👉தலைப்பு --இலக்கியத்தில் இளைஞர்களின் ஈடுபாடு ஆயிரம் மொழிகள் தோன்றி மறைந்தாலும் தமிழ் மொழியினை போல இன்சுவை கொண்ட மொழி எதுவுமில்லை . அத்தகைய தமிழ் மொழியில் இலக்கியம் பெரும் பங்கு கொண்டது . அக்காலத்தில் இலக்கியம் பலரும் அறிந்தே இருந்தனர் . தற்காலத்தில் இலக்கியம் பேசும் இளைஞர்களை பார்க்கும் பார்வையே வேறு தான் . என்ன தான் ஆங்கிலம் , இந்தி , பிரெஞ்சு என்று திணித்து கற்றுக் கொண்டாலும் தமிழ் தாயை மறக்க முடியுமா ? தாய் தமிழ் இலக்கியத்தை தாலாட்டாத இளைஞர்கள் இல்லை எனலாம் . இளைஞர்கள் கருத்துப்பிழை , எழுத்துப்பிழையின்றி இலக்கியத்தில் காலூன்றவில்லை என்றாலும் கவிதை , கதை , கட்டுரை போன்ற இலக்கியம் சார்ந்தவற்றில் ஈடுபாடு கொண்டு தான் இருக்கின்றார்கள் . பாரதி அறியாத சமூகம் இல்லை . திருக்குறள் தெரியாத மனிதன் இல்லை . அப்படி யிருக்க இலக்கியத்தில் இளைஞர்கள் பங்கு உண்டே ... சங்கம் வைத்து முன்பு போல இலக்கியம் வளர்க்காவிட்டாலும் சில