Posts

Showing posts from March, 2021

தீவிகை அவள் வரையனல் அவன்-23

Image
  🪔🔥-23       அதிகாலை என்றுமில்லாத மகிழ்வு பொங்க எழுந்தாள். இத்தனை நாள் தேக்கி வைத்த வலி, பாரம் போனதன் விளைவாக இருக்கும்.        நேற்று பழைய ஆருவோடு இசைந்தது மனம் என்று குத்தாட்டம் போட அதே புத்துணர்வோடு எழுந்து குளித்து முடித்து தன் கையால் ஆருக்கு காபி தயாரிக்க சென்றாள்.      வெளியே நியூஸ் பேப்பரை விசிறி கிடக்க அதை எடுத்து தட்டில் வைத்து காபியை எடுத்து வைத்தவள். மற்ற பாலை ஆப் செய்ய காத்திருந்தாள்.      ஆரவை எழுப்பி விட்டது சந்துருவின் போன் அழைப்பு.      எடுத்து காதில் வைத்து சவகாசமாக "என்னடா...?" என்றதும் சந்துரு அப்பக்கம், "டேய் சம்யு அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். நேற்று மண்டப வாசலில் காரிலே மயங்கி இருந்தார். அத்தை பார்த்துட்டு அவங்க ஒர்க் பண்ணற ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்காங்க. சம்யுவுக்கு கொஞ்சம் பதமா சொல்லி கூட்டிட்டு வா." என்றான்.       "என்னடா எல்லாரையும் ஒன்று சேர்த்து வைக்கிறதா நினைப்பா. இங்க பாரு என்னை பொருத்தவரை அந்தாளு எப்பவோ இறந்துட்டார். அவர் நடிப்பார் அதை பார்க்க நான் ஒன்றும் கேனயன் இல்லை. ஏற்கனவே இது மாதிரி பிளான் போட்டுட்டார் வைடா..." என்று

சிரமமில்லமல் சில கொலைகள்-6

Image
🩸-6  ஆரோல் அங்கே துர் ஆவியினை ஓட்டும் பாஸ்டர் வீட்டில் பெற்றவரோடு சென்று தனக்கு நடந்தவையும், அவர்களுக்கு நடந்தவைகளையும் சொல்லி, தங்களுக்கு ஏன் அவ்வாறு தோன்றுகின்றதென கேட்க, பாஸ்டரோ ''இது ஒரு ஜென்மத்தின் தொடர்புகளாக இருப்பின் தங்கள் செய்த பாவ புண்ணிய கணக்கில் கடந்த ஜென்மங்களில் ஏதேனும் தவறு செய்து அதன் காரணமாக தோன்றலாம்.  ''கடந்த காலத்தின் நடந்தவை என்ன என்பது நான் அறிய இயலாதவை. வேண்டுமெனில் உங்களுக்கு பாதுகாப்பு மந்திர ஜெப கயிரை தருகின்றேன். அதை அணிந்து கொள்ளுங்கள் பெரிய பாதர் வெளியூர் சென்றிருக்க அவர் வந்தபின்ன கேட்டுக்கலாம். முடிந்தால் போன ஜென்மத்தின் பாவங்களுக்கு ஒரு மன்னிப்பு கோரி ஒரு பிரேயர் செய்து கொள்வோம். பழி தீர்க்க வெறியோடு இருக்கும் அந்த ஆன்மா ஒரு வேளை மனம் இறங்கலாம்'' என்றே முடித்திட ஜார்ஜ் மேரி ஆரோல் மூவரோடு ஒரு சின்ன பிரேயர் வைத்து மண்டியிட்டு வணங்கி ஜெபித்தனர்.  கண்கள் மூடி இருக்க சிறிது நேரம் ஜெபித்தனர். அதில் யவனரதியாக மெர்லின் இளவரசி தோரணையில் கோவிலின் முன் அமர்ந்து எதையோ பருக, சில நொடிகளில் மெர்லின் அதாவது யவனரதி மயங்கி தள்ளாடினாள்

தீவிகை அவள் வரையனல் அவன்-22

Image
  🪔🔥-22     சாப்பிட அமர்கையில் அந்நிகழ்வு தோன்ற தான் செய்தது. அதனை மறக்க முனைந்து அவளை காண யுக்தா பாதி சாப்பாட்டை வைத்ததும் நகர்த்தி வைக்க அங்கே பரிமாறப்பட்டவை எல்லாமே அன்று உண்ட அதே வகைகள்.     ஆரவ் யுக்தா கண்கள் சேர்ந்து தங்கள் பழைய நினைவை அசைப்போட்டது.     ஊட்டி சென்ற முதல் நாள் மதியம் அளவுக்கு அதிகமாகவே யுக்தா தட்டில் உணவு அதிகமாகயிருக்க, "ஆரு... எனக்கு இது அதிகம். நிறைய சாதம் வேஸ்ட் ஆகிடும்" என்று சொல்லவும்,       "நாம ஷேர் பண்ணிக்கலாம்." என்றவன் யுக்தாவின் இதழில் இருந்து உதிர்ந்த உணவோடு சேர்த்து சாப்பிட்டாரன்.    ஒரு தட்டில் காதலர்கள் உண்டார்கள். ஆரவ் அவனாக எடுத்து ஊட்டவும் யுக்தா கண்கள் பனித்தது.      "சந்தோஷமா இருக்கேன் ஆரு. அம்மா கையில் சாப்பிட்ட திருப்தி. உன்னிடம் கிடைத்து இருக்கு. லவ் யூ ஆரு." என்று நெஞ்சில் சாய்ந்தவள் கண்களை ஆரவ் துடைத்து விட்டான்.        இன்றும் அதே நினைவோடு கண்கள் பனிக்க, ஆரவோ கையை உதறி எழுந்துக் கொண்டான்.     யுக்தா இம்முறை கூடவே எழுந்துக் கொள்ளாமல் இருக்க, ஆரவ் தான் இழுப்புக்கு வராது நின்றான்.       அங்கே ச

தீவிகை அவள் வரையனல் அவன்-21

Image
🪔🔥-21    தன்னை வார்த்தையில் அறைந்து சென்ற உணர்வில் நின்றான் ஆரவ். யுக்தா பேசியது அத்தனையும் உண்மை. அவளை காயப்படுத்தி நான் மகிழும் அளவிற்கு குணம் கெட்டவன் அல்ல. ஆனாலும் ஏன் இப்படி பணத்தை அவள் மேல் வீசி அப்படி நடந்துக் கொண்டேன்.      சுவாமிநாதன் சம்யுக்தா மேல் எனக்கு கோபம் இருக்கு. அதற்காக சம்யுவிடம் நான் நடக்கும் முறை என்ன? அவளை நேற்று அடைந்து என் மனதின் வலியை மறைக்க அவளிடமே தஞ்சமானேன். காலையில் அவளிடம் காயப்படுத்தும் விதமாக நடக்கின்றேன். இது நான் அல்ல... நான் நிதானமாக யோசிப்பவன் ஆயிற்றே. நான் ஜனனியை மணக்க இருந்த நேரத்திலும் தெளிவாக நின்றேன். ஆனால் தற்போது  முரணாக நடப்பது என்றால் நான் இன்னமும் தெளிவாகாத கட்டத்தில் நிற்கின்றேன்.      யோசித்தவனின் நினைவு கலப்பதற்காகவே குளித்து முடித்து வந்திருந்தாள் யுக்தா. டவலை தன் உடலால் மூடி இருந்தாலும், அவளின் தோள்வளைவில் ஆரவின் பற்தடம் கண்டு தானாக அவனுமே குளித்து அலுவலகம் கிளம்பினான்.        யுக்தா சுபாங்கினியிடம் வந்து மகள் போல உறவாட, சுபாங்கினி அவளை சாப்பிட்டு முடித்த பின், "ஆரவ் உன்னை காயப்படுத்தறானா மா?"     "அதெ

சிரமமில்லாமல் சில கொலைகள்-5

Image
  🩸-5    ஆரோல் தன் தாய் மேரி தந்தை ஜார்ஜிடம் ''மெர்லினா சுத்தி ஏதோ அசம்பாவிதம் நடக்குது டாட். புரியுதா இல்லையா? அன்னிக்கு எனக்கு இன்னிக்கு லிசா அப்பாவுக்கு ஏற்பட்டு இருக்கு'' என்று ஆங்கிலத்தில் புலம்ப,         ''அன்னிக்கு உனக்கு என்றால் அப்போ இதுக்கு முன்ன உனக்கு ஏதாவது விபரீதமா ஏதாவது நடந்து இருக்கா ?'' என்று மேரி கேட்க ஆரோல் தயங்கினான்.    ஆம் லிசாவிடம் தவறாக நடக்க சென்றேன் அப்போ இப்படி விபரிதமாக ஒரு குரல் கேட்டது. அதுவும் என்னை கொல்ல செய்வதாக என்று உலர முடியுமா தன் தாயிடம்.          ''நோ மாம். அது அது சாகறதுக்கு முன்ன லிசா இப்படி தான் நிழல் தூரத்துது, கருப்பு புகை வாள் வச்சி மிரட்டுறதா சொல்வா'' என்றே சொல்லவும்,           மேரி ஜார்ஜிடம், ''அன்னிக்கு லிசா அம்மா புதைக்கிறப்பா நமக்கு கண்ணில் தோன்றியதே அந்த நிகழ்ச்சி அது ஏன் நமக்கு தோன்றனும். நமக்கும் அந்த பொண்ணுக்கும் என்ன தொடர்பு? ஆனா அன்னிக்கு நாம இருவரும் சேர்ந்து புதைகிற மாதிரி காட்சி வந்துச்சு. எனக்கு தான் அப்படி தோணுச்சு என்று உங்களிடம் சொன்னா உங்களுக்கும்

தீவிகை அவள் வரையனல் அவன்-20

Image
  🪔🔥-20         இன்று சம்யுக்தாவிற்கு பிறந்த நாள் எப்படி மறந்தேன்? வருடம் வருடம் நினைவு வந்து கொல்லுமே... இன்று எப்படி மறந்தேன்... என்றவன் அன்னை தன்னையே பார்ப்பதை உணர்ந்து சோபாவில் அமர்ந்தான்.         மனமோ அவளுக்கு பிறந்த நாளுக்கு பரிசு தரவில்லையா? புது டிரஸ் வாங்கிதராத காதலன். ஒரு கேக்கை கூட வாங்க வக்கில்லாத கணவனா? என்று உள்ளம் கேள்வி கேட்டதும் எழுந்தான்.      அட சொன்னதும் எழுந்து கிப்ட் வாங்க போறியா ஆரவ் என்று அவனின் மூளை நக்கலாக கேட்டதும் தலையை தாங்கி அமர்ந்த நிலையிலே இமையை இறுக மூடினான்.       சம்யுக்தா அதனை கண்டு மனம் வருந்தினாள். ஆரவ் மனதிற்கும் மூளைக்கும் இடையில் சிக்கி தவிப்பதை நன்றாகவே அவளுக்கு புரிந்தது. அவன் தாடை பற்றி திருப்பி 'என்ன ஆரு பிரச்சனை மனசுவிட்டு பேசு டா.' என்று கேட்க துடித்தாள்.       அவளை விட அவள் மனம் புரிந்தவன் ஆரவ் தான். அவன் அறியாததா? அவனாக வருவான் என்று எண்ணியிருக்க, சுபாங்கினி "வாங்க மாப்பிள்ளை" என்று அழைப்பது கேட்டு யுக்தா திரும்ப ஆரவும் நிமிர்ந்தான்.     கையில் கேக் அட்டைப்பெட்டி எடுத்து "பிறந்த நாள் வாழ்த்துக்கள் சம்யு" என்

தீவிகை அவள் வரையனல் அவன் -19

Image
தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥-19     இரண்டு தினம் ஒரு அறையில் விலகி செல்லும் ஞாயிறு- திங்கள் (சூரியன்-சந்திரன்)  போல எட்டி நின்றனர்.        யுக்தா அறையில் இருக்கின்றாள் என்றாலே ஆரவ் அப்பக்கமே செல்லாது இருந்தான்.           அவனுக்கு எதையும் மறக்கவோ மன்னிக்கவோ மனமில்லாது இயங்கினான்.  கூடுதலாக அலுவலகம் சென்று பணியை மேற்கொள்ள, அவனுக்கு கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆரவிற்கு மணப்பெண் மாயமானதை பகிரங்கமாக சிரித்து பேச, மனதால் நொடிந்து போனான்.      ஒர் ஆண்மகனை அதுவும் மணமேடை வரை வந்து மணப்பெண் மாயமாகி திருமணம் நின்று இருந்தால் அவன் ஆண்மகனா என்ற கேள்வி தான் பெரிதாக எழும்பும். இவனுக்கு என்ன குறையோ அந்த பெண் அப்படி ஓடினாள். இந்த பேச்சு தான் விழும். அன்றே மண்டபத்தில் கிசுகிசுப்பாக எழுந்த குரல் இது தானோ? ஆரவ் இருந்த மனநிலைக்கு தான் மற்றவையை காதில் வாங்கவில்லை. அவனுக்கு சம்யுக்தா மயங்கியதில் பயந்து போனான். யுக்தாவை மணந்தாலும் கேலி பேச்சு என்னவோ குறையவே இல்லை. இதோ தான் கடந்து வந்த பிறகும் சலசலத்து கொண்டு இருக்கின்றதே.      கேசவிற்கே கொஞ்சம் கடினமாக இருந்தது.      வெளியே வந்தவன்

சிரமமில்லாமல் சில கொலைகள் -4

Image
  🩸-4      ஆண்டர்சன் தன் வீட்டில் தனித்து இருக்க, அந்த சில்லென்ற காற்று கூட ஏதோ திகிலை தந்தது. கதவுகள் ஜன்னல்கள் மூடி வைத்து தனதறையில் படுக்க முனைந்தார்.     எங்கிருந்தோ காற்று புயல் போல வீச கதவு ஜன்னல்கள் படபடவென அடிக்கும் ஓசை வரவும் தன் பூட்டி வைத்த கதவு ஜன்னலை தான் பார்த்தான்.          பூட்டியவை ஓசையெழுப்பியது எண்ணி குழம்பியவனுக்குள் ஆண்டர்சன் என்ற ஆத்மாவும்  இல்லாது புகழேந்தி என்ற மானிடனின் ஆத்மா எண்ணங்களும் கலவையாக வந்து நின்றது.       காற்றின் வேகமாக அடிப்பது போன்ற மாயையை தர ஆனால் கதவும் சாற்றி இருக்க, இம்முறை பொருட்கள் எல்லாம் மேலெழும்பி ஆண்டர்சனை சுற்றி சுற்றி வட்டமிட்டது.       தன் மீது மோதிடுமோ என்று ஆண்டர்சன் நகர அவனை உரசாது வீட்டின் பொருட்கள் எல்லாம் மோதுவது போன்று வந்து வந்து விலகியது. அதிலும் அந்த கத்தி வந்து கழுத்தில் நிற்க ஆண்டர்சன் தொண்டைக்குழி ஏறியிறங்கி கண்கள் அச்சத்தில் திகைக்க, யாரோ காலிங் பெல் அழுத்தம் கேட்க, ஹாலுக்கு ஓடினான்.      கதவு வெறுமென சாற்றியிருந்திட ஆண்டர்சனை காண வந்த பாஸ்டர் ஒருவர் மாடியில் இருந்து வரும் வழியில் விலகி விலகி எதையோ மோதுவ

தீவிகை அவள் வரையனல் அவன் -18

Image
தீவிகை அவள் வரையனல் அவன் -18 ஆரவ் அறைக்கு வந்து உறங்க முற்படும் நேரம் மெத்தை காலியாக இருந்தது. ஒரு நிமிடம் சுவாமிநாதனோடு சென்றிருப்பாளோ என்று எண்ணி மெத்தையருகே இதயம் நின்ற உணர்வில் அமர்ந்தான்.     அடுத்த நொடி மெத்தையின் கீழ்புறம் தரையில் படுத்திருந்த யுக்தாவை கண்டபின் சீரான மூச்சு காற்று தேகத்தை தழுவியது எனலாம்.      அவளை அள்ளி மெத்தையில் படுக்க வைக்க கைகள் பரபரத்தாலும், உள்ளுக்குள் இருந்த சினம், கசப்பை விழுங்கிய இதயம், அச்செய்கைக்கு தடையாக நின்றது.       கைகளை தலைக்கு தோதாக வைத்து இமை மூடி உறங்க முயன்றான்.      அதே அடுத்த நாள் காலை அலாரம் வைத்து எழுந்தவள் குளித்து முடித்து,  காபி போட்டு பணியை மேற்கொள்ள, சுபாங்கினி தயக்கத்தோடு வாங்கி பருகினாள்.        "எதுக்கு இவ்வளவு விரைவா எழுந்துக்கணும். நான் நேற்று சொன்னது வேற காரணத்திற்காக. அதுக்கு தான் மன்னிப்பு கேட்டுட்டேனே. போய் தூங்கு... காலை கவனி..." என்று இதமாக சொல்லவும் யுக்தா மனம் குளிர்ந்தது.     "பரவாயில்லை அத்தை... பழகிக்கறேன்." என்று அடுக்களையை சுத்தமிட, ஆரவ் வந்து நின்றான்.      "நீ சந்துரு கூட போக