Posts

Showing posts from February, 2021

சிரமமில்லாமல் சில கொலைகள் -1

Image
                     *சிரமமில்லாமல் சில கொலைகள்* ஆல்பா தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலை. தூக்கம் போலிருக்கும் ஆனால் தூக்கமல்ல. விழித்திருப்பது போலிருக்கும், ஆனால் விழிப்பும் அல்ல. இதை எளிமையாக சொல்ல வேண்டுமானால், நாம் அனைவரும் உறங்கும் முன் வரும் கிறக்கமான நிலை தான் இது. இது இயற்கையாக ஏற்படுவது. இதை ஒருவித தியானத்தின் மூலம் நாமாக ஏற்படுத்திக் கொள்ளும்போது, நமது மனம் லேசாகிறன. இதன் மூலம் ஏழு சைக்கிள் முதல் பதினான்கு சைக்கிள் வேகத்தில் மூளையின் வேகத்தை குறைத்து இயங்கச் செய்கிறோம். இதனால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக இந்த நிலையில் இருக்கும் போது தான் நம் ஆழ்மனம் திறக்கும். *ஆழ்மனத்தின் சக்தி மூலம், எண்ணற்ற காரியங்களை சாதிக்கலாம்*                                                                            🩸-1          சர்வேஷ் தனது நண்பர்களோடு மூன்று தினமாக கோவா சுற்றுலா சென்று சோர்வோடு வீட்டுக்கு காலை ஏழு மணிக்கு வந்து சேர்ந்தான்.      அவன் தங்கும் அப்பார்ட்மெண்டில் தங்கும் இடத்தை பகிரும் சாந்தனு அலுவலகம் கிளம்பிக் கொண்டு இருந்தான். &qu

தீவிகை அவள் 🪔 வரையனல் அவன் 🔥 - 14

Image
    தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம்.     

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்... 10

Image
     💟(௧௦)10                          நீரில் கைகளை துழாவிய ருத்திரா அருகே யாரோ வருவதை போல உணர திரும்ப தான் வருவதை அறிந்து கொண்டாளே கள்ளி இவள் என்றவன் அப்படியே நழுவ பார்க்க ஏனோ அவள் கைகளை நீரோடையில் இவன் கைகளும் தீண்ட ருத்திரா அவன் தீண்டல் என்றதும் அமைதியாக இருந்தாள்.      "எப்பொழுதும் விழிக்கு அகப்படாமல் தான் காட்சி அளிப்பீரோ தாங்களும் தங்கள் உடன்பிறப்பாளனும்" என்று ருத்திரா அவனை தான் மட்டும் காணாது தவித்து கேட்க      "மனம் கவர்ந்தவள் விழி தரிசனம் கேட்ட பின் மறுக்கும் கல் இதயமா உன்னவன் தேவி... இதோ இக்கணம் பார்வை வட்டத்திற்கு வந்தேன்" என்று உருவம் தெரிய காட்சி அளிக்க.       மித்திரன் இங்கு வர சாதாரண வீரனை போலவே நிற்க அவனை கண்டவள் விழிகள் அருவியாக போனது.      "ஏதேது இந்த வதன முகத்தில் சோகம் ஏனோ?"   "சோகம் ஏற்படுத்தியவர் அறியாததா?"    "யாம் எமது காதலியை தேடி காதலனாக வந்தோம். நம்மை பற்றி கதைக்க... தேவியருக்கு அதில் உடன்பாடு இல்லையோ?" என்றவனின் கைகள் இன்னமும் அவள் கரங்களில் பிடி பற்றியிருக்க ருத்திரா அதனை ஏற்றே இருந

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...9

Image
  💟 (௯) 9                         எப்படியும் தாம் சொல்லாமல் போனாலும் துர்வனுக்கு சமுத்ரா, ருத்ரா  அறிந்திருந்த காரணம் கொண்டதால் அவன் சொன்னான்.       ''நாவலூர் அந்நாட்டின் இளைய மகள் ருத்திரா....''      ''பார்த்தாயா அன்னையே.. ஒரு சிறுவுரின் சொந்தமான ராஜா மகளை தான் உமது இளைய புத்திரன் ஆசை கொண்டு இருக்கின்றான்'' என்றே துர்வன் சொல்லி முடிக்க     ''ஆசை என்றே சொன்னாயோ உம்மை தாய் மீது கொடுத்த சத்தியம் மீறி அழிக்க செய்திடுவேன். அவள் மீது எமக்கு இருப்பது உண்மையான அன்பே ஒழிய பார்த்ததும் தோன்றும் ஆசை அல்ல.. என்ன சொன்னாய்... அவள் சாதாரண சிறுவுரின் இளைய மகளா? அப்படியெனில் அவளின் தமைக்கை சமுத்ராவை ஆசை கொண்டாயே நீ... அதற்கு பெயர் என்ன? ஓஹ் அவளை பலியிட தான் மையல் புரிந்தாய் அப்படி தானே?'' என்றே அனலாய் பேசிய மித்திரனின் பேச்சில் துர்வன் ஏகதாளமாக நின்றான்.     ''அன்னையே எமது சக்தி தேடி யான் தொடுக்கும் முயற்சி எல்லாம் இவன் தகர்க்கவே(உடைக்கவே) செய்கின்றான். இவனுக்கு நான் அதீத சக்தி பெற விருப்பமே இல்லை..'' என்றே மூத்த மகனின் போல

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...8

Image
    💟(௮) 8                                     வீதியில் எல்லாம் ருத்திரா சமுத்ராவை அழைத்து வரும் செய்தி அறிந்து முரசுகள் ஒலித்தன. மேகவித்தகன் மஞ்சரி இருவரும் ஒரே புரவில் வர மக்கள் சிலர் அதனை விழி விரிய கண்டனர்.          வேந்தர்கள், மந்திரியர்கள் என்றே சால சிறந்தவர்கள் இமைக்க மறந்து பார்த்து இருக்க, ருத்திரா மிடுக்குடன் இறங்கி வந்து நின்றாள்.     ''தலை வணங்குகின்றேன்... வேந்தே... இன்னாட்டின் இளவரசி உயிர் அரணாக பாதுகாத்து கொண்டு வந்தாயிற்று... இனி இவளை தேடி அம்மூடன் வந்தால் திரும்ப அவன் யாக்கையில் ஆன்மா தங்காது'' என்றே செப்பிட மஞ்சரிக்கோ ருத்திராவுக்கு யார் இப்படி செய்தது என்றே அறிந்தும் மறைக்கின்றாள் என்றே விசித்திரமாக காண ருத்திரா மஞ்சரியை காணாமல்      ''வேந்தே.. மற்றும் ஒரு செய்தி.. அங்கே ஒரு இக்காட்டில் கயவன் மஞ்சரி உயிர் பலியிட போகையில் அவளுக்கு விவாகம் நடந்தால் மட்டுமே உயிர் பிழைப்பாள் என்றே இருக்க நமது இளவரசன் மேகவித்தகன் எமது தோழி மஞ்சரியை திங்கள் சாட்சியாக வைத்து மாலை சூடி மங்கையினுக்கு மணவாளானாக மாறி விட்டான்'' என்றே ர

தீவிகை அவள் வரையனல் அவன்-13

Image
தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥-13   தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம்.    

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...7

Image
 💟(௭) 7                                 துர்வசந்திரன் குகையின் முன் வர அவனுக்கு அங்கே பெண்ணின் வாசம் வீச குகையின் உள்ளே வந்தவன் சமுத்ரா அருகே ஒருவள் அமர்ந்து எழுப்ப செய்ய கண்டு அவளின் சிகையினை பிடித்து       ''யார் நீ உம் நாமம் என்ன?'' என்று கேட்க மஞ்சரி அவனின் சிகை பிடிக்க அதில் வலியினை உணர்ந்து ''ருத்திரா...'' என்றே தமது தோழியை அழைக்க துர்வனுக்கு மஞ்சரியே ருத்திரா என்று எண்ணி விட அடுத்து மேக வித்தகன் வந்து நின்றதும் அவனின் வளி வேலியினை கூட அகற்றியது இவளே என்றே அதீத சினத்தில் இருந்தான்.         என்ன அவனின் சிகை பற்றுதலில் மஞ்சரி முகம் சுழிக்க பெண்ணவள் இதற்கே இப்படி என்றால் தன் முன் எதிர்க்க நின்றாள் தோற்பது நிச்சயம் என்றே மமதையில் இருந்தான்.       ''துர்வசந்திரா... எமது தமைக்கையை விடுவி..'' என்றே மேகவித்தகன் சமுத்ராவை சொல்ல       ''உந்தன் ஒரு தமைக்கை தான் இவளை காப்பாற்ற வந்தவள் என்றே வெற்றி மிதப்பில் சொல்லுவாய்... எங்கே இவளை வைத்து அவளை எழுப்பு... என்றே சொன்னவன் அந்த இடமே அதிரும் வகையில் சிரித்தவன்... உம்மால் முட

தீவிகை அவள் வரையனல் அவன்-13

Image
  தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம். 

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...6

Image
      💟(௬) 6                           இன்றும் எப்பொழுதும் செய்யும் பணியினை முடித்து மஞ்சரி இறைவனை தொழுதபடி விழியில் நீரை சிதற விட அதனை கண்டு ருத்திரா தோளை தொட       '' தினமும் பயணம் செய்கின்றோம் ருத்திரா இதில் இன்னும் எத்தனை தொலைவை அடைந்து விட்டோம் இன்னும் சமூத்ரா இருக்கும் இடம் அறியவில்லையே.... உமது தமையன் மேக வித்தகனும் காண முடியவில்லை... இனி அவ்விருவரையும் காண இயலாதா? எமது தாய்மை கோலம் கூட என்னவனின் செவிக்கு அறிவிக்க முடியாதா?'' என்றே அங்கே சோகமாக சொல்ல      ''கண்டறிய செய்வோம் மஞ்சரி... கவலை கொள்ள வேண்டாம்... இங்கே அதீத மிருகம் நடமாடுவது போல தோன்றுகின்றது... முதலில் கிளம்புவோம்'' என்றே கையை பற்ற பிடித்து எழுந்து முடிக்க ருத்திரா குளித்து முடித்தும் அவளின் பிறை நெற்றியில் இருந்த ரத்த திலகம் அப்படியே இருக்க கண்டு        ''ஏன் ருத்திரா திலகம் அழியவில்லையே...'' என்றே கேட்க       ''நான் செஞ்சாந்து வைக்கவில்லை இது மித்திரனின் குருதி... அழுத்த துடைக்கவில்லை மஞ்சரி... மித்திரனின் குருதி படிந்த திலகம் அப்படியே இருக்க

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...-5

Image
                                                                 💟(௫) 5                பரிதியின் கதிர் அங்கே இருக்கும் இடமெல்லாம் வெளிச்சம் தர மித்திரன் சோம்பலுடன் எழுந்தான். இன்று ருத்திராவை பிரிய வேண்டும். துர்வசந்திரன் எந்த நங்கையை தேர்ந்து எடுத்து பலியிட போகின்றானோ அதனை தடுத்து அவனை அங்கே முன்னே அமர்த்தி அவனின் எண்ணத்தை கலைய வேண்டும்.... இத்தனையும் முடியுமா? அவனும் நானும் பயின்றது ஒன்றல்லவா... அவன் என்னை மாற்றி விட்டால்? இல்லை பிறப்பு என்பது எமக்கு முன்னால் அவதரித்து இருக்கலாம்.... ஆனால் எம்மை வீழ்த்த ஒருவன் பிறப்பெடுக்க வேண்டுமெனில் அது யாம் பெற போகும் சேய்களாக தான் இருக்க முடியும் என்றவனின் பார்வை ருத்திரா வதனதில் நின்றது.       ''ருத்திரா... எமது பயணம் தொடர வேண்டும் உம்மை...'' என்றே தயங்க      ''எம்மை காக்க எமக்கு தெரியும்... எம்மை தொடர வேண்டிய தேவை உமக்கு வேண்டாம்... மீண்டும் சந்திக்கும் நிலை வரும் நேரம் கரம் பிடிக்கின்றேன்.(நீ கரம் பிடிக்கின்றாயா? இல்லை சிரம் கொய்ய போகின்றாயா அந்த இறைவனுக்கே வெளிச்சம்)           நொடிக்கு ஒரு முறை திரும்பி

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...4

Image
     💟 (௪) 4           ருத்திரா என்றே மையல் சொட்டும் மித்திரன் அழைப்பில் ருத்திரன் அஞ்சி தாடி தடவி பார்த்தபடி       ''மூடனே ... இங்கு மஞ்சரியை தவிர்த்து நங்கை எவருமில்லை..'' என்றே பேச        ''மெய் தானாக மேடை ஏறாது அப்படி தானே பரவாயில்லை... யானே செப்புகின்றேன்.. உன் மொட்டு போன்ற செவியில் ஏற்றி கொள்... உன் ஒட்டுதல் எல்லாம் பலே தான் அதில் எல்லாம் நான் கண்டறிய இயலவில்லை.. ஆனால் சில பல பிழைகள் இருந்தது. முதல் பிழை நீ பெண் புரவியில் வந்தது.. எந்த ஒரு ஆண்மகனும் அவனுக்கு ஏற்ற ஆண் புரவியில் தான் பயணபடுவான். பிழை இரண்டு நீ என்னை தாக்கும் பொழுது பின் பக்கம் வந்தாய்.. வீரன் நல்லவனாக இருப்பின் நெஞ்சில் நேருக்கு நேர் தாக்க வருவான் கெட்டவனாக இருந்தால் தாக்கி விட்டு தான் பேச்சே ஆரம்பிப்பான்.. நீ பெண் அதனால் இது எதுவும் அறியாமல் பின் நின்று தாக்கினாய் சொன்னதும் முன்னே வந்தாய்.. அதிலே உன்னை கவனிக்க செய்தேன். புரவியில் ஏறியதும் இன்னும் கூர்ந்து ஆராய்ந்தேன்.           அதைவிட நீயும் மஞ்சரியும் சேர்ந்து தான் ஆற்றில் காலையில் குளித்து முடித்து இருக்க வேண்டும். ஒரே நேரத

உன் விழியும் என் ளும் சந்தித்தால்...-3

Image
                                                                        💟 (௩) 3                         இரு ஆண்கள் இருக்கும் இக்குகையில் மஞ்சரி எவ்வித தயக்கமின்றியே துயில் கொள்ள முனந்தாள். அங்கே பெரிய பெரிய இலைகள் எல்லாம் பறித்து இருவர் உறங்க ஏற்பாடாக இருந்த இலை மஞ்சத்தில் பார்வை சென்றது மித்திரனுக்கு.        அப்படி என்றால் இருவரும் ஒன்றாக துயில் கொள்ள எண்ணினாரோ?! என்றே எண்ணியவன் பார்வை அங்கே நிலைக்க ருத்திரன் செரும கண்டு விழியை அகற்றினான்.      ''அது யாம் அங்கே துயிலுறங்க செல்கின்றேன்'' என்றே மித்திரன் அடுத்த பக்கம் சென்று கையை சிரத்திற்கு முட்டு கொடுத்து உறங்க செய்ய இமையை மூடினான்.         ருத்திரனுக்கோ நேற்றே எனது உறக்கதினை பறித்து குடிலுக்கு காவல் புரிந்தேன்... இன்றேனும் நிம்மதியாக உறங்க செய்யலாம் என்றே மஞ்சரியோடு பஞ்சணை செய்தால் இவன் ஒருவன் நடுவே நந்தி போல வந்து இருக்கின்றானே... இவனிடம் இருந்து மஞ்சரியை காக்க யாம்ன இன்றும் எம் நித்திரையை துறக்க வேண்டுமா என்றே ருத்திரன் எண்ணியபடி ஒரு கல்லில் சாய்ந்து வாளை எடுக்க வசதியாக அமர்ந்து கொண்டான்.      அங்கே தீ