இடுகைகள்

மர்ம நாவல் நானடா-23 (முடிவுற்றது)

  அத்தியாயம்-23    யாஷிதா அவனின் முனங்கல் கேட்டு மாடி ஹாலில் நடந்தவள் திரும்ப, வேகமாய் வந்தவன் அவளை இடித்து, அணைத்து உருண்டப் பின்னே சுதாரித்தான்.    அவள் மீது தன் தேகத்தை மொத்தமாய் சரித்திருந்தான். அந்த களோபரத்திலும் அவள் தலைக்கு முட்டுக்கொடுத்து அவள் சிரத்தை தாங்கியிருந்தது வலது கை. இடது கையோ அவளது இடையை வளைத்திருந்தது.   அவளோ சுற்றம் மறந்திருக்க, ஹரிஷின் கணம் தாளாமல் எழ முயன்றாள். ஹரிஷே வேகமாய் பதறிவிட்டு எழுந்திட, இருவருக்கும் மூச்சு வாங்கியது.    "நான் என்ன இன்னும் இன்விசிபிளாவா இருக்கேன்." என்று யாஷிதா கேட்க, "இ.. இ..ல்லை என்று தலையாட்டவும் அவனது முகமாறுதல் அவளுக்குள் ரசிப்பை ஏற்படுத்த, அளவிடாத காதலை நெஞ்சில் எடுத்துரைத்தது.    இதற்கு மேல் மனக்கடலில் காதல், கடலணை  உடையவும், யாஷிதா அவன் காலரை பற்றி இழுத்து, அலமாரி கதவை திறந்து, உள்ளே நுழைந்து சாற்றினாள்.      "உன்கிட்ட நிறைய பேசணும். என்னால இதுக்கு மேல மறைக்க முடியலை.     ஏதாவது கிறுக்குதனமா பேசிட்டு பிறகு நீ பின்வாங்கிட்டா? அதனால கேட்கவே தயக்கமாயிருக்கு. ஆனா கேட்காமலும் இங்கிருந்து போக முடியலை. நானும் இந்த பேச

மர்ம நாவல் நானடா-22

  அத்தியாயம்-22    தன்னை விழுங்கும் பார்வையை வீசும் யாஷிதாவிடமிருந்து தட்டை வாங்கியவன் பிளேட் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு "ஏன் போகணும்...? ஏன் ரிட்டர்ன் வர்ற டேஸ் தெரியலை? " என்று புரியாமல் கேட்டான்.    "நான் இன்விசிபிளா போவதற்கு முன்னாடியே ஒரு சிக்ஸ் மந்த கோர்ஸுக்கு ஆன்லைன்ல அப்ளை பண்ணி பீஸ் கட்டிட்டேன்.       தாத்தா சொத்து விற்று பணத்தை போடணும்னு சொன்னாரே தவிர நீங்க வாங்கிய வீட்டை நான் கண்ணால பார்த்ததே இல்லை. அதனால தான் அது யார் வீடுனு கூட தெரியாம சுத்தினேன். இங்க வந்த முதல் நாளே பத்திரத்துல கையெழுத்து போட்டு கொடுத்துட்டேன். தாத்தா தான் வீட்டை விற்காம இழுத்துட்டு இருந்தார். குயிக்கா விற்றுட்டா நான் கொலம்பியா போயிடுவேன்னு வேண்டுமின்னே தாமதப்படுத்தினார். அதோட நான் அவரை புரிஞ்சிட்டு அவர் காட்டுற மேரேஜிக்கு ஓகே சொல்வேன்னும் நினைச்சார். பட் நான் அவரிடம் பேசக்கூட மாட்டேன்.   எப்படியும் சொத்து விற்று பணத்தை போட்டுடுவார்னு அங்க படிப்புக்கு அப்ளை பண்ணியது. போகலைனா பீஸ் கட்டிய பணம் வேஸ்டா போயிடும். அதோட எனக்கு கொஞ்சம் பிரேக் தேவைப்படுது." என்று அவனை ஏறிட்டாள். மொத்தமும்

மர்ம நாவல் நானடா-21

   அத்தியாயம்-21    கல்யாணம் பண்ணிக்க போறியா என்பது போல இளையமான் பார்க்க, "ஹாசினி மேரேஜிக்கு நாம அங்க வருவோம்னு சொல்லிருக்கேன் தாத்தா. போகலைனா ஏதோ நமக்கு இக்கட்டுல அவ ஹெல்ப் செய்யலைனு நாம அவாய்ட் பண்ணறோம்னு அந்த அங்கிள் மனசு பீல் பண்ணலாம்.   இன்னும் நெக்ஸ்ட் சாட்டர் டே தானே மேரேஜ் அது முடியவும் கொலம்பியா கிளம்பறேன் தாத்தா." என்று உரைத்துவிட்டு மாடிக்கு உறங்க சென்றிருந்தாள்.    ஹரிஷோ 'நல்ல வேளை நானா எதுவும் கேட்டு என் மானத்தை விற்கலை.' என்று கூறிக்கொண்டான். ஆனால் உள்ளமெல்லாம் 'இப்படியொருத்தி என் லைப்ல எண்ட்ரி ஆகியிருக்கலாம்.' என்று வருத்தமும் கொண்டது.   இளையமானுக்கோ இதுவரை இங்கேயிருந்த கணம் ஹரிஷோடு சுற்றியதில் அவன் குணம் அறிந்து திருமணத்திற்கு சம்மதிப்பாளென நினைத்தார். ஆனால் கனவு அனைத்தும் பூஜ்ஜியமானது.    ஏதோ பேத்தி இந்தளவு சுமூகமாக பேசுகின்றாளென்ற வரை சந்தோஷமே.     திங்கள் வரவும் பணிக்கு முதல்நாள் கிளம்ப தயாரானான்.    யாஷிதா அவனுக்கு "ஆல்தி பெஸ்ட் ஹரிஷ்" என்றாள்.    "தேங்க்யூ" என்றவன் சாப்பிட்டு அன்னையின் கையால் விபூதி நெற்றியில் குடிப்புக

மர்ம நாவல் நானடா-20

  அத்தியாயம்-20     யாஷிதாவோ ஆரனின் கேள்வியில் வாயடைத்து போனாள்.   "டேய் என்ன பேசற? யார் இப்படி பேசியது. உங்க ஹரிஷ் சித்தப்பாவா?" என்று யாஷிதா ஆரன் அளவிற்கு முட்டி போட்டு கேட்டாள்.    "இல்லை எங்க காஞ்சனா பாட்டி தனஞ்செயன் தாத்தாவிடம் 'ஹரிஷும் அந்த பிள்ளையும் காதலர்களானு ஊரே டிவியால  பேசறாங்க.   உங்கப்பா அவர் பிரெண்ட்ஸும் முன்ன நாலு மாசம் முன்ன பேசிய பேச்சு. இப்ப இவங்க காதலிக்கறாங்களானு வதந்தி வரவும் ஏதாவது நல்லது நடக்குமானு பார்த்தா மாமா ஒரு வார்த்தையும் பேசமாட்டேங்கிறார்.   இளையமான் சாரும் எதுவும் மேற்கொண்டு பேசலை. நம்ம பிள்ளைக்கு என்னங்க குறைச்சல்? கட்டி வைக்க கேளுங்களேன்.' குடைச்சல் தந்தாங்க.     தாத்தா 'சும்மாயிருடி ஒரு தடவை பேச்சு வந்து நின்னுடுச்சு. திரும்பவும் இந்த சூழ்நிலையில எப்படி கேட்க?    யாருக்கு யாருனு தலையில எழுதியிருக்கோ அதுபடி நடக்கும். உன் வேலையை பாரு. அந்த பிள்ளையிடம் எதுவும் கேட்காதே. வெளிநாட்டுல வாழ்ந்தப் பொண்ணு, கைப்பிடிச்சதுக்கே காதலா? என்னயிது சில்லிதனமா யோசிக்கறாங்கனு நினைச்சிக்க போகுது'னு சொல்லிடார்.    எங்கப்பா சித்தப்பாவிடம் கேட