மார்கழிமாதம் அதிகாலையில் கோலமிட்டதால் மங்கையின் முகத்தில் கூடுதலழகுயென மாமியார் யுரைத்திட , நங்கைக்கு ஒப்பனையே சிறந்ததென நகைப்பிற்கு காரணம் அழகுநிலையமென நாத்தனார் யுரைத்திட , திட்டாத தாயக வலம் வந்ததிற்கு தியானமே சிறந்ததென சொல்லி கொடுத்த திருமகள் யுரைத்திட , முகமலர்ச்சிக்கு அவர்களுக்கு தெரிந்ததை சொல்லி சென்றிட , கரம் பற்றிய கணவனும் காரணம் அறியாதே சென்றிட , கவிதையிடம் சொன்னேன் . அதிகாலை எழிந்திடுமுன் அறையுறக்கத்தில் எந்தன் முகத்தில் படர்ந்த ஒற்றை முடிக்கற்றை ஒதுக்கி எந்தன் பிறை நெற்றியில் இதழ்ப்பதித்து மீண்டும் துயில் கொண்ட என்னவனின் செய்கையே..! எந்தன் முகமலர்விற்கு காரணமென ... -- பிரவீணா தங்கராஜ் .