இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மர்ம நாவல் நானடா-23 (முடிவுற்றது)

  அத்தியாயம்-23    யாஷிதா அவனின் முனங்கல் கேட்டு மாடி ஹாலில் நடந்தவள் திரும்ப, வேகமாய் வந்தவன் அவளை இடித்து, அணைத்து உருண்டப் பின்னே சுதாரித்தான்.    அவள் மீது தன் தேகத்தை மொத்தமாய் சரித்திருந்தான். அந்த களோபரத்திலும் அவள் தலைக்கு முட்டுக்கொடுத்து அவள் சிரத்தை தாங்கியிருந்தது வலது கை. இடது கையோ அவளது இடையை வளைத்திருந்தது.   அவளோ சுற்றம் மறந்திருக்க, ஹரிஷின் கணம் தாளாமல் எழ முயன்றாள். ஹரிஷே வேகமாய் பதறிவிட்டு எழுந்திட, இருவருக்கும் மூச்சு வாங்கியது.    "நான் என்ன இன்னும் இன்விசிபிளாவா இருக்கேன்." என்று யாஷிதா கேட்க, "இ.. இ..ல்லை என்று தலையாட்டவும் அவனது முகமாறுதல் அவளுக்குள் ரசிப்பை ஏற்படுத்த, அளவிடாத காதலை நெஞ்சில் எடுத்துரைத்தது.    இதற்கு மேல் மனக்கடலில் காதல், கடலணை  உடையவும், யாஷிதா அவன் காலரை பற்றி இழுத்து, அலமாரி கதவை திறந்து, உள்ளே நுழைந்து சாற்றினாள்.      "உன்கிட்ட நிறைய பேசணும். என்னால இதுக்கு மேல மறைக்க முடியலை.     ஏதாவது கிறுக்குதனமா பேசிட்டு பிறகு நீ பின்வாங்கிட்டா? அதனால கேட்கவே தயக்கமாயிருக்கு. ஆனா கேட்காமலும் இங்கிருந்து போக முடியலை. நானும் இந்த பேச

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

படம்
  முதல் முதலாய் ஒரு மெல்லிய  💘  1                    பேருந்தில் அதிகக் கூட்டம் இல்லை. ஜன்னலோர இருக்கை பவித்ராவுக்கு கிடைத்தது. இதே தோழிகளுடன் செல்லும் போது கிடைத்தால் பேசுவதற்கு நன்றாக இருக்கும். இதே மற்ற நேரமாக இருந்தால் தனிமையில் செல்ல ரசித்துக் கொண்டும் , வேடிக்கைப் பார்த்து கொண்டும் வருவாள். ஆனால் பவித்ராவிற்கு இது இரண்டும் இல்லாது போனது. தற்போது நெஞ்சம் முழுவதும் சோகங்கள் ஏற்றி கணத்த இதயமாக நெஞ்சுப் பிசைந்தது அவளுக்கு.       அவளையும் அறியாது உறங்க , உறக்கத்திலும் அவள் அழுத தடயம் தென்பட்டது. நேரம் வேகமாக ஓட இதோ அவளது இறங்கும் இடம் சென்னையும் வந்து விட்டது.            அவளை அழைக்க அவளது தந்தையின் நண்பர் , விஸ்வநாதன் அங்கிள் காத்திருந்தார். இறங்கிய உடனே தனதுச் சிறு புன்னகையை சிந்தினாள்.     '' வெல்கம் டு சென்னை மா. '' என்று ஆசையாக வரவேற்றார்.     '' தேங்க்ஸ் அங்கிள் ரொம்ப நேரம் காத்திருக்க வச்சிட்டேன் . பஸ் அரை மணி நேரம் லேட் அங்கிள் ஸாரி. '' என்றாள்.     '' பரவாயில்லைமா நான் இப்ப தான் வந்து பத்து நிமிடம் ஆகுது. சொந்தக் கார் சர

வெற்றி எளிதல்ல

படம்
வெற்றி எளிதல்ல   காற்றுக்கு ஒலி சுமையானால்  இசை கிடைப்பதில்லை    கல்லுக்கு உளி சுமையானால்  சிற்பம் கிடைப்பதில்லை  மண்ணுக்கு ஏர் சுமையானால்  விளைச்சல் கிடைப்பதில்லை  மண்ணிற்கு மழைத்துளி சுமையானால்  நீர்துளி கிடைப்பதில்லை  தாளுக்கு மை சுமையானால்  கவிகள் பிறப்பதில்லை  தாய்க்கு சேய் சுமையானால்  தாய்மைக்கு அழகு இல்லை  வாழ்க்கைக்கு தோல்வி சுமையானால்  வெற்றி கிடைப்பதில்லை. --  பிரவீணா  தங்கராஜ் . *2008-இல் பாரதி மகளிர் கல்லூரி ஆண்டு மலரில் பிரசுரிக்கப்பட்டவை . *செப் 2008-இல்  "மங்கையர் மலரில் "  "பூஞ்சரல் பக்கங்களில் பிரசுரிக்கப்பட்டவை .