Posts

Showing posts with the label அன்பு காதல் பாசம் குடும்பம் உறவு

நீ என் முதல் காதல் -19

 அத்தியாயம்-19     ஸ்ரீவினிதா லலிதா இருவரும் பேத்தி பக்கத்திலிருந்து கவனித்துக் கொண்டார்கள்.    இனி பைரவ்-தாரிகா வீட்டில் இருக்கப் போகின்றாளே என்று கொஞ்சம் கவலை இருந்தது. லலிதாவை விட ஸ்ரீவினிதாவிற்கு பெரிய கவலை. ஷண்மதி போல ஸ்ரீநிதி தனிச்சையாக வாழ ஆசைப்படுபவள். நிச்சயம் பைரவோடு தாரிகாவோடு ஒரே வீட்டில் இருப்பது எல்லாம் கஷ்டமானது. தாரிகாவாது சிலதை மகனுக்காக தம்பிக்காக விட்டுக்கொடுத்துக் கொள்வாள். மாப்பிள்ளை பைரவிடம் எதிர்பார்க்க முடியுமா?     ஷண்மதி யுகேந்திரனோடு வரவில்லையே. அவள் அவளது வீட்டில் தான் திருமணம் ஆனப்பின்னும் இருப்பேனென்று முதலிலேயே கூறிவிட்டாள். இங்கே ஸ்ரீநிதி எப்படியோ? அம்மா போல மகளும் என் வீட்லயிருப்பேன் ம்ருத்யு என்னோடு இருக்கட்டும் என்பாளோ? ஷண்மதிக்கு காரணம் இருக்கலாம்.    தாரிகா மருமகளை வந்து வந்து பார்த்து மகிழ்ந்து சென்றாள்.     ம்ருத்யுவும் அதே அறையில் அடிக்கடி ஆஜரானான்.    மதியம் போல ஸ்ரீநிதி கொஞ்சமாய் இயல்புக்கு திரும்பினாள் எனலாம்.     திருமணத்திற்கு வந்தவர்கள் ஒரளவு சென்றுவிட்டார்கள். நெருங்கிய உறவுகளோ தனி தனி அறைகள் கொடுத்து சாவியும் கொடுத்திருந்தார்கள்.     பைரவ

முதல் முதலாய் ஒரு மெல்லிய-23

Image
  💘23                       பவித்ரா இன்னும் மூன்று நாள் கழித்து கிளம்பிடுவாள் . நாளை எப்படியாவது பவித்ராவிடம் பேசி மன்னிப்புக் கேட்க வேண்டுமென கயல்விழி நினைத்தாள்.     நந்தனோ ஒரு அட்ரஸ் தந்து அங்கே பவித்ராவையும் ஈஸ்வரமூர்த்தியையும் செல்லச் சொன்னார். அந்தவூர் பவித்ராவின் உண்மையான தாய் தந்தை ஊர் என்று அங்கு சென்றப்பின் தான் அறிந்தாள்.      பவித்ராவின் சொந்த தாத்தா பவித்ராவை பார்த்து விட்டு வந்த பின் ஒரு மாதத்தில் இறந்து விட்டாரென தெரிந்துக் கொண்டாள் .       யாரும் உறவுகள் பெரிதாக இல்லை என்றாலும் செல்வம் இருந்தன. அதற்கு அந்த வீடும் வீட்டின் அமைப்பும் பறைசாற்றின. அவளது சிறு வயது குழந்தை புகைப்படம் மற்றும் அவளது தாய் தந்தையர் புகைப்படம் அவளின் தாத்தா புகைப்படமென எண்ணற்ற புகைப்படம் இருந்தன.   அதில் அவளது சிறு வயது குழந்தை புகைப்படம் மட்டும் எடுத்து கொண்டாள் , மற்ற தாய் தந்தை புகைப்படத்தை எடுக்க மனம் இல்லை. கயல் தன்னை மகளாக எண்ணவில்லை என்று நினைத்தாலும் கயல் , நந்தனை தன் தாய் தந்தையாக மனதில் நினைத்ததே காரணம்.     ஆனால் ஈஸ்வரமூர்த்தி அவராகவே பவித்ராவின் குடும்ப புகைப்படத்தை எடுத்த