Posts

Showing posts with the label அகமா முகமா?

நீ என் முதல் காதல்-26

 அத்தியாயம்-26   யுகேந்திரனுக்கு நா வரை வந்த ரகசியம் மகளிடம் போட்டு உடைக்க முடியவில்லை.       சாதாரணமான விஷயமா? ஸ்ரீநிதி கோபத்தில் ம்ருத்யுவை பிற்காலத்தில் எடுத்தெறிந்து பேசிவிட்டால்? அந்தளவு கூட சிந்திக்காதவன் அல்ல. அதோடு ம்ருத்யுவிற்கு இவ்விஷயம் தெரிந்து தாரிகா அக்கா பைரவ் மாமாவிற்கும் உண்மை தெரிந்தால்? இத்தனை நாட்களாய் கட்டிக்காத்தது வீணாக போய்விடுமே.    அதனால் நாவை அடக்கி, "குட்டிம்மா அம்மா மட்டுமா ம்ருத்யு மேல பாசம் வச்சிருக்கா? நானும் தான் ம்ருத்யு மேல பாசம் வச்சிருக்கேன். அவன் என் அக்கா பையன் டா.  இதை தவிர வேற காரணம் என்ன இருந்திடப்போகுது. காதல் தோல்வியை தலைமுழுகிட்டு ம்ருத்யுவோட வாழ்ந்து பாருடா. அப்பாவுமே காதல் தோல்வி அடைந்தவன். ஷண்மதி அம்மாவை நேசிக்கலையா?" என்று தலை கோதினார்.      யுகேந்திரன் ஒரு இக்கட்டில் தன் காதலியை கைப்பிடிக்க வந்தவன் சூழ்நிலை சந்தர்ப்பத்தால் ஷண்மதியை மணக்கும் இக்கட்டிற்கு சென்றான். காதல் தோல்வியை கடந்து ஷண்மதியை விரும்பினான்.     ஷண்மதியும் பள்ளிக்காலம் முதல் நேசம் வைத்ததால் யுகேந்திரனிடம் தன் காதலை ம்ருத்யு போல தான் போராடி பெற்றாள்.    அதை வைத்

நீ என் முதல் காதல் -23

 அத்தியாயம்-23 ம்ருத்யு அவனுக்குண்டான பிசினஸ் என்று எதுவும் ஆரம்பிக்கவில்லை. அதனால் முழு நேரம் ஸ்ரீநிதி பின்னால் தான் சுற்றினான்.  "ஹனிமூன் போகலாமா ஸ்ரீ" என்று ஆசையாக கேட்டவனிடம் பதிலேதும் கொடுக்காமல் "நான் அப்பாவோட பிசினஸை கையிலெடுக்கலாம்னு இருக்கேன். உன்னை மாதிரி வெட்டியா இருக்க முடியாது இல்லையா? நான் ஷண்மதி பொண்ணாக்கும்" என்று திமிராக மொழிந்தாள்.  உண்மையில் ஸ்ரீநிதி பேசும் போது அவனது தன்மானம் உடைந்துக் கொண்டிருந்தது. ஆனால் தொழில் முக்கியமா? தன் வாழ்வு முக்கியமா என்று சிந்திக்கும் போது தன் வாழ்வை முதலில் சீர்படுத்தவே முடிவெடுத்தான்.  "ஹனிமூனாவது மண்ணாங்கட்டியாவதுனு பேசாம, எனக்கு அப்பா பிசினஸ் பார்க்கணும்னு பொறுப்பா பேசறியே ஸ்ரீகுட்டி. இது போதும்" என்று அதற்கும் தனக்கு ஏற்றது போல பேசினான்.  ஜீவியை புறம் தள்ளி திருமணத்தை நடத்தியாயிற்று. இனி கணவனாய் தக்க வைக்க வேண்டுமே. தாலி ஏறினால் கணவனே கண்கண்ட தெய்வமாக ஸ்ரீநிதி நிச்சயம் புராணம் பேச மாட்டாள்.  ஏமாற்றி என் மனதை வதைத்தாய் என்று கணவன் எதிரே காதலனுக்கு முத்தமிட்ட பிசாசு.  ஏடாக்கூடமாக எதையாவது செய்தால்?  ஏனோ ர

அகமா முகமா?

Image
  அகமா முகமா?     குழந்தைகள் வந்ததும் அவர்களை  கவரும் விதமாக ஆங்காங்க கார்டூன் பொம்மை உடையணிந்து  மனிதர்கள் அவ்விழாவிற்கு காத்திருந்தனர்.        குழந்தைகள் தினத்தை குதுகலமாக அவர்களுக்கு பிடித்த வகையில் அந்த அப்பார்ட்மெண்ட்டில் நடைப்பெற்றது.     மொத்த அப்பார்ட்மெண்ட் குழந்தைகளும் கலந்து பரிசை வெல்ல பல போட்டிகள் நடைப்பெற்றது.    குழந்தைகளுக்கு போட்டி மட்டுமா பிடிக்கும். அவர்கள் கார்டூன் உலகத்தின் மக்களையும் வரவைக்கவே அந்த அசோஷியேட் ஆட்கள் முடிவெடுக்க இதோ கார்டூன் உலகத்தின் ஆடையை மனிதர்கள் அணிந்து நடமாடி பார்க்கும் குழந்தைக்கு எல்லாம் கையை அசைக்க, குழந்தைகளோ ஆர்வமாக கை குலுக்குவதும், போட்டோ எடுப்பதுவுமாக இருந்தனர்.     உள்ளுக்கு அத்தனை புழுக்கம் ஏற்படும் அந்த ஆடை அணிந்தால், முகம் வேர்த்து வேர்வை தண்ணீர் சொட்டும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தனியாக சென்று அசுவசப்பட்டு கொள்வார்கள். சற்று நேரம் ஆளில்லை என்றால் கூட வரவேற்பில் இருக்கும் பணம் கொடுத்த ஆட்கள் "என்னப்பா வாங்கற காசுக்கு நிற்க வேண்டாமா" என்பார்.     "என்னப்பா... எங்க காலத்துல இருந்து இப்ப வரை லீடிங்ல இருக்கறது மிக்கி