Posts

Showing posts from June, 2018

கோடைக்கால பிடித்தம்

கவிஞர்களுக்கும் கவிதைக்கும் மழைக் காலம் பிடித்தம் எனக்கு மட்டும் சுட்டெரிக்கும் பகலவனின் கதிர்கள் வயல்வரப்பில் வழிந்தோடும் நீரில் பட்டு தங்கமாய் மின்னும் ஆகசிறந்த கோடைகாலமே எனக்கு பிடித்தம் அப்பொழுது தானே கல்லூரி விடுமுறையென்று   நீ அங்கே இன்னுமொரு வெய்யோனாய் காட்சி தருவாய்...!                      பிரவீணா தங்கராஜ் . 

பச்சை பட்டாடை

வானம் பூமியின் கிழிந்த ஆடையை மின்னல் ஊசி கொண்டு தைக்க மழையாக நூல் தரித்து பூமியி(வய)ல் பச்சை பட்டாடையுடுத்த வானம் ஞாயிறின் கதிரொளில்நிமிர்ந்தது  .                   பிரவீணா தங்கராஜ் .

தாயாக தலையணை

மெத்தையில் சாய்ந்தும்  கண்ணீரை உறிஞ்சி ஆறுதல் படுத்திவிடுகிறது தாய்-தந்தை யில்லாதவர்க்கு தாயாக மாறி விடுகிறது தலையணை .          -- பிரவீணா தங்கராஜ் .

இறவாதக் காலம்

Image
நினைவு சங்கிலியை மெல்ல மெல்ல அவிழ்த்து இறந்தக் காலத்தை நினைவு காலத்தில் முனைப்பாய் கொண்டு வந்து கவிழ்த்தேன் தட்டாம் பூச்சியை தாவிப் பிடித்ததும் ஆற்று நீரில் அமிழ்ந்து அள்ளி குளித்ததும் மணற்பரப்பில் கோட்டை கட்டி மணலை குழப்பியும் இரட்டை சடையில் வண்ணரிப்பனை முடித்திட தெரியாது விழித்து நின்றதும் வரப்பு நீரில் கொலுசுகள் இசைக்க துள்ளி ஓடியதையும் மயிலிறகை புத்தகத்தில் பொத்தி வைத்து எழுதுக்கோளின் மரத்தூளை உணவளித்து காத்திருந்தேன் குட்டி போடவும்  பூப் போட்ட பாவாடையில் மிட்டாயை கடித்து  தோழிக்கு பகிர்ந்து உண்ட மணித்துளிகள் தந்தையின் கையிருப்பில் பார்த்த பேய் படங்கள் அரைப் பெடல் அடித்து சைக்கிளோட்டி கீழே விழுந்த சிராய்ப்புகள் வெள்ளி கிழமை தோறும் ஒளிப்பரப்பாகவும் புதுப் பாடல்பனை பழத்தை பற்களில் சிக்கி முகத்தில் அப்பியும் எவ்வித நெருடல்களையும்  மனதில் பதிய வைக்காது சுற்றி திரிந்ததை பத்திரமாக  மெல்ல மெல்ல இதயத்தில் கட்டிப் பதித்துக் கொண்டேன் நிகழ்கின்ற சங்கிலி தொடர் அனுபவங்கள் அதனுள் பாதிக்காத வண்ணம் இறந்த காலத்தை இறவாத காலமாக வைத்திருக்க...                                       -- பிர

எந்த நொடியில் என்னிதயம்

அவள் புள்ளி வைத்து போட்ட கம்பிக் கோலத்தில் என்னிதயமும் அடைப்பட்டதா ? அவள் வீட்டுப் பூவை பறித்தப் போது என்னிதயமும் பறிபோனதா ? அவள் மயிலிறகு தொலைத்து தேடிய போது என்னிதயமும் தொலைந்ததா ? அவள் எழுதுகோலை பல்லிடுக்கில் கடித்தப் போதே என்னிதயமும் கடிபட்டதோ ? அவள் காந்தப் பார்வைக்கு கூடுதல் ஒளிவீச மைதீட்டிய போது என்னிதயமும் ஒளிவீசியதோ ? எப்படி இழந்தேன் என்னிதயத்தை யாரேனும் காதலில் முனைவர் பட்டம் பெற்றிருப்பின் எந்த நொடியில் என்னிதயம் களவாடப்பட்டதென சொல்லுங்கள் அதை அவளுக்கு சொல்லவேண்டும் அவளொரு கள்வனின் காதலியென்று ஆம் நான் கள்வனே அவள் இதயத்தை திருடியதால்...          -- பிரவீணா தங்கராஜ் .

எட்டுவழிச்சாலை

பாதைகளை ஏற்படுத்தி கால்களை முடமாக்கும் எட்டுவழிச்சாலை         -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் - 36 இதழின் ஏக்கம்

சில்லறை முத்தங்களை யாசகம் கேட்கின்றேன் நீயோ அழுத்தக்காரன் அழுத்த முத்தம் போதுமென்கின்றாய்... சில்லறை முத்தமோ அழுத்த முத்தமோ ஜெயிப்பது எதுவோ இதழின் ஏக்கம் சரி எதற்கிந்த முத்தப்போராட்டம் இரண்டுமே ஜெயிக்க பிராப்தம் செய்கின்றேன் இதழுக்காக ...                -- பிரவீணா தங்கராஜ் .

விடைகள் இல்லா வினாக்கள்

Image
சின்ன சின்ன குடில்கள் எங்கே ? ஸ்வரமாய் இசைக்கும் கீச்சுக்குரல் எங்கே ? நெல்மணியை அலகில் கொத்தி சிறகையடிக்கும் தூக்கனாங் குருவி எங்கே ? அது சரி நெற்கதிர் தான் எங்கே ? சாணம் கரைத்து தெளித்த வீடு எங்கே ? நீரைக் கலக்காத பசும்பால் எங்கே ? மந்தை மந்தையாய் புற்கள் மேயும் மாட்டு கூட்டம் தான் எங்கே ? அது சரி நீர் தான் எங்கே ? சிலுசிலுவென வீசும் தென்றல் எங்கே ? நெடுஞ்சாலையில் நிழல்தந்த மரங்கள் எங்கே ? மரத்தின் வேரை பிடியாக பிடித்த மண் எங்கே ? மண்ணின் தோழன் மண்புழு எங்கே ? அது சரி நிலம் தான் எங்கே ? விடைகள் இல்லா வினாக்கள் மட்டுமே நீரைப் பறித்தாய்... நிலத்தைப் பறித்தாய்... வாழும் நிலத்தின் வளத்தைப் பறித்தாய்... போராட்டம் அது மட்டும் வாழ்வில் எதற்கு ? நாளை சரித்திரம் சொல்வதென்ன ? தமிழ் எங்கே ? தமிழ் மொழி எங்கே ? தரணியில் திமிர் பிடித்த தமிழன் எங்கே ? கவிகள் மட்டும் பல தந்து சென்றான ? அது சரி மனித நேயம் எங்கே ? தமிழ் நாடு எங்கே ? என்று கேட்டு புலம்பவா ? விடைகள் இல்லா வினாக்கள் மட்டுமே .                        -- பிரவீணா தங்கராஜ் .

இரசாயனம்

Image
ரசாயனம் – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

நான் மழலையாகி மகிழ்கிறேன்

Image
நான் மழலையாகி  மாறிதான் போகின்றேன் உப்பு மூட்டையாய்  மழலை யாசைகள் பனிக்கூழ் கண்டதுமே  துள்ளிடு மிதயம் பாகாய் உருகி வழிந்தே  ருசித்திடுவேன் மழைச்சாரல் வந்ததுமே  பரவசமாய் களித்திடுவேன் மண்வாசம் நுகர்ந்திட்டே  நனைத்திடுமே யாக்கையுமனமும் தாளில் கப்பல் செய்தே  பயணித்திடும் மழலைனான் எலிப்பூனை நகைச்சுவையை  இந்நாளும் ரசித்திடும் குழவினான் மகவுக்கு முழுமிட்டாய்  தின்றால் பூச்சுவருமென்று பாதிமிட்டாய் பங்குச்செய்து  கொள்ளும் கள்ளபிள்ளைனான் தவறு செய்து  விழிபிதுங்கி நிற்பதாகட்டும் திக்கி திணறி மெய்பேசி  ஒப்புக் கொள்வதாகட்டும்  பிடிவாதம் செய்து போலி சினத்தால்  முகத்தை திருப்பிக்கொள்வதாகட்டும் எந்தன் மழலைக் குணம்  அப்படியே தான் என்னுளுள்ளது உயிர்ப்புடன் வைத்தே  நான் மழலையாகி மகிழ்கிறேன்.         -- பிரவீணா தங்கராஜ் .

🐜எறும்புகள் பேசினால்...🐜

நில் நில் மனிதா ..! சற்றே கூர்ந்துப் பார் பாதசாரியில் பணிந்தே செல்கின்றேன் பருக்கையை உதாசீனமாக தவற விட்டாய் சஞ்சீவி மலைப் போல் சுமந்துக் கொண்டு நடக்கின்றேன் எனக்கு அவை தான் தேவாமிர்தம் சேமிக்கின்றேன் உணவினை சுறுசுறுப்பாய் கடக்கின்றேன் நிமிடங்களை நேர்வரிசையில் நடக்கின்றோம் ஒருவித ஒழுங்கோடு இதெல்லாம் உன்னிடமில்லாதது தான் எறும்பாய் எனக்கு வித்திட்ட வாழ்வில் உன் பாதம் பட்டாலே மரணமென்றாலும் நான் கலங்குவதில்லை நில் நில் மனிதா ...! சற்றே கூர்ந்துச் செல் எனக்கும் ஒரு காதலியிருப்பாள் எனக்கும் குடும்பம் குழந்தையிருக்கும் உந்தன் அலட்சியம் எந்தன் வாழ்வை பலிகொள்வதா ..?! நில் நில் மனிதா ..! சற்றே கூர்ந்துப் பார்த்துச் செல் . எறும்புகளான நாங்களும் உங்கள் உலகில் தான் வாழ்கின்றோம் .                  -- பிரவீணா தங்கராஜ் . 

⚡ மணல் கோட்டை⚡

Image
வந்தவ ரெல்லாம் நல்லது செய்வாரென விழித்துக்கொண்டே நாட்டிற்காக கனவுக்கண்டேன் வருவோர் போவாரெல்லாம் பதவியேற்றனர் வளத்தை இழந்தே போகின்றன எந்நாடு வல்லரசு நாடென வலித்து சொல்லிட வேண்டவில்லை வளத்தை மாத்திரம் எஞ்சியிருக்க ஆசைக் கொண்டு கோட்டை கட்டினேன் மணற்கோட்டையாய் சிதைத்திடவே செய்தீரே...!                        -- பிரவீணா தங்கராஜ் .

அக்கோடைமழை ...

யாவரும் எதிர்பார்த்த அக்கோடைமழை யதார்த்தமாக பொழிந்துக் கொண்டுயிருக்கின்றன துளியாய் துளித்துளியாய் ... முதலில் கடுகளவு சிந்திய அத்துளி எஞ்சிய மரத்தின் இலையிலிருந்த வாகன தூசுகளையும் மாசுகளையும் சற்று பெருந்தூரலால் கழுவி சுத்தம் செய்தன பின்னர் கருப்பு தார்சாலை முழுதும் அச்சரால் பரவியே போயின மழையின் பெருந்தூரலால் ஆங்காங்கே மாடியில் எடுக்கப்படாத துணிகள் முழுதும் நனைந்தன நீருக்கு தவித்த மக்கள் அக்கோடை மழையை கண்டு சிலர் முகம் சுளிக்க கப்பல் விட காகிதம் தேடின சில குழந்தைகளும் குழந்தை மனமும் கவிதை பாடின சில கவிஞன் உள்ளம் காக்கை கூட மரத்தில் அமர்ந்தவாறு தொப்பலாய் நனைந்து தன் கண்களை உருட்டி உருட்டி மழையை விழி விரிய கண்டுயிருந்தன அந்த தெருவோரமிருந்த குடிசையில் படுத்துறங்க இடமின்றி எங்கே எங்கே மழைநீர் ஒழுகுமோ அங்கங்கே தட்டு முட்டு பாத்திரங்கள் தேடியபடி வைத்தே  அம்மழையை அப்பொழுதும் வேண்டி ரசித்தபடி இன்னும் இருக்கின்றன டிஜிட்டல் இந்தியா .                                           -- பிரவீணா தங்கராஜ் .  

நிமிர்ந்து பார்த்திடு மகனே!

Image
  உன் தாயின் வயிற்றில் அமர்த்தலாக அமர்ந்தப் போதே நான் நெஞ்சில் யுன்னை சுமக்கத் தயாரானேன் செவிலியுன்னை துணிச் சுற்றித் தர பெற்றுக் கொண்டேன் மகனே குழந்தையான உன்னைமட்டுமல்ல எந்தன் யுலகத்தையும் எச்சியொழுக புரியாமொழியில் நீ பேசிட நானோ ஜென்களின் தலைவன் பேச்சிக்கு கட்டுப்பட்டவன் போல கிடந்தேன் தளிர் நடையில் மொட்டு கையில் என் சிகையினை பிடித்திழுத்து நீ செய்யும் குறும்புகளில் நான் கோமாளியாய் நனைந்தேன் உன் ஏக்கப்பார்வை போகும் திசையெல்லாம் என் மனக்குறிப்பில் எழுதி உனக்கே அறியாது ஆச்சரியமூட்டும் பரிசாகத் தர வியப்பில் விழிகள் விரிய குதூகலிப்பாய் தேரில் சிங்கத்தின் மேல் பவனி வரும் அம்மனை காண தோளில் உனையேற்றியே ரதமாவேன் அக்கணம் குழம்புவது என்முறை தேரில் வருவது இறையா ?! அல்லது தோளில் அமர்ந்திருக்கும் நீ இறையா ?! காய்ச்சலென கட்டிலில் இமை மூடி உறங்குவது நீ சோம்பியிருப்பது நான் . பள்ளிச் சென்று பாடம்படித்து கேள்விகள் பல எழுப்புவாய்...! மெத்த படித்த நானோ எதற்கும் பதில் தெரியாதது போல பாவலா செய்திட முல்லை சிரிப்பில் அப்பாவிற்கு ஒன்றும் தெரியாதென ஜம்பமாய் விடை சொல்வாய் எ