முதல் முதலாய் ஒரு மெல்லிய-23

 

💘23                  


   பவித்ரா இன்னும் மூன்று நாள் கழித்து கிளம்பிடுவாள். நாளை எப்படியாவது பவித்ராவிடம் பேசி மன்னிப்புக் கேட்க வேண்டுமென கயல்விழி நினைத்தாள். 


  நந்தனோ ஒரு அட்ரஸ் தந்து அங்கே பவித்ராவையும் ஈஸ்வரமூர்த்தியையும் செல்லச் சொன்னார். அந்தவூர் பவித்ராவின் உண்மையான தாய் தந்தை ஊர் என்று அங்கு சென்றப்பின் தான் அறிந்தாள். 


   பவித்ராவின் சொந்த தாத்தா பவித்ராவை பார்த்து விட்டு வந்த பின் ஒரு மாதத்தில் இறந்து விட்டாரென தெரிந்துக் கொண்டாள் . 
    யாரும் உறவுகள் பெரிதாக இல்லை என்றாலும் செல்வம் இருந்தன. அதற்கு அந்த வீடும் வீட்டின் அமைப்பும் பறைசாற்றின. அவளது சிறு வயது குழந்தை புகைப்படம் மற்றும் அவளது தாய் தந்தையர் புகைப்படம் அவளின் தாத்தா புகைப்படமென எண்ணற்ற புகைப்படம் இருந்தன. 


அதில் அவளது சிறு வயது குழந்தை புகைப்படம் மட்டும் எடுத்து கொண்டாள், மற்ற தாய் தந்தை புகைப்படத்தை எடுக்க மனம் இல்லை. கயல் தன்னை மகளாக எண்ணவில்லை என்று நினைத்தாலும் கயல், நந்தனை தன் தாய் தந்தையாக மனதில் நினைத்ததே காரணம்.

 

  ஆனால் ஈஸ்வரமூர்த்தி அவராகவே பவித்ராவின் குடும்ப புகைப்படத்தை எடுத்துக் கொண்டார். “நந்தனுக்கு ஒரு அண்ணன் இருந்தால் இந்த புகைப்படம் நம்ம வீட்டில் தானே இருக்கும்” என்றதும் பவித்ரா உள்ளம் மகிழ்ந்தாள். 


  தங்கள் வீட்டுக்கு செல்ல பர்வதம் ரகு இருப்பதை உணர்ந்து பயப்பட்டாள். இருப்பினும் மங்கைபாட்டியின் அறையிலே தஞ்சம் புகுந்தாள்.


  அஸ்வினுக்கு இயந்திர வாழ்கை வாழ, ஆகாஷ்-சுவாதி காதலில் மூழ்கியிருந்தனர். விஸ்வநாதன் அலுவலகம் முடிந்து அவர் அழைத்து செல்லும் காரில் வீட்டிற்க்கு திரும்புகையில் ஆகாஷ்-சுவாதி இருவரும் ஐஸ்கிரீம் பார்லரில் இருந்து வெளியே வருவதை கவனித்தார்.


விஸ்வநாதன் மனம் அவர்களை மனதார வாழ்த்த தான் செய்தது இருந்தும் ஆகாஷிடம் அவன் வாயிலே வர வேண்டும் என்று கொஞ்சம் விளையாட பார்த்தார்.
   ஆகாஷ் வீட்டினில் நுழைந்து சாவியை சுற்றியபடியே கீசெயின் மாட்டும் இடத்தில் வைத்து விட்டு சோபாவில் அமர்ந்து பாடலை ரசிக்க,''ராதை சுவாதிக்கு நல்ல வரன் ஒன்னு வந்து இருக்கு தவசுடர் என்னை கேட்டால் ஓகே முடிம்மா என்று சொல்லிவிட்டேன்'' என்று ஆரம்பித்தார்.


''
அப்படியாங்க நான்...'' என தயங்கி ''யாருங்க அவங்க?'' என்றாள்.


  ''உனக்கு தெரிய வாய்ப்பில்லை நாளைக்கே நிச்சயதார்த்தம் பண்ண போறாங்க சுவாதிக்கு தெரியாது நாமளும் போக போறோம்'' என்ற பேச்சினை கேட்டு ஆகாஷ் இடியே விழுந்தது போல அமர்ந்திருந்தான். 


  ''ஏங்க எனக்கு ஓர்....''


  ''நீ என்னோட அந்த ப்ளூ பைல் எங்க வைச்சே வந்து காட்டு'' என்று ராதையை இழுத்து அறைக்கு வந்து ஆகாஷ் பற்றி சொல்ல, ''நானும் அவனுக்கு முடிக்க கேட்கலாம் என்று தான் சொல்ல வந்தேன் சரி அவன் வாயால வரட்டும்'' என்று ராதையும் அவ்விளையாட்டில் கலந்தாள்.


  ஆகாஷ் அவனது அறையில் குறுக்கே நெடுக்கே நடந்தான். இந்த வீட்ல ஏன் இப்படி பண்றாங்க எனக்கு சுவாதியை கேட்க வேண்டும் என்று யாருக்கும் தோணலை. சே இப்ப என்ன பண்றது சுவாதிக்கு போன் போட்டு சொல்லலாமா? அவ என்னையே ஏதாவது பண்ணி நிறுத்த சொல்லுவா? நான் எப்படி? இந்த அஸ்வின் மாதிரி அப்பா எதிரில் பேச முடியலை. அவன் மட்டும் எப்படி தான் நேரிடையா ஹாண்டில் பண்றானோ? பேசாம அவன்கிட்டயே ஐடியா கேட்கலாமா? என்று யோசித்து அஸ்வின் ரூமை தட்டி நின்றான்.

 

  அஸ்வினோ இவன் எதுக்கு இங்க வந்து இருக்கான் என்று  பார்த்தான்.
 ''அஸ்வின் அப்பா அம்மாகிட்ட சுவாதிக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கறதா சொல்லறாங்க''


 ''வாவ் சூப்பர்ல'' என்றான் ஆகாஷ் சுவாதியை விரும்புவதை அறிந்தே.


 ''டேய் நான்... நான் அவளை விரும்பறேன் டா'' என்றான் ஆகாஷ்.


  ''ஓஹ் அதனால?''


 ''என்னடா அதனால என்று சும்மா கேட்கற எனக்கு நீ ஹெல்ப் பண்ணு''


 ''நான் காதலுக்கு சப்போர்ட் பண்றேன் ஆனா பேச எல்லாம் கூப்பிடாத. அவங்க  அவங்க லவ் அவங்களே சால்வ் பண்ணனும்'' என்று கம்ப்யூட்டரில் வேலையை பார்க்க, ''அஸ்வின் விளையாடாதே எனக்கு அப்பா எதிரில் பேச முடியலை நீ வந்து சொல்லு'' என்று இறைஞ்சினான் .


''
என்ன விளையாடறியா? ஏற்கனவே பவித்ராகிட்ட லவ் சொல்லி அவர் என்னை வில்லன் ரேஞ்சுல பார்க்கிறார். இதுல இது வேறயா?''


''
டேய் நான் உன்னை மட்டும் தான் நம்பி இருக்கேன். சீரியஸா கேட்கறேன்'' என்று உடன்பிறப்பு கெஞ்சவும் சற்று நேரம் அமைதியாக யோசித்தவன் ''அத்தை இங்க வந்தாங்களா? என்றான்.


''
இல்லை...'' என்றதும் அஸ்வின் மூளை அதிவேகமாக கணக்கிட்டது. அண்ணனிடம் திடீரென கூறும் செய்தியா இது? என்றதும் தெளிவுக்கிட்டியது.


''
அப்பாவுக்கு உன் லவ் மேட்டர் தெரிஞ்சுடுச்சு என்று நினைக்கறேன் உன் வாயால வரவைக்க ட்ரை பண்றார். அதனால நீயா சொல்லு'' என்றான்.


''
எப்படி சொல்ற?''


''
அத்தை சுவாதிக்கு மாப்பிள்ளை பார்த்தா இப்படியா கடைசி நிமிஷத்துல சொல்லுவாங்க? அதனால இது அப்பா பண்ற பூச்சாண்டித்தனம். நேர்ல போய் அப்பா எனக்கு சுவாதியை பிடிச்சு இருக்கு கட்டி வைங்க என்று சொல்லு. போடா'' என்றதும், ஆகாஷ் அப்படி இருக்குமோ என்று சிந்தித்தான்.

 

 ''நான் எப்படி டா'' என்றான் விடாமல் ''லவ் பண்ணும் போது கேட்டியா? இப்ப என்னடா கேள்வி மேல கேள்வி கேட்கற?'' என்று அதட்டினான் அண்ணனை.


''
அஸ்வின் என் நிலைமை உனக்கு வந்தா புரியும்'' என்று சோகமாய் உரைத்தான்.


 ''எனக்கு பவித்ரா ஓகே சொல்லல நேரா அவங்க அப்பாவை மீட் பண்ணி உங்க பொண்ணை விரும்பறேன் கட்டி கொடுங்க என்று சொல்லிடுவேன். ஆனா அவள் வாயால லவ் பண்றேன் கேட்கறது தான் கிக் அதுவரை வெயிட்டிங் தான்'' 


 ''டேய் அப்போ நேர்ல போய் பவித்ரா அப்பாவை கேட்பியா?'' என்று ஆகாஷ் கேட்க ''ஹ்ம்'' என்றான் சர்வ சாதாரணமாக.

 
''
நானும் அப்பாகிட்ட பேசணும் என்றா சொல்ற'' என்று மீண்டும் கேட்டான் ஆகாஷ்.


''
அது உன் பாடு. எனக்கு லவ் பண்ண தான் பிடிக்கும் அட்வைஸ் பண்ண ஐடியா கொடுக்க எல்லாம் பிடிக்காது.

  இங்கப்பாரு சுவாதி அப்பா அம்மா யாரு? நம்ம மாமா அத்தை. ஒருவேளை அவங்க நிஜமாவே வரன் பேசி பார்க்க ஏற்பாடு பண்ணினாலும் பிரச்சனையே இல்லை. அத்தை பொண்ணு டா. உனக்கு இல்லாத உரிமையா? தைரியமா பேசு போ'' என்றே மீண்டும் கம்ப்யூட்டரில் கவனம் பதிக்க, இவன் சொல்வது போல செய்யலாமா? என்று கதவை திறந்தவன் கீழே செல்ல முயல இறங்கினான்.

 

  விஸ்வநாதன் கால் மேல் கால் போட்டு நிமிர்ந்து டிவி பார்த்தவரை கண்டதும் மீண்டும் என்ன நினைத்தானோ அவனது அறைக்கே சென்று திரும்பினான் ஆகாஷ்.


-மெல்லிய பூகம்பம் தொடரும்.

  - பிரவீணா தங்கராஜ். 

Comments

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1