இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பஞ்ச தந்திரம்-13

பஞ்ச தந்திரம்-13     சூர்யா வந்தப் பிறகு அன்றைய இரவு ரொம்பவே ஹாப்பியா இருந்தோம்.         எங்களுக்கான வாழ்க்கை ஒளிமையமா தெரிந்தது. மிலிட்டரிக்கு நேரம் முடியற வரை அவரும் சும்மா தானே வீட்ல இருந்தார். இனிக்க இனிக்க தினமும் தேன் நிலவு தான்.       ஒரு பெண் எந்தளவு சந்தோஷமா வாழணுமோ அந்தளவு ரொம்ப சந்தோஷமா மனநிறைவா வாழ்ந்தேன்.     சூர்யா கூட அடிக்கடி கேட்பார். 'ஏன் ரஞ்சு.. அப்பா அம்மா மீறி கல்யாணம் பண்ணிட்டோம். ஏதாவது பீல் பண்ணறியா. அப்படின்னா சொல்லு... காஸ்மீர் போகறதுக்கு முன்ன காம்பர்மைன்ஸ் பண்ணிட்டு போறேன்'னு சொன்னார்.         நீங்க எதுவும் சமாதானம் பண்ண வேண்டாம். அவங்களா ஒரு நாள் வருவாங்க சொன்னேன். உறவுகள் தானா நம்மளை முழுமையா மாத்தும்னு நற்பினேன்.     ஆனா எங்க வீட்லயும் அவர் வீட்லயும் சுத்தமா சேர்த்துக்கலை. நானும் உடனே கன்சீவ் ஆகிட்டேன். ஒரு குழந்தை பிறந்தா எல்லா உறவும் வரும்னு சொல்வாங்க. ஒருவேளை வாயும் வயிறுமா இருந்தா வீட்டுக்கு முன்ன போனா சேர்த்துப்பாங்கனு கூட போனேன். வாசல் கதவை அடைச்சி நாயை விட்டு துரத்த பார்த்தாங்க. நான் வளர்த்த நாய் என்னை துரத்தலை நானா வந்துட்டேன்.  சூர்யாவும்

தீவிகை அவள்🪔 வரையனல் அவன்🔥-10

படம்
  தீவிகை அவள்🪔வரையனல் அவன்🔥-10            சம்யு வரும் பொழுதே ஜார்ஜ் சுபாஷும் வழி மறித்தனர்.     "ஏம்மா தங்கச்சி அன்னிக்கு ரிப்ளை பண்ணலை சொன்ன. இப்ப சீனியர் ஆரவ் காதலி சொல்லறியாமே. பையன் நிஜமாவே விரும்பறானா." என்று கேட்க சம்யுவோ      "நீங்க நம்பினா ஆமா அண்ணா. நம்பலைனா இல்லைண்ணா." என்று சிரிக்க,     "நல்லா இருந்தா சரி." என்று கிளம்பினார்கள்.       யோகிதா தான் "ம்ம்... சம்யு காலேஜ்ல வந்து ஆறு மாதத்தில் இந்தளவு பாப்புலர் ஆகிட்ட. என்ன ஒரு குறை நீயும் அண்ணாவும் நேரில் பேசியோ அறிமுகப்படுத்தியோ செய்யாமா எஸ்கேப் ஆகற" என்று கிண்டல் செய்ய புன்னகை பூத்தவள் அப்படியே உறைந்து போனாள்.     ஆரவ் கண்கள் ரௌவுத்திரமாக திவேஷ் சட்டையை உலுக்கி கொண்டுயிருந்த காட்சியை கண்டு.       ஆரவ் இருந்த இடம் நோக்கி ஓடிட, "யாரிடம் காதல் டயலாக் விட்ட..." என்று ஒரு குத்து விட்டான். ஓட்டு மொத்த சினத்தை காட்டி விட, தடுக்க கூட அஞ்சி நின்றாள் சம்யுக்தா.      சம்யுக்தாவை பார்த்த பின் திரும்பியவன், "இதோட உன் வேலையை நிறுத்திடு... இந்த சிண்டு முடித்து சண்டையை மூட்டற வே

தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥-9

படம்
தீவிகை அவள்🪔வரையனல் அவன்🔥-9      சம்யுக்தா மனம் ஆரவினை பார்க்க சொல்ல அவனோ தன் வகுப்பறை மட்டுமே குறியாய் சென்றான்.      இது அன்று மட்டும் நிகழவில்லை. ஒரு மாதக் காலம் இப்படி தான் நகர்ந்தது.        ஆரவ் வரும் நேரத்திற்குள் தானாக வந்து தவம் கிடக்கும் தாரகையாக இருந்தாள் ஆரவ். ஆரவ் கேன்டீனில் எந்த இடத்தில் அமருவான். மாலையில் எந்த மரத்தின் திக்கில் நிற்பான். அவனின் உற்ற நண்பன் யார். எப்படிப்பட்ட பையன். இப்படி எல்லாவற்றிலும் ஒரு ஆவல் எழ அனைத்தும் அறிந்தாள்.     அவனுக்கு இதுவரை காதலி என்றவள் இல்லையென்பது வரை அறிந்து இருப்பினும் ஆரவோடு பேச பழக தயக்கமிருக்க அதற்கான காலநேரத்திற்கு காத்திருந்தாள்.      அன்று கேண்டீனில் எப்பொழுதும் போல வந்தவள் பார்வை ஆரவை காண தோழிகளோ அவளை அறியாது கேண்டீனில் ஆர்டர் கொடுத்து விட்டு சாப்பிட்டனர். கடைசியாக பில் மொத்தமாக வர அதை சம்யுக்தாவிடம் தள்ளி விட்டு ஓட முயல, யோகிதாவை பிடித்தவள்    "யோகி நான் இன்னிக்கு பார்த்து பர்ஸ் எடுத்துட்டு வரலை டி" என்று சொல்ல ஆரவ் திரும்பி பார்க்க, சம்யுக்தா அவனை கண்டு யோகிதாவை பார்த்து வைக்க, யோகிதாவோ,     &qu

தீவிகை அவள் வரையனல் அவன்-8

படம்
*தீவிகை அவள்🪔 வரையனல் அவன்🔥-8*      அன்று தான் சம்யுக்தா பிபிஏ  முதலாமாண்டு சேர்ந்த முதல் நாள்.     தயங்கி தயங்கியபடி விழித்து வந்தாள்.      கலை கட்டிக் கொண்டு இருந்தன. முதல் நாள் கல்லூரி ரேகிங்.      பெரும்பாலும் ஆண் பெண் பேதமின்றி கிண்டல் கேலி என்றும் செய்தார்கள். சிலருக்கு சொல்வதை செய்து விட்டு போக வேண்டும் என்ற கட்டளையும் விடுத்திருந்தனர்.    சின்ன சின்ன மொட்டு விழியில் நடந்து வந்தவளை வகுப்பின் முதல் தளம் செல்லும் நேரம் அங்கே பெஞ்சில் இருந்த நால்வர் அழைக்க திருதிருவென விழித்து, "நானா அண்ணா" என்றாள்.      "நால்வரின் மூவர் அவனை பார்த்து சிரிக்க, அவனோ போச்சு அண்ணானு சொல்லிட்டா என்று வருந்த, சம்யுக்தாவோ "எதுக்கு அண்ணா நீங்க மூன்று பேரும் இந்த அண்ணாவை பார்த்து சிரிக்கறீங்க." என்றதும்     "எம்மா நாலு பேரையும் அண்ணானு சொல்லிட்ட போதும்மா... பேலன்ஸ் வை. அப்பறம் யாரை வைத்து உன்னை ஓட்டுறது." என்று கூறி சம்யுக்தாவை ஏறயிறங்க பார்த்தான்.      "மச்சி நம்மளை அண்ணா சொல்லி இந்த பூச்சி எஸ்கேப் ஆகப்பார்க்குது. நாம செமையா மாட்டி விடணும்.&quo

தீவிகை அவள்🪔 வரையனல் அவன்🔥 -7

படம்
தீவிகை அவள்🪔 வரையனல் அவன்🔥-7         சுபாங்கினிக்கு ஆரவ் செய்கை எதுவும் பிடிக்கவில்லை. எப்படியெல்லாம் நடத்தி அவனை கஷ்டப்படுத்தினாள். ஆனால் இன்று அவளையே தாலி கட்டி அழைத்து வந்து விட்டானே... பற்றாததற்கு தான் ஒரு வார்த்தை சொன்னதற்காக அவன் கழுத்தில் இருந்த செயினை கழட்டி அவளுக்கு அணிவித்து விட்டானே. எல்லாம் இந்த ஜனனியால் தான்.       ஆரவ் மனதில் சம்யுக்தா இன்னமும் இருப்பாளோ என்ற சிந்தனையை எழும்ப சுபாங்கினியோ இறைவனை நாடி பூஜை அறைக்கு சென்று அமர்ந்தார்.      ஆரவ் பின்னோடு வந்த சம்யுக்தா அடுத்து என்ன நடக்குமோ என்று விழி பிதுங்கி நின்றாள்.      ஆரவ் திரும்பியதும் அவள் மீது மோத போக, "இப்ப எதுக்கு என் பின்னாடியே வந்து நிற்கற, தள்ளு..." எரிந்து விழுந்தான்.      சம்யுக்தா தள்ளி நின்று நடுங்க செய்தாள்.      ஏசியறையில் உடல் முழுக்க ஈரத்தில் அவள் நடுங்க, ஆரவோ 'நீங்க வாங்கி தந்த சேலை' என்றது நினைவு வர, மெல்ல மெல்ல அவளை கண்டான்.       காட்டன் பட்டு தங்க மயில் பார்டர் நினைவு வர அவளை பாதம் முதல் உச்சிக்கு தன் கண்களால் அளவிட்டான்.        அதே நிறம் அதே டிசைன் என்றவன் கண்கள் பி

தீவிகை அவள்🪔வரையனல் அவன்🔥-6

படம்
தீவிகை அவள்🪔வரையனல் அவன்🔥-6          ஆரவ் கன்னத்தில் அடித்து விட, தன் இடது கையால் கன்னத்தை அழுத்த பிடித்து, மறு கையான வலது கரத்தால் தன் மார்பில் ஆரவ் கட்டிய தாலியை இறுகப் பற்றியபடி கண்கள் சொறுக மயங்கி சரிந்தாள்.        ஆரவ் அடித்ததும் மறுப்பு தெரிவிப்பால், அல்லது தாலி கட்டியதால் சண்டையிடுவால் அல்லது அடித்ததிற்காது கோபிப்பாள் என்று இருக்க மயங்கி சரியவும் ஆரவ் அவளை கீழே விழும் முன் தாங்கி நின்றான்.        "ஹேய்.... யுக்தா... என்ன டிராமா பண்ணற? எழுந்துரு... எதுக்கு மயங்குற?" என்று தட்டி எழுப்ப அவளோ, "தூக்க மாத்தி...ரை" என்று சொல்லி முடித்து மயங்கிவிட்டாள்.       தூக்கமாத்திரை என்றால் சூசைட் அட்டன் பண்ணியிருப்பாளோ என்று அச்சம் வரவும்,       "இங்க யாராவது டாக்டர்ஸ் இருக்கீங்களா?" என்ற மண்டபம் அதிர கத்தவும், ஒரு பெண் முன் வந்து நின்றாள்.       சம்யுக்தாவின் பல்ஸ் செக் செய்து பார்த்தாள்.           "பல்ஸ் டவுன் ஆகலை. இவங்க நார்மலா தூங்கற லெவலுக்கு தான் மாத்திரை போட்டு இருப்பாங்க. எழுந்ததும் சரியாகிடுவாங்க." என்று கூறவும் ஆரவ் யாருமறியாது பெ

தீவிகை அவள்🪔வரையனல் அவன்🔥-5

படம்
🪔தீவிகை 🔥வரையனல்-5       நாளை காலை ஆரவ்- ஜனனி திருமணம்.      ஆரவ் எந்தவித ஆர்ப்பாட்டம் இன்றி தனது கல்லூரி தோழர்களுக்கு பேட்சுலர் பார்ட்டி வழங்கினான்.    சந்துருவிற்கு தான் மனம் திக்திக்கென்று பதறியது.     வைஷ்ணவி தெரிவித்தால் எப்படியும் அத்தை சுபாங்கினியிடம் எதையாவது உளறுவாள் என்றே அவளிடமும் எதையும் தெரிவிக்கவில்லை.      ஜனனியோ தன் கைகள் செக்க சிவந்த மருதாணியை பார்த்து கொண்டு இருந்தாள்.     சுபாங்கினி ஊரில் உள்ள இறைவனுக்கு எல்லாம் மகன் திருமணம் நல்லபடியாக முடிவடைய பிரார்த்தனை விடுத்தாள்.      சுவாமிநாதன் தான், " அவனுக்கு நம்ம கம்பெனி புராஜக்ட்ல சீன் பண்ணி கொடுத்திருக்க கூடாது சம்யு. அவனுக்கு போய்... என்னமா நீ.."     "டாட்... அது அவர் என்று தெரியாம சீன் பண்ணியது. அதுக்கு பிறகு மாற்ற முடியலை" என்றதும் சுவாமிநாதன் அவளை உறுத்து விழிக்க, சம்யு பார்வையை மாற்றினாள்.     ஆப்பிளை கட் செய்ய ஆரம்பித்தாள்.    "அவர்.... இன்னமும் மரியாதையா மா?" என்றதும் சம்யுக்தா தந்தையை நேரிடையாக பார்த்து அவர் நம்ம ஆபிஸ் வந்தப்ப ஆரவ் என்று எட்டி நின்று தான் பேசி

தீவிகை அவள்🪔 வரையானல் அவன்🔥 -4

படம்
தீவிகை அவள் 🪔 வரையனல் அவன் 🔥 -4     மயக்கம் கொண்ட சம்யுக்தாவை பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றான் ஆரவ்.       உடனே அவசரமாக சிகிச்சை துவங்க அரைமணி நேரத்தில் மருத்துவர், "பெரிதா எதுவும் ஆகலை. மோதிய வேகத்துக்கு தலையில் மட்டும் இடித்து இரத்தம் வந்து இருக்கு அவ்ளோ தான். மயக்கம் தெளிந்ததும் கூட்டிட்டு போங்க" என்று சொல்லும் வரை அவன் கை விரல் நகங்கள் எல்லாம் பற்களால் வதைக்கப் பட்டுவிட்டது.       ஜனனிக்கு போன் செய்து அவளுக்கு விஷயம் சொல்லி இவளின் வீட்டில் இருந்து யாரெனும் வந்துவிட்டால் ஆரவ் செல்லலாம் என்று எண்ணி ஜனனிக்கு அழைக்க எடுத்தவன் கை கால் பதிவுக்கு போவதற்கு பதில் புலனத்தின்(வாட்ஸப்) பதிவில் சென்றிட, அது நேற்று அவன் பார்த்த எண்ணினை ஓபன் ஆகி காட்டியது. உச்சு கொட்டி வெளியே வரும் சமயம் அந்த கள்ளிச்செடி ஆன்லைன் காட்டியது.          மீண்டும் அதே எண்ணை பார்த்து இருக்க கள்ளிசெடி ஆன்லைன் என்றே இருந்தது.       யோசனைகள் வெவ்வெறு பாதையில் பயணிக்க, தன் தலையை உலுக்கி ரிசப்ஷன் நோக்கி சென்றான்.     அங்கே பணத்தொகையை கேட்டு கட்டி முடித்தவன். "எனக்கு வேலை இருக்கு. இந்த போன