தீவிகை அவள் வரையனல் அவன்-27

🪔🔥-27

     தன் அத்தை சுபாங்கினி அல்லது வைஷ்ணவி இருப்பார்கள் என்று ஆவலாக வந்த சம்யுக்தாவுக்கு அங்கே கதவு பூட்டிய நிலையிலும், அங்கே இருவர் நிற்பதும் கண்டு விழித்தாள். 

      "நீ இன்னமும் சாகலையா... இங்க தான் சுத்திட்டு இருக்கியா.. ஜனனியை பேசி வளைத்து பணம் காட்டி ஆரவ் தம்பியை கட்டிக்க விடாம பண்ணி இருந்தார் உங்கப்பா. நீ என்ன பண்ண வந்திருக்க... ஆரவ் தம்பி தான் தாலியறுத்து வெளியே அனுப்பிட்டாரே... அப்படியே போய் தொலைய வேண்டியது தானே... எதுக்கு இப்படி வந்து நிற்கற... ஓ... ஜுவனம்சம் வாங்க வந்தியா... இப்ப தான் ஜனனி ஆரவ் நல்லபடியா பழக ஆரம்பித்து இருக்காங்க. 
    
    என் பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கு. இப்ப மாறுபடியும் வந்து எந்த தகிடுத்தத்தம் பண்ணாதே..." என்று பொரிந்து தள்ளினார் ஜனனி அம்மா. 

    "ஜனனிக்கு கல்யாணமா...? யாரோட...? நீங்க யாரு....எதுக்கு என் மேல கோபப்படறீங்க" என்று வினாவை தொடுத்தாள் சம்யுக்தா. 

    "நல்லா நடிக்கிற வேற யாரேட ஆரவ் தம்பி கூட தான். போ... நிம்மதியா வாழ விடு அவரை." என்று கத்தவும் சம்யுக்தா தடுமாறி போனாள். 

     "அம்மா ஆட்டோ காசு 150 ரூபாய்... ஆட்டோவில ஹாண்ட் பேக்யை வைச்சிட்டீங்க." என்று ஆட்டோக்காரன் வந்து கொடுக்க, சம்யுக்தா இவர்கள் பேச்சையும் ஆரவ் ஜனனி ஒன்றாக சென்றதிலும் ஒப்பிட்டு பார்த்து விட்டு குரங்கு மனமானது வேறாக யோசித்தது. 

     ஆட்டோவில் ஏறி ஹாண்ட்பேகில் இருந்த பாட்டியின் அட்ரஸுக்கு போக சொன்னாள். 

    ஆட்டோவில் குலுங்கி குலுங்கி அழுதாள். 'ஆரு... நிஜமா உன் வாழ்வில் இருந்து நான் முழுசா போயிட்டேனா...' என்று அணலிலிட்ட புழுவாக துடித்தாள். 

      "என்னடி பண்ணற... திரும்ப ஏழரை இழுத்து வைக்கிற... இந்த பொண்ணை காணோம்னு அந்த தம்பி அப்படி பேயா தேடுது. நீ என்னனா நம்மை பொண்ணை கட்டிக்க போறதா புரளி அள்ளி விட்டுயிருக்க? இது மட்டும் அந்த தம்பிக்கோ இல்லை நம்ம பொண்ணுக்கோ தெரிஞ்சுது அம்புட்டு தான். எதுக்கு இப்படி பண்ண?" என்றார் ஜனனி தந்தை சீத்தாராம். 

     "பின்ன என்னங்க... நம்ம பொண்ணு ஆரவ் தம்பி கல்யாணம் பேசி திருமணம் மேடை வரை வந்து அவங்க அப்பாவால கல்யாணம் நின்னுச்சு... பணம் கிடைத்தது தான். ஆனா மானம் மரியாதை... உங்க தங்கை என்னலாம் பேசுச்சு. மறந்துப்போச்சா..." என்று எகிறினாள் அகிலாண்டம். 

    "உன் பொண்ணு தானே ப்ளாங் செக் என்றதும் அப்படி பண்ணா...? இந்த பொண்ணு மேல என்ன தப்பு." 

    "நம்ம பொண்ணை வைச்சிட்டு இவங்க காதலில் பொறாமையை உருவாக்கியது ஆரவ் தானே. அதான் அவ ஆரவ் தன்னை வைத்து விளையாடியதுக்கு தான் அப்படி செய்தா... இப்ப நல்லவனா அவனோட அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்துக்கிட்டா முடிஞ்சிதா... இப்ப பாருங்க உங்க தங்கையிடம் கெஞ்சி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கற நிலைமையா போச்சு. போக சொல்லுங்க இவளை..." என்று கிளம்பினார் 

     அகிலாண்டம் சீத்தாரம் இருவருமே சாதரணமாக பேசிவிட்டு புறப்பட்டனர். இது ஒரு பெண்ணின் வாழ்வில் எத்தகைய வலியை கொடுக்குமென அறியாது போயினர். 

    ஜனனியிடம் ஆரவ் தனக்கும் சம்யுக்தாவுக்கும் கடைசியாக நடந்த நிகழ்வை பகிர்ந்து இருந்தான். அதை தாயிடம் பகிர்ந்து இருந்தாள் ஜனனி. 

விதியானது தாலி கழட்டிய நிகழ்வு ஆரவிற்கும் தனக்கும் நடந்ததை எதற்கு  ஜனனிக்கு சொல்லி இருப்பான். அப்படியென்றால் ஆரவ் மனம் மாறி அவளிடம் சொல்லி திருமணம் வரை சென்று விட்டாரா? நான் அவரை பிரிந்தது ஒரு ஐம்பது நாள் இருக்குமா...? அதற்குள்.... எப்படி? என்று யோசித்தவளின் நினைவு முதலிரவன்று ஆரவ் 'இதே ஜனனினா இங்க இந்த அறையில் நடப்பதே வேற...' என்றும், சந்துரு அண்ணாவின் அம்மா வந்த அன்று  ஆரவ் 'இதே ஜனனியா இருந்தா நானே கைபிடிச்சு சந்துரு அப்பா அம்மாவிடம் நிற்க வைத்திருப்பேன்' என்றானே. ஜனனி இருந்தா அவ கழுத்தில தாலி கட்டியிருப்பேனு சொன்னாரே...

    ஜனனி மீது நல்லபிப்ராயம் வந்து இப்ப திருமணம் ஏற்பாடு பண்ணறாங்களா...? அப்படின்னாலும் முதல் மனைவி நான் இருக்கும் பொழுது...? என்ற எண்ணத்தில் ஜனனி தாயார் தான் அவர்கள் முன் நின்ற பொழுது நீ இன்னமும் சாகலையா? கேட்டாங்களே. அப்படின்னா நான் இறந்துட்டதா எண்ணிட்டாங்களோ...? அப்பா... அப்பா தேடியிருப்பாரே... அப்பா உடல் சுகவீனம் அடைந்ததும்... உயிரோட.. அய்யோ... அப்படி இருக்குமோ... அதனால தான் அப்பா என்னை தேடலையா...? என்று அழுதாள். 

      ஆட்டோக்காரன் "அம்மா இதுக்கு மேல போகாது. இடம் குறுக்கலா இருக்கு." என்றதும் பணத்தை கொடுத்து முடித்து இறங்கினாள். 
  
   அந்த பாட்டி மதியம் உணவை அந்த சின்ன வீட்டில் சமைத்து கொண்டிருருந்தார். 
   
   வாசலில் இருந்து எட்டி பார்த்தாலே வீட்டின் மொத்தமும் கண்டிடலாம். 

உள்ளிருந்து பாட்டி எட்டி பார்த்து ஓடி வந்தார். 

   "என்ன கண்ணு புருஷனை பார்த்தியா... என்ன சொன்னாரு. கூட்டியாந்துகிறியா...? என்று எட்டி பார்க்க, இல்லையென அசைத்தாள். 

    "வாயும் வாயிறுமா இருக்க முதல்ல உள்ள வா..." என்றழைக்க வந்தாள். வீட்டில் இருந்த எலுமிச்சையை கையில் பிழிந்து சர்க்கரை உப்பு சேர்த்து கலக்கி நீட்ட மறுப்பாக சம்யுக்தா சொல்ல, "இது உனக்கு இல்ல தாயி வயிறுல வளருற உசிருக்கு." என்றதும் மறுக்காமல் வாங்கி பருகினாள் சம்யுக்தா. 

      அதில் திடம் வந்ததா "பாட்டி அவர்ர்ர்... அவர்... வேற பெண்ணை திருமணம் செய்ய போறார்... நான் இறந்துட்டேனு நினைச்சிக்கிட்டர்" என்று மடைதிறந்து கொட்டினாள்.

    "என்னம்மா நீ... அம்புட்டு நெருக்கமா போயி ஒரு நிமிஷம் நேர்ல பேசிபுட்டு வந்திருக்க கூடாதா..." என்றார் முருகேஸ்வரி பாட்டி. 

    "பாட்டி... எனக்கு இங்க இருக்க இடம் தருவியா... நான் உன் கூட இருந்துக்கறேன். எனக்கு மனசு சரியில்லை பாட்டி." என்று பேசியதும் முருகேஸ்வரி உருகிவிட்டார். 

    "ராசாத்தி... நீ பார்க்க ராஜாவூட்டு பிள்ளை கணக்காகீற. இது சிமெண்டு தள வீடு. ஒரு ரூமில சமைச்சி ஒரு ரூமிலே சாப்பிட்டு தூங்கறவங்க. இங்க பாரு கக்கூஸை... நீ குளிச்சியே அந்த கக்கூஸை விட மோசம். நீ எப்படி தாயி தங்குவ." என்று பரிதவித்தார். 

     "பாட்டி அப்பா உயிரோட இருக்காரா இல்லையானு தெரியலை. அப்படியே இருந்தாலும் நான் வந்துட்டேனு ஆரவ் திருமணத்தை மறுபடியும் நிறுத்த முயற்சி செய்வார். என் ஆரவ் என்னோட வாழ முடியலைனா கூட அவராவது நிம்மதியா இருக்கட்டும். இது தியாக ரேஞ்சுல பேசலை. நாம விரும்பிய மனம் நல்லா இருக்கணும் என்ற நோக்கம் மட்டும் தான். நான் படிச்சிருக்கேன் பாட்டி வேலைக்கு போவேன். உனக்கு பாரமா இருக்க மாட்டேன்." என்று கெஞ்சவும் இதற்கு மேல் என்ன பேச, வயிற்று பிள்ளைக்காரியிடம். அதனால் "சரி இரு தாயி" என்று கூறி அரசாங்கம் கொடுத்த பேனை ஓடவிட்டாள். 

     அது 'கடக் கடக்' என சத்தமிட்டு ஓடியது. 

  சம்யுக்தாவுக்கு மனம் முரண்டியது. ஆரவ் திருமணம் செய்வானா..? இல்லை... தனக்காக காத்திருப்பானா? யோசனையிலும் சாப்பிட்ட காரணத்திலும் உறங்கிவிட்டாள். 

      இங்கு ஆரவ் ஜனனியோடு அந்த காபி ஷாப் வந்தான். ஜனனியின் பியான்சி சந்தித்து வாழ்த்து தெரிவித்து பேச ஆரம்பித்தார்கள். 

     "தியாகு ஆரவ் சார்." 

     "பார்த்து இருக்கேன் ஜனனி. உன் கல்யாணத்துக்கு வந்தப்ப மேடையில் அவர் வேற பெண்ணிற்கு தாலி கட்டியதை பார்த்தேன். ஐ அம் சாரி அப்போ உங்களை தப்பா நினைச்சேன்." கசந்த முறுவல் வந்தது ஆரவிற்கு, 

     "நானுமே ஆரவை தப்பா தான் புரிஞ்சுக்கிட்டேன்." என்றாள் ஜனனி. 

    "ஏன் ஆரவ் கேட்கறேனு தப்பா நினைக்காதீங்க. இங்க வரும் போதே உங்களிடம் நிறைய கேள்வி கேட்கணும்னு தான் வந்தேன். நீங்க தப்பா எடுத்துக்கலைனா?" 

     "தாராளமா கேளுங்க... தப்பா எடுத்துக்க மாட்டேன்." என்றான் ஆரவ். 

      "சம்யுக்தா அவர்களை இவ்ளோ நேசிக்கறவங்க. முன்னவே ஒரு நிமிஷம் மனம் திறந்து பேசி, அவர்களிடமே ஏர்போர்ட்டில் பார்க்க வந்ததையும் வாட்ஸப் டாக் சாமிநாதன் சூழ்ச்சி சொல்லியோ பிரச்சனையை பெரிசா வராம தடுத்து இருக்கலாம். 

    இல்லையா.... அவங்களை ஆபிஸ்ல பார்த்த அன்றே உரிமையா கேள்வி கேட்டுயிருந்தா கூட ஓகே... ஏன் அப்படி பண்ணலை." 

    ஆரவ் மேஜை நீரை பருகி, எங்க காதல் எல்லோரையும் போல ஐ லவ் யூ என்று ஆரம்பிக்கலை. ஒருத்தரை ஒருத்தர் என்ன நினைக்கறாங்க என்று அறிந்து வந்தது. அவ போன்ல எனக்கு மெஸேஜ் அனுப்பாமா, ரொம்ப நேரம் டைபிங் வந்து வந்து எதையும் அனுப்பலை. என் போனில் அவ நம்பரை ஸ்டோர் பண்ணியதும் என் போட்டோ பார்த்து அவளா டைபிங் பண்ணலை. அந்த நேரம் என் போட்டோ பார்க்க ஆசைப்பட்டா... அது அவ தெரிவிக்காம புரிஞ்சு நடந்தேன். அவ கண்ணு என்னை தேடுது அதுல என்னோட அன்பை காதலை எதிர்பார்க்கறா என்று நானா புரிஞ்சிக்கிட்டேன். அவ பில் பண்ணறதுக்கு முன்ன நானா பண்ணினேன். அப்போ அவ முகம் எவ்வளவு சந்தோஷப்பட்டா தெரியுமா. நாளைக்கு தர்றேன்னு அவ சொல்லியிருந்தா கூட கேன்டீன் ஆள் விட்டுட்டு இருப்பான். என்னோட காதலா கேட்டப்ப, திவேஷ் இடையில் வந்தப்ப எல்லாமே நானா புரிஞ்சி நடந்துக்கிட்டேன். 

    எங்கம்மா மோசமா திட்டினப்ப அதையும் எனக்காக புரிஞ்சி கேள்விக் கேட்காம அவ போனா, நிறைய விஷயம் அவ பேசாம நான் புரிந்து கொண்டது. நான் பேசாம அவள் புரிந்து கொண்டது. 

    அதனாலையோ என்னவோ, அவளிடம் நான் பேசாது அவளா புரிந்து வருவாயென்று எதிர்பார்த்தேன். ஆனா நான் ஜெயிலில் இருந்தது அவளுக்கு தெரியாதுனு புரிஞ்சிக்க முடியலை. திவேஷ் லவ் சொல்லி அந்த காதலை இவ தவிர்க்க பேசியதை என் காதலை சொல்லறானு புரிஞ்சிக்கிட்டேன். 

   அதுவொன்றுமில்லை... நாம இங்க எல்லாம் போவோம் அவமானப்படுவோம் என்று நினைத்து பார்க்காத போது ஜெயிலில் அடைந்தப்ப அனுபவித்த அதிர்ச்சி... அது மற்ற எதையும் தெளிவா யோசிக்க முடியாம தடுத்திடுச்சு. 

     இதுல வைஷ்ணவி மாட்டினப்ப, பேரதிர்ச்சி... வாழ்வுக்கும் சாவுக்கும் ரொம்ப போராடி தான் அந்த வருடங்களை ஓட்டினேன். 

    நாலு வருடம் நான் காத்திருந்தது எப்பவாது என் யுக்தா வருவா அவளை பற்றி சொல்வாயென்று தான். ஆனா வரலை... வர விடாம  தடுத்துட்டார். எனக்கு திருமணம் ஆனதுன்னு சந்துரு அப்பா சொன்னதை வைத்து வராம இருந்துருப்பா. 

     என்னை முதல்ல ஆபிஸ்ல பார்த்தப்ப, ரொம்ப நேரம் வெயிட் பண்ண வைத்தா... அது எதுக்கு தெரியுமா..?" என்று ஜனனியை பார்த்து கேட்டான் ஆரவ். ஜனனி தெரியாதென்று தலையை மட்டும் அசைக்க,

    "அவள் என்னை பார்த்து அழுதுயிருப்பா. எங்க நேர்ல மீட் பண்ணி அப்போ அழுதுடுவோமோனு தான் ரொம்ப நேரம் அழுது முடிச்சி பிறகு கண்ணீர் வரலையென்றதும் என்னை கூப்பிட்டு இருப்பா. 

   வீட்டுக்கு வந்தா பொண்ணு போட்டோல நீ... நான் விரும்பியவள் என் உயிரானவளோடு உன்னை கணெக்ட் பண்ணி எப்படி பார்க்க? அம்மா தங்கை என் கல்யாணத்துக்காக எதிர்பார்ப்போட கேட்டப்ப மறுக்க முடியலை. நான்கு வருடம் பட்ட கஷ்டத்துக்கு நிவர்த்தியா கேட்டு நின்றப்ப, என் காதலி வந்துட்டா. அவளோட திருமணம் பண்ண அம்மாவிடம் பர்மிஷன் கேட்க முடியுமா? 

    சான்ஸே இல்லை தியாகு. திருமணத்தையும் தடுக்க முடியலை. சரி யுக்தாவும் என்னிடம் பேசவோ நெருங்கவோ முயற்சி பண்ணலை.

எனக்கு திருமணம் ஆனது என்று இதுவரை எண்ணியிருந்தவ, ஜனனி பியான்சி என்று அறிமுகப்படுத்தியதும் எதுக்கு ஜனனியோட என் திருமணம் நிறுத்தவும் மனசில்லை. 

     அவ அப்பவும் ஒதுங்கி போனா. நானா தான் அவளை டீஸ் பண்ண ஜனனியோட போட்டோ எடுத்து டிஸ்டர்ப் பண்ணிட்டேன். அதோட விளைவு தான். மனவுளைச்சலில் கார் விபத்து ஏற்பட்டு, சுவாமிநாதனுக்கு என்னோட ரீஎன்ட்ரி தெரிர்தது....  அவரால என்னை திரும்ப சந்திக்கவும், சம்யு தடுமாறுவானும் எதிர்பார்க்கலை. 

     என் காதலோட வெற்றி அது தான். சம்யு என்னை தேடி வந்தா... அப்பவும் உன்னை ஏமாற்ற நினைக்கலை. அவ மனசில் நான் இருக்கேன். திரும்ப சந்திச்சது எப்படி கடவுள் விட்ட விதியோ... அதே போல சேர்ந்தா ஓகே. நானா எதையும் எனக்கு சாதகமா பண்ணக்காடாதுனு வீம்பு. 

     நீ மண்டபத்தில் காணோமென்றதை விட அவ மண்டபத்தில் இருக்காயென்ற சந்தோஷம். வேற எதையும் யோசிக்காம தாலி கட்டினேன். 

    அம்மா அவளை பேசினப்ப எல்லாம் கல் மாதிரி இருந்தேன். அப்படியாவது அம்மா பாரம் போகட்டும்னு. ஆனா அம்மா புரிஞ்சிக்கிட்டாங்க. 

     எனக்கு தான் ஈகோ. என்னை விட அவ எங்க காதலில் அதே தீவிரத்துடன் இருக்கா. நான் தான் எங்க காதலில் தோற்றுட்டேன். அந்த கான்பிடன்ஸ் போனதிலேயே எனக்கு   மருந்தா அவளிடம் தான் என்னை தேடினேன். பழைய ஆரவ் அவளிடம் தானே தொலைத்தேன். திரும்ப அவளிடம் அன்பை, காதலை இயல்பா வெளிவர வைக்க முயன்றேன். 

     அடுத்த நாள் சுவாமிநாதன் நினைவு வருவதா போயிடும் என் மேலயே கோபம் வரும். என் பாதி யுக்தா. அவளிடம் தான் கோபத்தை காட்டினேன். அவ தாங்கிக்க முடியாத அளவுக்கு வார்த்தையை விட்டேன். 

    நாலு அறை அறைந்தா சந்தோஷப்பட்டு இருப்பேன். ஆனா என் யுக்தா என் மனநிலையை கணித்து அமைதியா நடந்துக்கிட்டா. 

      இப்ப தொலைச்சிட்டு தேடிட்டு இருக்கேன். இப்பவும் அவ தள்ளியிருக்கானா... ஏதாவது காரணம் இருக்கும். இல்லைனா என் யுக்தா என்னை காயப்படுத்த மாட்ட." என்றவனின் முடிவில் தியாகு "சாரி ஆரவ் நான் ஜனனியை கைவிட்டதுக்கு தான் உங்களை கேள்விக்கேட்டு கஷ்டப்படுத்த நினைத்தேன். பட் பேசாமலே உணர்வினை புரிந்து அனுசரித்து வாழற வாழ்வை காதலை எங்களுக்கு புரிய வைத்திருக்கீங்க. உங்களை மீட் பண்ணியதில் சந்தோஷம்." என்று கை குலுக்க ஜனனி கண்களும் பனித்து இருந்தது. 

    "மேமுக்கு ஒன்றும் ஆகாது சார். வருவாங்க... உங்கள் காதல் திரும்ப கொண்டு வரும்." என்று ஜனனி பேச, ஆரவும் அவர்களுக்கு திருமண வாழ்த்தை பகிர்ந்து, பிறகு ஜனனி தியாகுவோடு செல்ல, ஆரவ் தன் காரில் கிளம்பினான். 

   'இந்த உடலில் தாடி மழித்து மற்றவரோடு இயல்பா பேசினா வருத்தம் இல்லைனு முடிவு கட்டிடறாங்க யுக்தா. ஆனா வலியை புதைத்துவிட்டு சிரிப்பான முகமா காட்டக் கொள்வதில் எத்தனை கஷ்டம் தெரியுமா. உனக்கு புரியாததா.... ஜனனிக்கு நகை  வாங்கி கொடுத்த அன்னிக்கு சிரிச்ச முகமா இருந்தியே அப்போ உனக்குள் இருக்கற வலி இதே போல தானே இருந்தது.' என்றவன் கண்களில் கண்ணீர் கன்னம் தாண்டி வழிந்தது. 

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

-பிரவீணா தங்கராஜ். 
    
hi 
blog la comments pandravankaluku spl thanksssss but 4 comments mela varalai... ots ok blog la comments post pandra 
chithra amutham sis 
zara sis
apram inum silaruku lot of thanks...🥰🥰🥰🥰
and 
முகநூலில் தொடர்ந்து கருத்து தெரிவித்து ஊக்கம் தரும் அனைவருக்கும் நன்றி. 
குறிப்பா 
jeyagowri 
kalyani jeyakumar
nithya iyappan
nithya yogi
r rathika 
vinolina fernado
yagnitha shankar 
priya sankaran
rajam rajam 
rajalakshmi santhish
abirami bharanitharan 
kalai karthi 
viji kanna 
saju saju 
gajalakshmi saravanan 
kavitha saravanan
gayathri ganesan 
aparammmmmmmn niraiya per... irukenka (vitiruntha manichidunka) naan post panina udane read panni comments panni happy ya feel pana vaikirinka. thanks a lot. 😊😊😊


      

    

    

Comments

  1. Sis super ah aarav and yuktha love ah eluthirukinga....😍💐

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு