சிரமமில்லாமல் சில கொலைகள்-5

 


🩸-5

   ஆரோல் தன் தாய் மேரி தந்தை ஜார்ஜிடம் ''மெர்லினா சுத்தி ஏதோ அசம்பாவிதம் நடக்குது டாட். புரியுதா இல்லையா? அன்னிக்கு எனக்கு இன்னிக்கு லிசா அப்பாவுக்கு ஏற்பட்டு இருக்கு'' என்று ஆங்கிலத்தில் புலம்ப, 

       ''அன்னிக்கு உனக்கு என்றால் அப்போ இதுக்கு முன்ன உனக்கு ஏதாவது விபரீதமா ஏதாவது நடந்து இருக்கா ?'' என்று மேரி கேட்க ஆரோல் தயங்கினான். 

  ஆம் லிசாவிடம் தவறாக நடக்க சென்றேன் அப்போ இப்படி விபரிதமாக ஒரு குரல் கேட்டது. அதுவும் என்னை கொல்ல செய்வதாக என்று உலர முடியுமா தன் தாயிடம்.  

       ''நோ மாம். அது அது சாகறதுக்கு முன்ன லிசா இப்படி தான் நிழல் தூரத்துது, கருப்பு புகை வாள் வச்சி மிரட்டுறதா சொல்வா'' என்றே சொல்லவும், 

         மேரி ஜார்ஜிடம், ''அன்னிக்கு லிசா அம்மா புதைக்கிறப்பா நமக்கு கண்ணில் தோன்றியதே அந்த நிகழ்ச்சி அது ஏன் நமக்கு தோன்றனும். நமக்கும் அந்த பொண்ணுக்கும் என்ன தொடர்பு? ஆனா அன்னிக்கு நாம இருவரும் சேர்ந்து புதைகிற மாதிரி காட்சி வந்துச்சு. எனக்கு தான் அப்படி தோணுச்சு என்று உங்களிடம் சொன்னா உங்களுக்கும் அப்படி தான் காட்சியா வந்ததுனு சொன்னிங்க. அது ஏன் நமக்கு வந்துச்சு? இதுல அந்த மெர்லின் மேல நமக்கு அப்படி ஒரு கோவம் எட்டி பார்த்தது. என்னவோ நம்மளை அவ தான் புதை குழியில் தள்ளி விட்டது போல.'' என்று மேரி கூறிய அடுத்த நொடி, 

      ''மா நமக்கும் மெர்லின் ஃபேமிலிகும் ஏதாவது சம்மந்தம் இருக்கா? எனக்கு அவளை கோவிலுக்குள் பார்த்தது போல தோணுது'' என்றான் ஆங்கிலத்தில் ஆரோல். 

         ''என்ன கோவிலா இங்க என்ன இருக்கு? நாம கிறிஸ்டியன் ஆரோல். வாரம் தவறாமா சர்ச் போறவங்க.'' என்று ஜார்ஜ் சொல்லவும், ஆரோலுக்கு படிக்கட்டில் மெர்லினை தமிழ் கலாச்சார உடையில் பார்த்தேனே என்றதை சொல்ல யோசித்தான். 

      லிசாவை இச்சை முகர சென்றதை சொல்ல இயலாது தான். ஆனால் மெர்லினாவை படிக்கட்டு கரையில் கோவிலில் கண்டதை சொல்லலாமே என்று வாயை திறந்தான்.

           மேரியிடமும் ஜார்ஜிடமும் ''நாம கிறிஸ்டியன் தான் ஆனா அன்னிக்கு அப்படி தான் வினோதமா காட்சி வந்துச்சு என்ன பண்ண? கோவிலில் அவளை படிக்கட்டில் பார்த்தேன், பேச முயன்றதும் ஒரு ஆண் தடுத்து தன்னை எச்சரித்தான் என்றே கூற, மேரி தான் என்னவோ யோசனையில் சென்றார். 

        ஜார்ஜ் தான் ''என்னவோ நாளைக்கு சர்ச் போயி ஒரு ஜபம் செய்து ஹோலி வாட்டர் வங்கிடுவோம்'' என்றே நகர்ந்தார். 

         ஆண்டர்சன் சர்ச்சிலே உறங்கினான். ஆனால் பாதி இரவில் தட்டு தடுமாறி எழுந்து இடங்களை ஆராய, அது தங்கள் வீடு போன்று தோன்றவும்,  பயத்தில் வேகமாக ஓடினான். 

         எதிரே பாஸ்டர் வந்து பிடிக்க அவரை இளவழகன் என்றே எண்ணி தள்ளிவிட, பாஸ்டர் அங்கு இருந்த மேஜையில் மோதி மயங்கி சரிந்தார். 

        ஆண்டர்சன் அதிவேகமாக தங்கள் வீட்டுக்கே வருவது அறியாது சித்தம் கலங்கி இருக்க, இளவழகன் அவன் வருகை அறிந்து கதவை திறந்து காத்திருந்தான். 

           ஆண்டர்சன் வந்து கதவை சாற்றி முடித்து மூச்சு வாங்க நிற்க, நீரை பருகினான். இனி நிம்மதியாக இருப்போம் என்ற நிமிடம், இளவழகனின் தலை மட்டும் முன் வந்து, ''என்ன மாமனே மீண்டும் வந்து விட்டாய், நல்லதே... பித்தம் கலங்கி சித்தம் சூடேறறும் வகையில் உமக்கு ஒரு செய்தி உண்டு. இனி நீ மீண்டும் மீண்டு வர வேண்டாம், உமக்கு மோட்சம் தனது விடுகின்றேன். இனி ஒரு பிறவி பிறக்க மாட்டாய்.'' என்றே கூற உடலாற்ற தலை வந்து பேச வழி தெரியாது மாடியில் ஓடினான். அங்கே ஒரு உருவம் நிற்க, அதனிடம் உதவி கேட்கும் வகையில் காலை பிடித்து, ''என்னை காப்பாற்றுங்க, அது பேய்... என்னை கொல்ல வருது.'' என்றே கதற,

     ''பேயை என்ன செய்த ஆண்டர்சன்? அது உன்னை ஏன் சுற்றுது?'' என்றே குரல் கேட்க, அது பாஸ்டர் குரலாக எண்ணி மன்னிப்பு கேட்கும் பொருட்டு, 

       ''நான் போன இரேண்டு ஜென்மத்திலும் கொலைக்கு உறுதுணையாக இருந்துட்டேன். யவனராதி சாகடிக்க கூட்டு சேரந்துட்டேன். அதுக்கு இளவழகன் பழி தீர்க்க வந்து இருக்கான்.'' என்றே கூற, 

       ''கொலைக்கு கூட்டு அல்ல மாமனே.. துரோகத்திற்கு கூட்டு சேர்ந்தாய். அதன் பலனே... ஜென்மம் தொடர அனுபவிக்கின்றாய். இனி உன் நிழலும் பூமிக்கு வேண்டாம், என்றவன் குனிந்து இருந்த ஆண்டர்சனய் தீண்ட, அதே நேரம் ஆண்டர்சன் நிமிர, தலையற்ற உருவத்தில் இளவழகன் தலை வந்து சேர்ந்த அடுத்த நிமிடம், இளவழகன் தீண்டலில் உடல் நெருப்பிலிட்ட புழுவாக துடித்தான். 

       ஆண்டர்சன் உடல் நெருப்பு பற்றியது போல கனலாக மாறியது. 

          இளவழகன் கருப்பு உருவம் புகையாக மாறி மேகத்தினூள் சென்று படிய கரிக்கட்டையாக ஆண்டர்சன் உடல் அங்கே கிடந்தது. 

             அடுத்த நாள் பாஸ்டர் வந்து  பார்க்க நெருப்பில் கருகிய உடலை தான் கண்டார். தன் நெற்றியில் சிலுவையை போட்டு விட்டு அங்கே போலீசுக்கும் தகவல் தந்தார். 

               மகளின்  கொலையில் , மனைவியின் இயற்கை இறப்பில், தாங்கி கொள்ள இயலாது தற்கொலை செய்து கொண்டதாக பாஸ்டர் வாக்கு மூலம் தர, அதனை ஆரோல் பார்த்து கொண்டிருந்தான். 

      மேரி ஜார்ஜ் ஆரோல் மூவரும் பிரட் டோஸ்ட் சாப்பிட அமர்ந்தவர்கள் இதனை கண்டு தங்கள் உணவினை பார்க்க அதிலோ இரத்த துளிகள் தடவி இருக்க கண்டு தூர எறிய, மூவரும் அதிர்ந்தார்கள். 

          டிவியில் ஆண்டர்சன் உடலை எடுத்து செல்வதை காட்ட, பாஸ்டர் பேசி முடிக்க டிவியை அணைத்தான் ஆரோல். ஆனால் அங்கே கருப்பு திரையாக மாறாமல் வெள்ளை திரையாக காட்சி அளித்து, கருப்பு புகையில் வந்து இளவழகன் தலையாக மாறி, ''தயாராகுங்கள் போருக்கு அல்ல. பிணமாக'' என்றே மறைந்தது. 

         ''ஆரோல் டிவி ஆப் பண்ண சொன்னேன் டா'' என்றே மேரி அலற,  

         ''மாம் அது தானா வந்து போச்சு.'' என்றே ஆரோல் சொல்ல, 

        ''இனி தாமதிக்க வேண்டாம். நாம என்ன ஏது என்று அறிந்து இதுக்கு முடிவு கட்டணும்.'' என்றே ஜார்ஜ் கூறவும் ஆரோல் மனம் இந்த நிகழ்வுக்கு எல்லாம் மெர்லின் காரணமா இருப்பாளோ என்றவன் மனம் அவளை தேடி அவள் வீட்டிற்கு போக முடிவெடுத்தான்.

    இங்கே சித்தப்பா உடல் தகனத்திற்கு வருவதாக சொன்ன மெர்லினாவை தபித்தாள் தடுத்து வீட்டிலே இருக்க சொன்னாள்.

      "மாம்... நான் வர வேண்டாமா? என்று கேட்க தபித்தாள் வேண்டாமென்று தலையசைத்து சென்றார்.

      கிறிஸ்டோபர் தபித்தாள் இருவரும் தங்கை கணவரை வழியனுப்பி ஜெபம் முடித்து அங்கே நிற்க, அதே நேரம் ஜார்ஜ் மற்றும் மேரி வந்து ஹோலி வாட்டர் வாங்கி கொண்டு பாஸ்டரிடம், முன் ஜென்மம் இருக்குமா? அப்படி இருந்தால் பழி பாவம் மனிதர்களை துரத்துமா? என்றே கேள்வியாக கேட்க,

         ''மனிதனின் பிறவியானது போன பிறவியின் பாவ புண்ணிய செயல் மூலமாகவே தான் இந்த பிறவியில் நமக்கு கிடைக்கும் நன்மை தீமையும், இதில் முன் ஜென்மம் என்பது இதிலே இருப்பதாக அறியப்படுகின்றது. பழி பாவம் இருக்கின்றதா? என்று கேட்டால்.... மனிதனின் இன்ப துன்ப நிகழ்வு வைத்து தான் முடிவு எடுத்து கொள்ளப்படுகின்றது'' என்று சொற்பொழிவு ஆற்ற,

         ''அது இல்லை பாஸ்டர் அது வந்து.. எப்படி சொல்றது?'' என்றே ஜார்ஜ் தயங்க,

        ''உயிர் போன பின்ன தயங்க முடியுமா? நீங்க இருங்க நான் கேட்கின்றேன்.'' என்று மேரி முன் வந்து, தங்களுக்கும் தனது மைந்தனுக்கும் கனவில் துரத்தும் நிகழ்வாக சொல்லி முடித்தாள். 

      பாஸ்டர்.. இந்துவா போன ஜென்மம் வாழ்ந்தது போல தோன்றுதே அது தப்பு தானே?'' அதனால தான்... என்றே இழுக்க, 

    ''இங்கு கடவுள் ஒருவர் தான் மேரி. மக்கள் வாழும் இடங்களை பொறுத்து தான் கடவுள்கள் வேறுபடுகின்றனர். உண்மையான இறைகொண்டவன், எந்த கடவுளையும் வேறுபடுத்தி பார்க்க மாட்டான். துர்ஆவி சுற்றி இருப்பதாக தோன்றினால் அதற்கு மனதூய்மை படுத்தி கொள்ளுங்கள். நல்ல விஷயம் தேடி சென்று செய்யுங்கள். மனமானது தன்னால் தீய எண்ணங்களை கலைந்து விடும்'' என்றே ஆங்கிலத்தில் சொல்லி முடிக்க அவரிடம் ஆசீர்வாதம் பெற்று மேரி ஜார்ஜ் வெளியே வந்தார்கள்.

           கிறிஸ்டோபர் மற்றும் தபித்தாள் யோசனையோடு பார்த்து அவர்களும் சென்றனர்.

       இங்கு அதற்குள் மெர்லினை தேடி வந்த ஆரோல் ''டெல் மீ தெ ட்ரூ மெர்லின். சம் ஒன் நியர் ஹியர்'' என்றே கேட்க மெர்லின் யோசித்து யோசித்து தனக்கு அப்படி உன்னை பார்த்தது போல தோன்றவில்லை என்றே கூற, ஆரோல் நம்ப மறுத்தான்.

         ஆரோல் மெர்லின் பேசி கொண்டு இருப்பதை இளவழகன் கையை கட்டி கொண்டு அங்கே நின்றது.

          ஆரோல் மெர்லினின் ''ஐ டோன் நோ ஆரோல்'' என்ற அதே பதிலை கேட்டு சலித்து திரும்பினான்.

            எதிர் இருக்கையில் அமர்ந்து கண்களை மூட பாவாடை தாவணியில் தலை நிறைய மல்லி பூ அணிந்து குளத்தின் நீரில்  கால் அலம்பியவாறு மீன்களுக்கு பொரியை தூவும் பெண்ணவளின் முகமாக மெர்லினாக தெரிய, அங்கே தனக்கும் மெர்லினுக்கும் இடையே ஒரு ஆண் மகன் வந்து நின்றான்.

              பாதம் முதல் உச்சி தொட்டு முகம் காண, ''நாழி ஆகுது அம்மா அங்கே கத்திண்டு இருக்கா. நீ என்ன பண்ற'' என்றே ஒருவன் கேட்க ''சர்வேஷ்வரா.. நீயாவது செத்த இங்க வாயேன் டா'' என்றே அழைக்கும் குரல் கேட்க, அந்த ஆடவன் செல்ல அங்கே கருப்பு உருவம் அபரஞ்சி கண்டது போதும் உமது பணியினை கவனிக்க செல்.'' என்றது அவ்வுருவம்.

       திடுக்கிட்டு எழுந்தான் ஆரோல். அது அந்த கருப்பு உருவம்... என்றே திரும்ப மெர்லின் அருகே இன்றும் இருக்க கண்டான்.

          திடுக்கிட்டு எழுந்து பார்க்க அதே அபரஞ்சி தான். நீயாக விட்டு சென்றால் உனது உயிர் பிழைத்து கொள்ளும். இல்லையேல் பாகீரதி நேர்ந்தவைகள் எல்லாம் உனக்கும் நேரும். உமது வம்சத்தில் நீ மட்டுமாவது இக்காலத்தில் உயிருடன் இருக்க பாருங்கள்'' என்றே கர்ஜிக்க ஆரோல் விழுந்தெடுத்து ஓடினான்.

        ''ஆரோல் என்னாச்சு... எதுக்கு இப்படி ஓடறான்'' என்றே யோசிக்க தபித்தாள் கிறிஸ்டோபர் எதிரே அதே கேள்வியோடு கேட்டு முடிக்க,

        ''தெரியலை மாம்'' என்றே சொல்லி சோகமாக அமர்ந்தாள்.

      ''என்னை சுற்றி என்ன நடக்குது. ஐயோ தொடர் இறப்பு கேட்டு ஒரு மாதிரி இருக்கு. என்ன தான் நடந்துக்கும்?'' என்றே புலம்ப, உமக்கு எதுவும் அறியாமலே போனது தான் துர்பாக்கியம் ரதி'' என்றே கூற அங்கே மெர்லினுக்கு இளவழகன் குரல் கொஞ்சமும் செவியில் சேரவில்லை.

         ''யவனரதி என்பதை தான் மறந்தாய்..  அபரஞ்சி என்பதையாவது நினைவு உள்ளதா ?'' என்றே கேட்க, ''சர்வேஷ்?'' என்றே மெர்லின் உச்சரித்து மயங்கி சரிந்தாள்.

            இங்கே தலயை பிடித்து கொண்டு சர்வேஷ் கோவத்தோடு அமர்ந்து இருந்தான். ஐயோ அந்த கருப்பு உருவம் எல்லாரையும் போட்டு தள்ளுது சாந்தனு. அது கொலை தற்கொலை இயற்கை மரணம் இல்லை மூன்று பேரும் மாயமா அந்த பேய் தான் கொன்றுடுச்சு?'' என்றே சாந்தனுவிடம் கத்தி கொண்டு இருந்தவன் உடனே தன்னை யாரோ சர்வேஷ் என்று அழைக்க உணர்ந்து, அவ அவ அபரஞ்சி குரல். ஐயோ அவளுக்கு என்னவோ ஆச்சு குரல் சோர்ந்து கேட்டுச்சு'' என்றே சர்வேஷ் கத்தி புலம்ப சாந்தனு சோபாவில் துண்டை தலையில் போட்டு பாவமாக ஒன்றும் விளங்காமல் வேடிக்கை பார்த்தான்.  

-🩸🩸🩸🩸🩸

-பிரவீணா தங்கராஜ்.

Comments

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு