிச்சயம் முட்டாள்தனமா தெரிந்தா நீங்க பக்குவப்பட்டுட்டிங்கன்னு அர்த்தம். எல்லா பிரச்சனைக்கும் இறப்பு தீர்வாகாது. 

     கடந்து வரும் நிலை தான் வாழ்க்கையை கஷ்டப்பட்டு ஜீரணிக்க ஆரம்பிச்சா, பிரச்சனை எல்லாம் 'ப்வூ' இவ்ளோ தானா அப்படின்னு நினைப்பிங்க.

  ரியலி இப்ப இரும்பையே மென்னு முழுங்கி ஜீரணிச்சு, வாழ்க்கையை லேசா கடக்கறிங்க தானே? இதான் வாழ்க்கை. இறப்பு எல்லாம் பிறப்பு போல அதுவா உருவாகற மாதிரி இறப்பும் அதுவா இயற்கையா நடக்கணும். அதை விட்டு எதுக்காகவும் தற்கொலை முறற்சியை கையில எடுக்காதிங்க." என்று மூச்சிரைக்க பேசினாள். 

  லேசாய் அந்த நிலையிலும் சிறு சன்னமான சிரிப்பை உதிர்த்து, "இந்த நிலையிலும் என் குழந்தையை வச்சிட்டு இருக்கற உங்களை கூப்பிடாம ருத்ரனை கூப்பிட்டுயிருக்கேன்னு பார்க்கறிங்களா? மஞ்சரிம்மா நைனிகாவை கூப்பிட்டா அது ஆட்டோமெடிக்கா உனக்கும்  தனுஜாவுக்கும் தெரிய வரலாம் திரிஷ்யா. உங்களுக்கு தெரிந்தா என் நிலையை கண்டு அழுவிங்க. கவலைப்படுவிங்க, என் பொண்ணு கலங்குவா. 

  அதெல்லாம் கூடாது. ருத்ரன் என் மகளை வளர்க்க கேட்டப்ப திரிஷ்யாவிடம் பொறுப்பை தந்திருக்கேன். நான் தாய்மையை கொடுத்துட்டு திரும்ப வாங்கமாட்டேன்னு சொன்னேன். அவர் திரிஷ்யாவையும் மணக்கறேன்னு கேட்டப்ப வேதாந்தை மறந்து நீ ஒகே சொன்னா தாராளமா தனுஜாவுக்கு நல்ல அப்பாவா இருங்கன்னு சொன்னேன். அவரும் உன்னிடம் சம்மதம் வாங்க போராடிட்டு இருக்கார். நிச்சயம் இந்த ருத்ரன் என்ற எறும்பு ஊற ஊற திரிஷ்யா என்ற கல்லு கரையும்னு வேண்டிக்கறேன். 

   அப்ப தான் என் மக தனுஜாவுக்கு அப்பா அம்மா இரண்டு பேரும் கிடைப்பாங்க. 

   அப்படி, திரிஷ்யா நீ ருத்ரனை மணந்தா சந்தோஷமா வாழுங்க. எப்பவாது குழந்தை பாரம் என்று தோன்றினா ஆசிரமத்துல முறையா சேர்த்திடுங்க." என்று பேசவும் திரிஷ்யா மறுப்பாய் தலையாட்டி முடிக்க, வீடியோவில் "ஏங்க இப்படி பேசறிங்க.?" என்று ருத்ரன் குரலும் அதில் கேட்டது. 

  "எதுக்கும் சொல்லி வைக்கிறது தான் ருத்ரன் சார். அதை திரிஷ்யா செய்ய மாட்டான்னு எனக்கு தெரியும். 

  அதனால தானே பொறுப்பா அவளிடம் குழந்தையை ஒப்படைச்சது." என்று ருத்ரன் பக்கம் பார்த்து பேசிய ரஞ்சனா கேமிரா பக்கம் திரும்பினாள்.

   "திரிஷ்யா அப்படி ருத்ரனை மணக்க முடிவெடுத்து இரண்டு பேரும் சேர்ந்து குழந்தை வளர்க்க ஆரம்பிச்சா. உங்களுக்கு என் மனமார்ந்த திருமண வாழ்த்துகள்." என்று கூறவும் திரிஷ்யாவோ கண்ணீரை உகுத்தினாள். 

   அப்பறம் மஞ்சரிம்மா நீங்க தான் தலைமை தாங்கி பார்த்துக்கணும். நைனிகா, எனக்கு குட்டி தங்கையில்லை. என்னோட சண்டைப்போடறப்ப நீ என்னோட தங்கையா இருந்திருக்கலாம்னு தோணும். 

   இப்ப என் உயிர் ஊசலாடிட்டு இருக்கு. அப்படி எனக்கு நீண்ட ஆயுள் இருந்திருந்தா அக்காவா உன்னை வழிநடத்தியிருப்பேன். நீ புத்திசாலி குழந்தை. உன் மானத்தை பற்றி யோசிக்காம போல்டா மேனேஜ் பண்ணினவ. 

  நான் அக்காவா இருக்க முடியாது. ஆனா நீ என் குழந்தைக்கு சம்டைம் அக்கா இருந்து வழிநடத்து. நான் சொல்ல வேண்டியது இல்லை. இருந்தாலும் தனுஜாவை அம்மா அப்பாவோட மட்டும் விட்டுட்டு போகலை. பாட்டி அக்கா என்று நீங்களும் அடிக்கடி அன்பு செலுத்துங்க. 

  என்னால அதிகமா பேச முடியலை. பார்த்திங்கள்ல ரொம்ப ஒல்லியா மாறிட்டேன். மூச்சு வாங்குது அடிக்கடி இரும்மல் ஒரு வேளை நான் உலகத்தை விட்டு போகப்போறேனோ என்னவோ. அப்படி நான் போனாலும் உங்களிடம் சொல்ல வேண்டாம்னு தான் ரெக்வஸ்ட் பண்ணிருக்கு. இறந்தப்பின்னும் எங்கயாவது உயிரோட இருக்கேன்னு நம்புவிங்கன்னு. தனுஜாவுக்கு அந்த நம்பிக்கையை தாங்க" என்று இரும்பியபடி பேசி முடித்தாள். 

  திரிஷ்யாவுக்கு இதயம் பதறியது. தனுஜா வந்துவிடுவாளோ என்று பயந்து அறையை பார்த்தாள். அந்த குழந்தை படிப்பு புத்தகத்தை வைத்து புகைப்படம் வரைந்தபடி இருந்தாள்.

   திரிஷ்யா ருத்ரனிடம் திரும்பி "ஒரு வார்த்தை முன்னாடியே சொல்ல என்னவாம்." என்று சண்டைப்பிடித்தாள். 

  "ஏங்க அவங்க சொன்னதால தான் உங்களிடம் தெரிவிக்கலை. இப்பவும் சொல்லலைனா தப்புனு தான் வீடியோ காட்டினேன்." என்றதும் திரிஷ்யா முகம் பொத்தி அழுதாள்.

   மஞ்சரியோ ''கடவுள் என்னை போன்ற கிழவிக்கு ஆயுசை குறைச்சிட்டு வயசு பிள்ளைகளுக்கு ஆயுசை நீட்டிருக்கலாம். ஆனா கடவுளுக்கு எப்பவும் பொறுக்காது." என்று ஆறுதலுரைத்தார். 

  நைனிகாவோ திரிஷ்யாவின் தோளில் கைவைத்தாள். 

  தனுஜாவோ "என்னாச்சு திரிஷ்யாம்மா ஏன் அழவறிங்க?" என்று ஓடிவந்தாள். 

  நைனிகாவோ "ஒன்னும் இல்லைடா குட்டி. ருத்ரன் அப்பாவை கல்யாணம் செய்தா அவர் வீட்டுக்கு நீங்க போகணுமே. எங்களை பிரிஞ்சிடுவிங்கன்னு அம்மா அதனால அழுவறாங்க" என்று சமாளித்தாள். 

    "நாம அடிக்கடி மஞ்சரிப்பாட்டியை நைனிகா அக்காவை வந்து பார்க்கலாம் அம்மா. அழாத" என்று பிஞ்சு கையால் துடைத்தெடுத்தாள்.

   ருத்ரனோ திரிஷ்யாவை நெருங்கி வந்து நைனிகாவை அணைத்து கொள்ள, திரிஷ்யா ருத்ரனை நிமிர்ந்து பார்த்தாள். 

   அதற்கடுத்த வாரம் கோவிலில் தலைகுனிந்து அவன் பொற்கரங்களால் மாலையிட்டு தாலி ஏற்றுக்கொண்டாள். 

   திரிஷ்யா-ருத்ரன் திருமணமான கையோடு மஞ்சரி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க, "திரிஷ்யாவோட அம்மா ஸ்தானத்துலயிருந்து மனசார  ஆதிர்வதிக்கறேன். நீங்க இரண்டு பேரும் நல்ல கணவன் மனைவியா,  நல்ல அப்பா அம்மாவா இருக்கணும். 

  அதோட அவளுக்கு அம்மா வீடுன்னா அது என்னோடது. அடிக்கடி வாங்க. தனுஜாவை கண்ணுல காட்டுங்க. எக்காரணம் கொண்டும் பழைய வாழ்க்கையை முடிச்சிப்போட்டு சிக்கலாக்கிடாதிங்க." என்று கூறினார். 

  திரிஷ்யாவை நைனிகா அணைத்து ''ஹாப்பி மேரீட் லைப்'' என்று கட்டிபிடிக்க, தனுஜாவோ நைனிகாவோடு சேர்ந்து கொண்டாள். 

திரிஷ்யா ருத்ரன் வாழ்வு நல்விதமாக சென்றால் வேதாந்த்திடம் உயர்த்தி கொள்ள போவதில்லை. அதே போல தாழ்வாக தன்னை நோக்குவானென்று ஓடுங்கப்போவதுமில்லை. தானாக தங்கள் பெற்றோர் காலம் கடந்து தன் வாழ்வை ஏற்பார் என்ற நம்பிக்கை, ருத்ரன் தன்னை மனைவியாக மனுஷியாக நடத்தி தனுஜாவிற்கு நற்தந்தையாக இருப்பானென்ற தீர்க்கத்தோடு அவன் கைபுஜத்தை பற்றி நடந்தாள். 

  தனுஜா தான் ருத்ரன் தன்னோடு தூக்கி கொண்டானே. 

  மஞ்சரி நைனிகா மூவரையும் கோவிலிலிருந்து விட்டுக்கு செல்ல நிறைவாய் கண்ணுற்று பின் தொடர்ந்தார்கள்.

  வாழ்க்கை என்பது யாரோ யாரோடவோ ஒருவரை ஒருவர் சார்ந்து அன்பை பகிர்ந்து கொள்வதல்லவா வாழ்க்கை.

  -சுபம்.

-பிரவீணா தங்கராஜ் 

 

  வாசித்து உங்க கருத்தை வழங்கலாம். ரெவியூ போட்ட இன்னும் ஹேப்பி.


  


மர்ம நாவல் நானடா-23 (முடிவுற்றது)

 அத்தியாயம்-23

   யாஷிதா அவனின் முனங்கல் கேட்டு மாடி ஹாலில் நடந்தவள் திரும்ப, வேகமாய் வந்தவன் அவளை இடித்து, அணைத்து உருண்டப் பின்னே சுதாரித்தான்.

   அவள் மீது தன் தேகத்தை மொத்தமாய் சரித்திருந்தான். அந்த களோபரத்திலும் அவள் தலைக்கு முட்டுக்கொடுத்து அவள் சிரத்தை தாங்கியிருந்தது வலது கை. இடது கையோ அவளது இடையை வளைத்திருந்தது.

  அவளோ சுற்றம் மறந்திருக்க, ஹரிஷின் கணம் தாளாமல் எழ முயன்றாள். ஹரிஷே வேகமாய் பதறிவிட்டு எழுந்திட, இருவருக்கும் மூச்சு வாங்கியது.

   "நான் என்ன இன்னும் இன்விசிபிளாவா இருக்கேன்." என்று யாஷிதா கேட்க, "இ.. இ..ல்லை என்று தலையாட்டவும் அவனது முகமாறுதல் அவளுக்குள் ரசிப்பை ஏற்படுத்த, அளவிடாத காதலை நெஞ்சில் எடுத்துரைத்தது.

   இதற்கு மேல் மனக்கடலில் காதல், கடலணை  உடையவும், யாஷிதா அவன் காலரை பற்றி இழுத்து, அலமாரி கதவை திறந்து, உள்ளே நுழைந்து சாற்றினாள்.
 
   "உன்கிட்ட நிறைய பேசணும். என்னால இதுக்கு மேல மறைக்க முடியலை.

    ஏதாவது கிறுக்குதனமா பேசிட்டு பிறகு நீ பின்வாங்கிட்டா? அதனால கேட்கவே தயக்கமாயிருக்கு. ஆனா கேட்காமலும் இங்கிருந்து போக முடியலை. நானும் இந்த பேச்சை அவாய்ட் பண்ணிட்டு போய் ஒரு டூ மந்த்ஸ் கழிச்சு டிசைட் பண்ணலாம்னு நினைச்சேன்.
   ஆனா முடியலை. நேர்ல பேசிடலாம்னு ஒரு ஆசை. என்ன தான் பேஸ்புக்ல பார்த்து பழகினாலும் இந்த நேர்ல கண்ணை பார்த்து வர்ற எமோஷனுக்கு வேல்யூ அதிகம்.

    எங்க தாத்தா உன்னை கட்டிக்க கேட்டப்ப, உன் போட்டோவை நான் பார்க்கலை. ஏன் பயோடெட்டா கூட நோட் பண்ணலை. சீரியஸ்லி நான் எங்க தாத்தாவையோ, தாத்தா பார்த்த வரனையோ மதிக்கலை.

  இப்ப.. தாத்தாவை நேசிக்கறேன். தாத்தா அன்பு புரியுது. அவரை இந்த வயசுல விட்டுட்டு படிக்க போகணுமானு ஒரு கேள்வி.

  அதே போல... நீ... உன்னை நான்... எப்படி?" என்று பெண்ணவளாய் திக்கி திணறும் நேரம், அவளை அலேக்காக தூக்கி டேபிளில் அமர வைத்தான்.

  "இப்ப என்ன? என்ன பேசணுமோ பேசு. நீ கிறுக்குதனமாவா யோசிப்பியா? நான் பண்ணாத கிறுக்குதனமா நீ செய்துடபோற?

   நீ பேசி நான் பின் வாங்கமாட்டேன். தயக்கமில்லா கேளு. நானும் டூ மந்த்ஸ் தாங்கமாட்டேன். நேர்ல பீல் பண்ணற எமோஷன் வேற லெவல்.

   அது சோகமோ? சந்தோஷமா? எதுனாலும் ஓகே... இப்ப உன் மனசுல நான் எந்த இடத்துல இருக்கேன்? சொல்லு... என்னாலையும் இதுக்கு மேல மறைக்க முடியாது" என்றான் அதிரடி காதல் மன்னனாய்.

    அவன் உரிமையாய் இடைப்பிடித்து தூக்கி டேபிளில் அமர வைத்தப்பின் கேட்கின்றானே? பதில் அறிந்தே தான் விளையாடுகின்றான்.

   ஏன் எனக்குமே என் மனதில் 'பதில் தெரிந்தும் அவனிடம் கேட்க துடிப்பது போல.' என்றவளின் மனவோட்டம் ஹரிஷின் கண்களை தான் விழுங்கியது.

  அதில் துறுதுறு கண்கள் தாண்டி எதுவும் யோசிக்க விடவில்லை. உதடு பேச்சை வெளியிட விருப்பமின்றி தவிக்க, பதிலை எதிர்பார்த்து தவித்தவனின் விழியில் மொத்தமாய் தொலைந்தாள்.

    பேச்சால் கூறவழியின்றி, இதற்கு மேல் பேசவேண்டுமாயென முத்தமொழியால் உணர்த்த முடிவெடுத்தாள்.

   இருகைகளும் ஹரிஷின் கன்னம் பிடித்து நெருக்கத்தை கூட்டி முத்தமிட ஆரம்பித்தாள்.

   ஆணவனுக்கு யாஷிதா தன்னை காதலிப்பதை அறிந்ததால் அவளின் முத்தம் தடுமாற்றத்தை தரவில்லை. மாறாக கைகளை அவளிடையோடு அணைத்து முத்தமழையில் நனைய துவங்கினான்.

  இருவிழிகளும் தன்னிலை மறந்து லயித்து மயங்க, இமைகள் இறுக்கமாய் தாழிடப்பட்டது. இருஉதடுகளும் உள்ளத்து மொழியான காதல் தீயை, உணர்வால் பகிரங்கப்படுத்தி கொண்டார்கள்.

   நிமிடங்கள் சர்க்கரை பாகாய் தித்திப்பை கூட்டியது.

      ஆரன் "கீங்கீங்கீங்கீங் டுபுடுபுடுபு" என்று சத்தம் கொடுத்து வரவும், முதலில் சுதாரித்து ஹரிஷ் விலகி விட, அலமாரி கதவை பட்டென திறந்தது.

   "சித்தப்பா என் புது கார், என் பைக் இரண்டு தாத்தாவும் இரண்டு கிப்ட் வாங்கிட்டு வந்தாங்க. நீ என்ன வாங்கிட்டு வந்த" என்று நந்தி போல யாஷிதா ஹரிஷுக்கு குறுக்கே நின்றான்.

  யாஷிதா மெதுவாய் இமை திறந்து சுற்றம் உணர்ந்தாள்.

    "நானா... டேய் மறந்துட்டேன் டா. அதான் தாத்தா வாங்கிட்டார்ல. போ... சீரியஸா பேசிட்டு இருக்கோம்" என்று அதட்டினான். முத்தங்கள் தடைப்பட்ட கடுகடுப்பில் சில்வண்டு ஆரனிடம் பொரிய துவங்கினான்.

   "சித்தப்பா... நீ எங்க பேசிட்டு இருந்த. படில இருந்து வர்றப்பவே ரூம் சைலண்டா இருந்துச்சு. நீ எனக்கு ஏன் வாங்கலை." என்று எப்பொழுதும் போல சித்தப்பாவிடம் சிணுங்க ஆரம்பித்தான்.

    யாஷிதா அதற்குள் மேஜையிலிருந்து இறங்கி, தற்போது கீழே வைத்த பையிலிருந்து "இது உனக்கு நான் வாங்கிட்டு வந்தேன்." என்று ஹெலிகாப்டர் பொம்மையை கொடுக்க எடுத்து கொண்டு ஓடினான்.

    ''இருடா எப்படி ஆப்ரேட் பண்ணணும்னு நான் கத்து தர்றேன்." என்று ஆரனிடம் பிடுங்க பார்க்க, "சித்தப்பா.. நீ எனக்கு எதுவும் வாங்கலை. நான் தரமாட்டேன்" என்று அவ்விடம் விட்டு ஓடினான்.
  
   ஹரிஷ் துரத்த பார்க்க அவன் டீஷர்ட் மீண்டும் இழுக்கப்பட்டது.

    "இங்க சீரியஸா பேசிட்டு இருக்கோம் சின்ன பையனோட ஓடற... நானே அவனிடம் பொம்மையை தந்து அனுப்பினா நீ இன்னமும் இப்படி இருக்கியே..." என்று வேகமாய் கூறிட, அவன் மார்க்கமாய் பார்க்கவும்,  "இப்படியொருத்தனை வச்சிட்டு நான் என்ன ரொமன்ஸ் பண்ணறது? இதுக்கு என்ன முடிவு?" என்று முனங்கியபடி கேட்டாள்.

     "ஓய்... எங்க பேசினோம்... பேசவே முடியலை. ஏதோ பீஸ் கட்டிட்டியே.... படிச்சிட்டு வா.

    இங்கயும் கொஞ்சமா பீஸ் கட்டியாச்சு. அதுக்கான படிப்பு பொறுமையா வந்து படிச்சிக்கலாம்" என்று உதட்டை வருடி, "மேரேஜிக்கு அட்வான்ஸ் புக்கிங்லாம் தந்துட்ட, ஹரிஷ் இனி கமிட்டேட் மா" என்று மார்க்கமாய் வந்து உதட்டை நெருங்கினான்.

    "ஹரிஷ்... ஹரிஷ்." என்று காஞ்சனா கூப்பிடவும், "நீ பேக்கிங் பண்ணு. கீழே போறேன் இன்னிக்கு கிடைச்சது ஒரு லிப்லாக் தான்" என்று ஓடினான்.

   இந்த நொடி கூறவேண்டும், முத்தம் பரிமாற வேண்டும் என்று இருவரும் நினைக்கவில்லை. ஆனால் ஹாசினி திருமணத்தில் கிளம்பியதிலிருந்து எப்படி சொல்ல? சொல்லாமல் கிளம்பிவிட்டால்? ஹரிஷிற்கு வேறு பெண் பார்த்துவிட்டால்? இதே கவலையோடு வந்தவளுக்கு அவன் இடை தீண்டியது வேகமாய் வந்து தன்னை மோதியதும், கண்டிப்பாய் சொல்லிவிடு. இவனை தவிர வேறு யாரையும் உன்னால் காதலிக்க முடியாது என்பது பொட்டிலடித்தாற் போல புரிய, அவனோடு பேசி காதலுக்கு சம்மதமாய் முத்தமே கொடுத்து விட்டாள்.

      "பாட்டி எனக்கு சித்தப்பா ஒன்னும் வாங்கி தரலை. அதனால ஈவினிங் சித்தப்பா கூட நானும் போவேன். நைட் டின்னர் வெளியே வாங்கி தரச்சொல்லு" என்று வற்புருத்தினான். இது வாடிக்கை சில நேரம் இப்படி சித்தப்பாவோடு வெளியே சென்று திண்ண ஆரன் போடும் திட்டமே.

   "டேய்... உனக்கு நாளைக்கு கிளாஸ் இல்லை... எப்பபாரு எங்கம்மாவிடம் என்னை புகார் பண்ணிட்டு. நைட் டைம் கூடவேயெல்லாம் கூட்டிட்டு போக முடியாது. நான் வேண்டுமின்னா ஜோமேட்டோல மினி பீட்ஸா ஆர்டர் பண்ணிடறேன். வீட்டுக்கே வரும் சாப்பிடு. நான் உங்க யாஷிதா சித்தியை டிராப் பண்ண போகணும்." என்று கூறவும் காஞ்சனா, தனஞ்செயன், தாத்தா என்று மூவரும் ஹரிஷ் கூறியது சரிதானா என நம்பாமல் பார்த்தனர்.

   ஆண்கள் வெட்கம் அரிதானது போல முகமெங்கும் வெட்கச் சிவப்போடு "இளையமான் தாத்தா உங்களுக்கு தான், உங்க பேத்தி என்னை விரும்பறது தெரியும்ல. மணி தாத்தாவிடம் சொல்லுங்க." என்று நாணினான்.

     "கல்யாணம் பண்ணிக்கறவங்க முதல்ல ஒருத்தர் ஒருத்தர் டிசைட் பண்ணட்டும்னு தான் காத்திருந்தது ஹரிஷ். இனி ஜமாய்ச்சிடலாம்.

ஏன் ஹரிஷ் கொலம்பியா போகணுமா? கல்யாணம் பண்ணிட்டு இங்க இருப்பானு பார்த்தேன்.?" என்றார் இளையமான். அவருக்கு பேத்தி விரும்புவது அறிந்ததும், கொலம்பியா போக வேண்டுமா? என வருத்தமாய் கேட்டார். தங்கள் காலம் எதுவரையோ என்ற அச்சம் எண்பதுவயதை நெருங்க வரை அப்படி எண்ண வைத்தது.

   "இல்லை தாத்தா.. பீஸ் கட்டியிருக்காளாம்... படிச்சிட்டு வரட்டும். மேகமலை போனப்ப சுட்டிஸ் உலகம் மேகஸீன்ல அனிமேஷன் எல்லாம் பார்த்தேன் செமையா பண்ணிருந்தா. அவவிருப்பபடி என்ன கத்துக்கணுமோ கத்துக்கிட்டு வரட்டும். அது அவ ப்யூச்சருக்கு உதவலாம்.

  நானும் இப்ப தானே வேலைக்கு சேர்ந்திருக்கேன். ஆறு மாசம் போகட்டும்.

   எங்க கல்யாணம் பார்க்காம நீங்க ரெண்டு பேரும் இந்த உலகத்தை விட்டு போக மாட்டிங்க" என்று அவரின் கவலையையும் போக்கும் விதமாக பேசினான்.
   இளையமான் லேசான ஆறுதலோடு, படிகளில் இறங்கிய பேத்தியை கண்டு தனது சோகத்தை தள்ளி வைத்தார். இந்தளவு மாற்றம் பெற்றதே நல்லதற்குயென்று நம்பினார்.

  லக்கேஜை எடுத்து வந்தவள், "தாத்தா... நான் ஹரிஷை தான் மேரேஜ் பண்ணுவேன். பயப்படாதிங்க... உங்களுக்கு பயமிருந்தா... இப்ப இந்த நொடி இங்க இருக்கறவங்க முன்னால் ஒரு சின்ன நிச்சயம் பண்ணிடலாம்." என்றவள் மோதிர பெட்டியை திறந்தாள்.

   அதில் இரண்டு மோதிரமிருந்தது.  "ஹாசினிக்கு மேரேஜ் கிப்ட் வாங்கினப்ப, எதுக்கோ இருக்கட்டும்னு இந்த ரிங் வாங்கியது. மேகமலையில வச்சி ஹரிஷிடம் போட்டுவிடலாம்னு அன்னைக்கு நைட் எடுத்துட்டு வந்தேன்.

ஹரிஷுக்கு அதுக்கு முன்ன வேறொரு கிப்ட் கொடுத்தேன். அவனுக்கு அது பிடிக்காம வெச்சிட்டு போனு ஒரு மாதிரி சொல்லவும் இதை கொடுக்காம தவிர்த்திட்டேன்." என்று கூறினாள்.

  ஹரிஷிற்கு அப்பொழுது தான் ஒயின் பாட்டில் கொடுத்துட்டு மோதிரம் தர வந்தாளா? ஓ காட் இந்த முத்தம் அன்னைக்கே கிடைக்க வேண்டியது. அப்ப என்றால் எக்ஸ்ட்ரா டைம் கிடைச்சிருக்குமோ? நான் தான் சொதப்பியதா? என்று அவளை கண்டு சிரித்தான்.

   "என்ன அன்னைக்கு மிஸ் பண்ணிட்டோமேனு இப்ப பீலிங்கா?" என்று கையை பிடித்து போட்டு விட்டாள்.

      கைத்தட்டும் ஓசையில் மற்றவர்கள் மனதார ஏற்பதை உணர்ந்து, பெண்ணவளுக்கு அணிவதை எடுத்து அவளது கை விரலை பிடித்து அணிவித்தான்.

    இரண்டு கைகளும் அழுத்தம் கூடியது.

   சட்டென "ம்மா.. என்ன காரியம் செய்துட்ட" என்று கிச்சனுக்குள் ஓடினான் ஹரிஷ்.
  
    லேசான தீஞ்ச வாடை வரவும், அடுப்பை அணைக்காமல் பிரியாணிக்கு தம்போட்டதை எண்ணி அன்னையை திட்டினான்.

     "ஏம்மா..  இப்படி கவனமில்லாம இருக்க?" என்று சூட்டோடு சூட்டாக பிரியாணி பாத்திரத்தை கையில் பிடித்து கீழே வைத்தான்.

    "ஏன்டா பேசமாட்ட... உனக்கு ஒரு நல்லது நடக்காதானு தவிச்சிட்டு கிடந்தேன். இந்த பிள்ளை பொசுக்குனு வேற நாட்டுக்கு போகுதுன்னு சொன்னதும், நீ மனசு விசனப்படுவியோனு எப்படி தவிச்சிட்டு அதே நினைப்புல கண்ணு கலங்காம சமைச்சேன். ஏதோ அடுப்பை அணைக்கலை.

   ஆனா நீ நல்லா விவரமா தான்டா இருக்க, அந்த பிள்ளையே மோதிரம் போடுற லெவல்ல பொண்ணு மனசை கெடுத்து வச்சிருக்க, இதுல மோதிரம் போட்டதும் பிரியாணி தீயுதுனு ஓடுற பாரு.. நீ எல்லாம் மாஸ்டர் பீஸுடா ஹரிஷ்." என்று இரண்டு கைகளையும் மேலே காட்டி புகழ்ந்து தள்ளவும் யாஷிதா அடக்கமாட்டாமல் மனம்விட்டு நகைத்தாள்.

      "ஹாப்பியா தாத்தா?" என்று இளையமானிடம் வந்து கேட்டாள்.

   "திருப்திடா முழுதிருப்தி. இனி உன்னை பத்தின கவலை எனக்கில்லைமா." என்று அகமகிழ்ந்து ஆனந்த கண்ணீர் வடித்தார்.

    சுப்ரமணியமும் ஆரூயிர் தோழனை தட்டிக் கொடுத்தார்.

    மதிய உணவை மூன்றரை மணியளவில் முடித்து அஜய் கனிகா வர, அவர்களோடு நட்பாய் ஒரு சிநேகித பேச்சு வார்த்தையை முடித்தாள் யாஷி.

   "எனக்கு அப்பவே தெரியும். இது லவ் மேரேஜ்"னு என்று கனிகா கூறினாள். ரஞ்சனும் விமலும் "அப்படியா டா மச்சி? நீ எங்களோட தான் சுத்தின, எப்ப டா லவ் பண்ணின?" என்று கேட்டு, இன்னமும் புரியாமல் திரிந்தனர். 

  இரவு அனைவரும் ஒன்றிணைந்து வழியனுப்ப, ரஞ்சனிடம் வாடகை பேசிய காரில் யாஷிதாவை ஏற்றி ஹரிஷ் அவளுக்கு டிரைவராக பயணம் புரிந்தான்.

     ஹரிஷின் தோள் வளைவில் நன்றாக சாய்ந்தவள், "இங்க வர்றப்ப இந்த கார்டியன் இளையமானுக்கு அறிவில்லை. பிடிக்காம எப்படி அவரோட வாழப்போறேன். ஏதோ சொத்து அதை வித்து பணத்தை போட்டா போதும்னு எரிச்சலோட வந்தேன்.

  பட் இப்ப இப்படியொரு கியூட் பையனோட காதலை சுமந்துட்டு போறேன். எனக்கு படிப்பு மண்டையில ஏறுமா ஏறாதானே தெரியலை. ஆனா எப்ப படிப்பு முடியும் திரும்ப எப்ப இந்தியா வந்து உன்னோட கல்யாணம் நடக்கும், எப்ப உன் ரூம்ல வந்து உன்னை அணைச்சிட்டு தூங்கப்போறேன்னு ரொம்ப ஆசையா இருக்கு. உனக்கு நினைவிருக்கானு தெரியலை. இன்விசிபிளா இருந்தப்ப நீ அணைத்திருக்க, அப்ப எல்லாம் 'யாஷி உன்னை திரும்ப பழையபடி மாத்துவேன்னு' நீ சொல்லற மாதிரி ஒரு 'ஹோப்' அந்த அணைப்புல இருக்கும்.

   நீயும் ஆரனும் அன்னைக்கு நைட் ஓரே சோபால தூக்கினிங்களே. அது போல நானும் நீயும் ஒரு சோபால கட்டி பிடிச்தி தூங்கணும்னு ஆசைப்பட்டிருக்கேன்.

   இன்னிக்கு காலையில பரோட்டா பிச்சி ஊட்ட வந்தியே... அந்த மாதிரி யோசிச்சி தயங்காம, எனக்கு நீ ஊட்டிவிடணும்.

   இன்னிக்கு என்னை அலேக்கா தூக்கி டேபிள்ல உட்கார வச்சியே, அதே மாதிரி தினமும் காபி சிப் பண்ணும் போது சின்ன சின்ன ரொமான்ஸா முத்தமிடணும். 

   இன்னிக்கு மாதிரியே ஆரன், காஞ்சனா ஆன்ட்டி நடுவுல டிஸ்டர்ப் பண்ண நீ சமாளிச்சி ஓடணும்.

    நான் இன்விசிபிளா இருந்தப்ப, காஞ்சனா ஆன்ட்டி, தனஞ்செயன் அங்கிள், மணி தாத்தா எல்லோரோட பழகினேன். எவ்ளோ அன்பு கேரிங். அப்பா அம்மாவை சின்னதுலயே இழந்த எனக்கு பார்த்து பார்த்து செய்தாங்க. ரியலி இந்த பேமிலியோட குயிக்கா வந்து கலந்திடணும்.
 
    நிறைய கனவுகளை, ஆசைகளை, சுமந்து போறேன் ஹரிஷ். திரும்பி வந்ததும் கல்யாணம் பண்ணிப்போம் தானே?" என்று பேசியதற்கு ஏற்ப அவனோடு வாழவேண்டுமென்ற தவிப்பை விழியில் சுமந்தவளாக கேட்டாள்.

    "நான் பேசணும்னு நினைச்சதை நீ பேசி முடிக்கிற. நான் என்ன பேசறது?
      பேசாம உன் ஸ்டெயில்ல பாலோவ் பண்ணிட்டா?" என்றவன் அவள் 'நான் என்ன ஸ்டெயில்ல?' என்று சிந்திக்கும் முன் அவளது சிகைக்குள் கைகளை நுழைத்து அவளை தன் முகமருகே நெருக்கமாய் இழுத்து முத்தமிட்டான்.

     ஏற்கனவே முத்தமிடும் நோக்கத்தோடு காரை மரத்தின் கீழ் இருட்டில் ஓரமாய் நிறுத்தியிருந்தான் கேடி அவன்.

   முத்தங்கள் நீளவும் குல்பி வண்டியின் சத்தம் 'டிங்டிங்டிங்'யென கேட்டது.

   அவளை விடுவித்து, "நான் போய் குல்பி ஐஸ் வாங்கிட்டு வந்துடறேன்." என்று கார் கதவை திறந்து வெளியே தன்னை ஆசுவசப்படுத்தி கொண்டான்.

   இயற்கை காற்றை ஆழ்ந்து சுவாசித்து, இரண்டு குல்பி வாங்கி வந்து, அவளிடம் ஒன்றை நீட்டினான்.

    "டெய்லி சாட் பண்ணு யாஷி''  என்று பாதி தூரம் செல்லவும் மௌவுனத்தை உடைத்து பேசினான்.

  "கண்டிப்பா... இம்சைபடுத்திட மாட்டேன்" என்றவள் கண்ணீர் மல்க ஏர்போர்டில் நின்றாள்.

      "இதுக்கு மேல ஏர்போர்ட்ல உள்ள வரமுடியாது. நீ கிளம்பு ஆல்ரெடி நேரமில்லை. இன்னும் செக்கிங் எல்லாம் இருக்கும்" என்று கைகடிகாரத்தை பார்த்து உள்ளே போக கூறினான்.

    கட்டிபிடித்து தற்காலிக பிரிவை தாங்கி ஏர்போர்டினுள் நுழைந்தாள்.

   ஹரிஷ் அவள் செல்லும் திசையையே வெறித்து அவள் மறையவும் காரை எடுத்தான்.

   "ஏன் தம்பி.. அபுதாபிக்கு போணும் அந்த பிளைட் பிடிக்க இங்க போகலாமா?" என்று கால்டாக்ஸி டிரைவர் ஒருவர் ஹரிஷிடம் கேட்க, "இந்த டெர்மினல்ல நிற்கணும் அண்ணா" என்றவன் கால் டாக்ஸி டிரைவரை ஏறிட்டான்.

   "நீ..நீங்க.. அந்த டெம்போ டிரைவர்ல?" என்று ஹரிஷ் கேட்க, "ஆமா தம்பி.. அன்னைக்கு நீங்க என்னை பெரிய கண்டெயினரு திருப்பறிங்க அப்படியிப்படி ஏசவும் உங்களிடம் பேசிட்டு உங்க தாத்தாவிடம் காசு வாங்கிட்டு வந்தேனா? அப்ப தரகர் போன் பண்ணினார். என்னை என்ன வேலை பார்க்கறேன்னு கேட்டார்.

   அப்ப இருந்த கடுப்புல ஆஹ் 'கால் டாக்ஸி டிரைவர்'னு பொய்யா பில்டப் கொடுத்துட்டேன்.

   அதோட நல்ல பொண்ணு போட்டோ அமையவும், எனக்கு பிடிச்சிப்போச்சு. பொய் சொல்லி கால் டாக்ஸி டிரைவர்னு சொல்லிட்டோமே இந்த பொண்ணு கிடைக்கலைனா என்ன பண்ணறதுனு நானா இருக்கற காசு போட்டு கால் டாக்ஸி டிரைவரா ஆயிட்டேன். உபர்ல நேம் போட்டு வச்சேன். அதான் ஏர்போர்ட் சவாரி. நல்லயிருக்கிங்களா தம்பி?" என்று கேட்டார்.

   "நல்லாயிருக்கேன் அண்ண. முதல்ல அவரை வழியனுப்பி பணத்தை வாங்குங்க. ஸ்டார் ரேட்டிங் குறைச்சிடப் போறார்" என்று கூறவும் பணத்தை வாங்கி டெர்மினலில் வழிகூறிவிட்டு டிரைவரோடு பாலத்திற்கு கீழே பயணம் செய்தான். அதிக நேரம் விமான நிலையத்தில் காரோடு அங்கே நிற்கவும் முடியாதே.

   கீழே இறங்கி ஓரம் கட்டவும், "தம்பி ஒரு டீ" என்றவும் "காபி அண்ணா." என்று கூறினான்.

   அன்றைய இரவில் காபி அருந்தி டிரைவரிடம் சுமூகமாக பேசி நட்பை உண்டாக்கி கைகுலுக்கி எண்ணை வழங்கினான்.

     வீட்டுக்கு திரும்பிவரும் வழியில், விமானத்தில் ஏறியதாக யாஷிதா அனுப்ப, "நான் காபி குடிச்சிட்டு கார்ல போறேன்." என்றான்.

  "இப்ப தானடா குல்பி சாப்பிட்ட இந்த நேரம் காபியா?" என்று அவள் கேட்க, இவனோ பதிலுக்கு குல்பிக்கு முன் கொடுத்ததை கேட்க, இமோஜியில் முத்த ஸ்டிக்கர் பறந்தது.

   "பிளைட் எடுக்க போறாங்க ரீச் ஆனதும் கால் பண்ணறேன் ஹரிஷ்" என்று முத்த ஸ்டிக்கரிட்டு அணைத்தாள்.

இப்படியே தொழில்நுட்பத்தின் வழியாக தொலைத்தூரத்தை குறைத்து காட்டும் அலைப்பேசியால், காதலை வளர்ப்பார்கள். அதுவரை நேரில் கொடுத்திட இயலாத முத்தங்களும் முனங்களும் பாவப்பட்ட அலைப்பேசி தான் தாங்கி  இவர்கள் காதலை வளரவைக்கும்.
  
   ஹரிஷும் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான். அனைவரும் உறக்கத்தில் இருக்க மெதுவாய் தனது அறைக்கு வந்து சேர்ந்தான்.

    கார் சாவியை புக் அருகே வைத்தான். இளையமான் கொடுத்த 'மர்ம நாவல் நானடா' புத்தகத்தின் ஏடுகள் புரட்டி படியென அழைத்தவாறு அவனது அறையில் காத்திருந்தது.

   விரைவில் வட்டெழுத்து வாசிக்க கற்றறிந்தால் ஹரிஷ் மீண்டும் இந்த கதையை வாசிப்பான். இல்லையேல் தன்னவள் வரும் வரை அவளை நினைவுப்படுத்தியபடி நெஞ்சில் வைத்து உறங்கலாம்.


         💞~~~சுபம்~~~💞

  பிரவீணா தங்கராஜ்

உற்சாகம் தந்து கமெண்ட்ஸ் பண்ணின எல்லாருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

கதை பிடிச்சிருக்கா. உங்கள் ரிவ்யூவா இங்க கருத்தை முன் வைக்கலாம். அல்லது முகநூலில் ரிவ்யு கொடுக்கலாம். 

கதை உங்கள் இதயத்தில் தாக்கியதை உரைக்கலாம். விமர்சனமாக..  

மர்ம நாவல் நானடா-22

 அத்தியாயம்-22

   தன்னை விழுங்கும் பார்வையை வீசும் யாஷிதாவிடமிருந்து தட்டை வாங்கியவன் பிளேட் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு "ஏன் போகணும்...? ஏன் ரிட்டர்ன் வர்ற டேஸ் தெரியலை? " என்று புரியாமல் கேட்டான்.

   "நான் இன்விசிபிளா போவதற்கு முன்னாடியே ஒரு சிக்ஸ் மந்த கோர்ஸுக்கு ஆன்லைன்ல அப்ளை பண்ணி பீஸ் கட்டிட்டேன்.  

    தாத்தா சொத்து விற்று பணத்தை போடணும்னு சொன்னாரே தவிர நீங்க வாங்கிய வீட்டை நான் கண்ணால பார்த்ததே இல்லை. அதனால தான் அது யார் வீடுனு கூட தெரியாம சுத்தினேன். இங்க வந்த முதல் நாளே பத்திரத்துல கையெழுத்து போட்டு கொடுத்துட்டேன். தாத்தா தான் வீட்டை விற்காம இழுத்துட்டு இருந்தார். குயிக்கா விற்றுட்டா நான் கொலம்பியா போயிடுவேன்னு வேண்டுமின்னே தாமதப்படுத்தினார். அதோட நான் அவரை புரிஞ்சிட்டு அவர் காட்டுற மேரேஜிக்கு ஓகே சொல்வேன்னும் நினைச்சார். பட் நான் அவரிடம் பேசக்கூட மாட்டேன்.

  எப்படியும் சொத்து விற்று பணத்தை போட்டுடுவார்னு அங்க படிப்புக்கு அப்ளை பண்ணியது. போகலைனா பீஸ் கட்டிய பணம் வேஸ்டா போயிடும். அதோட எனக்கு கொஞ்சம் பிரேக் தேவைப்படுது." என்று அவனை ஏறிட்டாள். மொத்தமும் பேச வரவில்லை திக்கி திணறி சொதப்பியது.

    "ஓ... ஓகே.. குட்.. போய் படிச்சிட்டு வா. இளையமான் தாத்தா எங்க தாத்தாவோட தான் இனி ஸ்டே பண்ண போறார்.
 
   நீ தனியா விட்டுட்டு போறோம்னு பீல் பண்ண வேண்டியதில்லை." என்று கூறவும், யாஷிதா தலையாட்டினாள்.

   தன்னை போல மனதில் எந்த போராட்டமும் இவனுக்கில்லையா என்று தான் யாஷிதா வாடினாள்.

    இளையமானும் சுப்ரமணியும் குளிரெடுக்க, வீட்டுக்கு போவதில் தயாராய் இருந்தார்கள். அவர்கள் ஹரிஷும் யாஷிதாவும் பேசுவதில் பெரிதாக கருதவில்லை. உதவியதற்கு நன்றி கூறுகின்றாளென்று சுப்ரமணியத்தின் கணிப்பு. இளையமானுக்கு பேத்தி மனதை ஒரளவு கிரகித்திட அது யூகமாக கடக்குமா? அல்லது அம்பலமாகுமா? என்று வேடிக்கையாளராய் நின்றார்.

   மேகமலைக்குள் தான் மண்டபமும் யாஷிதா வீடும் என்பதால் காலை வருவதாக கூறி விடைப்பெற்றார்கள்.

   வீட்டுக்கு வந்து அவரவர் உறங்க சென்றதும் ஹரிஷ் மட்டும் வெளியே வந்து குளிரில் வேடிக்கை பார்த்தான்.

   ஸ்வெட்டர் அணிந்தும் குளிரெடுக்க, எங்கோ யானை பிளிரும் சப்தமும் கேட்க, பால்கனி வந்தான்.

    அவன் வந்த சில மணித்துளியில் அவளும் வந்தாள். "ரொம்ப குயிக்கா பிரெண்டா அக்சப்ட் பண்ணிட்ட" என்று அவளை ஏறிட்டு திரும்பினான்.

   கையில் ஒயின் பாட்டிலோடு யாஷிதா வந்து கொடுக்க இன்னும் தயக்கமானான்.

     "நீ தண்ணி அடிப்பனு எனக்கு தெரியும். பிடி நான் தான் வாங்கி வச்சது. பிரெண்டா அக்சப்ட் பண்ணினேன்ல... ஒயின் தான்... குட் பார் ஹெல்த்" என்று கொடுக்க "வேண்டாம் வச்சிட்டு போ. அப்பறமா வேண்டுமின்னா குடிச்சிக்கறேன். எங்கம்மாவுக்கு நான் இதை கையில வச்சிட்டு இருந்தாலே தொடப்ப கட்டையை எடுத்து பின்னுவாங்க. நீ சாதாரணமா கையில கொடுக்குற" என்று அவள் முன் வேண்டாமென மறுத்தான்.

  'இதுல குட் பார் ஹெல்த்' என்றவன் முனங்கினான். 'மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் அதை மீறி ஆசை வந்து தொலைக்குது. இவளை பார்த்தாலே... மனசை மாத்தவும் முடியலை. எம்மா தாயி கொலம்பியாவுக்கு சீக்கிரம் போ' என்று ஒப்பாரி வைத்தது அவன் மனம்.

     யாஷிதாவோ ஓரமாய் வைத்துவிட்டு, கையை த்ரீபோர்த் பேக்கெட்டில் விடுத்து, மறைத்து அறைக்கு சென்றாள்.

   யாஷிதாவுக்கு இப்படி தடுமாறி பேசுவது புதிதான அனுபவம். அவள் தனியாக வளர்ந்தாலும் மனதில்பட்டதை பேசும் வாழ்க்கை சூழலில் தான் வளர்ந்தது. ஹரிஷிடம் தவிப்பது பிடித்திருந்தது.

    நீண்ட நேரம் அங்கேயே இருந்த ஹரிஷிற்கு பனி கொஞ்சம் கொஞ்சமாய் உடலில் ஏறத்துவங்கியது. ஒயின் பாட்டிலை எடுத்து அதேயிடத்தில் வைத்துவிட்டு திரும்பியவன் அக்கம் பக்கம் பார்த்து, கொஞ்சமாய் கண்ணாடி கோப்பையில் சரித்து தொண்டையை நனைத்து கொண்டான்.

    'நிறைய பழக்க வழக்கம் மாறுமா? முதல்ல அவ ஓகே சொல்லவேயில்லை. நீ யோசிக்கற பார்த்தியா' என்று மனசாட்சி கேலியாய் சிரிக்கவும் ஹரிஷ் 'ஆமால.' என்று தோளைக் குலுக்கினான்.

   ஆனால் 'அவயென்ன பார்க்குறா. அதுக்கு அர்த்தம் அதான்' என்றான் ஆணித்தரமாய். கன்னியின் காதல் பார்வைக்கும், சாதாரண பார்வைக்கும் அர்த்தம் புரியாத பாலகனா அவன்?

   அதே நினைப்போடு உறங்கி வழிந்து அடுத்த நாள் காலை திருமணத்திற்கு தயாரானான்.

   லெகங்காவில் இடை தெரிய யாஷிதா தயாராகி வந்தாள். பார்க்கும் இவனுக்கு தான் போதையானது.

    நிறைய சடங்குகள் இருக்க தாலி அணிவித்தப் பிறகு குடத்தில் மோதிரம் போட்டு ஷ்யாம் ஹாசினி தேட, அப்பளம் உடைக்க, ஊஞ்சலாட என்று அவர்கள் சமுதாய வழக்கங்களை ரசித்தாள்.

   ஒவ்வொரு முறையும் அந்த சடங்கில் ஷ்யாம்-ஹாசினி மறைந்து அவளும் ஹரிஷும் பிம்பமாக மாற யாஷிதாவோ தன் மனதின் ஆசையும் அப்பட்டமாய் புரிந்தது.

     மெதுவாக ஹரிஷை காண அவனோ ஒரு குழந்தையிடம் சாக்லேட்டை தராமல் விளையாட்டு காட்டி சிண்டு பிடித்து விளையாடினான்.

  எப்பொழுதும் அவனிருக்குமிடம் கலகலப்பாக இருந்தது. தெரிந்த இடம் தெரியாதயிடம், புதியவர்கள் பழகியவர்கள் இதெல்லாம் அவனுக்கில்லை.

    சந்திரன் கீதா இருவரும் ஹரிஷ் யாஷிதா இருவர் இருக்கும் நேரம், "ரொம்ப சந்தோஷமா இருக்கு. மன்னிப்பு கேட்கணும் அதுவும் நேர்லனு காத்திருந்தோம். ஹாசினி கல்யாணம் முடியவும் ஒரு ரிலீப்.

   ஐ அம் ரியலி சாரி யாஷிதா. ஹரிஷை உங்க தாத்தா மேரேஜிக்கு பேசி ஆறு மாசம் கூட இருக்காது. அவர் உனக்காக வந்து பேசினார். நாங்க நாலு வருஷம் தெரிந்தவங்க. ஆனா உதவி தேவைப்பட்டப்ப உதவலை.

எல்லாம் ஹாசினிக்கு கெட்டது நடக்ககூடாதுனு யோசித்தோம் நீ எங்களை பெற்றோரா பார்த்திருப்பனு யோசிக்கலை. ஐ ரியலி சாரி." என்று சந்திரன் மன்னிப்பு கேட்க, கீதாவும் கண்ணீர் திரையிட கையை பிடித்து மன்னிப்பு கேட்டார்.

   "அங்கிள் ஆன்ட்டி... நான் அதை அன்னைக்கே மறந்துட்டு தான் மேரேஜிற்கு வந்தது. நீங்க என்ன பீல் பண்ணறிங்க மற்றதை மறந்திடுங்க. ஹரிஷ் சொல்லு" என்றாள்.

  ஹரிஷோ 'கேட்கட்டும் கேட்கட்டும்' என்று தெனாவட்டாய் நின்றான். கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக விரட்டியதை கண்கூடாக பார்த்தவனாயிற்றே. 

   யாஷிதா மிகவும் சங்கடமாய் உணரவும், "சார் அதான் முடிச்சுதே. மன்னிச்சாச்சு போங்க கல்யாண வேலையை கவனிங்க" என்று யாஷிதாவை இடைப்பிடித்து அணைத்தவாறு, சந்திரனை ஆதரவாய் கைக் கொடுத்தான்.
    "உங்க கல்யாணம் எப்ப தம்பி?" என்று கேட்டு வைத்தார்.

   அதில் ஹரிஷ் ஸ்தம்பிக்க, கீதாவும் "சொல்லு யாஷிதா..? எங்களை கூப்பிடுவியா?" என்று கேட்டார்.

  ஏற்கனவே ஹரிஷின் கைகள் இடையை பிடித்திருக்க பேச்சு வராமல் தடுமாறியவள், பேசவேண்டிய நிர்பந்தம் ஏற்பட, "ஆன்ட்டி... இதென்ன கேள்வி எனக்கு கல்யாணம் ஆகறப்ப உங்களுக்கு இன்பார்ம் பண்ணுவேன்." என்று மிகவும் நழுவியவளாக பதில் தந்தாள்.

   அதன்பின்னும் பத்து நிமிடம் கழித்து சந்திரன் கீதா இடத்தை காலி செய்தனர். அதுவரை ஹரிஷ் கைகள் அதேயிடத்தில் பசைப்போட்டு ஓட்டியிருக்க, அவர்கள் சென்றதும் கையை எடுத்தான்.

   "இல்லை... ஒரு க்ரிப்புக்கு கையை இடுப்புல வச்சிட்டேன். அதுல கை உதற ஆரம்பிச்சிடுச்சு. எடுத்தா டிப்ரெண்டா என் ஆக்டிவிட்டிஸ் தெரியும்னு அப்படியே விட்டுட்டேன்.

  நா..நா..நான். வெளியே வெயிட் பண்ணறேன் ரிட்டர்ன் போகணும் இல்லையா." என்று ஓடியிருந்தான்.

   அவனுக்கே அத்தனை உதறல்கள் என்றால் அவனை சுமந்து அவனோடு வாழு விரும்பும் யாஷிதாவுக்கு அவன் பிடி சுகமாய் உரிமையை உணர்த்தியது.

  அதன் பின் இனி இங்கே அதிகப்படி  சென்னைக்கு கிளம்ப வேண்டும் என்பதால் அப்படியே செல்வதாக ஹாசினியிடம் அறிவித்துவிட்டு கிளம்பினாள்.

     சுப்ரமணியமும் இளையமானும் வாழ்த்தி விட்டு அசதியில் காரில் உறங்கிக் கொண்டு வரவும், சென்னைக்கு வண்டியை ஓட்டியபடி ஹரிஷ் டிரைவர் வேலையை பார்த்தான்.

   யாஷிதா வண்டி ஒட்டுபவனையும் பின்னால் இருந்த தாத்தா இருவரையும் பார்த்து பேச தயங்கினாள்.

   அவனோ திருட்டு முழியில் இந்த பக்கம் பார்வையை செலுத்தாமல் சாலையை கவனித்து சிவனேயென்று வந்தான்.

   கண்முன் பாதை வளைவுகள் எல்லாம் அவளது இடையை நினைவுப்படுத்த, 'இந்த வளைவுகள் எல்லாம் கடந்துடலாம். அந்த வளைவு ஸப்பா... ஹரிஷ் கண்ட்ரோல் கண்ட்ரோல்..' என்று தனக்குள் கூறியபடி வந்தான்.

நடுவில் உறக்கம் வழியவும் இறங்கி காபி குடித்தான். முகம் அலம்பிக் கொண்டான். அப்பொழுதும் யாஷிதா விழித்திருந்தால் ஆனாலும் வண்டிவிட்டு இறங்கவில்லை. கண்ணை மூடினால் ஹரிஷின் அணைப்பும் பிடியும் அவளை ஆட்டிப்படைத்தது.

   அடுத்த நாள் பத்து மணிக்கு செங்கல்பட்டு தாண்டவே ஒரு கடையில் பரோட்டாவை பிச்சி போட்டு சாப்பிட்டான். தாத்தா இருவரும் இட்லி உணவை எளிதில் ஜீரணமாக எடுத்து கொண்டார்கள்.

    அவன் ஆர்டர் செய்தவையையே இவளும் ஆர்டர் கொடுத்து சாப்பிட முடியாமல் திகைக்க, "இதெல்லாம் கூச்சப்பட்டு மெதுவா பிக்க முடியாது. இங்க பாரு" என்று பரோட்டாவை நன்றாக பிய்த்து போட்டு சால்னாவை ஊற்றி ஊட்ட சென்றவன் அப்படியே நிறுத்திவிட்டு "இப்ப நல்லா ஊறியிருக்கும் சாப்பிடு" என்றான்.
  
    காலையிலேயே சூடான பரோட்டா சால்னா என்று வயிற்றை நிரப்பியவள், "தாத்தா எனக்கு நைட் ஒன்பது மணிக்கு பிளைட். நீங்க வந்து ரிட்டரன் போக கஷ்டமா இருக்கும். நீங்க வரவேண்டாம். நானா கேப் புக் பண்ணி போயிடுவேன்" என்றாள். அவள் பேச்சு தாத்தாவிடம் பார்வையோ ஹரிஷிடம் இருந்தது.

   இளையமானோ "தாராளமா போயிட்டு வாம்மா." என்று கூறிவிடவும், சுப்ரமணியம் மனசு கேட்காமல், "உனக்கு அப்ஜக்ஷன் இல்லைனா... கேப் எதுவும் வேண்டாம்மா. இந்த வண்டியை நாளைக்கு காலையில கொடுத்துக்கலாம். நைட் ஹரிஷை டிராப் பண்ணிட சொல்லறேன்." என்று பெண்ணை தனியாக அனுப்ப யோசித்தார்.

   "ஓகே தாத்தா... அவருக்கு எப்படின்னு கேளுங்க." என்று உரைத்துவிட்டாள்.

   இதே போல மணந்துக்கொள்ள ஒரு வார்த்தை கூறியிருக்கலாம் என்று மணிதாத்தாவின் மனதில் தோன்றாமல் இல்லை.

   ஹரிஷோ "அதெல்லாம் பிரச்சனை இல்லை தாத்தா. டிரைவர் பக்கத்துல இருந்தா தான் நான் மந்தமா பாட்டு கேட்பேன். நானா டிரைவ் பண்ணினா அதெல்லாம் சரியா கூட்டிட்டு போவேன்" என்று மொழிந்தான்.

  வெயிலாலும் டிராபிக் கூட்டத்தாலும் எரிச்சலாக பயணித்து வீட்டுக்கு வந்து சேர மணி இரண்டானது.
 
    யாஷிதா இரவு செல்வதால் மட்டன் ப்ரியாணி போட்டு தம்மில் வைத்தார் காஞ்சனா. வரும் பொழுதே வாசம் பிடித்த ஹரிஷ், "அம்மா இன்னிக்கு என்ன விஷேஷம்? கண்ணா பின்னானு வாசம் வருது." என்று வாசலில் நுழையும் போதே மோப்பம் பிடித்தான்.

   "யாஷிதா ஊருக்கு போறா. அதான் கொஞ்சம் கொஞ்சம் மாவடு ஊறுகாய், இட்லிபொடி, கருவேப்பிலை போடி, தக்காளி தொக்கு, இப்படி செய்யறேன்." என்று கூறவும் ஹரிஷ் அமைதியானான். அவள் செல்வதில் லேசான வருத்தம்.

   "உன் பையனுக்கு வேலை சேர்ந்து அடுத்த வாரமே லீவு போட்டிருக்கோமேனு ஏதாவது பீல் பண்ணறானா. வந்ததும் வாசம் பிடிக்கிறான்." என்று தனஞ்செயன் எப்பவும் போல மகனை ஏய்த்தார்.

   'அவர் ஏன்மா வேலைக்கு போகாம சுத்தறார். என்னையே நோண்ட வேண்டாம்னு சொல்லுங்க.' என்று காஞ்சனா காதுமடலில் கூறி கிச்சனில் பாத்திரத்தை திறந்து திறந்து பார்த்தான்.

   "கை கால் அலம்பிட்டு வாடா. அவரே லீவு போட்டு ஒரு நாள் இருக்கார். பொறுக்காதே உனக்கு" என்று காஞ்சனா மகனை திட்டினார்.

   'யாருமில்லைனு ரொமான்ஸ் ஆட்டம் பாட்டம்னு இருந்திருப்பாங்களோ... இந்த ஜோடியை நம்ப முடியாது.' என்று  படிகளில் தாவினான்.

   அவன் தாவியோடிய வேகத்திற்கு தள்ளாடி நிற்கும் முன் அவை நிகழ்ந்து முடிந்தது.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

மர்ம நாவல் நானடா-21

  அத்தியாயம்-21

   கல்யாணம் பண்ணிக்க போறியா என்பது போல இளையமான் பார்க்க, "ஹாசினி மேரேஜிக்கு நாம அங்க வருவோம்னு சொல்லிருக்கேன் தாத்தா. போகலைனா ஏதோ நமக்கு இக்கட்டுல அவ ஹெல்ப் செய்யலைனு நாம அவாய்ட் பண்ணறோம்னு அந்த அங்கிள் மனசு பீல் பண்ணலாம்.

  இன்னும் நெக்ஸ்ட் சாட்டர் டே தானே மேரேஜ் அது முடியவும் கொலம்பியா கிளம்பறேன் தாத்தா." என்று உரைத்துவிட்டு மாடிக்கு உறங்க சென்றிருந்தாள்.

   ஹரிஷோ 'நல்ல வேளை நானா எதுவும் கேட்டு என் மானத்தை விற்கலை.' என்று கூறிக்கொண்டான். ஆனால் உள்ளமெல்லாம் 'இப்படியொருத்தி என் லைப்ல எண்ட்ரி ஆகியிருக்கலாம்.' என்று வருத்தமும் கொண்டது.

  இளையமானுக்கோ இதுவரை இங்கேயிருந்த கணம் ஹரிஷோடு சுற்றியதில் அவன் குணம் அறிந்து திருமணத்திற்கு சம்மதிப்பாளென நினைத்தார். ஆனால் கனவு அனைத்தும் பூஜ்ஜியமானது.

   ஏதோ பேத்தி இந்தளவு சுமூகமாக பேசுகின்றாளென்ற வரை சந்தோஷமே.

    திங்கள் வரவும் பணிக்கு முதல்நாள் கிளம்ப தயாரானான்.

   யாஷிதா அவனுக்கு "ஆல்தி பெஸ்ட் ஹரிஷ்" என்றாள்.
   "தேங்க்யூ" என்றவன் சாப்பிட்டு அன்னையின் கையால் விபூதி நெற்றியில் குடிப்புக தந்தையிடம் பேக்கெட் மணி வாங்கிக்கொண்டு, இளையமான் சுப்ரமணி இருவரின் பாதங்களில் பணிந்து வணங்கி பைக்கில் அலுவலகம் சென்றான்.

  அலுவலகத்தில் சிலர் கொஞ்ச நாள் முன் அமைச்சர் ரவிதாஸ் விஷயத்தில் ஹரிஷை பார்த்திருக்க, கிசுகிசுக்க ஆரம்பித்தது.

   'கடவுளே... வேலைக்கு வந்த உடனே என்னை பத்தி கிசுகிசுவா, விளங்கிடும்டா' என்று பார்மாலிடிஸ் பிரகாரம் மேனேஜரை சந்தித்து தனக்கான வேலையையும் இருப்பிடமும் அறிந்து வந்து கேபீனில் அமர்ந்தான்.
 
   அவனுக்கான இடத்தில் அமர்ந்து லேப்டாப்பை இயக்கி முடித்து பணியை குறித்து அவனுக்கு மேலாளரால் கூறியவர் அறிவுறுத்த, அதனை செவிமடுத்தி கொண்டான்.

  பிரேக் டைமில் தான் சிலர் வந்து ஹரிஷிடம் டிவியில் பேசியவர் தானே. பக்கத்துல இருந்த பொண்ணு லவ்வரா? எப்படிங்க கொலை நடந்ததை வீடியோ எடுத்தாங்க, என்று பல கேள்விக்கு சிரித்து மறைத்து விடையளித்தான்.

     பார்ப்பவர்கள் அனைவருமே யாஷிதாவை ஹரிஷ் காதலியாக பாவிக்க, போனை எடுத்து முகநூலில் நுழைந்தான்.

   இளையமான் மூலமாக யாஷிதா முகநூல் ஐடி அறிந்தாலும் அவள் மேகமலையின் இயற்கை படத்தை தான் முகப்பு படமாக வைத்திருந்தாள். இதில் 'செக்கியூரிட்டி லாக்' போட்டிருக்க உள்ளே செல்ல தடையானது.

   ஒருவழியாக 'பிரெண்ட் ரெக்வஸ்ட்' கொடுத்துவிட்டு 'லாக்அவுட்' செய்து போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்து வேலைக்குள் தன்னை புகுத்தி கொண்டான்.

   மதியம் சாப்பிடும் நேரம் போனை எடுத்து பார்த்தான்.

   முகப்பு படம் மாற்றியிருந்தாள். ஆனால் ரெக்வஸ்ட் அப்படியே தான் இருந்தது. அதிகம் எதிர்பார்க்கின்றோமோ? ஆனால் அவளது மாய விழிகள் தன்னை மூழ்கடிக்கின்றனவே? அதில் அவன் கண்டவை?

    முதலில் கிடைத்த வேலையை தக்க வைத்து கொள்.' என்று மனது கேலி செய்ய மதிய உணவை முடித்தும் பணியில் தீவிரமானான். அப்படியொன்றும் வந்த முதல் நாளே பிழிந்து எடுக்கவில்லை. மாலை ஐந்து மணிக்கு பார்க்கிங்கில் வண்டியை எடுத்து வீட்டுக்கு பறந்து வந்தான்.

     "கைகால் அலம்பிட்டு வாடா. காபி போடவா?" என்று கேட்க தலையாட்டி மாடிக்கு தாவினான்.

   அங்கே ஹரிஷ் ஆல்பத்தை தான் புரட்டிக்கொண்டிருந்தாள் யாஷிதா.

  அவன் வந்ததும் திடுக்கிட, "சாரி... டிரஸ் மட்டும் எடுத்துட்டு போயிடறேன். பழக்க தோஷத்துல 'டோர் நாக்' பண்ணலை" என்றவன் டவல் ஷார்டஸ் டீஷர்ட் என்று எடுத்தபடி வெளியேறினான்.

   மாடியிலும் ஹாலை ஒட்டிய பாத்ரூம் இருக்க அங்கே வந்து ஒரு சிறுகுளியல் போட்டுவிட்டு உடை மாற்றி வந்தான். முகத்தை துடைத்துக் கொண்டு பால்கனிக்கு வந்தான்.

   மெதுவாய் யாஷிதா கீழே செல்வதை கண்டான். ஹரிஷ் அவளை தொடர்ந்தாலும் போனை நோண்டியபடி அவள் தன்னை முகநூல் தோழனாக ஏற்றாளா இல்லையாயென காண, நட்புக்கு விடுத்த கோரிக்கை அதே நிலுவையில் இருந்தது.
  
       இரவு வரை படம் பார்த்து பேசி சிரித்து யாஷிதா உறங்க மாடிக்கு சென்றாள். ஹரிஷ் சோபாவில் தூங்கினான்.

   இதே நிலை தான் அந்த வாரம் முழுவதும் நீடித்தது.
  
    வெள்ளியன்று மேகமலைக்கு செல்ல எடுத்து வைத்தாள்.
ஹாசினி திருமணத்திற்கு இளையமான் யாஷிதா கிளம்பினார்கள்.

     இளையமான் தான் சுப்ரமணியத்தையும் துணைக்கு கூப்பிட்டார். ரஞ்சன் காரை வாடகைக்கு எடுத்து ஹரிஷும் வரக்கூறினார்கள். திருமணம் முடிந்து இதே போல திரும்பி வந்து யாஷிதாவை கொலம்பியாவுக்கு ஏற்றிவிட்டு நண்பனோடு தங்குவதாக வாக்கு தந்தார்.

  அதனால் சுப்ரமணியமும் கூடவே வந்தார்.

  ஒரு வாகனத்தை இயக்கும் வேலையை செம்மையாக செய்துக்கொண்டு ஹரிஷ் வந்தான்.

  கடந்த முறையாவது ரஞ்சன் வாகனத்தை செலுத்தினான். இம்முறை ஹரிஷ் மட்டும் நெடுந்தொலைவில் காரை ஓட்டினான்.

   சற்று இளப்பாரும் நேரம் "நான் வேண்டுமின்னா கார் ஓட்டறேன். நீங்க கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க" என்று யாஷிதாவே முன்வந்தாள்.

     ஹரிஷ் "இல்லை... ரோடு கொஞ்சம் தாருமாறா இருக்கும்" என்று மறுக்க பார்த்தான்.

   "அதெல்லாம் ஸ்லோவா போவேன்" என்று அவனை முன்னிருக்கையில் அமர கூறி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து சாலையில் வண்டியை செலுத்தினாள்.

  இரு தாத்தாவும் பின்னிருக்கையில் கதை பேசியபடி வர, இளசுகள் இரண்டும் ஓரப்பார்வையில் பார்வை பரிமாற்றம் மாறி மாறி மற்றவர் அறியாது நிகழ்த்திக் கொண்டிருந்தனர்.

   சிலநேரம் இருவரின் விலோசனங்கள் மோதிக்கொள்ள இருவருக்குள் ஒரு மென் முறுவல் உதிர்க்கும்.

   இப்படியே மேகமலை வரை வந்து சேர்ந்தார்கள். ஏற்கனவே ஹாசினியிடம் கூறியதால் சந்திரன் ஆட்களை வைத்து இளையமான் வீட்டை சுத்தம் செய்திருந்தார். "இங்கயும் ஹால்ல தான் தூங்கணுமா?" என்று ஹரிஷ் கேட்க, "நீங்களும் உங்க தாத்தாவும் ஒரு ரூம்ல ஸ்டே பண்ணுங்க
நானும் எங்க தாத்தாவும் ஒரு ரூம்ல ஸ்டே பண்ணிக்கறோம்." என்று கூறவும், 'வக்கணையா பேசு. ரெக்வஸ்ட் அனுப்பி ஐந்து நாளாச்சு' என்று மனதில் அவளை வறுத்தெடுத்தான்.
  
     அலைச்சலில் வந்த முதல் நல்ல தூக்கம், அடுத்த நாள் காலை மேகமலையில் விடியல் பிறந்தது.
   காபி கலந்து தோட்டத்தில் இருந்தவருககு கொடுக் நால்வரும் இயற்கையை ரசித்தபடி பருகினார்கள்.

       "ஹாசினி ரிசப்ஷன் நைட்டு தான். மேரேஜ் நாளைக்கு காலையில. நாம வேண்டுமின்னா காலையில இருந்து ஈவினிங் வரை சுற்றி பார்க்க போகலாம். உங்களுக்கும் டைம் பாஸ் ஆகும்." என்று அழைத்தாள்.

   "நீங்க உங்க பிரெண்ட் கூட போகலையா? மணப்பெண் தோழியா மேடையில நிற்பிங்கனு பார்த்தேன்" என்று கேட்டான்.
  
   "இல்லை... ரிலேட்டிவ்ஸ் இருப்பாங்க. நான் ஈவினிங் ஆஜராகறேன்னு சொல்லிருக்கேன்." என்று கூறவும் ஹரிஷ் "அப்ப போகலாம்" என்று தலையாட்டினான்.

   முன்பென்றால் அப்படி தான் நின்றிருப்பாளோ என்னவோ தற்போது தயக்கம் பிறந்தது. அதை விட முக்கியம் ஹரிஷ் அருகே இருக்க தோன்றியது.

    அவள் பிரெட் சாண்ட்வெஜ் ஜூஸ் என்று எடுத்துவரவும், அதனை விழுங்கும் நேரம் முகநூலில் நோட்டிபிகேஷன் வந்து சேர்ந்தது.

   ஜிமெயில் வரவும் எப்பவும் போல எட்டி பார்த்து உள்ளே செல்லாமல் இருந்தவன் யாஷிதா என்ற பெயரை கண்டதும் 'லாகின்' செய்ய நட்பை ஏற்றதாக காட்டியது.

   'குண்டு தக்காளி இதுக்கு இத்தனை நாளா?' என்று திட்டினாலும் மெஸேன்ஞரில் 'ஹாய்' என்று பொத்தம் பொதுவாய் அனுப்பிவிட்டு வெளியேற, 'ஹாய்' என்று பதிலுக்கு வந்தது.

   சாண்ட்விச்சை வாயில் கொண்டு சென்றவன் போனை எடுத்து அவளை தேட, அவனை போலவே போனை தன் ஜீன் பேண்டில் திணித்து "ப்ரூட் சாலட் தாத்தா" என்று கொடுத்தாள்.

   "போதும்டா. இதுவே அதிகம்" என்று மறுக்க அவன் பக்கம் நகர்த்தினாள்.

    அதன் பின் ஊர்சுற்றும் படலம் நிகழ, மாற்றி மாற்றி செல்பி எடுத்தார்கள்.

  நால்வரும் இணைந்து புகைப்படம், சிலயிடத்தில் நொறுக்குதீனிக்கு நேரம் போனது. யானை கூட்டம், புலி சரணாலயம், மான், குரங்கு, என்று மயில், காட்டு மான், வவ்வால், பாம்புகள் என்று மிருகங்களை ரசித்து புகைப்படம் எடுத்து வீடு திரும்பினார்கள். கலிவரதன் எஸ்டேட்டை கூட சுட்டிக்காட்டினாள்.

    "இன்னமும் தடைச்செய்யப்பட்ட பகுதியா இந்த கெஸ்ட் அவுஸை சீல் வச்சிருக்காங்க.'' என்று யாஷிதா கூற "அம்மாடி இங்கயெல்லாம் நிற்க வேண்டாம். வண்டியை வீட்டுக்கு விடு. ஹாசினி ரிசப்ஷனுக்கு போகணும்" என்று இளையமான் கூறினார்.

    "ஏன் தாத்தா? அந்த புக்ல என்ன எழுதியிருக்கு? மேஜிக் வோர்ட்ஸா?" என்று ஐயத்தை கேட்டான்.
 
  வட்ட எழுத்துக்கள் வடிவத்துல யாஷிதாவோட கதை தான் இருக்கும். 'மர்ம நாவலா'... மத்தபடி மாய தந்திர வார்த்தைகள் குறிப்புல எழுதி வைக்கிறதுயில்லை.

   நம்மூர்ல பல கலைகள் நமக்குள்ள அழியறதுக்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? எந்தவொரு நல்ல கலையும் நல்லவனுக்கு பயன்படாம கெட்டவனுக்கு தான் உபயோகப்படுத்தறாங்க. அதனால அதை யாரும் மத்தவங்களுக்கு சொல்லி தருவதற்கு பதிலா தங்களுக்குள்ள புதைச்சிக்கறாங்க. இல்லையா நம்பிக்கையான ஒருத்தருக்கு பயிற்று வித்துட்டு சாகறாங்க.

     நாம நம்ப முடியாத கலைகள்  கூடுவிட்டு கூடு பாயறது, எந்தவித நோயும் குணமாக்குற சக்தி கொண்ட மூலிகை, இளமையா இருக்கற தந்திரம், இப்படி பலதும் கெட்டவங்களிடம் போறதாலயே எதுவும் ஏட்டுல எழுதி தெரிவித்திடலை.

    இந்த புக் யாஷிதா கொலையை பார்த்து இன்விசிபிளா மாறி உன்னிடம் அவ பேசி புரிய வச்சி தப்பிச்ச கதை தான் வட்டயெழுத்துல எழுதியிருக்கும். நான் நடந்தவையை தான் இதுல உடனுக்குடன் பதிய வைக்கிற மாதிரி மாற்றியிருக்கேன்.

     முதலும் கடைசியுமா என் பேத்தி மனசுல என்ன நினைச்சாளோ அதுவரை அது எழுத்தா பதியப்பட்டிருக்கும்.

     இது அவளை பற்றிய மர்ம நாவலா புரட்டி படிக்கலாம். மற்றவர் பார்வைக்கு ஜஸ்ட் பேண்டசி புக்கா படிக்க யூஸாகும். ஆனா வட்ட எழுத்து தெரிந்தவங்க வாசிக்கலாம்." என்று கூறி முடிக்க, இளையமான் சொன்னதை உள்வாங்கியவன், அவரை பின் தொடர்ந்தான்.

   "தாத்தா தாத்தா... அப்ப இதுல அவ மனசுல என்ன இருக்குனு எழுத்தா பதிந்திருக்கும் தானே? உங்க பேத்தி மனசுல என்ன இருக்குனு நீங்க வாசிக்கலாமே." என்று ஊக்கப்படுத்தினான்.

   "வாசிக்கலாம்... ஆனா வயசு பிள்ளை பாரு. வேண்டுமின்னா நீ படி" என்று அவனிடமே கொடுத்தார்.

   "உங்களுக்கு வேண்டாமா?" என்று கேட்டு குழம்ப, "வேண்டாம்ப்பா" என்று சிரித்தார்.

   ஹரிஷ் கையில் அந்த புத்தகம் இருந்தும் புரட்டி புரட்டி பார்த்து, 'தமிழ்ல எழுதினாலே நான் படிச்சி முடிக்க பலகாலம் ஆகும். இதுல ஜிலேபி சுத்திவிட்ட மாதிரி வட்டெழுத்தாம். ஆனாலும் இது என்னிடம் இருக்கட்டும்' என்று எடுத்து வைத்தான்.

     ஹாசினி ரிசப்ஷனுக்கு முழுகவுன் ஒன்றை அணிந்து வரவும் காரை இயக்கினான்.
   அடிக்கடி அவளை ஏறிட்டு ரிசப்ஷன் நடக்கும் மண்டபத்தில் நிறுத்தினான்.
    இளையமானும் சுப்ரமணியமும் இறங்கி முன்னே நடக்க, ஹரிஷை அழைத்து வரும் பொறுப்பு அவளிடம் ஒப்படைத்தார் இளையமான்.

  காரை பார்க்கிங் செய்தவன் அவளோடு நடந்தான்.

   "எதுக்கு அடிக்கடி என்னை லுக் விடற?" என்று வரவேற்பு கூல்டிரிங்ஸை எடுத்து நீட்டினாள்.

    "ரிசப்ஷனுக்கு லெகங்கா, சேரி இதெல்லாம் கட்டலையானு பார்த்தேன். முழுகவுன் போட்டுட்டு ஐந்து வயசு பாப்பா மாதிரி சுத்தற?" என்றான் அவன்.

   "என்ன பார்த்தா ஐந்து வயசு பாப்பாவா தோனுதா?" என்று இடையில் கைவைத்து கேட்டாள்.

   அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்து பெருமூச்சுவிட்டு "இல்லை... அட்த சேம் சேரி, லெகங்கா கட்டியிருக்கலாம்." என்று லேசான வருத்தம் காட்டி வந்தான்.

    "எனக்கு ஏழு வயசு ஆகும் போதே எங்கம்மா அப்பா லேப்ல எரிந்து இறந்துட்டாங்க. இளையமான் தாத்தா மட்டும் தான். யார் எனக்கு சேலை கட்டி விடுவா. சேலை கட்டவும் தெரியாது. நாளைக்கு லெகங்கா தான் எடுத்து வச்சிருக்கேன்." என்று தகவல் கூறி மேகமலையில் தன்னோடு பழகியவர்கள் நலம் விசாரிக்க, அதற்கு பதில் அளித்து ஹரிஷை அறிமுகப்படுத்தினாள்.

    யாரும் நேரிடையாக காதலர்களா? என்று கேட்கவில்லை. தலை மறையவும் 'லவ் பண்ணறாளா?' என்று கிசுகிசுக்க அதற்கு மறுக்கவில்லை.

  ஹாசினி தான் நீண்ட நாட்கள் கழித்து யாஷிதாவை நேரில் சந்திக்க கட்டிபிடித்து மேடையிலேயே கண் கலங்கினாள்.

  ஷ்யாமோ, "உங்களை காணோம்னு ஒரே புலம்பல். நீங்க வருவீங்களோ மாட்டிங்களானு. நீங்க போன் பேசியதும் தான் சந்தோஷமா இருந்தா. அதுவரை கல்யாணத்துக்கு நகை புடவை எது எடுக்க போனாலும் இன்ட்ரஸ்ட் இல்லாம வந்தா. நான் கூட ரொம்ப பயந்துட்டேன்." என்று தன்னவள் மனநிலையை விளக்கினான்.

   "இட்ஸ் ஓகே ஹாசினி. ஐ அம் ஃபைன் நௌவ், லுக் அட் மீ." என்றவள் அணைத்து தட்டி கொடுத்தாள்.

   ஹாசினி தோழியை நேரில் கண்டதும் பேச்சு வரவில்லை. அழுகையோடு அன்பை வெளிப்படுத்தினாள்.

   "மேக்கப் செய்ய நாலாயிரம் ஐந்தாயிரம் செலவு பண்ணிருப்பிங்க. இப்ப அழுது அது டோட்டல் வேஸ்டாகப் போகுது. கண்ணை துடைங்க" என்று ஹரிஷ் கூறவும் ஹாசினியோ "தேங்க்யூ சோ மச் ஹரிஷ்" என்று கை குலுக்கினாள்.

  மேடையில் போட்டோ க்ளிக் முடித்து தாத்தாவோடும் புகைப்படங்கள் எடுத்து, அதிக நேரம் மேடையில் பேச முடியாதென உரைத்து கீழே வந்தனர்.
    ஃபப்பே உணவு முறையில் தட்டை கையில் ஏந்தி ஸ்பூனால் சுவைத்தனர்.

  தாத்தா இருவரும் சூடான பயர் எரிக்கும் இடத்திற்கு அருகே சென்று உணவருந்த, அதனால் காதலிக்கின்றனரென  மற்றவர் நினைக்கும் இருவர் மட்டும் தனியாக அமர்ந்தனர். "மண்டே ஈவினிங் கிளம்பறியா?" என்று பேசவும், "இல்லை மண்டே நைட் பிளைட்" என்று கோபி மஞ்சூரியனை அதக்கி கொண்டு பதில் தந்தாள்.

    "ஓ... அப்பறம் எப்ப வருவ?" என்று கேட்டான். எந்த உரிமையில் கேட்டானென்று அவனே அறியவில்லை. ஒரு ப்லோவில் கேள்வி பிறக்க கேட்டுவிட்டான்.

    "தெரியலை." என்றவள் நெடுநேரம் சாப்பிட்டு முடித்தும் கையில் வெறும் தட்டை ஏந்தி ஹரிஷை ஏக்கமாய் பார்த்தாள். இருவர் மனதிலும் ஆட்டி படைக்கும் காதல் சாத்தான் எப்பொழுது வெளிவருமென்று இதயத்திலிருந்து இமைகள் வழியே எட்டி பார்த்து காத்திருந்தது.

  -தொடரும்.

பிரவீணா தங்கராஜ்






பஞ்ச தந்திரம் -18 (முடிவுற்றது)

 பஞ்ச தந்திரம்-18   திரிஷ்யா இரண்டு நாளுக்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்டாள்.    மஞ்சரியாக எதையும் கேட்கவில்லை ஏன் அப்படியொரு விஷயம் கூறி அவகா...