என்னவனின் செய்கையே..!

மார்கழிமாதம் அதிகாலையில் கோலமிட்டதால்
மங்கையின் முகத்தில் கூடுதலழகுயென 
மாமியார் யுரைத்திட ,
நங்கைக்கு  ஒப்பனையே சிறந்ததென
நகைப்பிற்கு காரணம் அழகுநிலையமென
நாத்தனார் யுரைத்திட ,
திட்டாத தாயக வலம் வந்ததிற்கு
தியானமே சிறந்ததென சொல்லி கொடுத்த
திருமகள் யுரைத்திட ,
முகமலர்ச்சிக்கு அவர்களுக்கு தெரிந்ததை
சொல்லி சென்றிட ,
கரம் பற்றிய கணவனும்
காரணம் அறியாதே சென்றிட ,
கவிதையிடம் சொன்னேன் .
அதிகாலை எழிந்திடுமுன் அறையுறக்கத்தில்
எந்தன் முகத்தில் படர்ந்த ஒற்றை முடிக்கற்றை ஒதுக்கி
எந்தன் பிறை நெற்றியில் இதழ்ப்பதித்து
மீண்டும் துயில் கொண்ட என்னவனின் செய்கையே..!
எந்தன் முகமலர்விற்கு காரணமென ...
                                     -- பிரவீணா தங்கராஜ் . 

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு