இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பஞ்ச தந்திரம்-13

பஞ்ச தந்திரம்-13     சூர்யா வந்தப் பிறகு அன்றைய இரவு ரொம்பவே ஹாப்பியா இருந்தோம்.         எங்களுக்கான வாழ்க்கை ஒளிமையமா தெரிந்தது. மிலிட்டரிக்கு நேரம் முடியற வரை அவரும் சும்மா தானே வீட்ல இருந்தார். இனிக்க இனிக்க தினமும் தேன் நிலவு தான்.       ஒரு பெண் எந்தளவு சந்தோஷமா வாழணுமோ அந்தளவு ரொம்ப சந்தோஷமா மனநிறைவா வாழ்ந்தேன்.     சூர்யா கூட அடிக்கடி கேட்பார். 'ஏன் ரஞ்சு.. அப்பா அம்மா மீறி கல்யாணம் பண்ணிட்டோம். ஏதாவது பீல் பண்ணறியா. அப்படின்னா சொல்லு... காஸ்மீர் போகறதுக்கு முன்ன காம்பர்மைன்ஸ் பண்ணிட்டு போறேன்'னு சொன்னார்.         நீங்க எதுவும் சமாதானம் பண்ண வேண்டாம். அவங்களா ஒரு நாள் வருவாங்க சொன்னேன். உறவுகள் தானா நம்மளை முழுமையா மாத்தும்னு நற்பினேன்.     ஆனா எங்க வீட்லயும் அவர் வீட்லயும் சுத்தமா சேர்த்துக்கலை. நானும் உடனே கன்சீவ் ஆகிட்டேன். ஒரு குழந்தை பிறந்தா எல்லா உறவும் வரும்னு சொல்வாங்க. ஒருவேளை வாயும் வயிறுமா இருந்தா வீட்டுக்கு முன்ன போனா சேர்த்துப்பாங்கனு கூட போனேன். வாசல் கதவை அடைச்சி நாயை விட்டு துரத்த பார்த்தாங்க. நான் வளர்த்த நாய் என்னை துரத்தலை நானா வந்துட்டேன்.  சூர்யாவும்

சிறுகதை-4 இல்லாளின் பந்தம் 144

படம்
                                                                                                                     இல்லாளின் பந்தம் 144 அம்மாடி லட்சுமி பேப்பர் எங்க?'' என்றே ரகுவரனின் குரலுக்கு கையில் மணக்க மணக்க தேநீர் எடுத்து கொண்டு பேப்பர் நீட்டினாள்.       தேநீர் சுவைத்த ரகுனந்தன் ''என்ன எப்பவும் விட சுவை வித்தியாசமா இருக்கு''       ''அது ஒண்ணுமில்லைங்க ஊரே கொரானா கிடக்கு அதான் சுக்கு கிராம்பு பட்டை அரைத்து டீதூளில் கலந்து டீ போட்டு கொண்டு வந்தேன்''        ''என்னவோ கொரனாவை விரட்டுதோ இல்லையோ டேஸ்ட் நல்லா இருக்கு'' என்றபடி பேப்பரில் மூழ்கினார்.            அதில் '24 மணி நேரமும் காவலர்கள் ரோந்து... இருசக்கர வாகனத்தில் வருவருக்கு அறிவுறுத்தி தொப்புக்காரணம் போட்டு அனுப்பி வைக்கின்றார்கள்' என்றே வாசித்தவர்        ''இங்க பாரு வசந்த் ப்ரெண்ட்ஸ் கூட கிரிகெட் ஆட போகணும் சொன்ன இப்ப பாரு வெளியே போறவங்களுக்கு தண்டனையை... சிலர் வாகனத்தின் ஒட்டும் உரிமையை பறித்து அனுப்பறாங்க....'' என்றே பேசியவர் ப