Posts

Showing posts from January, 2018

டோராவும் புஜ்ஜியும்

Image
டோராவும் புஜ்ஜியும் சோட்டா பீமனும் நெருங்கிய நண்பர்களாயினர்  மகளின் விருப்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் ...!             *** சாதாரண பொம்மைக்கு நீர் அபிஷேகம் நடக்கிறது அம்பாளின் பிஞ்சு கைகளால்...!                     -- பிரவீணா தங்கராஜ் .

கண்களில் பசியை கண்டபின்

குளிரூட்டப்பட்ட உயர்ரக உணவுவிடுதியில் அலங்கரிக்கப்பட்ட வெண்ணை தடவிய ரொட்டியினையும்  மணம் பரப்பி வாசத்திலே  வசியம் செய்த பிரியாணியையும் பசித்த பின்னும் புசிக்க பிடிக்கவில்லை கண்ணாடித்திரை வாயிலாக சாலையின் அதிக கூட்ட நெரிசலில் துல்லியமாக தெரிந்தன நடை வீதியில் ஓரமாக நின்றிருந்த சிறுவனின் கண்களில் பசியை கண்டபின் .                       -- பிரவீணா தங்கராஜ் .

பெரும் சாதி...

பெரும் சாதி சதவீதம் பெற்றே உயர் பதவி வகித்து மூக்கு விடைக்க தன் மதத்தினை பற்றி பக்க பக்கமாக வரிகளை கடன்வாங்கி படித்தப்பின் மெத்த ஆளாக நிமிர்ந்த நடையோடு மகிழுந்தில் சென்றே அந்த வீட்டு கதவைத் தட்டி இச்சை தீர்த்து கொண்டே மீண்டும் சென்றே போனது சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட வீட்டிலிருந்து .                            -- பிரவீணா தங்கராஜ் .

சித்தாளின் வாழ்க்கை

படி படியாய் முன்னேற்றம் படி படியாய் ஏறினாலும் முன்னேற முடியவில்லை சித்தாளின் வாழ்க்கை .         -- பிரவீணா தங்கராஜ் .

ஏழை சிறுவனின் பசி...

மகிழுந்திலமர்ந்து வெண்ணை தடவிய ரொட்டியை பசித்த பின்னும் புசிக்க பிடிக்கவில்லை சாலைகளின் அதிக கூட்டநெரிசலில் துல்லியமாக தெரிந்த ஏழை சிறுவனின் கண்களில் தெரிந்த பசியை கண்டதும் .                    -- பிரவீணா தங்கராஜ்

படிப்படியாய்...

படிப்படியாய் தான் முன்னேற்றம் படிப்படியாய் ஏறினாலும் முன்னேற முடியவில்லை சித்தாள் வாழ்க்கை .😓                 -- பிரவீணா தங்கராஜ்

நிலவு

முழு நிலவான வெள்ளி தட்டில் சிதறிய சில்லறையாக நட்சத்திரங்கள் .          *** களங்கமற்றநிலவின் மீது பழி சுமத்திவிட்டனரோ ? வானில் புதைந்து கொண்டது .         *** நட்சத்திரம் நாணம் கொள்ளவில்லையே ! இரவில் நிலவை கண்ணடித்து காதல் கொள்வதற்கு .        *** காலத்தால் அழியாத பகை யாரால் ஏற்பட்டதோ உடன் பிறப்புகள் சூரியன்-சந்திரன் ஒன்று சேர்வதில்லை               -- பிரவீணா தங்கராஜ் .  

வலி என்னுள்ளே ...

அர்த்தமற்ற பேச்சுயென்று நீ புறம்தள்ளும் ஒவ்வொரு மறுபேச்சிலும் இதெல்லாம் தேவையற்ற வேலைகளென  நீ பாதணி மாட்டி அலுவலகம் சென்றதும் எண்ணிலடங்கா வலியேந்தியே தவிக்கின்றேன் மணி மூன்றை காட்டிய பிறகும் சாப்பிட மனமின்றி சாப்பிட்டாயா கேட்க யாருமின்றி தனியுலகில் நேரங்களின் வெறுமையை எனக்குள்ளே ஜிரணித்தும்  ஏற்றுக்கொண்ட பிறகே மாலையில் உந்தன் சிறு முயற்சியும் வானளவு புகழ்கின்றேன் வலி என்னுள்ளே இருக்கட்டும் நீயறியா வேண்டாமென ....                 -- பிரவீணா தங்கராஜ் .             

காதல் பிதற்றல் -26

மருதாணி யெல்லாம் வேண்டாம் உன் ஆழப் பார்வை யொன்றே போதும் நான் சிவப்பதற்கு .           -- பிரவீணா தங்கராஜ்                             

சித்திர எழுத்துக்கள்

சித்திர எழுத்துக்கள்மீண்டு(ம்) வந்தன தொலைப்பேசியில் ஸ்மையிலி வாயிலாக 😊👈                 -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் -25

கொழுந்த மருதானி இலையினை பறித்து வேண்டுமா ? என்கின்றாய் என்சொல்வேன்  நான் சிவந்து போக மருதானி வேண்டாம் உன் பார்வை ஒன்றே போதும்                -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் - 23

எந்தன் வீட்டு ரோஜா செடிக் கூட அறிந்தே இருக்கின்றது நான் உன் மீது மையல்   கொண்டுள்ளதை அதனால் தான் உனக்கு சேர வேண்டிய பூக்களை சுவர் தாண்டி ஜன்னல் வழியாக உன்னிடமே நீட்டுகின்றது அந்த ரோஜா செடி                        -- பிரவீணா தங்கராஜ் .  

மகளெனும் இளவரசி

வேந்தர்களே யானாலும் கூட சேவர்களாக மாறி தான் போக வேண்டும் மகளெனும் இளவரசியின் கட்டளைக்கு .             -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் - 22

நீயென்னை சாதாரணமாக எல்லோரும் விளிப்பது போல தான் விளித்திருப்பாய்...! எனக்கு தான் உன் மீதிருக்கும் காதலில் செல்லமாக விளிப்பதாகவே தோன்றுகிறதே...!                    -- பிரவீனா தங்கராஜ் .

விழி வலை

விழி வலையில் மீளாத ஒற்றை சூரியனாய்... மாட்டி கொண்டேன் உன்னிடம் விழிவலையில் தப்பிக்க மனமில்லையடி   உன் கண்யிமைக்குள்ளே வைத்துக்கொள் .                         -- பிரவீணா தங்கராஜ் .

வெற்றிப் பெறாகாதல்

தொடர் அலைப்பேசி சிணுங்களில் அடுப்பை அணைத்து வைத்தப்படி தொடுதிரை விசையை நகர்த்திட  ' ஹலோ ' என்ற குரல் ஒலித்தன தட்டுத் தடுமாறி நழுவவிடச் சென்ற கைப்பேசியை அழுத்திப் பிடித்தப்படியே 'ம்' என்ற ஒற்றை வார்த்தை உதிர்த்தேன் அந்தப் பக்க அலைப்பேசி மவுனம் காத்தன அதிலேயே என்குரலை அறிந்ததை அறிந்தேன் நீண்ட வினாடிக்குப் பின் நலம் விசாரித்து, என் மகவினை பற்றி அறிந்துக் கொண்டு சொல்லவந்ததையும் சொல்லி முடித்தன. வேறொன்றுமில்லை வரும் நன்னாளில் அலைபேசியின் பேசிய குரலின் பிள்ளைக்கு பெயர் சூட்டு விழாவாம் அழைப்பு விடுத்திட்டு பெயரையும் சொல்லினர் அதுவொன்றும் ராசியான பெயரில்லையென சொல்வதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டது அந்த நன்னாளுக்கு நிச்சயம் வரமாட்டேயென அறிந்தேயிருந்தன அந்த குரல் . அலைப்பேசி வைத்துவிட்டு அரை நாழிகை அதையே இமைக்க மறந்து பார்த்திருந்தேன் அது எப்படி பூக்களால் வருடிய உணர்வும் ஈட்டியால் குத்திய ரணமாக்கும் உணர்வும் ஒரு சேர தா க் கி கொண்டிருக்கின்றன இதயத்தினுள் வெற்றிப் பெறாகாதல் .                                    --  பிரவீணா தங்கராஜ் .

முக்திநிலை

இறைவழிபாட்டிருக்கு அலங்கரிக்கப்பட்ட பூக்களே கர்வம் கொள்ள வேண்டாம் நீங்களே சிறந்ததென என் மகளின் பிஞ்சு கைகளில் பிய்த்து எறியப்பட்ட பூக்கள் தான் முக்திநிலை பெற்றது அறிவீரோ...!                -- பிரவீணா தங்கராஜ் .

முகவரியில்லா முதிர்கன்னி

இதோயிந்த காற்றை நீ சுவாசித்திருப்பாய்...! இதோயிந்த அலையிலும் நீ கால் பதித்திருப்பாய்...! இதோயிந்த உணவை நீயும் ருசித்திருப்பாய்...! இதோயிந்த நிறம்கூட உனக்கு பிடித்தாயிருக்கலாம்...! இதோயிந்த பாடல் கூட நீ கேட்டு ரசித்திருப்பாய்...! இதோயிந்த வழியாய் நீ பயணித்தீர்ப்பாய்...! எனக்கான நீ பிரபஞ்சம் அழியும் முன் ஜாதகம் பார்க்காது , வரதட்சணை கேட்காது , நிறம் , படிப்பு பொருட்படுத்தாது...! கரியநிற மேனிகொண்ட பெயரையும் எழுதறியாத பிறந்ததிகதி கூட தெரியாத ஏழ்மை கொண்ட முகவரியில்லா முதிர்கன்னியை தேடிக்கொண்டு இருப்பாய் ... என்னைப் போலவே...!                          -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் - 21

காதலில் பெண்மைக்கு வெட்கம் , அச்சம் தடையென்பதால் நீயென்னுள் தொடக்கப் புள்ளி மட்டுமே வைத்து விடு ...! முற்றுப்புள்ளியாய் ... முடித்திடாது தொடர் புள்ளியாய் ... உன்னுள் மையப்புள்ளியாய் .... காதல் கவியாய் தொடருகின்றேன் என்றும் என்றென்றும் ...!                -- பிரவீணா தங்கராஜ் . 

அம்மா

Image
பாலும் சோறும் நீ பிசைந்து பாசமதிலே நீ குழைத்து நிலவுக்காட்டியே சோறூட்ட நீ வேண்டும் அம்மா... மடிமீது நான் சாய நித்திரையில் தலைக்கோதி நெற்றியிலே இதழ்ப்பதித்து புன்னகைத்தே காத்திடுவாய்... என்னப்பிடிக்கும் ஏதுப்பிடிக்கும் என்பதெல்லாம் நானறியும் முன்னாலே நீயுணர்ந்து செயல்படுவாய்... தோழியாய் கதைகதைத்து முதல்தோழியாய் மாறிப்போவாய்... இடையில் எனை அமர்த்தி விழியில் வழிநடத்து  நான் உலகம் பார்ப்பதற்கும் .                 -- பிரவீணா தங்கராஜ் .                    

காதல் பிதற்றல் - 20

என்னை மயக்க நீ மாயங்கள் செய்ய தேவையில்லை நீ நீயாகயிருந்தாலே மயங்கி தான் போகின்றேன் .                   -- பிரவீணா தங்கராஜ் . 

வறுமை

மூழ்கும் நிலையிலும் மீட்டிட இயலவில்லை அடகு கடையில் வறுமையை ...          -- பிரவீணா தங்கராஜ் .

நீர்க்குமிழ்கள்

Image
வாழ்ககையொருநொடியென்றாலும் பல வர்ணத்தை ஏற்படுத்திவிட்டே செல்கின்றன குழந்தைகள் ஊதும் நீர்க்குமிழ்கள்.                     -- பிரவீணா தங்கராஜ் .

என்னவனின் செய்கையே..!

மார்கழிமாதம் அதிகாலையில் கோலமிட்டதால் மங்கையின் முகத்தில் கூடுதலழகுயென  மாமியார் யுரைத்திட , நங்கைக்கு  ஒப்பனையே சிறந்ததென நகைப்பிற்கு காரணம் அழகுநிலையமென நாத்தனார் யுரைத்திட , திட்டாத தாயக வலம் வந்ததிற்கு தியானமே சிறந்ததென சொல்லி கொடுத்த திருமகள் யுரைத்திட , முகமலர்ச்சிக்கு அவர்களுக்கு தெரிந்ததை சொல்லி சென்றிட , கரம் பற்றிய கணவனும் காரணம் அறியாதே சென்றிட , கவிதையிடம் சொன்னேன் . அதிகாலை எழிந்திடுமுன் அறையுறக்கத்தில் எந்தன் முகத்தில் படர்ந்த ஒற்றை முடிக்கற்றை ஒதுக்கி எந்தன் பிறை நெற்றியில் இதழ்ப்பதித்து மீண்டும் துயில் கொண்ட என்னவனின் செய்கையே..! எந்தன் முகமலர்விற்கு காரணமென ...                                      -- பிரவீணா தங்கராஜ் . 

பறந்து திரிந்து ...

Image
பறந்து திரிந்து விளையாடிய பருவமது பகையென்றால் என்னவென்று அறியாதது ஆற்றில் குளித்தும் , மரத்தில் தொங்கியும் அரசயிலை தண்டை கண்ணாடியாய் பொருத்தியும் கூடிவிளையாடி குதூகலித்த இனியனாள் கூட்டான்சோற்றில்  பொங்கி வழிந்தன ஒற்றுமை யெனும் உலகத் தத்துவம் காக்காகடியில் பண்டங்கள் பகிர்ந்து கவலை இன்னதென அறியாது வளர்ந்தோம் அன்பு மட்டுமே இங்கு உண்டு ஆதரவாய் தோழன் தோளுண்டு பாசாங்கு இங்கில்லை பதவிசனமும் இங்கில்லை பண்புகளோ தானாக நல்விதமானது சூரியனுக்கே சவால் விட்டு பனிரெண்டை பால்நிலவாக நினைத்தது உண்டு திரும்ப கிட்டாத பாக்கியம் நினைவில் மட்டும் தித்திப்பாய்...                                                --பிரவீணா தங்கராஜ் .

***பழமைக்கு உயிர்கொடுப்போம்***

Image
கூடைப்பின்னி  கூவிவிற்று குறையின்றி வாழ்ந்தநாளது பதமாய் செய்த பானையது பக்குவமாய் நீருற்றி நோயின்றி வாழ்ந்தநாளது மஞ்சப்பை எடுத்துச் சென்று மளிகையில் மலிவாய் வாங்கிச் சென்றநாளது பழமையை புறம்தள்ளி பாட்டனின் சொல்லை முறித்து நெகிழிப்பை வரவேற்று நோயினையும் ஏற்றோம் மக்காத நெகிழியோ மறையாது தங்கிட எம்பூமியின் பசுமையழிய  நாமே பூத்தூவி விட்டோம் அதை மாற்றிடவே , பழமைக்கு உயிர் கொடுப்போம் பூமியை நலமுறச் செய்வோம் .                    -- பிரவீணா தங்கராஜ் .               

நீயென் காதலாயிரு...!

நீயந்த  மேகமாயிரு ...! வேண்டாம் வேண்டாம் மேகமது காற்று வந்தால் கலைந்திடுவாய்...! நீயந்த சூரியனாயிரு ...! வேண்டாம் வேண்டாம் இரவில் காணாது போய்விடுவாய் ...! நீயந்த நிலவாயிரு...! வேண்டாம் வேண்டாம் பகலில் வர மறுப்பாய்... சில நாட்கள் தேய்ந்திடுவாய்...! நீயந்த ஏழுவர்ண வானவில்லாயிரு...! வேண்டாம் வேண்டாம் வானவில் தினமும் வர்ணித்துவிடாது நீயந்த மழையாயிரு...! வேண்டாம் வேண்டாம் இங்கே குளங்களில்லை உனைத் தேக்கிவைத்திட நீயிங்கு என்தாய் மண்ணாயிரு...! வேண்டாம் வேண்டாம் ரியல் எஸ்டேட்காரர்கள் கூறுப் போட்டு அடுக்குமாடி எழுப்பி விடுவார்கள் நீயந்த மலர்வாசமாயிரு...! வேண்டாம் வேண்டாம் நுகர்வோர்களுக்கெல்லாம் சொந்தமாகிவிடுவாய்...! நீயென் கவியாயிரு...! வேண்டாம் வேண்டாம் ரசனை கொண்டவர்கள் வாசித்துவிடுவார்கள் நீயென் ஓவியமாயிரு...! வேண்டாம் வேண்டாம் கலைக் கண்களுக்கு காட்சிப் பொருளாயாகிடுவாய்... நீயெந்தன் தங்க வைரமாயிரு ...! வேண்டாம் வேண்டாம் பெண்கள் உன்மீதே  கண்பதிப்பர் நீயந்த காற்றாயிரு..!. வேண்டாம் வேண்டாம் இப்போதெல்லாம் காற்றில் மாசு கலந்தே இருக்கின்றன நீயென் தென்றலாயிரு ...!

கைம்பெண்

திருத்தப்பட்ட வில் புருவதின் மத்தியில் குங்குமமாக நான் மையம் கொண்டு உன் கூந்தலில் மல்லிகையாய் மலர்ந்து வாசம் வீச விரும்புகின்றேன் நீ கைம்பெண் என்ற முள்வேலியிலிருந்து விண்ணைத்தாண்டி வா உறவும் , சமூகமும் வசவும் சொல்லிற்கு செவிமடுக்காது ' ம் ...' என்ற ஒற்றை வரியை உதிர்த்திடு... 'கைம்பெண்' என்ற அடைமொழி நீக்கி 'பெண் ' என்ற வட்டத்தினுள் ... மாங்கல்ய கயிறுடன் கரம் பற்ற வருகின்றேன்.                          -- பிரவீணா தங்கராஜ் .

பச்சை நிறவிளக்கு

போட்டியொன்றில் வெற்றிபெரும் ஜோருடன் தான் சாலைகளத்தில் காத்திருந்த வண்டிகளெல்லாம் பச்சை நிறவிளக்கு எரிந்தவுடன் சீறிக் கொண்டு பறந்தன சாகசம் காட்டவும் நேரத்தை மிஞ்சவும் வேகத்தை கூட்டிட .... எமனை தான் தேடுகின்றீரென  அவனது தவறான புரிதலில் பாசக்கயிற்றில் கட்டி அரவணைத்து விட போகின்றான் .                    --பிரவீணா தங்கராஜ் .

நியாயம் கேட்க மாட்டாயா...

Image
குதப்பிய பான்பராக் எச்சியை நடைபாதையில் முகசுழிப்பின்றியே துப்பிச் செல்ல அஷ்டகோலமானது என்முகமே.. அவனை நிறுத்தி தட்டி கேட்க நேரமில்லை பெரும்பான்மையினருக்கு... என்னையும் சேர்த்தே . அவனோ பாதம் மறைந்து நடந்தே செல்ல நானும் என் பேருந்தில் ஏறினேன். மனசாட்சி மட்டும் ஏறாது என்னிடம் கேட்டது நியாய அநியாய கேட்க மாட்டாயா...? அதனிடம் சொன்னேன் நான் கேட்க தயார் நான் ஏறும் இந்த பேருந்து எனக்காக காத்திருக்குமா...? என்றேன் பணியில் நேரம் கடந்து சென்றால் அலுவலத்தில் வசவு தவிர்த்து வரவேற்பாரா ? என்றேன் மனசாட்சி கூட அமைதியாகி என்னிடமே வந்து பயணம் செய்தது நியாயம் மட்டும் காற்றில் அலைகளாக யாரிடம் வாதிடவென்று அலைந்து கொண்டு இருக்கின்றன .                         -- பிரவீணா தங்கராஜ் .

மும்மதம்

மசூதி அருகே இருக்கும் அன்வர்பாய் கடையில் கறியை கவ்விய காக்கையொன்று பெருமாள் கோவில் கோபுரத்தில் உண்டு முடித்து தேவாலயத்தின் மணிக்கூண்டில் இளைப்பாறி ஏழையொருவன் கூரை வீட்டின் அருகே உள்ள அதன் மரக்கூட்டிற்கு சென்றே விட்டது . அதனிடம் யார் சொல்வது மும்மதத்தினையும் கலந்தே விட்டாயென்று...!                 -- பிரவீணா தங்கராஜ் .