Posts

Showing posts with the label நீ என் முதல் காதல்

நீ என் முதல் காதல்-34

  அத்தியாயம்-34    ம்ருத்யு தன் காரில் வாட்டர் பாட்டிலை தேடி முடித்து தண்ணீர் இல்லையென்றதை அறிந்து பாட்டிலை கவிழ்த்து "பச்'' என்று வாட்டர் பாட்டிலை வீசியெறிந்தான்.    "அதான் எதிர்க்க கடல் இருக்கே போய் தண்ணி குடிக்க வேண்டியது தான?" என்று ஸ்ரீநிதி குரலில் அவளை துளைக்கும்படி பார்வையிட்டான்.    தன் முதுகு பக்கம் இருந்த ஜிப்பை போடாமுடியாது துழாவி, இவனிடம் வம்பளந்து கொண்டிருந்தாள்.   "மீனா இருந்தா கடல் நீரை குடித்திருப்பேன். உன் ம்ருத்யுவா இருக்கறதால.... உன்னை தான் பருகணும்" என்று மீண்டும் உதட்டை முத்தமிட்டு முடித்தான்.    மறுபக்கம் தானாக கைகள் முதுகுப்பக்கமிருந்த அவளின் ஜிப்பை மாட்டி முடித்தான்.      "திரும்ப கழற்றியோனு நினைச்சேன்." என்று உதடு விடுபட்டதும் ஸ்ரீநிதி உள்ளுக்குள் போன குரலில் உதிர்த்தாள்.       "இரவு நமக்கு சாதகமா இருக்கலாம். பகல் நமக்கு பாதகமா போயிடுச்சே. என்ன தான் காருக்குள்ள நடக்கறது வெளியே தெரியாது என்றாலும் நேற்றிரவு சுத்தி இருட்டு மட்டும் கண்ணுக்கு தெரிந்தது. என் போக்கஸ் முழுக்க நீ மட்டும் இருந்த. இப்ப சுத்தி வெளிச்சம். காரு

நீ என் முதல் காதல் -27

 அத்தியாயம்-27     ஸ்ரீநிதியை மருத்துவமனையில் சேர்த்தப்பின் ஐசியூ வார்டிற்கு வெளியே தலை தொங்கி கண்ணீரோடு வீற்றியிருந்தான்.    யுகேந்திரனோ தன் செல்ல மருமகனின் இதயத்தை தானே கத்திக்கொண்டு கீறிய மடத்தனத்தை அறிந்து ம்ருத்யு அருகே செல்லவும் தயங்கினார்.    ம்ருத்யு மனம் தான் மகளிடம் பேசியதில் வலியோடு போராடுவதை உணர்ந்து மெதுவாக ம்ருத்யு அருகே அமர்ந்தார்.    "ம்ருத்யு.. டேய் கண்ணா என்னை பாருடா" என்று கன்னத்தை பிடித்து திருப்ப, ம்ருத்யு வெறித்த பார்வையோடு மாமனை கண்டான்.    "எப்படி மாமா என் மேல அன்பாயிருந்த. உனக்கு நான் என்றால் ரொம்ப பிடிக்குமே. அனாதையா கிடைச்ச என்னை, நோஞ்சானா இருந்த என்னிடம் எப்படி மாமா பாசம் வைச்ச? பாசம் வச்சது போதாதுனு ஸ்ரீநிதியை கட்டிக்கொடுத்திருக்கிங்க" என்று குலுங்கி குலுங்கி அழுதான்.     "ம்ருத்யு உன் வாயால அப்படி சொல்லாதடா. நீ அனாதை இல்லை. என் அக்கா தாரிகா தான் உன் அம்மா. என் மாமா பைரவ் தான் உன் அப்பா." என்று கூற ம்ருத்யுவோ இல்லையென்பதாக தலையாட்டி மறுத்தான்.     யுகேந்திரன் தலையிலடித்து அய்யோ உனக்கும் என் அக்கா மாமாவுக்கும் ஷண்மதியால எதுவும்

நீ என் முதல் காதல்-26

 அத்தியாயம்-26   யுகேந்திரனுக்கு நா வரை வந்த ரகசியம் மகளிடம் போட்டு உடைக்க முடியவில்லை.       சாதாரணமான விஷயமா? ஸ்ரீநிதி கோபத்தில் ம்ருத்யுவை பிற்காலத்தில் எடுத்தெறிந்து பேசிவிட்டால்? அந்தளவு கூட சிந்திக்காதவன் அல்ல. அதோடு ம்ருத்யுவிற்கு இவ்விஷயம் தெரிந்து தாரிகா அக்கா பைரவ் மாமாவிற்கும் உண்மை தெரிந்தால்? இத்தனை நாட்களாய் கட்டிக்காத்தது வீணாக போய்விடுமே.    அதனால் நாவை அடக்கி, "குட்டிம்மா அம்மா மட்டுமா ம்ருத்யு மேல பாசம் வச்சிருக்கா? நானும் தான் ம்ருத்யு மேல பாசம் வச்சிருக்கேன். அவன் என் அக்கா பையன் டா.  இதை தவிர வேற காரணம் என்ன இருந்திடப்போகுது. காதல் தோல்வியை தலைமுழுகிட்டு ம்ருத்யுவோட வாழ்ந்து பாருடா. அப்பாவுமே காதல் தோல்வி அடைந்தவன். ஷண்மதி அம்மாவை நேசிக்கலையா?" என்று தலை கோதினார்.      யுகேந்திரன் ஒரு இக்கட்டில் தன் காதலியை கைப்பிடிக்க வந்தவன் சூழ்நிலை சந்தர்ப்பத்தால் ஷண்மதியை மணக்கும் இக்கட்டிற்கு சென்றான். காதல் தோல்வியை கடந்து ஷண்மதியை விரும்பினான்.     ஷண்மதியும் பள்ளிக்காலம் முதல் நேசம் வைத்ததால் யுகேந்திரனிடம் தன் காதலை ம்ருத்யு போல தான் போராடி பெற்றாள்.    அதை வைத்

நீ என் முதல் காதல் -25

அத்தியாயம்-25     ஸ்ரீநிதி பேச வேண்டும் என்றதும் யுகேந்திரன் மகளிடம், "என்ன பேசணும் என் மகளுக்கு? ஸ்ரீகுட்டி ரிதுவை ஏன்டா அடிச்ச? உனக்கும் ம்ருத்யுவிற்கும் ஏதோ சண்டைனு ரிதன்யா சொன்னா? அந்த கோபத்துல தான் அவன் மேல ஹாண்ட்பேக்கை தூக்கிப்போட்டியா?     சண்டை சின்னதா? பெரிசா? ஓ எங்களிடம் ஷேர் பண்ணணுமா? இல்லைனா நீங்களா சண்டையை முடிச்சிப்பிங்களா?" என்று கேட்கும்வரை ஸ்ரீநிதி தந்தை தோளில் கிளியாக சாய்ந்தாள். இதுவரை தந்தையிடம் கூற தயங்கி மூச்சு விடாமல் இருந்தாள். என்ன தான் கோபமிருந்தாலும் இருவர் சண்டையில் பெரியவர்களிடம் சென்றால் ஜீவி பற்றி விளக்க வேண்டும். அதற்கு வேறு பதில் கூறியாக வேண்டுமே என மலைத்தாள். அதை தவிர்த்து தாய் ஏன் ம்ருத்யுவிடம் பாசம் காட்டுகின்றாளென்று கேட்க முடியாதா என்று வாடினாள்.     ஷண்மதியோ "கேட்கறார்ல சொல்லு" என்று அதட்டல் வரவும், அன்னைக்கு தான் ஜீவியை தெரியுமே. இன்னமும் மறைத்து ஒன்றுக்கும் ஆகப்போவதில்லையே என்று அனைத்தும் கூறிட வாய் திறந்தாள்.     "அப்பா நான் சொல்லறதை முதல்ல பொறுமையா கேளுங்க. அப்பறம் என்னை திட்டினாலும் ஓகே. பட் எனக்கு கடைசியா தெரிந்துக்க

நீ என் முதல் காதல் -24

அத்தியாயம்-24     ஸ்ரீநிதி அதீதமாய் கோபத்தோடு வீற்றிருந்தாள். அவளுக்கு ஜீவி வாட்சப்பில் அனுப்பியா இன்விடேஷன் கார்ட் அப்படி.     ஜீவி வந்ததும் "ஹாய் நிதி" என்று வந்தவனிடம், "நீயும் ஏன்டா இப்படியிருக்க? அவன் தான் ஏமாத்தி மேரேஜ் பண்ணி என்னை இம்சை தர்றான் என்றால், நீ எங்கேஜ்மெண்ட் இன்விடேஷன் அனுப்பற?" என்று சண்டையை பிடித்தாள்.     "நான் என்ன செய்தா சரியா இருக்கும் ஸ்ரீநிதி.     உன்னை உண்மையா விரும்பினேன். கொஞ்சம் கம்பெனி வரட்டும் பேசலாம்னு பொறுமை காத்தேன். 'பொறுத்தார் பூமி ஆள்வார்'னு பழமொழி இருக்கு. ஆனா என் பொறுமை என் வாழ்க்கையை மாற்றிடுச்சு.         என் தேவதையை மிஸ் பண்ணிட்டேன். தந்திரமா உள்ள புகுந்த ம்ருத்யு தட்டிப் பறிச்சிட்டான்.       நீ சொல்லற மாதிரி விவாகரத்து வாங்கிட்டு உன்னை மணக்க நான் ரெடி. ஆனா நான் ஹீரோ கிடையாது ஸ்ரீநிதி.     நான் ஒரு காமன் மேன். ஏற்கனவே இதை நான் சொல்லிருக்கணும். நீ ம்ருத்யுவை பத்தி பேசறப்ப எல்லாம் அடிவயிறு எரியும். இதுல என் எதிர்ல வீடியோ கால்ல அவனோட பேசிட்டே சிரிச்சிட்டு இருக்கறப்ப உன் போனை தட்டிவிடணும்னு தோணும். ஆனா சந்தேகப்படறே

நீ என் முதல் காதல் -23

 அத்தியாயம்-23 ம்ருத்யு அவனுக்குண்டான பிசினஸ் என்று எதுவும் ஆரம்பிக்கவில்லை. அதனால் முழு நேரம் ஸ்ரீநிதி பின்னால் தான் சுற்றினான்.  "ஹனிமூன் போகலாமா ஸ்ரீ" என்று ஆசையாக கேட்டவனிடம் பதிலேதும் கொடுக்காமல் "நான் அப்பாவோட பிசினஸை கையிலெடுக்கலாம்னு இருக்கேன். உன்னை மாதிரி வெட்டியா இருக்க முடியாது இல்லையா? நான் ஷண்மதி பொண்ணாக்கும்" என்று திமிராக மொழிந்தாள்.  உண்மையில் ஸ்ரீநிதி பேசும் போது அவனது தன்மானம் உடைந்துக் கொண்டிருந்தது. ஆனால் தொழில் முக்கியமா? தன் வாழ்வு முக்கியமா என்று சிந்திக்கும் போது தன் வாழ்வை முதலில் சீர்படுத்தவே முடிவெடுத்தான்.  "ஹனிமூனாவது மண்ணாங்கட்டியாவதுனு பேசாம, எனக்கு அப்பா பிசினஸ் பார்க்கணும்னு பொறுப்பா பேசறியே ஸ்ரீகுட்டி. இது போதும்" என்று அதற்கும் தனக்கு ஏற்றது போல பேசினான்.  ஜீவியை புறம் தள்ளி திருமணத்தை நடத்தியாயிற்று. இனி கணவனாய் தக்க வைக்க வேண்டுமே. தாலி ஏறினால் கணவனே கண்கண்ட தெய்வமாக ஸ்ரீநிதி நிச்சயம் புராணம் பேச மாட்டாள்.  ஏமாற்றி என் மனதை வதைத்தாய் என்று கணவன் எதிரே காதலனுக்கு முத்தமிட்ட பிசாசு.  ஏடாக்கூடமாக எதையாவது செய்தால்?  ஏனோ ர

நீ என் முதல் காதல்-22

அத்தியாயம்-22     ஜீவி போனதும் ம்ருத்யு அவன் வீட்டிற்கு சென்று ஸ்ரீநிதி சடங்கு சம்பிரதாயம் நிறைவேற்றினாள்.      எதிரெதிர் நெருப்பு பொறி போல கண்கள் சந்தித்தாலும் பெற்றவர்களிடம் தங்கள் பித்தலாட்டத்தை காட்டிக்கவில்லை.      ஸ்ரீநிதி எப்படி ஜீவி பற்றி கமுக்கமாய் காய் நகர்த்தினாளோ, அதே போல ம்ருத்யுவும் கமுக்கமாய் இருந்தான்.    இவர்கள் இருவர் தான் இப்படி என்றால் அக்காவை பார்த்த ரிதன்யாவோ அதற்கு மேலாக இருந்தாள்.      இங்கே யுகேந்திரன் கொடுத்த வீட்டில் தனியாக இருவரும் வந்து சேரும் வரை அதீத மௌவுனம் ஆட்கொண்டது.     ஏற்கனவே இங்கு வந்து சென்று இருந்ததால் ஸ்ரீநிதி தனியாக ஒரு அறைக்கு செல்ல, ம்ருத்யு அவள் பின்னால் வந்தான்.        "என்னோடவே ஸ்டே பண்ணலாம் ஸ்ரீநிதி. ஐ அம் எ குட் பாய்." என்று நெஞ்சில் கைவைத்து கூறவும் ஸ்ரீநிதியோ, "நான் ஜீவியோட சாட் பண்ணணும். நீயிருந்தா டிஸ்டர்பா இருக்கும்." என்று சாதாரணமாக கூறியவளை வெறியுடன் கையை பிடித்தான்.      ம்ருத்யு பிடித்த பிடியில் கை வலிக்க முகம் சுணங்கியது ஸ்ரீநிதிக்கு.    "ம்ருத்யு என்ன பண்ணற?" என்று முகம் சுணங்கி கையை விடுபட முயன்ற

நீ என் முதல் காதல் -21

அத்தியாயம்-21 மெத்தையில் புரண்டு புரண்டு படுத்த ம்ருத்யு கைகளை துழாவினான். ஸ்ரீநிதி இருக்கும் சுவடு இல்லையென்று தோன்றவும் இமை திறந்து எழுந்தான்.  தனக்கு நேர் எதிராக இருந்த குஷன் சோபாவில் கால் மேல் கால் போட்டு வீற்றிருந்தாள்.  "தூங்கலையா ஸ்ரீ. எதுக்கு இப்படி நைட் எல்லாம் தூங்காம உட்கார்ந்திருக்க?" என்று தூக்கம் கலந்து கேட்க ஸ்ரீநிதி ஏகக்கடுப்பில் ம்ருத்யுவை பொசுக்கும் பார்வையில் வெறித்தாள்.  ம்ருத்யுவிற்கு ஏதோ தவறாய் படவும், குளியலறை சத்தம் கேட்டது.  ம்ருத்யு ஸ்ரீநிதிக்கு என்று கொடுக்கப்பட்ட அறையில் குளியலறையிலிருந்து சத்தம் வரவும், ம்ருத்யு திரும்ப, அங்கே ஜீவி தலை துவட்டியபடி வந்தான்.  ம்ருத்யுவுக்கு ஜீவியை கண்டதும் மனம் மெட்ரோ ரயிலாய் வேகமெடுத்தது.  'போச்சு.. ஸ்ரீநிதிக்கு உண்மை தெரிந்திடுச்சு. நான் தான் கடத்தி அறையில் அடைச்சி வச்சதை தெரிந்திருப்பா. இந்த ஜீவி மூதேவி எல்லாத்தையும் சொல்லியிருக்கும்.  பச் என்னோட பஸ்ட் நைட் ரூம்லயிருந்து நான் ஸ்ரீநிதி ஒன்னா குளிச்சி ஒன்னா புரண்டு இந்த ரூம்ல இருக்க வேண்டியது.  கிரகம் என் ரூம்ல என் பாத்ரூம்ல இவன் குளிச்சிட்டு வந்துட்டுயிருக்கான