Posts

Showing posts with the label பனித்தல்

பனித்தல்

Image
     பனித்தல்      மழையின் தூறல் மெல்ல மெல்ல பூமியை தொட்டு முத்தமிட முதலில் ஆசையாய் நனைந்த தளிர்மலர் நேரமெடுக்கவும் பெரிதாய் சாரலடிக்கவும் சுற்றி முற்றி பார்த்தாள். அங்கே பெரிய மரம் குடைப் போல அவை மட்டுமே இருக்க, அங்கு போய் பாதுகாப்பாய் நின்றாள்.      பள்ளியிலேயே இருந்திருக்கலாமோ? வெளியே வந்து பிறகே ஆறாவது படிக்கும் தளிரின் மூளையில் உதித்த கேள்வி இது. பள்ளிக்கூடம் விட்டு சற்று தள்ளி வந்து விட்டாளே.      அந்த பள்ளிக்கூடம் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே இருக்கும் இடைநிலை பள்ளி. அதனால் கூட்டம் உடனே கலைந்து ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடியது.    எதிரே சற்று தள்ளி நோட் புத்தகம் விற்கும் அண்ணாச்சி இருந்தார். பாதிக்கு மேல் சாரலடிக்க அதனை எடுத்து கடைக்கு உள்பக்கம் விரசாக அடிக்கினார். தளிர்மலர் இருக்கும் மரத்துக்கு எதிரில் கடையிருக்க அங்கே எழுதும் அட்டைகள் நனைவதை கண்டாள்.        தளிர்மலரோ, "அங்கிள் ரைட்டிங் பேட் நனையுது பாருங்க. சாக்லேட் எல்லாம் பாக்ஸில இருக்கு. அது மர அட்டையில செய்தது. நனைந்தா ஊறி உப்பிடும்" என்றதும் "தேங்க்ஸ் மா தேங்க்ஸ் மா" என்று அதை முதலில் எடு