சிரமமில்லாமல் சில கொலைகள்-9

🩸-9

    சர்வேஷ் தன் கை அடிக்கடி சில்லிட்டு இருப்பதை உணர்ந்தான். 

   என்னவோ தனக்கு இது புதுவுணர்வாக இருக்க, நிம்மதியும் கொண்டது மனம். 

    சாந்தனு ஓரபார்வையோடு அவனருகே வந்தமர்ந்தான். 

      "என்னடா... ஒரு மார்க்கமா இருக்க? கொலை செய்ய இன்னமும் எத்தனை பேர் இருக்காங்க?" என்று கேட்டு முடித்தான்.

     "நீ தான் பேலன்ஸ்..." என்று சர்வேஷ் கோபமாக சொல்லி முடித்தான்.

   "பின்ன என்னடா... ஒன்றா... இரண்டா... கொலைகள். லிசா அவ பேரண்ட்ஸ். அப்பறம் இரண்டு பேர் ஒன்னா போட்டு தள்ளியது. சேர்த்தா ஐந்து பேர் ஆகுது. ஆமா... லிசாவை டச் பண்ண பார்த்ததா சொன்னியே ஆடலரசன்.... அவனை கொன்றுட்டியா?" என்று கேட்கவும், 

      "பச் அவனும் என்ன ஆனானு தெரியலை பா. ஏய்.. என்ன சொன்ன.... நான் கொன்றேனா... அடப்பாவி... போற வர்ற நேரம் யார் காதிலாவது விழுந்தது சந்தேக கேஸ்னு உள்ள தள்ளிட போறாங்க டா. நான் பச்சை மண். அந்த கருப்புபுகை இளவழகன் தான் கொல்லறான். நீ என்ன என்னவோ நானா போய் கொல்லற மாதிரி பேசற. பார்த்து டா... பீச்ல எவனாவது மப்டி போலிஸ் இருக்க போறாங்க." என்று பயந்தான் சர்வேஷ். 

      "பண்ணிட்டாலும்.... டேய்...யவனரதி... அபரஞ்சி... இந்த காலத்துல என்ன பெயர் இருக்கும்? பெயர் ஏதாவது தெரியுமா?" என்று சாந்தனு கேட்க, 

      "தெரியலையே டா...  நமக்கு தேவையானதை மட்டும் இந்த இளவழகன் க்ளு கொடுக்கறானா பாரு..." என்று திட்டினான். 

      சாந்தனுவும் மனசுக்குள்ளே திட்டினான். 

     ஏதாவது முடிவெடுக்க விடுங்கடா.... என்னை சோதிக்காதீங்க என்று இருவரும் மணலை தட்டிவிட்டு புறப்பட்டனர்கள். 

      ஜாஸ்மின் மற்றும் மெர்லின் இருவரும் அவ்விடம் வந்து அமர்ந்தார்கள். 

      இளவழகன் உருவம் அந்த மாலை நேரத்தில் மெர்லினை சுற்றி வந்து இரண்டு நொடிகள் முன்பு வந்திருக்க கூடாதா? அபரஞ்சி. எப்பொழுதும் நமக்கு இந்த நேரம் தாமதம் கொண்டு நம்மை செயல்படவோ, தடுக்கவோ செய்கின்றது. நம் காதல் கைக்கூடும்... இந்த ஜென்மத்தில் யாரையும் இடைப்புகுந்திட விடமாட்டேன் கண்மணியே... 

     உன் அருகே ஆன்மாவாக அலைவது உன்னை இந்த பிறவியில் வாழ வைத்து உன்னோடு வாழத்தான். 

      மெர்லின் சுற்றி சுற்றி பார்க்கவும், "(பீனட்)வேர்கடலை வேண்டுமா...?" என்று கேட்கவும் "நோ" என்றவள் அலைப்புறம் கண்களில் நெருக்கமான உறவை தேடினாள். 

      "ஜாஸ்மின் எனக்கு யாரோ பக்கத்தில வந்து பேசற மாதிரி இருக்கு." என்று பேசவும், ஜாஸ்மின் இதுபோல பேச நேரும் என்பதை அறிந்து அவளை கடலில் விளையாட அழைத்து சென்றாள். 

      கடலில் இறங்கி முட்டி வரை சென்றவள் மனம் அதிவேகமாக துடித்தது. 

     "ஜாஸ்.. ஜாஸ்மின்... எனக்கு மூச்சு முட்டுது... ப்ளிஸ்... வீட்டுக்கு போகலாம்." என்று சொல்லவும் இளவழகனோ, 'யவனரதி....அபரஞ்சி நினைவு உன்னை தாக்குகின்றது. சற்றே பொறுத்திருந்து உன் முன் ஜென்மத்தின் நினைவை மீட்டு எடு.' என்று இளவழகன் அவளின் அருகே பழைய நினைவுகள் வருகின்றதா என்றே ஆராய்ந்தான். 

      வேகவேகமாக கடற்கரைக்கு வந்தவள் மூச்சை சீராக எடுத்து திரும்பி பார்த்தாள். 

     அங்கே கடல் சூழ்ந்த இடம் கோவிலாக மாறி தன்னருகே கையை நீட்டி அவன் வந்தான். அவனின் முகம் காண்பதற்குள், ஜாஸ்மின் முகத்தில் தட்ட இடங்கள் மாயமானது. 

    தன் கையை கடல் நோக்கி விடுவிக்கும் பொருட்டு நீட்டிய மெர்லின் அந்த கையின் இருந்த காப்பை மனக்கண்ணில் கொண்டு வந்தது. 

     இதற்கு மேல் மூளை அதன் போக்கில் விட மெர்லினால் இயலாது   தங்கியிருக்கும் அறைக்கு செல்ல முடிவெடுத்தனர்.

     மருத்துவர் கொடுத்த மாத்திரையை விழுங்கி படுத்துறங்கினாள். சாப்பாட்டை தவிர்த்து விட்டாள். 

    அதிகாலை வெளியே போக வேண்டுமா என்ற எண்ணத்தை கலைத்தது ஈஸ்வரின் டூரிஸ் அண்ட் கையிடு போன் அழைப்பு.

    "மேம்... இன்னிக்கு கோவில் போகற டீம் அப்பறம் முட்டுக்காடு டீம் ரெண்டு இருக்கு... உங்களுக்கு எந்த டைப் வேண்டும். சொன்னிங்கனா... அவங்களோட வண்டி நம்பர் போன் நம்பர் டிரைவர் டிடைய்ல் அனுப்பி விடறேன்." என்றதும் 

     கோவிலா.... என்ற மனமோ அதில் ஆர்வமின்றி, "சார் நான் வரலை சாரி." என்று வைக்க போக... 

    "மேம்... ஒன் செகண்ட். நீங்க நேற்று நடந்து இன்சிடெண்ட் வைத்து தவறா புரிஞ்சிக்கிட்டீங்க. இனி மிஸ் பிகேவ் பண்ணாம மரியாதையை நடத்தற மாதிரி ஆட்களை தான் அனுப்புவேன். வார்ன் பண்ணியிருக்கேன்." என்றான் சர்வேஷ்.

    "சார் அதனால எல்லாம் இல்லை... கொஞ்சம் மைண்ட் டிஸ்டர்ப். அதனால தான்... அதுவும் இல்லாம நான் கிறிஸ்டியன்." 

     "மேம்... கலையை ரசிக்க தானே போறோம். மதம் பிரச்சனையில்லை. உங்களுங்கு மனசு சரியில்லைனா... போட்டிங் போகலாமே... முட்டுக்காடு? உங்களுக்கு எங்க டிராவல் ஆளாள... பிடிக்கலைனா." 

     "சார் சார்.. அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. உங்களுக்கு அந்த சங்கடம் இருக்கா... விடுங்க நான் முட்டுக்காடு வர்றேன்." என்றதும் 

      "தேங்க்ஸ்... தேங்க்ஸ் மேம். ஹோட்டலில் பிளேஸ் லொகேஷன் ஷேர் பண்ணுங்க. நாங்க வந்திடறோம்." என்று பேசி வைத்தான். 

       மெர்லின் கண்ணாடியில் தன்னை பார்த்தாள் தான் சோர்வாக காட்சியளிப்பதை கண்டு தன்னை சுறுசுறுப்பாக மாற்றிட அலங்கரிக்க ஆரம்பித்தாள். 

      ப்ளூஜீன், ஒயிட் டாப் என்று சன் கிளாஸ் எடுத்து கொண்டு தனது ஹாண்ட் பேக்கை எடுத்து மாடலிங் போன்று வைத்து பார்த்தாள். 

     கண்ணாடியில் கைவைத்து 'உனக்கு பிடிச்சிருக்கு தானே...' என்று கேட்க இளவழகனோ 'இல்லை யவனரதி அணிகலன்கள் அற்ற நீ... தவழ தவழ பட்டுடையுடுத்தாத நீ எம் கண்மணிக்குள் அழகாக தென்படவில்லை' என்று எண்ண அவனின் எண்ணவலைகள் அவள் பொருட்படுத்தாது கடந்தது. கண்ணாடி தான் இக்கால யுவதி நீ என்று அழகாக உள்ளாய் என்று பிரதிபலித்ததே. 

      இளவழகன் ஒரு புன்னகை வெளிப்படுத்தி அவளோடு நிழலாக புறப்பட்டான். 

      மினி வேன் ஏற்பாடு செய்து அதில் இரு குடும்பம் சகிதம் இருக்க, வெளியே மெர்லினுக்காக காத்திருந்தான் சர்வேஷ்வரன். 

      மெர்லினுக்கு போனில் அழைப்பை தொடுத்து அவள் எடுத்து பேச காத்திருக்க அவளோ ஒயிலாக நடந்து வந்தாள். 

    "உங்களுக்கு தான் மேம் வெயிட்டிங்." என்று கதவை திறக்க, 

      "நீங்க.....?" என்று கேட்டதும் 

      "எஸ் மேம். நானே வந்துட்டேன்." என்றவன் "ரபிக்.. வண்டியை எடுங்க" என்று அமரவும் மெர்லினுக்கு இடது பக்கம் பின்னிருக்கையில் அமர்ந்தான். 

      வண்டிப் புறப்படவும் கருப்புருவம் அகமேந்தி அருகே பாதுகாவலனாய் நின்றது. 

      சர்வேஷ்வரன் பயணத்தின் போக்கில் மெர்லினை காண யாரோ காணவிடாது தடுப்பதாய் தோன்ற தலையை அங்கும் இங்கும் அசைத்து எட்டி பார்க்க மெர்லின் அதே நேரம் திரும்பிடவும் சர்வேஷ் திடுக்கிட்டு திரும்பி கொண்டான். 

      'ஒஎம்ஜி... இந்த பொண்ணு ஏற்கனவே நம்ம கையிடை உண்டுயில்லைனு ஆக்கிட்டா. அவன் தப்பு பண்ணினான்  ஓகே. நான் சாதாரணமா பார்க்க, என்னவோ நானும் அதே மாதிரி ட்ரீட் பண்ணறேனு ஏதாவது அசம்பாவிதமாகி டிராவல்ஸ் நேம் பாதிக்க கூடாது. பொறுப்பாயிரு சர்வேஷ். 

    'சைட் அடிக்க அபரஞ்சி வருவா.... இந்த கர்லி ஹேர் வைத்த மெர்லின் எல்லாம் வேண்டாம் டா...' என்று தனக்குள்ளே சொல்லி ஜன்னலை கவனித்தான். 

       கண்ணாடி ஜன்னலில் மெர்லின் அருகே கருவுருவம் இருக்க கண்டவன் திரும்பவும் அதுயில்லாமல் போக தனது பிரம்மையென்றே முடிவு கொண்டான். 

    இருந்தும் தற்சமயம் எல்லாம் இளவழகன் அபரஞ்சி பற்றி எதுவும் தெரியாததால் மனதுக்குள் 'மிஸ்டர் இளவழகன் அமைதியா இருப்பது எதுக்கோ...." என்றவாறு கண் மூட ஜன்னல் காற்றில் உறக்கம் தழுவியது. 

    உறக்கத்தில் கருப்புருவம் வாளினை ஏந்தி, சர்வேஷ் முன் நின்றது. 

     "வந்துட்டியா... என்னடா  ஆளை காணோமேனு தவித்து போயிட்டேன்." 

     "என்னை காண அத்தனை ஆவலா சர்வேஷ்" என்றது இளவழகன் உருவம். 

     "சே சே... இப்படி முகம் தனியா உடல் தனியா வந்து அடிக்கடி மிரட்டுற உன்னை பார்க்க விருப்பம் இருக்குமா... அபரஞ்சி அபரஞ்சி எப்ப என்னைத் தேடி வருவா...? அவளை காட்டேன். எனக்கு அவளை பார்க்கணும் போல இருக்கு." என்றதும் இளவழகன் சிரித்து கொண்டு, 

    "நங்கையவள் நேரில் வந்தும் இம்மியளவு நினைவில்லை. 
    இது என்ன வகை காதல். அவளுக்கும் உன்னை அடையாளம் தெரியாது. நீயும் அவளை காணாது. இந்த ஜென்ம ஆசை மட்டும் உங்களை சுற்றி வந்து அலைகிறதே... ஆசை பேராசை வைத்தாலே இப்படி தானோ... என்று தன் நிலையை கண்டு இளவழகன் அழ முற்பட்டான். ஆனால் இயலவில்லை. ஆன்மாவுக்கு அழகை வருமா...? கசந்த முறுவல் கடத்தினான். 

     "அபரஞ்சி அப்போ நேரில் வந்துட்டாளா..." என்று கேட்க பிரேக் கீரிச்சிட்டு நின்றது. 
     இளவழகன் கருப்புபுகை வலது புறம் சுருள் சுருளாக சென்று மறைந்தது. 

       இடத்தை பார்த்த பிறகே தங்கள் முட்டுக்காடு வந்து விட்டோம் என்பதை அறிந்தான்.

      மற்ற சுற்றுலா பயணிகள் தங்கள் நேரம் சொல்லிவிட்டு வண்டியில் வந்துவிடுவதாக சொல்லி புறப்பட்டனர். 

     காதலர்கள், இளம் தம்பதிகள், மற்றும் இரு குடும்ப உறவுகள் எல்லாம் சென்றதும் தனித்து மெர்லின் மட்டுமே இருந்தாள். 

     தான் கூட வரலாமா என்று கேட்க தான் சர்வேஷ் எண்ணியிருந்தான். ஆனால் மெர்லின் எப்படி எடுத்துக் கொள்வாளென அறிய முடியாதல்லவா. அதனால் தயங்க அவளோ, எக்ஸ்கியூஸ் மீ... சார்... நீங்க சோலோவா இருந்தா என்னோட ஜாயின் பண்ணிக்கறீங்களா...? தப்பா நினைக்காதீங்க. இங்க எனக்கு யாரையும் தெரியாது." என்றதும் சர்வேஷ் புன்னகையில் வர சம்மதமாக ஆமோதித்தான். 

     சர்வேஷ் மறுக்க மெர்லினே டிக்கெட் எடுக்க செய்திருந்தாள். 

     படகு குழாம் ஏறியமர்ந்து பாதி தூரம் படகு பயணித்தது. 

      "ரொம்ப டென்ஷனா... நேற்று மாதிரி பிளாக் மார்க் விழுந்துடுமோனு பயந்து நடக்கறீங்க" என்றாள் மெர்லின். 

     "கண்டுபிடிச்சிட்டீங்களா... இல்லையா பின்ன.... கெட்ட பெயர் எளியில் கிடைக்கும். ஆனா நல்ல பெயர் வாங்கிட்டோம். அதை மெயின்டெண்ட் பண்ண எத்தனை ரிஸ்க்குங்க..." 

      "சாரி... அந்த நபர் தான் அப்படி. நான் அதை வைத்து மற்றவரை முடிவு செய்ய மாட்டேன்" என்றதும் மெர்லின் அந்த உணவை கண்டு வாயை திறக்க, 

    "ஐஸ்கிரிம் சாப்பிடறீங்களா..." என்று கேட்டு வைத்தான். ஆம் என்பதாய் கூறியதும் வாங்க சென்றிருந்தான். 

    மெர்லின் அவன் செல்லும் திசையில்  பார்வையை பதித்தவள். இந்நேரம் வரை அவன் பெயரை அறியவில்லையே என்ற எண்ணங்கள் தாக்க?

      அவன் வந்ததும் "உங்க பெயர் என்ன?  வந்ததில இருந்து சார்னு கூப்பிட்டு இருக்கேன். நீங்களும் மேம் மேம்... என்று கூப்பிடறீங்க." என்று மெர்லின் கேட்டு ஒரு வாயை எடுத்து சுவைத்தாள். 

     "மெர்லின்... உங்க பெயர் எனக்கு நல்லாவே தெரியும். என்னோட அலுவலகத்துல டூரிஸ்ட் நேம்மை புக் பண்ணறச்ச அதில் கவனித்தேன். " என்று இவன் அறிவை வெளிப்படுத்த, அவளும் "சோ... நீங்க ஈஸ்வரன் சரியா....? என்றாள் அவளும். 

     "ஆமா...." என்றவன் சில நொடி பனிக்கூழை இரசித்து ஒரு வாய் சுவைத்து, "சர்வேஷ்வரன்.... அதான் என் பெயர். அதை... " என்று கூறிக்கொண்டிருக்க மெர்லின் அப்பெயரை கேட்டு ஐஸ்கப்பை தவற விட்டிருந்தாள். 

    "என்னாச்சு... மெர்லின்?" என்று சர்வேஷ் முன் வர, மெர்லின் அப்பெயரை "சர்...வேஷ்...வரன்..." என்று கூறியபடி தள்ளாடி சரிய துவங்கினாள். அவளின் ஹீல்ஸ் பாதுகை அவளை நீரில் மத்தியில் இருக்க தள்ளாட வைத்தது. 

    அப்பொழுது தான் படகு நடு பகுதிக்கு வந்து இருக்க, நின்றபடி பேசிய மெர்லின் தண்ணீரில் 'தொப்'பென விழுந்தாள்.

     பேசிக்கொண்டிருந்தவள் திடீரென தண்ணீரில் விழவும் சர்வேஷ்  சட்டென பயந்து போனான். 

     "மெர்லின்... மெர்லின்... ஹெல்ப்... அய்யோ... அபரஞ்சி விழுந்துட்டா... இளவழகா... என்ன பண்ற யவனரதி காப்பாற்றலையா" என்று கத்தி அவனுமே நீரில் குதித்தான்.

       நீரில் நீச்சல் தெரிந்த மெர்லின் இந்த அபரஞ்சி என்ற பெயரையும் இளவழகன்-யவனரதி என்ற பெயரையும் கேட்டு மேலும் அதிர்ந்தாள். 

     சந்வேஷ்வரன்.... என்னை அபரஞ்சினு சொல்லறார்... என்றவள் நீரில் தனது அபரஞ்சி என்ற பெயரை எண்ணியும் சர்வேஷ்வரன் என்ற அவனின் பெயரையும் எண்ணி  நீரோடு அவளது முன் ஜென்மத்தோடும் முழ்கினாள். 

-🩸🩸🩸🩸🩸

-பிரவீணா தங்கராஜ். 

hi next flashback....
    

     

      

     
  

     
      
       

    
      

Comments

  1. Super ha poguthu. Inniki than full ha padichchen. Very very interesting.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு