Posts

Showing posts from 2023

நீ என் முதல் காதல் -17

 அத்தியாயம்-17    ம்ருத்யு ஸ்ரீநிதி அருகருகேயிருக்க "ம்ருத்யு இரண்டு நாளா ஜீவியை காணோம் டா. என்னப்பண்ணறதுனு தெரியலை." என்று கண்ணீர் வடித்து நின்றவளிடம் "அவன் உன்னை கழட்டிவிட்டுட்டான் ஸ்ரீ. உனக்கு புரியலையா?" என்று மணக்கும் வாசனை திரவியத்தை தன் சட்டையில் தெளித்து சுவாசித்தான்.     ஸ்ரீநிதி அங்கிருந்த மெத்தையில் தொப்பென அமரவும், நிதானமாக "அவன் அத்தையோட தொழில்முறை எதிரியோட பையன். இதுல அத்தையவே சைட் அடிச்சிருக்கான்.     உன்னிடம் வாலாட்ட காதல் என்ற அழகான விளையாட்டை தொடுத்து மனசுல புகுந்திருக்கான்.    இப்ப நாலு நாளா போன் கான்டெக் இல்லை. இரண்டு நாளா ஆளையே காணோம்.      நீ பதறுற அளவுக்கு கூட அவங்க அப்பா தேடலை. அவர் கம்பெனிக்கு இப்பவும் வந்திருப்பதா நீ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்ன ஆபிஸ்ல புதுகம்பெனி என்று பேசி சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கற மாதிரி கேட்டதுக்கு அவரும் வந்ததா சொல்லற. அப்ப பையன் மட்டும் எங்கப்போவான்?    லுக் ஸ்ரீ, உன்னை வச்சி அத்தையோட சாம்ராஜியத்தை அழிக்க முயற்சிப் பண்ணிருப்பான். அது முடியலை. அட்லீஸ்ட் உன்னை அசைத்து பார்த்துட்டான். நீயும் முட்டாளா கண்ணுல

நீ என் முதல் காதல்-16

  அத்தியாயம்-16 ஒரு வாரம் ஸ்ரீநிதி ம்ருத்யுவிடம் பேசவில்லை. அவனுமே குறைத்து கொண்டான். எப்படியும் தனக்கானவளாக முடிவெடுத்தப்பின் ஜீவியை பற்றியும் அவன் தந்தை பற்றியும் கொஞ்சம் அறிந்து வைத்துக்கொள்ள நினைத்தான். இந்த ஒரு வாரத்தில் அதற்கான வேலையில் தீவிரமாக இருந்த கணம் ஜீவி உண்மையில் ஸ்ரீநிதியை விரும்புவதை அறிந்து கொண்டான். அதனால் தலைவலி தான் உண்டானது. ஏனெனில் ஜீவி தந்தை இருபது நாள் கழித்து தன் கம்பெனியில் ஒன்றை அவன் பெயருக்கு மாற்றுவதாக அதற்கான ஆயத்தத்தில் இருப்பதை அறிந்தான். அவனுக்கான காதல் கைக்கூடும் சாத்தியம் அவனுக்கு பாதகமாக தான் அமைவது  புரிந்தது. ஆனால் குறுக்கு வழியில் இருபது நாளில் கம்பெனி எழுதப்பெற்று பத்திரம் கொடுக்க விடாமல், ஜீவி தந்தையின் வக்கீலிடம் பேரம் நடத்தினான். அப்படியொன்றும் பத்திரப்பதிவே செய்யாதீர்களென்று கூறப்போவதில்லையே. திருமண நாளுக்கு முன் கைக்கு சேரக்கூடாதென்ற ஒப்பந்தமாய் பணத்தை வழங்கினான். பணமெல்லாம் பைரவிடம் கேட்டிருந்தான். பைரவ் புதுபிசினஸிற்கு கேட்டதாக நினைத்து வழங்கினார். பத்தாவது நாள் "ஐ அம் சாரி நான் உன்னை பார்க்கணும்" என்று ஸ்ரீ அனுப்பவும், "என

நீ என் முதல் காதல் -15

அத்தியாயம்-15 ம்ருத்யுவை எதிரே அமர வைத்து அரைமணி நேரமாக பேசாமல் வீற்றிருந்தாள் ஸ்ரீநிதி.  ம்ருத்யு கமுக்கமாய் தன் மடியில் தலையணையை வைத்து, சின்சியராக போனில் ட்விட்டரில் உலாத்திக் கொண்டிருந்தான். "ம்ருத்யு ம்ருத்யு இங்க பாரு?" என்று கூப்பிட்டால், "சொல்லு ஸ்ரீ காது கேட்குது. எதுக்கு பார்க்கணும்?" என்று கிரிக்கெட் மேட்ச் பற்றி விளையாடிய ஆட்டக்காரர்களின் பதிவுகளை பார்த்திருந்தான். சிலரின் பதிவும் அதற்கு கீழியிருக்கும் கருத்துகளையும் ஒவ்வொன்றாய் வாசித்திருந்தான்.  இந்த ஜீவி என்னடானா என்னவோ ம்ருத்யு என்னை லவ் பண்ணறதா சொல்லறான். லவ் பண்ணற எந்த மடையனாவது காதலியை வச்சிட்டு போனை நோண்டுவானா? நான் எத்தனை தடவை கூப்பிட்டும் போன்ல தான் மூழ்கிட்டு இருக்கான்.  இதை சொன்னா அந்த ஜீவி நம்ப மாட்டான். "டேய் கூப்பிட்டுட்டே இருக்கேன் அங்க என்ன பண்ணற?" என்று எரிச்சலாக கேட்டாள். தனக்குள் குழப்பத்தை விதைத்து சென்றவன் மீது காட்டாத கோபம், ம்ருத்யுவிடம் காட்ட துவங்கினாள்.  "ம்ம் எல்சா கூட சாட் பண்ணறேன்." என்று நக்கலாய் கூறினான்.  அடுத்த நொடி ஸ்ரீநிதி அவனருகே வந்து போனை விசுகென

நீ என் முதல் காதல் -14

அத்தியாயம்-14      ஜீவி முன் ஸ்ரீநிதி இருக்க, "ரொம்ப சந்தோஷமா நிச்சயதார்த்தம் நடந்துடுச்சா? ஏதும் குறையில்லையே?" என்று நக்கலாய் கேட்க, "நீ வரலை அதான் குறை" என்று இவனுக்கு நான் சளைத்தவள் அல்ல என்ற ரீதியில் ஸ்ரீநிதி பதில் அளித்தாள்.     "நான் வந்து கங்கிராட்ஸ் பண்ணிருக்கணும். உன்னையும் அவனையும் வாழ்த்தி போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கணும் அப்படி தானே?" என்று சண்டையை பிடித்தான். எப்பவும் சண்டை போடுவது ஸ்ரீநிதி வேலையாக இருக்கும். ஜீவி எல்லாம் சமாதான உடன்படிக்கையில் சரணடைந்திடுவான். இன்று ஜீவியே சண்டை பிடித்திருந்தான்.     ஸ்ரீநிதி எவ்வித கவலையின்றி ம்ருத்யுவுடன் நிச்சயத்தில் நின்றதை நெருப்பை திண்றவனாக ஒரு ஸ்பை மூலமாக லைவ் வீடியோ பார்த்ததன் விளைவு அது.    "இங்க பாரு ஜீவி நான் ஒன்னும் உன்னை லவ் பண்ணிட்டு அவனை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லலை. நீ கேட்ட டைமுக்கு ஏத்த மாதிரி இப்ப நிச்சயம் முடிச்சிட்டு ஒன்றரை மாசம் டைம் நீட்டித்திருக்கேன்.        ஒரு பொண்ணு இதுக்கு மேல என்னடா ஸ்டெப் எடுப்பா?    உனக்கு ம்ருத்யு கூட நின்று சிரிச்சது தான் பிரச்சனையா? அவன் என்னோட சை

நீ என் முதல் காதல் -13

அத்தியாயம்-13      ஸ்ரீநிதி ம்ருத்யு ஜோடியாக அலங்கார உடையில் நகைகள் பூட்டி அழகாய் காட்சியளிக்க, காண்போர் கவனம் அவர்களை விட்டு இம்மியளவும் திரும்பவில்லை. நிச்சயதார்த்த விழாவிற்கு ஷண்மதியின் சித்தப்பா சிவந்தியப்பன் தாமரை வந்திருந்தார்கள். அவர்கள் பையன் ரவீந்தரன் அவன் மனைவியாக சாந்தினி(அதாவது ஷண்மதியின் பெரியத்தை மகள்) அவர்கள் வந்திருந்தனர்.     அவர்கள் வாரிசு நிச்சயதார்த்தற்கு வரமுடியாத சூழல் என்று வாழ்த்து மட்டும் தெரிவித்தனர்.     ஷண்மதியின் சித்தப்பா மகள் ரசீகாவும் அவள் கணவர் குழந்தைகளும் அயல் நாட்டில் க்ரீன் கார்ட் சிட்டிசன் வாங்கிவிட்டார்கள்.  சட்டென நிச்சயதார்த்ததிற்கு வரமுடியவில்லை. திருமணத்திற்கு வருவதாக உரைத்துவிட்டாள்.      பெரியத்தை உஷா தவறிவிட்டார். அதனால் லலிதாவே முன்னின்றார்.       யுகேந்திரன் தரப்பில் அன்னை ஸ்ரீவினிதா மட்டும் அறிந்தவர் தெரிந்தவர் பைரவின் வீட்டு பக்கம் ஆட்கள் என்று குழுமியிருந்தனர்.    பைரவோ என் மகனுக்கு எப்படிப்பட்ட இடத்தில் பெண்ணை பிடித்திருக்கின்றேன் என்று வந்தவர்களிடமெல்லாம் அதிகமாகவே சீன் காட்டினார்.    தாரிகாவோ, ம்ருத்யு பிறக்கும் வரை தான் தங்கள் வாழ்

Nee என் முதல் காதல்-12

 அத்தியாயம்-12 ஸ்ரீநிதியே வந்து அவன் கையை பற்றி, "இந்த ஐடியா ஓர்க்அவுட் ஆகும். கொஞ்சம் யோசி. படிச்சவங்க கண்டிப்பா இதை அக்சப்ட் பண்ணுவாங்க" என்று மலர்ந்த புன்னகையோடு கூறினாள்.  "அப்ப நீயே சொல்லிடு." என்று விறுவிறுவென நடந்தான்.  ஸ்ரீநிதியோ மீண்டும் துரத்தி வந்தவள் "நீ என்றால் ஷண்மதி ஒரு பார்வை பார்த்து, தன் பொண்ணையே வேண்டாம்னு சொல்லறானேனு உன்னை ரிஜெக்ட் பண்ணுவா. அட் தசேம் உன்னை அவளுக்கு பிடிக்கும் பழிவாங்க மாட்டா, திட்டமாட்டா.  பட் நான் என்றால் எதையும் காதுல வாங்க மாட்டா. அதோட செம டோஸ் விடுவா. அந்த ஒரு காரணத்துக்காக தான் நான் சுயநலமா உன்னையே கல்யாணத்தை தடுக்க சொல்லறேன்." என்று வருந்தினாள். முதல் முறையாக "என் பக்கம் எப்படி பேக்ஃபயர் ஆகும்னு யோசிக்கலையா நீ.  எங்கப்பா அம்மா ஆசை ஆசையா உன்னை நான் கட்டிக்க போறேன்னு கனவு காணறாங்க. தம்பி பொண்ணே மருமகளா வரணும்னு விருப்பப்படறாங்க. அப்படியிருக்க, நானே நிறுத்தினா. எங்க வீட்ல சோறுதண்ணி போடமாட்டாங்க. போடா வெளிநாட்டுக்கேனு துரத்திவிடுவாங்க. அப்பறம் என்னோட நார்மலா கூட பேசமாட்டாங்க." என்று கூறவும் ஸ்ரீநிதி வாயை திற

நீ என் முதல் காதல் -11

அத்தியாயம்-11    ஸ்ரீநிதி வீட்டிற்கு செல்லும் முனைவரை வந்துவிட்டான் ம்ருத்யு.      அவளை தட்டியெழுப்ப, "டோண்ட் டச் மீ ஜீவி. எத்தனை முறை சொல்லறது. தொட்டு பேசாதனு'' என்று முனங்கினாள்.    "நான் ஜீவியில்லை ம்ருத்யு" என்றான். ஸ்ரீநிதி மட்டும் நிதானத்தில் இருந்தால் அவனின் செங்கனலான முகத்தை பார்த்திருப்பாள்.        ''ம்ருத்யுவா? சோ ஸ்வீட் வந்துட்டியா? அந்த ஜீவியிடம் ஏன்டா ஹாஸ்பிடல்லயிருந்து ஓடிட்டனு கேட்டா. என்ன பேசறான் தெரியுமா? மம்மியை ஒரு பங்ஷன்ல பார்த்து சைட் அடிச்சிருக்கான் அந்த பரதேசி.     எங்க மம்மி பார்த்தா அதை வச்சி ரிஜெக்ட் பண்ணுவாங்கனு ஓடி ஒளியறான்.     நீ வேணுமின்னா பாரு ம்ருத்யு இப்படியே ஓடியொளிந்தா நான் உன்னையே கட்டிக்கப்போறேன்." என்று உலறியவள் அவன் கன்னத்தை தட்ட தட்ட பேசி முடித்து அவன் தோள் வளைவில் சரிந்தாள்.       ம்ருத்யுவோ அவள் பேசியதை கேட்டு கடுப்பானது. ஆனால் மற்றதை யோசிக்க அவனுக்கு நேரமில்லை. வீட்டு கதவு திறந்ததும் இவளை அறைக்கு எப்படி அழைத்து செல்வது? இப்படியே என்றால் தள்ளாடியோ தொபுக்கடீரென விழுந்தோ மாட்டிக்கொள்வாள்.    ஏற்கனவே திருமண நாள

நீ என் முதல் காதல் -10

அத்தியாயம்-10      இரண்டாம் முறையாக தன் தொண்டையில் வோட்காவை இறக்கிவிட்டு, "எங்கம்மாவை பார்த்து ஏன் ஓடின? இது தொழில்முறை வளர்ச்சியை அடியோட உடைக்கறதுக்காக என்னை லவ் பண்ணறதா நாடகமாடியிருக்கியா?" என்று ஆக்ரோஷமாய் ஸ்ரீநிதி கேட்டிருந்தாள்.     ஜீவியோ தலையை தாங்கி, "ஏன் ஸ்ரீ தப்பா நினைக்கிற? தொழில்ல உங்கம்மாவை டவுன் செய்யணும்னா, எங்கப்பா உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்துவார். நீ என் மனைவியா ஆனதும் உன்னை வச்சி ஷண்மதி அத்தைக்கு குடைச்சல் தருவார். அவருக்கு நம்ம லவ் விவகாரம் தெரியாது.   நீயேன் பொசுக்குன்னு என் இதயத்தை உடைக்கிற?         நான் உன்னை விரும்பியது உனக்கு நாடகமா தெரியுதா ஸ்ரீநிதி?    உன்னை செண்டிமெண்ட் வச்சி அடிமைப்படுத்த முடியாதுனு எனக்கு தெரியும்.    நான் ஏமாத்தறேன்னா அடுத்த நிமிஷம் போடானு இதோ குடிக்கிற வோட்கா பாட்டிலை என் தலைறில போட்டு உடைச்சிட்டு போயிட்டே இருப்ப நீ. காதலாவது மண்ணாவது.  அப்படியிருக்க நாடகம்னு சொல்லற? என் கம்பியூட்டர் லேப்டாப் போன் பேட்டர்ன், பாஸ்வோர்ட் பெயரே ஸ்ரீநிதி தான்." என்று அடுக்கடுக்காய் கூறவும், ஸ்ரீநிதி கையை வைத்து தடுத்தாள்.   

நீ என் முதல் காதல்-9

அத்தியாயம்-9 ஷண்மதி ஸ்ரீநிதியை அடிக்கவும், "என் பொண்ணை ஏன்டி அடிக்கிற? ம்ருத்யுவுக்கு என்னாச்சுனு தெரியாம அவளும் தானே அட்மிட் பண்ணிருக்கா" என்று யுகேந்திரன் தன் மனைவி ஷண்மதியை கடிந்தான்.  "அவனுக்கு சின்னதுலயே ஹார்ட் பிராப்ளம் இருந்தது இவளுக்கு தெரியும் தானே. உங்க மக என்ன பண்ணி தொலைச்சா?" என்று ஸ்ரீநிதியை பஸ்பமாக முறைத்தாள் அன்னை. "அவனுக்கு என்னாச்சுனு தெரியாம என்னை ஹார்ட் பண்ணாதிங்க.  நீங்க எப்பவும் இப்படி தான் செய்யறிங்க" என்று ஸ்ரீநிதி அன்னையிடம் கத்திவிட்டு தந்தை பக்கம் சென்று அமர்ந்தாள்.  தாரிகாவோ ஸ்ரீநிதி அருகே அமர்ந்து "என்னடா ஆச்சு?" என்று சாந்தமாய் கேட்டார்.  "தாரிகா பையன் கண் முழிச்சா தெரியும். ஸ்ரீநிதியை தொல்லைப் பண்ணாத" என்று பைரவ் கூறவும் தாரிகா தலையாட்டி மகன் இருக்கும் அறையை நோக்கினாள்.  "இது இது தான் தாய்மை. தன் பையன் ஹாஸ்பிடல்ல இருந்தும் என்னை குற்றம் சாட்டாம பொறுமையா வந்து பேசறாங்க பாருங்க.  பைரவ் மாமா பேசவும் அத்தை எதிர்த்து பேசாம அமைதியா மாறறாங்க பாருங்க.  இது இது தான் உங்களிடம் சுத்தமா இல்லை." என்றவள் மருத்த