தீவிகை அவள் வரையனல் அவன் -28

🪔🔥-28

    அந்த குடிசை வீட்டில் சம்யு இருப்பதே குமட்டலை கொடுக்கலாம். அவள் வாழ்ந்த இடத்தோடு ஒப்பிட்டு பார்த்தால்... ஆனால் இன்று மசக்கை வாந்தியோடு சேர்ந்து போராடினாள். 

       "ஏன் தாயி இப்படி கஷ்டப்படணும். நீ உன்னோட வூட்டுக்காரரிடம் ஜீவனம்சமோ, இல்லை பணமோ கூட வாங்கி நல்லா இருக்கலாமே மா." என்று முருகேஸ்வரி தண்ணீரை நீட்டியபடி கொடுத்தாள். 

    கார்ப்ரேஷன் தண்ணீர் மேலும் குமட்ட தான் செய்தது. பில்டரில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அருந்திய சம்யுக்தாவுக்கு கஷ்டமாக இருந்தது. 

       எதையும் பழக வேண்டுமென்ற திடம் வந்துவிட, குமட்டினாலும் பருக துவங்கினாள். 

     அடுத்த நாள் முருகேஸ்வரி தன் கை காசு போட்டு இரண்டு நாள் கேன் தண்ணீர் வாங்கி போட்டாள். அது அவர்கள் கைக்கு மீறிய செலவு என்றாலும் அந்த பாட்டி செய்து விட்டாள். அடுத்த நாள் சமைக்க எதுவும் இல்லாமல் தவிக்க இரசமும் வேர்க்கடலை துவையலும் வைத்து கொடுக்க, இரசித்து உண்டாள். 

    முருகேஸ்வரி தட்டு கழுவ வெளியே சென்ற நேரம் பக்கத்து வீட்டில் இருந்த பழனிம்மாவும் வந்து நிற்க அந்தம்மாவிடம் பணம் கடனாக கேட்க அது உள்ளிருந்த சம்யுக்தா காதிலும் அப்பட்டமாக கேட்டது. 

   தன்னால் பாவம் பாட்டி கடனாளியாக ஆக வேண்டுமா? என்று இதயத்தில் கைவைத்து நிற்க, தாலி தட்டுப்பட்டது. 

   முகத்தை அழுத்த துடைத்து முடித்து, அந்த தெருவில் இருந்த கடையில் மஞ்சள் கயிறை வாங்கி தாலியோடு கோர்த்து முடித்தாள். 

     தாலி செயினை அடமானமாக வைக்க முருகேஸ்வரியிடம் நீட்டினாள். 

    "என்னம்மா நீ பொசுக்குனு தாலிசெயினை கழட்டிட்ட, போட்டுக்கோ மா." என்று பதறினார். 

   "பாட்டி... என் ஆரு கட்டின மாங்கல்யம் நெஞ்சில் சுமக்க இந்த மஞ்ச கயிறு போதும். அவரோட உயிரை சுமக்கற வயிற்றுக்கு தான் ஆரோக்யமான உணவு வேண்டும். அது அப்படியொன்னும் பழமா கொட்டி இப்ப என்னால சாப்பிட முடியாது தான். ஆனா சரியான விகிதத்ததில் உணவு எடுத்துக்கிட்டாளே போதும். இதை அடமானம் வைத்து நாளைக்கு கம்பு உளுந்து மளிகை சாமான் வாங்கிடுங்க. கொஞ்சம் சத்தா உணவை எடுத்துக்கறேன். " என்று கூறவும் முருகேஸ்வரிக்கு என்ன சொல்வதென்று புரியாவிட்டிலும் இது சரியாகப்பட்டது.

    பணத்தை வாங்கி அதை குருவி போல உபயோகப்படுத்த துவங்கினாள் சம்யுக்தா. 

     அதே நேரம் இத்தனை நாள் மயக்கத்தின் பிடியில் இருந்ததால் ஒரு ஸ்கேன் பார்க்க எண்ணினாள். உள்ளே குழந்தை நிலையென்னவோ? மயக்க மருந்தின் வீரியம் அதை பாதிப்படைய கூடாதல்லவா? அதனால் மருத்துவமனை நோக்கி சென்றாள். 

    அப்பாவுடனோ இல்லை ஆரவோடு இருந்திருந்தால் ஏசி மருத்துவமனை காத்திருக்க செய்திருப்பாள். இன்றோ அரசு மருத்துவமனையில் காத்திருந்தாள். 

     காலை எட்டிற்கு வந்தவள் மணி பதினொன்று ஆகவும் காத்திருப்பதில் நேரம் கழிந்தது. ஒரு வழியாக பார்த்து முடித்து திரும்ப ஒன்றை எட்டியது. என்ன அங்கிருந்த நர்ஸ் டாக்டர் கண்டு பயந்தாள். கெட்டவர்கள் சந்தித்து உயிர் திரும்பியதால் அந்த பயம் இருக்குமே. ஆனால் ஒரு தொழிலில் எல்லோரும் கெட்டவர்கள் இல்லை. நல்லவர்களும் உண்டு. அந்த நர்ஸ் பேசிக்கொண்டே வலிக்காமல் ஊசி போட்டு மருந்து கொடுத்து முடிக்க, டாக்டர் குழந்தையின் வளர்ச்சியையும், மனதை அமைதிப்படுத்த நல்ல பாடலையோ,  புத்தகத்தினையோ படிக்க கூறினார்.  

   குழந்தை ஆரோக்கியமாக இருப்பதால் மனம் நிம்மதியடைந்தது. மனதை அமைதிப்படுத்த அந்த நர்ஸ் சொன்னது போல பாட்டு கேட்கணும் புத்தகம் படிக்கணும். மனசுல ஆரவ் குழந்தை சந்தோஷமா வரவேற்கணும் இதே யோசனையில் வந்தாள். 

   அந்த வழி கடக்கும் நேரம், நூலக கிளை என்று இருக்க அங்கே விசாரிக்க துவங்கினாள். ஏதேனும் அட்ரஸ் தந்துவிட்டு நூலகத்தில் மெம்பராக மாற கூறினார் அந்த கிளை நிர்வாகி. சரியென தலையசைத்து ஐடி எப்படி வாங்கயென யோசிக்க ஆரம்பித்தாள்.
   
    யோசனையின் பலனாக, தான் இருக்கும் இடத்தின் அட்ரஸ் வைத்து போஸ்ட் ஆபிஸ் ஐடி கார்டு வாங்கினாள்.

நிறைய புத்தகங்களை படிக்க துவங்கினாள். அதுவும் பெண்ணின் வீரமிக்க சுயசரிதைகள் குறிப்பிட்டு இருந்தன. 

    அன்று முருகேஸ்வரி பாட்டிக்கு உடல்சுகவீனம் அடைய இனி மனதில் தான் ஏதேனும் வேலைக்கு செல்ல வேண்டுமென்ற எண்ணமும் தோன்றியது. அப்பொழுது தான் நுலகத்தின் நிர்வாகி இங்க காலை மூன்று மணி நேரம், மாலை  மூன்று மணி நேரம் அறையில் வருகை பதிவேடு செய்து, போவோர் வருவோர் படிக்கும் கணக்கை ஏட்டில் பதியவைத்து, புத்தகத்தினை எடுத்து தரும் பணிக்கு கூப்பிட தயங்காது சென்றாள். 

    அவளுக்கு தேவை ஒரு பணி அது குறைந்த சம்பளமென்றாலும் பரவாயில்லை. பெரிய பங்களாவில் வாழ வேண்டுமென்றால் அதிக பணம் வேண்டும். இது போல சின்ன குடிசையில் வாழ குறைந்த பணமே போதுமானதாக இருந்தது. 

       சம்யுக்தாவுக்கும் வேலை உணவு இடம் அதன் சுற்றிய ஆட்கள் கொசுக்கள் முதல் பழக்கப்படுத்தி கொண்டாள். 

    அன்று இரவு மின்சாரம் தடைப்படவும், தூக்க கலக்கத்தில் ஜென்ரேட்டர் ஆன் பண்ணலையா... பேன் போடுங்க." என்று தலையணையை அணைத்து உறங்க முருகேஸ்வரி சம்யுவை கண்டு பாவம் பெரிய வீட்டு பொண்ணு இங்க தங்கனும்னு விதி. பேசாம நாளைக்கு அவ புருஷன் வீட்டை கேட்டு நாம போய் பார்த்து பேசணும். என்று மனதில் எண்ணி உறங்கினார். 

   அடுத்த நாள் எந்த ஏரியா எந்த தெரு என்று சந்தடி சாக்கில் கேட்க, சம்யுவோ, பாட்டி உனக்கு பிடிக்கலைனா சொல்லு போறேன். ஆனா அவர் வீட்டை பற்றி அவயை பற்றி கேட்காதே. ப்ளிஸ்" என்றாள் சம்யு. 

     "அதில்லபா.... நீ அவசரப்பட்டிட்டியோனு தோன்றுது." என்று பேச, 

    "நானும் அப்படி நினைத்து தான் ஜனனியை பார்க்க போனேன். ஆமா பாட்டி போனேன். அவங்க எல்லாம் கல்யாணத்துக்கு கிளம்பிட்டு இருந்தாங்க பாட்டி. ஜனனிக்கு அன்னிக்கு தான் கல்யாணம்.

      ஆரவ் கூட நடக்க போகுதுன்னு ஜனனி அம்மா சொன்ன அதே நாள். திரும்ப வந்துட்டேன் பாட்டி. ஆரவை வேற பெண் அருகே பார்க்க பிடிக்காம திரும்பி வந்துட்டேன். அது நடந்து ஒரு மாசத்துக்கு மேல ஆகுது பாட்டி. அப்பா வீடும் பூட்டி இருக்கு. அப்பா..." கண்கள் ஏதோ இருசொட்டினை உகுக்க, "அதனால அப்படியே திரும்பிட்டேன். " என்றதும் முருகேஸ்வரி அதற்கு பின் ஒரு வாரத்தை கூறவில்லை. 

      "இரு தாயி உனக்கு இங்கயே இருக்க தோன்றினாலும் இரு. இனி நானா போக சொல்ல மாட்டேன்" என்று உற்ற துணையாக மாறி போனார். 

     அக்கம் பக்கத்தில் சில நட்பு கிடைக்க வாழ்க்கை வட்டம் வேறு பாதையில் பயணிக்க, வயிரும் வளர ஆரம்பித்தது.

   நாட்காட்டியின் தேகமோ மெலிந்தது. ஆம் மேலும் மாதங்களை கடக்க, திகதி தாள்கள் கிழியபட்டடிருந்தது. 

    ஒவ்வொரு மாதமும் அரசு மருத்துவமனைக்கு செக்கப் சென்று தன்னலத்தையும், தன் சிசு வளர்ச்சியையும் அறிந்து கொள்வாள். 

     கிளை நூலக நிர்வாகியாக பணிப்புரிய அந்த இடத்திலும் நல்ல பெயரை பெற்று இருந்தாள். 

     அன்று ஆரவ் சாப்பிட்டு கொண்டிருக்க, சுபாங்கினி அவனுக்கு பரிமாறியபடி, "வைஷ்ணவி போன் செய்தா ஆரவ். கல்யாணம் தான் அவசரமா பண்ணிட்டிங்க. வளைகாப்பாவது விமர்சனையா பண்ணுவீங்களா மாட்டாங்களானு வீட்டுக்கு வர்றவங்க எல்லாரும் நம்ம வைஷ்ணவி காதுப்பட பேசறாங்களாம். நம்ம சம்மந்தி மனசு நல்ல மனசுதான். ஆனா பாரு பிறந்த வீட்டு சார்பா... நாம செய்யற முறையையும் சரியா செய்யணுமே. சந்துரு மாப்பிள்ளைக்கும் ஆசையிருக்காதா... வைஷ்ணவியை விழாவில் அலங்கரிச்சு பார்க்க? நான் என்ன சொல்ல வர்றேனா..." என்று சுபாங்கினி முடிக்கும் முன், 

      "வளைக்காப்புக்கு என்ன செய்யணுமோ செய்யுங்க மா. பணத்தை கேசவிடம் வாங்கிக்கோங்க. திருமணத்தை நடத்திருந்தா இந்தளவு விமர்சனமா கொண்டாடியிருப்பாங்கனு பேசற அளவுக்கு செய்யுங்க. வேறயொன்னுமில்லையே மா. நான் போறேன்.." என அவனறைக்கு சென்றான். 

    சுபாங்கினி எதிர்பார்ப்பது போல முகம் மழித்து மற்றவரிடம் சோகத்தை மறைத்து பேசுகின்றான். ஆனால் வலி சோகத்தை இழையாக காணாதா தாயுள்ளம்.

    தற்போது வைஷ்ணவியையும் கவனிக்க வேண்டுமே. அதனால் அவளை பார்ப்போமென சென்றனர். 

    ஒன்பதாம் மாதம் விழாவை வந்தோர் வாயை பிளக்கும் அளவிற்கு ஏற்பாடு செய்திருந்தான். 

      அப்படியிருந்தும் வந்தோரின் வாயுக்கு அவலாக ஆரவின் வாழ்வு தான் பேசப்பட்டது. 

    மணமேடையிலே பெண் மாறியதும் வீம்புக்காக கட்டிய தாலியின் மதிப்பு ஒரு மாதம் கூட இல்லை என்றும் பேசிக்கடக்க, ஒவ்வோரிடமும் தன்னவளை பற்றியோ தன் காதலை பற்றியோ விளக்கவா இயலும். 
     
      ஆரவ் சற்று நேரம் இருந்து விட்டு வீட்டுக்கு புறப்படுவதாக எண்ணியிருக்க வைஷ்ணவியை பார்த்து அழைத்து செல்லும் பொருட்டு மனதை அடக்கி பொருத்திருந்தான். 

    சந்துரு ஆரவ் நிலை அறிந்தபின், விரைவாகவே வைஷ்ணவியை கூட்டிக்கொண்டு போக சொன்னான். 

     காரில் ஏறியதும் வைஷ்ணவி அண்ணாவிடம் தன் கணவன் உறவுக்காக மன்னிப்பை வேண்டினாள். 

   ஆரவ் கசந்தமுறுவலில் அவர்கள் சொன்னதில் தவறென்ன., என் நேரம் இப்படி தானே சென்று விட்டதென எதையும் பெரிதுப்படுத்தவில்லை. 

      சுபாங்கினி ஆரத்தி கரைத்து மகளை அழைக்க, வீட்டுக்குள் வந்ததும், "மனநிறைவா சம்யுவை அழைக்கலை... அதான் என்னவோ அவள் நம்ம வீட்ல நிலைத்து இருக்க முடியலை." என்று வருந்த, 

    "அம்மா... அவ இல்லைனாலும் அவ தான் இந்த வீட்டு மருமகளென நிலைத்து இருக்கும். அதுல மாற்றமில்லை." என அன்னை வந்தோர் பேசிய சில திருமண ஆபரை ஏதேனும் கேட்டுவிடக் கூடாதேயென்று முன்கூட்டியே திடமாக இதையும் சொல்லி கிளம்பினான்.
   
    இங்கு முருகேஸ்வரி பாட்டியின் வீட்டில் சம்யுக்தா பயபக்தியோடு சாமி படம் முன் வேண்டினாள். இத்நாள் வரை சம்யு சாமிகும்பிட்டு பார்த்திராததால் பாட்டி கேட்கவே செய்தார். 

      "என்னமா...இன்னிக்கு ஏதாவது விஷேஷமா..?" என்று கேட்கவும், தான் சாமி கும்பிடுவதால் கேட்கின்றாரென கூற ஆரம்பித்தாள். 

    "பாட்டி நான் எங்க அத்தையை பார்ததேன். இன்னிக்கு வைஷ்ணவிக்கு வளைக்காப்பு." என்று சந்தோஷப்பட்டு கூறினாள்.

    "என்னடா சொல்லற அத்தையை பார்த்தியா பேசினியா....?" என்றதும் முகம் சோர்ந்து போனாள். 

      "இல்லை பாட்டி... செக்கப் போன அன்று ஹாஸ்பிடலில் பார்த்தேன். அன்னிக்கு கொரானா என்றதால மாஸ் போட்டிருந்தேன். அத்தையும் மாஸ்க் போட்டிருந்தாங்க. என்ன முகம் அலம்ப மாஸ் கழட்டினாங்க.... பார்த்தேன். நெருங்கி போனப்ப தான், பத்திரிக்கை நீட்டி பொண்ணுக்கு வளைக்காப்பு சொன்னாங்க. 

     அவங்களிடம் பேசிட்டு இருந்தாங்க. அந்த நர்ஸ் அக்கா... பையன் எப்படி இருக்கான் பொண்ணு எப்படி இருக்கான். கேட்டாங்க. அத்தை அப்போ... நல்லா இருக்காங்க. பொண்ணு வளைகாப்பு வைத்து வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்னு சொன்னாங்க. பையன் இப்ப தானே கல்யாணம் செய்தான் நல்லா இருக்கான் சொன்னாங்க. ஏன் பாட்டி அத்தைக்கும் என் நினைவு வரலை போல.... நான் விலகி வந்ததில் யாரும் பீல் பண்ணலை பாட்டி." என்று அழவும் முருகேஸ்வரி சம்யுவை கண்டு, "ஏந்தாயி இங்க இருந்தாலும் உன் நாத்தனார் வளைகாப்புக்கு நல்லா இருக்கணும்னு வேண்டற பார்த்தியா... இந்த குணத்துக்கு நல்லது நடக்கும் டா. நீ வேண்டும்னா பாரு... இந்த கிழவி சொன்னது நடக்கும். உன் குழந்தை உனக்கு சந்தோஷத்தை கொடுக்க ஏதாவது மாற்றத்தை நிகழ்த்துவான்." என்றதும் கசந்த முறுவல் உதிர்த்து வயிற்றை தடவினாள். 

    அவளின் தீண்டலுக்கு அவள் குழந்தை அசைந்து கொடுத்தது. அதன் அசைவில் எல்லாம் மறந்து நிம்மதி கொண்டாள். 

     சம்யுக்தாவுக்கு ஆறாவது மாதம் இது... அதனால் நன்றாகவே அசைந்து கொடுத்து சம்யுவிற்கு அறுமருந்தாக மாறி இருந்தது அந்த சிசு.

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

 - பிரவீணா தங்கராஜ். 

   
  

Comments

  1. Eppo aaru and yuktha paathupaanga...waiting sis...😍😍

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு