தீவிகை அவள்🪔 வரையனல் அவன்🔥-10

 



தீவிகை அவள்🪔வரையனல் அவன்🔥-10    

      சம்யு வரும் பொழுதே ஜார்ஜ் சுபாஷும் வழி மறித்தனர்.

    "ஏம்மா தங்கச்சி அன்னிக்கு ரிப்ளை பண்ணலை சொன்ன. இப்ப சீனியர் ஆரவ் காதலி சொல்லறியாமே. பையன் நிஜமாவே விரும்பறானா." என்று கேட்க சம்யுவோ

     "நீங்க நம்பினா ஆமா அண்ணா. நம்பலைனா இல்லைண்ணா." என்று சிரிக்க,

    "நல்லா இருந்தா சரி." என்று கிளம்பினார்கள்.

      யோகிதா தான் "ம்ம்... சம்யு காலேஜ்ல வந்து ஆறு மாதத்தில் இந்தளவு பாப்புலர் ஆகிட்ட. என்ன ஒரு குறை நீயும் அண்ணாவும் நேரில் பேசியோ அறிமுகப்படுத்தியோ செய்யாமா எஸ்கேப் ஆகற" என்று கிண்டல் செய்ய புன்னகை பூத்தவள் அப்படியே உறைந்து போனாள்.

    ஆரவ் கண்கள் ரௌவுத்திரமாக திவேஷ் சட்டையை உலுக்கி கொண்டுயிருந்த காட்சியை கண்டு.

      ஆரவ் இருந்த இடம் நோக்கி ஓடிட, "யாரிடம் காதல் டயலாக் விட்ட..." என்று ஒரு குத்து விட்டான். ஓட்டு மொத்த சினத்தை காட்டி விட, தடுக்க கூட அஞ்சி நின்றாள் சம்யுக்தா.

     சம்யுக்தாவை பார்த்த பின் திரும்பியவன், "இதோட உன் வேலையை நிறுத்திடு... இந்த சிண்டு முடித்து சண்டையை மூட்டற வேலையை பார்த்த, முகத்தில் மார்க் தான் விழும்" என்று தள்ளி செல்ல "ஆரு..." என்று சத்தமின்றி அழைக்க, யுக்தாவை புருவம் சுருக்கி பார்த்த ஆரவ் தன் சினத்தை தணிக்க இயலாது அவளை பார்க்காது விலகி போனான்.

      யோகிதா ஆரவை கண்டு, " என்ன சம்யு இது அண்ணா இப்படி கோபமா இருக்கார். அவரை கண்ட்ரோல் பண்ண மாட்டியா." என்று கேட்க

    "யோகி.. நாங்க பிராப்பரா ஐ லவ் யூ கூட சொல்லிக்கலை. பட் ஐ லவ் ஆரவ். ஆரவும் என்னை விரும்பறார்.
   ஆனா அவரோட இயல்பை விமர்சனம் பண்ணற அளவுக்கு நான் பேசியதில்லை. இப்ப கோபத்தை பார்த்தா எனக்கும் பயமா இருக்கு." என்று கூறவும் பின்னால் இருந்த சந்துரு,

     "பயப்படாதே சம்யு. ஆரவும் விரும்பறான். அதோட பாதிப்பு தான் இது. அந்த திவேஷ் உன்னை விரும்புவதா சொன்னானா... அதான் அது ஆரவுக்கு தெரிஞ்சது. இவனிடம் கேட்காம அவன் பாட்டுக்கு இருந்தான். திவேஷ் சும்மா இல்லாம நீ சீனியரை விரும்பற அவன் விரும்பலை. நீ சீன் போடற... இதே விரும்பிய பெண்ணிடம் காதலை சொன்னேன். சுரனையே இல்லாம இருக்கான்னு காது பட பேசிட்டான். இவன் சும்மாவே கை நீட்டுவான். அதிலும் நீ என்னவோ விநோதமா விசித்திரமோ விடுவானா. அதான் துவைச்சிட்டான். நீ வேற திவேஷ் உன்னிடம் பிரப்போஸ் பண்ணியதை சொல்லலையா? இரட்டிப்பு கோபமா இருந்தா இப்படி தான் பார்வையில் பொசுக்கிடுவான்." என்று நண்பன் புகழை விரிவுரையாற்ற,

     "அண்ணா கோபமா இருக்கார் ஆனா நான் அவரிடம் இதுவரை ஒரு முறை கூட விரிவா பேசியதில்லை. போனிலும் கூட. நாலைந்து முறை மெஸேஜ் பண்ணியிருக்கேன். அவர் விரும்பறார் என்றதே என்னால இன்னமும் நம்ப முடியலை. நான் தான் வந்த நாள்ல இருந்து விரும்பறேன். பேசினா தானே அவரின் குணத்தை புரிந்து அவரிடம் பக்குவமா திவேஷ் விஷயத்தை சொல்வேன். பேசாம இருக்க திவேஷ்  பிரச்சனையை சொல்ல பயந்து நானே மறைத்தேன்." என்று பேச சந்துரு தான்

     "எப்படிமா பேசுவான். நீ இப்ப தான் பஸ்ட் இயர் ஏதாவது பேசி மனதில் படிப்பில் ஆர்வம் குறைந்தா அவனோட மனசு குத்துமே. படிக்கற வயது படிப்பில் தானே முதல்ல ஆர்வம் இருக்கணும். அதுவும் இல்லாம அவன் தான் அவனோட குடும்பத்தை தாங்கணும். தங்கைக்கு திருமணம் பண்ணணும். ஆன்டி வேலை இப்ப தற்காலிகமா போயிடுச்சு. இன்னும் இரண்டு வருடம் படிப்பில் கவனம் இருந்தா தானே நல்ல வேலை கிடைக்கும். உன்னை மாதிரி ஒரு பெண் விரும்பும் போது நல்ல வேலை வேண்டுமே." என்று கூறவும்

     "ஏன் அண்ணா அவருக்கு அப்பா இல்லையா? தங்கை இருக்காங்களா?" என்று கேட்க சந்துரு சிரித்து

     "என்னமா நீ... அவன் உன்னை பற்றி எல்லாம் தெரிந்து இருக்கான். நீ என்னடா என்றால் அவனுக்கு அப்பா இல்லையா கேட்கற? அவனை பற்றி என்ன தான் தெரியும்?" என்று கேட்டதும் சம்யுக்தா தலை குனிந்தாள்.

      "சம்யு... அவனிடம் பேசு." என்று நகர நேரம் போனதும் யோகிதா கூப்பிட்டும் அசையாது அதே இடத்தில் இருந்தாள்.

    ஒரு மணி நேரம் போக அவ்விடம் நோக்கி வந்த ஆரவ் சுற்றிமுற்றி பார்த்து, "பைத்தியமா டி உனக்கு... ஒரு மணி நேரமா நின்றுட்டு இருக்க. என்ன பிரச்சனை?" என்றான்.

     "நான் ஒரு மணி நேரம் இருக்கேனு தெரியுது ஆனா என்ன ஏதுன்னு மெஸேஜ்ல கேட்டிங்களா....? ஒரு போன்...? நான் நிற்பது பீல் பண்ணறது எல்லாம் தெரியுது. ஆனா உங்களை பற்றி ஒன்றும் தெரியலை. பேசாம இருந்தா என்ன அர்த்தம். படிப்பு எல்லாம் ஒழுங்கா படிப்பேன். என்னிடம் பேசுங்க ஆரு" என்று கத்த போன் மணி கலைத்தது.

  அலைப்பேசியை பார்க்க அதில் ஆரு என்று இருக்க, தன் பக்கத்தில் எல்லாம் சுற்றிமுற்றி பார்த்தாள். கனவாக தோன்ற போனை வேகமாக எடுத்து காதில் வைத்தாள்.

     "நின்றுட்டே தூங்கற? கிளாஸ்கு போற வழியை பாரு" என்று ஆரவ் அதட்ட, "ஆரு" என்றவாறு அவனின் வகுப்பறை பார்க்க போனை கத்தரித்தான்.

    கையில் வகுப்பை காட்டி போயென்று சொல்ல பயத்தில் தலை தானாக இசைந்து அகன்றாள்.

       அவரிடம் பேசணும் அவரை பற்றி தெரிந்துக்கணும். வெறும் அதிர்வலையில் சிக்கி தவித்து இருக்கேன். ஆரவிடம் பேசாம என்னால எப்படி அவரின் பேச்சுக்கு கட்டுப்படறேன். மனதிலே சுழன்றவளாக வகுப்பறையை நோக்கி சென்றாள்.

       மாலை ஆரவிடம் பேச பைக் எடுக்கும் இடம் வந்து நிற்க, ஆரவோ பைக்கை எடுத்தவன் அவளை காணாதது போல செல்ல, சந்துரு காதருகே "டேய் சம்யு நிற்கறா டா" என்றதற்கு அவளருகே வந்தான்.

     "இங்க உன் கார் வருமா. காலேஜ் முடிஞ்சது தானே வீட்டுக்கு போ" என்று கூறி செல்லவும் சம்யு பேச வந்தவள் அப்படியே திரும்பி திரும்பி சென்றாள்.

     இரவு எட்டு மணிக்கு ஆரவ் போன் செய்தான்.

     எடுக்கவா வேண்டாமா என்றே யோசனையில் இருந்தவள் அவன் அழைப்பு மணி முடியவும் துடித்து போனாள்.

     மீண்டும் அவளாக முயற்சி எடுக்க முனைய அவனாகவே மீண்டும் அழைத்தான். 

     போனுக்கு வலிக்குமோ என்று எடுக்க அந்தப்பக்கம் "என்ன பற்றி எதுவும் சொல்லலை. எதுக்கு பேசணும்னு போனை எடுக்கலையா.  சொல்லு யுக்தா" என்று கேட்க

    "ஆரு அப்படியில்லை... சந்துரு அண்ணா சொன்ன பிறகு தான் உனக்கு அப்பா இல்லை என்பதே தெரியும். உன்னோட இன்பம் துன்பம் கூட தெரியாது இருக்கேன். எனக்கு ஒரு மாதிரி இருக்கு" என்று கண்ணீர் உகுத்திட,

     "யுக்தா... ஏய்... அழுவுறியா...? இங்க பாரு டி. எதுவும் சொல்லாதது நான். நான் சொன்னா தானே உனக்கு என்னை பற்றி தெரியும். நான் தான் உன் படிப்பை டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு இருந்தேன். எங்கப்பா நான் பிளஸ் டூ படிக்கிறச்ச இறந்துட்டார். அம்மா நர்ஸ் சூப்பர் சேலரினு பொய் சொல்ல மாட்டேன். நான் தங்கை இரண்டு பேரை வளர்க்க அது போதுமானதா இருந்தது. வாடகை மளிகை அது இது என்று மாத சம்பளம் எதிர்பார்த்து தான் வாழ்ந்தோம். இப்ப என்னோட பங்கு நான் உழைக்கிறேன்.

     உன்னை மாதிரி பார்ன் வித் சில்வர் ஸ்பூன் இல்லை. ஆனா நமக்கு வரபோகின்ற குழந்தையை உன் அளவுக்கு பார்த்துக்கணும் என்ற வேகம் இருக்கு. அதுக்கு தான் சிரத்தையோட படிக்கிறேன். சாதரணமா காதலித்தவளை ராணியா வைத்துக்கணும்னு பேச்சுக்கு சொல்வாங்க. நான் விரும்பறவ நிஜமாவே இளவரசி. அவளை ராணியா தங்கதட்டில் தாங்கலைனாலும் வெள்ளி தட்டில் தாங்கணுமே" என்று பேச பேச

     "ஆரு நீ ஒன்றும் தங்கம் வெள்ளி தட்டில் தாங்க வேண்டாம். உன் திண்ம தோளில் சாய்ந்து என்னை உறங்க வை. அது போதும்... நான் உன்னோட வாழ்ந்தாலே போதும். பணம் பொருள் பகட்டு நான் எதிர்பார்க்கலை." என்றவள் பேச

      "யுக்தா... நீ என்னிடம் எதையும் எதிர்பார்க்க மாட்ட மா. ஆனா நான் செய்யணும். அப்ப தான் எனக்கு திருப்தி." என்றான் ஆரவ்.

    "அத்தை எங்க வேலை பார்க்கறாங்க? என் நாத்தனார் பெயர் என்ன? அதை சொல்லுங்க" என்று சம்யு சிணுங்க ஆரவ் சிரித்தவன்

     "நந்தவனம் ஹாஸ்பிடல்ல நர்ஸ். தங்கை பெயர் வைஷ்ணவி. அவள் பிளஸ் டூ முடித்து நர்ஸ் படிப்புக்கு போறா. ஒரு வருட கோர்ஸ்." என்றான்.

      "ஆரு நம்ம வீடு எங்க இருக்கு?" என்றதும்,

    "வீடு பார்த்துட்டு இருக்கேன் மா. என்னனு தெரியலை. ஓனர் வீட்டை காலி பண்ண சொல்லிட்டாங்க. சரியான காரணம் சொல்லலை. அம்மா வேலை பார்க்கிற இடத்துலயும் என்னவோ புகார் வந்து கொஞ்ச நாள் வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லியிருக்காங்க. நான் ஈவினிங் நின்று பேசாததற்கு காரணம் நான் பார்ட் டைம் ஜாப் போறேன் யுக்தா. அதான் நேரம் தாமதமாக கூடாதுனு கிளம்பினேன். உன்னிடம் நின்று பேசிடலை."

     "நீங்க மற்ற நேரத்திலும் பேச மாட்டிங்க. " என்று வாடிய பதிலாய் தரவும்.

     "நான் பேசிட்டு தான் இருக்கேன். மனதோடு... உனக்கு தான் என் இதயப்பேச்சு புரியுதே இதுல தனியா வேற பேசணுமா? யுக்தா... வேற எதுவும் தெரியணுமா... பேசணுமா?" என்று கேட்டதும்

     "பேசிட்டே இருக்கணும் ஆரு உன்னிடம்"

      "யாரு நீ யா. நான் ஒரு அடி முன்ன எடுத்து வந்தா. இரண்டடி பின்னாடி நகருற. அப்படி என்ன பயம்." என்றான்.

       "அது..." என்று இழுக்க,

       "நோ பிராப்ளம்... சாப்பிட்டியா தூங்கு." என்று வைக்க "ஆரு... அது" என்று ஆரம்பிக்க அதற்குள் சுவாமிநாதன் வரவும் போனை வைத்தாள்.
 
       சுவாமிநாதன் உள்ளே வந்தவர் மகளின் திருட்டு தனம் அறியாமல் இல்லை. இருந்தும் மகள் செல்லும் தூரம் எதுவரை என்ற எண்ணத்தில் விட்டு பிடித்தார்.

     "சாப்பிட்டியா சம்யு" என்று கேட்கவும்

    "சாப்பிட்டேன் பா" என்று சிரிக்க

     "படிப்பு எல்லாம் எப்படி போகுது மா"

      "மச் பெட்டர் பா. பா தூக்கம் வருது" என்று சிணுங்க சுவாமிநாதன் மகள் உறங்க போர்வை போற்றி விட்டார். 

    சுவாமிநாதன் நகர்ந்ததும் போர்வை விளக்கி ஆரவ் வாட்சப் புகைப்படத்தை கேலரியில் டவுன்லோட்டை பார்த்து வெட்கம் கொள்ள சுவாமிநாதனுக்கு வயிறு பற்றி கொண்டது.

      ஆரவை இன்னமும் வேறு விதமாக சூழ்நிலை கைதியாக மாற்றி பிரிக்க யோசிக்க ஆரம்பித்தார்.

     ஆரவ் தன்னவளோடு பேசிவிட்டு மூச்சை ஆழ்ந்து இழுத்து விட்டவன். யுக்தா உன்னோட எப்படி எல்லாம் வாழணும்னு ஆசைப்படறேன் தெரியுமா...? என்றவன் மனம் இதமாக உணர யுக்தாவின் எண்ணங்கள் வர அதே நேரம் அந்த அலைப்பேசியின் அழைப்பு மணியும் வந்தது. 

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

-பிரவீணா தங்கராஜ்


   

   

    

    

தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥-9

தீவிகை அவள்🪔வரையனல் அவன்🔥-9


     சம்யுக்தா மனம் ஆரவினை பார்க்க சொல்ல அவனோ தன் வகுப்பறை மட்டுமே குறியாய் சென்றான்.

     இது அன்று மட்டும் நிகழவில்லை. ஒரு மாதக் காலம் இப்படி தான் நகர்ந்தது.
  
    ஆரவ் வரும் நேரத்திற்குள் தானாக வந்து தவம் கிடக்கும் தாரகையாக இருந்தாள் ஆரவ். ஆரவ் கேன்டீனில் எந்த இடத்தில் அமருவான். மாலையில் எந்த மரத்தின் திக்கில் நிற்பான். அவனின் உற்ற நண்பன் யார். எப்படிப்பட்ட பையன். இப்படி எல்லாவற்றிலும் ஒரு ஆவல் எழ அனைத்தும் அறிந்தாள்.

    அவனுக்கு இதுவரை காதலி என்றவள் இல்லையென்பது வரை அறிந்து இருப்பினும் ஆரவோடு பேச பழக தயக்கமிருக்க அதற்கான காலநேரத்திற்கு காத்திருந்தாள்.

     அன்று கேண்டீனில் எப்பொழுதும் போல வந்தவள் பார்வை ஆரவை காண தோழிகளோ அவளை அறியாது கேண்டீனில் ஆர்டர் கொடுத்து விட்டு சாப்பிட்டனர். கடைசியாக பில் மொத்தமாக வர அதை சம்யுக்தாவிடம் தள்ளி விட்டு ஓட முயல, யோகிதாவை பிடித்தவள்

   "யோகி நான் இன்னிக்கு பார்த்து பர்ஸ் எடுத்துட்டு வரலை டி" என்று சொல்ல ஆரவ் திரும்பி பார்க்க, சம்யுக்தா அவனை கண்டு யோகிதாவை பார்த்து வைக்க, யோகிதாவோ,

    "அதான் உன் ஆளு இருக்கார்ல கொடுக்க சொல்லு" என்று அவளுமே நழுவ, ஆரவோ வழியில் நிற்கவும்

"கிளாஸ் டெஸ்ட்டில் சம்யுக்தா அதிக மதிப்பெண் பெற்றிருக்க அதற்காக ட்ரீட் அண்ணா... பணம் தரமாற்றா... என்னனு கேளுங்க..." என்று ஓடவும் ஆரவ் யோகிதா செல்ல வழிவிட்டவன் யுக்தாவை நோக்கி வந்தான்.

      அதே நேரம் பணத்தின் அமௌன்ட் சொல்லி கேட்க, ஆரவ் சம்யுக்தாவை கண்டுக்காமல் கொடுத்துவிட்டு நகர, சந்துரு

"டேய்... இது என்ன கணக்கு டா" என்றான் ஆரவை பார்த்து அவனோ யுக்தாவை கடக்கும் பொழுது,

"விநோத கணக்கு..." என்று ஆரவ் சொல்ல சந்துருவோ, "மச்சான்... எப்பத்திலருந்து டா... சொல்லவே இல்லை... நிஜமா வா டா... லவ் பண்ணறியா? என்று கேட்டு குதிக்க,
 
    "லவ்னு சொல்லவில்லையே..."

    "அப்ப எதுக்கு அவ கொடுக்க வேண்டிய பணத்தை நீ கொடுத்த?" என்றான் சந்துரு.

      "நான் எனக்கு தான் அங்க பே பண்ணிட்டு வந்தேன்" என்று சிரிக்க சந்துருவோ,

    "நல்லா குழப்பற..." என்று திரும்பி பார்க்க ஆரவ் போனிற்கோ, "தேங்க்ஸ்" என்று மட்டும் அனுப்பினாள் யுக்தா.

     "யுக்தா தேங்கஸ் அக்சப்ட் பண்ணணுமா?" என்று ஆரவ் அனுப்ப அவளோ உடனடியாக அனுப்பியதை delete for everyone கொடுத்து முடித்து விட்டு

"ஆருக்கு தேங்க்ஸ் வேண்டாம்னா எனக்கும் வேண்டாம் விநோத கணக்கு ஆட் பண்ணிக்கறேன். ஒன் பிளஸ் ஒன் ஈகுவள் ஒன். அப்படி தானே?" என்று அனுப்பிவிட்டு செல்லும் ஆரவை எட்டி எட்டி பார்த்து நிற்க, அவனோ ஸ்மைலி மட்டும் அனுப்பி விட்டு அவளை திரும்பி பார்த்து மென்னகையை படரவிட்டான்.

     சம்யுக்தாவோ மனம் எங்கும் மத்தாப்பு பூத்திட வகுப்புக்கு வந்தாள்.

    தோழிகளை திட்டுவாள் என்று எண்ணி இருக்க சம்யுக்தாவோ அமைதியாக சந்தோஷத்தோடு அமரவும் யோகிதா,

    "என்ன பணம் இல்லைன்னு சொன்ன... மேடம் எப்படி கொடுத்துட்டு வந்திங்க." என்று கேட்க

    "ஆரு... என் ஆரு கொடுத்தான்." என்றாள்.

     "ஏய் சம்யு... அப்போ நிஜமாவா டி. ஆரவ் சீனியர் உன்னை பார்த்ததே இல்லை அப்பறம் எப்படி?" என்றதும்

       "தெரியலை... ஆனா ஆரு அப்படி தான் சொன்னார்"

     "சீனியர் ஐ லவ் யு-னு பிரப்போஸ் பண்ணிணாரா?" வினவ

     "இல்லை... ஆனா எங்களுக்குள் விநோத கணக்கு இருக்கு." என்று மையலோடு பேச,

     "என்னடி சொல்லற ஆரவ் அண்ணா சொல்லலை.. தென் எப்படி பணத்தை கொடுத்த?"

     "ஆரு தான் பணம் கொடுத்தார்" என்று மொழிய,

     "லவ் சொல்லிக்கலை பணம் மட்டும் எப்படி கொடுத்தாராம். அய்யோ இதுக்கு உங்கூடவே இருந்து என்ன நடந்ததுனு பார்த்து இருக்கலாம்." என்று சலிக்க,

    "இனி பாரு..." என்று சொல்ல தனி உலகத்திற்கு சம்யு அடிக்கடி செல்வதை கண்டவள் தலையிலடித்து கொண்டாள்.

      வீட்டிற்கு வந்தும், "ஆரு..." என்று அனுப்ப ஆரவோ பதிலளிக்கவில்லை.

    "ஆரு... போன் பண்ணவா?" என்று கேட்க அவனோ,

     "வேண்டாம் யுக்தா. படிக்கிற வேலையை பாரு. மற்றது தானா கிடைக்கும்.

     இன்னிக்கு மாதிரி எப்பவும் டெஸ்ட் எக்ஸாம் பர்ஸ்ட்ல வா." என்று அனுப்பினான்.

     "அப்போ..."
      "நமக்குள்..."
     "அந்த"
     என்று அனுப்பியவள் காதல் என்ற வார்த்தையை விடாது கேட்க,

    "இருக்கு... அது நமக்குள் இருக்கு. அதை வெளிபடுத்தணுமா? அந்த அடைமொழியை உபயோகப்படுத்தி?" என்று கேட்டதும்

    "அதில்லை..." என்று தயங்க,

     "விநோத கணக்கு மட்டும் இல்லை. நமக்குள் விநோத பந்தம் இருக்கு. குழம்பாமல் இரு." என்று அனுப்பவும் சரி என்று பதில் அனுப்பினாள்.

    அதற்கு பிறகு நிம்மதியாய் கனவுகளோடு சம்யுக்தா மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.

        அடுத்த நாளில் கல்லூரி சென்று நின்றவள் அவன் வருகையை தேடி அவனிடம் செல்ல அவனோ அவளுக்கு முன் நின்று கல்லூரி சுவற்றில் சாய்ந்து ஒற்றை கொக்கு போல நின்றிருந்தான்.

    சம்யுக்தாவை கண்டு சிறு புன்னகை படர விடவும், தன் துப்பட்டா நுனியை முடிச்சிட்டு அவனை கண்டவள் அவள் இடம் வரவும் அவள் வகுப்பில் சலசலப்பு வர, ஆரவ்-சம்யு காதலே கிசுகிசுக்க செய்தது.

    அது பற்றிய கவலை சம்யுக்தாவிற்கு இல்லாது அதனை இரசித்தாள்.

       ஆரவின் வகுப்பறையில் மதியத்திற்கு மேல் இந்த செய்தி கசிந்து வர, அவனிடம் கேட்க அஞ்சி யாரும் கேட்கவில்லை. சந்துரு மட்டும் "டேய் உண்மை தானே..." என்று கேட்க,

     "என்ன உண்மை... படிக்கற வேலையை பாரு" என்று இழுத்து நின்றான்.

     "டேய் என்னிடம் கூட மறைக்கிற... ஆனா காலேஜ்க்கே தெரியுது. நீ... அந்த சம்யு பொண்ணு விரும்பறது" என்று கூறவும்,

     "அப்படியா..." என்று கள்வனாய் சிரிக்க சந்துரு "அது சரி" என்று நண்பனின் காதல் மனம் புரிந்தவனாய் மேலும் வினா தொடுக்கவில்லை.

     வெளிப்படையாய் காதலை பகிராது, எல்லோர் எதிரில் காதலராய் நடந்துக் கொள்ளாது இயல்பாய் கடந்து செல்லும் ஆரவ்.

     தூரத்தில் ஆரவை கண்டாலே தன் வால் தனம், குறும்புகள் மூட்டைக் கட்டி கன்னங்கள் சிவக்க செம்மையை படரவிடும் யுக்தா.

     இப்படியாகவே இருந்து கொண்டனர்.

     சிலருக்கு மட்டும் இருவரும் அப்படியல்ல என்று எண்ணியிருக்க, திவேஷ் வந்து சம்யுக்தாவிடம் காதலை சொல்ல, அவளோ முதலில் சாதரணமாக மறுக்க, திவேஷ் வேறயாரையாவது விரும்பறியா? என்ற அடுத்த கேள்வியை தொடுத்தான்.

     யோகிதா தான் "காலேஜ்கே தெரியும் உனக்கு தெரியாத?" என்று நக்கலாக கேட்க,

    "சம்யு சொன்னாளா? இல்லை தானே. சீனியரும் அப்படி தான் சொல்லலை. சம்யு சொல்லட்டும். " என்று விடாபிடியாக கேட்டு வழிமறித்தான்.

    பொறுமை கடக்க சம்யுக்தா "ஆமா நான் ஆருவை விரும்பறேன். போதுமா... யார் தடுத்தாலும் ஆரு இல்லாத வாழ்வு எனக்கு இல்லை. இதுக்கு மேல டார்ச்சர் பண்ணாதே" என்று சென்றவளை தடுக்காது தன் போனை எடுத்து,

     "என்ன சார் கேட்டீங்களா? போதுமா.... என்னவோ என் மகள் என்னை மாதிரி ஒருத்தருக்கு தரவே அப்படி யோசித்தீங்க. என்னை விட தரத்தில் கீழே இருக்கறவனை. ஒரு நர்ஸ் மகனை தான் மாப்பிள்ளையா ஏற்றுப்பீங்களோ." என்று கேட்க,

      "தகவலுக்கு நன்றி. வை போனை" என்று அந்தப் பக்கம் சம்யுக்தாவின் தந்தை சுவாமிநாதன் பொரிந்து விழுந்தார்.

     தன்னை போன முறை கம்பெனி விஷயமாக தந்தையோடு போன போது சம்யு தந்தை என்ற ஆர்வத்தில் ஒரே காலேஜ் ஒரே குரூப்  படிச்சி முடித்து திருமணம் செய்துக்க ஆசையோடு கேட்க, சுவாமிநாதனோ பணத்தின் அளவீட்டை குறித்து அவமானப்படுத்த கரம் வைத்த திவேஷ் இவர்கள் காதலை பற்ற வைத்து அத்தோடு சுவாமிநாதனையும் பதிலுக்கு அவமானப்படுத்திய நல்ல உள்ளமாக திவேஷ் கலகத்தை நடத்தி விட சம்யுக்தா-ஆரவ் காதல் அவர்கள் சொல்லாமலே கல்லாரியிலும், சுவாமிநாதனுக்கும் சொல்லியது விதி.

     இதை அறியாது சம்யு எப்பொழுதும் போல தன் வீட்டில் வழமையாக நடந்தாள்.

     சுவாமிநாதன் மகளை கவனித்து கொண்டே இரவு உணவை உண்டபடி,

     "காலேஜில் படிப்பு எப்படி போகுது சம்யு"

     "சூப்பராப்பா.... நான் தான் கிளாஸ் டெஸ்ட்ல பஸ்ட் மார்க் அப்பா" என்று சாப்பிடவும்,

      "கூட்டாளி பிள்ளைகள் அதுக்கு ட்ரீட் கேட்டு டார்ச்சர் பண்ணுவாங்களே... கொடுத்துட்டியா மா." என்று நடந்தவை அறிந்தே கேட்டார்.

     "ஆமாப்பா நான் பர்ஸ் மறந்த அன்றைக்கு பார்த்து  பிரெண்ட்ஸ் கேட்டுட்டாங்க. பட் ட்ரீட் இன்னொரு நாள் தர்றேன்னு சொன்னேன். எவளும் கேட்கலை. சாப்பிட்டு பெரிய பில்லை என் தலையில் கட்டிட்டாங்க." என்று சிலோகிக்க,

     "அப்பறம் எப்படி சம்யு பணம் தந்த?" என்றதும் திருதிருவென விழித்தவள் உடனே பொய்யாக

"யோ...யோகிதாவிடம் வாங்கி பே பண்ணிட்டேன் அப்பா" என்று உரைத்தாள்.

     "பார்த்து மா. இப்படி தான் சந்தடி சாக்கில் பணத்தை கொடுத்து அன்னகாவடி பசங்க காதல் கீதலென்று வந்து மனதை கலைப்பார்கள்." என்று நோட்டமிட்டபடி பேசவும் அச்சத்தில் வெளிறியும் தந்தையை கீழ் கண்ணால் திருட்டு முழியோடு, பயந்தாள்.

      காதல் வந்தால் கூடவே இந்த பயமும் வருவது இயல்பு அல்லவா? சாப்பாட்டை விழுங்க தவித்து வேகமாக நழவினாள்.

    மகள் தன்னிடம் பொய் உரைப்பது சுவாமிநாதனுக்கு பிடிக்கவில்லை என்றால் அவள் விரும்பும் ஆரவை என்ன செய்து அவர்கள் காதலை பிரிப்பது என்ற யோசனையில் சுவாமிநாதன் இருக்க, சம்யுக்தாவோ தன் ஆரவிடம் சொல்லவும் இயலாது தவித்து போனாள்.

   ஆரவின் வீட்டிலோ அடுத்த இரண்டு நாளில் வீடு மாற்றிட பேச்சு வர அதுவரை சுவாதினமாக நகர்ந்த ஆரவின் வாழ்வில் முதல் தேடுதலாக  வீட்டை தேடி அலைந்தான்.

    அடுத்து அது தேடி முடிய சுபாங்கினியின் நர்ஸ் வேலை அங்கே வந்த நோயாளியின் புகாரில் பணிநீக்கம் பெற்று, வீட்டில் பணவரவு தடைப்பட்டது.

     சுபாங்கினி நர்ஸ் என்பதால் அருகே இருக்கும் நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி போடவும், வீட்டு நர்ஸாக சென்று வந்திட ஒரளவு சமாளித்து நின்றார்.

     ஆரவ்விற்கு தான் முன்பு போல தங்கள் நிலைமை இல்லை எதனால் என்று யோசிக்க அவனுக்கு பிடிபடவில்லை.

    இதற்கு பின்புலமாக சுவாமி நாதன் தன் பணத்தால் நோயாளியை உருவாக்கி சுபாங்கினியிடம் சரிவர பணி புரியவில்லை என்ற புகாரை வாசித்து கொடுக்க பணத்தை பெற்று அவர்களும் நடந்தது யாருமறியாத ஒன்றாக கடந்தது.

அதே நேரம் திவேஷ் சம்யுவிடம் காதலை சொன்னது ஆரவ்விற்கு யோகிதாவால் செவி வழி வந்து சேர்ந்தது. 

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

-பிரவீணா தங்கராஜ்.

Little health problem sry last monday update podalai.

Keep supporting. Give me ur valuable comments. Thanks for reading.

 

      

     
     
   

 

   
  
     

தீவிகை அவள் வரையனல் அவன்-8

*தீவிகை அவள்🪔 வரையனல் அவன்🔥-8*


     அன்று தான் சம்யுக்தா பிபிஏ  முதலாமாண்டு சேர்ந்த முதல் நாள்.

    தயங்கி தயங்கியபடி விழித்து வந்தாள். 
    கலை கட்டிக் கொண்டு இருந்தன. முதல் நாள் கல்லூரி ரேகிங்.

     பெரும்பாலும் ஆண் பெண் பேதமின்றி கிண்டல் கேலி என்றும் செய்தார்கள். சிலருக்கு சொல்வதை செய்து விட்டு போக வேண்டும் என்ற கட்டளையும் விடுத்திருந்தனர்.

   சின்ன சின்ன மொட்டு விழியில் நடந்து வந்தவளை வகுப்பின் முதல் தளம் செல்லும் நேரம் அங்கே பெஞ்சில் இருந்த நால்வர் அழைக்க திருதிருவென விழித்து, "நானா அண்ணா" என்றாள்.

     "நால்வரின் மூவர் அவனை பார்த்து சிரிக்க, அவனோ போச்சு அண்ணானு சொல்லிட்டா என்று வருந்த, சம்யுக்தாவோ "எதுக்கு அண்ணா நீங்க மூன்று பேரும் இந்த அண்ணாவை பார்த்து சிரிக்கறீங்க." என்றதும்

    "எம்மா நாலு பேரையும் அண்ணானு சொல்லிட்ட போதும்மா... பேலன்ஸ் வை. அப்பறம் யாரை வைத்து உன்னை ஓட்டுறது." என்று கூறி சம்யுக்தாவை ஏறயிறங்க பார்த்தான்.

     "மச்சி நம்மளை அண்ணா சொல்லி இந்த பூச்சி எஸ்கேப் ஆகப்பார்க்குது. நாம செமையா மாட்டி விடணும்." என்று யோசனை செய்தவன்

  "சீனியர் பசங்க போன் நம்பர் எழுதி மடிச்சு போடுவோம் இவ   யார் நம்பரை எடுக்கறாளோ அதை பொருத்து அந்த நம்பரிடம் பேச வைப்போம்." என்று ஆலோசனை சொல்ல மற்ற மூவரும் அதை ஆமோதித்தனர்.

    வேக வேகமாக சுபாஷின் போனில் இருந்து நம்பர் மற்றும் பெயர் போட்டு கையில் வைக்க, பத்து பெயர்கிட்ட வரவும் போதுமென்று சொல்லி குலுக்கி அதனை டேபிளில் வீசினான்.

     "உன் பெயர் என்ன சிஸ்டர்?" என்று கேட்க,

     "சம்யுக்தா.... அப்பா சம்யு சம்யுனு கூப்பிடுவார். உங்க பெயர் அண்ணா" என்று கூற

     "நான் ரவி, இது ஜார்ஜ், இது சுபாஷ் இது சீனிவாசன். ஓகே. சம்யு... இந்த சீட்டுல ஒன்றை எடுத்து அதுல இருக்கற நம்பருக்கு கால் பண்ணி ஐ லவ் யூனு சொல்லிட்டு வைச்சிடற. அவ்வளவு தான். அதுக்கு பிறகு அந்த நம்பரில் இருந்து ஏதாவது மெஸேஜ் கால் வந்தா மதியம் எங்களிடம் காட்டற" என்றவன் சம்யுக்தாவிடம் சொல்லி, "எவன் வழியிறானோ அவனை வச்சி செய்வோம் டா" என்று நண்பர்கள் பேசிக் கொண்டார்கள்.

    முதலில் பயந்தாலும் நான்கு பேரும்
     "எடு மா"

      "பயப்பட வேணாம் பிரச்சனைனா நாங்க தட்டி வைக்கிறோம்"

     "ஆமா சிஸ்" என்ற பயிலும் வர நிம்மதியாக ஒரு சீட்டை எடுத்து முடித்தாள்.

      "எடுத்துட்டேன் அண்ணா... இப்ப என்ன பண்ணணும்"

     "போன் பண்ணி ஐ லவ் யூ சொல்ல்... இல்லை இல்லை வேண்டாம். ஐ லவ் யூ அப்படின்னு வாட்ஸப்ல தட்டி விடு" என்று சுபாஷ் சொல்ல,

    அந்த சீட்டின் எண்ணை எடுத்து அதை போலவே செய்ய ஆரம்பித்தாள்.

      "ஐ லவ் ஆரவ்" என்று அவள் சொல்லியபடி அனுப்பிட செய்ய, அதே நேரம் மற்றவர்களோ கோரஸாக

     "என்னது ஆரவா?" என்று அதிர்ந்தார்கள்.

    மச்சான் சுபாஷ் போன்ல எம்பிஏ கேங்க் டா அதுல ஆரவ் நம்பர் இருக்கு டா. அதான்" என்று ரவி பதறவும்.

   "டேய் இப்ப என்ன ஆரவ் நம்மகிட்ட தான் அக்னிமன்னனா சீனை போடறான். இதுல எப்படி மாட்டுறனானு பார்ப்போம்." என்றதும் மற்றவர்களும் ஆர்வமாக

    "சரி மா அவ்ளோ தான் ஏதாவது ரிப்ளை வந்தா பதில் அனுப்பு. ஆனா எங்களை பற்றியோ, இது ரேகிங் என்றோ சொல்லாதே. அவன் என்ன அனுப்புவானோ அதை மதியம் காட்டு. இப்ப கிளாஸ்க்கு போ. இங்கிருந்து ரைட் போயி செகண்ட் லெப்ட் எடு பர்ஸ்ட் இயர்" என்றான் சீனிவாசன்.

   ''சரிண்ணா..." என்று ரைட் சென்று செகண்ட் லெப்ட் போய் கொண்டு இருந்தாள்.

    "யாருக்கு அனுப்பி இருக்கேனோ. இறைவா... அந்த பிள்ளையை என்னிடம் இருந்து காப்பாற்று." என்று சொல்லி தன் வகுப்பறை வந்து சேர்ந்தாள்.

   வகுப்பில் யோகிதா நட்பு கிடைக்க பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.

    "நீ யாரையாவது லவ் பண்ணறியா சம்யு" என்று யோகிதா கேட்டதும் வேகமாக போனை எடுத்து பார்க்க அவள் அனுப்பிய வாட்ஸப் செய்தி போய் விட்டதாகவும் பார்த்துவிட்டதாகவும் காட்ட, 'என்னடா அதிசயமா இருக்கு பார்த்தும் ரிப்ளை காணோம். ஒருவேளை இனி தான் ஏதாவது ரிப்ளை பண்ணுவானோ?' என்று அவள் அடிக்கடி தனக்கு பதில் வந்துவிட்டதா என்று பார்க்க மதியம் வரை வரவேயில்லை.

    சீனியரிடம் சென்று அதை காட்ட தேடி போகவும் எதிரில் ஒருவன் வர அவன் வருவதால் போக இடம் தர வலது இடது என்று மாற்ற அவனோ நின்று அவளை பார்த்து, "ஒரு இடமா நில்லு நானே போயிடுவேன்" என்று கூற அசையாது நிற்கவும் அவன் சென்றான்.

    அவன் கடக்கும் நேரம் அவனின் கைகள் உரசி செல்ல சம்யுக்தாவிற்கு தான் மின்சாரம் பாய்ந்த உணர்வு.

     தன் இரு கையையும் தேய்த்து விட்டாள். இதற்கு முன் இப்படி சிலிர்த்திடவில்லை. எம்பிஏ மாணவரிடம் ரவிண்ணா சுபாஷ்ண்ணா  ஜார்ஜ்ண்ணா சீனிண்ணா எங்க இருக்காங்க என்றதும் எதிரில் இருந்தவனோ "கேன்டின்ல எதுக்கு கேட்கற?" என்று கேட்டதும்

    "சும்மா அண்ணா... ரேகிங் அதான் மதியம் வந்து பார்க்க சொன்னாங்க. தேங்க்ஸ் அண்ணா" என்று செல்ல,

    "என்னது நானுமா. எத்தனை அண்ணா.. நீ பிழைச்சிப்ப தாயே" என்றான் பதில் சொல்லியவனும்.

     சம்யுக்தா சிரித்தபடி கேன்டீன் பக்கம் வந்து தேட தன்னை உரசியவன் இருக்க அவனை பார்த்தபடி மற்ற அண்ணாக்களை தேட, சுபாஷ் பார்த்து ஓடி வந்தான்.

    "என்னமா ரிப்ளை வந்ததா." என்று ஆர்வமாக கேட்க,

     "நீங்களே பாருங்கன்னா." என்று நீட்ட அவனோ வாங்கி பார்த்து சே காலையிலே பார்த்தும் ஒரு ரிப்ளை காணோம்?" என்றவன் "இரு மா இன்னொரு மெஸேஜ் அனுப்பு. 'ஹாய்.... லவ் பண்ணறேன் சொல்லறேன் பதிலை காணோம். நான் யாருன்னு சொன்னா பேசுவியா ஆரவ்' அனுப்பு மா" என்றதும்

    "அண்ணா யாரது... ஏதாவது பிரச்சனை வரும் எதுவும் அனுப்ப வேண்டாமே.." என்று பயந்தவளிடம்

    "அதோ இருக்கான் பாரு அதான் ஆரவ். அவனுக்கு தான் அனுப்பி இருக்கேன். எங்க பிரெண்ட் தான் மா. பயப்பிடாதே. அவன் நல்ல டைப்... அதான் கொஞ்சமா சோதிக்கலாம்னு" என்று சொல்லவும்
   ஆரவை கண்டவள் சம்மதமாய் தலையசைத்து நின்றாள்.

     அவளுக்கு அந்த ஆரவ் பதிலளிப்பானோ என்ற ஆவல் எழும்ப ஆரம்பித்தது.

     அது அவளை கடந்து உரசி சென்று தனக்குள் புதுவிதமான சிலிர்பை உருவாக்கி சென்றவன் என்பதால் தோன்றியது.

    "ரொம்ப பார்க்காதே மா. திட்டிடுவான் இல்லையா கண்டு பிடிச்சிடுவான்" என்று கூறவும் பயத்தில் அனுப்பிவிட்டு, "ஈவினிங் ஆர் நைட்... மெஸேஜ் பண்ணினா என்ன செய்ய?" என்றதும்

   "லவ் பண்ணறாப்ள அனுப்பு அவன் பதிலை பார்க்கணும்" என்று கூற சரியென்று கிளம்பினாள்.

    போகும் பொழுது ஆரவை பார்க்க அவனோ கேண்டீன் பப்ஸை உண்டபடி ஒரு நிமிடத்துக்கும் குறைவாக அவளை பார்த்து திரும்ப,

    "'மூஞ்சை பாரு... ஒரு ரிப்ளை அனுப்பி இந்த ரேகிங் விளையாட்டை நிறுத்தினா என்னவாம். எப்ப மெஸேஜ் பண்ணுவானு எதிர்பார்ப்பை உருவாக்கி தொலைக்கிறான்.' என்று முனவ, அது ஆரவின் மனதில் கேட்டு இருக்கோமோ என்னவோ அவளை பார்த்து புருவத்தை மட்டும் ஏற்றி என்ன? என்பதாய் கேட்க அவளோ ஒன்றுமில்லை என்று தனது வகுப்பறை நோக்கி வேகமெடுத்தாள்.

     மாலை வரை எந்த பதிலும் வராது போக, சலித்து கொண்டாள் சம்யுக்தா.

    ஒரு ஆறரை மணிக்கு "ஹாய்" என்று வரவும் துள்ளி குதித்து ஹாய் என்று அனுப்ப, அவனோ பதிலுக்கு

     "சாரி... இந்த சந்துரு நாயி 'ஹாய்'னு அனுப்பிட்டான். பை த வே ரேகிங் என்றாலும் பெர்சனல் நம்பரில் இப்படி எவனுக்கும் அனுப்பாதே." என்று பத்து நிமிடத்தில் பதில் வர,

     "அப்ப ரேகிங் என்று தெரிந்து தான் ரிப்ளை பண்ணலையா? உஷாராகிட்டிங்க" என்று அனுப்பவும்

    "திட்ட தான் போனை எடுத்தேன். பட் டுடே ரேகிங் என்றதும் எதுக்கும் ட்ரு காலார் பார்த்தேன். பஸ்ட் இயர் சம்யுக்தா என்றதும் காலையில் சுபாஷ் முன்னாடி நீ இருந்ததை பார்த்தேன். அதான்" என்றனுப்ப 

   "என்னை பார்த்து இருக்கீங்களா?" என்று அனுப்பவும்

    "வாட்ஸப் டிபில யாரு வேண்டுமென்றாலும் பார்க்கற மாதிரி தான் உன் புரபைல் பிக்சர் இருக்கு. அதை கையோட செட்டிங்ல போய் காண்டன்ட் லிஸ்ட்ல இருக்கறவங்க மட்டும் பார்க்கற மாதிரி மாற்றிடு. அதுல தான் உன்னை பார்த்தேன்."
  
    "Oh ok" என்று அனுப்ப பதில் வராது போனது.

     என்ன இவர் வேற அனுப்பலை... என்றவள் யோசனையில் ஆரவ் அன்று முழுதும் அவள் சிந்தனையில் ஆட்சி புரிந்தான்.

     இரவு மெஸேஜ் அனுப்பலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டு இருக்க, அந்த நம்பரில் முகப்பு படம் காட்டாமல் இருந்தவை திடீரென முகப்பு படம் காட்டியது.

   ஆரவ் அதில் வகுப்பில் கால் மேல் கால் போட்டு இருக்கும் புகைப்படம் வரவும் அதனை கண்டவள் சந்தோஷமாக அதனை தன் கேலரியில் பதிவு செய்து கொண்டாள்.
   
      அதன் பின்னே நிம்மதி வர தன் தந்தையிடம் இந்த ரேகிங் மட்டும் தவிர்த்து மற்ற அனைத்தையும் பேசி முடித்து பகிர்ந்தாள்.

      சுவாமிநாதன் வாய்விட்டு சிரித்தபடி பாவம் மா எல்லாரும் அண்ணா என்றதும் இதயம் வெடித்து போயிருக்கும் என்று சொல்ல சம்யுக்தா தந்தையை பார்த்து சிரித்தவள் நல்ல வேளை ஆரவை அப்படி கூப்பிடமா இருந்தேன். இல்லை இப்ப என் ஹார்ட் வெடிச்சிருக்கும் என்று எண்ணினாள்.

     அடுத்த நாள் காலை கல்லூரிக்கு கிளம்பியவள் நேராக சுபாஷை தேட அவனோ இவளை கண்டு ஓடி வந்து என்ன மா ரிப்ளை பண்ணினானா? என்று கேட்க, மீண்டும் போனை காட்டினாள்.

   "ஏதோ அனுப்பி இருக்கானே" என்று ஆவலாக பார்த்தவன் அடுத்த நொடி புஸ்வானமாக போனது.

     "சே... பயபுள்ள யாரோடவும் சிக்க மாட்டேங்குதே. பிடி..." என்று கொடுத்து நகர எதிரே நின்றான் ஆரவ்.

    "ஹீஹீ மச்சி... நீ எப்ப வந்த?"

    "இதான் லாஸ்ட்." என்றவன் சம்யுக்தாவை பார்க்காது சென்றான். அவளோ தலை நிமிர கூட பயந்து குனிந்தவள் அவன் செல்லும் வரை அதே நிலையில் இருந்தாள்.

     சம்யுக்தா "சாரி" என்று அனுப்ப அவன் திரும்பி பார்த்து "இட்ஸ் ஓகே யுக்தா" என்றான்.

    சம்யுவிற்கு அவன் யுக்தா என்றதும் காலில் யாரோ சிறகை பூட்டி போ வானத்தில் பற என்பது போல சொல்லவும் இருக்கும் இடம் எண்ணி சந்தோஷத்தை கட்டுப்படுத்தினாள்.

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

-பிரவீணா தங்கராஜ்.

 இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் 

படிக்கும் அனைவருக்கும் நன்றி . கருத்தளித்தால் கூடுதல் நன்றி😉

    

   

 

  

  

தீவிகை அவள்🪔 வரையனல் அவன்🔥 -7

தீவிகை அவள்🪔 வரையனல் அவன்🔥-7


        சுபாங்கினிக்கு ஆரவ் செய்கை எதுவும் பிடிக்கவில்லை. எப்படியெல்லாம் நடத்தி அவனை கஷ்டப்படுத்தினாள். ஆனால் இன்று அவளையே தாலி கட்டி அழைத்து வந்து விட்டானே... பற்றாததற்கு தான் ஒரு வார்த்தை சொன்னதற்காக அவன் கழுத்தில் இருந்த செயினை கழட்டி அவளுக்கு அணிவித்து விட்டானே. எல்லாம் இந்த ஜனனியால் தான். 

     ஆரவ் மனதில் சம்யுக்தா இன்னமும் இருப்பாளோ என்ற சிந்தனையை எழும்ப சுபாங்கினியோ இறைவனை நாடி பூஜை அறைக்கு சென்று அமர்ந்தார்.

     ஆரவ் பின்னோடு வந்த சம்யுக்தா அடுத்து என்ன நடக்குமோ என்று விழி பிதுங்கி நின்றாள்.

     ஆரவ் திரும்பியதும் அவள் மீது மோத போக, "இப்ப எதுக்கு என் பின்னாடியே வந்து நிற்கற, தள்ளு..." எரிந்து விழுந்தான்.

     சம்யுக்தா தள்ளி நின்று நடுங்க செய்தாள். 

    ஏசியறையில் உடல் முழுக்க ஈரத்தில் அவள் நடுங்க, ஆரவோ 'நீங்க வாங்கி தந்த சேலை' என்றது நினைவு வர, மெல்ல மெல்ல அவளை கண்டான். 

     காட்டன் பட்டு தங்க மயில் பார்டர் நினைவு வர அவளை பாதம் முதல் உச்சிக்கு தன் கண்களால் அளவிட்டான். 

      அதே நிறம் அதே டிசைன் என்றவன் கண்கள் பிரகாசிக்க அவளை ஏறிட, அந்த உடையோ ஈரத்தில் அவள் உடலோடு ஓட்டி இருக்க, அங்கங்கள் அவளை சிலை போன்று செதுக்கி நிற்க வைத்திட, ஆரவோ அவளை பார்வையில் இரசித்து அருகே வர, மார்பில் அவன் அணிவித்த பொன்தாலி சிறிது நேரத்திற்கு முன் நடந்தவையும் நினைவு வர சினமானான்.

     "எதுக்கு இப்படி மழையில் நனைந்த கோழியா வந்து இருக்க?" என்றான். 
   
     "அது... அப்பா போலிஸை கூட்டிட்டு வந்ததும் அத்தை என்னை எழுப்ப முயற்சி செய்து இருப்பாங்க போல. நான் தூக்க மாத்திரை கலந்த பாலை குடித்ததால் எழுந்திருக்கலை. அத்தை அந்த ரூம்ல இருந்த பாத்ரும் டேப் வாட்டரை பக்கெட்டில் பிடித்து என் மேல ஊற்றிட்டாங்க. அதான்...  விழிக்க முடிந்தது. அத்தை எழுப்ப தான் அப்படி செய்து இருப்பாங்க." என்று கை நடுங்க கூறவும் ஆரவிற்கு தன் அன்னை அவளை விழிக்க செய்திருக்க மாட்டார்கள். வேண்டுமென்றே செய்து இருக்கலாம் என்ற எண்ணினான்.

     கதவு தட்டும் ஓசை கேட்க, ஆரவ் திறந்தான். 

      "சம்யு... என்னமா நீ... முதல்ல வீட்டு விளக்கை ஏற்று வா..." என்று சந்துரு அழைக்க, அவளோ ஆரவை பார்த்தபடி சந்துரு கூட போனாள். 

     வைஷ்ணவி தீப்பெட்டியை நீட்ட, பெற்று கொண்டவள் பூஜை அறைக்கு சென்று விளக்கு திரியை பிழிந்து ஏற்ற போக, இமை திறந்த சுபாங்கினி விளக்கேற்ற முயன்ற சம்யுக்தாவை தட்டி விட்டாள் சுபாங்கினி. 

     "என்னடி பண்ணற... வெளிய போ. இது உன் வீடு இல்லை." என்று தள்ளி விட, எண்ணெய் முழுதும் சேலையில் கொட்டி பயந்தவளாக நடுங்கினாள். 

     தன் அன்னை குரல் என்றதும் ஆரவ் ஓடி வந்தவன் சம்யுக்தாவை பார்க்க, தண்ணீரிலும் எண்ணெயிலும் ஆடை முழுவதும் பரவியிருக்க, 
  
     "அத்தை... என்ன பண்ணறீங்க. அவ இந்த வீட்டு மருமக. சம்யு நீ விளக்கெற்று மா" என்று சந்துரு சப்போர்டாக பேச, மருமகனை எதிர்த்து பேச பிடிக்காது இடத்தை விட்டு அகன்றாள். 

     ஆரவ் எதுவும் சொல்லாமல் இருக்க, சம்யுக்தா விளக்கேற்றி முடித்தாள்.
    
      கைகள் இரண்டும் சேர்த்து வைத்து, 'என்னையும் ஆரவையும் ஒரு முறை பிரித்தது போதும். இப்ப என்னை மனைவியாக்கி நான் எண்ணி பார்க்காத நடக்கவே நடக்காது என்று எண்ணியிருக்க அதிசயமாய் நடந்த இத்திருமணம் இதில் எப்படியாவது மீண்டும் தன் நிலையை விளக்கி பழமையை சரி செய்ய வேண்டும்.' என்று வணங்கினாள்.

     "டேய்... குங்குமம் எடுத்து வகிட்டில் வை" என்றதும் ஆரவ் அப்படியே வைத்து விட்டு அவளை காணாது அறைக்கு சென்றான். 

     "அத்தை உன் மேல கோபமா இருக்காங்க மா. கொஞ்சம் பொறுத்திரு... அவனும் கோபமா தான் இருக்கான். நடந்தது அப்படி இல்லையா... அவன் ஜெயிலுக்கு போனது... நீ மிஸ்பிகேவ் பண்ணினான் புகார் கொடுத்தது எல்லாம் மறக்க முடியாது தானே." என்றதும் சம்யுக்தா,

     "நான் ஆரவை அப்படி புகார் கொடுத்திருப்பேனா அண்ணா... நீங்க நம்பறிங்களா?" என்று கேள்வி எழுப்ப, 

      "மூன்று வருடம் முன்ன நீ தான் சம்யு கையெழுத்து போட்டு தெளிவா கொடுத்த... சரி விடு போய் அங்க ரெஸ்ட் எடு மா" என்று அனுப்ப சம்யுக்தா அறைக்கு வந்து நின்றாள். 

     ஆரவ் நிமிர்ந்து பார்த்து விட்டு திரும்பி கொண்டான். 

     அதுவே உள்ளே வருவதற்கு சம்மதமாக எடுத்து கொண்டு சம்யுக்தா வந்தாள். 

     ஆரவ் சற்று நேரம் இருக்க மூச்சடைத்தது போன்ற உணர்வு கொடுக்க எழுந்து ஒரு கவரை எடுத்தான். அதில் புது சேலை இருக்க, கவரோடு சம்யுக்தா முன் நீட்டினான்.

      "தேங்க்ஸ் ஆரு..." என்ற அடுத்த நொடி அவன் கை அவள் கழுத்தை நெறித்து,

      "தண்ணீரும் எண்ணெய்யும் ஓட்டாது. பட் இது காட்டான் சேலை அதனால இரண்டையும் இழுக்கும் மாற்றிக்கோ. இதை தருவது உன் மேல இருந்த காதலால் இல்லை. எங்க அம்மா உன் மேல தண்ணீரை கொட்டி எண்ணெயை சிந்திட்டாங்க அதற்காக தான். ஜஸ்ட் மனிதாபிமானம்.

     உன் கழுத்துல தாலி கட்டியது கூட உன் அப்பா என்னை அங்க அவமானப்படுத்த எண்ணியதால மட்டும் தான். மற்றபடி உன்னை திருமணம் செய்ய நான் முட்டாள் இல்லை. 

      ஒருத்தி அவமானப்படுத்தியும் அவளோட காதல் அழகு என்று பிணாத்திட்டு இருக்க நான் பைத்தியம் இல்லை. 

    உன்னை பழிவாங்கணும் என்று நினைத்தது இல்லை. அதே சமயம் உன்னோட எல்லாம் மறந்து வாழ்வேனும் நினைக்காதே. 

      அதுக்காக உன்னை நிம்மதியா விட்டுட்டுவேன்னு எண்ணிடாதே. வார்த்தையால் கொல்லவும் முடியும் செய்கையால் உன்னை துன்புறுத்தவும் முடியும்." என்று கூறியவன்

    "கடைசியா இன்னொன்று சொல்லறேன். என்னை 'ஆரு'யென்று கூப்பிடாதே... அப்படி கூப்பிடும் அருகதையை நீ எப்பவோ இழந்துட்ட, என்று விட மூச்சு விட தடுமாறி திணறியவள் கண்கள் சொறுக, சந்துரு ஓடி வந்து, 

      ''இடியட் என்னடா பண்ணற. விடு அவளை... ஆரவ்... விடு." என்று கத்தவும் விடுவித்தவன் சுவற்றில் கையை குத்தி முடித்தான். 

     சம்யுக்தா மூச்சு விட்டு கண்ணில் நீர் சுரக்க, இருமினாள்.

     "என்னடா இது. சாப்பிட கூப்பிடலாம்ன்னு வந்தா... இப்படி பண்ணிட்டு இருக்க. ஆரவ் அவ உன் யுக்தா டா." என்று உணர்த்த, 

    "எனக்கே நினைவுப்படுத்தறியா? கல்வெட்டு மாதிரி மனசுல செதுக்கி இருக்கேன். அவள் பண்ணிய வலியை... மறக்க முடியும்ன்னு நினைக்கிற? இல்லை மறந்துட்டேன்னு நினைத்து விட்டிங்களா? ஆரவ் டா... ஒவ்வொன்றையும் நினைவு துகளில்  தேங்கி வைத்து இருக்கேன்." என்று அகன்றான். 

    சந்துரு தான் பயந்தவனாக, "நீ முதல்ல சாப்பிடு மா. அவனிடம் தன்மையை பேசி பார்க்கறேன். 

      சம்யு... அவன் உன்னால ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கான் மா. அதான் இப்படி..." 

     "சத்தியமா.. நான் என்ன பண்ணேன்னு தெரியலை அண்ணா. அன்னிக்கு மயக்கத்தோடு வீட்டுக்கு வந்தேன். அதோட என்ன ஆரவ் பார்க்க வரலை. அவர் தான் என்னை இழிவா... நடத்தி அசிங்கப்படுத்தி இருந்ததா அப்பா... அப்பா ஏதோ நடுவில பண்ணியிருக்கார். ஆனா என் ஆரு பேசினான். அவன் குரலில்... நான் கேட்டேன்... அவனை விட்டு போக சொல்லி..." என்று அழுதிட,

     "யாருக்கு சப்போர்ட் செய்ய தெரியலை மா. அவன் ஏதாவது கத்தி காயப்படுத்தினா பொருத்துக்கோ. அவ்வளவு தான் சொல்ல முடியுமா. நீ செய்தது அவனை ரொம்ப பாதித்து இருக்கு." என்று சந்துரு நூடுல்ஸை நீட்ட,

     "கல்யாண வீட்ல அவனும் நீயும் ஊட்டி விட்டு சாப்பிட்டு இருக்கணும். என்ன பண்ண இங்க வந்திட்டிங்க பிடி எனக்கு  இது தான் பண்ண தெரியும்." என்று கொடுக்க, வாங்கி கொண்டாள். 

   சந்துரு தன் நண்பனை தேடி மாடிக்கு போக உச்சி வெயிலில் நின்று இருந்தான். 

     "அடேய்... கல்யாண கோலத்தில் இப்படி நிலாவை தான் இரசிப்பாங்க. சூரியனை இல்லை. என்ன அதுக்கூட யாரு சூட இருக்கீங்க என்று காம்படேஷனா...? மச்சி சூரியனை விட நீ தான் டா சூட இருக்க, பாரு அது மேகத்தோட ஒளிந்துகிடுச்சு." என்று சொல்லவும் ஆரவ் திரும்பினான். 

     "என்ன பேச வைக்கிறியா. அவளுக்கு சப்போர்டா? உன் தங்கை பாசத்தை எல்லாம் எப்பவோ தூக்கி போட்டா. அவளுக்கு பாசம் வைக்கிறது வேஸ்ட்" என்றான்.

    "அவளுக்கு தெரியாம எல்லாம் நடந்து இருந்தா என்ன பண்ணியிருப்ப? சுவாமிநாதன் இடையில ஏதோ பிளே பண்ணி இருந்தா?" 

     "என் கண்ணை பார்த்து என் மனதில் நினைப்பதை கேட்ச் பண்ணிடுவா. அப்படியிருக்க என்னை பார்த்து பேசியிருக்க வேண்டியது தானே... இல்லை டா... என்னை சமாதானம் செய்ய பார்க்காதே. அவளை எப்பையோ மறந்தாச்சு. இப்ப இருக்கறவ சுவாமிநாதன் பொண்ணு. எனக்கும் அவருக்கும் இருக்கற பகையில் சம்யுக்தா பலிகாடுதான்." என்று தனதறைக்கு சென்றான். 

    'இவன் என்ன ஆட்டை அறுக்கற கசாப்பு கடைக்காரனா பேசறான்.  தானா சேர்ந்தாங்க... தானாவே புரிஞ்சுப்பாங்க. கடவுளே...' என்று வைஷ்ணவியை தேடி போக அவளோ அன்னை அருகே அமர்ந்து ஆறுதல் மொழிந்தாள். 

   தன்னறையில் கதவை திறக்க, நூடுல்ஸை வாயில் உறிஞ்சியபடி சேலையை பீல்ட்ஸ் வைக்கும் யுக்தாவை கண்டான். 

     "என்ன பண்ணிட்டு இருக்க?" என்றான் சினத்தோடு.

    "அண்...ணா நூடுல்ஸ் தந்தாங்க சாப்பிட்டுட்டே சேலை கட்டறேன். நீங்க கொடுத்தது தான்" என்று கட்டவும், தலையிலடித்து பால்கனி சென்றான்.

      பாதி காலி செய்ய எட்டி பார்க்க, அவனோ ஊஞ்சலில் கண் மூடி இருந்தான்.

      "உங்களும் பசித்தா எடுத்துக்கோங்க. நாம ஷேர் பண்ணிடலாம்" என்று அவன் முன் நீட்ட, 

     "ஸ்டாப்பிட்...." என்று கத்தினான்.

      "என்னடி நான் பேசியதை எனக்கே நினைவுல நிறுத்தறியா? இங்க பாரு தாலி கட்டியது உங்க அப்பா செய்த வில்லங்கத்தினால்... இல்லை இந்த ரூம்ல வேறயொருத்தியோட இன்று நான் இப்படி இருந்து இருக்க மாட்டேன். உன்னை பார்த்தா எரிச்சலாகுது" என்று கத்தி அந்த மீதி நூடுல்ஸை தட்டி விட்டான். அந்த தட்டு உருண்டு சப்தமிட்டு ஓசையெழுப்பி அடங்கியது.

    ஆரவ் கோபம் பார்த்து அச்சத்தில் பின் நகர்ந்தாள். 

     ஆரவின் கனிவான பார்வையை தான் மீண்டும் எப்படி பெறப் போகின்றோமோ என்று புரியாது விழித்தவள். கட்டிலின் ஒரத்தில் சுருண்டு படுத்தாள்.

       இமைக்குள் ஆரவ் சந்தித்த முதல் நாள் வந்து நின்றது. 

     அந்த இனிதான நிகழ்வுகளை எண்ணங்களால் பின் நோக்கி பார்க்க சென்றாள்.

    இமை மூடிய விழிகள் நீரை சிந்த, உதடோ முறுவலை ஏந்தி சுகந்தமான காலத்திற்கு இட்டு சென்றது. 

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

-பிரவீணா தங்கராஜ்.

  படித்து கருத்து அளிக்கும் அனைவருக்கும் நன்றிகள் மகிழ்ச்சி... 
       

தீவிகை அவள்🪔வரையனல் அவன்🔥-6

தீவிகை அவள்🪔வரையனல் அவன்🔥-6


         ஆரவ் கன்னத்தில் அடித்து விட, தன் இடது கையால் கன்னத்தை அழுத்த பிடித்து, மறு கையான வலது கரத்தால் தன் மார்பில் ஆரவ் கட்டிய தாலியை இறுகப் பற்றியபடி கண்கள் சொறுக மயங்கி சரிந்தாள். 

      ஆரவ் அடித்ததும் மறுப்பு தெரிவிப்பால், அல்லது தாலி கட்டியதால் சண்டையிடுவால் அல்லது அடித்ததிற்காது கோபிப்பாள் என்று இருக்க மயங்கி சரியவும் ஆரவ் அவளை கீழே விழும் முன் தாங்கி நின்றான். 

      "ஹேய்.... யுக்தா... என்ன டிராமா பண்ணற? எழுந்துரு... எதுக்கு மயங்குற?" என்று தட்டி எழுப்ப அவளோ, "தூக்க மாத்தி...ரை" என்று சொல்லி முடித்து மயங்கிவிட்டாள்.

      தூக்கமாத்திரை என்றால் சூசைட் அட்டன் பண்ணியிருப்பாளோ என்று அச்சம் வரவும், 

     "இங்க யாராவது டாக்டர்ஸ் இருக்கீங்களா?" என்ற மண்டபம் அதிர கத்தவும், ஒரு பெண் முன் வந்து நின்றாள். 

     சம்யுக்தாவின் பல்ஸ் செக் செய்து பார்த்தாள். 
   
     "பல்ஸ் டவுன் ஆகலை. இவங்க நார்மலா தூங்கற லெவலுக்கு தான் மாத்திரை போட்டு இருப்பாங்க. எழுந்ததும் சரியாகிடுவாங்க." என்று கூறவும் ஆரவ் யாருமறியாது பெருமூச்சை வெளியிட்டான்.

       மண்டபம் முழுதும் ஆரவ் சம்யுக்தாவை பார்த்து கொண்டு இருக்க, ஆரவிற்கு என்ன செய்ய என்று குழம்பி தவித்தது ஒரு நொடி தான் சந்துருவை தேட, அவனோ முகமெல்லாம் சந்தோஷம் அடைந்து ஆரவ் தேடுவதை அறிந்து, மேடைக்கு வந்தான். 

     அங்கே மணமக்களை வாழ்த்தி பேச வைத்திருந்த மேக்கை எடுத்தான். 

     "வணக்கம் நட்புள்ளங்களே உறவுகளே... மணப்பெண் என்ன காரணமோ காணம போக, இங்க வந்த சம்யுக்தா மணமகளா மாறிட்டாங்க. கல்யாணம் நடந்தாச்ச... ஏற்கனவே உணவை வேஸ்ட் பண்ணினா எங்க ஆரவிற்கு பிடிக்காது. அதனால கல்யாணத்துக்கு வந்தவங்க யாராயிருந்தாலும் வயிறாற சாப்பிடுட்டு போங்க. இங்ஙணம் மாப்பிள்ளையின் தோழன் சந்துரு." என்று கூறி முடிக்க ஆரவோ, "வந்தேன் போலந்து கட்டிடுவேன் டா." என்று பல்லை கடித்து திட்டி, சம்யுக்தாவை தூக்கி கொண்டு மணமகன் அறைக்கு வந்தான்.

அங்கே இருந்த அறையில் மெத்தையில் படுக்க வைத்தவன். 

     "ஆரவ் என்ன இது? எதுக்கு இவ கழுத்துல தாலி கட்டின? உண்மையை சொல்லு? இதுயெல்லாம் உன் பிளானா?" என்று சுபாங்கினி கேட்கவும் ஆரவோ அன்னையை முறைத்து, 

    நான் மேடையில் வேறொருத்தி தாலி கட்டும் வரை வந்துட்டேன். நீங்க பார்த்த பெண் தான் மேடையில் இல்லாம காணாமல் போயிருக்கா. அப்படியிருக்க என் பிளானா கேட்கறீங்க. அம்மா... ஜனனி இருந்தா நான் அவ கழுத்தில் தான் தாலி கட்டி இருப்பேன்." என்றான். 

     "அப்ப இவ பிளான்னா?" என்றதும் 

     "அது தெரியாது." என்றவன் வேகமாக வெளியேறினான். 

      சந்துருவோ செல்பவருக்கு ரிட்டன் கிப்ட் கொடுத்துக் கொண்டு இருந்தான். 

    ஆரவ் காலரை பிடித்து இழுக்க, "சுபாஷ்... கிளம்பறவங்க கையில ஒரு கிப்டை திணிச்சிடுடா" என்று கத்தியவாறு ஆரவ் இழுவைக்கு ஏற்றவாறு பின்னால் நடந்தான். 

      ஹாலின் பக்கவாட்டில் அவனை இழுத்து வந்து, "உன் வேலையா சந்துரு?" என்றதும் காலரை சரிசெய்தவாறு, 

     "இங்க பாரு டா... நீ எப்ப என்னிடம் நண்பனா நடந்துக்காம உன் தங்கை கணவனா நடந்தியோ அப்பவே சம்யு சேப்டரை விட்டுட்டேன். அவ ஜனனியோட எம்டி என்று தெரிந்தப்ப பயந்தேன். எங்க நீ கல்யாணத்தை நிறுத்திடுவியோ என்று மட்டும். ஆனா நீ அவ இரண்டு பேருமே விலகி போனதும் நான் இடையில் சேர்த்து வைக்க முயற்சிப்பேனா? என் வேலையில்லை. ஆனா எனக்கு சந்தோஷமா இருக்கு. என் நண்பன் விரும்பியவளே கட்டிக் கொண்டது." என்ற நேரம் ஆரவ், 
  
     "அது அப்போ. இப்ப வெறுக்கறேன்." என்றவன் குறுக்கும் நெடுக்கும் நடந்து "சுவாமிநாதன் செய்த வேலையா இருக்கும். என் கார்டை பார்த்துட்டு பிளாங் செக் அனுப்பி இருந்தார். ஆனா ஜனனி எப்படி... கொஞ்ச நேரம் முன்ன கிராஸ் பண்ணினா" என்றவன் தங்கை வைஷ்ணவி தங்கள் அருகே வர, 

    "அவ முழிச்சிட்டாளா?" என்றான். 

      "இல்லை அண்ணா... போலிஸ் வந்து இருக்காங்க..." என்று பதறியபடி வந்து நின்றாள். 
    
    ஆரவ் இதை எதிர் பார்த்து இருந்தவன் போல கிளம்பினான். சந்துருவோ இம்முறை மட்டும் சம்யு ஆரவிற்கு எதிராக பேசினால்... என்ற அச்சம் சூழ ஆரவ் பின்னால் ஓடினான். 

    "பாருங்க சார்... வசதியான பொண்ணு என்று கட்டாயத்தாலி கட்டிட்டான். அவனை உள்ள தள்ளி கம்பி எண்ண வையுங்கள்" என்று சுவாமிநாதன் ஆவேசமாக கத்தினார். 

     "யார் இதுல ஆரவ்?" என்று அந்த ஏரியா போலிஸ் விமல் கேட்க, 

     "நான் தான்" என்று முன்னெடுத்து வைக்க, 

     "இவர் சொல்லற மாதிரி ஆரவோட மகளுக்கு கட்டாயத் தாலி கட்டினிங்களா?" என்று கேட்கவும் ஆரவ் ஆம் என்று சொல்ல வாயெடுக்க, 

     "இல்லை சார். நானும் ஆருவும் காதலர்கள். எங்கப்பாவுக்கு ஆரவை பிடிக்கலை. அதனால அவரை அவமதிச்சு அனுப்பிட்டார். காதலை மூடி மறைத்து அப்படியே விட்டுட்டோம். இப்ப ஆரவ் வீட்டில் ஜனனி பெண் பார்த்து முடிச்சாங்க. எங்கப்பாவுக்கு ஆரு நிம்மதியை கலைப்பதற்காக ஜனனியை நேற்று இரவு அவளிடம் அதிகமா பணத்தாசை காட்டி விலைக்கு வாங்கி ஜனனி மண்டபத்திலருந்து போக சொல்லிட்டார். 

   ஆரு மண்டபத்தில் எல்லோர் எதிர்லயும் தலை குனிந்து நிற்கணும் என்றது தான் பிளான். ஆனா நானும் அவரும் திருமணம் செய்துக்க எண்ணிணோம். என் விருப்பத்தோட தான் எனக்கு தாலி கட்டினார்." என்று அடைமழை போல விடாது பேசி முடித்தாள் சம்யுக்தா. 

    அவள் முகமெல்லாம் மழையில் நனைந்தவள் போல நீரால் தலை, முகம், ஆடை நனைந்து தான் இருந்தது. 

     "சார் பொய்... என் மகளுக்கு அவனை பிடிக்காது. இப்படி மாற்றி பேச வைத்து இருக்கான்." என்று கூறவும் விமலோ சம்யுக்தா பேசிய திடமான வார்த்தைகளை வைத்தே அவள் பேசுவது பயந்தல்ல என்று புரிந்து கொண்டார்.

     "சார் ஒரே காலேஜ்... லவ் இல்லாமையிலா... எங்களை சும்மா இதுக்கு எல்லாம் கேட்க அழைத்துட்டு  வராதீங்க" என்று ஒரு வார்னிங் கொடுத்தே சென்றார் விமலன். 

     ஆரவ் அவளை உறுத்து பார்த்தவன் ஜனனி அவளின் அப்பா அம்மாவோடு நின்றிருக்க அவளை நெருங்கினான். 

    "எதுக்கு இப்படி பண்ணின ஜனனி?" என்றதும் அவளோ, 

      "நீங்க ஏன் அப்படி நடந்திங்க ஆரவ். சுவாமிநாதன் சார் சொன்னது தான் சரி.
     
     சம்யுக்தா மேடத்தை பார்த்தப்பவே ஏதோ கையெழுத்து போடாமல் தாமதம் செய்தாங்கன்னு சண்டைக்காரங்க போல முறுக்கிட்டு போனவர் என்று எண்ணிட்டு இருந்தேன் ஆனா நீங்க பெண் பார்க்க பிடிக்காம உங்க தொழிலுக்காக அங்க இருந்து இருக்கீங்க. ஓகே அதாவது தொழிலில் ஆர்வம் என்று எடுத்துக்கறேன்.  

     அடுத்த நாள் நான் தான் பெண் என்றதும் தேடி வந்திங்க. என்னோட பேசவா...? இல்லை உங்க முன்னால் காதலியை சந்திக்க ஒரு வாய்ப்பு என்று என்னை பார்க்க வந்து இருக்கீங்க. சம்யுக்தாவை காயப்படுத்த என்ன உபயோகப்படுத்தி, காபி ஷாப் கூட்டிட்டு போய் போட்டோ எடுத்து இருந்தீங்க. 

   மற்றபடி உங்களை நம்பி மணமேடையில் நான் இருந்தாலும் என்னை விடுத்து அவளை தான் திருமணம் செய்து இருப்பீங்க என்று சுவாமிநாதன் சார் சொன்னார் இப்ப பாருங்க. என்னை தேடாமல் அவளை தாலி கட்டி இருக்கீங்க." என்று பேச ஆரவோ, 

     "நீ இந்த இடத்தில் இருந்தா. உன் கழுத்தில் தான் தாலி கட்டி இருப்பேன். ஆனா மீதி நீ சொன்னது எல்லாம் சரி... தொழிலில் ஈடுபாடு என்று தான் பெண் பார்க்க கூட போகாமல் இருந்தேன். ஆனா அடுத்து உன்னை பார்க்க வந்தது போட்டோ எடுத்தது யுக்தாவை வெறுப்பேற்ற தான். ஆனா அதுக்காக அம்மா பார்த்த பெண்ணை மேடை வரை விட்டுட்டு என் முடிந்து போன காதல் வாழ்க்கை தான் வேண்டுமென்று அவளுக்கு தாலி கட்ட சென்றிருக்க மாட்டேன்.

     எனிவே பிளாங் செக் கிடைத்தால் இப்படி நடந்துக்க தான் தோன்றும்" என்றவன் திரும்ப,

     "ஏன்பா இப்படி செய்திங்க. நேற்று தெளிவா தானே பேசினேன்." சம்யுக்தா மெல்லிய குரலில் விசும்பி கேட்க, சுவாமிநாதனோ 

     "உன்னை யாரு இங்க வர சொன்னது. நீ ஏதாவது பண்ணிடுவியோ என்று தான் உனக்கு தூக்கமாத்திரை கொடுத்திருந்தேன். நீ என்னடான்னா அங்க தூங்கற மாதிரி செட் பண்ணிட்டு இங்க வந்திருக்க. திருமணத்துக்கு நேற்று போக மாட்டேன்னு சொன்ன இன்று வந்து இருக்க. அப்பாவிடமே பொய் பேசியிருக்க?" என்று எரிந்து விழுந்தார்.

      "உண்மை தான் பா. ஜனனி கிப்ட் கொடுக்க நினைத்தேன். இன்று கொடுத்தா தான் ஆரவ் வாங்க விடுவார். அதற்கு பிறகு வாங்க விடமாட்டார் அதான் இன்று வந்தேன்.  உங்களுக்கு தெரிந்தா போக விடமாட்டிங்கன்னு தான் அப்படி வந்தேன். நீங்க இப்படி ஜனனியை கைக்குள் போட்டுட்டு ஆருவை மணமேடையில் அவமானப்படுத்த நினைத்தது தப்பு பா." என்று கூற ஆரவ் யுக்தா இருக்கும் புறம் பார்வையை திருப்பும் சமயம், 

     "நல்லா நடிக்கிற டி மா. என் பையனை ஜெயில் தள்ளி, உன்னிடம் தப்பா நடந்தானென்று கேஸ் கொடுத்து பண்ணியது எல்லாம் போதாது. இப்ப உங்கப்பா மேடையில வரை வந்து என் மகனை தப்பா பேசணுமென்று பண்ணியிருக்கார். நீ இப்ப வந்து நல்லவ மாதிரி பேசற..." சுபாங்கினி பேச, சம்யுக்தா தந்தையை பார்த்தாள். 

   அவரோ எதையோ மறைக்க பார்க்க, சம்யு அவரிடம் கேட்க வாய் திறக்கும் நேரம் ஆரவ் சம்யுக்தாவை கை பற்றி திருப்பி,  

    "உன்னோடு அசசரிஸ் எல்லாம் ஒன்று விடாம கழட்டி உங்கப்பாவிடம் கொடு. என்னோட மனைவியா வருவதா இருந்தா." என்றதும் சம்யுக்தா மடமடவென கழுத்தில் அணிந்த வைர நெக்லஸ், வைரக்கம்மல், வைர வளையல், தங்க மூலாம் வாட்ச், ரூபி மோதிரம், தங்க கொலுசு என்று கழட்டி கர்ச்சீப்பில் வைத்து முடித்து நீட்டினாள். 

   ஆரவ் கட்டிய தாலி ஒன்று மட்டும் அவளிடம் இருக்க மற்றவை எதற்கு?!

   சுவாமிநாதன் மகளை வியப்பித்து பார்க்க, அவளோ அவரின் கையை பிடித்து அதில் திணித்தாள். 

     "ஒரு நிமிஷம்" என்றவன் வைஷ்ணவியை பார்த்து "உன்னோட சேலையை கொடு வைஷ்ணவி அதை உடுத்திட்டு சேலையையும் திருப்பி தரட்டும்." என்று கூற, 

     "இது நீங்க எனக்கு வாங்கி தந்த சேலை தான். இது எங்கப்பா வாங்கி தந்தது இல்லை." என்றாள் சம்யுக்தா. 

     ஆரவ் அவளை தற்போது காண எண்ணி திரும்ப, மூளையோ வேண்டாமென்று மறுத்தது. 

     சுவாமிநாதன் அதிர்ந்து நிற்க, ஆரவோ "நம்ம வீட்டுக்கு போகலாம் அம்மா... அவரோட என்ன பேச்சு" என்றவாறு சம்யுக்தாவின் கையை பற்றி இழுத்துக் கொண்டு வேகமாக சென்றான். 

     அவனின் இழுவை சுவாமிநாதனுக்கு தான் திகிலை தந்தது. செய்த வினை எங்கே தன் மகளை தாக்குமோ என்று பயத்தில் வெளிறியிருந்தார். 

     காரில் சுபாங்கினி தான் புலம்பியபடி வந்தார். அருகே இருந்த ஆரவோ தலையை இருக்கையில் சாய்த்து இமை மூடி இருந்தான். சம்யுக்தாவோ அவனை பார்க்க பயந்து கைகளை பிசைந்தபடி வந்தாலும், 'என் ஆரு என்னை திருமணம் செய்து கொண்டான்.' என்ற மகிழ்வில் திளைத்தாள்.     

     வைஷ்ணவியோ நடப்பது எதுவும் புரியாமல் விழித்தாள். அவளுக்கு அண்ணா ஒரு பெண்ணை விரும்பினான் என்பது மட்டுமே தெரியும். அதனால் சில பிரச்சனைகள் சந்தித்து இருந்தது அறிவாள். சந்துரு தான் திட்டவட்டமாக ஆரவ் திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டான் என்று கூறியிருந்தான். ஆரவ் சம்யுக்தாவை அப்படி விரும்பியவன் என்பது சந்துரு கூறியிருக்க அது இந்த பெண் தானா? என்று சம்யுக்தாவை பார்த்தாள். 

    நேற்று வரை நண்பன் என்று இல்லாமல் ஒரு வரை முறைக்குள் பேசிய கணவரும் அண்ணாவும் இருக்க, ஒரே நாளில் முன்பு போல கணவன் சந்துருவும் அண்ணாவும் பேசுவதை அறிந்து மகிழ்ந்தாள்.

       சந்துருவோ விசிலடித்தபடி காரை ஒட்ட, "சந்துரு நிறுத்தறியா?" என்றான் ஆரவ். சந்துருவோ அமைதியாக சிரித்து கொண்டவன் ஆரவ் வீட்டின் முன் நிறுத்தினான். 

     "ஒரு நகை நட்டு இல்லாம வீட்டுக்கு காலடி எடுத்து வைத்திருக்கா" என்று புலம்பியபடி காரில் இருந்து இறங்கினார் சுபாங்கினி. 

       "வைஷ்ணவி ஆரத்தி எடுத்துட்டு வா ஓடு" என்று சந்துரு கூற மறுக்காது எடுத்து வர சென்றாள்.

     ஆரவ் தன் கழுத்தில் இருந்த இரண்டு செயினில் ஒன்றை கழட்டி எடுத்து சம்யுக்தாவின் கழத்தில் அணிவித்தான். 
  
   சம்யுக்தா ஆரவ் கண்களை காண அவனோ அவளை காணாது முகம் திருப்பி நின்றான். 

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

-பிரவீணா தங்கராஜ் 

திங்கள் வெள்ளி பதிவு வரும்.

படித்து கருத்தளிக்கும் அனைவருக்கும் நன்றி.

    

      

தீவிகை அவள்🪔வரையனல் அவன்🔥-5

🪔தீவிகை 🔥வரையனல்-5


      நாளை காலை ஆரவ்- ஜனனி திருமணம்.

     ஆரவ் எந்தவித ஆர்ப்பாட்டம் இன்றி தனது கல்லூரி தோழர்களுக்கு பேட்சுலர் பார்ட்டி வழங்கினான்.

   சந்துருவிற்கு தான் மனம் திக்திக்கென்று பதறியது.

    வைஷ்ணவி தெரிவித்தால் எப்படியும் அத்தை சுபாங்கினியிடம் எதையாவது உளறுவாள் என்றே அவளிடமும் எதையும் தெரிவிக்கவில்லை.

     ஜனனியோ தன் கைகள் செக்க சிவந்த மருதாணியை பார்த்து கொண்டு இருந்தாள்.

    சுபாங்கினி ஊரில் உள்ள இறைவனுக்கு எல்லாம் மகன் திருமணம் நல்லபடியாக முடிவடைய பிரார்த்தனை விடுத்தாள்.

     சுவாமிநாதன் தான், " அவனுக்கு நம்ம கம்பெனி புராஜக்ட்ல சீன் பண்ணி கொடுத்திருக்க கூடாது சம்யு. அவனுக்கு போய்... என்னமா நீ.."

    "டாட்... அது அவர் என்று தெரியாம சீன் பண்ணியது. அதுக்கு பிறகு மாற்ற முடியலை" என்றதும் சுவாமிநாதன் அவளை உறுத்து விழிக்க, சம்யு பார்வையை மாற்றினாள்.

    ஆப்பிளை கட் செய்ய ஆரம்பித்தாள்.

   "அவர்.... இன்னமும் மரியாதையா மா?" என்றதும் சம்யுக்தா தந்தையை நேரிடையாக பார்த்து அவர் நம்ம ஆபிஸ் வந்தப்ப ஆரவ் என்று எட்டி நின்று தான் பேசினேன். அதுலயே அவருக்கு கோபம் உச்சம் தொட்டு இருக்கும் போதுமா. அப்பா அவர் என்னோட வயசுல பெரியவர் அந்த அர்த்தத்துல கொடுக்கற மரியாதை." என்று ஆப்பிளை அறிந்தவளால் தற்போது உண்ண பிடிக்காமல்எட்டி வைக்க,

    "அந்த பொண்ணை வேலையிலிருந்து நிறுத்து"

    "நாளைக்கு நீங்களே வெற்றிலை பாக்கு வைத்து கூப்பிட்டலும் ஆரு அனுப்ப மாட்டான்." என்றதும் தன் நாக்கை கடித்து கொண்டாள். உதடு துடிக்க அதனை அழுத்த பற்களால் அழுத்த கடித்தாள்.

     வெளிப்படையாக அவன் பெயரை உச்சரித்த விட்டதால் அதற்கு தண்டனை போலும்.

     சுவாமிநாதன் அங்கும் இங்கும் உலாவி, "நாளைக்கு அந்த கல்யாணத்துக்கு போக போறியா சம்யு" என்று கேட்டதும்.

     "இல்லை... போகலை... அவ ஒரு ஸ்டாப் அவ்ளோ தான். அவளுக்காக போக மாட்டேன்" என்று தனதறைக்கு புகுந்தாள்.

     அவனை காண போக மாட்டாயா? என்று உள் மனம் கேட்க, இல்லை என்று தலையசைத்தாள்.

    அவன் இன்னொருத்திக்கு சொந்தமாவதற்கு முன் கடைசியாக பார்க்க செல்ல மாட்டாயா என்று கேட்கவும் அதற்கும் இல்லையென்று பதில் அசைத்தாள்.

     மூன்று வருடம் மறந்து மறுத்து போனது தற்போது அனலாக மாற்ற தலையனையில் புதைந்தாள்.

      நீ தான் அழுவாய் சம்யு அவன் அழ மாட்டான். அவன் பிடிவாதம் நீ அறியாததா. ஒன்றை எண்ணி முடிவு எடுத்தபின் விலகுவதை கையாள மாட்டான். ஏன் அப்படி யோசிக்கவும் மாட்டான். நாளை ஜனனி கழுத்தில் தாலி கட்டி சலனமேயில்லாமல் நிற்பான் என்றது அவளுள்ளம்.

    சுவாமிநாதன் பாலை எடுத்து வந்து மகளிடம் நீட்ட அவளோ வேகமாக கண்ணீரை துடைத்து வாங்கி பருகினாள்.

   சற்று நேரத்திலே உறங்க செய்தாள்.

   சுவாமிநாதன் கொடுத்த பாலில் தூக்க மாத்திரை உதவியால்...

    சுவாமி நாதன் தான் குறுக்கும் நெடுக்கும் நடையோ நடை நடந்தார்.

     நாளை மகள் செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். இதே போல காலையிலும் அவள் அருந்தும் பாலில் தூக்க மாத்திரை கொடுத்திட வேண்டியது தான் என்று சென்றார். 

      அடுத்த நாள் ஆரவ் பட்டு வேஷ்டியில் கம்பீரமாக நின்றான். தனது கைக்கடிகாரத்தை கட்டி முடித்து, தாய் சுபாங்கினி கொடுத்த செயினை அணிந்தான்.
  
    "என்ன எதுக்கு வைச்ச கண்ண எடுக்காம பார்க்குற?" என்றான் சந்துரு பார்ப்பதை உணர்ந்து,

    "நான் வைஷ்ணவி கொடுத்த கைகாப்பு கொடுக்க வந்தேன். நான் எங்க பார்த்தேன். காப்பு உனக்கு பொருந்துமா என்று அதை தானே பார்த்துட்டு இருந்தேன்" என்று பதிலை தந்துவிட்டு பயபுள்ள சுத்தி கண்ணை வைத்து வேவு பார்க்குது சந்துரு வாயை திறக்காதே. அமைதியா வேலையை பாரு டா என்று தனக்கு தானே சொல்லி கொண்டான்.

    கையை மடித்து கட்டிக் கொண்டு சந்துருவை உறுத்து விழிக்க அவனோ, "மச்சான் முறைக்கு இந்த காப்பு பிடி" என்று கையில் அணிவித்து ஓடினான்.

     மச்சான் முறைக்கு நான் தான் டா காப்பு பிரசண்ட் பண்ணுவேன்" என்ற சந்துரு முன்பு கல்லூரியில் புங்கை மரத்தடியில் சொன்னது நினைவு வர ஒரு இகழ்ந்த முறுவல் உதிர்த்து தலையை வாரினான்.

      அலைபாய்ந்த கேசம் அவனுக்கு அடங்காமல் அலைபாய மீசையை முறுக்கியபடி வெளியேறினான்.

     பெண் வீட்டார் வந்தவண்ணம் இருந்தனர். அவன் எதிர்பார்த்தது ஜனனியின் முதலாளியை. அவள் வந்து ஜனனி கழுத்தில் தான் தாலி அணிவிக்க சம்யுக்தா கண்ணால் பார்க்க வேண்டும் என்று எண்ணினான். உன்னை விடுத்து ஒருவளிடம் நான் இணைய போகின்றேன் என்பதை ஜம்பமாக அவளிடம் காட்டவே. 

       சந்துரு வீட்டு ஆட்கள் வர நினைவுகளை புறம் தள்ளி  வரவேற்றான்.

   தன் போனை தேட அறையில் விட்டு விட்டதை அறிந்து செல்ல போக ஜனனி குனிந்த தலையோடு மணமகள் அறைக்கு செல்ல அவளை கண்டு முறுவளித்தான். ஜனனியும் அதே புன்னகையை வீசி அறைக்குள் சென்றாள்.

     தன்னை மணமகன் கோலத்தில் புகைப்படம் எடுத்து வாட்ஸப் டிபி பிக்சராக வைத்தான்.

    இம்முறையும் கள்ளிச்செடியை கண்டவன் அது ஆன்லைன் இருப்பதாக காட்ட, மூன்று வருடம் ஆன்லைனில் வராத அந்த எண் சிறிது நாட்களாக வருவதை எண்ணி சந்தோஷப்படவும் முடியவில்லை.

    "ஆரவ் கிளம்பு. அத்தை கோவிலுக்கு கூப்பிட்டாங்க டா." என்றதும்

     "இப்ப எதுக்கு கோவிலுக்கு?"

     "அடேய் தட்டு எடுத்துட்டு சாமி சந்நிதியில வைத்து மாப்பிள்ளையை மேளத்தாளத்துல அழைச்சிட்டு வரணும். எனக்கு பண்ணினப்ப நீ எங்க போன?" என்று கூப்பிட தான் அக்கணம் மறந்து போனதை எண்ணி சந்துரு கூட நடையிட்டான்.

      இரண்டாவது தெருவில் இருந்த விநாயகர் கோவிலுக்கு சென்று தட்டை சந்நிதியில் வைத்து வணங்க, ஒவ்வொருத்தரும் பக்தியோடு வேண்டி முடித்து நின்றனர்.

     ஆரவ் மட்டும் யாருக்கோ கல்யாணம் என்ற ரீதியில் கையை கட்டி வேடிக்கை பார்க்க ஐயரோ ஆரவை வித்தியாசமாக நோட்டமிட, சுபாங்கினி தான், "ஆரவ் தொட்டு கும்பிட்டு இந்த பணத்தை தட்டில போடு" என்றதும் பணத்தை மட்டும் போட்டுவிட்டு திரும்பிக் கொண்டான்.

      மும்முறை சுற்றி வந்து தட்டை சுமந்த பெண்கள் அதனை எடுக்க சுபாங்கினி நெற்றியில் விபூதி கீற்றை சின்னதாக பூசி விட, அப்படியே நின்றான்.

    சந்துரு தான் "டேய் போகலாம்." என்றதும் நடந்தான்.
  
     மணமகளின் வீட்டில் ஆரத்தி சுற்றி வரவேற்க, அவர்களுக்கு ஆளுக்கு ஒரு பரிசை வழங்கினான்.

     கடைசியாக ஆரத்தி சுற்றி பெண் கையில் வைத்து இருந்த மையை கன்னத்தில் வைத்து எடுக்க அவனுக்கு திருஷ்டி பொட்டாக அமைந்தது.

     சுபாங்கினி வைஷ்ணவி சந்துரு என்று சுற்றி இருக்க, தட்டை மேடையில் வைத்து ஆரவ் மணமகனாக அமர்ந்தான். ஐயர் ஓதும் மந்திரங்களை வெகு சிரத்தையோடு சொன்னான்.

     அக்கணம் பெண் வீட்டில் ஜனனியின் தாய் தந்தையர் பதட்டமாக இருந்தனர். ஒருவருக்கு ஒருவர் பயத்தில் நடுங்க, எது வந்தாலும் தங்களே பதில் கூற வேண்டுமே என்று தயங்கி தயங்கி வந்தார்கள்.

    அதே கணம் சம்யுக்தா தனது வெள்ளை நிற காரில் இருந்து காட்டன் பட்டணிந்து தங்க பதுமையாக வந்திறங்கினாள்.

     தூரத்திலே ஆரவினை கண்டவளால் அவனை இரசிக்க தான் முடிந்தது.

     தன் மனதை காட்டி கொள்ளாமல் நடந்து வந்தவளை ஆரவ் கண்கள் அவளை பார்த்துவிட்டு மணப்பெண்ணின் வாயிலை நோக்கினான்.

    அங்கு மணப்பெண்ணின் தாய் தந்தையர் விழிப்பதை கண்டவனுக்கு ஏதோ சரியில்லையோ என்று புரிந்தாலும் எழுந்து கேட்க இயலாத நிலை. 

     ஆனால் சுபாங்கினி காதில் வைஷ்ணவி என்னவோ கூற சுபாங்கினி அவசரமாக ஜனனியின் தாயாரிடம் வந்து ஜனனி எங்கே என்று கேட்க, அவர்களோ...

    "இவ்வளவு நேரம் இருந்தா சம்மந்தி. இப்ப தான் காணோம்" என்று பதறவும் சுபாங்கினி சம்யுக்தாவை பார்க்கவும் சரியாக இருந்தது.

   சுபாங்கினி வேகமாக வந்து, எங்கடி என் மருமகள்? ஜனனி எங்க ஒளித்து வைத்து இருக்க சொல்லு... உன் சகவாசமே வேண்டாமென்று ஒதுங்கி போனாளும் எதுக்கு டி ஏழரை மாதிரி என் மகனை விடாம துரத்தும்?" என்று சினத்தில் கத்தவும் ஆரவ் மேடையில் இருந்து எழுந்து வந்தான்.

    "என்ன மா பிரச்சனை பண்ணற? அவ ஜனனியோட எம்டி அதனால திருமணத்துக்கு வந்து இருக்கா. தடை செய்ய வந்திருக்க மாட்டா" என்று கூறவும் சம்யுக்தாவிற்கு கண்ணிர் துளிகள் கன்னத்தில் உருண்டது.

     "நல்லா இருக்கு டா... என்னடா ஜனனியை காணோமே என்று சொன்னப்ப கூட இவ மேல சின்ன சந்தேகம் தான் வந்தது. ஆனா இவ தான் ஜனனியோட முதலாளி என்றதும் நல்லா தெரிந்திடுச்சு. இவ தான் ஜனனியை கடத்தி வைத்து இருக்கணும். இல்லை இவ வேண்டமென்றே அவளை வைத்து உன்னை பழி வாங்க வந்திருக்கணும்" என்றதும் ஆரவ் சம்யுக்தாவிடம் திரும்பி,

     "அம்மா சொல்லறது உண்மையா சம்யுக்தா" என்று கேள்வி எழுப்ப, ஆரவ் குரலில் தன் பெயர் விழவே கண்ணீரோடு இல்லை என்று தலையாட்டினாள்.

    "அம்மா மண்டபம் முழுக்க தேடி பாருங்க இருப்பா" என்றான்.

    "இல்லை தம்பி... இருபது நிமிடமா தேடறோம். அவளை காணோம். இதுல அவ போன் சுவிட்சாப் பண்ணி இருக்கா." என்று ஜனனி தாயார் பதிலுரைக்க,

      "எங்களை மன்னிச்சுடுங்க தம்பி முகூர்த்த நேரத்துல இப்படி அசம்பாவிதம் நடந்ததுக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன்" என்று ஜனனி தந்தை கூறவும், சம்யுக்தாவை திரும்பி பார்க்க, அவளோ அவன் பார்வையின் பொருள் புரிய ஜனனி பரிசு கொடுக்க தான் வந்தேன். எனக்கு அவள் எங்கென்று தெரியாது. எனக்கு இதுல சம்மந்தம் இல்லை ஆரு" என்றாள்.

     கண்களை இறுக மூடித் திறந்தவன் போன் அழைப்பு அம்மண்டபத்தினை ஓசையெழுப்பியது.

    நம்பர் என்றதும் எடுத்து காதில் வைக்க, அதில் சுவாமிநாதன் "என்னடா மணக்கோலத்தில் மணப்பெண் இல்லாமல் தவிச்சு போறியா... ஊரே காறி துப்பி உனக்கு என்ன குறை என்று பேசணும் டா. அதான் ஜனனியை கைக்குள் போட்டுக்கிட்டேன். அவமானப்படு... ஜென்மத்துக்கும் இது போதும் டா..." என்று சிரிக்க, ஆரவ் பொறுமையாக எதிரில் இருந்தவளை பார்த்து,

     "தப்பு பண்ணிட்டிங்க. ஜனனியை உங்க கைக்கு போட்டது சூப்பர் பிளான். பட் உங்க பெண்ணை இங்க என்னை சீண்டி பார்க்க அனுப்பி இருக்க கூடாது. இப்ப பாருங்க அவ கழுத்துல தாலி கட்டி உங்களுக்கு பிபி ஏற்ற போறேன்." என்று போனை அணைத்தவன் சம்யுக்தா கரத்தை பற்றி இழுத்து வந்து மணமேடையில் அமர வைத்தான்.

     உங்க அப்பாவும் நீயும் செய்த தண்டனைக்கு நீ என் மனைவியா அடிமைபடுவதை தவிர வேற வழியில்லை. உன் திருமணத்தை கண்ணால பார்க்கற கொடுப்பினை கூட உங்க அப்பாவுக்கு கொடுக்க போறது இல்லை. ஐயரே தாலி கொடுங்க" என்று நீட்ட அவரோ என்னவோ குளறுபடி என்று எண்ணி தயங்க ஆரவோ தயங்கமின்றி சம்யுக்தா கழுத்தில் தாலி கட்டினான்.

     "ஆரவ் என்ன பண்ற?" என்று சுபாங்கினி அதிர்ச்சியாக, வைஷ்ணவிக்கு யார் இந்த பெண் அண்ணா விரும்பியவளா? என்று சந்துருவை பார்க்க, சந்துருவோ நிம்மதியாக சந்தோஷம் கொண்டு சிரிப்பதை கண்டாள் 

     சுவாமிநாதன் தன் மகள் அறையில் சென்று பார்க்க, அங்கே தலையணையால் அடுக்கி வைத்து சம்யுக்தா உறங்குவதை போல வைத்து சென்றதை எண்ணி தலையிலடித்து ஆரவிற்கு மீண்டும் அழைக்க அங்கே போனை எடுத்தவன்,

     "என்ன சுவாமிநாதன் மிஸ்ஸஸ் சம்யுக்தா ஆரவோட பேசறீங்களா? என்று கேட்க நடுங்கி போனார்.

    அவரோ ஆரவ் அவளை விட்டுடு அவளை எதுவும் செய்யாதே. அவளுக்கு எதுவும் தெரியாது." என்ற வார்த்தைகள் கேளாது கட் செய்து சம்யுக்தாவை அறைந்து நின்றான் ஆரவ்.

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

   - பிரவீணா தங்கராஜ்.

     
   

    

   

    
   
    

தீவிகை அவள்🪔 வரையானல் அவன்🔥 -4

தீவிகை அவள் 🪔 வரையனல் அவன் 🔥 -4




    மயக்கம் கொண்ட சம்யுக்தாவை பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றான் ஆரவ்.

      உடனே அவசரமாக சிகிச்சை துவங்க அரைமணி நேரத்தில் மருத்துவர், "பெரிதா எதுவும் ஆகலை. மோதிய வேகத்துக்கு தலையில் மட்டும் இடித்து இரத்தம் வந்து இருக்கு அவ்ளோ தான். மயக்கம் தெளிந்ததும் கூட்டிட்டு போங்க" என்று சொல்லும் வரை அவன் கை விரல் நகங்கள் எல்லாம் பற்களால் வதைக்கப் பட்டுவிட்டது.

      ஜனனிக்கு போன் செய்து அவளுக்கு விஷயம் சொல்லி இவளின் வீட்டில் இருந்து யாரெனும் வந்துவிட்டால் ஆரவ் செல்லலாம் என்று எண்ணி ஜனனிக்கு அழைக்க எடுத்தவன் கை கால் பதிவுக்கு போவதற்கு பதில் புலனத்தின்(வாட்ஸப்) பதிவில் சென்றிட, அது நேற்று அவன் பார்த்த எண்ணினை ஓபன் ஆகி காட்டியது. உச்சு கொட்டி வெளியே வரும் சமயம் அந்த கள்ளிச்செடி ஆன்லைன் காட்டியது. 
   
    மீண்டும் அதே எண்ணை பார்த்து இருக்க கள்ளிசெடி ஆன்லைன் என்றே இருந்தது.

      யோசனைகள் வெவ்வெறு பாதையில் பயணிக்க, தன் தலையை உலுக்கி ரிசப்ஷன் நோக்கி சென்றான்.

    அங்கே பணத்தொகையை கேட்டு கட்டி முடித்தவன். "எனக்கு வேலை இருக்கு. இந்த போன் அந்த பெண்ணோடையது. அதில் யாராவது நம்பரில் இருக்கறவங்களுக்கு கால் செய்தா வந்து பார்த்துப்பாங்க. அதுவரை மயக்கத்தில் இருக்கறவங்களை நீங்க பார்த்துக்கோங்க. பணம் யார் கட்டினா என்று கேட்டா மட்டும் இந்த கார்டு காட்டுங்க." என்று தன் வாலெட்டில் இருந்த தனது ஆரவ் என்ற பெயரை தாங்கிய அட்ரஸை நீட்டினான்.

    மருத்துவருக்கு பணம் வந்து விட்டது. இனி தங்கள் பார்த்து கொள்வதாக கூறி சரி என்றனர்.

     ஒரு முறை அவளின் அறைக்கு சென்று பார்க்க நினைத்த கால்களை மனதால் கட்டுப்படுத்தி யாரோ ஒருத்திக்காக மனம் தளராதே... இவள் திமிர்பிடித்தவள் என்று நகர்ந்தான்.

      ரிசப்ஷன் பெண் சம்யுக்தா போனில் இருந்த "அப்பா" என்ற எண்ணிற்கு அழைத்து விஷயம் சொல்ல அவர் அடுத்த நிமிடமே தனது காரில் பறந்து வந்தார்.

     முதலில் மகளை பார்க்க தான் ஓடினார் சுவாமிநாதன். 

     சம்யுக்தாவும் அதே நேரம் விழிதிறக்க தந்தை வந்து இருக்கார் என்பதை தாண்டி தன்னை காப்பாற்றிய ஆரவை தேடினாள். அறை மயக்கத்தில் அவன் பிம்பம் தானே தெரிந்தது என்ற எண்ணம் மேலோங்க தந்தைக்கு பார்த்து  வெளியே நிற்கின்றானா என்றே எட்டி எட்டி பார்த்தாள்.

     "என்னடா சம்யு குட்டி பார்த்து வண்டி ஓட்டக் கூடாதா. ஒரு நிமிஷத்துல பயந்துட்டேன் தெரியுமா." என்றவர் பேச்சை அவள் செவியில் சேரவில்லை.

    தற்போது அந்த ஆரவ் இருக்கின்றானா இல்லையா? என்ற எண்ணம் அதிகமானது.

     "இப்ப எப்படி இருக்கு சம்யு?" என்று தந்தை கேட்க பரவாயில்லை பா" என்றாள்.

    "உங்களுக்கு வேறெங்கும் பெயின் இருந்தா சொல்லுங்க. அப்படியில்லை என்றால் யூ கேன் கோ" என்று டாக்டர் சொல்லவும்

    "பில்... தாங்க கட்டிட்டு கிளம்பறேன். அப்பா நீங்க"  என்றாள் சம்யுக்தா தந்தையை கட்ட சொல்லும் பொருட்டு.

     "மேம் உங்களை கூட்டிட்டு வந்தவரே பில் பே பண்ணிட்டார். அவருக்கு வேலை இருந்ததால் கிளம்பிட்டார். இது அவர் கார்டு" என்று நீட்ட,

     "பரவாயில்லையே கூட்டிட்டு வந்ததும் இல்லாம பில் பே பண்ணி சொல்லிட்டு போய் இருக்கார். நல்ல மனிதன்" என்று மகள் வெறித்து பார்க்கும் அட்ரஸ் கார்டை வாங்கி பார்த்தார்.

     "சம்யுக்தா.. கிளம்பு போகலாம். இந்த ஊரில் ஆபத்துல சேர்த்துட்டு அப்படியே ஓடி போற காலம். அதை எல்லாம் மனதில் ஏற்றிக்காதே" என்று அட்ரஸை கிழித்து குப்பையில் போட்டு விறுவிறுவென கிளம்பினார். பின்னால் வந்த சம்யுக்தா குப்பை கூடையை பார்த்து அந்த அறையையிலிருந்து  விடைபெற்றாள். 

    தனது தலை விண்ணென்று வலி தர சுணக்கத்தோடு புறப்பட்டாள்.

      சுவாமிநாதன் சினத்தோடும், சம்யுக்தா மருத்துவமனையின் வெளிபுறம் யாரையோ தேடியபடியும் கண்களை நாலப்புறம் துழாவி தந்தை காரில் அமர்ந்தாள்.

     ஆரவ் வீட்டுக்கு வந்து குறுக்கும் நெடுக்கும் அலைந்தவன் கள்ளிச்செடியை கண்டான்.

    அதில் டைப் செய்து கொண்டு இருக்கும் பச்சை நிறம் தென்பட்டு பிறகு காணாமல் போனது.

    எழுதி எழுதி அழித்துக் கொண்டு இருந்த அந்த எண்.

   ஒரு கட்டத்தில் டைப் நடந்தவையை அனுப்ப இயலாது சுவிட்ச் ஆப் செய்து விட்டது. ஆனாலைனில் இருந்து போனதும் ஆரவ் உதடு ஏளனமாக வளைந்தது.

     இதுவரை இறுக்கம் கொண்ட மனம் தளர்ந்து நிம்மதியானது.

   இரண்டு நாள் ஆரவ் தன் பணியில் கவனம் செலுத்தி ஆட்களை பிரித்து புது டீம் போட்டு தயாரானார்கள்.

        அப்பொழுது ஒரு செக் வந்தது. அது "என் மகளுக்கு ஆபத்தில்  மருத்துவமனைக்கு சேர்த்து கட்டிய தொகை" என்று லெட்டரும் செக்கும் வர, அதில் இருந்த தொகை ஆரவ் கண்களுக்கு பிளாங் செக்காக காட்சியளித்தது.

    சிறிது நேரம் அதனை வெறித்தவன். செக்கை கிழித்து குப்பையில் வீசினான்.

     பணியின் மீது கவனம் சிதற ஜனனிக்கு போன் செய்தான்.

    ஜனனியோ "ஆரவ் பத்து நிமிடம் கழித்து பேசறேன் எங்க சார் முசுடு கொஞ்சம் ப்ளிஸ்" என்று கெஞ்ச ஆரவ் சரியென்று அணைத்தான்.

       சார்ரா... அப்ப அவள் இல்லை... ரெஸ்ட் எடுக்க வராமல் இருக்கலாம் என்றவனின் மனம் ஜனனியை காண மாலை பிரேக் நேரம் வந்தான்.

    ரிசப்ஷன் வந்தவன் பிரெண்ட்ஸ்கு கொடுக்க இன்விடேஷன் நாம சேர்ந்து சூஸ் பண்ணலாமா? என்று கேட்டு கொண்டுயிருந்தான்.

    சுவாமிநாதன் சம்யுக்தாவை போலவே வெளியே வந்து, "என்ன பிரச்சனை ஜனனி?" என்று கேட்டதும் திரும்பியவன்.

     "என்ன ஜனனி நீ. நமக்கு மேரேஜ் பற்றி இங்க யாரிடமும் சொல்லையா பார்க்கறவங்க எல்லாரும் தப்பா எடுத்துக்கறாங்க பாரு. 
    
     ஹாய் சார் நான் ஆரவ். ஜனனியை திருமணம் செய்ய போறவன். இன்விடேஷன் கடைக்கு எப்ப போகலாமென்று கேட்க வந்தேன். நீங்களும் உங்க மகள் மாதிரியே எங்களை பார்த்து தப்பா எடுத்துக்கிட்டிங்க. நான் இந்த கம்பெனியோட டீலுக்கு ஒர்க் வேற கமிட் ஆகியிருக்கேன் சார்" என்றான்.

    சுவாமிநாதனுக்கு இவன் அடிக்கடி வருகின்றானா? மகள் பார்த்து இருக்கின்றாளா? என்ற எண்ணம் போக வேகமாக பதில் பேசாமல் போனார். 

    "ஜனனி நான் இந்த கடைக்கு போறேன். அங்க இருந்து இன்விடேஷன் சிலதை போட்டோ அனுப்பறேன் எது பிடிக்கின்றதோ சொல்லு அதை ஆர்டர் கொடுத்திடுவேன்" என்று கிளம்பினான். 

   சுவாமிநாதனுக்கு ஓர்க் கமிட் வேறு என்றானே என்று ஜனனியிடம் கேட்க, ஆமா சார் நம்ம நெக்ஸ்ட் புராஜக்ட் ஆரவ் தான் பண்ணறார்." என்று பதில் தந்து நின்றாள்.

    "ஜனனி காதல் திருமணமா?" என்ற கேட்கவும்
  
    "இல்லை சார் பெற்றோர் பார்த்த வரன் தான்" என்று சொல்லவும் மகள் முகம் சில நாட்களாக இயல்பாக இல்லாமல் போனதற்கு இது தான் காரணமா? என்று யோசனைக்கு போனார்.

         சம்யுக்தா தலையில் சின்ன வலியோடு அடிக்கடி சுணங்க, தந்தை வீட்டுக்கு வந்ததும் அக்கேள்வியை கேட்டழுப்பினார்.

     "அவன் கூட ஏன் மா ஓர்க் டீல் பண்ண சம்மதிச்ச?"

     "அப்பா... பெர்ஸனல் வேற அலுவலக விஷயம் வேற. அவரோடது என்று தெரியாது நேரில் வந்த அன்று தான் தெரியும். அதுவும் கையொப்பம் பண்ணிட்ட பிறகு என்ன செய்ய அதான் விட்டுட்டேன். ஜனனியை மணக்க போறவர். அவ்ளோ தான். நீங்க ஏன் வேற யோசிக்கறீங்க." என்றாள் சம்யுக்தா.

    "என்னயிருந்தாலும்.. அவன்..."
  
    "அப்பா... முடிஞ்சி நாலு வருடம் ஆகுது. அதுக்கு திறப்பு விழா எப்பவும் ஏற்படாது." என்று அறைக்கு போனாள்.

    தலையணையை தன் நெஞ்சோடு அணைத்தவள், 'ஆரவ் திருமணம் செய்ய தலையாட்டி இருக்கார் என்றால் எல்லாத்தையும் கடந்துட்டார். அவருக்கு முடிந்துப்போன விஷயம் பேச பிடிக்காது. இந்த திருமணம் நிச்சயம் நடக்கும் அது எனக்கு தெளிவாக தெரியுது.' என்றவள் கண்ணயர்ந்தாள்.

இப்படியாக நாட்கள் செல்ல... ஆரவ் ஜனனியை பார்க்க அவள் பணியிடம் வருவது குறைவானது. ஜனனி ஆசைப்பட்டால் வேறொரு இடம் சொல்லி அங்கே காண செய்தனர்.

     ஆரவ் அதற்கேற்றது போல ஜனனி  வீட்டோடு உடையை தேர்ந்தெடுக்க சென்று வந்தான்.

   சுபாங்கினிக்கு ஜனனி ஆரவ் பேசிக் கொள்வதை கண்டு தற்போதே திருமண வைபோகம் முடிந்து நிறைவு கண்டார்.

  பொன்னை உருக்கி தாலி செய்ய கொடுத்து விடவும் செய்தனர். வைஷ்ணவி கணவன் சந்துரு கூட ஆரவ் செய்கையை கண்டு இந்தளவு மாற்றம் இவனிடமா என்று ஆச்சரியம் கொண்டான்.

   சந்துரு மற்றும் ஆரவ் நாளை மறுநாள்  நடக்கும் திருமணத்துக்கு பொன் தாலியை வாங்க சேர்ந்து வந்தனர். தங்கை கணவன் மச்சான் என்ற முறையை தாண்டி சந்துருவிடம் ஆரவ் பேசவில்லை. ஆரவும் அதை பெரிது படுத்தவில்லை. இவன் வெறுத்தால் அடியோடு வெறுக்கும் ஆள் தான் என்று நண்பனாக அறிந்தவன் ஆயிற்றே.

   தாலி வாங்கி வரும் சமயம் எதிரே ஜனனி மறுக்க மறுக்க, சம்யுக்தா அவள் கையில் அதை கொடுக்க சந்துருவிற்கு இவ எங்க இங்க. இவளை பார்த்தா கல்யாணம் நடந்த மாதிரி தான் என்று ஆரவை வேறு பக்கம் திசை திருப்ப முயல,

    அவனோ சந்துருவை பார்த்து ஜனனியை நோக்கி நடந்தான்.

      "ஆரவ் நீங்களா... மேம் கிட்ட சொல்லுங்க. இப்பவே கல்யாண பரிசா செயின் பிரசண்ட் பண்ணறாங்க. திருமணத்துக்கு வந்து தாங்க என்று சொன்னா மறுக்கறாங்க" என்றாள்.

     "ஒரு வேளை திருமணத்துக்கு வரவேண்டாம் என்று எண்ணியிருக்கலாம். வாங்கிக்கோ." என்றான் ஆரவ்.

    சம்யுக்தா சந்துருவை கண்டு அண்ணா என்று அழைக்க செல்லும் நேரம் அவன் பார்வை திருப்ப சம்யுக்தா அழைக்காமல் நிறுத்தினாள்.

    " சரி ஜனனி நான் கிளம்பறேன். இதை அப்பறமா தர்றேன்." என்று கிளம்பகனாள்.

  சந்துருவிற்கு 'இதுங்க ஏற்கனவே பார்த்து இருக்குதுங்களா. கடவுளே... இந்த திருமணம் நடந்த மாதிரி தான்'. என்று மனதோடு புலம்பினான்.

    ஜனனியோ இன்னிக்கு பிறகு வெளியே விட மாட்டாங்க சொன்னேன் மேம் நகை வாங்க கூட்டிட்டு வந்தாங்க.  திடீரென மூன்று சவரன் நெக்லஸ் எடுத்து பரிசு என்று நீட்டினாங்க. மறுத்ததும் செயின் வாங்க சொல்லி வற்புறுத்தி செலக்ட் பண்ண வைத்துவிட்டார்கள் ஆரவ். ரொம்ப நல்ல மனசு." என்றாள் ஜனனி.

    "பணம் அதிகம் இருக்கு. செலவு பண்ணறா சரி நான் வர்றேன் " என்று சந்துருவை அழைத்து சென்றான். 

    "அவளை எப்ப பார்த்த? என்னிடம் சொல்லலை டா. அவ்ளோ வேண்டாதவன் ஆகிட்டேன் அப்படி யானே டா" என்றான் சந்துரு.

    "யாரோ ஒருத்திய பார்த்தேன்... வைத்தேன்.... உன்னிடம் எதுக்கு சொல்லணும். முடிஞ்சதை பேசி... ஜனனி வேலை பார்க்கற எம்டி அவ. திருமணத்துக்கு பிறகு ஜனனியை அங்க வேலை பார்க்க விட மாட்டேன்." என்று ஆரவ் காரில் ஏறினான். சந்துருவால் காதை நம்ப இயலாது மற்றவை பேசாது அமைதியாக இருந்தான்.

   முடிந்ததை நினைவு படுத்தினால் நிகழ்வுகள் மாறலாம் யாரெனும் பாதிக்கலாம் எதற்கு வம்பு என்று மட்டுமே அமைதியாக மாறினான்.

வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

- பிரவீணா தங்கராஜ்

     இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். 

இனி திங்கள் வெள்ளி பதிவு தவறாது வரும் என்பதை அறிவிக்கிறேன்.

 ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி 😊🙏

   



 

பஞ்ச தந்திரம் -18 (முடிவுற்றது)

 பஞ்ச தந்திரம்-18   திரிஷ்யா இரண்டு நாளுக்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்டாள்.    மஞ்சரியாக எதையும் கேட்கவில்லை ஏன் அப்படியொரு விஷயம் கூறி அவகா...