Posts

Showing posts from July, 2018

நீயே தானா ...?!

Image
கீச் கீச் யென ஆடிடும் அவ்வூஞ்சலில் சில்லறை சிதறிவிழும் அளவிற்கு குட்டிமகள் சிரிக்க அவள் கேட்கும் அத்தனை கேள்விக்கும் தெரிந்தே தப்பும்தவறுமாய் நீண்ட பதில் அளித்து கோமாளியாய் நிற்பது சாட்சாத் எப்பொழுதும் என்னிடம் மிடுக்கோடு ஹைக்கூ போன்று சுருங்க பேசிடும் நீயே தானா ...?!                      -- பிரவீணா தங்கராஜ் 

கொசு

ஒரு வருடத்திற்கு இருமுறை ரத்ததானம் என்று சொல்லி வையுங்கள் தினமும் ரத்தத்தை உறிஞ்சும் கொசுக்களிடம் .😉😬              பிரவீணா தங்கராஜ் .

வாழ்க்கை யென்னும் கல்வி

Image
எட்டு மைல்கள் ஏழு மைல்கள் நடந்தே புத்தகப் பையை முதுகில் சுமந்து நீரோடைக் கடந்து நிலங்களைக் கடந்து மணி அடித்து முடித்தப் பின்னே சுவரின் மறைவில் தமிழ்த்தாய் வாழ்த்து முடிவில் ஆசிரியர்கள் பார்க்காதப் போது சாரையாய் நின்றிருந்தக் கூட்டத்தில் பையோடுக் கலந்து விட்டு மூச்சு வாங்கி வகுப்பறையில் நுழைந்து திக்கித் திணறி கற்ற ஆங்கிலத்தில் இருந்த நிறைவு இன்று ஆயிரங்களை அள்ளி வழங்கி நுனி நாக்கில் பிள்ளைகள் பேசிடும் ஆங்கிலத்தில் ஏதோவொன்று மனதை நிறைய விடாது குறைந்தே இருக்கின்றது வாழ்க்கை யென்னும் கல்வி அவர்கள் கற்றிடாது செல்வதால்...                    -- பிரவீணா தங்கராஜ் .

குளிர்சாதனப் பெட்டி

அடிக்கடி குளிர்சாதனப் பெட்டி திறக்கப்படவில்லை தொலைக்காட்சியில் இன்று சுட்டி டிவி இடம் பெறவில்லை குளியலறையில் குழாய் நீர் சொட்டியபடி மூடவில்லை வாயிலில் கழற்றிய பாதணிகள் ஜோடிகள் மாறமலும் கலைந்திடாது இருந்தன இந்நேரம் யூகித்தது சரி குட்டி மகள் அவள் தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்று இருக்கின்றாள் .                     -- பிரவீணா தங்கராஜ் .

👴 முதுமையின் ஏக்கம் 👵

தோல் சுருக்கத்தினுள் ஆரம்பமாயின  முத்தாய் நீண்டது பிணிகளின் எழுச்சி நேரங்களை வெறுமைகள் புசித்து கொண்டிருந்தன சோதனைகளாய் மைந்தர்கள் தூரதேசம் சென்றதும் உயிர் சுவாசமான பேரன் பேத்திகளை கொஞ்சிட மாதயொரு முறை கூட கிட்டாத ஏழ்மையானேன் தனிமை சிறையில் பேச்சுக்கு ஆளின்றி முதுமையின் ஏக்கம் தொடர்கிறது மரணம்வரை                              --பிரவீணா தங்கராஜ் . 

இன்று

நேற்றைய என்னை ரசித்துப் பார்த்து நினைவுக் கூர்ந்து இனிய நேரங்களாக - அதில் தொலைந்து போகின்றனர் நாளைய என்னை யோசித்து யோசித்து தவித்துத் தவித்து அதிலும் என்னை தொலைத்தே போகின்றனர் இன்றைய என்னை மட்டும் சலித்துக் கொண்டே நகர்கின்றனர்                  -- பிரவீணா தங்கராஜ் .

வாசலிலே ஏங்கும் மங்கையிவள்

Image
நினைவுகளின் ஜாலத்தில் நேரங்களோடிட  நீங்காத நினைவுகள் முழ்குதிங்கே பனிப்பொழியும் நிலவின் சுடரொளியில்  கனியிதழில் கவிதைப் பேசிடவே  கண்களில் மையல் தேக்கி வைத்து  கைவிளக்கு ஏந்திய காரிகையிவள்  மல்லிகை மணம் வீசி உன் வரவை  வாசலிலே விழிப் பதித்து வருடிகின்றாள் .                            -- பிரவீணா தங்கராஜ் .  

சொல்லியது பழமை

Image
பாங்காய் கட்டுக்கட்டிய பாய்களை பதவிசனமாய் சும்மாட்டில் அமர்ந்தி கூவிக் கூவி விற்று முடித்து கூடுகள் தேடி ஓட்ட மெடுக்க பாய்கள் விற்று வந்த பணம் - பிள்ளையின் படிப்புக்கும் பழங்கஞ்சிக்கும் போதுமானதாயிருக்க வீதியென்ன வீடுயென்ன யென்பதுயெல்லாம் உழைக்கும் கரங்களுக்கும் தெரிவதில்லை பாதணியில்லை இந்த பாதங்களுக்கு பஞ்சு மெத்தையில் கிட்டிராத நித்திரை கோரைப்பாயி சுமந்தவளிடம் மண்டியிட்டே பங்கமின்றி துயில் கொள்கின்றது . கோரைப்பாயின் மேற்படுக்க நோய் நொடிகள் இங்கில்லை பந்திப்பாயில் பகிர்ந்து உண்ண பாசமாதில் நீண்டு போக பங்கமின்றி வாழ்ந்திடவே சொல்லியது பழமை               -- பிரவீணா தங்கராஜ் .

👽வேற்று கிரகத்தில் ஒரு நாள்👽

Image
அமைதி தேடி அழ மூச்செடுத்து அசைந்தாடும் ஊஞ்சலிலே வேம்பு மரத்தடியில் ஆடுகையிலே ஆகாய மேலிருந்து வெள்ளி தட்டொன்று பறந்து வர விழியிடுக்கி கண்டு வியந்தேன் அருகே வர வர அது பெரிதானது அக்கணம் உணர்ந்தேன் அது பறக்கும் தட்டென்று வாயில் பசைப்போல பேச்சற்று நிற்கையிலே உள்ளே செல்ல உள்மனம் உந்தியது மெல்ல நடந்தே உள்ளே செல்ல மேலே எழும்பி 'ஜிவ்'வென பறந்தது யாருமில்லையாயென சுற்றி முற்றி பார்க்கையிலே புருவமில்லா ஒற்றை விழியொன்று இருபக்க பட்டாம்பூச்சி கொடுக்கு நீட்டி பாதரச நிறத்தையொத்த உருவமொன்று அருகே நின்றது குறுந்தகட்டின் கீச்சு குரலில் புரியா மொழியில் ஏதோ சொல்ல விழிபிதுங்கி நின்றேன் நானும் பதட்டம் வேண்டாம் பாதகம் செய்யும் மனித ரகமில்லை யென்றது தேன்தமிழில் தமிழ் கேட்டு முகம் மலர்ந்தேன் 'பாதகம் செய்யும் மனிதரகமில்லை' யென்ற வார்த்தையில் அகம் சுணக்கம் அடைந்தேன் உணவு உண்ணாது தலை சுற்றல் நிகழ மூன்று கையுடைய கிரகவாசி மாத்திரையும் கருப்பு நிற பானத்தையும் தயங்கிய பெற்று உண்டு முடித்தேன் அட்டைப்பெட்டியாய் தொங்க விடப்பட்ட வீடு அங்கே நீரில்லை நிலமில்லை

நல்லதே நினை

Image
முடக்கி விடவில்லை உலகம் என்னை முடங்க விடவில்லை நானும் மனதை எழுந்து நடைப் போடுகின்றேன் ஜெயமாக எண்ணம் என்ற உந்துதலில் நினைவாலே சிறகை விரித்தேப் பறக்கின்றேன் வானிலே சிரத்தை கொஞ்சம் எடுக்கின்றேன் வலியிலே கொஞ்சமும் இல்லை என்னுள் ஊனம் என்றே சொல்லிடும் தன்னம்பிக்கை மனம் .              -- பிரவீணா தங்கராஜ் .

கூண்டுக் கிளி இவள்

Image
மென் பாதங்களை அத்திரிசாரம் கட்டியிருக்க  மலர் கரங்கள் மந்திரக்கோல் பற்றியிருக்க தூரிகை வடித்தன சுதந்திரக் கிளியொன்றை காரிகை இவளுக்கும் கிட்டுமோ விடுதலை ?                               --  பிரவீணா தங்கராஜ் . 

🐦சிட்டுக்குருவியின் ஏக்கம்🐦

தென்றலது தாலாட்ட தேகமது சிலிர்க்க நெல்வயலின் மத்தியிலே கிணற்றுநீர் தத்தளிக்க பகலவனதில் பிம்பம் பார்க்க ஓடும் நீர் தொட்டில் மஞ்சள் உரசி கதைப்பேசி குளித்திடும் மங்கைகள் கால்வாய் வரப்பில் நீர் சலசலக்க வெள்ளி முத்துக்களாய் நீர்குமிழ்கள் வெளிப்பட ஈச்சமரத்தினிலே இசைத்தபடி நான் இருந்தேன் எந்தன் வீட்டை நானே கட்டி இயற்கையோடு வாழ்ந்திருந்தேன் உந்தன் சுயநல எண்ணத்தால் குளிர் சாதன கருவியில் இடுக்கில் குப்பையாய் கட்டியப்படி ஏதோ பெயருக்கு வீடென அமைத்து எந்தன் மிஞ்சியிருக்கும் இனத்தை கா(கை)ப்பாற்றிக் கொள்கின்றேன் உன்னை போலவே என்னையும் செயற்கையாய் வாழ வைத்தாயே...  மனிதா...!                      -- பிரவீணா தங்கராஜ் .

தனித்தீவாய் உறவுகள்

Image
பட்சணங்கள் செய்து வைத்து பண்டிகையாய் வீடு நிறைந்து கள்வனாய் பண்டம் எடுக்க கண்ணனாய் மாறினேன் உறவுகள் படைச் சூழ உணர்வுகள் களிப்பைத் தர இன்பமாய் வாழ்ந்திருந்தோம் கூட்டுக் குடும்பமென ஒன்றுப் பெற்று உறவுத் தொலைத்து பண்டிகையும் பொலிவிழந்து தனித்தீவாய் தனிக் குடும்பம் ஆனதிங்கே                               -- பிரவீணா தங்கராஜ் .

நீயின்றி இருக்கும் நான்

விழிகள் கண்டு ரசித்து மகிழ்ந்த வையகத்தை நெஞ்சில் ஏதுமின்றி கரம் பற்றியபடி கதைப்பேசி கதைத்திடவே காதலன் ஒருவன் வருவனென்று காத்திருந்த கண்கள் பூத்துவிட்டது இளநரை வந்து இதயம் கனத்து இளவரசன் தேடிடும் முதிர்கன்னியாய் இப்படி இப்படியாய் தினம் நடக்கும் காட்சி பொருளாய் யொரு நாடகம் கானகத்தில் இருப்பதாய் தோன்றுதடா நெஞ்சம் கானகத்து குயிலாய் நீ வர மறுப்பது ஏனோ தேனீ சுவைக்காதா பூவின் மகரந்தம் நீரில் ஒட்டாத தாமரை இலை தென்றல் தீண்டாத ஜன்னல் கதவு ஓவியம் வரையாத துரிகையாக தனிமையில் நீயின்றி இருக்கும் நான்                             -- பிரவீணா தங்கராஜ் .

👅 நாக்கு👅

Image
அரையடி யுருவம் நீ ... ஆறடியை விழுங்கும் மாயம் நீ ... அமிர்தமாய் பேசிய நொடி நஞ்சாகவும் மாறிடும் ஜாலமும் நீ ... நொடிப்பொழுது மாறிடும்  உனக்கு அறுசுவை அறியும் பிராப்தம் தான் குழந்தை மனம் கொண்டு குழைவாய் பேசிடுவாய் ... கயவர்கள் கண்டு எதிர்க்க அரணாய் காத்திடுவாய் ... எடுத்துதெறிந்து பேசிட எங்கு தான் கற்றாயோ ...? எண்ணிலடங்கா ரணங்களை சொற்களில் வைத்தாயோ ... சாட்டையாய் சுழற்றியடிக்கும் வித்தை சாகசம் தான் உன் சிறுயுருவில் அனலாய் கொட்டிய வார்த்தை அள்ளிட முடியாது சிறு இதயம் துடிக்கும் சத்தம் உன்னில் சொல்லவில்லையா ? கூர் வாள் பேச்சு வேண்டாமே கூடுதல் ஆயுளுக்கும் மகிழ்ச்சிக்கும் குறைவுப் பேச்சு போதுமே .                             --பிரவீணா தங்கராஜ் . 

பிரியாதே என்னுயிரே

விண்ணிலிருந்து வந்த அன்புத்தாரகை நீ வையகம் புகழும் குணப்பேரழகு நீ மதங்களும் ரணங்களும் வந்தாலும் மனதினில் பட்டாம்பூச்சி உன்னால் தள்ளி செல்லாதே காதலை தள்ளாதே மழைக்கால தேனீர் நீ யெனக்கு நிமிட நேர பிரிவையும் நீங்க மறுக்குது என்னிதயம் நேசங்கள் தந்தவளே என்னுயிரே பிரியாதே                 -- பிரவீணா தங்கராஜ் .

ஒரு பக்க கதை - கோழையின் மரணம்

Image
     கோழையின் மரணம்                                                      சித்தார்த்தை கடிந்துக் கொண்டே இருந்தார் அவனின் தந்தை சிவதாணு. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிப்பின் மதிப்பெண் பட்டியலில் நான்கு பாடத்தில் தேர்வுப் பெறவில்லை, அது மட்டுமின்றி கூட படிக்கும் பெண்ணை விரும்பியதாக சொல்லி அவன் அண்ணன் வீட்டிற்கு வந்துக் கத்தி விட்டு சென்றதாலும் ஏற்பட்ட தொடர் வசவுகள் கோழையான அவன் மனதில் தற்கொலையை தூவி விட்டது.        ''போதும் அவனை திட்டியது. கொஞ்சம் தனியா இருந்து நிதானமா யோசிச்சா தற்போது வந்த காதல் இனக்கவர்ச்சி என்று புரிஞ்சுப்பான். இனி வரும் தேர்விலும் கவனம் வைப்பான்'' என தாய் அம்பிகை அவனுக்கு ஆறுதலாக சொல்லியப் படி தன் கணவனுக்கு 'இனி பேச வேண்டாம்' என அன்பு கட்டளை விடுத்தாள்.       ''என்னவோ போ அம்பிகை உன் மகன் நல்லதுக்கு சொன்னேன் . அவனுக்கு புரிஞ்சா சரி'' என பெரு மூச்சு விட்டு வெளியே கிளம்பினார்.                                 அம்பிகையும் அமைதியாக அமர்ந்திருக்கும் மகனுக்கு தெளிவுப் பிறக்க வேண்டி கோவிலுக்குக் கிளம்பிச் சென்றாள்.        'சே! யாரும

பெண்ணிவள் முதிர்க்கன்னி

Image
நெஞ்சில் காதல் பொங்கி வழிந்ததால் வஞ்சியிவள் தனியே நடந்தாள்  கன்னியவள் மனம் அறிந்த ஏடு... கரம் பற்றி கதைப் பேசும் அவனது சுவடு வையகம் கண்ணில் வரமறுப்பாய்... காரிருள் நித்திரையில் கனவில் வருவாய்... முகமது நீ காட்ட மறுக்கின்றாய்... அகமது உன்னிடம் அடிமைக் கொள்வதாய்... பகலவனைப் போல வதைக்காதே... பனிமழையாய் எண்ணில் கலந்திடவா ! நினைவில் கனவில் உன்னை எண்ணி நித்தம் தொலைக்கின்றது என் தனிமை புரவியில் அமர்ந்து நீ வருவாயோ... தரணியில் வந்து கால் பதிப்பாயோ... பெண்ணிவள் முதிர்க்கன்னி யென்பதை உடைத்து உன்னவள் என்பதை உலகுக்கு காட்டு .                                       -- பிரவீணா தங்கராஜ் .

புரியாத புதிர் அவள்

Image
புரியாத புதிர்களின் தனக்குள் கொண்ட பெண்ணினம் முடிச்சுகளோ அவளுள் ஏராளம் தங்க பஸ்பம் பூசிய ஒளிர்வு மேனியவள உள்மனம் அறிந்தால் மட்டுமே விளங்கும் அகராதியவள் சிப்பியாய் மூடியிருக்கும் விழிக்குள் முத்தாய் மிளிரும் அறிவு சுடர் அவள் .                                 --- பிரவீணா தங்கராஜ் .

நீதி தேவதை

நீதி தேவதை எங்கே நியாயத்திற்கு  கண் திறந்தால் தன்னையும் வன்புணர்வு செய்திடுவார்களோயென அஞ்சிக்  கையில் நியாய தராசை ஆயுதமாகயேந்தி சர்வ ஜாக்கிரதையாக இருக்கின்றாள் .😠          -- பிரவீணா தங்கராஜ் .

பாட்டியின் பால்யம்

Image
பாட்டியின் பால்யம் – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

குழந்தையின் மணல் கோட்டை

Image
                        ஆழி அருகே வடிவாய்... சோழி பொருக்கி சித்திரமாய்... கள்ளமில்லா பிள்ளை உள்ளம் இல்லம் ஒன்றை கட்டிடவே காற்றும் இதமாய் வீசியதோ... காவலாய் கரம் பற்றியதோ... கனவு என்றே நினையாதே காலம் சொல்லிடும் நிஜமாக காத்திரு அதுவரை கடலலையே. . .                            -- பிரவீணா தங்கராஜ் 

தோழிகளின் வட்ட மேஜையில்

சுருக்கென்று வந்திடும் சினங்களெல்லாம் எங்கே தான் சென்றிடுமோ ! மனதை மறைத்து பேசிட வேண்டுமென்று எண்ணங்கள் எல்லாம் தோன்றாதது ஏனோ ! நாழிகள் நொடிகளாக மாறிடும் விந்தைகள் இங்கு தானோ ! ஆயிரம் கிண்டல் கேலி செய்திட்ட போதும் புன்னகையோடு பேசிடும் முகங்கள் தானோ ! குழந்தை குட்டி குடும்பம் யென இத்யாதிகளை சிறிது நேரம் விட்டுவிட்டு நாம் நாமாக வாழ்ந்திட்ட நேரம்தானே  ! தோழிகளின் வட்ட மேஜையில் .

உயிரே ...

ஒரு வாரம் ஓடிப்போனது அச்சண்டையின் பாதிப்பு இருவரும் பேசாமடந்தையாக  உன் ஒவ்வொரு அசைவையும் பார்த்துப் பார்த்து எப்பொழுது பேசுவாயென சிறு இதயம் ஏங்கியே தவித்து நீண்ட மனப்போராட்டத்திற்கு பின் உன் கம்பீரத்திற்கு குறைவு வந்திடாது ஒரு வழியாய் மவுனத்திற்கு விடை கொடுத்து உன்னிடமே கேட்டு விட்டேன் எப்படி உன்னால் மட்டும் என் பார்வையை புறக்கணித்து என் மேனியை தழுவாது என் மூச்சை சுவாசிக்காது எப்படி இருக்க முடிகின்றதென்று நீயோ என் கண்களை ஆழமாகப் பார்த்து சுவாதீனமாக கூறுகின்றாய் உயிரற்ற உடலுக்கு என்ன தெரியும் நீ பேசிய பின்பு தானே உயிர் வந்தது என்கிறாய்...                       பிரவீணா தங்கராஜ் .

மெழுகானாய் பெண்ணே...

Image
வலிகள் நிறைந்த வாழ்க்கையடி பெண்ணே...! துன்பங்கள் களைந்திடும் வித்தையறிவாய் கண்ணே...! உடல்வலிமை உன்னிடமில்லை யென்றால் யென்ன அகவலிமை ஆட்கொள்ளும் இறையும் நீயே...! தாயாய் தமக்கையாய் மனைவியாய் மகவாய்.. தன்னலம் பார்க்காது வாழும் தாரகையொளியே..! சுடராய் நீயொளிவீசி வெளிச்சம் தர  , சுற்றுதடி மண்ணுலகம் யுன்னை போற்றியே...!                                  -- பிரவீணா தங்கராஜ் .

பிரபஞ்சம் நீயே...

Image
பச்சை பசுஞ்சோலை நந்தவனத்தில்  பாவை யென்னுயிராய் வந்தவளே...! பிரபஞ்சம் நீயே என்றுணர்ந்து பாதம் மடித்தே கை பற்றுகின்றேன் விண்ணிலிருந்து வந்த தேவதையே...! வையத்தில் வாழும் தாரகையே...! வெய்யோனின் கதிரொளி சாட்சியில் வேந்தனான் மணம் புரிய ஆசைக்கொண்டேன் தாமரை வண்ணாடை நீயுடுத்தி தாமரையாய் யென்மனதை சிதைத்ததென்ன தாமரை மலர் கரத்தில் மொட்டாய்... தவிக்கிறது யென்னிதயம் இதழ் பதிக்க புன்னகை மிதமாய் வீசி விட்டாய்... புவிதனில் எந்தன் பாதம் சிறகிட்டது பூவிதழ் மெல்ல நீ திறந்து புதிரை விடுத்திடு மையல் சொல்லியே...!                                                      -- பிரவீணா தங்கராஜ் .

மீண்டும் ஒரு தாஜ்மஹால்

Image
தாஜ்மஹாலின் அழகைக்காண மும்தாஜே வருகை என்னவளின் எழிலில் உயிர் ஓவியமாய்...!                                     -- பிரவீணா தங்கராஜ் .

என்னை சிலையாக்கி விட்டாய்- காதல் பிதற்றல் 37

நெற்றி வகிட்டில் குங்குமமிட்டு தொங்கும் காதணியை காதுக்கு ஊஞ்சலாக்கி விற்புருவத்திற்கு வாள் போல்  கூர்தீட்டி துள்ளும் விழிகளுக்கு மையிட்டு கண்ணாடி வளையல் சப்தம் எழுப்ப முத்துமாலையை கழுத்துக்கு அணிவித்தே முகம் நிறைய புன்னகை பூசி நின்று வெள்ளி கொலுசொலி சினுங்க உன்னிடம் வந்து நின்றேன்  நீ சிலையாக நீயோ சாதாரணமாக கேசத்தை கலைத்து பெயருக்கு வாரியப்படி ஒற்றை கைக்கடிகாரத்தை உந்தன் இடது கையில் கட்டியவாறு மொத்த கம்பீரத்தையும் அழகையும் உனக்கே சொந்தமாக்கி என்னை சிலையாக்கி விட்டாய்...!                         -- பிரவீணா தங்கராஜ் .

பணிப்பெண்

மிக பிடித்த வண்ணங்கள் கொண்ட ஆடைகளை பரப்பி மெல்ல மெல்ல தொட்டு பார்த்து பார்த்து ரசித்து விலைப்பட்டியல் போடுமிடத்திற்கு அனுப்பிவைத்தாயிற்று இனி அடுத்த வாடிக்கையாளர் வரும் வரை கலைந்த புத்தாடையை தன் தோளில் பின் குத்தியே கிழிச்சலை அடைந்த நிறமிழந்தயாடையை  மறைத்த படி மடித்து வைத்து சில ஏக்கத்தையும் வறுமையையும் புதைத்தே அடுத்த வண்ணயாடையை  எடுத்துக் காட்ட தயாரானாள் பணிப்பெண்.                                -- பிரவீணா தங்கராஜ் .  

சொல்ல மறந்ததை

ஏதோவொன்றை சொல்லாமல் விடுத்து சென்றாய்...! எண்ணிலடங்கா எண்ணத்தை விதைத்தே சென்றாய்...! நீ சொல்ல மறந்ததை நினைத்து நினைத்து நீ சொல்லி யிருக்கலாம் யென்று தவித்து நினைவுக் கோப்பையில் மருகி லயித்து நித்திரையை தள்ளி வைத்து போராடுகிறேன் தினம் தினம் சித்திரவதையாய்...!                          -- பிரவீணா தங்கராஜ் .

ரயில் பயணங்களில்...

அரை மணிநேர ரயில் பயணம் பார்த்ததும் அள்ளி அணைத்து முத்தமிட தூண்டும் மழலையை கையில் ஏந்தி யிருந்தமையால் ஜன்னலோர யிருக்கை சாதகமாய் கிட்டின கையிலிருந்த மொட்டுக்கு பின்னுக்குச் செல்லும் மரங்களும் வீடுகளும் பார்த்துக் கொண்டே வர போதுமானதாய் யிருக்க எனக்கு தான் உள்ளுக்குளிருக்கும் மன ஏட்டில்  பதிக்க கருக் கொண்ட வரிகள் தேடியது முதலில் சிநேகா புன்னகை விடுத்த எதிர் யிருக்கை பெண்மணி அதற்கடுத்து தொடுதிரையை துழாவியபடி விழிகளை செல்சிறைக்குள் செலுத்திய கல்லூரி மாணவி இசைஞானியின் ஏதோவொரு இசைக்கு தன் செவியினை கொடுத்து விட்டு கண்கள் சொருகி ரசித்த நாற்பதை கடக்கும் பெண்மணி இதற்கிடையில் வலுக்கட்டாயமாக திணிக்க வந்தது ஹிந்தி-தமிழ் சமவிகிதத்தில் கலந்து ஏதோவொரு தேனீர்(டீ)கடை தொண்டனின் சமோசா விற்பனை ஒருவித எரிச்சலோடு அவன் சென்ற பின்னர் முதன் முதலில் கைப்பை அணிந்தவர்களும் முதன் முதலில் குழந்தையை முதுகில் சுமக்கும் வித்தை தெரிந்தவர்களுமானவர்கள் ஊசி மணிகளையும் பாசி மணிகளையும் விற்க வந்தனர் அவர்களை கண்டு சிலர் ஒதுங்க அவர்களை கண்டு சிலரோ பேரம் பேசி மணிகளை வாங்கவும் செய்தனர் இடைப்பட்ட நிறு