தீவிகை அவள் வரையனல் அவன்-26

🪔🔥-26

   சந்துரு ஆரவ் அலுவலகம் வந்து சேர்ந்தான். 

    "என்னடா... சாக மருந்து எல்லாம் வாங்கி ரெடி பண்ணிட்டியாமே... செத்து தொலைய வேண்டியது தானே. எங்க வாழ்க்கையும் சூனியமாகட்டும். 

    இதுக்கு மாறி மாறி லவ் பண்ணி தொலைச்சீங்களா... அவயென்னடானா எங்க இருக்காயென தெரியலை. நீ இந்த உலகத்தை விட்டே ஓட பார்க்கற... 

     காதல்னா எந்த பிரச்சைனை வந்தாலும் சேர்ந்து தானே சரிபண்ணணும். நீங்க மட்டும் ஏன்டா அதை பெரிசுப்படுத்திட்டே இருக்கீங்க." என்று வெடித்தான்.

     "இல்லைடா... நான் தப்பு செய்தா கூட என் யுக்தா என்னை விட்டு போகமாட்டா... எனக்கு அது நல்லா தெரியும்." ஆரவ் கூறினான்.

     "அப்ப மேடம் எங்க போனாங்க. சொல்ல முடியுமா....? முடியாதுல்ல.. உன் தங்கை கன்சீவா இருக்கா... ஆனா தினமும் ஆரவ் அண்ணா பாவம். பார்க்கவே கஷ்டமா இருக்கு. அண்ணி கண்டுபிடி சந்துரு சொல்லிட்டே இருக்கா. கன்சீவா இருக்கறவளை என்னால சர்தோஷமா பார்த்துக்க முடியலைடா. எப்ப பாரு உன் நினைவு, உன் தோற்றம்... அண்ணா எப்படி இருப்பார் தெரியுமானு எத்தனை முறை சொல்வா தெரியுமா. உங்க நிம்மதி போய் எங்க நிம்மதியும் கெடுக்கற டா." என்று கத்தினான். 

     "அத்தை வேலைக்கு போற நேரத்தை குறைச்சிட்டு நீ வர்றப்ப இருக்கணும் ஓடி வர்றாங்க. நீ ஏதாவது தப்பா முடிவு எடுத்திடுவியோனு பயந்து பயந்து வாழறாங்க. புரியுதா டா..." என்றதும் ஆரவிற்கு தன் நிலையால் மற்றவர்களும் பாதிப்பு அடைவது தெளிவாக புரிந்தது. 

    "சாரி டா..." என்றதும் "முதல்ல இந்த முகறகட்டையை மாற்று... எனக்கே எரிச்சலா இருக்கு." என்று கூறினான். 

     "ஆரவ் உள்ள வரலாமா?" என்றதும் சந்துரு ஜனனியை கண்டு இன்னமும் கொதிநிலைக்கு போனான். 

     "ஆரவ் நாளைக்கு எனக்கு நிச்சயதார்த்தம் நல்லபடியா முடிந்தது. அடுத்த நல்ல நாளில் கல்யாணம் வைக்க போறாங்க. போன முறை மேடை வந்து நிறுத்திட்டேன் அதனால அம்மாவோட அண்ணன் பையன் கோலில் வைக்கலாம்னு சொல்லிட்டார்" என்று வந்து சொல்பவளை கண்டப்பின் சற்று நிம்மயியடைந்தாலும் இவளின் வருகையும் சம்யுவுக்கு பிடிக்காதவொன்று தானே என எரிச்சல் உருவாக்கியது. 

     "கல்யாணத்துக்கு வந்திடுங்க. அம்மாவோட வீட்டுக்கு வந்து சொல்லறேன்." என வெளியேறினாள்.

      சந்துரு முறைக்க அதன் காரணம் அறிந்த ஆரவ், "நீ நினைக்கிற மாதிரி யுக்தா இவளோட என்னை சந்தேகிக்க மாட்டா. அவளுக்கு இவளை வேலையில் வைத்தது ஒரு பெண்ணோட வேலையை பறிக்க காரணமென புரியும்." என்று பதில் தந்தான். 

      "ஓஹோ.... அப்ப சம்யு எதுக்கு உன்னிடம் சொல்லாம மாயமாகணும். அவளோட அப்பா கிரிடிகல் சூழ்நிலையில் எங்க போனா... அதையும் சொல்லேன். நீ தான் அவள் கண்ணை பார்த்து சொல்லற ஆளாச்சே." என்று சினத்தை மொழிந்தான்.
    
     "நிறுத்து டா. என் யுக்தா தவறா புரிந்து போகலை. என் வார்த்தை வீரியம் அவளை அப்படி போக வைச்சிடுச்சு. கோபம் போனதும் என்னை தேடி வருவா. அவ என்னோட யுக்தா." என்று திடமாக கூறினான். 

    "அப்ப... வருவா..?" 

      "கண்டிப்பா... நானும் யுக்தாவும் திரும்ப காதலர்களாக வாழ்க்கையை துவங்குவோம்." என்று உரைத்தான். 

     "அப்ப எதுக்கு தேவதாஸ் தாடி. எடுத்தெறி..." என்று சந்துரு கூறி இடத்தை விட்டு வெளியேறவும். ஆரவ் தாடியை தடவி பார்த்தான். 

     ஹாஸ்பிடலில் அனுரேகா வர தாமதமானது. பஞ்சர் பஸ் கிடைக்காமல் சதி செய்ய, ஆட்டோவும் கொரானா காலம் என்பதால் அதிகமாக இல்லாமல் போக, தாமதமாக வந்து சேர்ந்தாள்.

    அதற்குள் சம்யுக்தாவுக்கை இரவு போட்ட மயக்க மருந்தின் வீரியம் அவள் உடலில் குறைய துவங்கியது. இதில் அனுரேகா வந்ததும் நர்ஸ் எல்லோரையும் ஒரே நேரத்தில் அசம்பல் ஆக சொல்லவும் அங்கே செல்ல புறப்பட்டாள். 

     பாதிக்கு மேல் சம்யுக்தா நினைவு தான். இந்நேரம் மருந்து வேலை நீங்கியிருக்குமே... என்ற பதட்டம் மேலோங்க, பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு ஓடி வந்தாள். அறைக்கு வந்து பார்க்க சம்யுக்தா இருந்த பெட் காலியாக இருந்தது. 

    அச்சோ... இந்த பெண் காணுமே... என்ன பதில் சொல்வேன். ஹாஸ்பிடலில் யாருக்காவது தெரிந்தா என்னவாகறதென பதட்டம் அடைந்து, கைப்பையை அகற்றி வைத்து, அறையை பார்வையிட பாத்ரூமில் தண்ணீர் சொட்டும் சத்தம் அதிகமாகவே கேட்டுது. 

     கதவின் மீது கையை வைக்க, அது திறந்தது. சமயுக்தா நீரை அள்ளி முகத்தில் அடித்தவள் அனுரேகாவை கண்டதும் வாலியால் மண்டையை அடிக்க, அனுரேகா பயந்து பின்னடைந்தாள். 

     "என்னை விட்டுடு. நான் போகணும். எதுக்கு இப்படி செய்யற... உனக்கு பணம் தானே வேணும். என் ஆரவிடம் வாங்கி தர்றேன். எனக்காக எத்தனை கோடியென்றாலும் கொட்டி தருவான்." என்று பேசவும் அனுரேகா பயந்து, 

     சத்தம் போடாதே... கீழே பெரிய டாக்டர் வந்துயிருக்காங்க. ஏதாவது என்றால் அந்த டாக்டர் தப்பிச்சிடுவார். நான் மாட்டிப்பேன். இப்ப என்ன உன்னை விடணும் அவ்ளோ தானே. போ... யாருக்கும் தெரியாம போயிடு." என்று அருகே வர முயற்சிக்க,

    "கிட்ட வராதே... வந்தா... கொலை பண்ணிடுவேன்." என்று சம்யுக்தா நகர்ந்து செல்ல, 
   
     "என்னை கொண்றுட்டு ஜெயிலில் பிள்ளையை பெற்றுப்பியா? இங்க பாரு... எனக்கு இனி பணம் வேண்டாம். நீ அடிச்சிட்டு தப்பிச்சிட்டனு நானே சொல்லிக்கறேன். ஆனா என்னை மாட்டிவிடாதே." என்று பதவிசனமாக பேசினாள். 

     "என்ன சொல்ற பிள்ளையா...?" என்று சம்யு குழம்பி தவிக்க, 

     "ஆமா... நீ கர்ப்பமா இருக்க. பிளட் டெஸ்ட் இதோ அங்க இருக்கு." தேதி கேட்டு தனக்கு திருமணமாகி நாட்களை கணக்கிட்டாள். ஆரவோடு வாழ்ந்த  நாட்கள் மிகச்சரியாக பொருந்த, தன் ஒட்டிய வயிரை தடவி பார்த்தாள். 

     இனியும் இங்கே மயங்கி உறங்க சம்யு தயாராகயில்லை. வாலியை எடுத்து "வழியை விடு... இல்லை... கத்தி கூப்பாடு செய்து உன் வாழ்க்கையை ஒன்றுமில்லாமா பண்ணிடுவேன்." என்று கத்தவும், அதற்குள் சரியாக பக்கத்தில் இருந்து பெரிய டாக்டர் எல்லாம் விரைந்து பேசியபடி வர, சம்யுக்தா அங்கிருந்த அனுரேகா கைப்பையை எடுத்து கொண்டு வெளியேறினாள். 

       ஓடிவந்தவள் நேராக சென்றது என்னவோ தன் வயிற்றில் கரு உள்ளதாயென பார்க்க தான். அங்கேயே இருக்க பயந்து உடனடியாக ஆட்டோ பிடித்து வேறு இடம் பெயர்ந்தாள். மருந்துக்கடை அருகே பிரகனசி கிட் வாங்கியதும் எங்கே சென்று கண்டறியயென்றே பார்க்க அங்கே பொது கழிப்பறை தான் தென்பட்டது. 

    கண்கள் இடத்தை அறிந்ததும் அதன் நாலாபுறம் கெட்ட வாடை வீசியதை அறியாது ஒரு கழிவறைக்குள் புகுந்து கர்ப்பம் உண்மையாயென ஊர்ஜிதம் செய்ய நிமிடங்கள் கடந்தது. அந்த சில மணித்துளிகள் தான் இடத்தை ஆராய்ந்தாள். 

     இரு கோடு அங்கே பிரகாசமாக தெரியவும் அங்கே அந்த தூசு படிந்த கதவை திறந்து வெளியே வந்தவள் இடமும் வாடையும் குமட்டியெடுக்க, வாந்தி எடுத்தாள். குடலை பிரட்டியது ஆனால் வாந்தியாக எதுவும் வரவில்லை. உணவு இல்லாத உடல். வெறும் மருந்து மாத்திரை புண்ணியத்தில் இதுநாள் வரை இருக்க, ஆரவிடம் தன்னிலை சொல்லி அவனின் குழந்தை தன் மணிவயிற்றில் உதித்தை பகிரவேண்டும் என்று எண்ணும் பொழுதே ஆரவ் நினைவு அதிகமாக வாட்டியது. அவன் தோளில் சாய்ந்து அழவேண்டுமென தோன்ற இடத்தை மறந்து அழுது கொண்டிருந்தாள். 

    அப்பொழுது அங்கே ஒரு முதிய பெண்மணி சம்யுக்தாவை கண்டு, "எதுக்கு அழுவுற தாயி.... பார்க்க நல்ல பெரியவூட்டு பொண்ணா இருக்க, காதலிச்சவன் கைவிட்டுடானா?" என்று அருகே வர, சம்யுக்தா கையில் இருந்தவையை கண்டு, 

    "அடகிரகமே புள்ளையை கொடுத்துட்டு ஆளு பறந்துட்டானா...?" என்று கேட்டதும் 

    "இல்லை பாட்டி.... அவர் என்னை கைவிடலை. கைவிடவும் மாட்டார். எங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு." என்று சம்யு பயில் சொன்னாள். 

     "அப்ப... இது..? இங்க எதுக்கு அழுவுற... உன் புருஷன்காரன் இல்லாதப்ப, மாமியார்காரி துரத்திட்டாளா...?" என்று கேட்டார்.  

     "அய்யோ..  அப்படியெல்லாம் இல்லை பாட்டி..." என்று நடந்தவையை சொல்லி முடிக்க, பாட்டி வாயை பிளந்து கேட்டார். 

    "ஏம்மா... அவன் பொண்ணுக்கு இதயம் வேண்டும்னு. உன்னை மயக்கத்துல வைச்சிருந்தானா? நல்ல வேளை கொரானா வந்து உன்னை காப்பாற்றிடுச்சு. இல்லை... உன் நிலைமையை யோசி... சரி சரி உன் ஊட்டுக்காரனுக்கு விஷயம் சொல்லு... வந்து கூட்டிட்டு போகட்டும்." என்று கூறவும் தன் உடை கண்டு நாணி, பாட்டி நான் ரொம்ப நாளா பெட்டில் இருந்தேன் அதனால குளிச்சிட்டு நானா ரெடியாகறேன். உங்களிடம் போன் இருக்க? பேசிட்டு தர்றேன்" 

    "அய்யோ இல்லையே மா. குளிக்கறேன்னு சொல்லறியே உடுத்த டிரஸ் இருக்கா?" என்றதும் விழித்தாள். 

    "கைப்பையில் பணம் இருக்கா கொண்டா... ஒரு புடவை ரெடிமேட் ஜாக்கெட் வாங்கி வர்றேன். கட்டிக்கிட்டு ஆட்டோ பிடிச்சி போ" என பாட்டி பணத்தை பெற்று கிளம்பினாள். 

       பொது கழிப்பிடம் பெண்கள் தனி வழி என்றாலும் அங்கே நிற்கவும் திகிலை தந்தது. பாட்டியிடம் போன் இருந்தால் ஒரு வார்த்தை போனில் ஆரவிற்கு தன்னிலை தெரிவித்து இருக்கலாம். சரி வெளியே சென்றதும் பிசிஓ கால் செய்து பேசலாம். 

     இல்லை ஆரவ் வீட்டுக்கு போயி நேர்ல சொல்லலாம். தனக்கு நேர்ந்தவையை கூறினால் ஆரவ் ஆடிப்போவான். பதமாய் கூறி முடிக்கணும். அதுவுமில்லாம அந்த டாக்டர் யாருனு கண்டுபிடிச்சு ஆரவால் நாலு தட்டு தட்டி எடுக்கணும். 
   
    "இந்தாடி மா. குளிச்சிட்டு கட்டிட்டு வா." என்றதும் பாட்டி வாங்கிவந்தவையை எடுத்து குளித்து கட்டிக்கொண்டாள். சின்ன சோப் அங்கேயே வைத்துவிட்டு ஈரத்தலையோடு கிளம்பினாள். 

    பாட்டி வாங்கி வந்த காய்ந்த இட்லி சற்றே ஊசிப்போன சாம்பார் என்று இருந்தாலும் இந்நாள் வரை உணவு சாப்பிடாது இருந்த வயிறு தானாக விழுங்கியது. 

      சாப்பிட்டு முடித்தப்பின் ஆட்டோ பிடித்து,  பாட்டியிடம் நன்றி கூறி கிளம்பினாள். ஒருகணம் நிறுத்தி, "பாட்டி உங்க அட்ரஸ்... ஆரவோடு உங்களை பார்க்க வர்றேன்." என்று கேட்க, அவரும் விலாசம் எழுதி கொடுக்கவும், வாங்கி கொண்டு அறக்க பறக்க ஆட்டோவில் பயணித்தாள். 

     இத்தனை நாள் நான் இல்லாம ஆரவ் எப்படி துவண்டு போயிருப்பாரோ. இதில் கடைசியா சண்டை வேற... தாலியை தொட்டு பார்த்தாள். ஆரவ் அணிந்த பொன்தாலி தடவி பார்த்தாள். ஆரவ் அணிவித்த செயின் கழுத்தில் இல்லை. 

    அய்யய்யோ ஆரவ் வீட்டுக்கு வந்தப்ப எனக்கு போட்டு விட்டதே. நல்ல வேளை தங்கமென்று தாலியை கழட்டலையென்று நிம்மதி அடைந்தாள். 

     இதோ பத்து நிமிடம் அதன்பின் என் ஆரு பார்த்துவிடுவேன் மனதில் எண்ணியவள் கண்கள் கலங்கி ஆசையோடு இறங்கினாள்.

    அங்கே ஆரவ் மற்றும் ஜனனி இருவரும் காரில் ஏறி கிளம்பிக் கொண்டிருந்தார்கள். 

    வழவழப்பான கன்னம் ஒயிட் ஷர்ட் ப்ளூ ஜீன் என்று ஆரவ் இருக்கையில் அமர்ந்து கொள்ள முன்பக்கம் ஜனனி அமர்ந்து சீட் பெல்ட் போட தெரியாமல் விழிக்க அதை ஆரவ் போட்டு விட்டு காரை எடுத்தான். 

     இதை கண்டு ஆரவை கூப்பிடும் சக்தி அற்றவளாக நின்றாள் சம்யுக்தா. 

        மனதில், கண்ணால் பார்ப்பது எல்லாம் வேறொரு பரிணாமத்தில் தோற்றுவிக்கலாம். வீட்டிற்கு சென்றால் அத்தை இருப்பார்கள் அவர்களிடம் கேட்டுப்போமென வீட்டை நோக்கி பயணித்து வாசலில் கேட்டில் கை வைத்தாள். கதவு பூட்டியிருக்க அங்கே இருவர் நின்றிருந்தனர். 

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

-பிரவீணா தங்கராஜ்.

Comments

  1. Enna aachu aaru v2ku....🙄😭😭😭 yuktha paavam sis...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு