உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...-1

       
        உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...! 

                             💟(௧)1

                        தனது வெண்ணிற புரவியில் சப்தம் வந்த திசையை நோக்கி விரைந்துச் சென்று கொண்டுயிருந்தான் மித்திரன்.
           திசை வந்த இடம் நோக்கி புரவியில் இருந்து குதித்து தனது உடைவாளை எடுத்தான். அந்த பாழடைந்த கோவிலில் யாருமில்லை என்று சொன்னாலும் அவனது உள்ளுணர்வு யாரோ இருப்பதாகவே எடுத்துரைக்கச் சுற்றிமுற்றி கண்களை சுழல விட்டவன் ஒரு தூணில் அருகே வந்ததும் அவனின் மீது வாள் ஒன்று வர நொடியில் சுதாரித்து தனது உடைவாளால் அதனைத் தடுத்தான்.
      ''பின்னிருந்து தாக்கும் வீரன் எவனோ? முன்னே வந்து நேருக்கு நேராக வாள் வீச அச்சமோ?'' என்ற மறுநொடி அந்த வாளுக்குச் சொந்தமான கைகள் முன்னே வந்து நின்றது.
      ''யாருக்கு அச்சம்....? எமக்கா? மோதி பார்த்து எம் வாளுக்கு பதில் சொல்லி பிறகு சொல்'' என்றே ஒருவன்  முகம் மறைக்கும் அளவிற்கு தாடி மீசை கொண்ட அவன் வாளில் சண்டையிட செய்தான். மித்திரனும் சண்டையிட்டவரே 
       ''யார் நீ எதற்காக எம்மை தாக்கா முயன்றாய்?'' என்றான் மித்திரன்.
       ''நற்முயற்சி சண்டையிட்டுக் கொண்டே பேசினால் கவனம் சிதறும் உம் பலத்தால் வீழ்த்தலாம் என்றே பேச்சு கொடுக்கிறாய் பலே... ஆனால் உம் பேச்சுக்கு செவி மடுக்கும் பிறவி யான் அல்ல'' என்றே வாள் கொண்டு நெஞ்சை தாக்க முயல அதனைத் தடுத்த மித்திரன்
      ''யாரென்று தெரியாமல் எதற்கு என்றும் அறியாமல் உம்மிடம் சண்டையிட எமக்கு பிடித்தம் இல்லை அதனாலே கேட்டேன் நீ இப்படி எடுத்துக் கொள்வாய் என்றே யாம் அறியேன்''
      ''இங்கு ஒரு பெண்ணின் குரல் கேட்டதே அவளை காணவில்லை அவள் இருக்குமிடத்தில் நீயிருக்க காரணம் உரைப்பானேன்''
      ''பிழை செய்கின்றீர்... எமக்கும் அதே குரல் கேட்டு தான் வந்தேன். தவறாக எம்மை தங்கள் எண்ணி கொண்டீர்''
       ''பிழை நானா? சுற்றி யாருமில்லை எங்கே சென்றால் அப்பெண்... அறிந்தவன் நீயாக தான் இருக்க முடியும் சொல் எங்கே அவள்?'' என்றே வாள் வீசியபடியே கேட்டு முடிக்க நடுவில் மூச்சு வாங்க ஒரு மங்கை வந்து நின்றாள்.
      ''மன்னிக்க வேண்டும் மன்னிக்க வேண்டும்... யாம் இதோ இருக்கின்றேன்.... காட்டு பன்றி வந்து துரத்தவே பயந்து ஓடினேன். அதற்கு போக்கு காட்டிவிட்டு வருவதற்குள்....'' என்றே தலையை உயர்த்தாமல் பணிந்து பேசியவளை கண்டதும் அவன் வாள் அப்படியே நின்றது.
      ''பிழைக்கு மன்னிக்கவும்... பெண்கள் அலறும் சப்தம் வந்த திசையில் நீயிருக்க ஐயம் வந்து உம்மை...''
      ''பரவாயில்லை... இது பெண்கள் தெய்வமாக மதிக்கும் பூமி... பெண்ணை 'கள்' போல் போதையாக நினைக்கும் கலியுகம் அல்ல... அதனால் ஐயமின்றி உங்கள் பயணத்தை தொடரவும்.... உங்கள் பயணம்...?''
       ''ஆம் நாங்கள் பயணத்தில் தான் இருக்கின்றோம்... வருகின்றோம்... மஞ்சரி புரவியில் ஏறு'' என்றே கட்டளையிட
       ''இது பெண் புரவி போல உள்ளதே...? தாங்கள் பெயரை அறியலாகுமோ?''
       ''ருத்திரன்.... இவள் மஞ்சரி... வருகின்றோம்'' என்றே புரவியை தட்ட
      ''எமது நாமத்தை கேட்கவில்லையே...?'' என்றதும் ருத்திரன் புரவியை நிறுத்தி பார்வை பார்க்க 
      ''மித்திரன்.....'' என்றதும் ருத்திரன் புரவி கிளம்பியது.
                                    மித்திரனோ இந்த பெண் புரவியில் வாள் வீசும் ஆண்மகன் பயணப்படுவானோ? ஆச்சரியம் தான்... அரண்மனைக்கு சென்றதும் ருத்திரனை பற்றி அறிய வேண்டும்.... என்றே மித்திரன் அவனின் புரவியில் பயணம் மேற்கொண்டான்.
           மஞ்சரியோ ''ருத்திரா அவன் பார்வை ஏதும் சரியில்லை...''
       ''ஏன் உன்னை மையலில் வீழ்த்தும் பார்வை புரிந்தானா என்ன?''
       ''அவன் என்னை எங்கே பார்த்தான். அவன் பார்வை உன்னை அல்லவா துளைத்தது. எதற்கும் ஜாக்கிரதை...''
       ''அவனுக்கு நம்மை யாரென்று தெரியாது... அறிய முயலுவான்... நமக்கும் அதே தானே எண்ணம் வரும்''
      ''அவன் யாராக இருக்கும் ருத்திரா..?''
      ''ஏதோ ஒரு நாட்டின் இளவரசனாக தான் இருக்க வேண்டும். கூட்டத்தோடு பயணிப்பதை விட தனித்து பயணம் அவனுக்கு பிடித்தமானதாக இருக்கும். அதனால் வந்து இருப்பான்... ஆனாலும் நாம் ஜாக்கிரதையாக இருப்பது உத்தமம்'' என்றே இருவரும் பேசிக் கொண்டே சென்றார்கள். 
       மித்திரனோ யார் இவர்கள் இதுவரை நான் பார்த்தது இல்லையே என்ற யோசனை வந்த வண்ணம் புரவியில் ஏறி கிளம்பினான்.
                  ஆற்றின் சலசலப்பில் இறங்கி நீரைப் பருகி புரவியும் பருக வைத்து சுற்றிப் பார்வை பதிக்க ஏதோ உணர்வு சுதாரிக்க சொல்ல வளை எடுக்கும் முன்னே அவனின் பாதம் அருகே ஒரு ஈட்டி வந்து குத்தி நின்றது. அப்படியே நின்று எப்புறம் வந்து பாய்ந்தது என்றே பார்க்க சுற்றிலும் ஆதிவாசிகள் சூழ்ந்தார்கள்.
         தன்னை சூழ்ந்து ஈட்டி முனையில் ஆதிவாசிகள் ஆக்கிரமிக்க அவர்கள் சொல்லும் திசைக்கு நடைப் பயின்றான்.
          ஒரு பெரிய மரத்தின் அருகே இருக்கும் சிறு பாதையில் அழைத்து செல்ல இடத்தினை மனதில் அடையாளப்படுத்தியபடி சென்றுக் கொண்டு இருந்தான்.
      அங்கே அவன் உயரத்திற்கு இருக்கும் பானையினை கண்டதும் ஒரு கணம் விதிர்த்துக் கொண்டான்.
       இன்று தாம் தான் உணவோ என்றே எண்ணி பார்த்தபடி முகத்தில் ஐயத்தினை காட்டிடாது முன் வந்தான்.
            ஆதி வாசிகள் ஏதேதோ மந்திரங்கள் முழங்க பெரிய கத்தி ஒன்றை திட்டினார்கள்.
        உள்ளுக்குள் எச்சியிலை விழுங்கியவன் தப்பிக்க நினைக்காமல் அமைதியாக இருக்க அக்கூட்டத்தின் தலைவன் முன் வந்துப் பேசினான்.
     ''உம்மை இதில் துண்டாகி எம் குல தெய்வத்திற்கு பலியிட்டு பின்னர் உணவாக உட்கொள்ள போகின்றோம் சிறிதும் அச்சமின்றி இருக்கின்றாய்...'' என்றதும்
      ''அச்சப்பட்டால் விடுவிப்பீர் என்றால் கூறுங்கள் இப்பொழுதே அச்சம் கொள்கின்றேன்... அப்படி நடக்காத பட்சத்தில் எதற்கு கோழை போல அச்சம் கொள்ள வேண்டும்... வீரனாக நீங்கள் வெட்டும் பொழுது நிமிர்ந்தே நின்று உயிர் துறக்கின்றேன்'' என்றான் மித்திரன்.
         இதை கேட்டு ஆதிவாசிகள் ஒருவர் முகம் ஒருவர் நோக்கி, அழைத்து வாருங்கள் குடிலுக்கு என்றே கிளம்பினார்கள்.
       மித்திரனின் கைகள் அவிழ்க்கப்பட்டு உள்ளே செல்ல அங்கே பேசும் ஓசை கேட்டது.
      ''தங்கள் சொல்லியது போல அவ்வீரன் அச்சம் கொள்ளவில்லை... இதோ அழைத்து வரச் சொல்லி விட்டேன்.'' என்றே தலைவன் சொல்ல யாரிடம் இவன் பேசுகின்றான் என்றே புரியாமல் மித்திரன் உள்ளே வந்தான்.
          கொஞ்சம் நாழிகை முன் பார்த்த தாடி வைத்த வீரனும் அவனிடம் பணிந்து பேசிய மங்கையும் கண்டான்.
      ''தாங்கள்.... இங்கு....'' என்றே மித்திரன் பேச துவங்க
      ''பசியாற வாருங்கள்... வீரனே.. நீயும் தான்...'' என்றே ருத்திரன் முன் சென்றான். பின்னால் மஞ்சரி போக மித்திரனுக்கு ஏனோ மனம் பல குழப்பத்தை தாங்கி சென்றான் பசியாற...
          திணை மாவு... வள்ளி கிழங்கு.. தேன்.. முக்கனிகள், வேர்க்கடலை மத்தியில் மான் ஒன்றும் முழுதாக சமைத்து வைக்கப்பட்டது அதனை கண்டு இமைக்காமல் பார்த்திட அதனை புரிந்த ருத்திரன் அதனை வாளில் துண்டுகளா வெட்டி அவனின் இலையில் வைத்தாள். இங்கே இது தான் கிட்டும்.
           மஞ்சரி ருத்திரன் இப்படி செய்வதை புரியாமல் ருத்திரனையே பார்த்து இருக்க அதே போல மித்திரனும் பார்க்க 
     ''வந்தவருக்கு வயிறார உண்ண வைப்பது எங்கள் மரபு...'' என்றே சொல்ல மஞ்சரி அதனை அலட்டிக்காமல் பார்வையை மாற்றிட மித்திரனும் அதன் பிறகு தான் உண்ணவே ஆரம்பித்தாள்.
       நடுவில் மித்திரனை அடிக்கடி பார்க்க, அவனோ மஞ்சரி பக்கம் தான் பார்வை பதித்தான்.
           இதை பார்த்த ருத்திரன் மஞ்சரியை பார்வையால் எறிக்க... அதன் பின் மஞ்சரி தலை மித்திரன் பக்கம் பார்க்க முடியாமல் தவிர்த்தாள்.
       ருத்திரன் மித்திரன் இருவருமே இங்கு வந்த காரணம் பற்றி யோசித்து இருந்தார்கள்... மஞ்சரியோ வந்திருக்கும் மித்திரனை பற்றியே யோசித்து அதற்கு ருத்திரன் தன்னை பார்வையால் எரித்த நிகழ்வும் எண்ணி பார்த்து சிரித்தவள் எங்கோ ஒரு வால் நட்சத்திரம் நிலவை பிடிக்க ஓடுவது போல எண்ணி கொண்டே, இரவை அந்த ஆதிவாசிகளின் குடிலில் உறங்க, அக்குடிலில் வெளியே ருத்திரன் மரத்தின் கிளையில் சாய்ந்து காவல் காத்துக் கொண்டே இமையை மூட மித்திரன் ஒரு குடிலில் இருந்தான்.
           நடு ஜாமம் வர மஞ்சரியின் உறக்கம் கலைய விழித்தவள் அங்கிருக்கும் காட்டின் நிசப்தம் தாண்டி நரிகளின் ஊளையும் ஆந்தையின் பிளிரலும் கேட்க, அதன் பின் உறக்கம் எங்கோ சென்றிட குடிலின் வழியே வெளியே பார்த்தவள் அங்கே மித்திரன் குடிலில் திண்ணையில் அவனும் உறங்காமல் தலைக்கு கையை தோதாக வைத்து வானில் பார்ப்பதை எண்ணி அவனிடம் பேச அருகில் போனாள்.
        ''தங்கள் கவிதை ஏதேனும் புனைய ஆசைக் கொண்டு வானை வெறிக்கின்றீரோ?'' என்றே மஞ்சரி குரல் கொடுக்க அதில் எழுந்தவன் அமர்ந்து
       ''மதி கெட்டவன் அல்ல நான் இப்படி தங்க குடம் போல நங்கை இருக்க வானை வெறித்து கவிதை படைக்க...'' என்றதும் மஞ்சரி புன்சிரிப்பில் இதழ் விரிய
      ''அழகான மங்கை சிரிப்பில் மனம் கவர்வது உண்மை தான் போல...''
      ''ஏதேது இப்படி பொய்களை மூட்டை போல பேசும் தங்களிடம் நான் கேட்க வந்த வினாக்கள் கூட மறந்திடும் அப்படி இருக்கின்ற உங்கள் பொய் பேச்சுக்கள்'' என்றே மஞ்சரி சொல்ல
      ''புத்திசாலி பெண் தான் பொய் என்று உணர்ந்து விட்டீரே?! என்ன வினா தொடுக்க வந்தீர் அறியலாகுமோ?'' என்றே மித்திரன் கேட்க
      ''தாங்கள் யார்? இங்கு அர்த்த ராத்திரில் வர காரணம் என்னவோ? உங்களை இதற்கு முன் இந்த வனதில் பார்த்தது இல்லை?'' என்றே மஞ்சரி கேள்வியில்
      ''யார் என்ற கேள்விக்கு தான் ஞானிகளும் விடை கிடைப்பது இல்லை மஞ்சரி... அப்படி இருக்க எனக்கு மட்டும் என்ன விதிவிலக்கா? அறிந்து கொள்ள?'' என்றே மித்திரன் மெய் மறைக்க பாடு பட
      ''சரி எந்த ஊர் தாங்கள் அதையாவது சொலுங்கள்'' என்றே மஞ்சரி கேட்க
      ''யாதும் ஊரே யாவரும் கேளிர்... நான் ஒரு நாடோடி....'' என்றே சொல்ல இம்முறை மஞ்சரிக்கு இவன் நிஜமாகவே பொய்யுறைத்து பேசுகின்றான் என்றே புரிந்தது. அவனோ அவள் அப்படி தான் எண்ணுகின்றாள் என்றே அறிந்து வசீகரிக்கும் சிரிப்பில் ''என்ன நம்ப முடியவில்லையா? என்னை பார்க்கும் எல்லோருக்குமே நான் ராஜ குமரன் என்றே எண்ணி விடுகின்றார்கள்.. என்ன செய்ய எந்தையும் தாயும் அப்படி எழிலில் சிறந்தவர்கள்' என்றதும் மஞ்சரி தன்னை மறந்து சிரிக்க
      ''மஞ்சரி யார்? எதற்கு வந்தாய் அதுவும் தாடி வைத்த அந்த முனிவரின் துடுப்பாக வந்து இருப்பது போல தோன்றுகின்றது'' என்றே கேட்க
     ''ருத்திரன்... எனது தோ...'' என்றதற்குள்
    ''ருத்திரனாகிய நான்.. விரும்பும் காதலி இவள்.. இது போதும் இந்த ஜாமத்தில் தாங்கள் அறிந்து கொள்வது... மஞ்சரி உறங்க செல்... இது குள்ளநரிகள் இருக்கும் காடு.. ஜாக்கிரதை'' என்றதும் மஞ்சரி குனிந்தவாறு எழுந்துக் குடிலுக்கு சென்றாள்.
         ருத்திரன் போகும் பொழுது மித்திரனை பார்வையால் அளவிட்டு கொண்டே செல்ல மித்திரன் ஏதும் அறியா சேய் போல முகத்தினை வைத்து உறங்க முயன்றான்.

             புரவி-குதிரை
             நாழிகை-நேரம்

-விழியும் வாளும் சந்திக்கும்.

- பிரவீணா தங்கராஜ் 

Comments

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு