உறவாக வருவாயா
உறவாக வருவாயா அது பிரபலமான மருத்துவமனை சௌம்யா அங்கே அமர்ந்திருந்தாள். அங்கே அவளது பெயரை உச்சரித்து வென்னிற ஆடை அணிந்த செவிலி அழைக்க, தனது வெறுமைக் கொண்ட பார்வையை தரையிலிருந்து எடுத்து பார்த்து எழுந்தாள். "சௌம்யா நீங்களா?" என்றதற்கு "ம்.." என்று தலை அசைத்து அங்கிருந்த அறைக்குச் சென்றாள். அங்கிருந்த அறையில் கண்ணாடி அணிந்து மருத்துவ உடையணிந்த பெண் மருத்துவர், '' உங்க ரிப்போர்ட் வந்துடுச்சு சௌம்யா உங்களுக்கு .... '' என ஆரம்பித்து பேசிக் கொண்டே போக அந்த பதில் அவள் இதற்கு முன் சென்ற மருத்துவமனையின் பதிலையே கூறினர். அதனால் சுவாரஸ்யமின்றி இருந்தாள். இருதுளி கண்ணீர் வர அதை துடைத்துக் கொண்டு ரிப்போர்ட் பெற்றுக் கொண்டு எழுந்தாள் . ஏற்கனவே பணம் செலுத்தியதால் நேராக தனக்காக வெளியே காத்திருக்கும் கணவனிடம் காரில் ஏறி அமர்ந்தாள். ''நான் தான் ஹாஸ்பிட்டலே வேண்டாம் என்றேனே . நீ தான் கேட்க மாற்ற சௌம்யா'' ''ப்ளீஸ் கௌதம் பக்கத்