Posts

Showing posts from 2018

bye bye 2018 welcome 2019

Image
இன்னுமொரு வாரமே என்னை விட்டுப் பிரிய போகின்றாய்...! நான் கலங்குவதாக யில்லை உன்னை சந்தித்தப் போது எத்தகைய ஆர்வம் கலந்து எதிர்பார்ப்போடு சந்தித்தேனோ... அதே ஆர்வத்தோடு வழியனுப்ப போகின்றேன் நான் தான் நானே தான் நீ எனக்கு கொடுத்த இன்பத் துன்பத்தையும்  அன்பும் அழுகையும் ஏமாற்றத்தையும் ஏக்கத்தையும் வித்தியாச அனுபவங்களையும் ஏற்றுக் கொண்டு நிறைவான காதலோடு உன் பிரிவுக்கு தலை வணங்கியே பிரியா விடை தருகின்றேன் உன்னைப் போலவே எண்ணில் கலக்க வரவிருக்கும் இவ்வாண்டை அதே ஆர்வத்தோடு சந்திக்க தயாராகின்றேன்.            -- பிரவீணா தங்கராஜ்.

வரிகள் வடிக்கும் காதலி- காதல் பிதற்றல் 44

நிலவு பார்த்து கவிதை பேசும் கவிஞன் அல்ல உன் நினைவு எண்ணி வரிகள் வடிக்கும் காதலி நான்                     - பிரவீணா தங்கராஜ்.

காதல் பிதற்றால்-44

பிரபஞ்சத்தின் அத்தனை சந்தோஷமும் என்னிடம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை என்னிடம் இல்லை அது எல்லாமே வெறுமை என்றே உரைப்பேன் நான் ஒன்றும் மேதை அல்ல உன் ஒற்றை சொல்லிலும் உன் ஓரப்பார்வையிலும் உன் மென்னகையிலும் உள்ளது எந்தன் பிரபஞ்சத்திற்கு ஈடான சந்தோஷம்...               - பிரவீணா தங்கராஜ்.

என் இறப்பு எவ்வளவோ - காதல் பிதற்றல் 43

உன் ஒற்றை மவுனம் உன் பார்வை திருப்பம் உன் புன்னகை துடைத்த முகம் இவையெல்லாம் இல்லாத உன்னை காண்கையில் என் இறப்பு எவ்வளவோ மேல்.                                - பிரவீணா தங்கராஜ்.

எந்தன் உயிர் தோழியே...!

எனக்கொரு நண்பி இருந்தாள்  எந்நாளும் துணையாய் இருந்தாள் எச்சி பண்டம் என்பதெல்லாம் எங்களுக்குள் இல்லை எனலாம். மதங்கள் விழுங்கிய தோழமையே... மலர் போலவே பூஜித்தாள் தன்னலமில்லா ... துரோகமில்லா... நேர்மையானவள் தவறு செய்தால் சுட்டிக்காட்டவும் திறமையிருந்தால் தட்டிகொடுக்கவும் தவறாத தங்கநிலவுவள் எந்தன் மகிழ்வை விரும்புபவள் எந்தன் நலனை நாடுபவள் நாட்கள் எங்களை பிரித்தாளும் நினைவில் என்றும் நீங்காதவள்...                      --பிரவீணா தங்கராஜ் .

பூட்டி வைத்த காதலது

Image
என் இதயம் சென்று திரும்பும் உன் மூச்சுக் காற்று அறிந்தும் கூறவில்லையா உன்னிடம் ?! என் கண்கள் பார்த்துத்  திசையை மாற்றிக் கொள்ளும் உன் ஈர்ப்பு கண்கள் உணர்த்தவில்லையா ?! உன் இதயத்திடம் கண்களிலிருந்து இதயத்திற்கு என் காதலை கடத்திச் செல்லும் இரத்தச் செல்களை பாதியிலே வழிமறித்து புறக்கணிப்பது யார் ? உன் மூளையா ? நித்தமும் என் தேடலை உணர்ந்தே உன் பாதையை மாற்றிடாது வந்திடும் உன் கொலுசொலி பாதம் உன் தடத்தை பின்பற்றும் என் வன்பாதம் செல்லுதே... பஞ்சபூத நிலமவன் கதைக்கவில்லையா ?! யார் தான் சொல்வது ? எந்தன் இரும்பு இதயத்திலும் பூட்டி வைத்த காதலது மென் பூவுடையாளானா உன்னை கண்டு சரணடைத்ததை....!                                  -பிரவீணா தங்கராஜ் .

விவசாயி மைந்தனே !

கையில் அலைப்பேசி கொடுத்து கொடுத்தே கவளம் சோற்றுக்கும் கையேந்து நிலையானது சேயே நீ அடியெடுத்து வைக்க தாயே உன்னை பற்றியபடி களமிறங்க நாற்றுகள் நீயெடுத்து சேற்றில் நட நெல்மணிகள் சொர்ணமாய் வளர்ந்திடுமே அயல்தேசம் கையேந்தும் உன்னிடம் அதுவரை பொறுத்திரு விவசாயி மைந்தனே !                           -- பிரவீணா தங்கராஜ் .

தேவதையாகவே...

Image
மந்திரக் கோலை கைகளில் ஏந்திவரவில்லை மண்ணில் தவழ தவழ வெண்ணிறக் கவுனை அணியவில்லை தலையில் ஒளிரும் கிரீடம் சூடிடவில்லை தக தகவென மின்னலாய் ஒளியும் சூழவில்லை மாயாஜால வித்தைகள் செய்திடவில்லை மந்திரச்  சொற்கள் உச்சரித்து கதைக்கவில்லை இருந்தும் என் கண்களுக்கு தேவதையாகவே...! ஆம் ... இறுகி பிடித்த உள்ளாடையை நாகரிகமென அணியாது கறிகளை கவ்வி ரத்தம் சொட்ட சொட்டவிருக்கும் நாயின் வாயை போல உதட்டு சாயம் பூசவில்லை ஒப்பனை என்ற பெயரில் முகத்திற்கு சுண்ணாம்பு அடிக்கவில்லை மென் புன்னகையோடு தேவதையாகவே... இன்றும் இருக்க தான் செய்கின்றனர்.                   - பிரவீணா தங்கராஜ் .

காற்றே மெல்ல வீசு

ஏய் காற்றே... நீயும் கார்ப்பரேட் காரர்களிடம் கை குலுக்கிக் கொண்டாயோ? கதிகலங்க வைத்துவிட்டாய்...! சற்றே மெல்ல வீசி சென்றிருக்க கூடாதா கஜா(யானை) எப்பொழுதும் அப்படித்தானே மெல்ல அசைந்து நடப்பாய்...! சில்லென்ற தென்றல் கீழ் குடிசை மீது காதல் அரும்பியதற்கா?! காற்றாகிய நீயும் எதிரியாய் மாறி அசுர காற்றாய் வீசி கூரைகளை கூண்டோடு அகற்றி விட்டாயே! தூணாக இருந்ததையா தென்னம் பிள்ளைகள் கருப்பையை அகற்றியது போல வேரோடு சாய்த்துவிட்டாயே! பூமி தாய் தேகம் அதற்கா ஏங்கியது போதும் கைப்பிடி அரிசி காண்பதே அரிதென காட்சி பொருளாய் பார்க்கும் காலத்திற்கு இயற்கையே நீயும் தள்ளாதே                             -- பிரவீணா தங்கராஜ் .

மழைக்கு ஒதுங்கிய வானம்

Image
சிறுதூறலில் என்னை குழந்தையாக்கி பெருசாரலில் நாசியை வருடும் மண்வாசம் கிளறியே... ஒரு கோப்பை தேனீரில் கசந்ததோ சுகந்ததோ மனதின் மூளையில் தேங்கிய நிகழ்வை முன்னிறுத்தி நாழிகளை நகர்ந்திடாது மயிலிறகாய் வருடுகின்றாய்... சோனையில் கப்பல் விட அடம்பிடிக்கும் குழந்தையாய் துள்ளுகின்றது என் மனம் ஆசாரம் அளித்திடுமே... கவிஞனுக்கு கவிகளாய்...காதலுக்கு தோழனாய்... வான் மழையே... வா மழையே...! சிறு தூறலோ... பெரும் திவலையோ... பச்சை நெற்பயிரில் பட்டு தெறிக்க வைரத்தை மூடிய தங்க பஸ்பமாக நெல்மணி கண்ணு(திரு)ம் வளர்ந்திடவே! உழவனின் நேசத்தின் வரவேற்பின் மழைக்கு ஒதுங்கிய வானம் வழிவிட மண்ணிற்கு அழுத்த முத்தமிட்டே சுவடுபதி ஆலியே... !                    -- பிரவீணா தங்கராஜ் .

எங்கள் அன்பு ஐய்யாமை...

                                         எங்கள் அன்பு ஐய்யாமை ,                          எப்பொழுதும் மாத்திரை பெட்டியை எடுத்துக் காலை மாலை இரவு என பிரித்து ஒரு தண்ணீர் பாட்டிலை அருகே வைத்துக் கொண்டும்  ஒரு துணியை எடுத்து தண்ணிர் பாட்டில் மாத்திரை பெட்டி கட்டில் என அதை கொண்டு துடைத்து சுத்தமாக வைத்தபடி இருக்கும் இடம் மட்டுமல்ல தன்னையும் முகமலர்ச்சியோடு இருப்பது அவர்களின் வழக்கம் . கூடவே ஒரு கைபேசி வேறு . இதுவே எங்கள் ஐய்யாமை .               ஐய்யாமை அப்பாவின் அம்மா . எங்களுக்கு பாட்டி . அப்பாவின் அம்மாவை ஐய்யாமை என்றும் அப்பாவின் அப்பாவை ஐய்யப்பா என்றும் அழைப்பது வழக்கம் .              எல்லோருக்கும் தாத்தா பாட்டி என்றாலே கொள்ள பிரியம் உண்டு . எங்களுக்கு தாத்தாவின் அன்பு மழையில் நனையும் பாக்கியம் கிட்டவில்லை . ஐய்யாமை அன்பு கிட்டியது அதுவும் தெவிட்டாத அன்பு .                          உங்களுக்கு பிடித்த பெண்மணி யார் என்று கேட்டால் எல்லோரும் சமுதாயத்தில் இருக்கும் சிறந்த நபரை கண்டிப்பாக கூறுவார்கள் . எங்களுக்கு ஐய்யாமை அப்படிப் பட்டவரே . மனதைரியம் படைத்த , ஆளுமை திறம் கொண்ட , ரசனைக்கு

புது விடியலைப் படைத்திடு

எழுதுக்கோல் பற்றியிருக்கும் விரல்களுக்கு கூட எழுதும் விதி இதுயென அறிந்திட வாய்ப்பில்லை எண்ணங்களின் வண்ணங்கள் மட்டுமே ஏற்றயிறக்கங்களை உண்டென உணர்ந்திடு  வறுமையை மாற்ற உழைப்பை விதைத்திடு இருமைக் கொண்டு நடந்திடும் நிகழ்வுகள் இன்பத் துன்பத்தை இனிதே செப்பிடும்  கண்ணீரை கணமும் நிறுத்திப் பிறருக்கும் புன்னகை நாளும் பரிசாய் பூரித்திடு பகைமை யெனும் பண்பை ஒழித்து தகமை நாடும் உள்ளத்தில் ஒளிர்விடு எனக்கு மட்டுமே இப்படியா என்று எக்களிக்கும் நிகழ்வுகளை மதியால் மாற்றிடு எண்ணியெண்ணி சிரத்தையாய் செப்பிடும் கனவுகளை வர்ணங்களைக் கலந்தே விதிக்கு மாற்றி வாழ்வுக்குப் புது சாயம் மெருகேற்றிடு புது விடியலைப்  படைத்திடு                            -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் -42

முரண்பாட்டான கள்வன் நீ உன் இதயத்தை எனக்குள் பத்திரப்படுத்தி செல்கின்றாயே...!            -- பிரவீணா தங்கராஜ் . 

சற்றே விலகிக் கொள் - காதல் பிதற்றல் 41

இறுகப் பற்றிய நம் அணைப்பால் காற்றுக்கு மூச்சு அடைகின்றது சற்றே விலகிக் கொள் காற்று சுவாசித்துக்  கொள்ளட்டுமே...                  -- பிரவீணா தங்கராஜ் .  

மீச்சிறு அருவி

மீச்சிறு அருவியாய் பொழிகின்றது உன் கண்கள் எனக்கு தான் வெள்ளமென என் இதயத்தை தத்தளிக்க செய்து உயிர் கசியும் வேதனை அளிக்கின்றது                  -- பிரவீணா தங்கராஜ் .

இசை மெட்டுக்கள்

Image
இசை மெட்டுக்கள் எழும்புகின்றன  தொடர் மழையால் வீட்டுக்குள் கொடிகளில் துணிகளை உலர்த்துவதில்...      பிரவீணா தங்கராஜ் .  

வண்ண நிலவுகள்

வண்ண நிலவுகள் இருக்கின்றதா என்கின்றாள் குட்டி மகள் அவள் கைகளில் பத்து விரலின் நகங்களுக்கு பத்து வண்ணங்களை  பூசியதை அறியாமல்                     - பிரவீணா தங்கராஜ் .

உனக்குள் ஓராயிரம் கவிதை -காதல் பிதற்றல் 40

உன்னை பற்றி என்னும் தலைப்பில் ஒரு கவிதை தானே எழுது என்கிறாய் உனக்குள் ஓராயிரம் கவிதை தலைப்புகள் அடங்கியிருக்கின்றன என்பதை அறியாமல்...              -- பிரவீணா தங்கராஜ் .

நிலவு

Image
காரிருளில் தன்னந்தனியே கதைப்பேசும் காதல்நிலவே ! கண்ணெதிரே வராமல் மேகத்தினுள் குழந்தையாய்... நீ தவழ்ந்து ஒளிந்து கண்ணாம்பூச்சி காட்டுகின்றாய்... மின்மினிப் பூச்சியாய் என் நெஞ்சம் உன்னில் ஒளிப் பெற்றே பிரகாசமாகின்றதடி  பனிப்பொழியும் பால்நிலவே பிரபஞ்ச பேரழகே ! பன்மொழியில் கதைத்திடவே ஆசையடி நிறைமதியே ! பசலை நோயில் மெலிந்து தேய்பவளே...  கற்கண்டு நட்சத்திரம் உண்ணாமல் வாடுவது ஏனோ ?! தனியே தன்னந்தனியே தாரகை திங்களே ! தலைவனை தேடியே தவிக்கின்றாயோ... களங்கமில்லா மேனிக்  கொண்ட நிறைமதியே மாதத்தில் ஒரு நாள் வீட்டுக்கு தூரமோ ?!  தங்கநிலவாய் ஜொலிக்கின்றாய் நீரில் உன்னை அள்ளி பருகும் ஆடவன் யாரோ ... கவிஞனுக்கும் காதலுக்கும் நீயொரு காட்சி நிலா எனக்கு மட்டும் தோள்கொடுக்கும் நட்பிலா .                                           -- பிரவீணா தங்கராஜ் .  

என்னை விட்டுப் பிரிந்துவிடு என்னுயிரே

என்னை விட்டுப் பிரிந்துவிடு என்னுயிரே என்று சொல்வதும் நானே தான் உன்னில் உயிராய் கலந்து உந்தன் சுவாசத்தை சுவாசித்து உனக்காக வாழும் பேதையே தான் விழிகளில் மோதி வானத்தில் பறந்து விரக்தியில் தவிப்பதும் நானே தான் வானவில்லின் வர்ணமாய் வந்தவனே வசந்தத்தை எனக்காய் தந்தவனே வாஞ்சையோடு சொல்வதும் நானே தான் உன் அன்பை சிறுகச் சிறுக சேர்த்து நம் காதலை பருகியவளும் நானே தான் எங்கோ கேட்கும் பாடலுக்கு என் இதயத்தில் வாசம் கொள்ளும் உன்னை எண்ணி மருகுவதும் நானே தான் உப்பில்லா உணவும் ருசிக்க செய்யும் உன் நினைவு கோப்பைகளை எனக்குள்ளே தேக்கி வைப்பதும் நானே தான் நித்திரையில் கள்வனாய் நீ புகுந்திட நித்தமும் அக்கனவு வேண்டுவதும் நானே தான் என்னை விட்டுப் பிரிந்துவிடு என்று சொல்கின்றேன் நம் காதல் வேரூன்றி இருக்கும் ஆழம் உணர்ந்தே ஏனெனில் நம் உண்மை காதல் அழியாதே...                             -- பிரவீணா தங்கராஜ் .

காதலின் கோட்பாடுயவை

உந்தன் இதயத்தை என்னுடையது என்றும் எந்தன் இதயத்தை உன்னுடையது என்றும் மாற்றிக் கொள் நான் தொலைத்து விட்டதாக எண்ணி தேடிக் கொண்டு தவிக்கின்றேன் நீ திருடி விட்டதாய் எண்ணி பொத்தி வைத்துக் கொள் பார்க்கும் மற்றவர்களுக்கு நான் யாரோவென கடந்துவிட நீ யாரோவென காட்டிக் கொள் ஏனென்றால் காதலின் கோட்பாடுயவை. - பிரவீணா தங்கராஜ்.

கண்ணாமூச்சி ஏனடா

ஒவ்வொரு முறையும் கோகுலக் கண்ணனே உன் பாதம் பதித்து தான் வரவேற்கிறேன் நீயோ ஒவ்வொரு முறையும் மாயக் கண்ணனாய் மறைந்துக் கண்ணாமூச்சி களித்து விளையாடுகின்றாய் பேதை நெஞ்சம் உந்தன் வருகைகாக மட்டுமல்ல இராதை வந்தாலும் கொண்டாடி மகிழக் காத்திருக்கின்றேன் கண்ணனாய் கண்ணாமூச்சியாடுகிறாய் இராதையாய் வர மறுத்து ஏய்த்திட இந்த தேவகி மட்டும் அத்திரு மரத்தை சுற்றியே வலம் வருகிறேன் விழி நீர் மட்டும் துணையாக.          - பிரவீணா தங்கராஜ்.

என் உலகத்தில்...

பம்பரமாக சுற்றிக் கொண்டுயிருக்கின்றேன் அடுதல் அறையில் சாட்டையாக சொற்கள் மட்டுமே உப்பு சப்பில்லாதக் குறைபாட்டை உணர்த்தும் நீ சுவையாக செய்யும் பொழுது மட்டும் சொற்களில் சுவைக் கூட்டுவதை மறந்துவிடுகிறாய் சரி அதனால் என்ன விடு சிறிதே சிரித்துப் பேசி இளைப்பாறலாம் இளநகையாய் முத்துக்களா சிதறிவிடும் முகநூலில் திறந்து படித்து மென்நகைச் செய்கின்றாய் வியப்பைக் காட்டுகிறாய் சோகமெனில் உச்சுக் கொட்டி வருந்துகிறாய் உன் கைக்கு எட்டிய தூரத்தில் தான் கட்டியவள் இருப்பதை மறந்து அவளை கவலை கொள்ள வைத்தே காதல் கீதம் இசைக்க மறுத்து மறுக்கிறாய் அலுவலகம் எனும் தினப் போருக்கு முதுகில் சுமந்த பையோடு மடிக்கணினியை உன் காதலியாய் சுமக்கின்றாய் போதும் சற்றே என் உலகுக்கு வா கடுகு தாளித்து போடுகையில் எண்ணெய்பட்ட கைகளுக்கு உச்சு கொட்டி செல் நிற்காமல் ஓடும் கடிகாரமாக உன் செல்ல மகளின் நிகருக்கு நானும் மாறுவதை கண்டு வியப்பு காட்டு பள்ளி செல்ல தயாராகும் மற்றொரு வாலுக்கு தேவையானதை தேடி எடுத்து இயம்பும் போது ஒரு அடடா என்று மென்புன்னகை செய் கிடைக்கும் சின்ன சின்ன நேரங்களில் சிறு இடை பற்றி இதழ் ம

மனம்

அதிகாலை எழுந்ததும் அலைவரிசையில் மாற்றி மாற்றி இமைக்காது தன் ராசிக்கு சொல்லும் கூற்றையெல்லாம் செவி சாய்த்து ஏற்று உடுத்துமாடை கூட செவ்வனே அதன் சொல்படியே அணிந்து நாள் பார்த்து நேரம் பார்த்து வாஸ்துபடிக் கட்டிய வீட்டிலிருந்து நல்லநேரம் பார்த்தே வெளியேறும் அச்சமயம் எங்கிருந்தோ தன் துணையை தேடி ஓடிய பல்லியின் மதில் பிடி தளர்ந்து வெண் நரையில் கருமை சாயம் பூசிய தலையில் சரியாக விழ பல்லி பலன்களில் சற்று அஞ்சியே இதுவரை கட்டிக்காத்த ஜோதிடம் வாஸ்துகளெல்லாம் பொய்யாக மாற கடவதென புலம்பி ஒரே நொடியில் மாறுகின்றது மனம். - பிரவீணா தங்கராஜ்.

மணல்கள் கற்கண்டாய்

Image
கடற்கரை மணல்கள் கற்கண்டாய் மாறிட கடலலையோ தேனாய் மிதக்க இயற்கையோ குழப்பத்தில் சிந்திக்க எனக்கு ஐயமில்லை மகளே உன் கைப்பட்டு விளையாடிய தருணமது. - பிரவீணா தங்கராஜ்.

சிலந்தியே...! - காதல் பிதற்றல் 39

எல்லா மூலையிலும் தூசு தட்டி அவனை நீக்கிட தான் பார்க்கின்றேன் என்னையும் அறியாது மீண்டும் அதேயிடத்தில் எல்லா மூலையிலும் வலைப்பின்னி நடுவே மன்னனாய் அமர்ந்து கர்வத்தோடு சீண்டுகின்றாய் வலைப்பின்னும் சிலந்தியே...! - பிரவீணா தங்கராஜ்.

👸 மகள் என்னும் வரம் 👸

Image
மென்பாதங்கள் மடியில் உதைத்து மொட்டாய் பூமிக்கு வந்த பொக்கிஷமவள் கண்ணனின் குறும்பைக் கொண்டு பிறந்த ராதை அவள் அல்லி ராணி பட்டம் பெறும் அடம் பிடிக்கும் கள்ளியவள் ஒரே இடத்தில் அமர்ந்திடாது சிறகை விரிக்கும் வண்ணத்துப்பூச்சியவள் மென் பாத கொலுசுகள் சலசலத்திடும்  வீணையவள் சீனிப் பெட்டி எடுத்துத் தின்னும் நவீன கண்ணனின் குறும்பை எடுத்து இயம்பும் சூட்டிகையவள் இரு சக்கர வாகனத்தைக்  கூட பறக்கும் ரதமாக மாற்றிடும் தேவதையவள் அவள் குறும்பைக் குறிப்பெடுக்க வானத்தின் வெள்ளை தாள் போதாது என் செல்ல மகளே... வரமாக வந்த தேவதையே...!                    -- பிரவீணா தங்கராஜ் . 

மொழிகள் தேவையில்லை

மொழிகள் தேவையில்லை விழிகளிருக்கும் பட்சத்தில் காதலின் பரிபாஷை பேசுவதற்கு...                   -- பிரவீணா தங்கராஜ் .

நாட்காட்டி

நாட்காட்டி – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

என்னை நானே புதுப்பிக்கிறேன்

Image
என்னை நானே புதுப்பிக்கின்றேன் அதிகாலையில் எழுந்து சிரத்தையின்றி எவ்வித அவசரமின்றி மென்பாதங்கள் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்தே மாடியில் நடைப்பயிற்சி செய்கின்றேன் அங்கங்கே கண்கள் குளிர வண்ண வண்ணப் பூக்களுக்கு நீரூட்டி முடிந்தளவு பசுமையை காத்துக் கொள்கின்றேன் கம்பு சோளம் கையிலெடுத்து வீசி நான் உணவளிப்பேனென நம்பி தினமும் வந்திடும் புறாவிடமும் காக்கை குருவியிடமும் எங்களுக்குள் பேசிக்கொள்வோம் மத்திய உணவு முடிந்து தினசரி நாளிதழில் பாக்கியில்லாது படித்து முடித்து அதிலிருக்கும் குறுக்கெழுத்துப் போட்டியில் எல்லாம் பூர்த்திச் செய்து பத்து வயது சிறுவனாக மகிழ்ந்துக் கொள்கின்றேன் வரவேற்பறையில் எல்லாம் எடுத்தப் பொருள் எடுத்த இடத்தில் வைத்து எனக்கு நானே சபாஷ் போட்டுக் கொண்டேன் அந்தி மாலையில் ஒரு தேனீரை மெல்ல மெல்ல உறிஞ்சி பழைய நினைவுகளில் மூழ்கி அப்படியே நடைப் போட்டு முன்பு இல்லை என்று வாதிட்ட கோவில்களுக்கும் சென்று பக்தியோடு வரிசையில் வணங்குகின்றேன் இறையை... சரியாக ஆறு மணிக்கு முன்பே வீடு தேடி அழைக்காமலே வந்திடும் கொசுக்களை மின்சார மட்டையால் அடித்தே வீ

துளிப்பா - எட்டுவழிச்சாலை

எட்டு வழிசாலை – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

முகமூடியின் வறுமை

Image
வண்ண விளக்குகள் கண்ணைப் பறிக்க வாசலிலே பன்னிரை சுழற்காற்றாடி விசிறிட வகை வகையாய் பஞ்சு மிட்டாய்களும் பாப்கார்ன்களும் வண்டுகளாய் போட்டியிட்ட வண்ண பலூன்களை இலவசமாய் குழந்தைகளுக்கு நீட்டியப்படி சிரித்த முகமாக மாட்டியிருக்கும் அம்முகமூடி தோள்களின் நிறமோ , முகமோ தெரியாத அம்முகமூடி மனிதனிடம் தங்கள் பார்க்கும் பொம்மை படத்தின் நிஜ உருவம் நேரில் வந்ததாய் மனமகிழ்ந்தே தன் பிஞ்சு கைகளை கொடுத்து முகமலர்ந்து சிரித்தே செல்லும் அக்குழந்தைக்கோ மற்றவர்களுக்கோ நிச்சயம் தெரிய வாய்ப்பில்லை முகமூடிக்குள் காற்று கூட புழுங்காத விகார உருவமவொன்று அழகிய மனதோடு முகமூடியின் பிடிக்குள் மட்டுமல்ல வறுமை பிடிக்குள்ளும் உள்ளதென்று .                           -- பிரவீணா தங்கராஜ் .

@ இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் @

நிலவே ... சில நாட்களாக அல்ல... சில மாதங்களாக அல்ல... சில பல வருடங்களாகவே தேடுகின்றேன் உடல் சுகவீனமாக இருந்தபோது உள்ளார்ந்த அன்போடு உரையாடிய தோழமையை விட உயர்ரக உணவு விடுதியில் எனக்கு முன்பே என் கைகளை அழுத்தி நான் தருகின்றேனென ஆத்மார்த்த புன்னகையோடு அடம்பிடிக்கும் தோழமையை விட கல்லூரியில் மிக அருகில் அமர்ந்து கதைப்பேசி உணவுகளைப்  பகிர்ந்து உள்ளதை பகிர்ந்த தோழமையை விட அவளையே தேடுகின்றேன் பாதி மிட்டாயினை பாவாடையில் கடித்து பகிர்ந்த அவளை ஒற்றை மதிப்பெண்களில் அடுத்த வகுப்பிற்கு தேர்வாகும் அவளின் நிலைமை இருந்தும் எனக்கு ஒற்றை மதிப்பெண்னில் எனக்கு சதம் குறைந்ததை எண்ணி வருந்திய அவளை தேடுகின்றேன் சில நாட்களாய் அல்ல சில மாதங்களாக அல்ல சில பல வருடங்களாக தேடுகின்றேன் நிலவே தேடுகின்றேன் தோழமை என்றால் என்னவென்று பசுமரத்து பால்யத்தில் கண்ட உன்னை நிலவே தேடுகின்றேன் .                            -- பிரவீணா தங்கராஜ் .  

அத்தனை சுலபமில்லை- காதல் பிதற்றல்38

அத்தனை சுலபமில்லை உனக்கு பிடித்தவை எல்லாம் எனக்கும் பிடிக்குமென்று சொல்வது எனக்கு பிடித்தவை உனக்கு பிடிக்கவில்லையென இலகுவாக சொல்லிவிட்ட போதிலும் காதல் அரக்கனே அப்படி இருந்தும் ஒருமுறையேனும் உனக்கு பிடித்ததை மறுக்கும் நோக்கத்தோடு மூளை உத்தரவு பிறப்பித்தும் என் இதயத்தில் நீ செய்யும் அராஜகம் தலையை உனக்கு சாதகமாகவே அசைந்து விடுகின்றேன் .                      -- பிரவீணா தங்கராஜ்

முட்பூக்கள்

முட்களும் பூக்களும் ஒன்றே என்கின்றேன் நான் இல்லை என்கின்றனர் உன் விழியை பார்க்காதவர்கள்              -- பிரவீணா தங்கராஜ் 

ஏழைகளாக திரிகின்றாய் ...

அப்பரந்து விரிந்த வானத்தில் சிறகை விரித்துப் பறந்திடும் அப்பறவைக் கூட்டம் கூட அடுத்த வேளை உணவை சேகரிப்பதில்லை நாளும் உழைத்து உண்ணும் பரவசத்தில் லயிக்கின்றது மனிதா...  நீ மட்டும் தான் ஏழு தலைமுறைக்கு பணத்தைச் சேர்த்து வைத்து ஏழைகளாக திரிகின்றாய் மனதளவில் ...                        -- பிரவீணா தங்கராஜ் .

@ துளிப்பா ( ஹைக்கூ )@

துளிப்பா கிளிக் செய்தால் சைட் லிங்க் open ஆகும் ரீடர்ஸ்.  கடிகாரம் – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum வண்ணம் இழப்பு – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum மதிப்பெண் – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum போதை – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum எழுதுக்கோல் – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

பெண்மனம்

Image
ஆழியே உன்னைப் போலவே பெண்மனம் அலைக்கழித்தே எதையும் தெளிவாய் செப்பிடாது தெளிவாய் இல்லாததாக தோற்றமிருந்தும் உள்ளுக்குள் தெளிந்தே இருக்கும் பெண்மனம் ஆகாயமே உன்னைப் போலவே அவள்குணம் அன்பை விரிந்தே நல்கும் தாய்மனம் உள்ளம் கொள்ளையிடும் குழைந்தைகுணம் வானத்தின் தூய்மை போல் மேலோங்கும் வானமென்ன கடலென்ன வையகம் போற்றிடும் பெண்ணே உனக்கு ஒப்புமைக்கு பஞ்சமென்ன... வானத்தை கையில் பிடிப்பவள் நீயே...! கடலுக்குள் கவி தேடும் முத்தும் நீயே...!                       -- பிரவீணா தங்கராஜ் .

தாயின் நேசம்

Image
புன்னகை ஒன்றே போதுமடி உனக்கு புவிதனில் நீயொரு பேரழகி என்பதற்கு காந்தத்தின் ஈர்ப்பை கருவிழியினில் காட்டி கண்கள் இரண்டும் கவிமொழி பேசுதடி கண்ணனின் குறும்பை மிஞ்சிடும் பெதும்பை நீ கார்மேகத்தின் செல்ல மகளே தாயின் சேலை விளிம்பில் நீ பிடிக்க சக்கரமாய் சுழலுமடி தாயின் நேசம் .                 -- பிரவீணா தங்கராஜ் .

நீயே தானா ...?!

Image
கீச் கீச் யென ஆடிடும் அவ்வூஞ்சலில் சில்லறை சிதறிவிழும் அளவிற்கு குட்டிமகள் சிரிக்க அவள் கேட்கும் அத்தனை கேள்விக்கும் தெரிந்தே தப்பும்தவறுமாய் நீண்ட பதில் அளித்து கோமாளியாய் நிற்பது சாட்சாத் எப்பொழுதும் என்னிடம் மிடுக்கோடு ஹைக்கூ போன்று சுருங்க பேசிடும் நீயே தானா ...?!                      -- பிரவீணா தங்கராஜ் 

கொசு

ஒரு வருடத்திற்கு இருமுறை ரத்ததானம் என்று சொல்லி வையுங்கள் தினமும் ரத்தத்தை உறிஞ்சும் கொசுக்களிடம் .😉😬              பிரவீணா தங்கராஜ் .

வாழ்க்கை யென்னும் கல்வி

Image
எட்டு மைல்கள் ஏழு மைல்கள் நடந்தே புத்தகப் பையை முதுகில் சுமந்து நீரோடைக் கடந்து நிலங்களைக் கடந்து மணி அடித்து முடித்தப் பின்னே சுவரின் மறைவில் தமிழ்த்தாய் வாழ்த்து முடிவில் ஆசிரியர்கள் பார்க்காதப் போது சாரையாய் நின்றிருந்தக் கூட்டத்தில் பையோடுக் கலந்து விட்டு மூச்சு வாங்கி வகுப்பறையில் நுழைந்து திக்கித் திணறி கற்ற ஆங்கிலத்தில் இருந்த நிறைவு இன்று ஆயிரங்களை அள்ளி வழங்கி நுனி நாக்கில் பிள்ளைகள் பேசிடும் ஆங்கிலத்தில் ஏதோவொன்று மனதை நிறைய விடாது குறைந்தே இருக்கின்றது வாழ்க்கை யென்னும் கல்வி அவர்கள் கற்றிடாது செல்வதால்...                    -- பிரவீணா தங்கராஜ் .

குளிர்சாதனப் பெட்டி

அடிக்கடி குளிர்சாதனப் பெட்டி திறக்கப்படவில்லை தொலைக்காட்சியில் இன்று சுட்டி டிவி இடம் பெறவில்லை குளியலறையில் குழாய் நீர் சொட்டியபடி மூடவில்லை வாயிலில் கழற்றிய பாதணிகள் ஜோடிகள் மாறமலும் கலைந்திடாது இருந்தன இந்நேரம் யூகித்தது சரி குட்டி மகள் அவள் தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்று இருக்கின்றாள் .                     -- பிரவீணா தங்கராஜ் .

👴 முதுமையின் ஏக்கம் 👵

தோல் சுருக்கத்தினுள் ஆரம்பமாயின  முத்தாய் நீண்டது பிணிகளின் எழுச்சி நேரங்களை வெறுமைகள் புசித்து கொண்டிருந்தன சோதனைகளாய் மைந்தர்கள் தூரதேசம் சென்றதும் உயிர் சுவாசமான பேரன் பேத்திகளை கொஞ்சிட மாதயொரு முறை கூட கிட்டாத ஏழ்மையானேன் தனிமை சிறையில் பேச்சுக்கு ஆளின்றி முதுமையின் ஏக்கம் தொடர்கிறது மரணம்வரை                              --பிரவீணா தங்கராஜ் . 

இன்று

நேற்றைய என்னை ரசித்துப் பார்த்து நினைவுக் கூர்ந்து இனிய நேரங்களாக - அதில் தொலைந்து போகின்றனர் நாளைய என்னை யோசித்து யோசித்து தவித்துத் தவித்து அதிலும் என்னை தொலைத்தே போகின்றனர் இன்றைய என்னை மட்டும் சலித்துக் கொண்டே நகர்கின்றனர்                  -- பிரவீணா தங்கராஜ் .

வாசலிலே ஏங்கும் மங்கையிவள்

Image
நினைவுகளின் ஜாலத்தில் நேரங்களோடிட  நீங்காத நினைவுகள் முழ்குதிங்கே பனிப்பொழியும் நிலவின் சுடரொளியில்  கனியிதழில் கவிதைப் பேசிடவே  கண்களில் மையல் தேக்கி வைத்து  கைவிளக்கு ஏந்திய காரிகையிவள்  மல்லிகை மணம் வீசி உன் வரவை  வாசலிலே விழிப் பதித்து வருடிகின்றாள் .                            -- பிரவீணா தங்கராஜ் .  

சொல்லியது பழமை

Image
பாங்காய் கட்டுக்கட்டிய பாய்களை பதவிசனமாய் சும்மாட்டில் அமர்ந்தி கூவிக் கூவி விற்று முடித்து கூடுகள் தேடி ஓட்ட மெடுக்க பாய்கள் விற்று வந்த பணம் - பிள்ளையின் படிப்புக்கும் பழங்கஞ்சிக்கும் போதுமானதாயிருக்க வீதியென்ன வீடுயென்ன யென்பதுயெல்லாம் உழைக்கும் கரங்களுக்கும் தெரிவதில்லை பாதணியில்லை இந்த பாதங்களுக்கு பஞ்சு மெத்தையில் கிட்டிராத நித்திரை கோரைப்பாயி சுமந்தவளிடம் மண்டியிட்டே பங்கமின்றி துயில் கொள்கின்றது . கோரைப்பாயின் மேற்படுக்க நோய் நொடிகள் இங்கில்லை பந்திப்பாயில் பகிர்ந்து உண்ண பாசமாதில் நீண்டு போக பங்கமின்றி வாழ்ந்திடவே சொல்லியது பழமை               -- பிரவீணா தங்கராஜ் .

👽வேற்று கிரகத்தில் ஒரு நாள்👽

Image
அமைதி தேடி அழ மூச்செடுத்து அசைந்தாடும் ஊஞ்சலிலே வேம்பு மரத்தடியில் ஆடுகையிலே ஆகாய மேலிருந்து வெள்ளி தட்டொன்று பறந்து வர விழியிடுக்கி கண்டு வியந்தேன் அருகே வர வர அது பெரிதானது அக்கணம் உணர்ந்தேன் அது பறக்கும் தட்டென்று வாயில் பசைப்போல பேச்சற்று நிற்கையிலே உள்ளே செல்ல உள்மனம் உந்தியது மெல்ல நடந்தே உள்ளே செல்ல மேலே எழும்பி 'ஜிவ்'வென பறந்தது யாருமில்லையாயென சுற்றி முற்றி பார்க்கையிலே புருவமில்லா ஒற்றை விழியொன்று இருபக்க பட்டாம்பூச்சி கொடுக்கு நீட்டி பாதரச நிறத்தையொத்த உருவமொன்று அருகே நின்றது குறுந்தகட்டின் கீச்சு குரலில் புரியா மொழியில் ஏதோ சொல்ல விழிபிதுங்கி நின்றேன் நானும் பதட்டம் வேண்டாம் பாதகம் செய்யும் மனித ரகமில்லை யென்றது தேன்தமிழில் தமிழ் கேட்டு முகம் மலர்ந்தேன் 'பாதகம் செய்யும் மனிதரகமில்லை' யென்ற வார்த்தையில் அகம் சுணக்கம் அடைந்தேன் உணவு உண்ணாது தலை சுற்றல் நிகழ மூன்று கையுடைய கிரகவாசி மாத்திரையும் கருப்பு நிற பானத்தையும் தயங்கிய பெற்று உண்டு முடித்தேன் அட்டைப்பெட்டியாய் தொங்க விடப்பட்ட வீடு அங்கே நீரில்லை நிலமில்லை

நல்லதே நினை

Image
முடக்கி விடவில்லை உலகம் என்னை முடங்க விடவில்லை நானும் மனதை எழுந்து நடைப் போடுகின்றேன் ஜெயமாக எண்ணம் என்ற உந்துதலில் நினைவாலே சிறகை விரித்தேப் பறக்கின்றேன் வானிலே சிரத்தை கொஞ்சம் எடுக்கின்றேன் வலியிலே கொஞ்சமும் இல்லை என்னுள் ஊனம் என்றே சொல்லிடும் தன்னம்பிக்கை மனம் .              -- பிரவீணா தங்கராஜ் .

கூண்டுக் கிளி இவள்

Image
மென் பாதங்களை அத்திரிசாரம் கட்டியிருக்க  மலர் கரங்கள் மந்திரக்கோல் பற்றியிருக்க தூரிகை வடித்தன சுதந்திரக் கிளியொன்றை காரிகை இவளுக்கும் கிட்டுமோ விடுதலை ?                               --  பிரவீணா தங்கராஜ் . 

🐦சிட்டுக்குருவியின் ஏக்கம்🐦

தென்றலது தாலாட்ட தேகமது சிலிர்க்க நெல்வயலின் மத்தியிலே கிணற்றுநீர் தத்தளிக்க பகலவனதில் பிம்பம் பார்க்க ஓடும் நீர் தொட்டில் மஞ்சள் உரசி கதைப்பேசி குளித்திடும் மங்கைகள் கால்வாய் வரப்பில் நீர் சலசலக்க வெள்ளி முத்துக்களாய் நீர்குமிழ்கள் வெளிப்பட ஈச்சமரத்தினிலே இசைத்தபடி நான் இருந்தேன் எந்தன் வீட்டை நானே கட்டி இயற்கையோடு வாழ்ந்திருந்தேன் உந்தன் சுயநல எண்ணத்தால் குளிர் சாதன கருவியில் இடுக்கில் குப்பையாய் கட்டியப்படி ஏதோ பெயருக்கு வீடென அமைத்து எந்தன் மிஞ்சியிருக்கும் இனத்தை கா(கை)ப்பாற்றிக் கொள்கின்றேன் உன்னை போலவே என்னையும் செயற்கையாய் வாழ வைத்தாயே...  மனிதா...!                      -- பிரவீணா தங்கராஜ் .

தனித்தீவாய் உறவுகள்

Image
பட்சணங்கள் செய்து வைத்து பண்டிகையாய் வீடு நிறைந்து கள்வனாய் பண்டம் எடுக்க கண்ணனாய் மாறினேன் உறவுகள் படைச் சூழ உணர்வுகள் களிப்பைத் தர இன்பமாய் வாழ்ந்திருந்தோம் கூட்டுக் குடும்பமென ஒன்றுப் பெற்று உறவுத் தொலைத்து பண்டிகையும் பொலிவிழந்து தனித்தீவாய் தனிக் குடும்பம் ஆனதிங்கே                               -- பிரவீணா தங்கராஜ் .

நீயின்றி இருக்கும் நான்

விழிகள் கண்டு ரசித்து மகிழ்ந்த வையகத்தை நெஞ்சில் ஏதுமின்றி கரம் பற்றியபடி கதைப்பேசி கதைத்திடவே காதலன் ஒருவன் வருவனென்று காத்திருந்த கண்கள் பூத்துவிட்டது இளநரை வந்து இதயம் கனத்து இளவரசன் தேடிடும் முதிர்கன்னியாய் இப்படி இப்படியாய் தினம் நடக்கும் காட்சி பொருளாய் யொரு நாடகம் கானகத்தில் இருப்பதாய் தோன்றுதடா நெஞ்சம் கானகத்து குயிலாய் நீ வர மறுப்பது ஏனோ தேனீ சுவைக்காதா பூவின் மகரந்தம் நீரில் ஒட்டாத தாமரை இலை தென்றல் தீண்டாத ஜன்னல் கதவு ஓவியம் வரையாத துரிகையாக தனிமையில் நீயின்றி இருக்கும் நான்                             -- பிரவீணா தங்கராஜ் .

👅 நாக்கு👅

Image
அரையடி யுருவம் நீ ... ஆறடியை விழுங்கும் மாயம் நீ ... அமிர்தமாய் பேசிய நொடி நஞ்சாகவும் மாறிடும் ஜாலமும் நீ ... நொடிப்பொழுது மாறிடும்  உனக்கு அறுசுவை அறியும் பிராப்தம் தான் குழந்தை மனம் கொண்டு குழைவாய் பேசிடுவாய் ... கயவர்கள் கண்டு எதிர்க்க அரணாய் காத்திடுவாய் ... எடுத்துதெறிந்து பேசிட எங்கு தான் கற்றாயோ ...? எண்ணிலடங்கா ரணங்களை சொற்களில் வைத்தாயோ ... சாட்டையாய் சுழற்றியடிக்கும் வித்தை சாகசம் தான் உன் சிறுயுருவில் அனலாய் கொட்டிய வார்த்தை அள்ளிட முடியாது சிறு இதயம் துடிக்கும் சத்தம் உன்னில் சொல்லவில்லையா ? கூர் வாள் பேச்சு வேண்டாமே கூடுதல் ஆயுளுக்கும் மகிழ்ச்சிக்கும் குறைவுப் பேச்சு போதுமே .                             --பிரவீணா தங்கராஜ் . 

பிரியாதே என்னுயிரே

விண்ணிலிருந்து வந்த அன்புத்தாரகை நீ வையகம் புகழும் குணப்பேரழகு நீ மதங்களும் ரணங்களும் வந்தாலும் மனதினில் பட்டாம்பூச்சி உன்னால் தள்ளி செல்லாதே காதலை தள்ளாதே மழைக்கால தேனீர் நீ யெனக்கு நிமிட நேர பிரிவையும் நீங்க மறுக்குது என்னிதயம் நேசங்கள் தந்தவளே என்னுயிரே பிரியாதே                 -- பிரவீணா தங்கராஜ் .

ஒரு பக்க கதை - கோழையின் மரணம்

Image
     கோழையின் மரணம்                                                      சித்தார்த்தை கடிந்துக் கொண்டே இருந்தார் அவனின் தந்தை சிவதாணு. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிப்பின் மதிப்பெண் பட்டியலில் நான்கு பாடத்தில் தேர்வுப் பெறவில்லை, அது மட்டுமின்றி கூட படிக்கும் பெண்ணை விரும்பியதாக சொல்லி அவன் அண்ணன் வீட்டிற்கு வந்துக் கத்தி விட்டு சென்றதாலும் ஏற்பட்ட தொடர் வசவுகள் கோழையான அவன் மனதில் தற்கொலையை தூவி விட்டது.        ''போதும் அவனை திட்டியது. கொஞ்சம் தனியா இருந்து நிதானமா யோசிச்சா தற்போது வந்த காதல் இனக்கவர்ச்சி என்று புரிஞ்சுப்பான். இனி வரும் தேர்விலும் கவனம் வைப்பான்'' என தாய் அம்பிகை அவனுக்கு ஆறுதலாக சொல்லியப் படி தன் கணவனுக்கு 'இனி பேச வேண்டாம்' என அன்பு கட்டளை விடுத்தாள்.       ''என்னவோ போ அம்பிகை உன் மகன் நல்லதுக்கு சொன்னேன் . அவனுக்கு புரிஞ்சா சரி'' என பெரு மூச்சு விட்டு வெளியே கிளம்பினார்.                                 அம்பிகையும் அமைதியாக அமர்ந்திருக்கும் மகனுக்கு தெளிவுப் பிறக்க வேண்டி கோவிலுக்குக் கிளம்பிச் சென்றாள்.        'சே! யாரும

பெண்ணிவள் முதிர்க்கன்னி

Image
நெஞ்சில் காதல் பொங்கி வழிந்ததால் வஞ்சியிவள் தனியே நடந்தாள்  கன்னியவள் மனம் அறிந்த ஏடு... கரம் பற்றி கதைப் பேசும் அவனது சுவடு வையகம் கண்ணில் வரமறுப்பாய்... காரிருள் நித்திரையில் கனவில் வருவாய்... முகமது நீ காட்ட மறுக்கின்றாய்... அகமது உன்னிடம் அடிமைக் கொள்வதாய்... பகலவனைப் போல வதைக்காதே... பனிமழையாய் எண்ணில் கலந்திடவா ! நினைவில் கனவில் உன்னை எண்ணி நித்தம் தொலைக்கின்றது என் தனிமை புரவியில் அமர்ந்து நீ வருவாயோ... தரணியில் வந்து கால் பதிப்பாயோ... பெண்ணிவள் முதிர்க்கன்னி யென்பதை உடைத்து உன்னவள் என்பதை உலகுக்கு காட்டு .                                       -- பிரவீணா தங்கராஜ் .

புரியாத புதிர் அவள்

Image
புரியாத புதிர்களின் தனக்குள் கொண்ட பெண்ணினம் முடிச்சுகளோ அவளுள் ஏராளம் தங்க பஸ்பம் பூசிய ஒளிர்வு மேனியவள உள்மனம் அறிந்தால் மட்டுமே விளங்கும் அகராதியவள் சிப்பியாய் மூடியிருக்கும் விழிக்குள் முத்தாய் மிளிரும் அறிவு சுடர் அவள் .                                 --- பிரவீணா தங்கராஜ் .

நீதி தேவதை

நீதி தேவதை எங்கே நியாயத்திற்கு  கண் திறந்தால் தன்னையும் வன்புணர்வு செய்திடுவார்களோயென அஞ்சிக்  கையில் நியாய தராசை ஆயுதமாகயேந்தி சர்வ ஜாக்கிரதையாக இருக்கின்றாள் .😠          -- பிரவீணா தங்கராஜ் .