சிரமமில்லாமல் சில கொலைகள்-11
🩸-11 அபரஞ்சி அடுத்த நாளில் கல்லூரி சென்று வந்து யோசனையில் சிக்கினாள். எதிர் வீட்டிலிருந்து மல்லிகா ஒடிவந்து கல்லூரி வாழ்வை பற்றி ஆவலோடு கேட்க, சர்வேஷ் அத்தனின் யோசனையை ஒதுக்கி வைத்து கல்லூரி கதைப் பற்றிப் பேசினாள். மாடியிலிருந்ததால் அடிக்கடி அபரஞ்சி பக்கத்து வீட்டினை எட்டிபார்க்க, மல்லிகா அதனைக் கண்டு விட்டாள். "ஏய் என்னப்பா... அடிக்கடி கண்ணு பக்கத்துவீட்ல அலைமோதுது." என்று விளையாட்டாய் கேட்க, "காதல் பற்றி உன் அபிப்ராயம் என்ன மல்லி?" என்றாள். "அடி ஆத்தி..." என்று சுற்றிமுற்றி பார்த்தாள். "யார் காதுலயாவது விழுந்தது தோலையுரிச்சி மாவடு பண்ணிடுவாங்க. என்ன நீ இப்படிக் கேட்கற..." என்றாள். அபரஞ்சி மல்லியை பார்த்து தலைகுனிந்தாள். கேள்வியே தவறோ... இந்த வயதில் பேசக் கூடாதவொன்று தான். கல்லூரியில் அடியெடுத்து அடுத்த நாளே கேட்டால் மல்லி தன்னைத் தவறாக எண்ண போகின்றாள். போச்சு... இனி பேச மறுப்பாளென எண்ணி பரிதவித்தாள். மல்லியோ அபரஞ்சியின் அத்தை வீட்டை எட்டிப் பார்த்து, "இதெல்லாம் இப்ப பேசலாமானு தெரியலை ரஞ்சி. ஆனா காதல்னா அன்பு