இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பஞ்ச தந்திரம்-13

பஞ்ச தந்திரம்-13     சூர்யா வந்தப் பிறகு அன்றைய இரவு ரொம்பவே ஹாப்பியா இருந்தோம்.         எங்களுக்கான வாழ்க்கை ஒளிமையமா தெரிந்தது. மிலிட்டரிக்கு நேரம் முடியற வரை அவரும் சும்மா தானே வீட்ல இருந்தார். இனிக்க இனிக்க தினமும் தேன் நிலவு தான்.       ஒரு பெண் எந்தளவு சந்தோஷமா வாழணுமோ அந்தளவு ரொம்ப சந்தோஷமா மனநிறைவா வாழ்ந்தேன்.     சூர்யா கூட அடிக்கடி கேட்பார். 'ஏன் ரஞ்சு.. அப்பா அம்மா மீறி கல்யாணம் பண்ணிட்டோம். ஏதாவது பீல் பண்ணறியா. அப்படின்னா சொல்லு... காஸ்மீர் போகறதுக்கு முன்ன காம்பர்மைன்ஸ் பண்ணிட்டு போறேன்'னு சொன்னார்.         நீங்க எதுவும் சமாதானம் பண்ண வேண்டாம். அவங்களா ஒரு நாள் வருவாங்க சொன்னேன். உறவுகள் தானா நம்மளை முழுமையா மாத்தும்னு நற்பினேன்.     ஆனா எங்க வீட்லயும் அவர் வீட்லயும் சுத்தமா சேர்த்துக்கலை. நானும் உடனே கன்சீவ் ஆகிட்டேன். ஒரு குழந்தை பிறந்தா எல்லா உறவும் வரும்னு சொல்வாங்க. ஒருவேளை வாயும் வயிறுமா இருந்தா வீட்டுக்கு முன்ன போனா சேர்த்துப்பாங்கனு கூட போனேன். வாசல் கதவை அடைச்சி நாயை விட்டு துரத்த பார்த்தாங்க. நான் வளர்த்த நாய் என்னை துரத்தலை நானா வந்துட்டேன்.  சூர்யாவும்

சிரமமில்லாமல் சில கொலைகள்-11

படம்
  🩸-11      அபரஞ்சி அடுத்த நாளில் கல்லூரி சென்று வந்து யோசனையில் சிக்கினாள்.    எதிர் வீட்டிலிருந்து மல்லிகா ஒடிவந்து கல்லூரி வாழ்வை பற்றி ஆவலோடு கேட்க, சர்வேஷ் அத்தனின் யோசனையை ஒதுக்கி வைத்து கல்லூரி கதைப் பற்றிப் பேசினாள்.     மாடியிலிருந்ததால் அடிக்கடி அபரஞ்சி பக்கத்து வீட்டினை எட்டிபார்க்க, மல்லிகா அதனைக் கண்டு விட்டாள்.       "ஏய் என்னப்பா... அடிக்கடி கண்ணு பக்கத்துவீட்ல அலைமோதுது." என்று விளையாட்டாய் கேட்க, "காதல் பற்றி உன் அபிப்ராயம் என்ன மல்லி?" என்றாள்.      "அடி ஆத்தி..." என்று சுற்றிமுற்றி பார்த்தாள். "யார் காதுலயாவது விழுந்தது தோலையுரிச்சி மாவடு பண்ணிடுவாங்க. என்ன நீ இப்படிக் கேட்கற..." என்றாள்.    அபரஞ்சி மல்லியை பார்த்து தலைகுனிந்தாள். கேள்வியே தவறோ... இந்த வயதில் பேசக் கூடாதவொன்று தான். கல்லூரியில் அடியெடுத்து அடுத்த நாளே கேட்டால் மல்லி தன்னைத் தவறாக எண்ண போகின்றாள். போச்சு... இனி பேச மறுப்பாளென எண்ணி பரிதவித்தாள்.    மல்லியோ அபரஞ்சியின் அத்தை வீட்டை எட்டிப் பார்த்து, "இதெல்லாம் இப்ப பேசலாமானு தெரியலை ரஞ்சி. ஆனா காதல்னா அன்பு

சிரமமில்லாமல் சில கொலைகள்-10

படம்
   🩸-10 அபரஞ்சி-சர்வேஷ்வரன் காலம்.              "ரஞ்சி... ஏய் ரஞ்சி...  இந்தா... நீ கேட்ட செம்பருத்தி பூ" என்று ஆடலரசன் அபரஞ்சியிடம் நீட்டினான்.     "அச்சோ... இப்ப தான் (சர்வேஷ்வரன்)பெரியத்தான் கொடுத்துட்டுப் போனார். நீங்க இதை மல்லிகாவிடம் கொடுக்கறிங்களா...? அவளும் கேட்டுட்டு இருந்தா..." என்று பதில் தர ஆடலரசனுக்குக் கவலையாய்ப் போனது.      "அப்படியா.... சரி நீயே கொடுத்துடு." என்று அவளிடமே நீட்ட, எதிர் வீட்டு மல்லிகா ஒடி வந்தாள். "செம்பருத்தி எனக்கா... தேங்க்ஸ் டி ரஞ்சி." என்று பெற்றுக் கொண்டு தங்கள் வீட்டு வாசலில் மார்கழி மாதத்தை வரவேற்ற வண்ண கோலங்களை மேலும் அழகுப்படுத்த சாணத்தை உருட்டி நடுநயமாக வைத்து அதில் பூசணிப்பூவை வைத்துவிட்டு மஞ்சள் பிள்ளையாரை வைத்து அதன் மேலே செம்பருத்தி சொருகி முடித்தாள்.      எல்லாம் முடித்து எட்டி நின்று அழகு பார்த்தாள் அபரஞ்சி. அவளின் மஞ்சள் முகமும், ஜிமிக்கி கம்பலும், சின்னதாய் கீறிட்டு வைத்த விபூதியும் அவளை மார்கழி மாதத்தில் ஆண்டாளாகவே தோற்றுவித்தது  சர்வேஷ்வரனுக்கு.    பக்கத்து வீட்டு மாடியில் சூரியனை வ

தீவிகை அவள் வரையனல் அவன்-30

படம்
தீவிகை வரையனல் -30      ஆரவை அணைத்து இருந்தவள் கண்கள் நீரை உகுத்தி முடிக்க அதன் ஈரம் நெஞ்சை துளைக்க அவளை நிமிர்த்தி, "போதும் யுக்தா... எனக்காக நீ பட்டது. இனி உன் ஆரு எப்பவும் இந்த கண்ணீரை பார்க்க கூடாதென்று" கூறி முடிக்க ஹாலில் சத்தம் கேட்கவும் சந்தோஷமாக எழுந்தான்.      சுபாங்கினி அத்தை வைஷ்ணவி மருத்துவமனையில் இருக்க, இங்க யார் வந்திருப்பது? ஒரு வேளை சந்துரு அண்ணாவாக இருக்குமோ...? என வெளியே வந்து எட்டி பார்த்தாள்.        "என்னாச்சு மாமா... வியர்வையா இருக்கு.. உட்காருங்க." என்று நீரை எடுத்து கொடுத்தான். ஆம் சுவாமிநாதன் தான்.       "அதுவொன்னுமில்லை மாப்பிள்ளை வர்ற வழியில் சம்யுக்தா மாதிரி ஒரு பொண்ணை பார்ததேன் அதனால அவளை பின் தொடர்ந்தேன். ஆனா சம்யுக்தா இல்லை... அது வேற யாரோ..." என்று சோர்ந்து போய் பதில் தந்தார்.      தந்தை கணவன் இருவரும் உரையாடுவதை கண்டு உவகை பெருக்க பேச்சற்று கதவில் சாய்ந்து நின்றாள்.        "மாமா நமக்கு விடிவு பிறந்தாச்சு. இனி யாரையும் தேடி போக வேண்டாம் என் கள்ளிச்செடி என்னை தேடி வந்துட்டா..." என்றதும்       "என்ன

தீவிகை அவள் வரையனல் அவன்-29

படம்
தீவிகை வரையனல்-29         ஒரு வாரம் முடிந்திருக்க அன்றிரவு உணவு முடித்து படுக்கும் பொழுது எப்பவும் போல அசைந்து கொடுக்கும் சம்யுவின் உயிர் அன்று அசைவதாக இல்லை. அவளும் இரவு குளித்து முடித்து இருக்க அதன் சுகத்திலும் அசதியிலும் விரைவில் உறங்கிட செய்தாள்.      அடுத்த நாள் காலையில் என்றும் ஏழு மணிக்கு அசைந்து கொடுத்து தன்னிருப்பை சொல்லும் அந்த குட்டி உயிர் அசையாது இருக்க பணிக்கு செல்லும் மும்முரத்தில் இருந்தாள்.       நூலக அலுவலகத்தில் வந்த பிறகு ஒன்பது மணி முதல் பத்து மணிவரையும் அசைந்து கொடுக்கும் தன் கரு அப்படியே இருக்க, அதன் பின்னே சம்யுக்தாவுக்கு நேற்று இரவிலிருந்து தன் சிசு அசைந்து கொடுக்காததை உணர்ந்தாள்.         தன் வயிற்றை தொட்டுப் பார்த்தவள் அசைவு இல்லாமல் போக, பயந்து போனாள். தனக்கென இருக்கும் ஒருயிர் அதன் இருப்பும் தன்னால் அறியாது போவதால் பதினொன்று மணிக்கு வீட்டுக்கு சென்று முருகேஸ்வரி பாட்டியிடம் தெரிவித்தாள்.      பாட்டியும் பயந்து போக அரசு மருத்துவமனைக்கு சென்று பார்க்க, அங்கே அன்று பார்த்து கூட்டம் அதிகமாக இருந்தது. எப்பவும் க்யூவில் நின்று பார்க்கும் சம்யுவுக்கு இன்

தீவிகை அவள் வரையனல் அவன் -28

படம்
🪔🔥-28     அந்த குடிசை வீட்டில் சம்யு இருப்பதே குமட்டலை கொடுக்கலாம். அவள் வாழ்ந்த இடத்தோடு ஒப்பிட்டு பார்த்தால்... ஆனால் இன்று மசக்கை வாந்தியோடு சேர்ந்து போராடினாள்.         "ஏன் தாயி இப்படி கஷ்டப்படணும். நீ உன்னோட வூட்டுக்காரரிடம் ஜீவனம்சமோ, இல்லை பணமோ கூட வாங்கி நல்லா இருக்கலாமே மா." என்று முருகேஸ்வரி தண்ணீரை நீட்டியபடி கொடுத்தாள்.      கார்ப்ரேஷன் தண்ணீர் மேலும் குமட்ட தான் செய்தது. பில்டரில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அருந்திய சம்யுக்தாவுக்கு கஷ்டமாக இருந்தது.         எதையும் பழக வேண்டுமென்ற திடம் வந்துவிட, குமட்டினாலும் பருக துவங்கினாள்.       அடுத்த நாள் முருகேஸ்வரி தன் கை காசு போட்டு இரண்டு நாள் கேன் தண்ணீர் வாங்கி போட்டாள். அது அவர்கள் கைக்கு மீறிய செலவு என்றாலும் அந்த பாட்டி செய்து விட்டாள். அடுத்த நாள் சமைக்க எதுவும் இல்லாமல் தவிக்க இரசமும் வேர்க்கடலை துவையலும் வைத்து கொடுக்க, இரசித்து உண்டாள்.      முருகேஸ்வரி தட்டு கழுவ வெளியே சென்ற நேரம் பக்கத்து வீட்டில் இருந்த பழனிம்மாவும் வந்து நிற்க அந்தம்மாவிடம் பணம் கடனாக கேட்க அது உள்ளிருந்த சம்யுக்தா காதிலும்

தீவிகை அவள் வரையனல் அவன்-27

படம்
🪔🔥-27      தன் அத்தை சுபாங்கினி அல்லது வைஷ்ணவி இருப்பார்கள் என்று ஆவலாக வந்த சம்யுக்தாவுக்கு அங்கே கதவு பூட்டிய நிலையிலும், அங்கே இருவர் நிற்பதும் கண்டு விழித்தாள்.        "நீ இன்னமும் சாகலையா... இங்க தான் சுத்திட்டு இருக்கியா.. ஜனனியை பேசி வளைத்து பணம் காட்டி ஆரவ் தம்பியை கட்டிக்க விடாம பண்ணி இருந்தார் உங்கப்பா. நீ என்ன பண்ண வந்திருக்க... ஆரவ் தம்பி தான் தாலியறுத்து வெளியே அனுப்பிட்டாரே... அப்படியே போய் தொலைய வேண்டியது தானே... எதுக்கு இப்படி வந்து நிற்கற... ஓ... ஜுவனம்சம் வாங்க வந்தியா... இப்ப தான் ஜனனி ஆரவ் நல்லபடியா பழக ஆரம்பித்து இருக்காங்க.           என் பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கு. இப்ப மாறுபடியும் வந்து எந்த தகிடுத்தத்தம் பண்ணாதே..." என்று பொரிந்து தள்ளினார் ஜனனி அம்மா.      "ஜனனிக்கு கல்யாணமா...? யாரோட...? நீங்க யாரு....எதுக்கு என் மேல கோபப்படறீங்க" என்று வினாவை தொடுத்தாள் சம்யுக்தா.      "நல்லா நடிக்கிற வேற யாரேட ஆரவ் தம்பி கூட தான். போ... நிம்மதியா வாழ விடு அவரை." என்று கத்தவும் சம்யுக்தா தடுமாறி போனாள்.       "அம்மா

தீவிகை அவள் வரையனல் அவன்-26

படம்
🪔🔥-26    சந்துரு ஆரவ் அலுவலகம் வந்து சேர்ந்தான்.      "என்னடா... சாக மருந்து எல்லாம் வாங்கி ரெடி பண்ணிட்டியாமே... செத்து தொலைய வேண்டியது தானே. எங்க வாழ்க்கையும் சூனியமாகட்டும்.      இதுக்கு மாறி மாறி லவ் பண்ணி தொலைச்சீங்களா... அவயென்னடானா எங்க இருக்காயென தெரியலை. நீ இந்த உலகத்தை விட்டே ஓட பார்க்கற...       காதல்னா எந்த பிரச்சைனை வந்தாலும் சேர்ந்து தானே சரிபண்ணணும். நீங்க மட்டும் ஏன்டா அதை பெரிசுப்படுத்திட்டே இருக்கீங்க." என்று வெடித்தான்.      "இல்லைடா... நான் தப்பு செய்தா கூட என் யுக்தா என்னை விட்டு போகமாட்டா... எனக்கு அது நல்லா தெரியும்." ஆரவ் கூறினான்.      "அப்ப மேடம் எங்க போனாங்க. சொல்ல முடியுமா....? முடியாதுல்ல.. உன் தங்கை கன்சீவா இருக்கா... ஆனா தினமும் ஆரவ் அண்ணா பாவம். பார்க்கவே கஷ்டமா இருக்கு. அண்ணி கண்டுபிடி சந்துரு சொல்லிட்டே இருக்கா. கன்சீவா இருக்கறவளை என்னால சர்தோஷமா பார்த்துக்க முடியலைடா. எப்ப பாரு உன் நினைவு, உன் தோற்றம்... அண்ணா எப்படி இருப்பார் தெரியுமானு எத்தனை முறை சொல்வா தெரியுமா. உங்க நிம்மதி போய் எங்க நிம்மதியும் கெடுக்கற டா.

சிரமமில்லாமல் சில கொலைகள்-9

படம்
🩸-9     சர்வேஷ் தன் கை அடிக்கடி சில்லிட்டு இருப்பதை உணர்ந்தான்.     என்னவோ தனக்கு இது புதுவுணர்வாக இருக்க, நிம்மதியும் கொண்டது மனம்.      சாந்தனு ஓரபார்வையோடு அவனருகே வந்தமர்ந்தான்.        "என்னடா... ஒரு மார்க்கமா இருக்க? கொலை செய்ய இன்னமும் எத்தனை பேர் இருக்காங்க?" என்று கேட்டு முடித்தான்.      "நீ தான் பேலன்ஸ்..." என்று சர்வேஷ் கோபமாக சொல்லி முடித்தான்.    "பின்ன என்னடா... ஒன்றா... இரண்டா... கொலைகள். லிசா அவ பேரண்ட்ஸ். அப்பறம் இரண்டு பேர் ஒன்னா போட்டு தள்ளியது. சேர்த்தா ஐந்து பேர் ஆகுது. ஆமா... லிசாவை டச் பண்ண பார்த்ததா சொன்னியே ஆடலரசன்.... அவனை கொன்றுட்டியா?" என்று கேட்கவும்,        "பச் அவனும் என்ன ஆனானு தெரியலை பா. ஏய்.. என்ன சொன்ன.... நான் கொன்றேனா... அடப்பாவி... போற வர்ற நேரம் யார் காதிலாவது விழுந்தது சந்தேக கேஸ்னு உள்ள தள்ளிட போறாங்க டா. நான் பச்சை மண். அந்த கருப்புபுகை இளவழகன் தான் கொல்லறான். நீ என்ன என்னவோ நானா போய் கொல்லற மாதிரி பேசற. பார்த்து டா... பீச்ல எவனாவது மப்டி போலிஸ் இருக்க போறாங்க." என்று பயந்தான் சர்வேஷ்.