Posts

Showing posts from August, 2017

அழைப்பாயா ...என் சிசுவே ...!

கை பிடித்த கணவனை விட -உன்னை நான் காதலிக்கிறேன்... நீ அந்த கருமை நிற கண்ணன் நிறமா? காதலை பறை சாற்றும் சிவப்பு நிறமா? தெரியவில்லை -இருந்தும் உன்னை நான் காதலிக்கிறேன்... நீ நல்லவனா அதற்கு எதிர் மறையா ஆனாலும் விரும்புகிறேன்... நீ ஆணா ...?  பெண்ணா... ? அது கூட தெரியா மடந்தை நான். கேளீர் கூட கேளிக்கை செய்கின்றனர் கட்டிய கணவனை விட, நீ இப்பொழுது விரும்பும் உயிர் பெரிதா என்று?! உண்மை தான்... நீ என்னுள் ஜனித்த நாள் முதல் உயிராய் உருகுகின்றேன் . நீ மொழியும் ஒற்றை சொல்லிற்காக அழைப்பாயா 'அம்மா 'என்று அந்த அழைப்பிற்காக உருவம் தெரியா உன்னை விரும்புகிறேன்... என் சிசுவே ...!                        --  பிரவீணா தங்கராஜ் .

உன் பார்வையால்...

கவிதைக்கு பஞ்சமடி பெண்னே ! உன் பார்வையை வீசிவிட்டு செல் ... ஆயிரம் கவிதைகளை படைத்திட ...                                                      -- பிரவீணா தங்கராஜ் .