தீவிகை அவள் வரையனல் அவன்-23
🪔🔥-23 அதிகாலை என்றுமில்லாத மகிழ்வு பொங்க எழுந்தாள். இத்தனை நாள் தேக்கி வைத்த வலி, பாரம் போனதன் விளைவாக இருக்கும். நேற்று பழைய ஆருவோடு இசைந்தது மனம் என்று குத்தாட்டம் போட அதே புத்துணர்வோடு எழுந்து குளித்து முடித்து தன் கையால் ஆருக்கு காபி தயாரிக்க சென்றாள். வெளியே நியூஸ் பேப்பரை விசிறி கிடக்க அதை எடுத்து தட்டில் வைத்து காபியை எடுத்து வைத்தவள். மற்ற பாலை ஆப் செய்ய காத்திருந்தாள். ஆரவை எழுப்பி விட்டது சந்துருவின் போன் அழைப்பு. எடுத்து காதில் வைத்து சவகாசமாக "என்னடா...?" என்றதும் சந்துரு அப்பக்கம், "டேய் சம்யு அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். நேற்று மண்டப வாசலில் காரிலே மயங்கி இருந்தார். அத்தை பார்த்துட்டு அவங்க ஒர்க் பண்ணற ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்காங்க. சம்யுவுக்கு கொஞ்சம் பதமா சொல்லி கூட்டிட்டு வா." என்றான். "என்னடா எல்லாரையும் ஒன்று சேர்த்து வைக்கிறதா நினைப்பா. இங்க பாரு என்னை பொருத்தவரை அந்தாளு எப்பவோ இறந்துட்டார். அவர் நடிப்பார் அதை பார்க்க நான் ஒன்றும் கேனயன் இல்லை. ஏற்கனவே இது மாதிரி பிளான் போட்டுட்டார் வைடா..." என்று