Posts

Showing posts with the label தித்திக்கும் நினைவுகள்

தித்திக்கும் நினைவுகள்-18 (முடிவுற்றது)

Image
  அத்தியாயம்-18 ஞாயிறு வர காரில் ஜோதி வேதா இருவருமே பேசியபடி வந்துகொண்டு இருந்தார்கள். எந்த பிரச்னையும் இல்லாமல் போய் வரணும் கடவுளே என்று வேண்டி கொண்டு ஓட்டினான். வீட்டில் நுழைந்ததும் '' என்னம்மா மண்டபம் பிடிக்கலயா ?'' என்றான். '' இல்லை கௌதம் அவங்க வீட்ல இன்னும் சில நெருங்கிய உறவுக்காரர்கள் முறிக்கிட்டு இருக்காங்களாம் அதனால் சிம்பிளா இருக்கட்டும் என்று வீட்டில் வச்சிகிட்டோம் '' என்றாள் சியாமளா. '' எத்தனை மணிக்கு விழா ?'' '' பதினோரு மணிக்கு இப்பதானே மணி எட்டு ஆகுது '' என்றதும் மாடிக்கு சென்றான். சனா வந்துவிட்டாளா ? இல்லையா ? என்று பரிதவித்தான். ஒரு வேலை தாமரை அத்தை நான் கண்டிப்பா வருவேன்னு சனாவை வராமல் செய்து விட்டார்களா ? '' எனக்கு ஒரு கைக்கு மருதாணி போதும் ஜோதி '' என்ற சனா குரல் கேட்க வேகமாக ஜன்னலில் சென்று எட்டி பார்க்க அவனுக்கு முகம் தெரியவில்லை ஆனால் அது தனது சனா என்று புரிந்தது. '' ஐயோ அண்ணி இரண்டு கைலயும் மருதாணி வைத்தால் தான் நல்லா இருக்கும் '' என்று வற்புறுத்தி மற்றொரு