இடுகைகள்

பிப்ரவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பஞ்ச தந்திரம்-13

பஞ்ச தந்திரம்-13     சூர்யா வந்தப் பிறகு அன்றைய இரவு ரொம்பவே ஹாப்பியா இருந்தோம்.         எங்களுக்கான வாழ்க்கை ஒளிமையமா தெரிந்தது. மிலிட்டரிக்கு நேரம் முடியற வரை அவரும் சும்மா தானே வீட்ல இருந்தார். இனிக்க இனிக்க தினமும் தேன் நிலவு தான்.       ஒரு பெண் எந்தளவு சந்தோஷமா வாழணுமோ அந்தளவு ரொம்ப சந்தோஷமா மனநிறைவா வாழ்ந்தேன்.     சூர்யா கூட அடிக்கடி கேட்பார். 'ஏன் ரஞ்சு.. அப்பா அம்மா மீறி கல்யாணம் பண்ணிட்டோம். ஏதாவது பீல் பண்ணறியா. அப்படின்னா சொல்லு... காஸ்மீர் போகறதுக்கு முன்ன காம்பர்மைன்ஸ் பண்ணிட்டு போறேன்'னு சொன்னார்.         நீங்க எதுவும் சமாதானம் பண்ண வேண்டாம். அவங்களா ஒரு நாள் வருவாங்க சொன்னேன். உறவுகள் தானா நம்மளை முழுமையா மாத்தும்னு நற்பினேன்.     ஆனா எங்க வீட்லயும் அவர் வீட்லயும் சுத்தமா சேர்த்துக்கலை. நானும் உடனே கன்சீவ் ஆகிட்டேன். ஒரு குழந்தை பிறந்தா எல்லா உறவும் வரும்னு சொல்வாங்க. ஒருவேளை வாயும் வயிறுமா இருந்தா வீட்டுக்கு முன்ன போனா சேர்த்துப்பாங்கனு கூட போனேன். வாசல் கதவை அடைச்சி நாயை விட்டு துரத்த பார்த்தாங்க. நான் வளர்த்த நாய் என்னை துரத்தலை நானா வந்துட்டேன்.  சூர்யாவும்

சிரமமில்லாமல் சில கொலைகள் -1

படம்
                     *சிரமமில்லாமல் சில கொலைகள்* ஆல்பா தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலை. தூக்கம் போலிருக்கும் ஆனால் தூக்கமல்ல. விழித்திருப்பது போலிருக்கும், ஆனால் விழிப்பும் அல்ல. இதை எளிமையாக சொல்ல வேண்டுமானால், நாம் அனைவரும் உறங்கும் முன் வரும் கிறக்கமான நிலை தான் இது. இது இயற்கையாக ஏற்படுவது. இதை ஒருவித தியானத்தின் மூலம் நாமாக ஏற்படுத்திக் கொள்ளும்போது, நமது மனம் லேசாகிறன. இதன் மூலம் ஏழு சைக்கிள் முதல் பதினான்கு சைக்கிள் வேகத்தில் மூளையின் வேகத்தை குறைத்து இயங்கச் செய்கிறோம். இதனால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக இந்த நிலையில் இருக்கும் போது தான் நம் ஆழ்மனம் திறக்கும். *ஆழ்மனத்தின் சக்தி மூலம், எண்ணற்ற காரியங்களை சாதிக்கலாம்*                                                                            🩸-1          சர்வேஷ் தனது நண்பர்களோடு மூன்று தினமாக கோவா சுற்றுலா சென்று சோர்வோடு வீட்டுக்கு காலை ஏழு மணிக்கு வந்து சேர்ந்தான்.      அவன் தங்கும் அப்பார்ட்மெண்டில் தங்கும் இடத்தை பகிரும் சாந்தனு அலுவலகம் கிளம்பிக் கொண்டு இருந்தான். &qu

தீவிகை அவள் 🪔 வரையனல் அவன் 🔥 - 14

படம்
       தீவிகை 🪔 வரையனல்🔥 -14  திவேஷ் அலட்சியமாக சம்யுக்தாவை நெருங்கி வந்தவன், ஆரவ் பேனாவை சட்டை பட்டனில் வைத்தவாறு சம்யு அருகே வந்து சேர கால்கள் அப்படியே பிரேக்கிட்டு நிறுத்தினான்.       திரும்பி பார்த்து சுவாமிநாதன் இருக்கின்றாரா என்று எட்டி பார்க்க, அவர் கார் கண்ணிலிருந்து மறையும் தொலைவிற்கு சென்று இருந்தது.      "வாங்க சார். போட்டு கொடுத்தாச்சா. நீ போட்டுக் கொடுத்த அடுத்த நாளே தெரியும். என்னடா அப்பவும் சும்மா இருக்கானேயென்று பார்க்கறியா? சம்யு இருக்கறப்ப எதுக்கு டா நான் மற்றதை யோசிக்கணும். புத்திசாலியா இருந்தா புரிஞ்சிக்கோ." என்றவன் சம்யுவை பார்த்து,      "ஜூனியர் இங்க என்ன பண்ணற, கிளாஸ்க்கு நேரமாகலை. போ..." என்று கண்சிமிட்ட, சம்யு நமட்டு சிரிப்போடு இடத்தை விட்டு அகன்றாள். பார்வை என்னவோ திவேஷை ஏளனமாக எண்ணியது போல தோற்றம் தரவிக்க, ஆரவ் அருகே இருக்க, எலி போல அமைதியாக ஓரமாக போனான்.     வகுப்பில் வந்து அமர்ந்து சிரிக்க, யோகிதா வந்து என்ன என்று விசாரிக்க, நடந்தவை கூறி திவேஷ் விழித்ததை எண்ணி சிரிக்கவும், யோகிதாவோ       "ரொம்ப சிரிக்காதே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்... 10

படம்
     💟(௧௦)10                          நீரில் கைகளை துழாவிய ருத்திரா அருகே யாரோ வருவதை போல உணர திரும்ப தான் வருவதை அறிந்து கொண்டாளே கள்ளி இவள் என்றவன் அப்படியே நழுவ பார்க்க ஏனோ அவள் கைகளை நீரோடையில் இவன் கைகளும் தீண்ட ருத்திரா அவன் தீண்டல் என்றதும் அமைதியாக இருந்தாள்.      "எப்பொழுதும் விழிக்கு அகப்படாமல் தான் காட்சி அளிப்பீரோ தாங்களும் தங்கள் உடன்பிறப்பாளனும்" என்று ருத்திரா அவனை தான் மட்டும் காணாது தவித்து கேட்க      "மனம் கவர்ந்தவள் விழி தரிசனம் கேட்ட பின் மறுக்கும் கல் இதயமா உன்னவன் தேவி... இதோ இக்கணம் பார்வை வட்டத்திற்கு வந்தேன்" என்று உருவம் தெரிய காட்சி அளிக்க.       மித்திரன் இங்கு வர சாதாரண வீரனை போலவே நிற்க அவனை கண்டவள் விழிகள் அருவியாக போனது.      "ஏதேது இந்த வதன முகத்தில் சோகம் ஏனோ?"   "சோகம் ஏற்படுத்தியவர் அறியாததா?"    "யாம் எமது காதலியை தேடி காதலனாக வந்தோம். நம்மை பற்றி கதைக்க... தேவியருக்கு அதில் உடன்பாடு இல்லையோ?" என்றவனின் கைகள் இன்னமும் அவள் கரங்களில் பிடி பற்றியிருக்க ருத்திரா அதனை ஏற்றே இருந

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...9

படம்
  💟 (௯) 9                         எப்படியும் தாம் சொல்லாமல் போனாலும் துர்வனுக்கு சமுத்ரா, ருத்ரா  அறிந்திருந்த காரணம் கொண்டதால் அவன் சொன்னான்.       ''நாவலூர் அந்நாட்டின் இளைய மகள் ருத்திரா....''      ''பார்த்தாயா அன்னையே.. ஒரு சிறுவுரின் சொந்தமான ராஜா மகளை தான் உமது இளைய புத்திரன் ஆசை கொண்டு இருக்கின்றான்'' என்றே துர்வன் சொல்லி முடிக்க     ''ஆசை என்றே சொன்னாயோ உம்மை தாய் மீது கொடுத்த சத்தியம் மீறி அழிக்க செய்திடுவேன். அவள் மீது எமக்கு இருப்பது உண்மையான அன்பே ஒழிய பார்த்ததும் தோன்றும் ஆசை அல்ல.. என்ன சொன்னாய்... அவள் சாதாரண சிறுவுரின் இளைய மகளா? அப்படியெனில் அவளின் தமைக்கை சமுத்ராவை ஆசை கொண்டாயே நீ... அதற்கு பெயர் என்ன? ஓஹ் அவளை பலியிட தான் மையல் புரிந்தாய் அப்படி தானே?'' என்றே அனலாய் பேசிய மித்திரனின் பேச்சில் துர்வன் ஏகதாளமாக நின்றான்.     ''அன்னையே எமது சக்தி தேடி யான் தொடுக்கும் முயற்சி எல்லாம் இவன் தகர்க்கவே(உடைக்கவே) செய்கின்றான். இவனுக்கு நான் அதீத சக்தி பெற விருப்பமே இல்லை..'' என்றே மூத்த மகனின் போல

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...8

படம்
    💟(௮) 8                                     வீதியில் எல்லாம் ருத்திரா சமுத்ராவை அழைத்து வரும் செய்தி அறிந்து முரசுகள் ஒலித்தன. மேகவித்தகன் மஞ்சரி இருவரும் ஒரே புரவில் வர மக்கள் சிலர் அதனை விழி விரிய கண்டனர்.          வேந்தர்கள், மந்திரியர்கள் என்றே சால சிறந்தவர்கள் இமைக்க மறந்து பார்த்து இருக்க, ருத்திரா மிடுக்குடன் இறங்கி வந்து நின்றாள்.     ''தலை வணங்குகின்றேன்... வேந்தே... இன்னாட்டின் இளவரசி உயிர் அரணாக பாதுகாத்து கொண்டு வந்தாயிற்று... இனி இவளை தேடி அம்மூடன் வந்தால் திரும்ப அவன் யாக்கையில் ஆன்மா தங்காது'' என்றே செப்பிட மஞ்சரிக்கோ ருத்திராவுக்கு யார் இப்படி செய்தது என்றே அறிந்தும் மறைக்கின்றாள் என்றே விசித்திரமாக காண ருத்திரா மஞ்சரியை காணாமல்      ''வேந்தே.. மற்றும் ஒரு செய்தி.. அங்கே ஒரு இக்காட்டில் கயவன் மஞ்சரி உயிர் பலியிட போகையில் அவளுக்கு விவாகம் நடந்தால் மட்டுமே உயிர் பிழைப்பாள் என்றே இருக்க நமது இளவரசன் மேகவித்தகன் எமது தோழி மஞ்சரியை திங்கள் சாட்சியாக வைத்து மாலை சூடி மங்கையினுக்கு மணவாளானாக மாறி விட்டான்'' என்றே ர

தீவிகை அவள் வரையனல் அவன்-13

படம்
தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥-13     கதவை சாற்ற போனவன் அதனை திறந்து வைத்து, உள்ளே வரும் அன்னையை பார்த்து அதிர்ந்தது ஒரு நொடி. அடுத்த கணம் "அம்மா... வாங்க..." என்று தன் அன்னையை வரவேற்றான்.     வீட்டுக்குள் வந்த சுபாங்கினி அங்கே ஒரு பெண் இருக்க, கனலாக மைந்தன் மீது பார்வை வீசினார்.       அதன் பொருள் உணர்நதானோ என்னவோ உடனடியாக, "அம்மா இது யுக்தா. நான் விரும்பற பெண்" என்று அறிமுகப்படுத்த,       "இது என்ன பழக்கம் ஆரவ். நான் உன்னை இப்படி தான் வளர்த்தேனா. அப்பா இல்லாம தனியா வளர்த்து இப்படி ஒழுக்கம் கெட்டு வளர்த்தேனு பெயரா?" என்று வெடித்தார் சுபாங்கினி.        "அம்மா தெளிவா சொன்னேனே. அவளை விரும்பறேன். நாளைப் பின்ன நான் திருமணம் பண்ணப் போறவ" என்றான்.       "ஏன் ஆரவ்... இதே மாதிரி உன் தங்கை காதலிக்கறேன்னு ஒருத்தன் வீட்ல, அதுவும் யாருமில்லாதப்ப போனா என்ன பண்ணியிருப்ப? காதலிக்கறவ கல்யாணம் பண்ணிக்க போறவயென்று சகஜமா எடுத்துப்பியா? சொல்லுடா" என்றதற்கு சம்யுக்தாவோ,       "அத்தை நான் தான் பிறந்த நாளுக்கு ஆரவ் வாங்கி கொடுத்த புடவையை கட்டிக்காட்ட

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...7

படம்
 💟(௭) 7                                 துர்வசந்திரன் குகையின் முன் வர அவனுக்கு அங்கே பெண்ணின் வாசம் வீச குகையின் உள்ளே வந்தவன் சமுத்ரா அருகே ஒருவள் அமர்ந்து எழுப்ப செய்ய கண்டு அவளின் சிகையினை பிடித்து       ''யார் நீ உம் நாமம் என்ன?'' என்று கேட்க மஞ்சரி அவனின் சிகை பிடிக்க அதில் வலியினை உணர்ந்து ''ருத்திரா...'' என்றே தமது தோழியை அழைக்க துர்வனுக்கு மஞ்சரியே ருத்திரா என்று எண்ணி விட அடுத்து மேக வித்தகன் வந்து நின்றதும் அவனின் வளி வேலியினை கூட அகற்றியது இவளே என்றே அதீத சினத்தில் இருந்தான்.         என்ன அவனின் சிகை பற்றுதலில் மஞ்சரி முகம் சுழிக்க பெண்ணவள் இதற்கே இப்படி என்றால் தன் முன் எதிர்க்க நின்றாள் தோற்பது நிச்சயம் என்றே மமதையில் இருந்தான்.       ''துர்வசந்திரா... எமது தமைக்கையை விடுவி..'' என்றே மேகவித்தகன் சமுத்ராவை சொல்ல       ''உந்தன் ஒரு தமைக்கை தான் இவளை காப்பாற்ற வந்தவள் என்றே வெற்றி மிதப்பில் சொல்லுவாய்... எங்கே இவளை வைத்து அவளை எழுப்பு... என்றே சொன்னவன் அந்த இடமே அதிரும் வகையில் சிரித்தவன்... உம்மால் முட

தீவிகை அவள் வரையனல் அவன்-13

படம்
  தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥-13   கதவை சாற்ற போனவன் அதனை திறந்து வைத்து, உள்ளே வரும் அன்னையை பார்த்து அதிர்ந்தது ஒரு நொடி. அடுத்த கணம் "அம்மா... வாங்க..." என்று தன் அன்னையை வரவேற்றான்.     வீட்டுக்குள் வந்த சுபாங்கினி அங்கே ஒரு பெண் இருக்க, கனலாக மைந்தன் மீது பார்வை வீசினார்.       அதன் பொருள் உணர்நதானோ என்னவோ உடனடியாக, "அம்மா இது யுக்தா. நான் விரும்பற பெண்" என்று அறிமுகப்படுத்த,       "இது என்ன பழக்கம் ஆரவ். நான் உன்னை இப்படி தான் வளர்த்தேனா. அப்பா இல்லாம தனியா வளர்த்து இப்படி ஒழுக்கம் கெட்டு வளர்த்தேனு பெயரா?" என்று வெடித்தார் சுபாங்கினி.        "அம்மா தெளிவா சொன்னேனே. அவளை விரும்பறேன். நாளைப் பின்ன நான் திருமணம் பண்ணப் போறவ" என்றான்.       "ஏன் ஆரவ்... இதே மாதிரி உன் தங்கை காதலிக்கறேன்னு ஒருத்தன் வீட்ல, அதுவும் யாருமில்லாதப்ப போனா என்ன பண்ணியிருப்ப? காதலிக்கறவ கல்யாணம் பண்ணிக்க போறவயென்று சகஜமா எடுத்துப்பியா? சொல்லுடா" என்றதற்கு சம்யுக்தாவோ,       "அத்தை நான் தான் பிறந்த நாளுக்கு ஆரவ் வாங்கி கொடுத்த புடவையை கட்டி

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...6

படம்
      💟(௬) 6                           இன்றும் எப்பொழுதும் செய்யும் பணியினை முடித்து மஞ்சரி இறைவனை தொழுதபடி விழியில் நீரை சிதற விட அதனை கண்டு ருத்திரா தோளை தொட       '' தினமும் பயணம் செய்கின்றோம் ருத்திரா இதில் இன்னும் எத்தனை தொலைவை அடைந்து விட்டோம் இன்னும் சமூத்ரா இருக்கும் இடம் அறியவில்லையே.... உமது தமையன் மேக வித்தகனும் காண முடியவில்லை... இனி அவ்விருவரையும் காண இயலாதா? எமது தாய்மை கோலம் கூட என்னவனின் செவிக்கு அறிவிக்க முடியாதா?'' என்றே அங்கே சோகமாக சொல்ல      ''கண்டறிய செய்வோம் மஞ்சரி... கவலை கொள்ள வேண்டாம்... இங்கே அதீத மிருகம் நடமாடுவது போல தோன்றுகின்றது... முதலில் கிளம்புவோம்'' என்றே கையை பற்ற பிடித்து எழுந்து முடிக்க ருத்திரா குளித்து முடித்தும் அவளின் பிறை நெற்றியில் இருந்த ரத்த திலகம் அப்படியே இருக்க கண்டு        ''ஏன் ருத்திரா திலகம் அழியவில்லையே...'' என்றே கேட்க       ''நான் செஞ்சாந்து வைக்கவில்லை இது மித்திரனின் குருதி... அழுத்த துடைக்கவில்லை மஞ்சரி... மித்திரனின் குருதி படிந்த திலகம் அப்படியே இருக்க