கோடிட்டு காட்டினேன் நீ இரு உயிரென மேடிட்ட வயிறை தடவியே நாமொருயிர் என்றாய்...! உண்ணாமல் தவிர்த்தாய் ஒவ்வாது என்றதும் உலகமே நானாக மாறித்தான் போனாய்... ! மரணவலி கொடுத்து நான் வந்தாலும் மகிழ்ச்சியோடு வரவேற்றாய் குதூகலத்தோடு பாகாய் உருக செய்யும் அன்பை பாரினில் வேறு யார் தருவார் ? ஏக்கம் நிறைந்த பார்வை நான் காண எட்டாத உயரமென்றாலும் வாங்கி தருவாய்...! உண்ணும் உணவு ஒரு பிடி என்றாலும் உன்னை மறந்தே எனக்களிப்பாய்...! உன் தியாகமும் , பாசம் கலந்த தவிப்பும் உறைவிடமாக இருப்பேன் எந்நாளும் உயிர்த்திசையாக இருப்பவளே... ! உயிராய் என்னை சுமந்தவளே ...! -- பிரவீணா தங்கராஜ் * அம்மையார் ஹைநூன்பீவி நினைவு பரிசுப்போட்டிக்கு எழுதியது . ...