Posts

Showing posts from June, 2023

பஞ்ச தந்திரம்-16

பஞ்ச தந்திரம்-16     ஆறு மாத காலங்கள் கடந்தது.              திரிஷ்யா பள்ளி வாளாகத்தில் அவளது குழந்தைக்காக காத்திருந்தாள்.     கோர்ட்டில் உதயிடம் அன்னையிடம் இருக்க போகின்றாயா? தந்தையிடம் இருக்க போகின்றாயா? என்று கேட்டதற்கு மழலை குரலில் "எங்கப்பா கூட" என்று கூறினான்.    அவ்விடத்திலேயே திரிஷ்யா உடைந்து போனவளாய் சுருண்டாள்.      கோர்ட்டில் தீர்ப்பு கூறும் போது மயக்கத்தில் ஆழ்ந்திருக்க, வெளியே வரும் போது தந்தையின் கைவளைவில் இருந்தான்.          கடைசியாக அருகே சென்று பேச முயன்றவளிடம், "ஐ ஹேட் மம்மி. நீ எனக்கு வேண்டாம்" என்று கூறி தந்தையை கண்டான் பாலகன்.       தந்தை கூறியதை அப்படியே ஒப்பித்தாயிற்றா என்று சரிபார்த்து கொண்டார்கள்.            'அம்மா' என்ற அருகதை அற்றவளாக மாற்றிவிட்டார்களே என்று பரிதவிக்க, "அம்மா வாங்க போகலாம். உங்களோட சுதந்திர நாளை கொண்டாடலாம்" என்ற தனுஜா குரலால் உயிர்பெற்றாள்.      "வர்றேன் டா குட்டி" என்று மகிழ்ச்சி பொங்க கூறி "என்ன பார்க்கற பெத்த குழந்தையை நல்லவனா வளர்க்கறது பெரிய விஷயம். அதை விட பெறாத குழந்தையை பெத்த குழந்த

பஞ்ச தந்திரம்-15

பஞ்ச தந்திரம்-15     மஞ்சரியோ அந்த பெரிய வீட்டில் ஹாலில் அமர்ந்து, "ஏன் பேசக்கூடாது. நீங்க இல்லைனா நான் நேத்தே கடல்ல விழுந்து செத்து பிணமா மிதந்திருப்பேன் தானே?     உண்மையில சாகப்போற எனக்கு இது மறுஜென்மம்.      முன்ன அன்பான மனைவியா, அப்பாவியான அம்மாவா இருந்துட்டேன்.    இப்ப இனி உங்களோட வாழ்ந்து நல்ல மனிஷியா இருக்க போறேன். இதுவரை நான் நல்லதுனோ உதவினோ செய்ததில்லை. பிறந்த நாள், கல்யாண நாள் என்றால் ஆசிரமத்துக்கு பணம் தந்திருக்கோம். சாப்பாடு போட்டிருக்கோம். ஆனா அதெல்லாம் காசிருக்கறவன் யாரும் செய்வாங்க. இனி நான் வாழறது தான் நான் எப்படிப்பட்டவள்னு காட்டும்.     சொந்த பேரன் தப்பு பண்ணியிருந்தும், தப்பை தப்புனு சொன்னவளா இருந்துக்கறேன். இரத்த பந்தம், பாசம்னு முடங்கலை. சொத்து பத்துனு பார்க்கறவங்களை உதாசினம்படுத்தி, என் பேரனால பாதிக்கப்பட்டவளை நான் சப்போர்ட் பண்ணி வாழ்வேன்." என்று உரைக்க சட்டென நைனிகா பாட்டியை இறுக அணைத்தாள்.     "பாட்டிம்மா... நிஜம் தானே. எனக்கு அன்பு செலுத்தி, கூடவே இருப்பிங்களா? நான் தப்பு செய்தா அதட்டணும். அதே நேரம் என் நேரத்தை பகிர்ந்துக்கணும்" என்று கன்னம

பஞ்ச தந்திரம்-14

பஞ்ச தந்திரம்-14     திரிஷ்யா "கன்சீவா இருக்கியா?" என்று பதறினாள்.    "நல்ல வேளை அந்த கெட்டது எதுவும் நிகழலை. அதுவரை கடவுள் இருக்கான்." என்று ரஞ்சனா கண்ணை துடைத்தாள்.     "செக்கப்ல என்ன வந்துச்சு." என்று மஞ்சரி கேட்டதும், "எயிட்*ஸ்... ஆங். நான் நாட்களை எண்ணிட்டு இருக்கேன். இது செகண்ட் ஸ்டேஜ்.   பயப்பட வேண்டாம். இது தொடுவதால பரவாது. பழகறதால பரவாது.    ஆனாலும் நான் இனியும் தனுஜாவோட வாழ்க்கையில அதிக நாள் இருக்க முடியாது. தள்ளிப்போகணும். நான் இல்லாம அவ வாழணும்.     நானும் தனுஜாவும் இருந்தப்பவே என் லைப் சூன்யமா போச்சு. நானும் இல்லாம என் குழந்தை தனியா இந்த சமூகத்துல எப்படி இருக்கப் போறாளோனு பயம் தினம் தினம் சாகடிக்குது.     இந்த இரண்டு நாளா நல்ல ஆசிரமத்தை தேடிட்டு இருந்தேன். எதச்சையமா உங்களோட ஆக்டிவிட்டிஸ் சரியில்லைனு மனசுக்கு தோன்றுச்சு.     அதனால தான் தள்ளியிருந்து கவனிச்சேன்.    தனுஜாவிடம் தெரியாதவங்க மாதிரி ஒரு விளையாட்டு விளையாடுவோம்னு பேசி அவளை தனியா உட்கார வச்சேன்.     என்ன தான் தனியா உட்கார்ந்து நடிச்சாலும் அவளுக்கு என் முகம் பார்த்து பார்

பஞ்ச தந்திரம்-13

பஞ்ச தந்திரம்-13     சூர்யா வந்தப் பிறகு அன்றைய இரவு ரொம்பவே ஹாப்பியா இருந்தோம்.         எங்களுக்கான வாழ்க்கை ஒளிமையமா தெரிந்தது. மிலிட்டரிக்கு நேரம் முடியற வரை அவரும் சும்மா தானே வீட்ல இருந்தார். இனிக்க இனிக்க தினமும் தேன் நிலவு தான்.       ஒரு பெண் எந்தளவு சந்தோஷமா வாழணுமோ அந்தளவு ரொம்ப சந்தோஷமா மனநிறைவா வாழ்ந்தேன்.     சூர்யா கூட அடிக்கடி கேட்பார். 'ஏன் ரஞ்சு.. அப்பா அம்மா மீறி கல்யாணம் பண்ணிட்டோம். ஏதாவது பீல் பண்ணறியா. அப்படின்னா சொல்லு... காஸ்மீர் போகறதுக்கு முன்ன காம்பர்மைன்ஸ் பண்ணிட்டு போறேன்'னு சொன்னார்.         நீங்க எதுவும் சமாதானம் பண்ண வேண்டாம். அவங்களா ஒரு நாள் வருவாங்க சொன்னேன். உறவுகள் தானா நம்மளை முழுமையா மாத்தும்னு நற்பினேன்.     ஆனா எங்க வீட்லயும் அவர் வீட்லயும் சுத்தமா சேர்த்துக்கலை. நானும் உடனே கன்சீவ் ஆகிட்டேன். ஒரு குழந்தை பிறந்தா எல்லா உறவும் வரும்னு சொல்வாங்க. ஒருவேளை வாயும் வயிறுமா இருந்தா வீட்டுக்கு முன்ன போனா சேர்த்துப்பாங்கனு கூட போனேன். வாசல் கதவை அடைச்சி நாயை விட்டு துரத்த பார்த்தாங்க. நான் வளர்த்த நாய் என்னை துரத்தலை நானா வந்துட்டேன்.  சூர்யாவும்

பஞ்ச தந்திரம்-12

  பஞ்சதந்திரம்-12    தனுஜாவை ரஞ்சனா மகள் என்று நைனிகா கூற மஞ்சரி திரிஷ்யா ஒரே சேர ரஞ்சனாவை பார்த்தனர்.     "ஒரு பொய்யை பல முறை சொன்னா அது உண்மையாகிடாது. பொய்க்கும் உண்மைக்கும் அதை சொல்லறவங்களாள சின்ன வித்தியாசம் இருக்கு. அது நல்லங்க சொல்லற பொய், கெட்டவங்க சொல்லற பொய்.    கெட்டவங்க சொல்லற பொய் நிஜம் மாதிரி இருக்கும். அந்தளவு பெர்பாமன்ஸில் வெளுத்து கட்டுவாங்க. ஆனா நல்லவங்க சொல்லற பொய்யில், ஒரு தள்ளாட்டம் இருக்கும். நல்லவங்க அச்சோ பொய் சொல்லிட்டோமே என்ற குற்றவுணர்வோட பரிதவிப்பாங்க.   நீங்க அடிக்கடி தனுஜாவை பார்த்து பரிதவிக்கிற தாய் பாசத்தை போல." என்று நைனிகா அழுத்தமாய் தனுஜா ரஞ்சனா மகளென்று உறுதியாக கூறினாள்.    "ஒரு குழந்தை சாப்பிடாம இருந்தா அதோட முகத்தை வச்சி யாராயிருந்தாலும் சொல்வாங்க பரிதவிப்பாங்க. அதற்கு பெயர் தாய்மை தான். ஆனா பெண்களுக்குண்டான சிறப்பிருக்குற தாய்மை." என்று பூசிமொழுகினாள்.    நைனிகாவோ தன் தலையெழுத்தே அவலமாக இருக்க, இந்நொடி மறந்தவளாக, "உண்மை தான். ஆனா நான் அந்த பரிதவிப்பை மட்டும் வச்சி சொல்லலை.   நைனிகா அவளை பத்திபேசறப்ப அப்பாவை தெரியாது

பஞ்ச தந்திரம்-11

 பஞ்ச தந்திரம்-11       நைனிகாவோ பொறுமையாய் எழுந்து வந்தாள்.    "இப்ப எதுக்கு அந்த பாட்டியை கேள்வி கேட்கறிங்க. அவங்களுக்கு எப்படி தருணோட ஆக்டிவிட்டிஸ் தெரியும்.     நம்மளோட ஒரு நாள் மனம் விட்டு பேசியிருக்காங்க. கடலில் சாக போனவங்க. அவங்களுக்குனு அன்பான உறவு இல்லைனு அப்படியிருக்க....    தருணோட பழகியிருக்கேன். செல்பிஷ்... ஓவரா ப்ளார்ட் பண்ணுவான்.     ஆட்டிடியூட் காட்டுவான். இந்த ஆட்டிடியூட் ஆக்டிங்ல தான் விழுந்துட்டேன்." என்று வருந்தினாள்.      "சாயந்திரம் நேர்ல தருணை அடிச்சி ஏன் இப்படி நடந்தேனு கேட்க இருந்தேன் டா. சத்தியமா என் பேரன் என்றதால உனக்கு அநியாயமா எதுவும் செய்ய மாட்டேன்.      எப்பவும் கிராணினு கொஞ்சி பேசி காலை சுத்தினவனோட மனசு இந்தளவு வக்கிரம் இருக்கும்னு தெரியாது.      இன்னிக்கு தானே அவன் இப்படி மோ...சமா.." என்று வாய் பொத்தி அழுதார்.      மஞ்சரி அழவும் நைனிகா அவரருகே வந்து "மாத்திரை சாப்பிட்டிங்களா இல்லையா? உடம்புக்கு முடியாம போகப்போகுது. முதல்ல டேப்ளட் போடுங்க" என்று உத்தரவிட்டாள்.     "நான் வாழ்ந்து என்ன பண்ண போறேன். என் குடும்பமே சுயநலத்துல