இடுகைகள்

ஆகஸ்ட், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பஞ்ச தந்திரம்-13

பஞ்ச தந்திரம்-13     சூர்யா வந்தப் பிறகு அன்றைய இரவு ரொம்பவே ஹாப்பியா இருந்தோம்.         எங்களுக்கான வாழ்க்கை ஒளிமையமா தெரிந்தது. மிலிட்டரிக்கு நேரம் முடியற வரை அவரும் சும்மா தானே வீட்ல இருந்தார். இனிக்க இனிக்க தினமும் தேன் நிலவு தான்.       ஒரு பெண் எந்தளவு சந்தோஷமா வாழணுமோ அந்தளவு ரொம்ப சந்தோஷமா மனநிறைவா வாழ்ந்தேன்.     சூர்யா கூட அடிக்கடி கேட்பார். 'ஏன் ரஞ்சு.. அப்பா அம்மா மீறி கல்யாணம் பண்ணிட்டோம். ஏதாவது பீல் பண்ணறியா. அப்படின்னா சொல்லு... காஸ்மீர் போகறதுக்கு முன்ன காம்பர்மைன்ஸ் பண்ணிட்டு போறேன்'னு சொன்னார்.         நீங்க எதுவும் சமாதானம் பண்ண வேண்டாம். அவங்களா ஒரு நாள் வருவாங்க சொன்னேன். உறவுகள் தானா நம்மளை முழுமையா மாத்தும்னு நற்பினேன்.     ஆனா எங்க வீட்லயும் அவர் வீட்லயும் சுத்தமா சேர்த்துக்கலை. நானும் உடனே கன்சீவ் ஆகிட்டேன். ஒரு குழந்தை பிறந்தா எல்லா உறவும் வரும்னு சொல்வாங்க. ஒருவேளை வாயும் வயிறுமா இருந்தா வீட்டுக்கு முன்ன போனா சேர்த்துப்பாங்கனு கூட போனேன். வாசல் கதவை அடைச்சி நாயை விட்டு துரத்த பார்த்தாங்க. நான் வளர்த்த நாய் என்னை துரத்தலை நானா வந்துட்டேன்.  சூர்யாவும்

அழைப்பாயா ...என் சிசுவே ...!

கை பிடித்த கணவனை விட -உன்னை நான் காதலிக்கிறேன்... நீ அந்த கருமை நிற கண்ணன் நிறமா? காதலை பறை சாற்றும் சிவப்பு நிறமா? தெரியவில்லை -இருந்தும் உன்னை நான் காதலிக்கிறேன்... நீ நல்லவனா அதற்கு எதிர் மறையா ஆனாலும் விரும்புகிறேன்... நீ ஆணா ...?  பெண்ணா... ? அது கூட தெரியா மடந்தை நான். கேளீர் கூட கேளிக்கை செய்கின்றனர் கட்டிய கணவனை விட, நீ இப்பொழுது விரும்பும் உயிர் பெரிதா என்று?! உண்மை தான்... நீ என்னுள் ஜனித்த நாள் முதல் உயிராய் உருகுகின்றேன் . நீ மொழியும் ஒற்றை சொல்லிற்காக அழைப்பாயா 'அம்மா 'என்று அந்த அழைப்பிற்காக உருவம் தெரியா உன்னை விரும்புகிறேன்... என் சிசுவே ...!                        --  பிரவீணா தங்கராஜ் .

உன் பார்வையால்...

கவிதைக்கு பஞ்சமடி பெண்னே ! உன் பார்வையை வீசிவிட்டு செல் ... ஆயிரம் கவிதைகளை படைத்திட ...                                                      -- பிரவீணா தங்கராஜ் .