Posts

Showing posts from July, 2021

ஸ்டாபெர்ரி பெண்ணே-26(முடிவு)

  🍓 26               உதய் தான் போனில் கேட்டு கொண்டு இருந்தான். வெற்றி ஆராதனா தாய்மை செய்தியை உறுதி செய்ததையும் சொன்னான். உதய் மனம் நிஜமாகவே மகிழ்ச்சி உற்றது.            உண்மையான அன்புக்கு தீங்கு செய்ய தோணாது.. நல்லதை தான் அவர்களுக்கு வழங்க தோன்றும்..அதே தான் உதய் செய்தான்.             என்ன தான் அவள் தாய்மை அடைய மாட்டாள் என்று அறிந்து விலகியது தனது காதலில் சறுக்கல் வந்தன. அதனால் தான் வெற்றி உண்மையான அன்பு காதல் எல்லாம் ஆராதனாவுக்கு எத்தகைய நிலை என்றாலும் கூடவே நின்றான். இதோ இப்பவும்...              வாழ்வில் சிலர் இவருக்காக இவர்கள் என்று கடவுள் எழுதி இருப்பதும் ஒரு வித காரணத்திற்காக தான். அதே போல வாழ்வில் எந்த காரணமும் நமக்கு கஷ்டம் கொடுத்தாலும் இறுதியில் நன்மைக்கு தான் முடியும் என்றே எண்ணினான்.        கடவுள் எழுதும் கதைக்கும் நல்ல முடிவை தான் எதிர்பார்ப்பார் என்றே எண்ணி அவனின் மகி கையினை பற்றி கொண்டான்.                                                      FEW YEARS LATER        ''செல்வா.... செல்வா... இன்னும் என்ன செய்யற... கிளம்ப வேண்டாமா...? நல்ல நேரத்தில் போகண

ஸ்டாபெர்ரி பெண்ணே- 25

 🍓25    பெயர் ஜெகதீஷ் வயது 29..பார்கவி வயது 44.. என்றே தொடர்ந்து பெயர் போய் கொண்டு இருந்தன.        ஆராதனா தான் ''யார் உங்களுக்கு தெரிந்தவர்களா?'' என்றே கேட்க       ''ஹ்ம்ம் ஆமா..'' என்றே வெற்றி போன் செய்து சுந்தரை அழைக்க சுந்தர் ஜெகதீஷ் மும்பை சென்ற நிலவரம் மட்டும் சொன்னான். பின்னர் வெற்றி விமான விபத்து பற்றி சொல்ல       ''சார் உங்க பிசினெஸ் பண்ண கேட்டீங்க இப்போ என்ன செய்ய சார்''        ''அது விடு வேற ஏற்பாடு பண்ணிக்கலாம்'' என்றே வைத்தான்.        ''சார் வெற்றி சார்... அவர் தானா...?''        ''ஹ்ம்ம்...'' என்றே ஆராதனா பார்த்து இப்போ எதையும் பேசதே என்றே சொல்ல அமைதியாக மாறினான். பின்னர் கிளம்பும் நேரம்          உதய் தான் மிகவும் பயந்து போனான். என்ன இது மனிதன் கொல்ல துடித்தவன் இறந்து விட்டான். அப்பவும் கூலாக இருக்கான் என்றே இருந்தான்.           ''உதய் நீ என்ன நினைக்கிறாய் என்றே தெரியுது.. எனக்கு கடவுள் துணை இருக்கார்.. அதான் அவனை அவரே பார்த்துக்கிட்டார்'' என்றே சொல

ஸ்டாபெர்ரி பெண்ணே-24

   🍓24               உதய் யோசிப்பதை அறிந்து வெற்றி நிதானமாக      ''இங்க பாரு உதய்... என் ஜெஸிலை இப்படி செய்தது யாருனு  சொல்லு... நீ சொல்லாவிட்டாலும் என் வரவேற்பு வீடியோ பார்த்து நானே தெரிந்துப்பபேன்... நீயே சொல்லிட்டால் எனக்கு வேலை மிச்சம்''       ''இல்லை எனக்கு பயமா இருக்கு நீங்க அவங்க கொன்றதே என்னால ஜீரணிக்க முடியலை... இதுல அவன் பேரை சொல்லி... அவனையும் நீங்க எதாவது பண்ண போக... கடைசியா பாதிக்கப்படுவது என்னவோ ஆராதனா தான்''      ''என் பணபலத்தில் இதை எல்லாம் நானே சரி பண்ணி விடுவேன்.. எனக்கு இது பெரிய பிரச்சனையே இல்லை... யாருனு சொல்லு... அதுபோதும்''  பதிலுக்காய் குறியாக இருந்தான்.        ''மன்னிச்சுடுங்க எனக்கு அவன் பெயர் எல்லாம் தெரியாது...'' என்றே உதய் சொல்ல      ''உதய்... அவனை காப்பாற்ற நினைக்கறியா?'' என்றே வெற்றி குரல் கேட்டு நடுங்கி போனான்.      ''இல்லை வெற்றி.. நிஜமாவே எனக்கு பேர் எல்லாம் தெரியாது... நீங்க வீடியோ காட்டுங்க நான் அதுல யாருனு சொல்லிடறேன்....''             உடனே

ஸ்டாபெர்ரி பெண்ணே-23

  🍓 23                    அதிகாலை எழுந்தது என்னவோ வெற்றி தான். எப்பவும் போல எழுந்தவன் ஜாக்கிங் செய்ய சென்றிட அதன் பின் எழுந்த ஆராதனா சுற்றி அறையை பார்த்தவள் நேற்றைய நிகழ்வில் முகம் சிவக்க இந்த வெற்றி எங்க...? என்றே குளியலறைக்கு சென்றாள்.           நான் எப்படி செல்வாவோட இணங்கி போனேன். எனக்கு பயமோ கூச்சமோ எல்லாம் எங்க போனது. நிஜமாவே செல்வா எனக்கு என்று படைக்க பெற்றவர்... என்றே நெற்றியில் குங்குமம் இட கதவை திறந்து செல்வா வந்தான்.      ''ஹாய் ஜெஸில்.. ஆர் யூ ஓகே..?''      ''எல்லாம் ஓகே தான் ஏன் என்னை எழுப்பலை...''       ''நீயே நேற்று வரவேற்பு முடிஞ்சு சோர்வா இருந்து இருப்ப அதுக்கும் மேல நான் வேற....'' என்றே குறும்போடு சொல்லி ''அதான் எழுப்பலை...'' என்றான்.       ''பசிக்குது செல்வா... லட்சுமி அம்மா வேற இல்லை...'' என்றே சொல்லி கீழே இறங்கினாள்.              செல்வன் முகம் கை கால் அலம்பி கீழே வந்து பார்க்க உப்புமா செய்கின்றேன் என்று ஆராதனா பாத்திரத்தோடு போராடி கொண்டு இருந்தாள்.       ''ஹாஹாஹா

ஸ்டாபெர்ரி பெண்ணே-22

 🍓 22                  ஆராதனாவோ தனது ஆடையின் பாரத்தை தாங்கி கொண்டு உணவினை உன்ன வெற்றி கண் இமைக்காமல் அவளையே பார்த்து இருந்தான்.       ''செல்வா... இப்படி அடிக்கடி எதுக்கு என்னை விழுங்கற மாதிரி பார்க்கற? சாப்பிடு'' என்றாள் ஆராதனா.       ''ஜெஸில் எனக்கு உன்னை பார்த்துகிட்டே இருந்தா பசியே தெரிலை''       ''ஐயோ சினிமா வசனமா? சாப்பிடுங்க... அப்பறம் பேசுவோம்''        ''ஏன் ஜெஸில் புட் புடிச்சு இருக்கா?''        ''செம டேஸ்ட்... எல்லாமே எனக்கு புடிச்ச ஐட்டம்... செல்வா... இது உங்க ஏற்படா?''         ''ஹ்ம்ம்...''        ''ரொம்ப அற்புதம்.. எனக்கு எல்லாமே நிறைவா இருந்துச்சு... உங்க கையை பற்றி இருக்கும் பொழுது எனக்கு ஒரு கர்வம் கூட இருந்துச்சு... எனக்கு பிறந்த ராஜகுமரன் அப்படி ஒரு கர்வம் செல்வா...''       ''எனக்கும் ஜெஸில்...'' என்றே மையலில் பார்க்க      ''தம்பி நானும் கிளம்பறேன்...'' என்றே லட்சுமி அம்மா நின்று இருந்தார்கள்.      ''சரிங்

ஸ்டாபெர்ரி பெண்ணே- 21

  🍓 21                        இன்று வரவேற்பு என்றதும் எங்கிருந்து தான் பயம் வந்து ஒட்டிக்கொண்டது.      ''செல்வா எனக்கு யாரையும் தெரியாது..... நான் தனியா என்ன செய்வேன்''       ''நீ எப்படி தனியா இருப்ப உன் செல்வா உன்கூடவே இருப்பேன்''       ''இல்லை உங்கள தெரிந்தவர்கள் வந்ததும் பேசுவ.. வாழ்த்து சொல்லுவாங்க... நீ அவங்களை கவனிப்ப...'' என்றே  பேசிக்கொண்டு போனவள் இதழில் கையினை வைத்து       ''ஜெஸில் இந்த உலகத்திலே எனக்கு நீ தான் முக்கியம் ஜெஸில் உன்னை தனியா விட்டுட்டு எப்பவும் வேடிக்கை பார்க்க மாட்டேன்...''        ''நிஜமா...'' என்றே கேட்க       ''ஹ்ம்ம் என்றே நெற்றியில் இதழ் ஒற்றினான்.                  ஆராதனா என்ன நினைத்தாளோ அவனின் நெஞ்சில் சாய்ந்து இமையை முடி நின்றாள்.         நாழிகை நகர  ''ஹுக்கும்..'' என்றே கரகர குரலில் சுந்தர் செருமிக் கொண்டே வர ஆராதனா விலகி நின்றாள்.      ''சார் எல்லாம் ரெடி நீங்க சிஸ்டர் வருவது தான் பாக்கி.... என்றே சொல்ல ஆராதனா கையை பற்றியே நடந்தா

ஸ்டாபெர்ரி பெண்ணே-20

 🍓20                            உதய் அம்மா ரத்தினம் அதிகாலையில் உதையின் அறை கதவை உடைக்கும் அளவுக்கு தட்டினார்கள்.      ''டேய்... டேய்... எவ்ளோ நேரம் கூப்பிடறது.... உதய்....'' என்றே தட்ட      ''இரும்மா...'' என்றான். இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்லை.... என்றே முனங்கி கொண்டு        ''என்னம்மா?'' என்றான் உதய்        ''இங்க பாரு டா... ஆரு ஆரு என்று உருகினியே.... பார்த்தியா... எவனோ பணக்காரன் கிடைச்சதும் தான் உன்னை உதறி தள்ளி இருக்கா...?'' என்றே பேப்பரை காட்ட உதையோ வேகமாக வாங்கி பார்த்தான்.          நேற்று திருமணம் என்றும் அதனை இன்று அறிவிப்பதாக போடபட்டு இருந்தன. ஆராதனா தங்கமும் வைரமும் சேர்ந்து இழைத்தது போல போட்டோவில் இருக்க... கூட வெற்றி கம்பீரமாக நிற்பதும்... இன்னொரு சிறிய புகைப்படத்தில் ஆராதனா வெற்றி இருவரும் ஒருவரை ஒருவர் கண்கள் கலைக்க பார்ப்பதும் இருந்தன.              உதைக்கு அதற்கு மேல் அதனை பார்க்க முடியவில்லை. ஹாலில் டேபிளில் வைத்தவன் அப்படியே அமர்ந்தான்.      ''அவள் தானே டா இது.... சொல்லு...'&

ஸ்டாபெர்ரி பெண்ணே- 19

   🍓19               தனது தாயின் பட்டு புடவை நகை என்று எடுத்து வந்து கொடுத்து போட்டோ ஒன்றை எடுக்க அணிந்து வர சொன்னான்.       ''செல்வா இது எல்லாம் கிராண்ட்டா இருக்கு சிம்பிள்ளா இல்லையா?'' என்றாள்.         ''ஜெஸில் நீ நான் நாளைக்கு மார்னிங் பேப்பரில் ஜோடியா போட்டோ கொடுத்து நமக்கு திருமணம் என்றே அறிவிக்க போறோம் அதுல இது வேணும் ஜெஸில்... கல்யாணம் தான் நாம யாருக்கும் தெரியாம சட்டுனு முடிவு எடுத்தோம் ஆனா அதனை தெரிவிக்க இப்படி செய்தால் தான் நல்லா இருக்கும் டா'' என்றே சொல்ல சரி என்றே அறைக்கு சென்று அணிவித்து வந்தாள். கூடவே லட்சுமி அம்மா துணைக்கு சென்றார்கள்.                    புடவை அணிந்து நகைகளை பூட்டியதும் அழகு தேராக இருந்தாள் ஆராதனா...       ''இந்த அம்பாள் நேரில் வந்த மாதிரி இருக்கு அவளோ தெய்விக முகம் உனக்கு'' என்றே லட்சுமி அம்மா கூற       ''போங்க லட்சுமிம்மா எனக்கு இது மாதிரி போட்டு பழக்கமா இல்லை... கையில் வங்கி ஒட்டியாணம்.... அது இது என்று வெயிட்டா இருக்கு...'' என்றே சொல்லியவள் கதவை செல்வா தட்ட        '&#

ஸ்டாபெர்ரி பெண்ணே-18

  🍓18               எழுந்ததில் இருந்து ஆராதனா ஒரே யோசனையில் இருந்தாள்.     ஒன்றை வருடம் தானாக தேடி விரும்பியவனே தனக்கு தாய்மை இல்லை என்றதும் விட்டு சென்று விட்டான். ஆறு மாதமாக காதலிக்கும் வெற்றி செல்வன் மட்டும் எப்படி ஏற்றுக் கொள்வான். முதலில் அவன் சொத்தை ஆள்வதற்கு ஒரு வாரிசை தான் எதிர்பார்ப்பான். அதனால் தான் இனியும் இங்கு இருப்பது தவறு... இன்றே சொல்லிவிட்டு கிளம்ப வேண்டும்.           எப்படி கிளம்பணும் வெற்றியிடம் எப்படி சொல்வது? சொன்னால் சரி போ என்றே சொல்லி விடுவாரோ? எனக்கு என்று ஒரு உறவும் அன்பாக தாங்க இவ்வுலகத்தில் இல்லையா? என்றே என்ன கண்கள் கரித்தது.             நேற்று போலவே கதவு தட்டும் ஓசை கேட்டு கண்கள் துடைத்தாள்.           கையில் தட்டில் மூன்று இட்லி கொஞ்சம் போல சட்டினி சாம்பர் என்றே வந்து நின்றான் வெற்றி செல்வன்.        ''நீ சாப்பிட வருவ என்றே நினைச்சேன் நீ அழுதுகிட்டு இருப்ப என்று நான் சாப்பிட்டு உனக்கு எடுத்துவிட்டு வந்தேன்'' என்றே நீட்டினான்.              வேண்டாம் என்றே மறுக்க ''பச் ஒழுங்கா சாப்பிடு'' என்றே அவனே ஊட்டி விட்டான்.

ஸ்டாபெர்ரி பெண்ணே- 17

   🍓17        ''இங்க பாரு ஆராதனா அன்னிக்கு இதே போல நாம பேசிட்டு கிளம்பினோம் அப்போ என்னை ஒருத்தன் பின்னாடி இருந்து தள்ளி விட்டான். நான் விழுந்து திரும்பும் பொழுது அவன் உன்னை காரில் தள்ளி விட்டான் அதுல உனக்கு தலையில் அடிபட்டுச்சு.. அப்புறம் அவன் உன் முகத்தில் கர்சீப் வைத்து அழுத்திட நீ மயங்கின உன்னை காரில் தள்ளி கூட்டிட்டு போனான். அவ்ளோ தான் அப்பறம் நான் அவரும் சேர்ந்து உன்னை தேடிட்டு காரில் பின் தொடர்ந்தோம்.           ஒரு அறையில்.... உன்னை அடைச்சாங்க அவர் காப்பாற்ற போனப்ப அவரை அடிச்சாங்க அடுத்து நான் வந்தேன் இருவரையும் அடிச்சு முடிச்சு உன்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனோம்.          அங்க உன்னை பரிசோதிச்சு பார்த்தப்ப.... '' என்றே தயங்கினான். வெற்றிக்கு கண்கள் எங்கோ வெறித்தது. மீண்டும் அந்த இறந்த கயவர்கள்  கொள்ளும் வெறியில் இருந்தான்.       ''அங்க இருந்த டாக்டர் உன்னை பரிசோதித்து... சொன்னாங்க... உன்னை கடத்த முயன்றவர்கள் தள்ளியதில் உனக்கு வயிற்றில் அடிபட்டது... அதுல நீ தாய்மை அடையும் பாக்கியம் பெற முடியாது என்றே சொன்னாங்க...'' என்றான்.  ஆராதனா கண