Posts

Showing posts with the label நீ என் முதல் காதல் -28

நீ என் முதல் காதல் -28

 அத்தியாயம்-28    வீட்டிற்குள் நுழையும் போது யுகேந்திரன் வேகமாய் வந்து அணைத்து கொண்டார்.     ஷண்மதியோ கையை கட்டிக்கொண்டு கூர்பார்வையை வீசிட, ம்ருத்யு கண்கள் ஸ்ரீநிதியை தேடியது.     "ரூம் உள்ளயிருக்கா இன்னும் அவளுக்கு டயர்ட் இருக்கு." என்று ஷண்மதி உரைக்கவும் ம்ருத்யுவிற்கு அப்பாடா என்றிருந்தது.     ம்ருத்யுவாக வாய் திறப்பது தற்போது அதிசயமென புரிந்து, "ஒரு விஷயம் ரகசியமா இருக்கற வரை தான் அதுக்கு மதிப்பு. எங்களுக்கு தெரிந்தது யாருக்கும் தெரியக்கூடாதுனு நினைச்சது. என் முட்டாள்தனம் என் மகள் ஸ்கூல்ல லேப் எரியுதுனு சொன்னதும் ஓடிவந்தேன். அன்னைக்கு இரண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி லேப் போகணும் எனக்கு ம்ருத்யு ஆன்சர் சொல்வான்னு ஸ்ரீநிதி பேசிட்டு இருந்தா. அதோட பாவனா இரண்டு பேரும் இன்னும் வெளிவரலை ஆன்ட்டினு மூச்சு வாங்க நெஞ்சுல கை வச்சி இரும்பிட்டு வந்தா. நெஞ்சுல கை வைக்கவும் சட்டுனு எனக்கு உன் நினைவு தான். சின்ன வயசுல பிறந்தப்பவே இதயப் பிரச்சனை இருந்ததால உனக்கு ஏதாவது ஆகிடுமானு தான் பயந்தேன்.     என் பொண்ணு எப்படியும் சாமர்த்தியமா நடந்துப்பானு நம்பினேன்." என்றதும் ஸ்ரீநிதி அறைக்கு