Posts

Showing posts from May, 2022

செம்புல பெயல் நீர்போல

Image
                                செம்புல பெயல் நீர்போல     விழியன் என்னும் அபிஷேக் அவளுக்காக காத்திருந்தான். அவள் தான் அபிராமி.      ஆறு மாதமாக விழியன் சோஷியல் மீடியாவில் நட்பு பாராட்டி பேசியதில் அபிராமியின் பேச்சில் பிடித்தம் ஏற்பட்டு காதல் என்று அங்கீகரிக்கும் நேரம் அபிராமியோ 'நாம நேர்ல மீட் பண்ணலாமா'னு கேட்டு விட்டாள்.      விழியனும் காதலை இந்த சோஷியல் மீடியாவில் இன்பாக்ஸில் சொல்லி விடுவதற்கு பதிலாக நேரில் சொல்லலாமென்ற ஆவல் பெருகியது. இன்பாக்ஸில் சொல்லி அவள் பார்க்க வரும் இந்த சந்தர்ப்பத்தை தவிர்ப்பானேன.     'என்னடா இவ்வளவு நேரம் வெயிட் பண்ணறோம் அவளை காணோமே' என்று அபிஷேக் உள்ளத்து குரலாய் கேட்டு விட்டான். விழியன் என்பது அபிஷேக்கின் புனைப்பெயர் அல்லவா.     "வருவா வருவா. தேவதைகள் பொறுமையா தான் வருவாங்க." என்று கவிஞனாய் விழியன் பதில் தந்தான் மனசாட்சியிடம்.      சட்டென மின்னல் குறுஞ்செய்தியாக "ஹாய் தனியா தானே வந்திருக்கிங்க" என்று கேட்டாள்.      போன் எண்ணை பரிமாறி இன்று தான் வாட்ஸப்பில் முதல் முறையாக அபிராமி அவளாக ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினாள்.      ப