Posts

Showing posts from 2022

பஞ்ச தந்திரம்-1

Image
  தந்திரம்-1 இடம் : மெரீனா கடற்கரை      தன்னந்தனியா அங்குமிங்கும் மக்களை பார்த்து கொண்டிருந்தாள் அவள். இந்த பரந்த கடற்கரையில் இவளை போல தனியாக யாரும் கடற்கரை ரசிக்க வந்திருப்பார்களா என்று கணக்கெடுத்தால் நிச்சயம் புள்ளிவிவரப்படி பூஜ்ஜியமாக காட்டலாம். ஆம் அவள் வயது அப்படி.     ஆறு வயதானவள் தனியாக கடற்கரைக்கு வந்து உட்கார்ந்து விட்டாள்.    அவள் வயதிற்கு மணலில் வீடுகட்டி மகிழலாம். இல்லையென்றால் சிப்பி பொறுக்கி குதுகலிக்கலாம், இரண்டுமில்லையென்றால் கடற்கரை அலையில் கால் நனைத்து  நுரையோடு விளையாடி சிரிக்கலாம்.    எதையும் செய்யாமல் இந்த கடல் நீரில் மூழ்கினால் எப்படி மூச்சடைக்கும். மேலே எழும்பால் நீருக்குள் மூழ்கி இழுத்து சென்று கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் போகுமோ என யோசித்துக் கொண்டிருந்தாள்.    இந்த வயதில் இந்த எண்ணம் கூடாது தான். ஆனால் சிந்தித்திருந்தாள் குழந்தையவள்.      அருகேயிருந்த பெண் மெலிதாய் சிரிக்க முகத்தைத் திருப்பிக் கொண்டாள் குழந்தை(சிறுமி) தனுஜா .     ஏதோவொரு ஆர்வம் மேலோங்க தனுஜா மெதுவாய் பக்கவாட்டு பக்கம் விழியை செலுத்த மாடர்ன் யுவதியாக அமர்ந்திருந்தாள் ஒரு பெண்.     கண்ணில் க

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

Image
  பஞ்ச தந்திரம் ( five knots will be untied )   5பஞ்ச -தந்திரம்👇 த(Tha)-தனுஜா (Thanuja-6) ந்(N)-நைனிகா (Nainika-18) தி(Dhi)-திரிஷ்யா (Dhirishiya-27) ர(Ra)- ரஞ்சனா (Ranjana-35) ம்(M)- மஞ்சரி (Manjari-69) பஞ்ச தந்திரம்  கதையை வாசிக்க கீழே உள்ள அத்தியாயத்தினை சொடுக்கவும். 👇 பஞ்ச தந்திரம்-1   பஞ்ச தந்திரம்-2 பஞ்ச தந்திரம்-3 பஞ்ச தந்திரம்-4 பஞ்ச தந்திரம்-5 பஞ்ச தந்திரம்-6 பஞ்ச தந்திரம்-7 பஞ்ச தந்திரம்-8 பஞ்ச தந்திரம்-9 பஞ்ச தந்திரம்-10 பஞ்சதந்திரம்-11 பஞ்ச தந்திரம்-12 பஞ்ச தந்திரம்-13 பஞ்ச தந்திரம்-14 பஞ்ச தந்திரம்-15 பஞ்ச தந்திரம்-16 பஞ்ச தந்திரம்-17 பஞ்ச தந்திரம்-18(முடிவுற்றது)

அதலக்காய் பொரியல்

Image
  அதலக்காய் பொரியல் தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் ஒரு சிறு பவுல் அளவிற்கு நல்லெண்ணெய் தேவையான அளவு கடுகு ஒரு ஸ்பூன் உளுந்து ஒரு ஸ்பூன் காய்ந்த மிளகாய் வற்றல்: 2   கறிவேப்பிலை கொஞ்சம் அதலக்காய் கால்கிலோ   உப்பு தேவையான அளவு மஞ்சள் தூள் சின்ன ஸ்பூன் அளவு சீரகம் ஒரு ஸ்பூன் செய்முறை :    எண்ணெய் கடாயில் சூடான பிறகு கடுகு உளுந்து கருவேப்பில்லை மற்றும் நறுக்கி வைத்த சின்ன வெங்காயம் ஒன்றன்பின் ஒன்றாக நன்றாக வதக்கி விட்டு, காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு மஞ்சள் தூள் சேர்த்து, அதலக்காயையும் வதக்க வேண்டும். பின்னர் உப்பு சேர்த்து நன்றாக வதங்கி சாப்பிடும் பக்குவம் வந்ததும் சீரகம் ஒரு ஸ்பூன் சேர்த்து மூடி விடவும். தேவையிருப்பின் சிலர் வேக வைத்த துவரம்பருப்பை ஒரு குழம்பு கரண்டி அளவில் சேர்த்து கசப்பு சுவையை மட்டுப்படுத்த பார்ப்பார்.  சிலர் தேங்காய் துருவி சேர்த்து கொள்வார்கள்.  பகாற்காய் விரும்புவோர் இதை விரும்பி உண்பார்கள். சுகருக்கு நல்லது😉 எங்க ஐய்யமைக்கு ரொம்ப பிடிக்கும். இப்பவும் இதை வாங்குறப்ப அவங்களை நினைச்சிப்பேன். சீசன் டைம்ல இந்த காய்கறியை கண்டிப்பா வாங்கிடுவேன். நான் சமைத்

கற்பூரவள்ளி பஜ்ஜி

Image
  கற்பூரவள்ளி பஜ்ஜி    கற்பூரவள்ளி இலையில் கசாயம் மட்டும் அல்ல நமக்கு பிடிச்ச மாதிரி பஜ்ஜியும் போட்டுக்கலாம். மாலை நேர சிற்றுண்டியாக பஜ்ஜி மாவு அல்லது கடலை மாவில் தொட்டு எண்ணெயில் போட்டா லைட்டா இலை சூட்டுக்கு வெந்து அதுவுமே சாப்பிட சுவையாக இருக்கும். கீழே பிரெட் பஜ்ஜி கூட இலை பஜ்ஜியாக கற்பூரவள்ளி பஜ்ஜி போட்டிருக்கேன்.      தேங்காய் சட்னி இல்லைனா மயோனஸ் தக்காளி சாஸ் இரண்டையும் ஊற்றி தொட்டு சாப்பிட்டா நல்லாயிருக்கும். ரெகுலரா வெங்கயா பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி பிரெட் பஜ்ஜி குயிக்கா போடுவது போல இதுவும் போட்டு கொடுத்துடலாம். கஷாயம் குடிக்காத வாலுங்க நிச்சயம் மயோனஸ் தொட்டு நாலு இலை பஜ்ஜியை சாப்பிடுவது உறுதி.😉    

கற்பூரவள்ளி தோசை

Image
            கற்பூரவள்ளி தோசை மொறு மொறுனு தோசையில. இந்த குளிருக்கு இதை முயற்சி பண்ணிப்பாருங்க. 😊😉     சாதாரணமா குழந்தைகளுக்கு என்றால் நாலு கற்பூரவள்ளியை தண்ணில கொதிக்க வைத்து கூடவே சுக்கு கிராம்பு பெப்பர் என்று நுணுக்கியதை போட்டு நல்லா கொதிச்சதும் வடிக்கட்டி தேன் கலந்து கொடுப்பேன். இல்லைனா நாட்டுச்சர்க்கரை அல்லது பனவெல்லம் போட்டு தருவேன்.     குழந்தைகள் குடிச்சிடுவாங்க. அதென்னவோ குழந்தைகளுக்கு என்று செய்யறப்ப செய்திடுவோம். இதே நமக்கு சளி இருமல் என்று வந்தா செய்ய தோன்றுவதில்லை. எனக்கு நான் செய்யாம சுத்திட்டு இருந்தேன்.      என் வீட்டுக்காரர் நான் இரும்பவும்  திட்டிட்டுயிருந்தார். உடல்நிலையில் அக்கறையே இல்லை பிரவீணானு. நான் கொஞ்சம் ரோஷப்பட்டு இரண்டு தடவை குடிச்சேன். ஆனா தனக்கு செய்யணும்னா சோம்பேறித்தனம் வந்துடுது.      அப்ப உதிர்த்த மின்னல் ஐடியா தான் கற்பூரவள்ளி தோசை.    மாடில வளர்த்த கற்பூரவள்ளி செடியோட இலையை பறிச்சிட்டு வந்து குட்டிகுட்டியா கட்டம் வடிவத்தில வெட்டி தோசை ஊற்றி அதுல தூவி சாப்பிட்டு பார்த்தேன்.    அதோட ப்ளேவர் மென்று விழுங்கறப்ப நல்லா இருந்தது. அடுத்து பெரியபொண்ணுக

பிரம்மனின் கிறுக்கல்கள்-11 (முற்றும்)

Image
  🔗பிரம்மனின் கிறுக்கல்கள்-11    read and share ur valuable comments   கதை பிடித்திருந்த உங்க கருத்தை முன் மொழியுங்கள். நன்றி. 

பிரம்மனின் கிறுக்கல்கள்-10

Image
    🔗பிரம்மனின் கிறுக்கல்கள்-10  read and share ur valuable comments  

பிரம்மனின் கிறுக்கல்கள்-9

Image
  🔗பிரம்மனின் கிறுக்கல்கள்-9     read and share ur valuable comments  

பிரம்மனின் கிறுக்கல்கள்-8

Image
  🔗பிரம்மனின் கிறுக்கல்கள்-8    read and share ur valuable comments  

பிரம்மனின் கிறுக்கல்கள்-7

Image
 ஹலோ ஃபிரண்ட்ஸ்  🔗பிரம்மனின் கிறுக்கல்கள்-7   வாசித்து உங்க comments தட்டி விடுங்க. 

பிரம்மனின் கிறுக்கல்கள்-6

Image
ஹலோ ஃபிரண்ட்ஸ்  பிரம்மனின் கிறுக்கல்கள் ஆறாவது அத்தியாயம்  🔗பிரம்மனின் கிறுக்கல்கள்-6

பிரம்மனின் கிறுக்கல்கள்-5

Image
 ஹாய் ஃபிரண்ட்ஸ்  அடுத்த 5 ஆம் அத்தியாயம்  உங்கள் வாசிப்புக்கு ரெடி         🔗பிரம்மனின் கிறுக்கல்கள்-5

பிரம்மனின் கிறுக்கல்கள்-4

Image
 ஹாய் ஃபிரண்ட்ஸ்  பிரம்மனின் கிறுக்கல்கள் அத்தியாயம் நான்கு  இதோ உங்கள் பார்வைக்கு..  🔗பிரம்மனின் கிறுக்கல்கள்-4

பிரம்மனின் கிறுக்கல்கள் -3

Image
       ஹாய் ஃபிரண்ட்ஸ்       பிரம்மனின் கிறுக்கல்கள் அத்தியாயம் மூன்று  பதிவு இதோ.   🔗பிரம்மனின் கிறுக்கல்கள்-3

பிரம்மனின் கிறுக்கல்கள்-2

ஹாய் பிரெண்ட்ஸ்     பிரம்மனின் கிறுக்கல்கள் அத்தியாயம் இரண்டை பதிவிட்டு இருக்கேன் வாசிக்கறவங்களுக்கு நன்றி. கூடவே கமெண்ட்ஸை தட்டி செல்லுங்க. உற்சாகமாக பதிவிட பிடிக்கும்.  🔗பிரம்மனின் கிறுக்கல்கள்-2

பிரம்மனின் கிறுக்கல்கள்

Image
                    பிரம்மனின் கிறுக்கல்கள்    ராணி முத்து நாளிதழில் வெளியான எனது பிரம்மனின் கிறுக்கல்கள் நாவல். பிரம்மனின் கிறுக்கல்கள் -1 பிரம்மனின் கிறுக்கல்கள் -2 பிரம்மனின் கிறுக்கல்கள்-3 பிரம்மனின் கிறுக்கல்கள்-4 பிரம்மனின் கிறுக்கல்கள்-5 பிரம்மனின் கிறுக்கல்கள்-6 பிரம்மனின் கிறுக்கல்கள்-7 பிரம்மனின் கிறுக்கல்கள்-8 பிரம்மனின் கிறுக்கல்கள்-9 பிரம்மனின் கிறுக்கல்கள்-10 பிரம்மனின் கிறுக்கல்கள்-11 (முற்றும்)                         கதை வாசித்து உங்கள் கருத்துக்களை முன் மொழியுங்கள். நன்றி 

பிரம்மனின் கிறுக்கல்கள்-1

Image
 ஹாய் நட்புக்களே வணக்கம்.     பிரம்மனின் கிறுக்கல்கள் கதை ராணி புக்ல வந்தும் எங்க ஏரியால வாங்க மிஸ் பண்ணிட்டோம்னு சொன்ன ரீடர்ஸ்காக இங்கே பதிவிடறேன்.      உங்க கருத்தும் ஆதரவும் வேண்டுகின்றேன். முதல் அத்தியாயம் இதோ. 👇 🔗 பிரம்மனின் கிறுக்கல்கள்-1          ஆத்விக்-யஷ்தவி உள்ளத்து உணர்வு கதையே இந்த பிரம்மனின் கிறுக்கல்கள்.  வாசிக்கின்ற எனது நட்புக்கள் கருத்தும் பகிர்ந்தால் மகிழ்ச்சி. கூடவே பாலோவ் பண்ணாத வாசகர்கள் இந்த ப்ளாகை follow கொடுத்திடுங்க.   

செம்புல பெயல் நீர்போல

Image
                                செம்புல பெயல் நீர்போல     விழியன் என்னும் அபிஷேக் அவளுக்காக காத்திருந்தான். அவள் தான் அபிராமி.      ஆறு மாதமாக விழியன் சோஷியல் மீடியாவில் நட்பு பாராட்டி பேசியதில் அபிராமியின் பேச்சில் பிடித்தம் ஏற்பட்டு காதல் என்று அங்கீகரிக்கும் நேரம் அபிராமியோ 'நாம நேர்ல மீட் பண்ணலாமா'னு கேட்டு விட்டாள்.      விழியனும் காதலை இந்த சோஷியல் மீடியாவில் இன்பாக்ஸில் சொல்லி விடுவதற்கு பதிலாக நேரில் சொல்லலாமென்ற ஆவல் பெருகியது. இன்பாக்ஸில் சொல்லி அவள் பார்க்க வரும் இந்த சந்தர்ப்பத்தை தவிர்ப்பானேன.     'என்னடா இவ்வளவு நேரம் வெயிட் பண்ணறோம் அவளை காணோமே' என்று அபிஷேக் உள்ளத்து குரலாய் கேட்டு விட்டான். விழியன் என்பது அபிஷேக்கின் புனைப்பெயர் அல்லவா.     "வருவா வருவா. தேவதைகள் பொறுமையா தான் வருவாங்க." என்று கவிஞனாய் விழியன் பதில் தந்தான் மனசாட்சியிடம்.      சட்டென மின்னல் குறுஞ்செய்தியாக "ஹாய் தனியா தானே வந்திருக்கிங்க" என்று கேட்டாள்.      போன் எண்ணை பரிமாறி இன்று தான் வாட்ஸப்பில் முதல் முறையாக அபிராமி அவளாக ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினாள்.      ப

துளிர் விடும் விடியல்

Image
                                            துளிர் விடும் விடியல்       ஞாயிறு மதியம் கறிக்குழம்பு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது. அதை விடத் திவ்யபாரதி மனம் கொதித்தது. மற்றவர்களுக்குத் திவ்யா என்று நெருக்கம்.      தன்னைப் படிக்க வைக்காமல் தந்தை திருமணம் பற்றிப் பேச்சை எடுப்பது எரிச்சலை தந்தது.     தான் ஒன்றும் பார்டர் பாஸ் அல்ல. அதே நேரம் பத்திரிகையில் இடம் பிடிக்கும் முதல் தரமும் அல்ல. அறுபத்தியிரெண்டு விழுக்காடு பெற்ற மத்திய ரகம்.      அளவுக்கதிகமாகப் படிக்க வைக்கக் கேட்கவில்லை. சின்னதாய் பெயருக்குப் பின்னால் ஒரு டிகிரி. அது மட்டும் போதும். அதற்குப் பின் கண்ணை மூடி தந்தை கூறும் வினோத்தை திருமணம் செய்ய அவளுக்கு ஒப்புதலே. ஆனால் படிக்கவிடாமல் இப்படிப் பதினெட்டு அடியெடுத்து வைத்து விட்டாளென உடனே சந்தையில் விற்பது போல வரன் வந்தால் விற்பதா?       படிக்கின்றேன் என்று கூறி அடம் பிடித்தாயிற்று. காதில் வாங்காமல் அவர் பாட்டிற்கு இருப்பது இன்னமும் வெறுப்பை அதிகரித்தது.      மதியம் உணவு உண்ண தந்தை வந்திருந்தார்.     பெரிதாய் வியாபாரியோ, பிஸினஸ் மேன் என்றெல்லாம் இல்லை. ஆட்டோவோட்டும்

காயத்ரி

Image
                                                    காயத்ரி     இரண்டு பக்கமும் கொரனா தடுப்பு வைத்து அந்த தெருவில் பெரிய வாகனங்கள் போக விடாமல் அடைத்தனர்.     அந்த மூன்றடுக்கு கட்டிடத்தில் ஹாட் ஸ்பாட் போட்டு முடித்திருக்க, ஆம்புலன்ஸில் ஒருவரை ஏற்றி சென்றனர்.   மற்றவர்கறையும் முகமூடி அணிந்து கடத்தி சென்றனர். பார்க்க அப்படி தான் தோன்றியது. கவலை தேய்ந்த முகத்தோடு மூன்று கட்டிட மனிதர்களும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றனர்.     ஒருவருக்கு வந்த கொரானா மற்ற குடுத்தினருக்கு பரவுவதாக ஆய்வு செய்ய தனியாக பெரியவர்களை அழைத்து சென்றது. இருவருக்கு தொற்று ஊர்ஜிதமாக அவர்களை அங்கேயே பிடித்து வைத்து கொண்டனர். மற்ற இருவருக்கு இல்லையென அனுப்பி வைத்தார்கள். மேலும் இருவருக்கு தொற்று உள்ளது தங்களாகவே தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் இங்கே அதிக வார்டு இல்லையென கூறி சென்றனர்.    காயத்ரி அவர் கணவன் சிவகுமார் ஆஸ்பிடலில் தனிதனிப்பிரிவில் சிகிச்சை எடுத்தனர்.      காயத்ரி சிவகுமார் அருகே செல்ல முடியவில்லையே என்று கவலை தோய்ந்து இருந்தார். வளர்ந்த இரு பெண்கள் ஓசூரில் கல்லூரி படிக்க சென்றிருந்தனர். இருவரும் சேர