Posts

Showing posts from November, 2020

முதல் முதலாய் ஒரு மெல்லிய-14 &15

Image
💘  14 அன்று ஞாயிறு கோவிலுக்கு செல்ல திட்டமிட்டனர். பவித்ரா , தன்யா , சுவாதி மூவரும் தாவணி அணிந்தனர். இதுவரை அஸ்வின் பவித்ராவை சுடிதாரில் தளர பின்னிய ஒற்றை ஜடையில் பார்த்து இருந்தான். இன்று பாவாடை தாவணியில் இரட்டை ஜடையில் பார்க்க மேலும் அழகாக தெரிந்தாள். ஆகாஷிற்கும் அதே என்ன ஓட்டம் தான். அஸ்வினை போல நேரிடையாக தன் காதலை சொல்ல நினைத்தான். இன்று சுவாதி தனியாக இருக்க நேரிட்டால் கூறிட வேண்டியது தான் என்று நினைத்தான். தனுவை விஸ்வநாதன் , '' என் மகளா இது ? அழகா தேவதை போல இருக்கா , என்ன வாய் தான் கொஞ்சம் நீளம் '' எனக் கூற தன்யா செல்லமாய் முறைத்தாள்.        முன்பு போலவே அர்ச்சனை வாங்கிப் படியேறினர். சாமி பெயரில் அர்ச்சனை செய்ய...      பிராத்தனை போதும் அஸ்வின் கண்கள் பவித்ராவையே நோக்கின. ராதை கவனித்து தீபம் காட்டியதை மகனுக்கு சுட்டி கட்டிட அசடு வழிந்தான் , ஆலயம் வலம் வந்து அமர்ந்து முதல் ஆளாக செருப்பை மாட்டி ராதை கையை சிறு குழந்தை போல கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.    அஸ்வினுக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கி பவித்ரா காணும் போது சிரிப்பை உதிர்த்தான். வீடு

ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்...

Image
                                                                     ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்... ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்... - Praveena Thangaraj Novels                                                                             

முதல் முதலாய் ஒரு மெல்லிய-13

Image
     💘  13 அடுத்த நாள் கல்லூரி முடிந்து வீடு வந்து தயாரானாள். பாதைகள் எல்லாம் நன்கு தெரிந்துக் கொண்டாள். பழகிய தெருக்களாக மாறியதால் நடந்துப் போக முடிவு எடுத்தாள். ஆகாஷ் ராதையிடம் கூறுவது போல் பவித்ராவிடம் , '' அம்மா அந்த ஸ்ரீராம் நம்ம அஸ்வினோட கிளாஸ் மேட். ஆனா அஸ்வினுக்கு அவனுக்கும் ஆகாது , காலேஜில பஸ்ட் இயர் எதுக்கோ முட்டிகிச்சு , ஏன் ஒரு ஹலோ சொல்லற அளவுக்கு கூட தோழமை இல்லை. ஏதோ சொல்லனும்னு தோனுச்சு '' பவித்ரா இயல்பாக '' போய்விட்டு வர்றேன் அத்தை '' என்றாள். '' சரிம்மா பார்த்துப் போ '' என்ற ராதைகுள் சிறு கலக்கம். ஒரு தெரு நடந்து செல்ல அவளது அருகே ஸ்ரீராம் கார் நின்றது. '' வீட்டிற்க்கே வந்து பிக் அப் பண்ணி இருப்பேன். பட்.. ஏறு '' என புன்னகைத்தான். ஏறி அமர்ந்த கொஞ்ச நேரத்திலே '' அஸ்வினும் நீயும் சேம் கிளாஸ்ல படிச்சிங்களா ?'' '' ஆ ...ஆமாம் '' என சொல்கையில் அவன் புன்னகை மாயமானது '' '' அன்னிக்கே ஏன் சொல்லல '' என்றாள். '' இதே கேள்வியை அஸ்வின்