தீவிகை அவள் வரையனல் அவன்-30

தீவிகை வரையனல் -30

     ஆரவை அணைத்து இருந்தவள் கண்கள் நீரை உகுத்தி முடிக்க அதன் ஈரம் நெஞ்சை துளைக்க அவளை நிமிர்த்தி, "போதும் யுக்தா... எனக்காக நீ பட்டது. இனி உன் ஆரு எப்பவும் இந்த கண்ணீரை பார்க்க கூடாதென்று" கூறி முடிக்க ஹாலில் சத்தம் கேட்கவும் சந்தோஷமாக எழுந்தான். 

    சுபாங்கினி அத்தை வைஷ்ணவி மருத்துவமனையில் இருக்க, இங்க யார் வந்திருப்பது? ஒரு வேளை சந்துரு அண்ணாவாக இருக்குமோ...? என வெளியே வந்து எட்டி பார்த்தாள். 

      "என்னாச்சு மாமா... வியர்வையா இருக்கு.. உட்காருங்க." என்று நீரை எடுத்து கொடுத்தான். ஆம் சுவாமிநாதன் தான். 

     "அதுவொன்னுமில்லை மாப்பிள்ளை வர்ற வழியில் சம்யுக்தா மாதிரி ஒரு பொண்ணை பார்ததேன் அதனால அவளை பின் தொடர்ந்தேன். ஆனா சம்யுக்தா இல்லை... அது வேற யாரோ..." என்று சோர்ந்து போய் பதில் தந்தார். 

    தந்தை கணவன் இருவரும் உரையாடுவதை கண்டு உவகை பெருக்க பேச்சற்று கதவில் சாய்ந்து நின்றாள். 

      "மாமா நமக்கு விடிவு பிறந்தாச்சு. இனி யாரையும் தேடி போக வேண்டாம் என் கள்ளிச்செடி என்னை தேடி வந்துட்டா..." என்றதும் 

     "என்ன மாப்பிள்ளை சொல்றிங்க என் மகள் எங்க?" என்று கேட்டதும் ஆரவ் பார்வை சென்ற திசையில் திரும்ப அதே நேரம் "அப்பா..." என்று ஓடி வர முயன்றாள்.

     "யுக்தா... பார்த்து" என்று ஆரவ் வேகநடையிட்டு வந்தவன் அவளின் தற்போதைய நிலைமையை சுட்டிக் காட்டினான். 

    மேடிட்ட நிலவாக தன் மகள் வர பூரித்து நின்றார்.

      தன் மகளிடம் மன்னிப்பையே முதலில் வேண்டினார். "எப்பவும் நீ கேட்டதை வாங்கி தருவேன். இந்த முறை ஆரவை விட உசத்தியா கொடுக்கணும்னு நினைத்து ஈகோ ஸ்டேடஸ் பார்த்து நல்ல மனதை பார்க்கலை மா. அது காலம் கடந்து என் மகளே என் அன்பை உதாசினம் செய்தப்ப, நான் செய்த தவறோட வீரியம் என் கண்ணுக்கு பெரிதாகப்பட்டது. என்னை மன்னிச்சுடு மா." என்று பாதம் தொட செல்ல அவர் அப்படி தான் செய்வாரென ஆரவ் அவரை பிடித்து அமர வைத்தான். 

    "மாமா நான் மறந்துட்டேன். அப்படின்னா என் யுக்தாவும் மன்னிச்சுடுவா. இனி முடிந்ததை பேசாதீங்க. அவ இருவுயிரா வந்திருக்கா." என்று சேர்ந்து ஆசிர்வாதம் வாங்க சென்றான். 

   கூடவே யுக்தாவை பார்த்து விழுமாறு பணித்தான். 

     மாற்றம் பெற்றவை பல இருக்குமென அறிந்திருந்தால் யுக்தா. ஆனாலும் இப்படி தந்தையும் கணவனும் உறவை பகிரும் அளவுக்கு எண்ணியிருக்கவில்லை. 

        தந்தையிடம் பழைய சம்யுவாகவும், கணவன் ஆருவிடம் பழைய யுக்தாவாகவும் பேசி கலைத்து போகும் அளவிற்கு தன் ஆறு மாத வாழ்வின் இன்னல்களையும், மறுபக்கத்தினையும் விவரித்து முடித்தாள். 

    சுவாமிநாதனோடு பேசிக் கொண்டிருந்த நேரம், ஆரவ் உணவை சமைத்து முடித்தபடி கேட்டிக்கொண்டே முடித்து விட்டான். 

    சில நேரம் வலியும், சில நேரம் கோபமும் வந்தாலும் அதனை அடக்கிக் கொண்டு யுக்தாவுக்கு இன்னல் தருவித்தவர்களை எல்லாம்  மனதிலே குறித்துக் கொண்டான்.

     மணக்க மணக்க ஆரவ் சமைத்ததை அவனாக ஊட்டி விட தந்தை சுவாமிநாதன் மகளின் ஆனந்தம் எதிலென்று கண்கூடாக பார்த்து கொண்டார். 

      "அப்பா எப்படி நம்ம வீட்ல ஆரு. அத்தை வைஷ்ணவி எப்படி?" என்றதும், 

     "அதும்மா.. நான்" என்று சுவாமிநாதன் கூற ஆரம்பிக்க, 

     "மாமா லென்தி டயலாக் நானே சொல்லிக்கறேன் இருங்க." என்று அவரை தடுத்துவிட்டு யுக்தாவுக்கு ஊட்டி கொண்டே ஆரம்பித்தான். 

     "அதுவொன்னுமில்லை யுக்தா. அன்னிக்கு மாமாவுக்கு சீரியஸ்னு அம்மா போன் செய்தப்ப நாம இங்கே சண்டை போட்டோம். நீ மருத்துவமனை வந்துட்டதா நான் நினைச்சேன். ஆனா, நான் அதுக்கு பிறகு இங்க வந்தா நீ இல்லை. உங்கப்பா சிகிச்சை எடுக்க விடாம தடுத்தார். ஏற்கனவே கான்சியஸ் கொண்டு வரவே நேரம் எடுத்துக்கிட்டு நைட் எல்லாம் கண் விழிக்க கூட செய்யலை. 

     காலையில் கண் விழிக்க  பேச முடியாம அம்மாவிடம்  மன்னிப்பு கேட்டு உன்னை பார்க்க கெஞ்சியிருக்கார். இதுல அடுத்தக்கட்ட சிகிச்சை பார்க்கவும் விடலை. உன்னிடமும் என்னிடமும் மன்னிப்பு கேட்டா தான் சிகிச்சைனு  பிடிவாதம். நான் வந்ததும் பேசி உன்னை பார்க்க கேட்டார். 

     ரொம்ப கஷ்டமா போச்சு. என் அப்பா வயசு காலில் விழவும் மனசு சட்டுனு என்னையே திட்டிடுச்சு. ஏன் ஆரவ் அம்மா பேசியதை புரிந்து அன்றைக்கே மறந்த, இவரும் தன் மகள் பெரிய இடம் தானே ஆசைப்பட்டு உன்னை ஒதுக்கினார். அதுல என்ன தப்பு. சின்னதா ஸ்டேடஸ் பார்க்கிறவனே என்னவென்னவோ ஜாதகம் சரியில்லை தோஷம் அது இதுன்னு சொல்லி காதலுக்கு சின்ன சின்ன எதிரியா மாறி போறாங்க. உன் அப்பா அவர் ரேஞ்சுக்கு செய்தார். அம்மாவே அவருக்கு இரவு கூடயிருந்து பார்த்துக்கிட்டப்ப, நானும் உறவு முக்கியம் என்ற விதத்தில் யோசித்தேன். 
   
   அதுவும் உடல்நலமில்லாத ஒருவரிடம் ஜம்பம் பேச, என் வீரமும் மறுத்திடுச்சு. உடல்நலம் தேறி வந்தவரிடம் உன்னை காணோம்னு சொல்ல முடியலை. ஆனா வேற வழி... செய்த பாவம் தான் இப்படி ஆகிடுச்சுனு அழுதார். 

    தனியா உங்க வீட்ல இருக்க வேண்டாம்னு நான் தான் இங்கே கூட்டிட்டு வந்துட்டேன். 

    உன் பெயரை போட்டு தேடினா எல்லாருக்கும் விஷயம் தெரியவரும். அதான் நான் அப்படி போடலை. கள்ளிச்செடினு போட்டேன். நீ அதை பார்க்கலை என்பதே இப்ப தான் புரியுது. 

     "மருத்துவமனையிலே ஒரு மாசம் மயக்கத்தில இருந்துட்டேன் ஆரவ். எழுந்து வந்தப்ப அப்பா வீடும் பூட்டி இருக்கு. நீயும் ஜனனி கூட சேர்ந்து போனியா... இதுல ஜனனி அம்மா உனக்கும் அவளுக்கும் மேரேஜ்னு சொல்லவும் திரும்ப உன் வாழ்க்கையில் வர வேண்டாம்னு ஒதுங்கிட்டேன். இப்ப தான் புரியுது . அது அவங்க என்னைய சும்மா அந்த நேரம் துரத்தியிருக்காங்க. நான் இருந்து அத்தையையோ இல்லை உங்களையோ பார்த்துட்டு முடிவு பண்ணியிருக்கணும்." என்றாள் சம்யுக்தா. 

     "அன்னிக்கு ஒரு நாள் முன்பு தான் சந்துரு அம்மா திட்டிகிட்டி புதர் மாதிரி இருந்த தாடியை மழித்தேன். எனிவே நீ இப்ப வந்தியே இதே போதும்." என்று கடைசி உருண்டையை அவளுக்கு திருஷ்டி சுழற்றி தூர ஏறிந்தான். 

    அடுத்த இரு தினத்தில் வைஷ்ணவி கைக்குழந்தையோடு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். கூடவே சந்துரு அப்பா அம்மாவும். இம்முறை சந்துரு அப்பா யுக்தாவோடு எதுவும் பேசவில்லை. ஒரு முறை பேசியதற்கே நாலு வருட பிரிவுக்கு வழிவகுத்தமையால் நாவை அடக்கிக் கொண்டார். 

       எத்தனை பேர் தங்கள் வாழ்வில் தங்களுக்கே தெரியாமல் காலத்தை எடுத்து கொண்டனர். 

      நான்கு வருட பிரிவு, தற்போது ஆறு மாதம் என்றே மலைத்து போனார்கள்.  

              இனி யாரும் குறுக்கே வரக்கூடாதென இருவரும் எண்ணி ஒருவரை ஒருவர் நெருங்க, 'ஹலோ பாஸ் நான் இருக்கேன்'  என்று அவர்கள் சிசு வயிற்றில் தொப்பை போல தள்ளி நிறுத்தியது. 

       ஒரு வாரம் போனதும், ஜனனி அவள் கணவர் தியாகுவோடு மற்றும் குடும்பத்தோடும் வந்து வைஷ்ணவி பார்க்க, யுக்தா ஜனனி தாயாரை நன்கு உபசரித்தாள். 

    ஜனனி தான் மன்னிப்பு வேண்டி நிற்க, அதற்கு யுக்தாவோ ஜனனிக்கு தான் நன்றி சொன்னாள். 

      பின்னே திருமணத்துக்கு செக் வாங்காமல் செல்லாமல் இருந்தால் தன்னவன் கிடைத்து இருக்க மாட்டானே. அதுவும் இல்லாமல் தன் தந்தை தானே காரணகர்த்தா... அவரையே மன்னிக்கும் பொழுது இவர்களை மட்டும் கோவம் கொள்வானானேன். 

   அவர்கள் சென்றதும் ஆரவ் யுக்தாவுக்கு ஒருவாறு நிம்மதி அடைந்தார்கள்.  

         இதில் கேசவ் மருத்துவமனைக்கு சென்று அனுரேகாவிற்கு கரும்புள்ளி கொடுத்து அனுப்பி வைத்தான். டாக்டர் ஏற்கனவே தன் பெரிய மகளை இழந்து தவிக்க, அவர்கள் வீட்டுக்கு சென்று மலர்வளையம் வைத்து யுக்தா பற்றி கூறி எச்சரிக்கை விடுத்தான். ஏற்கனவே மகள் இறந்த பிறகு மருத்துவம் பார்க்க போவதில்லை என்றே இருந்தவற்கு தான் செய்த செயலின் பாவம் கூட தன் மகளின் இறப்புக்கு காரணம் என்றே நம்பினார். 

      ஆரவ் தன் மனைவிக்கு சாதம் ஊட்டி கொண்டு தோளில் சாய்த்து ஊஞ்சலில் ஆடிக்  கொண்டு இருந்தான். 

      பொரியலை வாயில் வைத்தபடி, ''இந்த திவேஷ என்ன செய்த ஆரு?'' என்று விழுங்க, 

     ''நான் என்ன செய்தேன். அவனா மாட்டிக்கிட்டான்.'' என்று கூறியதும் புரியாமல் குழம்பி ஆருவை பார்க்க, சந்துரு தான் ''நான் சொல்றேன் மா. அந்த பக்கி அமெரிக்க போறேனு சொல்லிட்டு துபாய் போனான். நல்ல என்ஜாய் பண்ண... அவன் தலைவிதி அங்க போதை மருந்து வச்சிருந்தா போலீஸ் பிடிச்சுக்குமாம். அந்த நாய் அதுல மாட்டிக்கிட்டு இப்ப அங்கிருக்க ஜெயிலில் கம்மி எண்ணிட்டு இருக்கான்.'' என்றான் சந்துரு. 

     ''ஆரு இது உன் வேலை தானே?'' என்று யுக்தா கேட்க, ''சே சே அது தானா நடந்தது மா'' என்றே சந்துரு கூற யுக்தா ஆரவை காண ஆரவ் கள்ளன் சிரிப்பை கண்ணடித்து உதிர்த்தான். 

      ''அடப்பாவி அது உன் வேலையா? எப்படி டா?'' என்றே கேட்டான் சந்துரு. 

      ''யுக்தா காணோம் இவனும் அமெரிக்கா ஒடிட்டான். கொஞ்ச நாளில் திவேஷ அப்பாவை கேட்டேன். அவருக்கு யுக்தா எங்கே என்று எல்லாம் தெரியலை. பட் பையன் துபாய்ல இருக்கான் சொன்னார். கேசவை அனுப்பி அங்க ஒரு ஆட்களை பிடிச்சு போதை மருந்தை அவன் ரூமுல அவனுக்கே தெரியாம வைத்து போன் மட்டும் பண்ணி மாட்டி விட்டுட்டு கேசவ் அடுத்த பிளைட் ஏறிட்டான்.'' என்றதும் சுபாங்கினி முறைப்பதை கண்டார். 

       ''அம்மா அவன் என்னை ஜெயில் தள்ளினான். நானும் தள்ளினேன். கணக்கு சால்வ்.'' 

       ''அப்ப உன் மாமனார் டா? அவருக்கும் ஜெயில் ஏற்பாடு பண்ணிட்டியா?'' என்றான் சந்துரு. 

      ''ஹாஹா அவர் செய்ததுக்கு கொஞ்சம் பட்டுட்டார். அதுவும் இல்லாமல் திவேஷ ஒன்றும் லைப் லாங்க் இருக்க மாட்டான். அதுக்குள்ள அவர் அப்பா வெளியே எடுப்பார். அதுவரை இருக்கட்டும்.'' என்று கூறி முடித்தான். 

          யுக்தா வேகமாக வாந்தி எடுக்க ஹாலில் இருந்த வாஷ்பேஷினுக்கு சென்று இருந்தாள்.  

          சாப்பிட்டதில் பாதி எடுத்து முடித்து சோர்ந்து நின்றாள். அதற்குள் சுபாங்கினி ஜூஸ் போட கிச்சன் சென்றாள். 

         அதனை எடுத்து வந்து கொண்டு, ''அடுத்த வாரம் பிறந்தா யுக்தாவுக்கு ஏழாவது மாதம் ஆரம்பமாகும். ஆரவ் வெகு விமர்சையாக செய்யணும் டா. இந்த இடைபட்ட காலத்தில் விட்டதை எல்லாம் சேர்ந்து யுக்தாவுக்கு செய்துடணும்.'' என்றதும் ஆரவ் தலையை பலமாகவே அசைத்தான். 

 இதோ வளைக்காப்பிற்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு காயில் கிளம்பினார்கள். 

    சந்துரு வைஷ்ணவி சுபாங்கினி, சந்துருவின் தாய் தந்தையர் என ஒரு காரில் புறப்பட்டு செல்ல, மற்றொரு காரில் ஆரவ் யுக்தா மற்றும் சுவாமிநாதன் புறப்பட்டனர். 

    பிடிவாதம் பிடித்து முன்னிருக்கையில் ஆரவோடு அமர்ந்து வர, மண்டபம் வரவும் கால் வலிக்க ஆரம்பித்தது. 

     இதுக்கு தான் பின்னாடி சவுகரியமா உட்கார்ந்து வர சொன்னேன். மாமியாரா எங்க என் பேச்சை கேட்கறாங்க என்று சுபாங்கினி சொல்லவும், "அம்மா..." என்றவன் யுக்தாவை கையில் ஏந்திக்கொண்டான். 

      "மேடை வரை நான் தூக்கிட்டு வர்றேன். இப்ப கால் வலிக்காது." என்று ஆரவ் யுக்தாவை கையில் ஏந்தி நடக்க, யுக்தா வெட்கம் கொண்டாள்.

    "ஆரு... விடு நான் ஒரு ஐந்து நிமிஷம் டைம்னா நடந்திடுவேன்." என்றதற்கு மறுத்து அவன் தூக்கிக்கொண்டு நடந்தான். 

    முதலில் விளையாடுகின்றானென இருந்தவள். பின்னர் நிஜமாகவே தூக்கி கொண்டு நடந்து செல்லவும் சுற்றிமுற்றி பார்த்தாள். 

     "ஆரவ் நம்ம ரிசப்ஷனுக்கு வந்த கூட்டத்தை விட அதிகமாக இருக்கு டா. அதனால் இறக்கிவிடு ஷையா இருக்கு." என்றாள். 

      "நான் தான் அன்னிக்கு மாதிரியே எல்லோருக்கும் இன்வெயிட் பண்ணியிருக்கேன். எனக்கு ஷையா இல்லை.?" என்றான். 

      "டேய் நிறைய பேர் போன்ல வீடியோ எடுக்கறாங்க ஆரவ். அப்பறம் யுடியூப்-ல அப்லோட் பண்ணுவாங்க." என்றாள் 

    "பண்ணட்டும்... ட்ரெண்டிங் ஆனா கூட பரவாயில்லை. என் காதலியை கீழே இறக்க விடறதா இல்லை." என்றான் ஆரவ் திடமாக. 

    "ஆரவ் அப்பறம் எந்த பக்கம் திரும்பினாலும் காதல் மனைவியான கர்ப்பிணி பெண்ணுக்கு கால் வலிக்க, மேடை வரை தூக்கி வந்த காதல்கணவன் சினிமாடிக்கா செய்தி வெளியாகும்." என்று சிணுங்கினாள். 

     "இந்த உலகமே பார்த்து பேசினாலும் ஐ டோண்ட் கேர் கள்ளிச்செடி." என்றவன் அவளை இன்னமும் தோதாக தூக்கி கொண்டு நடையிட, பெண்ணவள் அவனின் ஷர்ட்டை இறுக பற்றி அவன் தோளிலே வெட்கப்பட்டு சாய்ந்தாள். 

    சுவாமிநாதனுக்கு இத்தகைய காதலையா வெற்று தாள் பணத்திற்காக பிரிக்க பார்த்தேனென என்று தன்னையே திட்டிக்கொண்டார்.  

  மகளின் சந்தோஷமும் வெட்கமும் அந்த மேடையே அதிர கேட்ட சிரிப்பொலியும் வரவேற்பும் கண்டு தந்தையாய் மனநிறைவை கொண்டார்.
 
    மேடை வந்து இறக்கி விட்டு முதல் வளையலை போட்டு அழகு பார்த்து ஒவ்வொரு சாத வகையையும் எடுத்து ஊட்டி முடித்தான்.(சிலர் மேடையில் ஐந்து வகை உணவை ஊட்டி விடுவாங்க அவர்கள் வழக்கம். அதை இங்க உபயோகப்படுத்திக்கிட்டேன்.)

        வைஷ்ணவி கையில் குழந்தையோடு தன் அண்ணிக்கு வளையலிட்டு மகிழ்ந்தாள். சந்துருவும் அவன் பங்கிற்கு அருகே வந்து "என் பையனுக்கு புக் பண்ணறேன் மா. பொண்ணு பிறந்தா கட்டி வைச்சிடு." என்று வாழ்த்தினான். 

       சுபாங்கினி தயங்கி ஒதுங்க, சம்யுக்தா அவர்களையும் போட வைத்து கைநிறைய வளையலோடு முகம் நிறைய சந்தனத்தோடும் ஆரவிடம் கை குலுக்கி காட்ட, அவனோ அவளருகே வந்து அவள் வயிற்றில் முத்தமிட்டான்.
    
    அதன் பிம்பங்கள் நிழற்படமாக கேமிரா பதிவு செய்ய இனிதாய் அந்த மழலையின் வரவிற்கு ஆரவ் யுக்தா காத்திருந்தனர். 

 - வரையனல் தணிந்திட தீவிகை ஒளிர மிளிர்ந்தது வாழ்க்கை. 

நன்றி 

பிரவீணா தங்கராஜ். 

சின்ன கான்சப்ட் தான். ஒரு காலேஜ் ஜோடி மோதலோடு சந்திச்சு மீண்டும் காதலை புதிப்பிக்கிறதா எழுத நினைச்சேன். கதை கருக்ஷ்வ்ளோ தான் நிறைய ஆதரவு வரும்னு எதிர்பார்க்கலை. அதனால தான் தலைப்பை வித்தியாசமா கொடுத்தேன். பட் இதுக்கும் எனக்கு நல்லா ஆதரவு தந்து தினசரி கருத்தளித்து யுடி வரலைனா இன்பாக்ஸில் கேட்டு எனக்கு எழுத ஊக்குவித்த அனைவருக்கும் நன்றிகள் பல.

பிரதிலிபி நிறைய கருத்து வந்து குவிந்தது. முகநூலிலும் கருத்து வருது. ஆனா பிளாக்ல வரலை...அவ்வ்... இங்கையும் இருந்தா நல்லா இருக்கும். ஹாஹா அடுத்த கதை பிளாக்ல நியு இயர்க்கு வரும். தினசரி பதிவா. ஏற்கனவே எழுதின கதை தான். ஆனா பிளாக்ல பதிவு பண்ணப்போறேன். 



   

           

        

      



Comments

Post a Comment

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1