இடுகைகள்

மே, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பஞ்ச தந்திரம்-13

பஞ்ச தந்திரம்-13     சூர்யா வந்தப் பிறகு அன்றைய இரவு ரொம்பவே ஹாப்பியா இருந்தோம்.         எங்களுக்கான வாழ்க்கை ஒளிமையமா தெரிந்தது. மிலிட்டரிக்கு நேரம் முடியற வரை அவரும் சும்மா தானே வீட்ல இருந்தார். இனிக்க இனிக்க தினமும் தேன் நிலவு தான்.       ஒரு பெண் எந்தளவு சந்தோஷமா வாழணுமோ அந்தளவு ரொம்ப சந்தோஷமா மனநிறைவா வாழ்ந்தேன்.     சூர்யா கூட அடிக்கடி கேட்பார். 'ஏன் ரஞ்சு.. அப்பா அம்மா மீறி கல்யாணம் பண்ணிட்டோம். ஏதாவது பீல் பண்ணறியா. அப்படின்னா சொல்லு... காஸ்மீர் போகறதுக்கு முன்ன காம்பர்மைன்ஸ் பண்ணிட்டு போறேன்'னு சொன்னார்.         நீங்க எதுவும் சமாதானம் பண்ண வேண்டாம். அவங்களா ஒரு நாள் வருவாங்க சொன்னேன். உறவுகள் தானா நம்மளை முழுமையா மாத்தும்னு நற்பினேன்.     ஆனா எங்க வீட்லயும் அவர் வீட்லயும் சுத்தமா சேர்த்துக்கலை. நானும் உடனே கன்சீவ் ஆகிட்டேன். ஒரு குழந்தை பிறந்தா எல்லா உறவும் வரும்னு சொல்வாங்க. ஒருவேளை வாயும் வயிறுமா இருந்தா வீட்டுக்கு முன்ன போனா சேர்த்துப்பாங்கனு கூட போனேன். வாசல் கதவை அடைச்சி நாயை விட்டு துரத்த பார்த்தாங்க. நான் வளர்த்த நாய் என்னை துரத்தலை நானா வந்துட்டேன்.  சூர்யாவும்

மதிப்பிற்குரிய பெண்மை...

நிமிர்ந்த நடை வேண்டாம்குனிந்தே செல் நேர்பார்வை பார்க்காதே இமையை தாழ்த்து உதடு இழுத்து புன்னகைக்காதே வாய்க்கு பூட்டிடு சுட்டுவிரல் நீட்டி நியாயம் பேசாதே சுடுதண்ணீர் கொதிக்கும் அடுதலறை கவனி இடை தெரியும் உடை சேலையென்றாலும் இழுத்து போர்வையாய் போர்த்திக் கொள் தந்தை தனயன் அடுத்து தாலி கட்டியவனின் பாதசுவடின் அச்சில் கால் பதி இப்படி இப்படி சென்று நீ வாழ்ந்தாலும் இன்னல் என்று வரும் சமயம் உலகம் உன்னை தூற்ற தான் செய்யும் மதிப்பிற்குரிய பெண்மை மண்டியிட்டு அடங்கும் வரை...                       - பிரவீணா தங்கராஜ்.

காதலென்றால்...

படம்
விழிகளில் தொலைத்து இதயத்தில் அடைத்து நேச முகம் மலர்ந்து இருவருக்கும் ஒற்றை ரசனை பகிர்ந்து நெடு நேர பிதற்றல் பேச்சில் ஒன்றுமில்லை என்றாலும் சுவாரஸ்யத்துக்கு பச்சனையின்றி கணநேர சந்திப்புக்கு கால் கடுக்க காத்திருந்து காதல் என்றே பெயரிட நேரமில்லை எனக்கு மணத்தில் இணைந்து இறுகிய முகத்தோடு உனக்கும் எனக்கும் ரசனைகள் வேறுப்பட்டு பிடித்த பிடிக்காத எல்லாம் ஏற்று கொஞ்சம் கொஞ்சம் கெஞ்சல் கொஞ்சலோடு பஞ்சணையில் முகம் சிவந்து வருடங்கள் பல கடந்து வாழம் சமயம் சிறு சிறு சண்டை முகதூக்கம்  நீண்ட நேர ஊடலுக்கு பின் ஒரு வித கை அழைப்பில்நீ அழைக்க உன் நெஞ்சில் அடைக்கலமாகும் என் மனம் இதற்கு பெயரும் காதலென்றால்.... மறுப்பாயா?                                                                         - வீணா ராஜ்.