இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பஞ்ச தந்திரம்-13

பஞ்ச தந்திரம்-13     சூர்யா வந்தப் பிறகு அன்றைய இரவு ரொம்பவே ஹாப்பியா இருந்தோம்.         எங்களுக்கான வாழ்க்கை ஒளிமையமா தெரிந்தது. மிலிட்டரிக்கு நேரம் முடியற வரை அவரும் சும்மா தானே வீட்ல இருந்தார். இனிக்க இனிக்க தினமும் தேன் நிலவு தான்.       ஒரு பெண் எந்தளவு சந்தோஷமா வாழணுமோ அந்தளவு ரொம்ப சந்தோஷமா மனநிறைவா வாழ்ந்தேன்.     சூர்யா கூட அடிக்கடி கேட்பார். 'ஏன் ரஞ்சு.. அப்பா அம்மா மீறி கல்யாணம் பண்ணிட்டோம். ஏதாவது பீல் பண்ணறியா. அப்படின்னா சொல்லு... காஸ்மீர் போகறதுக்கு முன்ன காம்பர்மைன்ஸ் பண்ணிட்டு போறேன்'னு சொன்னார்.         நீங்க எதுவும் சமாதானம் பண்ண வேண்டாம். அவங்களா ஒரு நாள் வருவாங்க சொன்னேன். உறவுகள் தானா நம்மளை முழுமையா மாத்தும்னு நற்பினேன்.     ஆனா எங்க வீட்லயும் அவர் வீட்லயும் சுத்தமா சேர்த்துக்கலை. நானும் உடனே கன்சீவ் ஆகிட்டேன். ஒரு குழந்தை பிறந்தா எல்லா உறவும் வரும்னு சொல்வாங்க. ஒருவேளை வாயும் வயிறுமா இருந்தா வீட்டுக்கு முன்ன போனா சேர்த்துப்பாங்கனு கூட போனேன். வாசல் கதவை அடைச்சி நாயை விட்டு துரத்த பார்த்தாங்க. நான் வளர்த்த நாய் என்னை துரத்தலை நானா வந்துட்டேன்.  சூர்யாவும்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-14&15

படம்
💘  14 அன்று ஞாயிறு கோவிலுக்கு செல்ல திட்டமிட்டனர். பவித்ரா, தனு, சுவாதி மூவரும் தாவணி அணிந்தனர். இதுவரை அஸ்வின் பவித்ராவை சுடிதாரில் தளர பின்னிய ஒற்றை ஜடையில் பார்த்து இருந்தான். இன்று பாவாடை தாவணியில் இரட்டை ஜடையில் பார்க்க மேலும் அழகாக தெரிந்தாள். ஆகாஷிற்கும் அதே என்ன ஓட்டம் தான். அஸ்வினை போல நேரிடையாக தன் காதலை சொல்ல நினைத்தான்.இன்று சுவாதி தனியாக இருக்க நேரிட்டால் கூறிட வேண்டியது தான் என்று நினைத்தான். தனுவை விஸ்வநாதன், ''என் மகளா இது? அழகா தேவதை போல இருக்கா, என்ன வாய் தான் கொஞ்சம் நீளம்'' எனக் கூற தனு முறைத்தாள். முன்பு போலவே அர்ச்சனை வாங்கிப் படிறினர். சாமி பெயரில் அர்ச்சனை செய்ய... பிராத்தனை போதும் அஸ்வின் கண்கள் பவித்ராவையே நோக்கின. ராதை கவனித்தாள். தீபம் காட்டி, ஆலயம் வலம் வந்து அமர்ந்து முதல் ஆளாக செருப்பை மாட்டி ராதை கையை சிறு குழந்தை போல கெட்டியாக பிடித்துக் கொண்டாள். அஸ்வினுக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கி பவித்ரா காணும் போது சிரிப்பை உதிர்த்தான். வீடு வந்து சேரும் வரை அப்பாடி என இருந்தது. கீழே இறங்கி வீட்டுக்கு செல்ல எத்தனிக்கையில் மூவரையும், வா

குறுநாவல்- ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்...

படம்
                                                                     ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்...                                                                              📲 1          பெயர் பெற்ற கல்லூரி கட்டிடதின் உள்ள இருந்த ஒரு வகுப்பறையில் எல்லோரும் வீட்டுக்கு செல்ல ஆயத்தமாக இருக்க அவள் மட்டும் தன் வீட்டிற்கு செல்லவே பிடிக்காமல் அமர்ந்து இருந்தாள்.        ஏதோ ஒரு சோகத்தை உள்ளடக்கி அமர்ந்த நிலை யாராயிருப்பினும் கண்டு கொள்ளலாம். ஆனால் நின்று பேச தான் இவ்வுலகில் நேரமில்லை எவருக்குமே.  தனது கவலை ஒதுக்கி தன் அருகே இருந்த தன் தோழி செய்கை கண்டு இருந்தாள் ஸ்வேதா. ஸ்வேதா பற்றி தான் நாம் பார்க்க போவது.      "என்ன பண்ற வித்யா?" என்றாள் ஸ்வேதா.      "பார்த்தா தெரியலை என் போன்ல சிம் போட்டு கொண்டு இருக்கேன்." என்றாள் வித்யா.       "ஏற்கனவே ஒரு சிம் இருக்கே இது என்ன இரண்டாவது சிம்?"         "எவடி இவ... இது ரஞ்சித் கொடுத்தான். அப்பாக்கு என் மேல சின்ன சந்தேகம்... அதனால என் கார்டை போஸ்ட் பெயிடா மாற்றிட்டார். அதிக மெசேஜ் பண்ணின

முதல் முதலாய் ஒரு மெல்லிய-13

படம்
     💘  13 அடுத்த நாள் கல்லூரி முடிந்து வீடு வந்து தயாரானாள். பாதைகள் எல்லாம் நன்கு தெரிந்துக் கொண்டாள். பழகிய தெருக்களாக மாறியதால் நடந்துப் போக முடிவு எடுத்தாள். ஆகாஷ் ராதையிடம் கூறுவது போல் பவித்ராவிடம், ''அம்மா அந்த ஸ்ரீராம் நம்ம அஸ்வினோட கிளாஸ் மேட். ஆனா அஸ்வினுக்கு அவனுக்கும் நோ ப்ரெண்ட்ஷிப், காலேஜில பஸ்ட் இயர் எதுக்கோ முட்டிகிச்சு, ஏன் ஒரு ஹலோ சொல்லற அளவுக்கு கூட தோழமை இல்லை. ஏதோ சொல்லனும்னு தோனுச்சு'' பவித்ரா இயல்பாக ''போய்விட்டு வர்றேன் அத்தை'' என்றாள். ''சரிம்மா பார்த்துப் போ'' என்ற ராதைகுள் சிறு கலக்கம். ஒரு தெரு நடந்து செல்ல அவளது அருகே ஸ்ரீராம் கார் நின்றது. ''வீட்டிற்க்கே வந்து பிக் அப் பண்ணி இருப்பேன். பட்.. ஏறு'' என புன்னகைத்தான். ஏறி அமர்ந்த கொஞ்ச நேரத்திலே ''அஸ்வினும் நீயும் சேம் கிளாஸ்ஸா?'' ''ஆ ...ஆமாம்'' என சொல்கையில் அவன் புன்னகை மாயமானது'' ''அன்னிக்கே ஏன் சொல்லல'' ''இதே கேள்வியை அஸ்வின்கிட்ட கேட்டியா?'' ''இல்ல. ஆகாஷ் வரும்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-12

படம்
    💘  12              அடுத்த இரு தினம் கழித்து, தவசுடர் சுவாதியுடன் ஸ்கூட்டியில் வந்து நேராக பவித்ராவை பார்த்து ''ஏன் உனக்கு அஸ்வினை பிடிக்கலை? அவனை போல பையன் கட்டிக்க கசக்குமா உனக்கு?'' என்று சண்டைக்கு வராத குறையாக கேள்வி கேட்டு நிற்க,            பவித்ராவுக்கு தலை சுற்றியது. இரு தினத்திற்கு முன் இருந்த பேச்சுக்கும் இப்போதைய பேச்சுக்கும் ஒன்றும் விளங்கவில்லை.       ''என்ன பார்க்குற? என் அஸ்வின் வீட்டுக்கு வந்து உன்னை பத்தி சொன்னான். அவன் மனசைத் திருடிட்டு வந்தவளை எப்படி சும்மா விடுவான். போகப் போக அஸ்வினை உனக்கு பிடிக்கும் இந்தா ஸ்வீட்'' என கொண்டு வந்த ரசகுல்லாவை  வாயில் ஊட்டி ராதையிடம் சென்றாள்.      ''அரசியல் கட்சி போல் பல்டி அடிக்கறாங்களா?! அம்மாவுக்கு அஸ்வின்னா ரொம்ப பிடிக்கும் தாத்தாவோட சுபாவம் அப்படியே இருக்கறவன். அவன் விருப்பம் நிறைவேற ஆசை அதான்.'' என்று சுவாதி விளக்கம் அளிக்க,          ''எனக்கு எழுத வேண்டியது நிறைய இருக்கு நான் படிக்கிறேன்'' என நழுவினாள்.                            நாட்கள் இனிதாக நகர்ந்தன.        

முதல் முதலாய் ஒரு மெல்லிய-11

படம்
    💘  11              நாட்கள் கொஞ்சம் வேகமாக நகர்ந்தன.        தவசுடர் (சுவாதியின் அம்மா விஸ்வநாதனின் தங்கை) குழி பணியாரம் செய்து, விஸ்வநாதன் வீட்டுக்குள் வந்தாள். ராதையோடு பேசிக் கொண்டு இருக்க, பவித்ரா உள்ளே நுழைத்தாள்.     ''யார் இந்த பொண்ணு?''     ''உங்க அண்ணாவின் நண்பர் பொண்ணு அண்ணி. பெயர் பவித்ரா, இங்க தான்  தங்கியிருக்கா. சுவாதி சொல்லலையா அண்ணி''      ''இல்லை'' தவசுடர் பவித்ராவை உன்னிப்பாக கவனிக்க தவறவில்லை.     ''பவித்ரா... இவங்க அங்கிளோட தங்கை சுவாதிவோட அம்மா . பெயர் தவசுடர்''      ''வணக்கம் ஆன்ட்டி'' என கை எடுத்து கும்பிட,     ''பொண்ணு மரியாதையை தெரிஞ்சு வைச்சு இருக்காளே, நல்லா இரு'' என ஆசிர்வதித்தாள்.            சற்று நேரம் கழிந்தன. தனு வந்து தவசுடரை கட்டிக் கொண்டு குழி பணியாரம் சாப்பிட்டு மகிழ்ந்தாள், சுவாதியும் வந்து சேர்ந்தாள். சுவதியிடம்,       ''ஏண்டி ஒன்னு விடாம உளறுவ, இங்க பவித்ரானு ஒரு பொண்ணு வந்து இருக்கறது சொல்லவே இல்லையே'' என தவசுடர் கேட்க,        'எ

முதல் முதலாய் ஒரு மெல்லிய-10

படம்
    💘  10           காலை ராதை எழுந்து தினசரி பணியை மேற்கொள்ள, நேரம் ஆனபோதும் பவித்ரா எழுந்து வராததைக் கண்டு ராதை எழுப்ப, பவித்ரா உடல் காய்ச்சல் அடித்தது. அஸ்வின் மாத்திரை கொடுத்தும் வாங்க மறுத்திட, ராதை கொடுத்த பாலையும் அருந்த மறுத்தாள்.     தனு, ஆகாஷ், விஸ்வநாதன், அஸ்வின் என பள்ளி, அலுவலகம் சென்ற பின்னர் ராதை சாப்பிட கூப்பிட்டும், ஸ்ரீராமை உள்ளே கூப்பிடாததை சொல்லி சாப்பிட வர மறுத்தாள்.            தொலைப்பேசி மணி அடிக்க ராதை எடுத்து பேசினாள், அஸ்வின் பவித்ராவைப் பற்றிக் கேட்க, பவித்ரா சொன்னதை அஸ்வின்கிட்ட சொன்னாள், காய்ச்சல் அதிகம் ஆனதையும் கூற, நான் அரை மணி நேரத்தில் வர்றேன் என அஸ்வின் போனை வைத்தான்.          அஸ்வின் ஸ்ரீராம் இருவரும் வந்துச் சேர்ந்தனர் .       '' உள்ள வா... வாங்க'' என அஸ்வின் வரவேற்க, ஒரு வெற்றிப் புன்னகையோடு ஸ்ரீராம் உள்ளே வந்தான்.              அஸ்வின், ராதையிடம் ஜூஸ், டிபன் எடுத்து வர சொன்னான் .     '' பவித்ரா அடம் பிடிக்காம சாப்பிடு''      '' எனக்கு ஏதும் வேணாம்'' என திரும்ப ஸ்ரீராம் அங்கே நின்றிருந்தான்.      '&