Posts

Showing posts from January, 2016

மயான பூமி

சாதி , மத பேதமின்றி          கூட்டு குடும்பமாக                    மாறி அமைதியாக                           வாழ்கின்றான் மனிதன்                                      மயானத்தில் .....                                           --   பிரவீணா  தங்கராஜ் .

நின்றபடி கால்வலி பயணம்

தேடி தேடி பார்த்தேன் ஓடி ஓடி பார்த்தேன் கிடைக்கவில்லை  , பேருந்தில் மட்டும் பயண இருக்கை .           -- பிரவீணா  தங்கராஜ் .

வரலாறு

விஷ்ணுவின் வரலாற்றை  அறிந்த மனிதனுக்கு , சிவனின் வரலாற்றை   அறிந்த மனிதனுக்கு , ஏசுவின் வரலாற்றை   அறிந்த மனிதனுக்கு , நபிகளின் வரலாற்றை   அறிந்த மனிதனுக்கு , கடவுள் ஒருவனே எனும் வரலாறு  அறிய மறந்தது ஏன் ?  -- பிரவீணா  தங்கராஜ் .

கல்லூரி

கல்லூரி நுழைவில் ஓர் மிரட்சி வகுப்பறை தேடலில் ஓர் பதற்றம் நல்லதொரு தோழியின் தேடல் புகட்டவரும் ஆசிரியரை பற்றிய எதிர்பார்ப்பு  படிப்பில் வரும் ஆர்வம் சிறிது அரட்டை பெரிது மிதிவண்டி நிறுத்தும் குட்டிசுவர் உண்ணுவதற்கு ஏற்ற இதமான மரநிழல் நினைத்ததை கிறுக்க மரமேஜை நிஜங்களை பகிர்ந்து கொள்ளும் நெஞ்சங்கள் தாமதமாக சென்றால் பரிசாக திட்டுக்கள் ஆசிரியருக்கு பெயர் சூட்டும்  அறியாமை சக தோழியருடன் கொண்டாடும் விழா குறும்பு இன்ப துன்பத்தினை ஏற்க சில தோள்களும்  திறமை வளர்த்து களிப்பூட்டும் தோழிகள் தனிப்பட்ட திறமைக்கென  ஏற்படும் போட்டிகள் அதிரடி தேர்வில் எழுது கோல்  தலை கவிழ தலை நிமிரும் என் கண்கள் நேர்க்கொண்டு அலட்சிய தருணங்களை அனுபவம் ஆக்கி சான்றோனாக உலக அவைக்கு தந்தாய் ! பிரிவின் இறுதி நாளாம் கல்லூரி வாழ்விற்கு கண்ணீருடன் கண்கள் விடைகொடுக்கும் நேரமாம் உதட்டளவில் பிரிகின்றோம் மனதில் ஞாபக சின்னத்தோடு !                  --  பிரவீணா  தங்கராஜ் .    *ஜூலை 2008 -இல் "யூத் ரிப்போர்ட்டர் " எனும் இதழில் சுருக்க பிரசுரிக்கபட்டவை .

காய்ந்த மிளகாய்

மாடியில் சூரியன் சுட்டு வறுத்தாலும் , கர்வ சிரிப்பில் காய்கிறது . மனிதனும் ஒரு நாள் மேலோக மாடியில் வாணலியில் வறுத்து எடுக்கபடுவர் என்பதால் ..             --   பிரவீணா  தங்கராஜ் .

கற்றுக்கொள்

கூவுகின்ற குயிலிடம் , இனிமையை கற்றுக்கொள் . காட்டை ஆளும் சிங்கத்திடம் , தன்மானத்தை கற்றுக்கொள் . வீட்டை காக்கும் நாயிடம் , நன்றியை கற்றுக்கொள் . வீட்டை சுமக்கும் நத்தையிடம்  , நிதானத்தை கற்றுக்கொள் . ஊர்ந்து செல்லும் எறும்பிடம் , சுறுசுறுப்பை கற்றுக்கொள் . உயிரை  அற்பமாக நினைக்கும் மானிடம் , மானத்தை கற்றுக்கொள் . பருந்திடம் குஞ்சியை காக்கும் கோழியிடம் , தாய்மையை கற்றுக்கொள் . பாலும் , நீரும் பிரித்து உண்ணும் அன்னத்திடம் , உண்மை காதலை கற்றுக்கொள் . ஒற்றைக்காலில் தவம் கிடக்கும் கொக்கிடம் ,  விட முயற்சியை கற்றுக்கொள் . வெட்டினாலும் சிரிக்கின்ற மரத்திடம் , தியாகத்தை கற்றுக்கொள் . ஐந்து அறிவு ஜீவனிடம் கற்றுக்கொள் . தீமை உண்டு மனிதா  அதை விடுத்து ,  கற்றுக்கொள்  மனிதா  நன்மையை மட்டும் . உன்னிடம் பிறர்  கற்றுக்கொள்ள தேடட்டும்  நன்மையை ............!               -- பிரவீணா  தங்கராஜ் .

தென்றல்

அடடா ! காற்றும் பிள்ளை பாசத்தால் ஏங்குகிறதே ?! வாரி அணைக்கிறதே இதமாக !            --  பிரவீணா  தங்கராஜ் .

நாகரீகத் தூய்மை

முகாம் இட்டு சொல்கின்றனர் . சுற்றுப்புற தூய்மையை துப்புரவு தொழிலாளிகளிடமே !           --  பிரவீணா  தங்கராஜ் .

🌳மரம் வளர்ப்போம்🌳

மழை முத்தால் கிடைத்த நீர் வளத்தை  கனி முத்தாக மாற்றினாய் - உன் வளத்தால் உன்னால் சுவாசம் பெறும் மனிதன் உன் சுவாசத்தைப் பறித்தாலும் உன் கனி இனிப்பது எப்படியோ ...?! ஆதியில் வந்த முன்னோருக்கு - உன் அன்பு கனியை தந்து உணவாகினாய்... ஐந்தறிவு ஜிவிகளும் பழம் தின்றே விதை தூவுகின்றது மண்ணிலுன்னை ஆறறிவு கொண்ட மனிதனோ அவன் சுவாசம் அழிக்க யவனே வெட்டுகின்றான் யுன்னை உயிர் கொண்ட உன்னை வெட்டி உயிரற்ற பொருளாகும் மனிதன் வீட்டை அலங்கரிக்கும் பொருளாக ஏற்றுக் கொள்ளும் சிந்தை கொண்ட மனிதா ! "வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் " என உன்னை  வளர்க்க சொல்லி தர தான்  வேண்டுமா ?                              --   பிரவீணா  தங்கராஜ் .

உடன் கட்டை

பெண் விறகுகளுக்கும் ஒப்பானவளா ? கணவன் சடலத்தில் விழுந்து எரிகிறாளே ?!            --  பிரவீணா  தங்கராஜ் .

விபச்சார விடுதி

விபச்சார விடுதி – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

கைம்பெண்

வெண்மை அணிந்த மங்கைக்கு வண்ணம் பூச தயங்குகிறது . வாடிக்கையான பண்பாட்டால் ..       --  பிரவீணா  தங்கராஜ் .

பெண் சிசு

தவறு செய்யாமல் தண்டனை அநீதியான உலகம் இது . அழிக்கப்பட்ட சிசுவின் கதறல் ...              --  பிரவீணா  தங்கராஜ் . *ஜுலை 2010 -இல் " மங்கையர் மலரில் " பிரசுரிக்கப்பட்டவை .

பிறை நிலா

பிறைநிலா – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

நான்கு சுவரில்

நான்கு சுவரில் – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

ஆசான்

படைக்கும் தொழிலுக்கு ஒரு படி உயர்ந்து . பாரில் மாணவருக்கு பயின்றதை புகட்டி , பண்பில் சிறக்க பாங்காய்  நடந்திட , ஏட்டுச் சுரக்காயோடு நன்னடத்தை நவின்று , ஏற்றம் கொண்ட வானவில்லாய்  உயர்த்தி , தவறு செய்த தருணங்களை மன்னித்து , தட்டிக்கொடுத்து திறமை வளர்த்து , கல்வி கடலிலே சிறு துளி நீர்த்தெளித்து , மகுடத்திற்கு வைரமாம் பணிகளிலே ஆசிரியத்துறை மட்டற்ற அளவிலே போற்றுவோம் இப்பணியை ..!                                                            --  பிரவீணா  தங்கராஜ் .

வரதட்சனை

வரதட்சனை – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

முதியோர் இல்லம்

முதியோர் இல்லம் – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum * ஏப்ரல் 2009- இல் "மங்கையர் மலரில் " பிரசுரிக்கப்பட்டவை .

எண்ணத்தில் தெளிவு

Image
                                      எண்ணத்தில் தெளிவு                                                                                            கிச்சனில் இருந்தாலும் காமாட்சியின் கண்கள் நொடிக்கு ஒரு முறை வீட்டு வாசலிலே ஏறிட்டன.  ஆம், இருக்காத எப்பொழுதும் கல்லூரி முடிந்து சரியாக நான்கு மணிக்கெல்லாம் வீட்டு  வாசலில் நந்தனி ஸ்கூட்டி சத்தம் கேட்குமே ! இன்று 4.45 ஆகியும் அவளை காணாது தவித்து கொண்டு இருக்கிறாள்.  அவளது தவிப்பை புரிந்தவராக வரதராஜன்.           ''ஏன்? இப்படி  பதறுகிறாய் உலகம் தெரிந்த பெண் நந்தினி என்று...''  கணவன் முடிக்கும் முன்னரே , காமாட்சி ஆரம்பித்தாள்.           ''இப்படியே  செல்லம் கொடுப்பதால் தான் அவள் இஷ்டதிற்கு ஆடுறா...'' அதற்கு பின் வரதராஜன் வாய் திறக்கவில்லை .          ''எப்ப பார்த்தாலும் ஒரு மொபைல் கையில் வைத்து கொண்டு பேஸ்புக்  ,  டூவிட்டர், வாட்ஸ் அப்-னு  சுத்தறா. ஏன் ஒரு போன் அந்த மொபைலில் இருந்து பண்ணக் கூடாதா?''  என ஆரம்பிக்கவும் நந்தினி கையில் அடிப்பட்டு கட்டு கட்டிய ஒரு நாய் குட்டியோடு உள்ளே நுழையவும