Posts

Showing posts from November, 2017

காதல் பிதற்றல் -12 உன்னருகே

மெழுகாய் உருக செய்வது தீ மட்டுமில்லை உந்தன் அருகாமையும் கூட தான்.     - பிரவீணா தங்கராஜ் .

புரிதல்

புரிதலில் இருப்பவருக்கு மட்டுமே புரியும் பார்வையின் மொழி .            - பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் - 11 யார் சொன்னது

Image
யார் சொன்னது மங்கையின் மான்விழிக்கு மட்டுமே மயக்கும் சக்தி உண்டென்று . உன் அடர்ந்த புருவம் ஒன்றே என் உறக்கத்தை பறித்து செல்ல போதுமானதென்று அறிவாயா ?!          *** யார் சொன்னது பெண்மைக்கு மென்மை மட்டுமே பிடிக்குமென்று உன் வன்கரங்களில் தாமரை முகத்தை புதைத்திடவே பிடிக்குமென்பதை .          *** யார் சொன்னது நீண்ட இடை தொடும் கூந்தலே வசீகரிக்குமென்று , உன் முன் நெற்றியில் வருடும் அடர்ந்த கேசம் போதும்  என் மனதை பறித்து செல்ல ...         ***               - பிரவீணா தங்கராஜ் .     

சூரியன் கடலில் கலத்தல்

சூரியன் கடலில் கலத்தல் – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

தேடுதல்

நட்சத்திர தோட்டத்தில் ஒற்றை பூவாக நிலவு . நட்சத்திர கேலியில் , எற்செய்வானை தேடி தேடியே  , தேய்ந்திட்ட திங்கள் . ஆதவனின் நீண்ட கரத்தால் , தன்னொளி இழந்த மதியையும்  . மதியின் வருகையால் ஆழியில் புதைந்திட்ட சூரியனையும்  , வானமே பார்த்து கொண்டு அமைதி கொண்டதன் நோக்கம் என்னவோ...? வானமே உரைத்திட்டு இருக்கலாம் தான் - அவனும் நிலவை காதலிப்பதை யார் அறிவார்களோ... ?!                         -- பிரவீணா தங்கராஜ் . 

மோனாலிசா ஓவியமும்

மோனாலிசா ஓவியமும் , ரவிவர்மன் ஓவியமும் , தோற்றுத்தான் போனது . செல்ல மகளின் சுவற்று கிறுக்கலில் ...               -- பிரவீணா தங்கராஜ் . 

பிறக்கும்

குழந்தைப் பேறு கிட்டாத போது தான். இறுகி கட்டிய, பாவாடை மீது கூட சந்தேகம் பிறந்தது .      -- பிரவீணா தங்கராஜ் .  

இன்னுமொரு தாயாக என் தங்கை

Image
அலுவலகத்திலிருந்து கிளம்பும்போதே ஆயிரம் கலக்கம் மனதில் . இன்று , என்ன வம்பு செய்திருப்பானோ .?! நேற்றே  , தங்கை கூறிவிட்டாள் . இனி , பொறுத்து போக மாட்டேன் . நானே கன்னத்தில் அறைந்து விடுவேனென . இதோ ! வீடு வந்துவிட்டது . தங்கை அருகே அவன் , முகம் முழுதும் மிட்டாய் சுவடோடு , டாம் அண்ட் ஜெர்ரி நிகழ்ச்சியை கண்டு கொண்டு , நித்தம் நுறு குறும்பு செய்யும் என் மகன் . அவனை முத்தமிட்டதால் ... பால்  பற்களில்   கடி வாங்கி , கன்னத்தை பிடித்தபடி , கல்லுரி பறவை என் தங்கை . எப்பொழுதும் போல் நமுட்டு சிரிப்புடன் நான் .            -- பிரவீணா தங்கராஜ் . 

கும்பகோண தீ விபத்து

அழுதால் கூட அழகாய் இருக்கும் மழலை பிஞ்சினை கதற வைத்தாய் ! கரிய நிறமாக்கினாய்...  ஒன்றா ...இரண்டா ...  மரண ஓலைகள் , உலுக்கியதே நெஞ்சத்தின் இதய அலைகள் . அடுக்குமோ உனக்கு ?!  கதறலில் துடித்ததோ ,  பெற்ற மனம் . இதயத்தில் கடுகளவு அன்பு இல்லாததோ...!  உன் தீ மனம் . உன் வலிமையை சோதிக்க ஏனோ மொட்டை அல்லவா  மடிய வைத்தாய் ! குழந்தையை கொன்ற  பாவி உனக்கு  தீ என்ற எழுத்தில் கீரிடமோ ..?!  நீ அல்ல ...   உனக்கு தாய்மை அல்ல ...                       -- பிரவீணா தங்கராஜ் .

சுனாமி

அகிலத்தின் முப்பகுதி போதவில்லையோ ?   நிலப்பரப்பை விழுங்கினாய் ...      நீ என்ன ஊதாரியா ...? கரையை தொட்டு பார்த்தவளுக்கு    கரையேற கொண்ட முயற்சியோ ?       இந்த உயிர் பொருள் பலி . (சு)ற்றுப்புற மக்களை    நா(னா)சமாகும்      (மி)ருகம் என்பதன் சுருக்கமா நீ... பேய் கொண்ட பிள்ளை பாசம் ,    வாரி அணைத்து பிணமாக்கினாய் ...! உடன் பிறா சகோதர , சகோதரிகள்   என்ன குற்றம் செய்தார்களோ ?      அடித்து இழுத்து சென்றுவிட்டாய் ...! புதைப்பொருள் ஆராய்ச்சிக்கு கூட ,   மண் தோண்டவில்லை . மனித பிணங்களை புதைக்க ,   ஆழ் குழி தோண்டலா ...! பேய் கொண்ட பாசம்   வேண்டாமடி சுனாமியே ...!                    -- பிரவீணா தங்கராஜ் .

தூய்மை தேடல்

முதுமை கொண்ட வயதுக்கு இதமான தென்றல் தேடலானது . மழலை கொண்ட பிஞ்சிற்கு கடலில் மணல் வீடே தேடலானது . காதல் பூத்த அரும்பிற்க்கு அலை தீண்டலே தேடலானது . சுண்டல் விற்கும் உழைப்பாளிக்கோ வியாபார விற்பனையே தேடலானது . வெண்மேக கொண்ட போர்வைக்கோ பூமி தூய்மை தேடலானது .                            -- பிரவீணா தங்கராஜ் .

என் தேசம் மாறுமோ ..?!

விண்ணை முட்டும் மாளிகையாம்   வீதியெங்கும் தூய்மையாம் . சாலை விதியினை கடைபிடித்தே ,   சக்கரங்கள் சூழலுது . புகைகக்கும் பூமியோ ...   புதிய விடியலில் மறைந்ததாம் . இரண்டு பக்கமரங்கள் நிழலாடியதோ ...!   மரநிழலில் மலர்கள் மலர்ந்ததோ ...! மனதில் அன்பை விதைத்ததால் ,   மதங்கள் ஒன்றாய் மலர்ந்ததோ ...!              -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் -10 மடமை

மழைத்துளியே முத்தாக , மீனே தோழியாக , கிறுக்கலே கவிதையாக , சிணுங்களே ஸ்வரமாக , எல்லாம்... எல்லாம் ...  விதிவிலக்காக ,  காட்சி தரும் விசித்திரம் . புரிய வைத்தது . நான் உன்மீது காதலில் இருப்பதை ...           -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் -9 வெட்பம் வீசும் சூரியனே !

நீயும் சூரியனும் ஒன்றாக இருப்பாயோ ?! சூரியன் தொலைவில் இருந்து என்னை வதைக்கின்றான் . நீயும் என்னை தொலைவில் இருந்தே வதைக்கின்றாய் ...! நீ சூரியன் என்றாலும் உன் வெட்பமே வேண்டுமடா ...!     -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் -8 உனக்காக

கை விரல்களை சுட்டுக் கொள்கின்றேன் . சமையல் அறையில் ஏனோ , வலிகள் உணர முடியவில்லை . உனக்காக சமைக்க கற்று கொள்வதால் ...!               -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் - 7 யாரடா நீ

எங்கோ வசித்து என்னை இம்சித்து என் இதய சிம்மாசனத்தை தட்டுகின்றாய் ... யாரடா நீ ...       பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் - 6 இனிய விபத்து

உனக்கும்-எனக்கும் எப்பொழுது விபத்து ? புரியவில்லையா ?! நாம் எப்பொழுது சந்திக்கப் போகின்றோம் .   --பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் - 5 என்ன வள்ளல் நீ

ஆசையாக தான் வாங்கி தருவாய் , புடவையை ...! ஆனால் , திரும்ப கேட்கின்றாயே ! இரவில் மட்டும் .             - பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் -4 உன்னை தேடுவதால் ...

யாருமில்லா இடத்தில் கூட நாணத்தால் முகம் தாழ்பாளிடுகிறது கைகளால் ஏனோ ...! நீ இருப்பதாக எண்ணுவதால் ...        -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் -3 தென்றலடா நீ எனக்கு

என்னை அணைப்பது நீயென நினைப்பேன் . ஆனால் தென்றலென வருடும் காற்று . மீண்டும் ஓர் அணைப்புக்குள் ஆகும் என் மெய்கள் . தென்றலென நினைப்பேன் . ஆனால் ... நீ உண்மை அறிவேன் என்னவனே தென்றலென ...                    -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் -2 எதிர்பாரா முத்தம் என்றோ !?

அந்திமாலை பொழுதில்   சூரியன் ஒளிந்து பார்க்க , அலைகடல் கரையிலே   வந்து எட்டிப் பார்க்க , அழகிய தென்றல்   என்னவன் மீது உரச , அயலவர் காண என்கண்கள்   உன்னை வட்டமிட , அதை கண்டும் காணாது   என் இதழ் பேசியிருக்க , என் இமை மூடிதிறக்க   இதழ்கள் இரண்டும் ஒன்றாகுமா ?              -- பிரவீணா தங்கராஜ் .

எனக்குள் நீ - பிதற்றல் 1

சீக்கிரம் என்னில் சேர்ந்திடு   இல்லையேல் தண்டனைக் கூடும்  இருபது வருடத்திற்குப் பிரிந்த  தண்டனை என்ன தெரியுமா  என் விழியில் கைதுச்  செய்து  என் இதச் சிறையில் அடைத்து  என்னை உனக்கு உயில் எழுத  என் உயிரில் உன் ஆயுள் முழுதும் தொலைக்க வேண்டுமடா....!                   -- பிரவீணா தங்கராஜ் .

சமூக அவலம்- அனிதா மரணம்

 ஓடி ஒளியாதே பாப்பா - நீ   ஓய்ந்துயிருக்கலாகாது -பாப்பா . கூடி போராடு பாப்பா - ஒரு   தடையினை உடைத்திடு பாப்பா . சின்ன சிறு பிரச்சனை என்று ... - நீ   விட்டு செல்லாதே பாப்பா வலிகள் நிறைந்ததடி பாப்பா   அனிதா மரணம் - அதை வலிந்து குரல் கொடு பாப்பா . கொள்ளை அடிப்பது அரசியல் -அதை   கோடிட்டு காட்டிடு பாப்பா . எட்டு திக்கும் உள்ள நீட்டு - அதற்கு   பூட்டு போடா வேண்டுமடி பாப்பா . படிப்பு எல்லோருக்கும் ஒன்றே - அதை    பாதகம் செய்யும் ஆட்சி - அது மனிதருக்கு தோழன் இல்லையடி பாப்பா .                  -- பிரவீணா தங்கராஜ் .

கவிக்கோ _ பிறந்த நாள் _ பரிசு போட்டி -----படைப்பு குழுமம் தலைப்பு -பாதங்களால் நிறையும் வீடு

கோமாதா பாதம் பட்டு தான் ,குடி புகுந்தோம் குடும்பமாக . குடி வந்த பிறகு தான் , கண்ணன் பாதம் பார்த்தோம் . ஒன்று , இரண்டு ,மூன்றென , மூன்று சிசு ஈன்றேடுத்தோம் . மூவருக்குமே .... பெயர்சூட்டு விழா , காது குத்தல் , பிறந்த நாள் விழா...என்று நன்னாள் பார்த்து , உறவுகளின் பாதங்களால் வீட்டை நிறைத்தோம் . அதிலும் , மகள் எனும் சேய் பூப்பெய்தபோது ,  உறவு மட்டும் இன்றி ஊரையே வீட்டிற்குள் அழைத்தோம் . பாதங்கள் கணக்கிடாது பந்தியிட்டோம். அடுத்த எட்டு ஆண்டுகளில் அடுத்தடுத்தாய் ... வரிசையாய் ...விமர்சனமாய் ... மணம் முடித்து வைத்தோம் . அன்று .... வந்த பாதங்களின் இரைச்சலில் கிண்டல் ,கேலி செய்து மகிழ்ந்து குலாவினோம் . குட்டி குட்டி குடும்பமானது ... ஆஸ்திரேலியா... அமெரிக்கா ... க்ரீன் கார்டு வாழ்க்கை அங்கே . பதித்து வைத்த தரப்பலகை தேய்மானம் ஆக - இங்கு பாதங்கள் மட்டும் இல்லை . கோகுல கண்ணன் பாதம் பதிக்க , பேரன்-பேத்தி பாதம் தேடி கடல் தாண்டாவா முடியும் ? அல்லது ஸ்கைப் மூலமாக வா பாதம் பதிக்க இயலும் . அவர்கள் வரும் நாளே எங்களுக்கு கோகுல அஷ்டமி . என்ன செய்ய ? ஏது செய்ய ? நேரங

ஒரு குழந்தையின் வலி

காதல் பெரிதென பெற்றோரை துறந்தாய் .... போற்றிருப்பேன் . கட்டிய கணவனை துறந்தாய் ... விடு கழுதையென , தலை முழிகி இருப்பேன் . முத்து போன்ற பிள்ளையை துறந்த்தையே ...ஒப்பவில்லை . அதனாலே , என் மனம்... உன்னை தாயன்று ஒப்பவில்லை . மாற்றாந்தாய் ... மறுதாயக , தந்தை மணம்மாற்றி அழைத்துவர , மறுகினேன் . அரவணைக்க மறுத்ததால் ... தாயென ஏற்க மறுத்துவிட்டது . நித்திரையில் மடி சாய்ந்து , தாய் விரல் என் கேசம் கோதிடை, தாய் தேடினேன் . பருவம் வந்தது . கொட்டும் மழையும் , குழந்தை சிரிப்பும் , அலை தொடும் தென்றலும்  , வரிகளை வடித்திடும் கவிகளையும் , காதல் கொன்டேன் . கவியே ..! எனக்கு கற்பனையை தர , எனக்கு பிடித்த விதத்தில் தாயை படைத்திட்டேன் . கற்பனை தாய் மடியில், அவள் விரல் என் கேசம் கோதிட , நிம்மதியான நித்திரை கிட்டியது .                          -- பிரவீணா தங்கராஜ் .   

நாத்திகன் ஆனேன்

நான் ஒன்றும் பிறவி நாத்திகன் அல்ல ... கண்ணெதிரே கோவிலில் , உன் வாசலில் தான். பிச்சை எடுக்கும் ஏழ்மையினை கண்டும். வைர மூக்குத்தி அணிந்து நீ ஜொலிப்பதும் ... கடைக்குட்டி கடா ஆடு கருப்பண்ணசாமி கோவிலை , நித்தம் நுறு முறை சுற்றி வந்தும் . உன் முண்ட கண் கொண்டு வேடிக்கை பார்த்தயே...! பலி கொடுக்கும் போது , கடைக்குட்டி கடா கதறியபடி உன்னையே பார்த்து , இரத்தாறு ஒட  உயிர் துறந்த போதும். நான் நாத்திகன் ஆனேன் ....              ---  பிரவீணா தங்கராஜ் .